Sunday 3 November 2013

தாய்லாந்தில் நடைபெற்ற உலக திருநங்கையர் அழகு ராணி போட்டியில் பிரேசில் திருநங்கை வெற்றி Bazilian transgender wins international beauty contest

- 0 comments

தாய்லாந்தில் நடைபெற்ற உலக திருநங்கையர் அழகு ராணி போட்டியில் பிரேசில் திருநங்கை வெற்றி Bazilian transgender wins international beauty contest

பாங்காக், நவ.4-

உலக ஆணழகன் போட்டி, உலக அழகி போட்டி போன்றே சில ஆண்டுகளாக திருநங்கையர்களுக்கான உலக அழகு ராணி போட்டியும் நடைபெற்று வருகிறது.

அவ்வகையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 9வது உலக திருநங்கையர் அழகு ராணி போட்டி கடந்த வெள்ளிக்கிழமை  நடத்தப்பட்டது.

அமெரிக்கா, பிரேசில், ஜப்பான், தென் கொரியா ஆகிய 16 நாடுகளை சேர்ந்த திருநங்கைகள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.

அவர்களது உடல் மற்றும் முக வசீகரம், அறிவுக் கூர்மை ஆகியவற்றின் அடிப்படையில் பட்டத்துக்குரியவர் தேர்வு செய்யப்பட்டார். இதில் பிரேசில் நாட்டை சேர்ந்த மார்கெலோ ஓஹியா(18) அழகு ராணியாக முடிசூட்டப்பட்டார்.

10 ஆயிரம் டாலர் ரொக்கப்பரிசு மற்றும் தாய்லாந்தின் உல்லாச நகரமான பட்டயாவில் உள்ள விடுதியில் ஓராண்டு வரை இலவசமாக தங்கும் அனுமதி போன்றவையும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

...

shared via

[Continue reading...]

போதையின் உச்சத்தில் தள்ளாடிய மாணவிகள் college girls news

- 0 comments

போதையின் உச்சத்தில் தள்ளாடிய மாணவிகளால் அதிர்ந்த மக்கள்..!! – படம் இணைப்பு

இந்தியாவில் திருச்சி மாவட்டத்தில் பரபரப்பு மிகுந்த மத்திய பேருந்து நிலையத்தில் அருகில் உள்ள தனியார் ஹோட்டல் முன்பு வட மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் வாந்தி எடுத்துக் கொண்டுள்ளார். மேலும் இவரைச் சுற்றி 3 மாணவிகள், 5 மாணவர்கள் என அனைவருமே மதுபோதையில் தள்ளாடிக் கொண்டிருந்துள்ளனர். இவர்களை தள்ளாடியதை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டத்தின் மத்தியில் கால்கள் தரையில் கூட நிற்க முடியாத நிலையில், பெண்கள் நான்கு பேரும் உளறிக் கொண்டே சென்றுள்ளனர். பின்பு தம்மை ஒரு கூட்டம் வேடிக்கை பார்ப்பதை அறிந்து உடனடியாக அங்கிருந்து ஆட்டோ ஒன்றில் அனைவரும் தங்கள் விடுதிக்கு சென்று விட்டனர். இவ்வாறான பழக்கங்கள் பெங்களூர் போன்ற நகரங்களில் வழக்கமான ஒன்றாக இருந்தாலும் திருச்சியில் இது அதிர்ச்சி தரக்கூடிய விடயமாகும்.  இவர்கள் கிரிமினல் கண்களில் சிக்கியிருந்தால் என்ன நடக்கும் என்று நினைக்கும் போதே, டெல்லி சம்பவம் தான் கண் முன் நிழலாடுகிறது.

இதுகுறித்து பார் ஊழியர் ஒருவர் கூறுகையில், பசங்களுடன் கல்லூரி மாணவிகள் அடிக்கடி இங்கு வருகிறார்கள். பல நேரங்களில் போதையின் உச்சத்திற்கு சென்று அவர்கள் ரகளை செய்வதுமுண்டு.

அவர்களை பத்திரமாக அனுப்பி வைப்பது பெரும்பாடாக இருக்கும். பணத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. நாங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாக டிப்ஸ் தருவார்கள் என்றும் இவர்கள் எங்கள் வாடிக்கையாளர் என்றும் தெரிவித்துள்ளார்.

shared via

[Continue reading...]

நடிகை சுவேதா மேனன் செக்ஸ் புகார்: கொல்லம் காங்கிரஸ் எம்.பி. மீது வழக்குப் பதிவு actress swetha menon molestation complaint police fir on kollam congress mb

- 0 comments

நடிகை சுவேதா மேனன் செக்ஸ் புகார்: கொல்லம் காங்கிரஸ் எம்.பி. மீது வழக்குப் பதிவு actress swetha menon molestation complaint police fir on kollam congress mb

திருவனந்தபுரம், நவ. 3-

நடிகை சுவேதா மேனன், கேரள மாநிலம் கொல்லம் தொகுதி எம்.பி. பீதாம்பர குரூப் மீது செக்ஸ் புகார் கூறினார். இதனைத்தொடர்ந்து கொல்லம் போலீசார் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழில் அரவான் மற்றும் ஏராளமான மலையாள படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளவர் நடிகை சுவேதா மேனன். சமீபத்தில் இவர் தனது பிரசவத்தை மலையாள படம் ஒன்றுக்காக நேரடியாக படமாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இவர் கொல்லம் தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான பீதாம்பர குரூப் மீது , கொல்லத்தில் நடந்த ஒரு படகு விழாவின் போது தன்னிடம் அத்துமீறி செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் கூறினார்.

இதுபற்றி சுவேதா மேனன் கூறுகையில், விழாவில் கலந்து கொண்ட என்னிடம் காங்கிரஸ் மூத்த அரசியல்வாதி  அத்துமீறி நடந்து கொண்டார். என்னை தொட்டு தொட்டு பேசினார். அதை நான் தவிர்க்க முயன்றபோதும் தொடர்ந்து என்னை துன்புறுத்தி என் நிம்மதியை கெடுத்து விட்டார் என்றார்.

மேலும் தனக்கு செக்ஸ் சில்மிஷம் செய்த அரசியல்வாதி பற்றி தான் கொல்லம் கலெக்டரிடம் புகார் தெரிவித்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காதது தனக்கு வேதனை அளிப்பதாகவும் சுவேதா மேனன் கூறினார். நடிகை சுவேதா மேனனுக்கு நடந்த செக்ஸ் டார்ச்சர் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு ஆதரவாக மலையாள திரைப்பட துறையினரும் பெண்கள் அமைப்பினரும் போர்க்கொடி உயர்த்தினார்.

இதனைத்தொடர்ந்து நடிகை சுவேதா மேனனின் செக்ஸ் புகார் முதல்- மந்திரி உம்மன் சாண்டியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. அவர் கொல்லம் உயர்அதிகாரிகளுக்கு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து கொல்லம் எம்.பி. பீதாம்பர குரூப் மீது கொல்லம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த புகாரை பீதாம்பர குரூப் எம்.பி. மறுத்துள்ளார்.

...

shared via

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger