Saturday 18 October 2014

விடிய விடிய மழை: குடிநீர் ஏரிகளில் நீர் மட்டம் உயர்வு heavy rain drinking lake water levels

- 0 comments

சென்னை, அக். 18

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், வீராணம் ஏரி பகுதிகளில் நேற்று 1 நாளில் 322 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் 900 கனஅடி தண்ணீர் கிடைத்துள்ளது.

பூண்டி ஏரியில் 56 மி.மீ., சோழவரம் ஏரியில் 30 மி.மீ, புழல் ஏரியில் 54 மி.மீ., செம்பரம்பாக்கம் ஏரியில் 95 மி.மீ, வீராணம் ஏரியில் 87 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளதால் ஏரிகளுக்கு தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையே ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் இன்று காலை பூண்டி ஏரியை வந்தடைந்தது.

பூண்டி ஏரியின் கொள்ளளவான 3230 மில்லியன் கனஅடியில் தற்போது 122 மில்லியன் கனஅடி மட்டுமே இருப்பு உள்ளது. தற்போது மழைநீர் 138 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. இதே போல் வறண்டு கிடந்த சோழவரம் ஏரிக்கும் இன்று முதல் தண்ணீர் வரத் தொடங்கி உள்ளது.

[Continue reading...]

கம்ப்யூட்டரில் விளையாடியபோது 3 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை 3rd std child abused playing computer

- 0 comments

கொழிஞ்சாம்பாறை, அக். 18

கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை ஆலாம்பாடி கிராமத்தில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வருபவர் யாசீன் (வயது 27). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

இவர் வீட்டிலேயே பிரிண்டிங் தொழில் நுட்பம் குறித்து பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 3ம் வகுப்பு மாணவி யாசீன் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். சம்பவத்தன்று அங்குள்ள தனி அறையில் இருந்த கம்ப்யூட்டரில் மாணவி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது யாசீன் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் மாணவி அலறி சத்தம் போட்டார். கண்ணாடி அறை என்பதால் மாணவியின் அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை.

யாசீன் பிடியில் இருந்து தப்பி வந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தாயாரிடம் கூறி அழுதார். அதிர்ச்சியடைந்த தாயார் இது குறித்து கொழிஞ்சாம்பாறை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பினு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று யாசீனை கைது செய்தனர். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி பாலியல் பலாத்காரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

[Continue reading...]

கன்னியாகுமரி அருகே இளம்பெண் மர்மச்சாவு girl mystery dead near kanyakumari

- 0 comments

நாகர்கோவில், அக்.18

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் மேலத் தெருவை சேர்ந்தவர் ராம கிருஷ்ணன்.

இவரது மனைவி தனம் என்ற தனலெட்சுமி (வயது 34). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை தனலெட்சுமி வீட்டின் சமையலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ராமகிருஷ்ணன் கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும், தனலெட்சுமியின் குடும்பத்தினருக்கும் தகவல் கூறினார்.

சம்பவஇடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வந்த தனலெட்சுமியின் தந்தை கொலுசு பிள்ளை மற்றும் குடும்பத்தினர் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

இதுதொடர்பாக கொலுசு பிள்ளை கன்னியாகுமரி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் எனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தனலெட்சுமியின் உடல் பிரேத பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது அவர் தற்கொலை செய்தது தெரிய வந்தது.

பின்னர், தனலெட்சுமி தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மகன் சரியாக படிக்காததால் அவனை கண்டிக்குமாறும், தீபாவளிக்கு பட்டாசுகள் எதுவும் வாங்கிக் கொடுக்க கூடாது என தனலெட்சுமி கூறி உள்ளார். ஆனால் ராமகிருஷ்ணன் அதை பொருட்படுத்தாமல் மகனுக்கு சிவகாசியில் இருந்து அதிக அளவில் பட்டாசுகள் வாங்கி வந்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று முன்தினம் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து தனலெட்சுமி தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதன்பேரில் பெண் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ஜெரால்டின்வினு, சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

[Continue reading...]

சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பயணிகள் அவதி sewage stagnated passengers difficulty

- 0 comments

சீர்காழி, அக்18

சீர்காழியில் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நீருடன் செப்டிக்டேங்க் கழிவு நீரும் கலந்து தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் பேருந்துநிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.


பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மூக்கை பிடித்துகொண்டு செல்லும் அவலநிலை இருந்துவருகிறது. மேலும் பேருந்து நிலையவளாகத்தில் போடப்பட்ட சிமெண்ட் தரை தளங்கள் சிதலமடைந்து குண்டும் குழியுமாக காணபடுகிறது. இந்த குழிகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பள்ளம் எது மேடு எது என்று தெரியாமல் பயணிகள் விழுந்து எழுந்து செல்கின்றனர்.


மழைநீருடன் கழிவுநீர் கலந்து இருப்பதால் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன்கருதி பேருந்துநிலையத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றியும், சிதலமடைந்த சிமெண்ட் தரை தளங்களை சீரமைக்கவும் பயணிகள் உட்கார வசதி ஏற்படுத்திதர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதேபோல் சீர்காழி நகர் முழுவதும் மழைநீர் தேங்கி நிற்கிறது குறிப்பாக சாலையோரங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மாணவமாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். எனவே இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

[Continue reading...]

கறுப்பு பண விவகாரத்தில் மத்திய அரசு அளித்த பதில் அதிர்ச்சி அளிக்கிறது: ஹசாரே response to the federal government on the issue of black money is shocking Hazare

- 0 comments

மும்பை, அக். 18-

கறுப்பு பண விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்களை வெளியிட முடியாது என்று மத்திய அரசு தனது பிரமாண பத்திரத்தில் கூறியது.

மத்திய அரசின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; மத்திய அரசு நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள விளக்கம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் விவரங்களை வெளியிட முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதை ஏற்கமுடியாது.

இது குறித்த விவரங்களை தெரிவிப்பதில் சட்ட சிக்கல்கள் உள்ளதென்றால் தேர்தலில் வாக்குறுதி அளிக்கும் போதே அதை யோசித்திருக்கவேண்டும். மோடி அரசின் ஐந்து மாத ஆட்சியில் லோக்பால் தொடர்பான நியமனங்களோ, கறுப்ப பண பரிமாற்றம் குறித்தோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தேர்தல் தந்திரம் என்று மக்கள் சந்தேகப்பட தொடங்கியுள்ளனர்.

தாங்கள் பெற்ற அனுபவங்களிலிருந்து பேசுபவரால் நாட்டில் எந்த மாற்றங்களையும் செய்யமுடியாது என மக்கள் தெரிந்து கொண்டுள்ளனர். செயல்பாடுகள் நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். மத்திய அரசு கறுப்பு பண விவகாரத்தில் பின் வாங்கினால் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவேன்.

இவ்வாறு ஹசாரே தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

[Continue reading...]

ஆலத்தூர் பகுதிகளில் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி rain spread in alathur area farmers happy

- 0 comments

பாடாலூர், அக். 18

ஆலத்தூர் தாலுகா பகுதிகளில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம், சோளம் உள்ளிட்ட விவசாயப் பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் அடித்ததால் பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட விவசாயப் பயிர்கள் மிகவும் வாடிய நிலையில் காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை முதலே ஆலத்தூர் தாலுகா பகுதி கிராமங்களான பாடாலூர், இரூர், ஆலத்தூர், நாட்டார்மங்கலம், செட்டிகுளம், மாவலிங்கை, கொளக்காநத்தம், காரை, தெரணி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் பரவலாக மழை பெய்தது. மேலும், மாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விடாமல் மழை பெய்தது.

[Continue reading...]

சிவகங்கை மாவட்டத்தில் விடிய விடிய மழை heavy rain sivagangai district

- 0 comments

சிவகங்கை, அக். 18

தமிழகத்தில் தொடங்கி உள்ள வடகிழக்கு பருவ மழை பல்வேறு மாவட்டங்களிலும் விடாது பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து மழை நீடித்தே வருகிறது.

நேற்று விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்று காலையும் சிவகங்கை பகுதியில் மழை பெய்தது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் மழை தூறலாகவே உள்ளது. மதுரையிலும் காலையில் லேசான மழை பெய்தது.

[Continue reading...]

பாலையம்பட்டியில் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் woman murder threat near palayampatti

- 0 comments

பாலையம்பட்டி, அக். 18

அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி வேல்முருகன் காலனி ராஜீவ்நகரை சேர்ந்தவர் ராமானுஜம். இவரது மனைவி லீலாவதி (வயது47).

இவருக்கும் தக்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த சின்னச்சாமி மகள் அனுசுயாவுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இந்த முன் விரோதத்தில் சின்னச்சாமி அவரது உறவினர்கள் ராம கிருஷ்ணன், சதர்சனன், சீனிவாசன் மற்றும் 4 பேர் சேர்ந்து லீலாவதியை தாக்கி கத்தியை காட்டி கொலைமிரட்டல் விடுத்ததாக அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது.

சப்இன்ஸ்பெக்டர் முனியாண்டி விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ளார்.

[Continue reading...]

நூதன முறையில் நகை–பணம் மோசடி: பெண்கள் 3 பேருக்கு வலைவீச்சு woman jewel money robbery three people police search

- 0 comments

அரக்கோணம், அக்.18

அரக்கோணம் அருகே உள்ள மின்னல் கிராமம் மெயின்ரோட்டு தெருவில் வசிப்பவர் சக்கரபாணி நாயுடு (வயது 47). சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பாக சக்கரபாணி நாயுடுவின் மனைவி விஜயலட்சுமி (43) தனது வீட்டு திண்ணையில் உட்கார்ந்து பூ கட்டிக் கொண்டு இருந்தார்.

அப்போது தேன் விற்பது போல் வந்த 2 பெண்கள், விஜயலட்சுமியிடம் உனக்கு ஏதோ மன வருத்தமும், பிரச்சினையும் இருப்பதாக தெரிகிறது. எங்களுக்கு தெரிந்த ஒரு பெண் ஜோதிடமும், மாந்திரீகமும் தெரிந்தவர். அவர் உன்னை வெள்ளிக்கிழமையன்று வந்து பார்ப்பார். அதன்பிறகு உனக்கு நல்ல காலம் பிறக்கும். உன்னிடம் இருக்கும் பணமும், நகையும் இரட்டிப்பாகும் என கூறி உள்ளனர். அதன்பின்னர் இரு பெண்களும் அங்கிருந்து சென்று விட்டனர்.

நேற்று காலை 11 மணியளவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் விஜயலட்சுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது விஜயலட்சுமி, வீட்டில் தனியாக இருந்தார். விஜயலட்சுமியை பார்த்த அந்த பெண் உனக்கு சிறப்பு பூஜை செய்ய வேண்டும், அவ்வாறு செய்தால் உனது பணமும், நகையும் இரண்டு மடங்காகும். மேலும் வாழ்க்கையில் பல வசதிகளை பெறுவாய் நீ என கூறி உள்ளார். ஏற்கனவே தேன் விற்கும் பெண்கள் கூறிய மாந்திரீக பெண் இவர்தான் என தெரிந்து கொண்ட விஜயலட்சுமி வீட்டிற்குள் அந்த பெண்ணை அழைத்து சென்றார்.

அங்கு தரையில் அமர்ந்த அந்த பெண், வீட்டிற்குள்ளே சென்று மூடி உள்ள ஒரு பாத்திரத்தை கொண்டு வா என கூறி உள்ளார். பாத்திரத்தை விஜயலட்சுமி கொண்டு வந்ததும் அதில் கொஞ்சம் அரிசியையும், குங்குமத்தையும் போட்ட அந்த பெண் உன்னிடம் உள்ள நகைகளையும், பணத்தையும் இந்த பாத்திரத்தில் போடு என கூறி உள்ளார். உடனடியாக விஜயலட்சுமி தன் கழுத்தில் இருந்த 10 பவுன் நகையையும், பீரோவில் இருந்து எடுத்து வந்த 15 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் பாத்திரத்தில் போட்டு மூடி கொடுத்து உள்ளார். அதை பெற்றுக்கொண்ட அந்த பெண் உள்ளே சென்று ஒரு புடவை எடுத்து வா என்று கூறி உள்ளார். புடவை வைத்து பூஜை செய்வது போல் நடித்த அந்த பெண் இன்று மாலை 6 மணிக்கு மேல் விளக்கு வைத்த பிறகு இந்த பாத்திரத்தை திறந்து பார்.

அப்போது உனது நகையும், பணமும் இரு மடங்காக மாறி இருக்கும் என கூறி விஜயலட்சுமிக்கு விபூதியும், குங்குமமும் கொடுத்து நெற்றியில் பூச சொல்லி விட்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வாங்கி குடித்து விட்டு பூஜை முடிந்தது என கூறி விட்டு வெளியே சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை அவரது உறவுக்கார பெண் ஒருவர் விஜயலட்சுமியை பார்க்க வந்துள்ளார். அந்த பெண்ணிடம் விஜயலட்சுமி காலையில் வந்த பெண் மற்றும் அவர் செய்த பூஜை குறித்து விளக்கமாக கூறி உள்ளார். அதை கேட்ட உறவுக்கார பெண் என்ன இது, இந்த காலத்தில் போய் இப்படி எல்லாம் பூஜை செய்கிறாயே, ஏமாந்து விடப் போகிறாய். முதலில் சென்று அந்த பாத்திரத்தை திறந்து பார் என்று கூறி உள்ளார். உடனடியாக விஜயலட்சுமி ஓடிச் சென்று பூஜை அறைக்குள் வைத்திருந்த பாத்திரத்தை திறந்து பார்த்தபோது அதில் பணமோ, நகையோ இல்லை. வெறும் அரிசியும், சிறிது குங்குமமும்தான் இருந்தது.

அதைத்தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஜயலட்சுமி உடனடியாக உறவினர்கள் மூலமாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன், சப்இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 10 பவுன் நகையையும், 15 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் பறிகொடுத்த விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாந்திரீகம் செய்வதாக கூறி ஏமாற்றி சென்ற 30 வயது பெண்ணை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் மின்னல் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

[Continue reading...]

பரமத்திவேலூர் அருகே தீயில் கருகி இளம்பெண் பலி girl fire and dead near paramathivellore

- 0 comments

பரமத்திவேலூர், அக்.18

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்தவர் ரத்தினகிரி. இவர் கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி வள்ளி (வயது35).

இந்த நிலையில் ரத்தினகிரி குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பிலிக்கல் பாளையத்தில் தங்கி கரும்பு வெட்டும் வேலையை செய்து வந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 15ந்தேதி இரவு 11 மணியளவில் வள்ளி வீட்டில் உள்ள மண்எண்ணெய் அடுப்பை பற்ற வைத்தார். இதையடுத்து அவர் அடுப்பில் சுடு தண்ணீர் வைத்துக் கொண்டிருந்த போது காற்றில் அடுப்பில் இருந்த தீ வெளியேறி அவரது துணியில் பிடித்துக் கொண்டது.

தீ மளமளவென அவரது அவரது உடல் முழுவதும் பரவியதால் வலி தாங்க முடியாமல் அலறினார். தீயில் அவரது உடல் முழுவதும் கருகியது. அவரது சத்தத்தை கேட்டு கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சமையல் அறைக்கு விரைந்து சென்று இளம்பெண் வள்ளியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர் அங்கு இன்று காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

[Continue reading...]

கஞ்சி கலயத்தை உடைத்து விவசாயிகள் போராட்டம் farmers broken Porridge kalayam protest

- 0 comments

செம்பட்டி,அக்.18

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலையை முடக்க கூடாது. அதனை 150நாளாக உயர்த்திட வேண்டும். கூலி ரூ.167 கொடுத்திட வேண்டும். அங்கன்வாடி நிர்வாகத்தை தனியாருக்கு விற்கக்கூடாது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

முன்னதாக ஆத்தூர் யூனியன் அலுவலகம் முன்பு விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் பிச்சைமணி தலைமையில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் சுகந்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து, கஞ்சிக் கலயத்தை உடைத்து பேசினார்.

மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வனஜா, மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் காமாட்சி, ஜெயராஜ், நெடுஞ்செழியன், செந்தில்குமார் மற்றும் விவசாய சங்க ஒன்றியத் துணைத்தலைவர் ஆர். சுப்பிரமணி, மாதர் சங்க ஒன்றியத் தலைவர் சுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger