Tuesday 3 September 2013

ராகுல் காந்தி கனிமொழி இரகசிய சந்திப்பு - Rahul Ganthi Kanimozhi meeting

- 0 comments


கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் சமீபத்தில் விலகிவிட்டன. பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகிவிட்டது. 3–வது அணியை உருவாக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், தேசிய கட்சிகள், தங்கள் கூட்டணியில் செல்வாக்கு உள்ள மாநில கட்சிகளை சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. இதற்காக தேசிய கட்சி தலைவர்கள் மாநில கட்சி தலைவர்களுடன் தொடர்பு கொண்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விரும்புகிறார். எனவே, தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி சேர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
தே.மு.தி.க. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக உள்ளது. அதற்கு 10 சதவீத ஓட்டுக்கள் உள்ளன. எனவே இந்த கட்சியையும் காங்கிரஸ் கூட்டணியில் சேர்க்க ராகுல் காந்தி விரும்புகிறார்.
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக தி.மு.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பதாக தி.மு.க.வுக்கு காங்கிரஸ் உறுதி மொழி அளிக்கும் என்று கூறப்படுகிறது.
உணவு பாதுகாப்பு சட்டத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதி பாராட்டி உள்ளார். எனவே தி.மு.க.வை மீண்டும் காங்கிரஸ் கூட்டணியில் சேர்த்து விடலாம் என்று காங்கிரஸ் மேலிடம் நம்பிக்கையுடன் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் கடந்த மாதம் 25–ந்தேதி கொண்டாடப்பட்டது. அவருக்கு ராகுல் காந்தி போனில் வாழ்த்து தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்களும் விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணி யில் சேர்க்கும் முயற்சி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே வரும் பாராளுமன்ற தேர்தலின் போது, தமிழ்நாட்டில் காங்கிரஸ், தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணிக்கு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், கனிமொழி எம்.பி.யும் டெல்லியில் உள்ள முன்னாள் எம்.பி.க்கள் விடுதியில் சமீபத்தில் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது காங்கிரஸ்–தி.மு.க. மீண்டும் கூட்டணி சேர்வது குறித்து பேசியதாகவும் இந்த கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்ப்பது பற்றியும் பேசியதாக தெரிகிறது.
மரியாதை நிமித்தமாக ராகுல் காந்தி–கனிமொழி சந்திப்பு நடந்தது. இதில் அரசியல் இல்லை என்றும் கூறப்படுகிறது. இது குறித்து கனிமொழியிடம் கேட்ட போது அவர் எந்த கருத்தும் கூறவில்லை.
[Continue reading...]

சிரியாவில் போர் அபாயம்: இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் கடும் சரிவு Syria war danger indian rupees value decrease

- 0 comments
சிரியாவில் ஏற்பட்டுள்ள போர் அபாயத்தால் இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் சர்வதேச வெளி மார்க்கெட்டில் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 68.85 ஆக வீழ்ச்சி அடைந்தது.
இது இந்திய பங்கு சந்தையிலும் சரிவை ஏற்படுத்தி உள் நாட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக ரூபாய் மதிப்பு சரிவில் இருந்து சிறிதளவு மீண்டது.
கடந்த சில நாட்களாக ரூபாய் மதிப்பு 66, 67 என்ற அளவில் இருந்தது. இந்த நிலையில் இன்று ரூபாய் மதிப்பு மீண்டும் கடுமையாக சரியத் தொடங்கியுள்ளது. இன்று காலை வர்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 68 ஆக சரிந்தது. தொடர்ந்து 68.50 ஆக மேலும் வீழ்ச்சி அடைந்தது. அதன்பிறகு 68.60 என்ற அளவில் உள்ளது.
[Continue reading...]

போலி என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரி நரேந்திரமோடி மீது பகிரங்க குற்றச்சாட்டு Police officer resigns arrested in fake encounter case

- 0 comments

போலி என்கவுண்ட்டர் வழக்கில் கைதான
போலீஸ் அதிகாரி ராஜினாமா:
நரேந்திரமோடி மீது பகிரங்க
குற்றச்சாட்டு Police officer resigns arrested
in fake encounter case

குஜராத் மாநிலத்தில் கடந்த சில
ஆண்டுகளுக்கு முன் போலீஸ்
என்கவுண்ட்டரில் சொராபுதீன் ஷேக்
என்பவர் கொல்லப்பட்டார். பின்னர்
இது போலியாக நடந்த என்கவுண்ட்டர் என
தெரிய வந்தது. அங்கு இது போல்
மேலும் சில போலி என்கவுண்ட்டர்கள்
நடந்ததும் பின்னர் தெரிய வந்தது. இந்த
போலி என்கவுண்ட்டர்கள் பற்றி சி.பி.ஐ.
விசாரணை நடத்தி வருகிறது.
குஜராத்தில் நடந்த 4
போலி என்கவுண்ட்டர்கள் தொடர்பான
வழக்குகளில் குஜராத் மற்றும்
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 6
ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 32
போலீசார்
இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களில் ஒருவர் குஜராத் மாநில
ஐ.பி.எஸ். அதிகாரியான 'டி.ஐ.ஜி.'
வன்சாரா. சொராபுதீன் ஷேக்
போலி என்கவுண்ட்டர் வழக்கு தொடர்பாக
டி.ஐ.ஜி. வன்சாரா கடந்த 2007-ம்
ஆண்டு ஏப்ரல் 24-ந்
தேதி கைது செய்யப்பட்டார்.
சபர்மதி மத்திய சிறையில்
அடைக்கப்பட்டு உள்ள அவர், கடந்த 6
ஆண்டுகளில் மேலும் சில
போலி என்கவுண்ட்டர் வழக்குகளிலும்
முக்கிய குற்றவாளியாக
சேர்க்கப்பட்டு உள்ளார். டி.ஐ.ஜி.
வன்சாரா, முதல்-மந்திரி நரேந்திர
மோடிக்கு நெருக்கமாக இருந்தவர் என
கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக சிறையில்
இருக்கும்
டி.ஐ.ஜி வன்சாரா திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.
அவர், தனது 10 பக்க
ராஜினாமா கடிதத்தை குஜராத்
உள்துறை கூடுதல்
தலைமைச்செயலாளருக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்.
அதில், நரேந்திர மோடி மீதும்,
அவரது அரசு மீதும் கடுமையான
குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார்.
மேலும் நரேந்திர மோடிக்கு மிகவும்
நெருக்கமானவரும், குஜராத்
உள்துறை மந்திரியாக இருந்தவருமான
அமித் ஷாவையும் அவர் கடுமையாக
தாக்கி இருக்கிறார். அரசின்
கொள்கையைத்தான் போலீஸ்
அதிகாரிகள் செயல்படுத்தியதாகவும்,
பாகிஸ்தான் தூண்டி விடும்
தீவிரவாதத்துக்கு எதிராக போராடி,
அதன் காரணமாக
கைதாகி தற்போது சிறையில்
இருக்கும் அவர்களை குஜராத்
அரசு பாதுகாக்க தவறிவிட்டதாகவும்
குறை கூறி இருக்கிறார்.
நரேந்திர மோடியை கடவுள் போல்
கருதியதாகவும், அவர் மீது மிகுந்த
மரியாதை வைத்து இருந்ததால்தான்
இவ்வளவு நாளும்
அமைதி காத்ததாகவும் கடிதத்தில்
வன்சாரா குறிப்பிட்டு உள்ளார்.
நரேந்திர மோடியை அமித் ஷா தவறாக
வழிநடத்தியதாகவும் அவர்
கூறி உள்ளார்.
போலி என்கவுண்ட்டர்களுக்காக
போலீஸ்காரர்களை சிறையில் அடைக்க
முடியும் என்றால், அந்த
என்கவுண்ட்டர்களுக்கு காரணமான
அரசாங்கத்தில் இருப்பவர்கள்
நவி மும்பையில் உள்ள
தலோஜா மத்திய
சிறையிலோ அல்லது ஆமதாபாத்தில்
உள்ள சபர்மதி மத்திய சிறையிலோதான்
இருக்கவேண்டும் என்றும்
வன்சாரா தனது கடிதத்தில்
கூறி உள்ளார்.
போலீஸ் அதிகாரி வன்சாராவின் இந்த
ராஜினாமா கடிதம் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நரேந்திரமோடி அரசு மீது போலீஸ்
அதிகாரி வன்சாரா கூறியுள்ள
குற்றச்சாட்டுகள் பற்றி குஜராத் மாநில
பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர்
ஜெய் நாராயண் வியாசிடம் நிருபர்கள்
கருத்து கேட்டனர். அப்போது அவர்
கூறுகையில்; டி.ஐ.ஜி.
வன்சாரா இப்படி கூறி இருப்பதில்
ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்றும்,
சிறையில் இருக்கும் அவர்
கோபத்திலும் விரக்தியிலும்
இவ்வாறு கூறி இருக்கலாம் என்றும்
தெரிவித்தார்.
மேலும் வன்சாரா இடைநீக்கம்
செய்யப்பட்டு இருப்பதால்
அவரது ராஜினாமா ஒரு பிரச்சினை அல்ல
என்றும் அவர் கூறினார்.
டெல்லியில் காங்கிரஸ்
பொதுச்செயலாளர் திக்விஜய் சிங்
இதுபற்றி கூறுகையில்; குஜராத்
மாநில அரசு தனது அதிகாரிகளை எந்த
அளவுக்கு தவறாக
நடத்துகிறது என்பது வன்சாராவின்
ராஜினாமா கடிதம் மூலம் தெரிய
வந்துள்ளது என்றும்,
போலி என்கவுண்ட்டர் பற்றி சி.பி.ஐ.
ஏற்கனவே விசாரித்து வருவதால்
உண்மை விரைவில் வெளிவரும்
என்றும் தெரிவித்தார்.

[Continue reading...]

கள்ளக்காதலுடன் ஓடிப்போன மனைவியை தீர்த்துக்கட்ட காமெக் கொடுரன் ஜெய்சங்கரை தப்பிக்க வைத்த அதிகாரி Jeyasankar prisoner escape Jail Officer cooperate

- 0 comments

பெங்களூர் சிறையில்
இருந்து ஜெய்சங்கர் தப்பிச்செல்வதற்கு,
ஜெயில் அதிகாரி ஒருவர் உடந்தையாக
இருந்ததாக கருதப்படுகிறது.
கள்ளக்காதலனுடன் ஓடிய அவருடைய
மனைவியை தீர்த்துக்கட்டுவதற்காக
ஜெய்சங்கரை அவர் அனுப்பினாரா?
என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் சேலம்
மாவட்டத்தை சேர்ந்தவன், ஜெய்சங்கர்
(வயது 36). காமக்கொடூரனான இவன்
தமிழ்நாடு மற்றும் கர்நாடக
மாநிலங்களில் பல
பெண்களை கற்பழித்து கொன்றவன்.
கர்நாடக போலீசார்
அவனை கைது செய்து, பெங்களூர்
பரப்பன அக்ரஹாரா சிறையில்
அடைத்து இருந்தனர்.
கடந்த சனிக்கிழமை நள்ளிரவில்,
சிறையில் ஜெய்சங்கர்
தப்பி ஓடிவிட்டான் அவன் தப்பில் சென்ற
முறை குறித்து ஜெயில் அதிகாரிகள்
வெளியிட்ட தகவல்கள் முரண்பாடாக
உள்ளதால், ஜெயில் அதிகாரிகளே அவன்
தப்பிச் செல்ல உதவியாக இருந்தனரா?
என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் மனநல
சிகிச்சை பெற்று வந்த ஜெய்சங்கர்,
ஆஸ்பத்திரி கட்டிடத்தின் தரை தளத்தில்
உள்ள அறையில்தான்
அடைக்கப்பட்டு இருந்தான்.
கள்ளச்சாவி போட்டு அறையின்
பூட்டை திறந்து தப்பியதாக
கூறப்பட்டது.
ஆனால், சிறை அறையில் உள்ள
இரும்புக்கதவுக்கு வெளியே சுவரின்
பக்கவாட்டில் குறைந்த பட்சம் 4
அடி தூரத்தில் பெட்டி போன்ற
பகுதியில் தான்
பூட்டு போடப்பட்டு இருக்கும்.
உள்ளே இருந்து திறப்பது என்றால்,
குறைந்தது கையின் நீளம் 4 1/2
அடி இருப்பதுடன், 360
டிகிரி அளவுக்கு கையை சுழற்ற
வேண்டியது இருக்கும்.
எனவே உள்ளே இருந்து அவன்
பூட்டை திறப்பது என்பது இயலாத
காரியம். இதை உறுதி செய்வது போல்,
தப்பிச் செல்வதற்கு முன்பாக மாலை 6
மணி அளவிலேயே ஜெய்சங்கரை ஜெயில்
ஊழியர்கள் சிலர் ஆஸ்பத்திரி கட்டிடத்தின்
மேல் தளத்துக்கு அழைத்து வந்ததாக
கூறப்படுகிறது.
சில மணி நேரம் மேல் பகுதியில்
மறைந்து இருந்த அவன், நள்ளிரவில்
வெளியே வந்து பக்கத்தில் இருந்த 20
அடி உயர சுவரில்
ஏறி தப்பிஇருக்கிறான்.
இரும்புக்கம்பியை சுவரில்
சாய்த்து தப்பியதாக கூறப்பட்டாலும்,
அவன் ஒருவனாக அந்த கம்பி வழியாக
ஏறிச்சென்று இருக்க முடியாது.
கீழ்பகுதியில் ஒருவர்
கம்பியை உறுதியாகப்
பிடித்துக்கொண்டால்தான் அவனால்
அதன் மீது ஏறி மேல் பகுதிக்குச்
சென்று இருக்க முடியும். இதற்காக
மூங்கில் கம்புகள் மற்றும் கயிறுகளும்
வழங்கப்பட்டதாகவும் ஒரு தகவல்
கூறுகிறது.
அடுத்து 20 அடி சுவரில்
இருந்து குறுக்காக கட்டப்பட்டு இருந்த
1 1/2 அடி அகல சுவரில் அவன்
நடந்து சென்று இருக்கிறான்.
கண்ணாடி துண்டுகள்
பதிக்கப்பட்டு இருந்த அந்த சுவர்
பகுதியில் ரத்தக்கறை எதுவும் இல்லை.
எனவே நிச்சயம்
அவனுக்கு ஷூ அல்லது பாதுகாப்பான
கவசங்கள்
வழங்கப்பட்டது உறுதியாகிறது.
அடுத்து போலீஸ் சீருடையில்
தப்பியதாக கூறப்படுகிறது.
அப்படி சென்றதை பார்த்தது யார்?
ஊழியர்கள் பார்த்து இருந்தால்,
அதை தடுக்க உடனடியாக
நடவடிக்கை எடுக்காதது ஏன்?
என்பது போன்ற சந்தேகங்கள் எழுகின்றன.
மாலை 6 மணிக்கு மேல்
தளத்திற்கு சிலர்
ஜெய்சங்கரை கூட்டி வந்தபோது அவன்
சீருடையில் இருந்ததை பார்த்ததாக
சிலர் கூறி இருந்தனர். எனவே, போலீஸ்
சீருடையை உள்ளே இருந்தவர்கள்தான்
அவனுக்கு கொடுத்திருக்க வேண்டும்
என்பது உறுதியாகிறது.
அத்துடன் காம்பவுண்டு சுவரில் உள்ள
மின்சார வேலியில் மின்சாரம்
பாய்வதை தடுப்பதற்காக,
திட்டமிட்டு மின்சாரம்
நிறுத்தப்பட்டு உள்ளது. வழக்கமாக
ஜெயிலுக்குள் அதுவும் குறிப்பாக
அங்குள்ள ஆஸ்பத்திரி வளாகத்தில்
மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது.
எதிர்பாராதவிதமாக
மின்சாரத்தடை ஏற்பட்டாலும் அடுத்த
சில வினாடிகளில் மின்சாரம்
வந்துவிடும். ஆனால், ஜெய்சங்கர்
தப்பிச்சென்ற அன்று யாரோ ஒருவர் மின்
வினியோக பிரதான
சுவிட்சை நிச்சயம் ஆப் செய்திருக்க
வேண்டும் என்றும்,
அது குறித்து தீவிர
விசாரணை நடைபெற்று வருவதாகவும்
அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்த ஜெயிலில்
அடைக்கப்பட்டு இருக்கும்
கைதிகளை பார்க்க வரும்
பார்வையாளர்களிடம் தலா ரூ.200 வீதம்
மாமூல் வசூலிப்பது வாடிக்கை.
வெளியில் இருந்து கொண்டு வரும்
உணவை கொடுப்பது என்றால்
அதற்கு கூடுதல் பணம் கொடுக்க
வேண்டும்.
இதுபோன்று வசூலாகும்
பணத்தை ஜெயில் அதிகாரிகள் வார
இறுதி வேலை நாளான
சனிக்கிழமை அன்று மாலையில்
பங்கு பிரித்துக்கொள்வது வழக்கம்.
அப்போது விருந்தும் நடைபெறும்.
ஜெய்சங்கர் தப்பிச்சென்ற அன்று,
அதிகாரி ஒருவர்
ஓய்வு பெற்றதையொட்டி மதுவிருந்தும்
நடைபெற்று இருக்கிறது.
இதுவும் ஜெய்சங்கர் தப்பிச்
செல்வதற்கு சாதகமான அம்சமாக
அமைந்துவிட்டது.
அடுத்து எல்லாவற்றுக்கும் சிகரம்
வைத்தது போல் பரபரப்பான தகவல்
ஒன்று வெளியாகி இருக்கிறது.
அந்த ஜெயில் அதிகாரி ஒருவரின்
மனைவி அவருடைய கள்ளக்காதலனான
போலீஸ்காரருடன் (ஐ.பி.எஸ்.
அதிகாரி ஒருவரின் டிரைவர்)
ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால், தனது மனைவியையும்,
கள்ளக்காதலனையும்
பழிவாங்குவதற்காக அந்த
அதிகாரி சமயம்
பார்த்துக்கொண்டு இருந்தார்.
அந்த அதிகாரிதான்
தனது மனைவியையும்
கள்ளக்காதலனையும் தீர்த்துக்கட்ட,
இதுபோன்ற குற்றங்களில்
கைதேர்ந்தவனான
ஜெய்சங்கரை பயன்படுத்த
திட்டமிட்டு அவன் தப்பிச்செல்ல
உதவி இருக்கலாமா? என்ற சந்தேகமும்
எழுந்துள்ளது.
கர்நாடக மாநில போலீஸ் ஐ.ஜி. லால்
லோகுமா பச்சாவுவிடம், இதுபோன்ற
சந்தேகங்கள்
குறித்து கருத்து கேட்கப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த அவர், தற்போதைய
நிலையில் அது குறித்து எதுவும்
கூற முடியாது. உள்துறை மந்திரி,
போலீஸ் கமிஷனர் ஆகியோருடன்
ஜெயிலில்
ஆய்வு நடத்தியபோது சிறை அதிகாரிகளிடமும்
விசாரணை நடத்தியதாக தெரிவித்தார்.

[Continue reading...]

ஜோத்பூர் சிறையில் அடைப்பு: சாமியார் ஆசாராம் ஜாமீன் கேட்டு மனு jodhpur jail swami aasaram case bail hearing manu

- 0 comments

ஜோத்பூர் சிறையில் அடைப்பு:
சாமியார் ஆசாராம் ஜாமீன்
கேட்டு மனு jodhpur jail swami aasaram
case bail hearing manu

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர்
ஆசிரமத்தில் தங்கிப் படித்த உத்தரபிரதேச
மாணவியை கற்பழித்ததாக சாமியார்
ஆசாராம் பாபு இந்தூரில்
கைது செய்யப்பட்டார். போலீசார்
அவரை ஜோத்பூர்
கொண்டு சென்று ஒரு நாள் காவலில்
வைத்து விசாரணை நடத்தினார்கள்.
ஆசிரமத்துக்கும் அழைத்துச்
சென்று விசாரணை நடத்தப்பட்டது.
72 வயதான சாமியார்
நரம்பு கோளாறால் ஆண்மைத்
தன்மையை இழந்து விட்டதால்
கற்பழிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட
முடியாது என்றும் தான்
நிரபராதி என்றும் கூறினார்.
இதையடுத்து அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் அவர்
முழு ஆண்மை பலத்துடனும் நல்ல உடல்
நலத்துடனும் இருப்பது தெரியவந்தது.
போலீஸ் விசாரணைக்குப் பின்
ஜோத்பூர் கோர்ட்டில் சாமியார்
ஆசாராம் ஆஜர் படுத்தப்பட்டார். 14 நாட்கள்
நீதிமன்ற காவலில் வைக்க
நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்
ஜோத்பூர் மத்திய சிறையில்
அடைக்கப்பட்டார்.
முன்னதாக ஆசாராமை போலீஸ்
வேனில் பலத்த பாதுகாப்புடன்
அழைத்து வந்தனர். கோர்ட்டில்
அவரது ஆதரவாளர்கள் கூடியிருந்ததால்
ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஜெயிலில் அடைக்க
கொண்டு செல்லும்
போது அவருக்கு வேனுக்கு முன்னும்
பின்னும் ஏராளமான கார்களில்
போலீசார் அணி வகுத்து சென்றனர்.
அவருக்கு சிறையில் தகுந்த மருத்துவ
சிகிச்சைகள் அளிக்க வேண்டும்
என்று அவரது வக்கீல் கோர்ட்டில்
கேட்டுக் கொண்டார்.
அதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
ஜெயிலில் அவர் எண் 1 அறையில்
அடைக்கப்பட்டார். வெள்ளை வேட்டியும்
குர்தாவும் அணிந்து வாடிய
முகத்துடன் காணப்பட்டார்.
சாமியார் ஆசாராமை ஜாமீனில்
விடுதலை செய்யக்
கோரி அவரது வக்கீல் இன்று ஜோத்பூர்
கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இதற்கிடையே இந்த வழக்கில் ஜோத்பூர்
போலீசார் மெத்தனமாகவும்,
மென்மையாகவும்
செயல்படுவதாகவும்
எனவே வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க
வேண்டும் என்று கற்பழிக்கப்பட்ட
சிறுமியின் தந்தை ஷாஜகான் பூரில்
நிருபர்களிடம் கூறினார்.

[Continue reading...]

2ஜி ஊழல் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி 2G case SC dismissed petitions

- 0 comments

2ஜி ஊழல் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 5
பேர் மனு சுப்ரீம் கோர்ட்டில்
தள்ளுபடி 2G case SC dismissed petitions

2ஜி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட
சாகித் பல்வா, வினோத் கோயாங்கள்,
ராஜீவ் அகர்வால், ஆசிப் பில்வா,
சந்தோலியா ஆகிய 5 பேர் சுப்ரீம்
கோர்ட்டில் ஒரு மனு தாக்கல்
செய்து இருந்தனர்.
இதில் 2ஜி வழக்கில் பிற கோர்ட்டுகளில்
முறையிட அனுமதிக்க வேண்டும்
என்று கோரி இருந்தனர்.
இந்த மனுவை சுப்ரீம்
கோர்ட்டு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி,
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
தள்ளுபடி செய்தனர். 2
ஜி வழக்கை சி.பி.ஐ.
சிறப்பு கோர்ட்டு மற்றும் சுப்ரீம்
கோர்ட்டுகளில்
மட்டுமே விசாரிக்கப்படும்
என்று உத்தரவிட்டனர்.

[Continue reading...]

மோடியை பார்க்க ஒரே நாளில் 1500 பேர் ஆன்–லைனில் பதிவு 1500 people registration online same day to see modi

- 0 comments


குஜராத் முதல்–மந்திரி நரேந்திர
மோடி வருகிற 26–
ந்தேதி திருச்சியில் இளைஞர்
மாநாட்டில் பேசுகிறார்.
இந்த கூட்டத்துக்கு மாநிலம்
முழுவதிலும் இருந்து இளைஞர்கள்,
மாணவர்கள்,
பொதுமக்களை பெருமளவில் திரட்ட
தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் தீவிர
முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
கூட்டத்துக்கு வருபவர்கள்
முன்கூட்டியே பெயர்
பதிவு செய்வதற்காக மாவட்ட வாரியாக
விண்ணப்ப படிவங்கள் மூலம் பெயர்
சேர்க்கை நடந்து வருகிறது.
ஆன்–லைன் மூலமும் பெயர்
பதிவு செய்யும்
முறையை பா.ஜனதா தகவல்
தொழில்நுட்ப பிரிவினர்
நேற்று தொடங்கினார்கள்.
நேற்று மாலை 5 மணி முதல் இந்த
வெப்செட் செயல்பட தொடங்கியது.
ஒரே நாளில் நரேந்திர
மோடியை பார்க்க சுமார் 1500 பேர்
பெயர் பதிவு செய்துள்ளார்கள்.
நரேந்திர மோடி பொதுக்
கூட்டத்துக்கு திருச்சி பைபாஸ்
ரோட்டில் இடம்
தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பா.ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங்,
நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள்
அமர்வதற்காக
டெல்லி செங்கோட்டை வடிவில்
பிரமாண்டமான
மேடை அமைக்கப்படுகிறது.
மேடை அமைப்பு, பொதுக்கூட்ட
ஏற்பாடுகள் குறித்து திருச்சியில்
இன்று பொன்.ராதாகிருஷ்ணன்
தலைமையில் ஆலோசனை கூட்டம்
நடந்தது. கூட்டத்தில்
அமைப்பு செயலாளர் மோகன்ராஜுலு,
சரவண பெருமாள், மாநில செயலாளர்கள்
வானதி ஸ்ரீனி வாசன், கருப்புமுருகன்,
இளைஞர் அணி மாநில தலைவர்
பாலகணபதி, ஆதவன்,
முத்துலெட்சுமி உள்பட மாநில
மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger