Wednesday, April 02, 2025

Saturday, 18 October 2014

விடிய விடிய மழை: குடிநீர் ஏரிகளில் நீர் மட்டம் உயர்வு heavy rain drinking lake water levels

- 0 comments
சென்னை, அக். 18– சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், வீராணம் ஏரி பகுதிகளில் நேற்று 1 நாளில் 322 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் 900 கனஅடி தண்ணீர் கிடைத்துள்ளது. பூண்டி ஏரியில் 56 மி.மீ., சோழவரம் ஏரியில் 30 மி.மீ, புழல் ஏரியில் 54 மி.மீ., செம்பரம்பாக்கம் ஏரியில் 95 மி.மீ, வீராணம் ஏரியில் 87 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளதால் ஏரிகளுக்கு தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது....
[Continue reading...]

கம்ப்யூட்டரில் விளையாடியபோது 3 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை 3rd std child abused playing computer

- 0 comments
கொழிஞ்சாம்பாறை, அக். 18– கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை ஆலாம்பாடி கிராமத்தில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வருபவர் யாசீன் (வயது 27). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர் வீட்டிலேயே பிரிண்டிங் தொழில் நுட்பம் குறித்து பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 3–ம் வகுப்பு மாணவி யாசீன் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். சம்பவத்தன்று அங்குள்ள தனி அறையில் இருந்த கம்ப்யூட்டரில் மாணவி விளையாடிக் கொண்டிருந்தார்....
[Continue reading...]

கன்னியாகுமரி அருகே இளம்பெண் மர்மச்சாவு girl mystery dead near kanyakumari

- 0 comments
நாகர்கோவில், அக்.18– கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் மேலத் தெருவை சேர்ந்தவர் ராம கிருஷ்ணன். இவரது மனைவி தனம் என்ற தனலெட்சுமி (வயது 34). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை தனலெட்சுமி வீட்டின் சமையலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ராமகிருஷ்ணன் கன்னியாகுமரி...
[Continue reading...]

சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பயணிகள் அவதி sewage stagnated passengers difficulty

- 0 comments
சீர்காழி, அக்18– சீர்காழியில் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நீருடன் செப்டிக்டேங்க் கழிவு நீரும் கலந்து தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் பேருந்துநிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மூக்கை பிடித்துகொண்டு செல்லும் அவலநிலை இருந்துவருகிறது. மேலும் பேருந்து நிலையவளாகத்தில் போடப்பட்ட சிமெண்ட் தரை தளங்கள்...
[Continue reading...]

கறுப்பு பண விவகாரத்தில் மத்திய அரசு அளித்த பதில் அதிர்ச்சி அளிக்கிறது: ஹசாரே response to the federal government on the issue of black money is shocking Hazare

- 0 comments
மும்பை, அக். 18- கறுப்பு பண விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்களை வெளியிட முடியாது என்று மத்திய அரசு தனது பிரமாண பத்திரத்தில் கூறியது. மத்திய அரசின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; மத்திய அரசு நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள விளக்கம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது....
[Continue reading...]

ஆலத்தூர் பகுதிகளில் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி rain spread in alathur area farmers happy

- 0 comments
பாடாலூர், அக். 18 ஆலத்தூர் தாலுகா பகுதிகளில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம், சோளம் உள்ளிட்ட விவசாயப் பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் அடித்ததால் பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட விவசாயப் பயிர்கள் மிகவும் வாடிய நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதலே ஆலத்தூர் தாலுகா பகுதி கிராமங்களான பாடாலூர், இரூர், ஆலத்தூர், நாட்டார்மங்கலம்,...
[Continue reading...]

சிவகங்கை மாவட்டத்தில் விடிய விடிய மழை heavy rain sivagangai district

- 0 comments
சிவகங்கை, அக். 18– தமிழகத்தில் தொடங்கி உள்ள வடகிழக்கு பருவ மழை பல்வேறு மாவட்டங்களிலும் விடாது பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து மழை நீடித்தே வருகிறது. நேற்று விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்று காலையும் சிவகங்கை பகுதியில் மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளன....
[Continue reading...]

பாலையம்பட்டியில் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் woman murder threat near palayampatti

- 0 comments
பாலையம்பட்டி, அக். 18– அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி வேல்முருகன் காலனி ராஜீவ்நகரை சேர்ந்தவர் ராமானுஜம். இவரது மனைவி லீலாவதி (வயது47). இவருக்கும் தக்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த சின்னச்சாமி மகள் அனுசுயாவுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இந்த முன் விரோதத்தில் சின்னச்சாமி அவரது உறவினர்கள் ராம கிருஷ்ணன், சதர்சனன், சீனிவாசன் மற்றும் 4 பேர் சேர்ந்து லீலாவதியை தாக்கி கத்தியை காட்டி கொலைமிரட்டல்...
[Continue reading...]

நூதன முறையில் நகை–பணம் மோசடி: பெண்கள் 3 பேருக்கு வலைவீச்சு woman jewel money robbery three people police search

- 0 comments
அரக்கோணம், அக்.18– அரக்கோணம் அருகே உள்ள மின்னல் கிராமம் மெயின்ரோட்டு தெருவில் வசிப்பவர் சக்கரபாணி நாயுடு (வயது 47). சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பாக சக்கரபாணி நாயுடுவின் மனைவி விஜயலட்சுமி (43) தனது வீட்டு திண்ணையில் உட்கார்ந்து பூ கட்டிக் கொண்டு இருந்தார். அப்போது தேன் விற்பது போல் வந்த 2 பெண்கள், விஜயலட்சுமியிடம் உனக்கு ஏதோ மன வருத்தமும், பிரச்சினையும் இருப்பதாக...
[Continue reading...]

பரமத்திவேலூர் அருகே தீயில் கருகி இளம்பெண் பலி girl fire and dead near paramathivellore

- 0 comments
பரமத்திவேலூர், அக்.18– கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்தவர் ரத்தினகிரி. இவர் கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி வள்ளி (வயது35). இந்த நிலையில் ரத்தினகிரி குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பிலிக்கல் பாளையத்தில் தங்கி கரும்பு வெட்டும் வேலையை செய்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 15–ந்தேதி இரவு 11 மணியளவில் வள்ளி வீட்டில் உள்ள மண்எண்ணெய் அடுப்பை பற்ற வைத்தார். இதையடுத்து அவர் அடுப்பில்...
[Continue reading...]

கஞ்சி கலயத்தை உடைத்து விவசாயிகள் போராட்டம் farmers broken Porridge kalayam protest

- 0 comments
செம்பட்டி,அக்.18– தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலையை முடக்க கூடாது. அதனை 150–நாளாக உயர்த்திட வேண்டும். கூலி ரூ.167 கொடுத்திட வேண்டும். அங்கன்வாடி நிர்வாகத்தை தனியாருக்கு விற்கக்கூடாது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னதாக ஆத்தூர் யூனியன் அலுவலகம் முன்பு விவசாய சங்க ஒன்றியச் செயலாளர்...
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © 2025. தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger