Saturday 20 August 2011

ராஜீவ் கொலையின்��ோது காங் தலைவர்கள் எங்கே போனார்க���்?!: சீமான் கேள்வ��!

- 0 comments


நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் பேசுகையில், பேரறிவாளனை சிறைச்சாலை ஒரு மனிதனாக மாற்றியிருக்கிறது. அதேசமயம் சிறை பேரறிவாளனை சீர்த்திருத்தவில்லை. சிறையை பேரறிவாளன் சீர்த்திருத்தியிருக்கிறார். வேலூர் சிறை ஒரு கல்லூரியாக மாறியிருப்பதற்கு பேரறிவாளன் தான் காரணம். கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு இதில் தலையிட்டு மூவரையும் மீட்க முயற்சிக்க வேண்டும்.

இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, காவல்துறை ஆணையரிடம் போய், என்னைக் கைது செய்ய வேண்டும். எங்கள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்திருக்கிறார். சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. அந்தக் கட்சியினர் பேசாமல் விலகி எங்கள் கட்சிக்கு வந்துவிடலாம்.

நீங்கள் (யுவராஜா) எங்களை எதிர்த்து போராட வேண்டாம். நீங்கள் உங்கள் கட்சி தலைவர்களிடம் கேளுங்கள். அமரர் ராஜீவ்காந்தி அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்திற்கு வரும்போது, தன் தாயார் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார்கள். இந்தியாவின் மிகப்பெரிய தலைவியாக இருந்த அம்மையார் இந்திரா காந்தியின் சிலை. காங்கிரஸ் கட்சியின் தலைவியின் சிலை. அய்யா ராஜீவ்காந்தி அவர்களுடைய தாயார் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார்கள்.

திரளாக திரண்டு இருக்கிற என் தமிழ் உறவுகள் சாதாரணமான சீமான் நான் என்னுடைய வாகனத்தில் இருந்து இறங்கி இந்த மேடைக்கு வரும்போது கூட என்னை சுற்றி நூற்றுக்கணக்கான தம்பிகள் என்னை பாதுகாப்பாக பத்திரமாக அழைத்து வருவதை நீங்கள் பார்த்தீர்கள்.

பெருமைக்குரிய பெருமகள், இந்த நாட்டின் மிகப்பெரிய தலைவர் அம்மையார் இந்திரா காந்தி அதுவும் உங்கள் கட்சியின் தலைவி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அந்த தலைவர் வரும்போது, அவரைவிட்டு எங்கே போனீர்கள். இதற்கு பதில் சொல்லுங்கள். அதற்கு பின்னர் சொல்லுங்கள் பேரறிவாளன் உள்பட மூன்று பேரை தூக்கில் போட வேண்டும் என்று.

அன்றைக்கு டாஸ்மாக் கூட இல்லையே...:

எங்கே போனார் அய்யா மூப்பனார். என் தம்பிகள் தூக்கு தண்டனையை வரவேற்கிறேன் என்று சொன்ன தங்கபாலு எங்கே போனார். ப.சிதம்பரம் போனது எங்கே. ஜெயந்தி நடராஜன் போனது எங்கே. அய்யா ஈவிகேஎஸ் இளங்கோவன் எங்கே போய் நின்று கொண்டிருந்தார். அன்றைக்கு டாஸ்மாக் கூட இல்லையே, எங்கே போனீங்க நீங்க?

யுவராஜ் அவர்களே தன் தலைவனுக்கு அருகே வராமல் தனித்து சாகவிட்ட துரோகத்திற்காக உங்கள் தலைவர்களை முதலில் தூக்கிலிடு. பிறகு என் தம்பிகளை தூக்கிலிட சொல்லுங்கள். ராஜீவ் காந்தி மீது பற்றுக்கொண்டவர் என்று சொல்லுகிறீர்கள். காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த நான் சொல்லுகிறேன், இந்திரா காந்தி செத்ததுக்கு மூன்று நாள் என் வீட்டில் சோறு ஆக்கவில்லை. படிக்கிற காலத்தில் அழுது கிடந்தேன். என் தாய் போல நேசித்து வாழ்ந்தேன். உங்களுக்கு இந்திரா காந்தி யார் என்று தெரியுமா?.

என்னை கைது செய்யச்சொல்லி மனு கொடுக்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் 50 ஆண்டுகளாக ஆண்ட நீங்கள், சோனியா காந்திக்கு இந்த நாட்டில் வைத்தியம் பார்க்க கூட வசதியில்லாத நிலையில் இந்த நாட்டை வைத்திருக்கிறீர்கள். உங்களிடம் பணம் இருக்கு. அமெரிக்காவில் போய் வைத்தியம் பார்க்கிறீர்கள். என்னிடம் பணம் இல்லை. என்ன செய்வது. நேராக சுடுகாட்டில் போய் படுத்துவிடுவதா?.

யுவராஜ் அவர்களே, நீங்கள் சரியான ஆளாக இருந்தால், இதேபோல் கூட்டத்தை கூட்டிக் காட்டுங்கள். இந்த இடத்தில் நான் தீக்குளிக்கிறேன். மறுபடி உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன். நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று 500 ஓட்டு வாங்கி காட்டுங்கள். இல்லையேல் அனைத்து கட்சிகளுடன் நீங்கள் கூட்டணி வைத்து, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி. யுவராஜ் அவர்களே உங்களுக்கு ராகுல்காந்தி மட்டும்தான் தெரியும். மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு என எனக்கு எல்லாம் தெரியும் என்றார் சீமான்.








http://sex-story7.blogspot.com




  • http://sex-story7.blogspot.com


  • [Continue reading...]

    விஜயின் யோகன் தள���ளிபோகிறது :சீமா��ை தொடர்ந்து கவுதம் மேனன்-க்கும் அப்பு

    - 0 comments


    மார்க்கெட்டில் திடீர் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது தெய்வ திருமகள் இயக்குனர் விஜய்க்கு. 'சுட்டுக்' கொடுப்பதில் மட்டுமல்ல, அதையே சூடாக கொடுப்பதிலும் வல்லவர் என்று நினைத்திருக்கலாம். இந்த டிமாண்ட் நடிகர் விஜய் வரைக்கும் தொற்றியிருப்பதுதான் ஆச்சர்யம்.

    தெய்வ திருமகள் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பின் போதே அடிக்கடி அஜீத்தை சந்தித்து கதை பேசி வந்தார் விஜய். எனவே அஜீத்தின் பில்லா-2 வுக்கு பிறகு விஜய்க்குதான் அஜீத்தின் கால்ஷீட் என்று பரவலாக பேசி வந்தார்கள். இல்லையில்லை, யூடிவி தயாரிக்க, மீணடும் விக்ரமும் விஜய்யும் இணைகிறார்கள் என்ற பேச்சும் பரவியது. ஆனால் இவ்விரு தகவல்களையும் வெளுத்துப் போக வைத்திருக்கிறது புது தகவல் ஒன்று.

    நடிகர் விஜய்யிடம் ஒரு கதை சொன்னாராம் டைரக்டர் விஜய். அது பிடித்துப் போனதால் நண்பன் முடிந்த கையோடு இதில் நடிப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறாராம் விஜய். கவுதம் மேனன் படத்தை சற்றே ஒத்தி வைத்துவிட்டு விஜய்யை உள்ளே நுழைத்திருப்பதாகவும் பேச்சிருக்கிறது.

    திடீர் திடீரென்று ஏற்படும் திருப்பங்களில் சிக்கி நசுங்கிப் போய் கிடப்பதென்னவோ, செந்தமிழன் சீமான் இயக்குவதாக சொல்லப்பட்ட படம்தான்!





    http://sex-story7.blogspot.com




  • http://sex-story7.blogspot.com


  • [Continue reading...]

    குறித்த நேரத்தி��் வருமா மங்காத்தா? சிக்கலை உருவாக்கும் தியேட்டர்��ாரர்கள்

    - 0 comments



    சீட்டுக்கட்டுகளின் சிக்கலான ஏரியாவை பற்றி பேசும் படம்தான் மங்காத்தா. ஆனால் அதை சிக்கல் இல்லாமல் வெளியே கொண்டு வருவார்களா என்பதில்தான் இப்போது சிக்கலே! ஏனென்றால் இதே நிறுவனம் தயாரித்த முந்தைய படங்களான வ குவார்ட்டர் கட்டிங், அழகர்சாமியின் குதிரை ஆகிய படங்களை திரையிட்டு பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்கிறார்கள் தியேட்டர் காரர்கள். இந்த சிறு மெழுகு வர்த்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்து எரிமலைக் குழம்பை கக்குவார்கள் போலிருக்கிறது.

    மங்காத்தா படத்தை வெளியிட விடக்கூடாது என்று கூடி கூடி விவாதிக்கிறார்களாம். அதற்கு முன் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

    இம்மாதம் 30 ந் தேதி அல்லது அடுத்த மாதம் 1 ந் தேதி மங்காத்தாவை வெளிக் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் கிடுக்கிப்பிடி அவர்களை அதிர வைத்திருக்கிறது.

    ஒரு படத்தை முடித்துக் கொடுத்ததோடு தன் கடமை முடிந்தது. அதற்கு பிறகு அது தயாரிப்பாளர் பாடு, விநியோகஸ்தர்கள் பாடு என்று ஒதுங்கிக் கொண்டார் அஜீத். மஙகாத்தாவின் அடுத்த ஆட்டம் என்னவாக இருக்குமோ?




    http://sex-story7.blogspot.com




  • http://sex-story7.blogspot.com


  • [Continue reading...]

    கருணை மனு என்று பெயர் வைத்தது யார���? – ஆனந்த விகடன்

    - 0 comments


    மரணக் குழிக்குள் தள்ளும் கையெழுத்துக்கு, கருணை மனு என்று பெயர் வைத்தது யார்? – ஆனந்த விகடன்

    மரணக் குழிக்குள் தள்ளும் கையெழுத்துக்கு, கருணை மனு என்று பெயர் வைத்தது யார்?

    ராஜீவ் கொலை மட்டும் அல்ல… எல்லாக் கொலைகளும் கண்டிக்கத்தக்கவை, பயங்கரமானவை, ஆதரிக்க முடியாதவை!
    ஆனால், அநியாயத்தின் பெயரால் செய்யப்பட்ட கொலைக்குத் தண்டனையாக, நீதியின் பெயரால் கொலை செய்வது தீர்வாகுமா? கொலை செய்தவனைக் கொலை செய்வதுதான் தீர்வா? கண்ணுக்குக் கண்… பல்லுக்குப் பல்… என்று சொல்லக்கூடிய காட்டுமிராண்டிக் காலம் இருந்தது என்றால், இப்போது நடப்பதற்கு என்ன பெயர்? – மொழி எல்லைகளைக் கடந்து, இந்தியா முழுவதும் இருக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பி வரும் கேள்வி இதுதான்!
    இந்தக் கேள்விக்கு இறுதி விடை சொல்லாமலேயே, பேரறிவாளன் (எ) அறிவு, தாஸ் (எ) முருகன், ரவிராஜ் (எ) சாந்தன் ஆகிய மூன்று உயிர்களைத் தூக்கு மேடையில் நிறுத்த இந்தியக் குடியரசுத் தலைவர் தயாராகிவிட்டார்.

    பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன், சீமான் போன்றவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள். ஆனால், புலிகளையோ, பிரபாகரனையோ தெரியாத மகாத்மா காந்தி சொன்னதையாவது கேட்க வேண்டாமா? 'குற்றவாளிக்கு உரிய மன நோய் மருத்துவமனைதான் சிறைச்சாலை. அது கொலைக் களம் அல்ல' என்றவர், 'உயிர் இறைவனால் அளிக்கப்பட்டது. அதனைப் பறிக்க, அவனைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை' என்றார். காந்தி சொன்ன எதையுமே கேட்கவில்லை காங்கிரஸ். இதை மட்டுமாவது கேட்கக் கூடாதா?
    1991 மே 21 – ஸ்ரீபெரும்புதூர் பனங்காட்டுக்குள் பழி தீர்க்கப்பட்டார் ராஜீவ். அந்த வழக்கில் 41 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகின. புலிகளின் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு, பெண்கள் படைத் தலைவர் அகிலா ஆகிய மூவரும் பிடிக்க முடியாத குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டார்கள். மனித வெடிகுண்டாக வந்த தணு, பெங்களூரில் தற்கொலை செய்துகொண்ட சிவராசன் மற்றும் சுபா, மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய கோடியக்கரை சண்முகம் உள்ளிட்ட 12 பேர் மரணம் அடைந்தனர். மீதம் உள்ள 26 பேர் மீது வழக்கு விசாரணை பூந்தமல்லி தனி நீதிமன்றத்தில் நடந்தது. 1998 ஜனவரி 28-ம் நாள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதிப்பதாக நீதிபதி நவநீதன் தீர்ப்பு அளித்தார். மரண தண்டனை ஒழிப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு மட்டும் மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது.

    ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவருக் கும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டது. ஆயுள் தண்டனை என்றால், இதுவரை நடந்த குற்றங்களுக்கு எல்லாம் 14 ஆண்டுகளில் விடுதலை செய்ய… இந்த வழக்கில் கைதானவர்கள் மட்டும் 20 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார்கள். 'ஆயுள் தண்டனை என்றால், ஆயுள் முழுக்க உள்ளேயே இருக்க வேண்டும்' என்று வியாக்யானம் சொல்லப்படுகிறது. இதே தமிழ்நாட்டில்தான் ஏழு ஆண்டு களுக்குள் வெளியே வந்த ஆயுள் தண்ட னைக் கைதிகளும் உண்டு.

    சட்டத்தின் முன் அனைவரும் சமம் – என்பதுதான் எல்லாச் சட்டத்துக்கும் முதல் விதி… மீறப்படும் முதல் விதியும் இதுதான். செத்துப்போனது ராஜீவ் காந்தியா, ராஜா ராமா என்று சட்டம் பார்க்கக் கூடாது. 26 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கள், 'இது பயங்கரவாத வழக்கு அல்ல. எனவே, தடா சட்டம் இந்த வழக்குக்குப் பொருந்தாது' என்று சொல்லிவிட்டார்கள்.

    "இந்திய அரசைத் திகைக்கச்செய்வதோ, இந்திய மக்களுக்கு அச்சம் உண்டாக்குவதோ சதிகாரர்களின் நோக்கமாக இருந்தது என்பதை மெய்ப்பிக்க போதிய ஆதாரம் இல்லை. தடா சட்டத்தின் பிரிவுகளுக்கான குற்றங்களுக்கு எங்களுக்கு முட்டுக் கொடுக்க முடியவில்லை" என்று நீதிபதிகள் சொன்னார்கள். பழ.நெடுமாறன், மேல் முறையீடு செய்யாமல் போயிருந்தால், இன்று 26 பேரும் தூக்கு மேடையில் நின்றிருப்பார்கள். மூத்த வழக்கறிஞர் என்.நடராஜனின் வாதத் திறமையால், 22 பேருடைய உயிர்கள் தப்பின. இப்போது நான்கு உயிர்கள் துடிக்கின்றன!

    பேரறிவாளனின் மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று இங்கு இருப்பவர்களுக்கு இணையாகக் குரல் கொடுப்பவர் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர் கிருஷ்ணய்யர். இவர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் அல்ல. நல்லவேளை, தமிழரும் அல்ல. இந்திய நீதிமன்றங்களும் நீதிபதிகளும் 'வாழும் நீதி தேவதை'யாக எவரை நினைக்கிறார்களோ, அவரே சொல்கிறார்…

    "இந்தியன் என்ற முறையில், உலகக் குடிமகன் என்ற முறையில், நீதிபதி என்ற முறையில் மரண தண்டனையை ஒழிக்கப் போராடுகின்றவன் என்ற முறையில், இதுவே என் நெடுநாளைய விருப்பம். நான் ஒரு கொள்கை வெறியன். உயிருக்கு ஆதரவும் சாவுக்கு எதிர்ப் பும் காட்டுகிற கொள்கை வெறியன். தூக்குத் தண்டனையைத் தூக்கில் இடுங்கள். இதுவே என் உறுதியான நிலைப்பாடு!" என்றார் வி.ஆர்.கிருஷ்ணய்யர்.
    சட்டங்கள் மனிதனைத் திருத்துவதாக அமைய வேண்டும் என்ற அவர், தன்னு டைய எண்ணத்துக்கு 'வால்மீகி நடவ டிக்கை' என்றும் பெயரிட்டார்.
    "ஒரு காலத்தில் கொள்ளைக்காரனாக இருந்த வால்மீகி, உலகின் மாபெரும் இதிகாசப் புலவர் ஆக முடியும் என்றால், எந்தக் குற்றத்துக்காகவும் ஒரு மனிதனின் உயிரை ஏன் பறித்துத் தண்டனை தர வேண்டும்?" என்று வி.ஆர்.கிருஷ்ணய்யர் கேட்டார். மேலும், தூக்கு மேடையில் நின்றுகொண்டு இருக்கும் பேரறிவாளன் செய்ததாகச் சொல்லப்படும் குற்றம், சந்தேகத்துக்கு இடமற்ற முறையில்மெய்ப் பிக்கப்படவும் இல்லை.

    'சிவராசன், சுபா, தணு ஆகிய மூவருக்கு மட்டுமே சதித் திட்டம் தெரியும்' என்ற தனியார் ரேடியோ ஸ்டேஷன் உரையாடலை (எக்ஸ்.பி.392) சி.பி.ஐ. தனது ஆதாரங்களில் ஒன்றாகக் காட்டி, அதையே நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டார்கள். அது உண்மையானால், இன்றைக்கு தூக்கு மேடையில் நிறுத்தப்படும் நான்கு பேரும், ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நான்கு பேரும் சதி தெரியாமலேயே அந்தச் சுழலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டவர்கள் என்றுதானே சொல்ல முடியும்? – பேரறிவாளனின் விடுதலைக்குப் போராடுபவர்கள் இதையே தங்கள் தரப்பு வாதமாக வைக்கிறார்கள்.
    1999-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனுக்கு சோனியா எழுதிய கடிதத்தில், 'என் அன்புக் கணவரின் கொடூரமான கொலைக்குக் காரணமாக இருந்த நான்கு பேரும் தூக்குத் தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்று, எங்கள் குடும்பம் நினைக்கவில்லை. எனக்கோ, என் மகனுக்கோ, என் மகளுக்கோ, கொலையாளிகள் நான்கு பேரையும் தூக்கில் போடுவதில் விருப்பம் இல்லை. கொலையாளிகள் தங்களுக்குக் கருணை மனு அனுப்பும்போது, தாங்கள் அவர்களை மன்னித்து தூக்குத் தண்டனையை நிறுத்தும் படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறி இருந்தார்.
    'இதே நிலைப்பாட்டில்தான் நான் இன்றும் இருக்கிறேன்' என்பதை சோனியா உறுதிப்படுத்துவதில்தான் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் உயிர்களும் அடங்கியிருக்கிறது.

    120-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் எனும் உலகச் சட்டம் 'கொல்லாமை'பற்றி நிறையவே சொல்கிறது.
    வள்ளுவர், காந்தி, வி.ஆர்.கிருஷ்ணய்யர் மூவரில் யார் பேச்சைக் கேட்டாலும் மூவர் தலை தப்பும். தப்புமா?

    - ஆனந்த விகடன் -



    http://sex-story7.blogspot.com




  • http://sex-story7.blogspot.com


  • [Continue reading...]

    250 தொழிலாளர்களுக��கு நடிகர் விஜய் ��ிருந்து

    - 0 comments


    இந்தியில் ஹிட்டான "3 இடியட்ஸ்" படம் தமிழில் நண்பன் பெயரில் தயாரானது. விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் இணைந்து நடித்தனர். கதாநாயகியாக இலியானா நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஷங்கர் இயக்கினார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதையடுத்து இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் 250 பேருக்கு விஜய் நேற்று இரவு தனது சொந்த செலவில் விருந்து கொடுத்தார். வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நிகழ்ச்சி நடந்தது. சைவம் மற்றும் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.

    மிமிக்ரி நிகழ்ச்சிகளும் நடந்தன. ஆட்டம் பாட்டம் என கலகலப்பாக விருந்து நிகழ்ச்சி நடந்தது. எல்லோரிடமும் விஜய் சகஜமாக சிரித்து பேசினார். அவர்களுடன் போட்டோவும் எடுத்துக்கொண்டார். இந்த விருந்தில் விஜய்யுடன் நடித்த சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் இயக்குனர் ஷங்கர், வெங்கட்பிரபு, பிரேம்ஜி ஆகியோரும் பங்கேற்றனர்.



    http://sex-story7.blogspot.com




  • http://sex-story7.blogspot.com


  • [Continue reading...]

    ராஜீவ் கொலையின்��ோது உங்கள் தலைவர்கள் எங்கே போனார���கள்!

    - 0 comments


    பெரியார் திராவிட கழகமும், நாம் தமிழர் இயக்கமும் இணைந்து மரண தண்டனையை ஒழிப்போம், மனிதநேயம் காப்போம் என கடந்த 16.08.2011 அன்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் பேசுகையில்,

    பேரறிவாளனை சிறைச்சாலை ஒரு மனிதனாக மாற்றியிருக்கிறது. அதேசமயம் சிறை பேரறிவாளனை சீர்த்திருத்தவில்லை. சிறையை பேரறிவாளன் சீர்த்திருத்தியிருக்கிறார். வேலூர் சிறை ஒரு கல்லூரியாக மாறியிருப்பதற்கு பேரறிவாளன் தான் காரணம். கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு இதில் தலையிட்டு மூவரையும் மீட்க முயற்சிக்க வேண்டும்.

    இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, காவல்துறை ஆணையரிடம் போய், என்னை (சீமான்) கைது செய்ய வேண்டும். எங்கள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்திருக்கிறார். சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. அந்தக் கட்சியில் இருந்து எங்கள் கட்சிக்கு பாடுபட வேண்டாம். பேசாமல் விலகி எங்கள் கட்சிக்கு வந்துவிடுங்கள்.

    நீங்கள் (யுவராஜா) எங்களை எதிர்த்து போராட வேண்டாம். நீங்கள் உங்கள் கட்சி தலைவர்களிடம் கேளுங்கள். அமரர் ராஜீவ்காந்தி அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்திற்கு வரும்போது, தன் தாயார் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார்கள். இந்தியாவின் மிகப்பெரிய தலைவியாக இருந்த அம்மையார் இந்திரா காந்தியின் சிலை. காங்கிரஸ் கட்சியின் தலைவியின் சிலை. அய்யா ராஜீவ்காந்தி அவர்களுடைய தாயார் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார்கள்.

    திரளாக திரண்டு இருக்கிற என் தமிழ் உறவுகள் சாதாரணமான சீமான் நான் என்னுடைய வாகனத்தில் இருந்து இறங்கி இந்த மேடைக்கு வரும்போது கூட என்னை சுற்றி நூற்றுக்கணக்கான தம்பிகள் என்னை பாதுகாப்பாக பத்திரமாக அழைத்து வருவதை நீங்கள் பார்த்தீர்கள்.

    பெருமைக்குரிய பெருமகள் இந்த நாட்டின் மிகப்பெரிய தலைவர் அம்மையார் இந்திரா காந்தி அதுவும் உங்கள் கட்சியின் தலைவி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அந்த தலைவர் வரும்போது, அவரைவிட்டு எங்கே போனீர்கள். இதற்கு பதில் சொல்லுங்கள். அதற்கு பின்னர் சொல்லுங்கள் பேரறிவாளன் உள்பட மூன்று பேரை தூக்கில் போட வேண்டும் என்று. எங்கே போனார் அய்யா மூப்பனார். என் தம்பிகள் தூக்கு தண்டனையை வரவேற்கிறேன் என்று சொன்ன தங்கபாலு எங்கே போனார். ப.சிதம்பரம் போனது எங்கே. ஜெயந்தி நடராஜன் போனது எங்கே. அய்யா ஈவிகேஎஸ் இளங்கோவன் எங்கே போய் நின்று கொண்டிருந்தார். அன்றைக்கு டாஸ்மாக் ஒன்றும் இல்லையே. எங்கே போனீங்க நீங்க. எங்கே போனீங்க நீங்க.

    யுவராஜ் அவர்களே தன் தலைவனுக்கு அருகே வராமல் தனித்து சாகவிட்ட துரோகத்திற்காக உங்கள் தலைவர்களை முதலில் தூக்கிலிடு. பிறகு என் தம்பிகளை தூக்கிலிட சொல்லுங்கள். ராஜீவ் காந்தி மீது பற்றுக்கொண்டவர் என்று சொல்லுகிறீர்கள். காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த நான் சொல்லுகிறேன் இந்திரா காந்தி செத்ததுக்கு மூன்று நாள் என் வீட்டில் சோறு ஆக்கவில்லை. படிக்கிற காலத்தில் அழுது கிடந்தேன். என் தாய் போல நேசித்து வாழ்ந்தேன். உங்களுக்கு இந்திரா காந்தி யார் என்று தெரியுமா.

    என்னை கைது செய்யச்சொல்லி மனு கொடுக்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் 50 ஆண்டுகளாக ஆண்ட நீங்கள், சோனியா காந்திக்கு இந்த நாட்டில் வைத்தியம் பார்க்க கூட வசதியில்லாத நிலையில் இந்த நாட்டை வைத்திருக்கிறீர்கள். உங்களிடம் பணம் இருக்கு. அமெரிக்காவில் போய் வைத்தியம் பார்க்கிறீர்கள். என்னிடம் பணம் இல்லை. என்ன செய்வது. நேராக சுடுகாட்டில் போய் படுத்துவிடுவதா.

    யுவராஜ் அவர்களே, நீங்கள் சரியான ஆளாக இருந்தால், இதேபோல் கூட்டத்தை கூட்டிக் காட்டுங்கள். இந்த இடத்தில் நான் தீக்குளிக்கிறேன். மறுபடி உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன். பாராளுமன்ற தேர்தலில் தனித்து நின்று 500 ஓட்டு வாங்கி காட்டுங்கள். இல்லையேல் அனைத்து கட்சிகளுடன் நீங்கள் கூட்டணி வைத்து, நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி. யுவராஜ் அவர்களே உங்களுக்கு ராகுல்காந்தி மட்டும்தான் தெரியும். மோதிலால்நேரு, ஜவகர்லால் நேரு என எனக்கு எல்லாம் தெரியும். இவ்வாறு சீமான் பேசினார்.



    http://sex-story7.blogspot.com




  • http://sex-story7.blogspot.com


  • [Continue reading...]

    தீக்குளிக்கப் ப��றேன்... கெரசினோடு வந்த டைரக்டர்

    - 0 comments




    வெங்காயம் என்றொரு படம் நேற்று வெளியாகியிருக்கிறது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருத்திருக்கிறார்கள். ஒரே ஒரு பாடலுக்கு சத்யராஜ் நடித்திருக்கிறார். கழகங்கள் செய்ய வேண்டிய பகுத்தறிவு பிரசாரத்தை தனி ஒரு ஆளாக நின்று செய்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான சங்ககிரி ராச்குமார். அதற்காக இது தமிழிலக்கணம் மாதிரி அவ்வளவு வறட்சியான படமல்ல. பொழுதுபோக்கு அம்சங்களும் கலகலப்பு காட்சிகளும் நிறைந்த படம்.

    பத்திரிகையாளர்கள் காட்சியில் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி ராச்குமாரை பாராட்டி மகிழ்ந்த படமும் கூட. இந்த ராச்குமார்தான் இன்று காலை பதினொரு மணிக்கு மண்ணெண்ணை டின்னோடு தீக்குளிக்க கிளம்பியிருக்கிறார். இன்று காலை மீடியா தோழர்களை தொடர்பு கொண்ட ராச்குமார், இந்த அநியாயத்தை தட்டி கேட்டால் சரியான பதில் வர மாட்டேங்குது. தீக்குளிப்பதை தவிர வேற வழியில்ல. அப்படியாவது எனக்கு நியாயம் கிடைக்குதா பார்ப்போம் என்றார் பொங்கி வரும் ஆத்திரத்தோடு.

    என்னவாம்? இந்த படத்தின் க்ளைமாக்சில் சாமியார்களை பார்த்து பாதிக்கப்பட்ட சிறுமி ஒருத்தி தேவடியாப் பசங்களா என்று திட்டுவது போல காட்சி. இதன் தீவிரத்தையும் அவசியத்தையும் உணர்ந்த சென்சார் அதிகாரிகளே போகட்டும் என்ற அப்படியே இந்த வசனத்தை நறுக்காமல் அனுமதித்துவிட்டார்கள். அப்படியிருக்க, படத்தின் பிரிண்ட்டை க்யூப் சிஸ்டம் மூலம் தியேட்டருக்கு கொண்டு செல்லும் யூ எப் ஓ என்ற நிறுவனம், அந்த ஒரு வசனத்தை மட்டும் சைலண்ட் செய்துவிட்டது.

    அரசு அமைப்பான தணிக்கை துறையே ஒப்புக் கொண்ட ஒரு காட்சியை தனியார் நிறுவனம், அதுவும் எங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்து தரும் நிறுவனம் நறுக்குவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்று கொந்தளிக்கிறார் ராச்குமார்.

    சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் முன்புதான் இந்த தீக்குளிப்பை நடத்தப் போகிறாராம் அவர். படைப்பாளியின் சீட்டுக்கு அடியில் பச்சை மிளகாயை கொட்டி ரசிக்கிற இதுபோன்ற ஆட்களை என்ன செய்யலாம்?





    http://sex-story7.blogspot.com




  • http://sex-story7.blogspot.com


  • [Continue reading...]

    ‘அந்த’ நேரத்தில�� என்ன யோசனை?

    - 0 comments


    பெண்கள் மனதைக் கண்டறிவது என்பது ரொம்பக் கஷ்டமான விஷயம்தான். என்னதான் 'நூல்' விட்டுப் பார்த்தாலும், இதைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று எந்தப் பெண்ணையுமே சரியாக கணித்து விட முடியாது.

    கடலின் ஆழத்தை அறிந்து விடலாம், ஆனால் பெண்ணின் மனதை புரிந்து கொள்ள முடியாது என்று ஒரு பழைய பழமொழி ரொம்ப காலமாக உலா வருகிறது. அது கிட்டத்தட்ட உண்மை என்று கூடச் சொல்லலாம்.

    ஆனால் செக்ஸில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெண் தனது உச்ச நிலையின்போது (ஆர்கஸம்) என்ன நினைத்துக் கொண்டிருப்பார் என்பதை அறியலாம் என அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஆர்கஸத்தின்போது பெண்களின் மூளை எதை யோசித்துக் கொண்டிருக்கும் என்பதை ஸ்கேனிங் மூலம் தெரிந்து கொள்ள முடியுமாம்.

    இதுகுறித்து ஆய்வை மேற்கொண்ட ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகையில், செக்ஸ் உறவின்போது, குறிப்பாக செக்ஸ் உணர்வுகள் உச்சத்தை அடையும்போது பெண்களின் நரம்பு மண்டலம் வழக்கத்தை விட அதி வேகத்தில் துடிக்கும். செக்ஸ் அல்லாத சமயத்தில் இதுபோல நடந்தால் பெரும் வலியை உணர நேரிடும். ஆனால் செக்ஸின்போது இது தூண்டப்படுவதால் வலிக்குப் பதில் மகிழ்ச்சி உணர்வுதான் கூடும். ஆர்கஸத்தின்போது எந்தப் பெண்ணுமே இந்த நரம்பு மண்டலத் துடிப்பை உணர்வதில்லை.

    ஆர்கஸத்தின்போது பெண்களின் மூளையின் 30 பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக உணர்ச்சி, தொடுதல், மகிழ்ச்சி, திருப்தி, நினைவு ஆகிய செயல்களை கட்டுப்படுத்தும் பகுதிகள் இதில் முக்கியமானவை.

    எங்களது ஆய்வுக்காக நாங்கள் எட்டு பெண்களைத் தேர்வு செய்தோம். அவர்களை மூளைக் கட்டிகளை கண்டறியப் பயன்படுத்தப்படும் எம்ஆர்ஐ ஸ்கேனரில் படுக்க வைத்து அவர்கள் மீது போர்வையைக் கொண்டு மூடினோம். பின்னர் அந்தப் பெண்களிடம் ஸ்டிமுலேட்டரைக் கொடுத்து செக்ஸ் உணர்வுக்கு வர வைத்தோம்.

    சில பெண்களுக்கு ஐந்து நிமிடத்திற்குள்ளாகவே ஆர்கஸம் ஏற்பட்டது. சிலருக்கு 20 நிமிடம் வரை ஆனது.

    அந்த சமயத்தில், அவர்களின் மூளை செயல்பாடுகளை ஸ்கேனர் மூலம் ஆய்வு செய்தோம். ஆர்கஸத்தின்போது ஒவ்வொரு இரண்டு விநாடிக்கு ஒருமுறை எந்த பகுதி ஆக்டிவாக இருக்கிறது என்பதை ஆராய்ந்தோம். இதை படமாகவும் எடுத்தோம்.

    ஆர்கஸத்திற்கு 2 நிமிடங்களுக்கு முன்பு உணவு சாப்பிடுவது, மது அருந்துவது போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் மூளைப் பகுதி ஆக்டிவாக இருந்தது தெரியவந்தது.

    பெண்கள் உச்ச நிலையை எட்டிய சில விநாடிகளிலேயே தொடுதல் உணர்வைக் கட்டுப்படுத்தும் பகுதிகள், உடலுக்கு சிக்னல்களை கடத்தும் தலாமஸ் போன்றவை பாதிக்கப்பட்டதை அறிய முடிந்தது.

    அதேபோல ஆர்கஸம் தொடங்கியவுடனேயே உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதிகள் தூண்டுவிக்கப்பட்டதை அறிய முடிந்தது.

    கடைசியாகத்தான் உடல் சூடு, பசி, தாகம், சோர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மூளையின் கட்டுப்பாட்டுப் பகுதி அமைந்துள்ள ஹைபோதலாமஸ் தூண்டப்பட்டது.

    ஆர்கஸத்தின்போது நினைவை கட்டுப்படுத்தக் கூடிய காடேட் நியூக்ளியஸ், நியூக்ளியஸ் அக்கும்பென்ஸ் (இது மகிழ்ச்சியை தூண்டும் பகுதி) ஆகியவையும் தூண்டப்பட்டதை அறிய முடிந்தது.

    இந்த ஆய்வின்போது ஆர்கஸத்தை சந்தித்த பெண்கள் பலமுறை கைகளை மேல உயர்த்தினர். இதன் மூலம் அவர்கள் அதிக அளவிலான ஆர்கஸத்தை விரும்புவதை உணர முடிந்தது. மேலும் ஆர்கஸம் நீண்ட நேரம் நீடிப்பதையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதையும் அறிய முடிந்தது. மேலும் தொடர்ச்சியான ஆர்கஸத்தை பெண்கள் வரவேற்பதையும் உணர முடிந்தது என்றனர்.

    வழக்கமாக பெண்களுக்கு சராசரியாக 10 முதல் 15 விநாடிகள் வரை உச்ச நிலை நீடிக்கும். அதேசமயம், ஆண்களுக்கு இது 6 விநாடிகளிலேயே முடிந்து போய் விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆர்கஸத்தின்போது என்ன நினைக்கிறோம் என்பது முக்கியமில்லை, பழைய காதலரையோ அல்லது பழைய காதலியையோ நினைக்காமல் இருக்க வேண்டும். அதுதான் ரொம்ப முக்கியம். இல்லாவிட்டால் 'ஆர்கஸம்' முடிந்ததும் 'அஜிட்டேஷன்' ஆரம்பித்து விடும்!




    http://sex-story7.blogspot.com




  • http://sex-story7.blogspot.com


  • [Continue reading...]

    கொலைவெறி பதிவர்��ள்.....!!!

    - 0 comments


    கையும் ஓடலை காலும் ஓடலை, ஏன் நெட் கனெக்சன் என்னை படுத்தி எடுக்குதுன்னு புரியலை, கமெண்ட் போடலைன்னு, சிபி கொலை மிரட்டல் அனுப்பி இருக்கான், அம்மா"கிட்டே புகார் குடுத்து குண்டாஸ்ல போடலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்...

    அடுத்து விக்கி தாதா ஏகே 47 கொண்டு வந்து வச்சிகிட்டு குறி பார்த்துட்டு இருக்கான்...!!!

    ஆபீசர் சாப்பாடு போட்டே என்னை பெல்ட்டால அடிக்க பெல்ட்டை உருவி வச்சிட்டு இருக்காராம்...!!!

    பன்னிகுட்டி எனக்கு சூனியம் வச்சிட்டதா பேசிக்குராயிங்க.....

    தமிழ்வாசி'கிட்டே இருந்து இன்னக்கி தப்பிச்சிட்டேன், காரணம் கொஞ்சம் நெட் ஒப்பன் ஆனதும் கமெண்ட் போட்டு தப்பிச்சிட்டேன்...

    கருண் வேற எனக்கு ஸ்பெஷல் டியூஷன் எடுக்கணும்னு மிரட்டுராராம், உளவுத்துறை தகவல்......

    கவிதைவீதி கவிதையால் என்னை அறம் பாடி அழிக்க போறாராம்.....

    சித்ரா மேடம் சிரிச்சி சிரிச்சே என்ன கொலை செய்யப்போறாராம்...

    நிரூபன் வேற, பதிவர்களை போட்டு தள்ளுவது எப்படி, அவர்களை கைமா பண்ணி தாளிப்பது எப்பிடின்னு என்னை வலை வீசி தேடுகிறாராம்...

    வானதி, எங்க அங்கிளை காணோம்னு பஹ்ரைன் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் குடுத்துட்டாயிங்களாம்.....

    இம்சை அரசன் மட்டும் ரொம்ப சந்தோசமா இருக்கானாம், ம்ஹும் தொல்லை ஒழிஞ்சதுப்பான்னு [[எலேய் எப்பிடியாவது புகுந்து வந்துருவேம்லெய் ஹி ஹி]]

    நாசமா போன சிரிப்பு போலீஸ் ரமேஷ், மூத்துரசந்துக்குள்ளே போயி ரகசியமா சிரிப்பதாக அடுத்த தகவல் வந்துருக்கு....

    கந்தசாமி, படங்களை உல்டா உல்டாவா போட்டு தாக்க பிளான் பண்ணிட்டு இருக்காராம்.....

    மெட்ராஸ் பவன் "சிவகுமார்" என் பேட்டியை கேட்டு வாங்கிட்டு, அதை காட்டிட்டு என்னை மிரட்டுறார்....

    சிவா, உனக்குன்னு தனி பதிவு போட்டு நசுக்கிருவேன்னு சொல்றார்.......

    சென்னை பித்தன் தல வேற மரியாதையா வந்து சேர் ராசா'ன்னு அன்பால் [[இல்லை]] மிரட்டுறார்...

    இன்னும் நிறைய பேர், குண்டாந்தடி, உருட்டு கட்டை, வேல் கம்பு, அருவா, அழுகுன முட்டை, கூமுட்டை, அழுகுன தக்காளி இன்னும் பிற அயிட்டங்களோடு ஊர் ஊரா என்னை கொலை வெறியோட தேடிட்டு இருக்காயிங்களாம்.....

    அடிக்குமுன் நான் சொல்றதையும் கேட்டுக்கோங்க ஏன்னா, நேர்மை, கருமை, எருமைன்னு ஒன்னு இருக்கா இல்லையா....??? [[ஹி ஹி]] நெட் கனெக்சன் சரியில்லை, அஞ்சி மினிட் வருது அப்புறம் ஒரு மணிநேரம் கட்டாகிருது, கேட்டா மழை நேரம் அப்பிடிதான் இருக்கும்னு சொல்றாயிங்க.....!!!

    அடுத்து பஹ்ரைன் கிளம்பும் வேலை ஆரம்பிச்சிருக்கு, அதனால பிரஷர் செக் பண்ண போனேன் டாக்டர் சொல்றார், பிரஷர் 151 இருக்காம், சரி மக்கா டாக்டர் வர்றேன்னு வந்துட்டேன்....

    முப்பத்து ஏழு வயசுலேயே எல்லாம் செக் பண்ணனும்னு எல்லார் வேண்டுகோளையும் ஏற்று, சுகர் இருக்கான்னு செக் பண்ண, பிளட் மற்றும் இன்னபிற'ங்களும் கொடுத்துட்டு வந்துருக்கேன் ஹி ஹி......!!!

    டிஸ்கி : கொஞ்சம் பொறுத்துக்குங்க, என் அதிரடி வேகம் இன்னும் கூடி உங்களை உற்சாகப்படுத்தும்.....!!!

    ஸ்பெஷல் டிஸ்கி : அண்ணா ஹசாரே'வுக்காக தமிழ்நாட்டில் இருந்து, எந்த தலைவனோ, தலைவியோ, கூத்தாடி நடிகனோ குரல் கொடுக்கவில்லை....!!!!??? ஆனால் பதிவர்கள்[[தமிழ்]] செமையா சப்போர்ட் பண்ணி ஆதரிப்பதை பார்க்கும் போது மனம் நம்பிக்கை கொள்கிறது.........வந்தேமாதரம்........


    http://sex-dress.blogspot.com




  • http://sex-dress.blogspot.com


  • [Continue reading...]

    இரண்டு தலைமுறைச�� சரக்கு

    - 0 comments


    “தி.மு.க. அரசுக்கு போட்டியாக அ.தி.மு.க. அரசும் இலவசங்களை கொடுத்து வறுமையை ஒழிக்கப்போகிறோம் என்று கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் 27 சதவீதம் பேர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர். இது குறையவே இல்லை. ஆனால் மது வருமானம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துகொண்டே வருகிறது” என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் தமிழ்குடிதாங்கி ராமதாஸ் கூறியிருக்கிறார். உண்மை தான். இலவசங்களால் மட்டுமே மக்களை தங்களுக்கு மட்டுமே வாக்களிக்குமாறு செய்து விட முடியும் என்ற 'திருமங்கலம்' ஃபார்முலா எனப்படும் அதிநவீன தேர்தல் டெக்னிக்கை மக்கள் [...]

    http://tamil-friend.blogspot.com




  • http://tamil-friend.blogspot.com


  • [Continue reading...]

    கருணாநிதிக்கு வ��ஜயகாந்த் நெத்தி���டி பதில்

    - 0 comments



    "பைத்தியக்காரர்களுக்கு பதில் சொல்வதில்லை' என, கருணாநிதி கூறியுள்ளதற்கு, விஜயகாந்த் நெத்தியடியாக பதில் சொல்லியிருக்கிறார்,
    மேலும் படிக்க »

    http://tamil-starmovies.blogspot.com




  • http://tamil-starmovies.blogspot.com


  • [Continue reading...]

    சனி பெயர்ச்சி பல���்கள் 2011;கன்னி,துலாம்,விருச்சிகம்

    - 0 comments


    சனிப்பெயர்ச்சி பலன்கள் 2011 /sanipeyarchi palankal 2011/ஜோதிடம்/எண்கணிதம்/வாஸ்து/tamil astrology


    திருக்கணிதம் பஞ்சாங்கப்படி,கர வருடம் ஐப்பசி மாதம் 15 ஆம் தேதி,(1.11.2011)செவ்வாய்க்கிழமை காலை 10.12 மணிக்கு சனிபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்.
    மேலும் படிக்க »

    http://tamil-starmovies.blogspot.com




  • http://tamil-starmovies.blogspot.com


  • [Continue reading...]

    சங்கவிக்கு ஏன் த���ருமணம் ஆகவில்ல��..?

    - 0 comments


    சங்கவிக்கு திருமணம் நடக்காததற்கு ஜாதகத்தில் அமைந்த கிரக அமைப்பே காரணம்.நான் சொல்லும் சங்கவி,படத்தில் இருப்பவர் அல்ல; எனது ஜோதிட வாடிக்கையாளர்;-))


    மேலும் படிக்க »

    http://tamil-starmovies.blogspot.com




  • http://tamil-starmovies.blogspot.com


  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger