Tuesday 29 October 2013

நடிகை கஜோல் வீட்டில் ரூ. 5 லட்சம் தங்க நகை திருட்டு: வேலைக்காரி வேலைக்காரன் கைது maid and servant arrester for stealing rs. 5 lakh jewels from kajol

- 0 comments

நடிகை கஜோல் வீட்டில் ரூ. 5 லட்சம் தங்க நகை திருட்டு: வேலைக்காரி வேலைக்காரன் கைது maid and servant arrester for stealing rs. 5 lakh jewels from kajol

மும்பை, அக். 30-

பாசிகர் இந்தி படத்தின் மூலம் பிரபல பாலிவுட் கதாநாயகியாக 1992-ல் அறிமுகமாகியவர் நடிகை கஜோல்.

தில்வாலே துலன்யே லே ஜாயங்கே மற்றும் குச் குச் ஹோத்தா ஹை படங்களின் மூலம் புகழ் ஏணியின் உச்சியை தொட்டு 2011-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை பெற்ற கஜோல், 1997-ம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான மின்சார கனவு படத்தில் நடிகர் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சுமார் 40 படங்களில் நடித்துள்ள இவர், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்க்னை 5 ஆண்டுகளாக காதலித்து 1994-ம் ஆண்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.

மும்பையின் புறநகர் பகுதியான ஜுகு-வில் உள்ள ஆடம்பர வீட்டில் இத்தம்பதியர் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 22-ம் தேதி சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அலங்காரம் செய்து கொண்ட கஜோல் தனது நகை பெட்டியில் இருந்து 17 வளையல்கள் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இது வீட்டின் உள்ளே சுதந்திரமாக நடமாடும் யாரோ செய்த வேலையாகதான் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த அவர் இது தொடர்பாக ஜுகு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவரது வீட்டில் வேலை செய்யும் 10க்கும் மேற்பட்ட பணியாளர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் காயத்ரி (22) சந்தோஷ் பாண்டே ஆகிய இருவரை கைது செய்தனர்.

அந்தேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் விசாரணை காவலின்கீழ் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

திருடப்பட்ட 17 வளையல்களில் மதிப்பு ரூ. 5 லட்சத்துக்கும் அதிகம் என போலீசார் தெரிவித்தனர்.

...

shared via

[Continue reading...]

Kudankulam reactor turbine stopped again

- 0 comments

The turbine of the Kudankulam Nuclear Power Project's first reactor which was resynchronized with the southern gridlast Friday, was stopped again on Tuesday "for a series of mandatory tests".

After the 1,000 MWe capacity reactor was synchronised with the grid for the first time with 160 MWe, last Tuesday at 2.45am, it was stopped at 5.40am the same day for tests stipulated by the Atomic Energy Regulatory Board (AERB). As the test results submitted to the AERB were found to be satisfactory, the 'Operational Team' of the KKNPP was given the green signal to resynchronize the turbine again on Friday night.

Since then, the turbine has been operational in order to generate electricity up to 300 MWe. "As we reached 300 MWe, we stopped the turbine manually for mandatory tests at 8pm," confirmed Site Director, KKNPP, R.S. Sundar.

Sources in the KKNPP said it might take a minimum of five days for resuming turbine operations.

[Continue reading...]

ரூ. 50 க்கு டெல்லி அரசு விற்கும் அழுகல் வெங்காயத்தை புறக்கணிக்கும் குடும்பத் தலைவிகள் delhi house wives reject rotten onions sold by government

- 0 comments

ரூ. 50 க்கு டெல்லி அரசு விற்கும் அழுகல் வெங்காயத்தை புறக்கணிக்கும் குடும்பத் தலைவிகள் delhi house wives reject rotten onions sold by government

புதுடெல்லி, அக். 30-

நாடெங்கும் வெங்காயத்தின் விலை கடும் உயர்வை சந்தித்து வரும் நிலையில் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயில் இருந்து 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

டெல்லி தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியின் தலையெழுத்தையே வெங்காய விலையுயர்வு மாற்றி அமைத்து விடுமோ? என்ற அச்சம் முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை ஆட்கொண்டுள்ளது.

டெல்லியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைவதை தடுக்கும் வகையில் டெல்லிக்கு வரவேண்டிய வெங்காய லாரிகளை மத்திய பிரதேச அரசு தடுத்து நிறுத்தி விடுவதாக கூட ஷீலா தீட்சித் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், வெங்காய விளைச்சலுக்கு பெயர் பெற்ற நாசிக்கில் இருந்து டெல்லி அரசு சார்பில் வெங்காயத்தை நேரடியாக கொள்முதல் செய்ய ஷீலா தீட்சித் முடிவு செய்தார்.

தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அரசின் புதிய முடிவு தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் அவர் அனுமதி கோரினார். சரக்கு பற்றாக்குறையை போக்கவே வெங்காயத்தை நேரடியாக கொள்முதல் செய்ய டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

கொள்முதல் செய்யப்படும் வெங்காயம் சந்தை விலைக்கே டெல்லியில் விற்கப்படும். அரசியல் ஆதாயத்துக்காக சலுகை விலையில் மக்களுக்கு விற்கும் திட்டம் எதுவும் அரசுக்கு கிடையாது என தேர்தல் கமிஷனுக்கு எழுதிய கடிதத்தில் ஷீலா தீட்சித் குறிப்பிட்டிருந்தார்.

அந்த வாக்குறுதியை ஏற்று டெல்லி அரசே நேரடியாக வெங்காயத்தை கொள்முதல் செய்ய தேர்தல் கமிஷன் அனுமதி அளித்தது. இதனையடுத்து, நாசிக்கில் உள்ள லசல்கான் வெய்காய சந்தைக்கு டெல்லி அரசு அதிகாரிகள் சென்றனர்.

இதனையடுத்து, நாளொன்றுக்கு 9000 டன் வெங்காயம் பயன்படுத்தப்படும் டெல்லிக்கு இன்று மட்டும 2 ஆயிரம் டன் வெங்காயம் வந்து சேர்ந்தது.

டெல்லி வெளிச்சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 80-90க்கு விற்கப்படும் நிலையில் அரசின் சார்பில் 125 வேன்களின் மூலம் நேற்று வெங்காய விற்பனை தொடங்கியது.

டெல்லியின் 500 பகுதிகளை சுற்றி வந்த இந்த வேன்கள் ஒரு கிலோ வெங்காயத்தை 50 ரூபாய்க்கு விற்பனை செய்தன.

ஆயினும், இன்று தெருத் தெருவாக கூவி விற்கப்பட்ட இந்த வெங்காயம் சமைப்பதற்கு தகுதியற்று அழுகிப் போய் உள்ளதாக கூறும் சில பெண்கள் மலிவு விலையில் கிடைத்தாலும் இது தேவை இல்லை என்று ஒதுக்கிவிட்டு அதிக விலை கொடுத்தாவது நல்ல வெங்காயத்தை வாங்கி சென்றனர்.

டெல்லி மால்வியா நகரை சேர்ந்த குடும்பத் தலைவி ரேகா டண்டன் என்பவர் கூறுகையில் மலிவாக கிடைக்கிறது என்று நூறு ரூபாய் கொடுத்து 2 கிலோ வெங்காயம் வாங்கினேன்.

அதில் 1 கிலோ அழுகல் வெங்காயமாக உள்ளது. இதை விட 80 ரூபாய்க்கு ஒரு கிலோ வெங்காயத்தை வெளி மார்க்கெட்டில் வாங்கியிருந்தால் எனக்கு 20 ரூபாய் மிச்சமாகியிருக்கும் என்று கூறினார்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த டெல்லி அரசு அதிகாரிகள், வெங்காய லாரிகள் மழைபெய்த மாநிலங்கள் வழியாக வந்ததால் சற்று தரமற்றவை ஆகிப்போய் இருக்கக்கூடும் என்றனர்.

...

shared via

[Continue reading...]

அரசு அலுவலகங்களில் இனி யாகூ ஜிமெயில் பயன்படுத்த முடியாது Gmail Yahoo may be banned in government offices by year end

- 0 comments

அரசு அலுவலகங்களில் இனி யாகூ ஜிமெயில் பயன்படுத்த முடியாது Gmail Yahoo may be banned in government offices by year end

புதுடெல்லி, அக். 29-

அரசு அலுவலகங்களில் பாதுகாக்கப்படும் தரவு சேவைகள் சைபர் கிரைம் குற்றங்களில் சிக்குவதை முற்றிலும் தடை செய்யவேண்டி வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் யாகூ, ஜிமெயில் வலைத்தளங்களின் உபயோகத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அரசாங்கம் இனி தனது உத்தியோகபூர்வ தகவல்களுக்கு கொள்கை தேசிய தகவல் மையத்தின்(நிக்) இணையதளத் தொடர்புகளையே பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அரசாங்க அலுவலகங்கள் இந்த இணையதளத் தொடர்பை உபயோகப்படுத்துவதை அரசு கட்டாயமாக்க எண்ணியுள்ளது. இதன்மூலம் 5 முதல் 6 லட்சம் அரசு ஊழியர்கள் நிக் தகவல் தொடர்பை பயன்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு செய்வதன்மூலம், உத்தியோகபூர்வ ஆதாரங்களின்படி அரசாங்கத்தின் தகவல் பதிவுகள் பெருமளவில் பாதுகாக்கப்பட முடியும் என்று அரசு கருதுகின்றது.

இந்திய அரசாங்கத்தின் கொள்கை என அழைக்கப்படும் இந்தத் திட்டம் கிட்டத்தட்ட தயார் நிலையில் உள்ளது. மற்ற அமைச்சரவைகளின் கருத்துகளும் இதுகுறித்து சேகரிக்கப்பட்டு வருகின்றன. வரும் டிசம்பர் மாத மத்தியிலிருந்து இறுதிக்குள் இந்த செயல்பாடுகள் தொடங்கக்கூடும் என்று மத்திய அரசின் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்பத் தகவல்துறையின் செயலாளரான சத்யநாராயணா சிஐஐ உச்சி மாநாட்டின்போது நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த உட்கட்டமைப்பு வசதிகளுக்காக உடனடியாக 4 முதல் 5 கோடி ரூபாய் வரை தேவைப்படுவதாகவும் அவர் கூறினார். ஆயினும், இத்திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தும்போது இதன் முதலீடு 50 முதல் 100 கோடி ரூபாய் வரை இருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி இத்தகைய தரவுத் தகவல்கள் கிளவுட் பிளாட்பாரம் எனப்படும் தொகுப்பில் சேமித்து வைக்கப்படும். அதனால், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தங்களுடைய துறை குறித்த தகவல் தொகுப்புகளை எளிதில் கையாள முடியும் என்றும் சத்யநாராயணா விளக்கினார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜன்சி மற்றும் மத்திய புலனாய்வுத்துறை ஏஜென்சியின் முன்னாள் தொழில்நுட்ப ஒப்பந்ததாரரான எட்வர்ட் ஸ்னோடென் அமெரிக்கா மற்ற நாடுகளைக் கண்காணிப்பதை ஆதாரங்களுடன் விளக்கியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, உலக நாடுகள் தங்களின் தகவல் தொடர்புகள் குறித்த பாதுகாப்பில் வெளிநாட்டுத் தொடர்பு மையங்களான யாகூ, ஜிமெயில் போன்றவற்றை உபயோகப்படுத்துவதை கட்டுப்படுத்தவும் வழி வகுத்துள்ளது.

...

shared via

[Continue reading...]

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பாராகிளைடிங் –ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிப்பு Thevar Jayanthi festival monitoring by paragliding drone

- 0 comments

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பாராகிளைடிங் –ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிப்பு Thevar Jayanthi festival monitoring by paragliding drone

ராமநாதபுரம், அக்.29–

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாராகிளைடிங் மற்றும் ஆள் இல்லா விமானம் மூலமும் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நேற்று தொடங்கி உள்ளது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பசும்பொன்னில் தேவர் நினைவிடம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு தேவரின பக்தர்கள் நேற்று முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முதல்நாள் ஆன்மீக விழாவாக முடிந்த நிலையில் 2–வது நாளான இன்று அரசியல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு, அரசியல் பிரவேசம் போன்றவை சொற்பொழிவாக நிகழ்த்தப்பட்டன. நாளை (30–ம்தேதி) குருபூஜை தினம் என்பதால் அரசியல் கட்சியினர், சமுதாய பிரமுகர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் வந்து தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகணன் தலைமையில் போலீசார் பல பகுதிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அபய்குமார்சிங் முகாமிட்டுள்ளார்.

வெளிமாவட்டங்களில் இருந்து டி.ஐ.ஜி.க்கள், கண்காணிப்பாளர்கள், கூடுதல் உதவி கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் வரவழைக்கப்பட்டு மாவட்டத்தின் பதற்றமான பகுதிகள் உள்பட பல பகுதிகளில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற அசம்பாவித சம்பவங்களை கருத்தில் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக சிறப்பு ஏற்பாடுகளையும் போலீசார் செய்துள்ளனர். இதன் ஒரு முயற்சியாக வானில் பறந்து கண்காணிக்கும் வகையில் பாராகிளைடிங் பாராசூட் வரவழைக்கப்பட உள்ளது. சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த மணிக்கண்ணன், தான் பாராகிளைடிங் மூலம் கண்காணிப்பு பணியை செய்ய உள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகணன் கூறியதாவது:–

பாராகிளைடிங் பாராசூட் இயக்க கற்றுத் தரும் பயிற்சியாளராக மணிக் கண்ணன், தனது பாரா கிளைடிங் பாராசூட்டில் அமர்ந்து கொண்டு வானில் பறப்பார். அவரது தலையில் அணிந்திருக்கும் ஹெல்மெட்டில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தாழ்வாக பறக்கும் அவர் காமிரா மூலம் பதட்டம் ஏற்படும் இடங்கள், கூட்டம், போக்குவரத்து நெரிசல் போன்றவை பற்றி வயர்லெஸ் மூலம் தகவல் கொடுப்பார். அதனை வைத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று குற்ற நிகழ்வுகளை தடுப்பார்கள். இதுதவிர ஆள் இல்லா விமானமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பாரா கிளைடிங் பாராசூட் செயல்பாடு குறித்து அனைவருக்கும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

பசும்பொன் செல்பவர் களை சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச் சேத்தி, மானாமதுரை வழியாக செல்லும்போது அங்கு அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேமரா பொருத்தப்பட்ட ஆள் இல்லா விமானம் மூலம் அந்த பகுதியில் போலீசார் கண்காணிக்கிறார்கள். இந்த விமானம் மூலம் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடக்கும் நிகழ்ச்சிகளை படம் பிடிக்க முடியும். ரிமோட் மூலம் இந்த விமானத்தை இயக்க சென்னை அண்ணா பல்கலைக்கழக தகவல் தொழில் நுட்ப உதவி பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் முதுகலை தகவல் தொழில் நுட்ப மாணவர்கள் 6 பேரும் வந்துள்ளனர்.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்கள் முழுவதும் போலீஸ் பாதூகப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னையில் இருந்தே கண்காணிக்கும் வகையில், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் வெப் காமிராவும் பொருத்தப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

...

shared via

[Continue reading...]

மத்திய பிரதேசத்தில் குளத்தில் பூத்திருக்கும் தாமரையை மறையுங்கள்: தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கடிதம் Hide lotus blooming in the pool in Madhyapradesh Congress letter to Election commission

- 0 comments

மத்திய பிரதேசத்தில் குளத்தில் பூத்திருக்கும் தாமரையை மறையுங்கள்: தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கடிதம் Hide lotus blooming in the pool in Madhyapradesh Congress letter to Election commission

போபால், அக்.29–

மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 25–ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு வருகிற 1–ந் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது.

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜ.க. கட்சி மொத்தம் உள்ள 230 இடங்களில் 150 முதல் 160 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் பெரிதும் கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் மகா கவுசல். மால்வா, பந்தல் கண்ட் ஆகிய மண்டலங்களில் 40–க்கும் மேற்பட்ட குளங்களில் தாமரை மலர் பூத்துள்ளது. இந்த குளங்களில் தாமரை பயிரிடப்படுகிறது.

இந்த 40 குளங்களில் இருந்து தான் மத்தியபிரதேசத்தின் மற்ற பகுதிகளுக்கு தாமரை மலர்கள் அனுப்பப்படுகின்றன.

பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் சின்னம் தாமரை என்பதால் இந்த குளங்களில் பூத்துக்குலுங்கும் தாமரை பூக்கள் காங்கிரசாரிடம் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த தாமரை பூக்கள் தங்களுக்கு தோல்வியை ஏற்படுத்தும் வகையில் மாறி விடுமோ என்று பயப்படுகிறார்கள்.

இதையடுத்து மத்திய பிரதேச மாநில காங்கிரசார் நேற்று தலைமை தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் அவர்கள் மத்திய பிரதேசத்தில் குளத்தில் பூத்துள்ள தாமரைகளை திரை போட்டு மறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்திரபிரதேசத்தில் தேர்தல் நடந்த போது மாயாவதியின் பகுஜன் சமாஜகட்சியின் சின்னமான யானை சிற்பங்கள் எல்லாம் துணி போட்டு மூடப்பட்டன. அது போல தாமரை பூக்களையும் மூட வேண்டும் என்கிறார்கள்.

இதற்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரசாரின் கோரிக்கை கேலிக்கூத்தாக உள்ளது. காங்கிரசின் சின்னம் கை என்பதால் நாட்டில் உள்ள எல்லாரது கைகளையும் மறைக்க வேண்டும் என்று நாங்கள் சொன்னால் அது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அப்படித்தான் காங்கிரசாரின் கோரிக்கை அபத்தமாக உள்ளது என்று பா.ஜ.க.வினர் கூறியுள்ளனர்.

...

shared via

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger