Monday 30 April 2012

மே தின நல் வாழ்த்துக்கள்...

- 0 comments



வாழ்க்கை கதவுகள் 
திறக்க உழைப்பு 
உறுதுணை செய்கிறது...

சிரிக்கவும், சிறக்கவும் 
உழ ைக்க தெரிந்தவனால் 
மட்டுமே முடியும்...

சர்வதேச தினமாய் 
எல்லோருக்கும் பொதுவானது
உழைப்பார்கள் தினமே...

ஒவ்வொரு வருடமும் 
உல� �மே ஒரு வட்டத்தில் 
மே முதல் நாளில்...

உழைத்தவனுக்கு 
ஓய்வு எடுக்கு 
அறைக்கூவல் விட்ட நாள்...

இந்த நாளில் இன்னும் 
உழைப்பாளர� ��கள் உயர 
வாழ்த்துவோம்...!

உறவுகளுக்கும் 
உழைப்பாளிகளுக்கும் 
மே தின நல் வாழ்த்துக்கள் 


http://tamil-dinamalar.blogspot.com




[Continue reading...]

Saturday 28 April 2012

கர்வம் பிடித்த கிளி! பாப்பாமலர்!

- 0 comments


கர்வம் பிடித்த கிளி!

செல்வபுரி என்ற சிற்றூரின் எல்லையில் ஒரு பெரிய மாமரம் வளர்ந்து இருந்தது. அந்த அழகிய மா� ��ரத்தின் கிளைகள் விரிந்து இலைகள்பச்சை பசுமையாக இருந்தது. பூக்களும் கனிகளும் நிறைந்த அந்த மாமரத்தில் பறவைகள் சில கூடு கட்டி வாழ்ந்து வந்தன. அந்த மாமரத்தில் ஒரு கர்வம் கொண்ட கிளியும் வசித்துவந்தது.
   அது எப்போதும் தன் அழகையும் தன்னுடைய பேச்சு திறமையையும் எண்ணி பெருமைப் பட்டுக் கொள்ளும். இங்கு வசிக்கும் மற்ற பறவை இனங்களை அது சுத்தமாக மதிப்பதே இல்லை! அவை தன்னுடன் வசிக்க லாயக்கற்றவை என்று அது எண்ணியது.மற்ற பறவைகளை கிளி சற்றும் லட்சியம் செய்வது இல்லை! தன்னுடைய அழகின்மீது கர்வம் கொண்ட அது அழகே ஆபத்தாக முடியும� �� என்பதை அறியாமல் மற்ற பறவைகளை ஏளனம் செய்து கொண்டு இருந்தது.
    அங்கு வசிக்கும் மற்ற பறவைகள் எல்லாம் தனக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று கிளி விரும்பியது. எனவே அது மற்ற பறவைகளை அடிக்கடி வம்புக்கு இழுத்து கடுஞ்சொற்களை கூறி அவமான படுத்திவந்தது. கிளியின் குணம் அறிந்த மற்ற பறவைகள் அதனிடம் பே சுவதை தவிர்த்துக் கொண்டன. கிளியை கண்டாலே கூண்டில் போய் அடங்கிக் கொண்டன. இது கிளிக்கு மேலும் கர்வத்தை கொடுத்தது. தன்னை கண்டு மற்ற பறவைகள் பயப்படுவதாக அது நினைத்துக் கொண்டது.
   அந்த கிளி வசித்த கிளைக்கு பக்கத்து கிளையில் காகம் ஒன்று வசித்துவந்தது. வயதில் மூத்த அந்த காகம் கிளிவசிப்பதற்கு முன்பி� �ுந்தே அந்த மரத்தில் வசித்துவந்தது. அதற்கு கிளியின் செய்கை பிடிக்காது ஆனாலும் தன் வேலையை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கும். இந்த காகத்தை வம்பிழுத்து பார்க்க கிளி நினைத்தது,
   ஒருநாள் கிளி, ஏ கறுப்பு காகமே! என்னைப் பார் என் சிவந்த மூக்கும் பச்சை உடம்பும் மெத்தென்ற இறகுகளும் எவ்வளவு அழகு? நீய� �ம் உன் கறுப்பு உடம்பும் கரகரத்த குரலும்! என்னைப்போல் உன்னால் பேசமுடியுமா?நீ என் பக்கத்து வீட்டுக்காரன் என்பதில் எனக்கு அவமானமாக உள்ளது. உன்னால்தான் இந்த இடத்திற்கே அசிங்கம்! நீ இங்கிருந்து சென்று விட்டாயானால் இடம் சுத்தமாகும் என்று வம்பிழுத்தது!.காகம் பதில் ஏதும் பேசாமல் மவுனித்தது. உடனே கிளி ஏ திமிர் பிடித்த காகமே நான் கேட்டதற்கு பதில் சொல்! ஏன் மவுனமாய் இருக்க ிறாய்? உனக்கு அவ்வளவு திமிரா எனக்கு மரியாதை தரமாட்டாயா? என்று கத்தியது.
   உடனே காகம், ஏய் கிளியே நீதான் மரியாதை இல்லாமல் பேசுகிறாய்! நீ வருவதற்கு முன்பிருந்தே இங்கு வசிப்பவன் நான். அத்துடன் வயதிலும் மூத்தவன்.கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பை கொடுத்திருக்கிறான். அதே சமயம் பலவீனத்தையும் கொடு� �்து இருக்கிறான். வீணாக பெருமைப் பட்டுக் கொள்ளாதே! நீ அழகாய் இருந்தாலும் உன்னை யாரும் கூப்பிட்டு உணவளிப்பது இல்லை! ஒரு பண்டிகை விசேஷ தினங்களில் எங்களைத்தான் கூப்பிட்டு உணவளிக்கிறார்கள் மனிதர்கள். அதை புரிந்து கொள் என்று மூக்குடைத்தது காகம்.
  அப்போதும் அடங்காத கிளி ஏ காகமே என்னையே எதிர்த்து பே� �ுகிறாயா? உன்னை கூடிய விரைவில் விரட்டுகிறேன் பார் என்றது. என்னை விரட்ட உன்னால் முடியாது! உண்மையை சொன்னால் உனக்கு உறுத்துகிறது. நாம் ஒன்றுபட்டால் நம் பகைவர்களிடமிருந்து தப்பிக்க முடியும் உன் அகந்தையை விட்டொழி என்றது காகம்.
  ஆனால் கிளியோ ஆணவத்தை விடாமல் போதும் உன் அறிவுரை காது கிழிகிறது என்று வெ� ��ுப்பேற்றியது. காகம் இதை திருத்த முடியாது என்று பறந்து சென்றுவிட்டது.
  அப்போது அந்த மரத்தின் அடியில் வேடுவர் இருவர் வந்தனர். ஆ அழகிய பச்சைக் கிளி இதை பிடித்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று பேசிக் கொண்ட அவர்கள் சிறிது தானியங்களை கீழே எறிந்து வலை விரித்தனர்.
   கிளிக்கு மிகவும் சந்தோஷம்! காகத்தை கூப்பிட்டு உணவளிக்கிறார்கள்! ஆனால் நமக்கோ தேடிவந்து கொடுக்கிறார்கள்! சாப்பிடுவோம் என்று கீழே இறங்கியது. அப்போதுதான் திரும்பிய காகம், ஏ கிளியே என்ன செய்கிறாய்? தெரிந்துதான் செய்கிறாயா? இது பகைவர்கள் விரித்த வலை! வீணாக மாட்டிக் கொள்ளாதே என்று தடுத்தது.
   கிளியோ ஆணவத்தில் முட்டாள் காகமே என்னை தேடிவந்து உணவளித்தது உணக்கு பொறுக்கவில்லை! உன் பேச்சை கேட்க முடியாது! ஓடிப்போ என்று கீழே குதித்து தானியங்களை கொத்த ஆரம்பித்து வலையில் சிக்க ிக் கொண்டது.
  அப்போது காகம் கிளியே! சொன்ன பேச்சை கேட்காமல் ஆணவத்தால் வலையில் சிக்கிக் கொண்டாயே என்று வருந்தியது. வலை வீசியவர்கள் வந்து கிளியை கூண்டில் அடைக்க தன் அழகே தனக்கு எதிரியானதை முதன் முதலில் உணர்ந்தது கிளி!
  இப்போது � �ருந்தி என்ன பயன்?


உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவின் மிக உயரமான மலை நந்தா தேவி!


http://youngsworld7.blogspot.com




[Continue reading...]

உரிமையடையும் நாள் என்னாளோ?

- 0 comments


உரிமையடையும் நாள் என்னாளோ?

வீடிழந்தோம்! குடியிருந்த ஊரிழந்தோம்!
நாடிழந்தோம்
நல்ல நண்பர்களை இழந்தோம்!
உறவிழந்தோம்
உற்றதுணைஇழந்தோம்!
பெற்ற மண்ணிழந்தோம்!
அகதிகளாம் நாங்கள்!
மாற்றாந்தாய் அரவணைப்பில்
மறந்திடுமா எங்கள் சோகங்கள்!
சொல்லிழந்தோம் மொழியிழந்தோம்
சோற்றுக்கும் நிற்க நிழலுக்கும்
போராடி � ��ோராடி சுமையாகிப்போனோம்!
மொழியாலே ஒன்றிணைந்தாலும்
விழியாலே வேறுபட்டு பாழும்
அரசியலில் பகடையாய் அடிபட்டு
வேறிழந்து தவிக்கிறோம் நாங்கள்!
எத்தனைதான் வசதிகள் கொடுத்திடினும்
எங்கள் சோகம் தீர்ந்திடுமா?
என் நாடு கிடைக்குமா? என்ற ஏக் கம்தான்
தீர்ந்திடுமா? இழந்தவனுக்குத்தான் தெரியும்
இழப்பின் வலி! எங்கள் � �லி கொஞ்சமல்ல!
வீதீயிலே விளையாடும் எங்கள் பிள்ளைகளுக்கு
எங்கள் நாடு மறந்து போகும் முன்னே
எங்கள் விதி மாறுமா?
எத்தனைதான் இழந்தாலும் இன்னும்
உணர்விழக்கவில்லை நாங்கள்! இதை
உணராமல் தமிழர்கள் எங்களை
தள்ளி வைப்பது ஏனோ? உணர்வாலே< /div>
ஒன்றுபட்டு உரிமையடையும் நாள்
என்னாளோ அன்னாளே எங்கள் பொன்னாள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகர லாமே!






http://youngsworld7.blogspot.com




[Continue reading...]

தளிர் ஒரு முக்கிய அறிவிப்பு!

- 0 comments


அன்பார்ந்த வலைப்பூ வாசக பெருமக்களே! வலைப்பூவில் புதிய மாற்றங்களை கண்டு இருப்பீர்கள்! இதுவரை அலேக்ஸா ரேங்க் மற்றும் அதிக வாசகர்களை இழுப்பதற்காக மற்ற இணையதளங்களில் குறிப்பாக தட்ஸ் தமிழ்! தினமலர் போன்றவற்றில் இருந்து காப்பி பேஸ்ட் செய்து வந்தேன்!
      இனி இவற்றை தவிர்க்கலாம் என்று எண்ணியுள் ளேன்! படைப்புகள் அதிக புகழை அடையவேண்டுமே தவிர அதிக எண்ணிக்கை படித்திருக்க வேண்டாம் என்று எண்ணுகிறேன்! இனிமேல் எண்ணிக்கையை நம்பாமல் என்மேல் நம்பிக்கைவைத்து எழுதலாம் என்று எண்ணுகிறேன்!
    அதே சமயம் சுவாரஸ்யமான சினிமா பொழுது போக்கு தகவல்களையும் என்பாணியில் தரலாம் என்று இருக்கிறேன். இனி முக்கிய செய்திகள் தகவல்கள் மட்டுமே இந்த வலைப்பூவ ில் வெட்டி ஒட்டப்படும். படங்களை பொறுத்தவரை கூகிள் இமேஜ்தான் எனக்கு வழி!
     இதனால் நாள்தோறும் பதிவிட முடியாமல் போகலாம்! வாசகர்கள் பொறுத்தருள வேண்டும்! செய்திகள், சினிமா, சிறுவர்பகுதி, ஆன்மீகம், பொ� �ுஅறிவு என்று பிரித்து அந்தவகையில்  எழுதலாம் என்று எண்ணுகிறேன்!
  உங்களின் மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
                                                                &nb sp;                  அன்புடன்
                                                                தளிர் அண்ணா சா.சுரேஷ்பாபு!


http://youngsworld7.blogspot.com




[Continue reading...]

Thursday 26 April 2012

நான் கை கால் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார்! - அஜீத் 'ஓபன் டாக்'!

- 0 comments


என் நடிப்பு, முயற்சியைப் பாராட்ட மனமில்லாதவர்கள், என் தோற்றத்தையும் உடல் அமைப்பையும் கிண்டல் செய்கிறார்கள். 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு நான் நடப்பதே பெரிய விஷயம், என்� ��ிறார் அஜித் குமார்.

சமீபத்தில் அவர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியின் சில பகுதிகள்...

செல்ப் புரமோஷன் கிடையாது...

"நான் 'மங்காத்தா'வில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேசறது இல்லைனு முடிவு பண்ணிட்டேன். அது 'பில்லா-2'-வுக்கும் பொருந்தும். ஜூன் மாசம் படம் ரிலீஸ். இதுக்கு மேல் இப்போதைக்கு எதுவும் இல்லை!''

மனதை பாதித்த விமர்சனம்...
''படம் நல்லா இருக்கா, இல்லையானு சொல்லாம, சிலர் நான் குண்டா இருக்கேன்னு பெர்சனலா கமென்ட் அடிக்கிறாங்க. 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு என் மெட்டபாலிஸமே மாறிடுச்சு. நான் ரெண்டு காலையும் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார். அதை நினைச்சு நான் சந்தோஷப்படுறேன்.

நான் நல்ல டான்ஸரா இல்லாம இருக்கலாம். ஆனா, அதுக்காக முயற்சி பண்றேன். இவ்வளவு சிகிச்சைகளுக்குப் பிறகும் ஹெலிகாப� ��டர்ல இருந்து குதிக்கிறேன்... சண்டை போடுறேன். ஆனா, தொடர்ந்து என் பெர்சனல் தோற்றத்தை சிலர் கிண்டல் செய்றது வருத்தமா இருக்கு!''

நெகடிவ் விமர்சனங்கள் குறித்து...

''என்கிட்டயே நிறையப் பேர் சொல்லியிருக்காங்க... பொறந்தா அஜீத்குமாராப் பொறக்கணும்னு. அஜீத்குமாருக்கு என்னல்லாம் கஷ்டம் இருக்குனு, அஜீத்குமாரா வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். சச்சின் டெண்டுல்க� �் இப்படி ஆடணும்னு சொல்றது ரொம்ப ஈஸி. ஆனா, கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைச் சுமந்துக்கிட்டு விளையாடுற சச்சின் டெண்டுல்கருக்குத்தான் அது எவ்வளவு கஷ்டம்னு தெரியும்.

கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துட்டு கருத்து சொல்றது ஈஸி. களத்துல இறங்கி நின்னாதான், அது எவ்வளவு கஷ்டம்னு புரியும். 30 வயசுல நம்மால எல்லாம் முடியும்னு தோணும். இப்போ 40 வயசுக்கு மேல நம� �மளை மீறி ஒரு சக்தி இருக்கு... அதுதான் எல்லாத்தையும் தீர்மானிக்கும்னு தோணுது. என்னை விமர்சிக்கிற எல்லாருக்கும் அந்தப் பக்குவம் கிடைக்கணும்னு நான் கடவுளை வேண்டிக்கிறேன்!''

ரசிகர்களுக்கு...

''இத்தனை ஆண்டுகளில் ரசிகர்கள் பலம் கூடிக் கொண்டே இருப்பது கடவுள் ஆசீர்வாதம்தான். என் ரசிகர்களுக்கு வெறும் நன்றி சொன்னால், அது முழுமையாகாது. உண்மையைச் சொல்றேன்... த� �னமும் காலையில் கடவுளை வேண்டும்போது என் ரசிகர்களுக்காகவும் வேண்டிக்கிறேன். நான் இன்னைக்கு சினிமாவில் இருப்பேன். நாளைக்கு இல்லாமலும் போவேன். ஆனா, ஒரு அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். அட்வைஸ்னு தப்பா நினைக்கா தீங்க. உங்க தன்மானத்தை யாருக்கா கவும் விட்டுக்கொடுக்காதீங்க.

உங்க வேலையை 100 சதவிகிதம் ரசிச்சு செய்யுங்க. நல்லாப் படிங்க. நான் பத்தாவது வரைக்கும� �தான் படிச்சேன். வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத்தான் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ஆனா, அந்த ரூட் ரொம்பக் கஷ்டம். படிச்சிருந்தா இவ்வளவு அடிபட்டு வந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே. அதனால நல்லாப் படிங்க. யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க. மத்தவன் காலை மிதிச்சு முன்னேறாதீங்க. சிம்பிளா சொல்றேன்... வாழு... வாழவிடு!''

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றி தட்ஸ் தமிழ்


http://girls-stills.blogspot.com




[Continue reading...]

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

- 0 comments


சங்கீதத்தில்
சங்கேதம் பேசுகின்றன
இரவு பறவைகள்!

ஓசை சத்தத்தில்
உறங்கவில்லை இரவு
புல்லினங்கள்!

சலனப்பட்டு
வாழ்க்கை இழக்கிறது
நீர்!

மரங்களின் பின்னால்
மறைந்திருக்கின்றன
ஊர்கள்!

ஓசை எழுப்பினாலும்
சுகம்தான்!
காற்று!

காற்றில் காதல்தூது!
பூத்தன
மரங்கள்!


இச்சை கொண்டன
கண்கள்
பச்சையான பூமி!

மின்னியது
கூசவில்லை!
மின்மினி!

வெட்டியதும்
பாராட்டினார ்கள்!
குளம்!

துரத்திக்கொண்டே இருக்கிறது
தெரியவில்லை!
காலம்!

 
வெள்ளை தேவதை விஜயம்
பெ� ��ுமூச்சுவிட்டது பூமி
நிலா

கட்டிவைத்தார்கள்
மணத்தது!
கூந்தலில் பூ!

தங்கள் வருகைக்கு நன்றி கருத்துக்களை பகிர்ந்து செல்லலாமே!


http://girls-stills.blogspot.com




[Continue reading...]

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு விதிக்கப்பட்ட மூன்று வருட சிறை தண்டனை காலம் நேற்றுடன் முடிவு!

- 0 comments


Friday, April, 27, 2012
இலங்கை::இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தால் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு விதிக்கப்பட்ட மூன்று வருட சிறை தண்டனை காலம் நேற்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அவருக்கு பிணை வழங்கும� ��று கோரி உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

எனினும் வௌ்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக மேல் நீதிமன்றம் அவருக்கு மூன்று வருட சிறைத் தண்டனையை விதித்துள்ளது.

இந்த சிறைத்தண்டனை தொடர்பாக பொன்சேகா சார்பில் உயர்நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதி மன்றத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையை அடுத்து ஒரு நீதிபதி அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து தாம் நிரபராதி என தீரப்பளித்ததாகவும் ஏனைய இரண்டு நீதிபதிகளும் அந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவாளியென தீர்ப்பளித்து மூன்று வருட சிறைத்தண்டனை விதித்ததாகவும் முன்னாள் இராணுவத் தளபதி தமது பிணை மனுவில் குற� ��ப்பிட்டுள்ளார்.

இந்த சிறைத் தண்டனைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மேற்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மேன்முறையீடு எதிர்வரும் புதன் கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள பொன்சேகா, அன்றைய தினம் தமது பிணை மனுவையும் பரிசீலனைக்கு எடுத்� ��ுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


http://tamil-cininews.blogspot.com




[Continue reading...]

இராசதுரைக்கு - கறுப்புக்கொடி காட்டினார் (புலி கோமாளி) சிவாஜிலிங்கம்! தந்தை செல்வா முன்நிலையில் சண்டையிட்ட (புலி)கூட்டமைப்பு தலைவர்கள்!!

- 0 comments


Thursday, April, 26, 2012
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=NiF_BZJbHls

இலங்கை::இராசதுரைக்கு - கறுப்புக்கொடி காட்டினார் (புலி கோமாளி) சிவாஜிலிங்கம்! தந்� ��ை செல்வா முன்நிலையில் சண்டையிட்ட (புலி)கூட்டமைப்பு தலைவர்கள்!!

யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் நினைவு தினம் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை உரையாற்றுவதற்கு ரெலோ அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் (புலி)கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கறுப்பு கொடிகாட்டி எதிர்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். யாழிலுள்ள தந்� ��ை செல்வநாயகத்தின் நினைவு சதுக்கத்தில் இந்த நினைவு தினம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே முன்னாள் (புலி)கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எதிர்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

சிவாஜிலிங்கம் தனது கறுப்பு கொடி எதிர்ப்பின் போது, "தமிழ் தேசிய துரோகி இராஜதுரையை வெயேற்று எனவும் மட்டக்களப்பு துரோகி, அரசின் அடிவருடி, துரோகியை வெளியேற்ற வேண்டு� ��்" என போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதன்போது தந்தை செல்வாவின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. இதனையடுத்து நினைவுக் கூட்டத்திலிருந்து வெளியேறிய முன்னாள் (புலி)கூட்டமைப்பு சிவாஜிலிங்கம் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது,

முன்னாள் அமைச்சராக இருந்த இராஜதுரை தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டு அரசில் இணைந்து அமைச்சரானவர். பி ன்னர் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு ஆதரவளித்து தமிழ் இளைஞர்களை (புலிகளை) சிறையில் தள்ளியவர். இந்த புனிதமான மண்ணில் இவரை கால் வைக்க விடமாட்டேன்" என்றார்.

எவ்வாறாயினும், சற்று நேரத்திற்கு பின்னர் தந்தை செல்வநாயகத்தின் நினைவுக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் செல்லையா இராஜதுரை உரையாற்றும் போது,

தந்தை செல்வா ஒரு அரசியல் பாடப்புத்தகம், அவர் தமிழ் மக்கள் ப� �ரிந்து வாழ்வதை விரும்பாத ஒருவர். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் உணர்வுகளில் கலந்துவிட்டு காலத்தால் அழிக்க முடியாத ஒருவர்" என்றார்.

இந்நிகழ்வில் தந்தை செல்வாவின் புதல்வர் சத்தியதாசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சோலமேன் சிறில், தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் பேராயர் ஜெபநேசன் அடிகளார், தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்ப ினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


http://tamil-cininews.blogspot.com




[Continue reading...]

சென்னை பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் உள்ள சிறப்பு அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களை விடுவிக்கக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!

- 0 comments


Friday, April, 27, 2012
சென்னை::சென்னை பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் உள்ள சிறப்பு அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக மக்கள் உரிம� ��க் கழகத்தின் சார்பில், சென்னை நினைவரங்கம் அருகே நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் (புலிவால்) புகழேந்தி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் (புலிவால்)பழ, நெடுமாறன், மதிமுக துணை போது செயலாளர் (புலிவால்)மல்லை சத்தியா, விடுதலை சிறுத்தைகள் வன்னி அரசு , மற்றும் பல்வேறு இயக்கத் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

ஆர� ��ப்பாட்டத்தின் போது, பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமில் உள்ள 5 இலங்கை தமிழர்களையும், செங்கல்பட்டு முகாமில் உள்ள 32 இலங்கை தமிழர்களையும், மற்ற அகதிகள் முகாம்களில் வாழும் அவர்களின் உறவினர்களிடம் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி செங்கல்பட்டு முகாமில் உள்ள 17 (புலி ஆதரவு) இலங்கை தமிழர்கள் கடந்த 11 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தி� ��ும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


http://tamil-cininews.blogspot.com




[Continue reading...]

Wednesday 25 April 2012

கனத்த மனதுடன் பதிவுகளில் இருந்து வெளியேறுகிறேன்!

- 0 comments




லா லீகா கிண்ணமிழப்பு + சம்பியன்ஸ் லீக் தோல்விக்கு பின்னரும்  பார்சிலோனாவை இன்னமும் அதிகமாக  நேசிக்கிற ஒரு சராசரி இல்லை இல்லை , ஒரு பார்சிலோனா வெறியன ாக உங்களுடன் ஒரு சில வார்த்தைகள்.. 

இது ஒரு பதிவாக இல்லாமல் எனது ஒரு பிரியாவிடையாக கொள்ளுங்கள்.


இன்று சம்பியன்ச் கிண்னத்தின் இரண்டாம் அரையிறுதியில் செல்சியாவிடம் வீழ்ந்தது பார்சிலோனா. செல்சியா சூப்பர் கேம் மச்சி! அதுவும் பத்து பேருடன்! தவளை தன் வாயால் கெடும்ங்கிற மாதிரி பார்சிலோனா கெட்டது அதுவா� �ே தான், மெஸ்ஸி தனது வாழ்வின் முதல் பெனால்டி வெளியில் அடித்தார், சொதப்பல் ஸ்ரார்ட். சும்மா சொல்லக்கூடாது செல்சியாவோட தடுப்பு ஆட்டம் பிரம்மாதம். முதல் பாதியில் பார்சிலோனா காட்டிய வேகம் இரண்டாம் பாதியில் காட்டாததால் வந்தது பரிதாபம். செல்சியாவோ மட்ரிட்டோ அல்லது முனீக்கொ எல்லாருக்கும் பெஸ்ட் ஆஃப் லக். 

நாளை இடம்பெறப்போகும் போட்டியி� �் தனது சொந்த மண்ணில் முனீக் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைவது மட்ரிட் அணிக்கு பெரிய சவாலாக இருக்கப்போவது இல்லை. ஒன்றுக்கு பூச்சியம் என்று கோல் அடித்தாலே போதுமானதாக இருக்கும் காரணம் மட்ரிட் ஏற்கனவே முனீக்கில் நடந்த போட்டியில் ஒரு "away" கோல் போட்டு இருப்பதால். 

ஆக எனது கணிப்பின் படி இறுதிப்போட்டியில் ஆடப்போவது செல்சியா மற்று ம் மட்ரிட் அணிகள் தான். இரு அணிகளையும் பார்க்கப்போனால்  செல்சியாவைவிட மட்ரிட் பலம் கூடிய அணியாக இருக்கின்றது.எனது கணிப்பின் படி  செல்சியா மற்றும் மட்ரிட் ஆகிய அணிகள் முனீக்கில் இறுதிப்போட்டி ஆடும் பட்சத்தில் , அந்த மைதானம் இரு அணிகளுக்கும் பொதுவானது. என்ன? தங்களது அணியான முனீக் அணியை தோற்கடித்த கடுப்பில் , முனீக் ரசிகர்களது ஆதரவு செல்சி பக்கம் சாயலாம். அது மட்� ��ும் தான் மட்ரிட்டுக்கு பாதகமான ஒன்றாக இருக்கப்போகிறது.

ஆனால் முனீக் அணிக்கு எதிராகவே அவர்கள் மைதானத்தில் கோல் போட்ட மட்ரிட் அணிக்கு இந்த உளவியல் சவால் ஒன்றும் பெரிய எதிர் தாக்கமாக இருக்கப்போவதில்லை. அது போக சாதரணமாகவே மட்ரிட்டுடன் ஒப்பிடும் பொழுது சற்று நலிந்த கழகமான செல்சியாவை இன்றைய போட்டி மேலும் நலிவடைய வைத்திருக்கிறது. ஏன் � ��ொல்கிறேன் என்றால் இன்று கோல் போட்டு செல்சியாவின் வெற்றியை உறுதி செய்த மியரல்ஸ், அணியின் பிரதான பின்கள வீரருமான ஜோன் டெர்ரி, இன்னொரு முக்கியமான  பின்கள வீரரான ரமிர்ஸ் ஆகியோர் சிவப்பு அட்டை காரணமாக அடுத்த போட்டியில் விளையாட முடியாது. இது உண்மையில் செல்சியாவின் பலத்தை பாதியாக குறைத்திருக்கிறது எனலாம். மியரல்ஸின் இடத்துக்கு டொரைஸ் வரலாம் என எதிர் பார்கிறேன். இவை யெல்லாம் கிட்டத்தட்ட மட்ரிட்டின் பத்தாவது தடவை இண்ணம் வெல்லும் கனைவை நனவாக்கும் என நம்புகிறேன்.

இத்தனையும் பொய்த்துப்போய் நாளை முனீக்கிடம் மட்ரிட் வாங்கி கட்டினாலோ அல்லது இறுதிபோட்டிக்கு நுழைந்து அங்கு நலிந்து, போய் இருக்கும் செல்சியாவிடம் வாங்கி கட்டி உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக சம்பியன்ஸ் கிண்ணத்தை செல்சியாவி டம் மட்ரிட் தாரை வார்த்தாலோ, சீசனின் ஆரம்பத்தில் நன்றாக ஆடி இறுதியில் சொதப்பிய பார்சிலோனாவை விட சொதப்பல் அணி மட்ரிட்டாக இருக்கும் என்றால் மறு பேச்சில்லை.

நாளைய தினம் தப்பி தவறி மட்ரிட்டை முனீக் வீழ்த்தினால் கிண்னம் முனீக் வசமாகும் என்பது எனது கணிப்பு. எழுத எழுத நிறைய எழுத வேண்டும் போல் உள்ளது. சீரியசாகவே சொல்கிறேன் , மனது கனத்துப்ப� ��ய் உளது. ஒரு ரசிகனாக நிறைய நொந்து போய் உள்லேன். இப்போதே நிறைய எழுதிவிட்டதாக உணர்கிறேன். தனியே கீழே உள்ள பந்தியை பதிவாக இட்டு முடிக்கத்தான் ஆரம்பத்தில் எண்ணம். ஆனாலும் இந்த அரையிறுயின் முடிவிலும் அடுத்து நடைபெறப்போகும் இறுதிப்போட்டி தொடர்பிலும் கருத்தறிய, எனது உதைபந்து பதிவுகளை எதிர் பார்த்திருக்கும் யாரேனும் இருந்தால் அவர்களை ஏமாற்ற வேண்டாமே என்று தான் மேலே உ ள்ள போட்டிக்கான் சிறு குறிப்பு தந்தேன்.

அடுத்த லா லீகா சீசன் வரைக்கும் அனேகமாக இனி உதைபந்து பதிவுகள் என்னிடம் இருந்து வராது என்பது எனது 99% கருத்து`. எவராச்சும் ஏமாந்து போனா அடியேனை மன்னிச்சூ.... எனது உதை பந்து பதிவுகளில் பின்னூட்டமிட்டும் , பதிவுகளை வரவேற்று படித்து  ஆதரவளித்த சகல வாசகர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள். 

இப்போது நண்பன் JZ உடன் சில வார்த்தைகள்....  உன்னோட செம ஃபன்னு மச்சி, எல்லா சப்போர்ட்டுக்கும் தாங்க்ஸ். நமது பின்னூட விவாதங்களில் நிறைய கலாய்ச்சோம் நிறைய கத்துக்கிட்டோம்.பார்சிலோனா இல்லாத மட்ரிட்டையும் மட்ரிட் இல்லாத பார்சிலோனாவையும் நினைத்தாலே கடுப்பா இல்ல???? இந்த இரண்டுக்கிடையான போட்டி தான் லாலீகாவை அழகாக்குகிறது, ஆரோக்கியமாக வைத்திருக்கி� ��து என்பது எனது கருத்து நண்பா. ரொம்ப நன்றி நண்பா.... ஆனாலும் சோகமா போனாலும் சும்மா போகல... அடுத்த லா லீகா + சம்பியன்ஸ் கிண்ணம் என்று விட்டதை பிடிப்போம் என்று இவ்விடத்தில் கூறி எனது இதர பதிவுகளுக்கு இதே சுவாரசியத்துடன் நமது பின்னூட்டங்கள் தொடரும் என்ற நம்பிக்கையிலும் கனத்த மனதுடன் வெளியேறுகிறேன்.....! மீண்டும் அடுத்த லா லீகாவில் சந்திப்போம் !!!


http://newsmalar.blogspot.com




[Continue reading...]

சன்னி லியோனிடம் 'அதை' எதிர்பார்த்த தயாரிப்பாளர்கள்!

- 0 comments


செக்ஸ் இல்லாவிட்டால் சான்ஸ் இல்லை ... இது திரையுலகில் மிகச் சாதாரணமாக உலா வரும் ஒரு வார்த்தை. இதை அவர்களே கூட மறுக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு செக்ஸுக்கும், சின� �மா வாய்ப்புகளுக்கும் நிறைய உறவு உண்டு.

ஒரு பெண் நடிகையாக வேண்டும் என்றால் நிறைய 'முதலீடு' செய்தாக வேண்டும். பல 'முதலாளிகளைப்' பார்த்தாக வேண்டும். அவர்களின் 'நிபந்தனைகளுக்கு' உட்பட்டாக வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு சின்ன பிட்டு வேடமாவது கிடைக்கும். இதை திரையுலகிலேயே சகஜமாக பலரும் கூறுவதைக் கேட்கலாம்.

இந்த நிலையில் கடல் கடந்து பாலிவுட்டில் நடிகையாகிய ுள்ள கனடாவின் சன்னி லியோனுக்கும் கூட இந்த 'செக்ஸ் பக்' கடித்துள்ளதாம். கனடாவின் ஆபாசப் பட நடிகைதான் சன்னி. இவர் காட்டிய கவர்ச்சியைப் போல யாரும் காட்டியிருக்க முடியாது. டாப்லெஸ், பாட்டம்லெஸ் என்று இவர் போகாத ஏரியா இல்லை. இந்த நிலையில் இவரிடமும் 'அதை' எதிர்பார்த்து பல தயாரிப்பாளர்கள் கொக்கி போட்டுள்ளனராம்.

பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோவில் சன்னி லியோனும் பங்கேற்றிர ுந்தார். அப்போது அவரை சில தயாரிப்பாளர்கள் அணுகி, வாய்ப்பு தருவதாகவும், தங்களைக் கவனிக்குமாறும் வெளிப்படையாகவே கேட்டனராம்.

சன்னியிடம் இப்படி பகிரங்கமாகவே அவர்கள் கேட்டதற்குக் காரணம் அவர் ஒரு ஆபாசப் பட நடிகை என்பதால்தானாம். ஆபாசப் படங்களில் நடிப்பவர்தானே, நாம் கேட்டால் மாட்டேன் என்றா கூறி விடப் போகிறார் என்பது அவர்களின் எண்ணமாம். ஆனால் தன்னிடம் செக்ஸை எதி� ��்பார்த்து வந்த தயாரிப்பாளர்கள் அத்தனை பேரையும் ரிஜக்ட் செய்து விட்டாராம் சன்னி லியோன்.

பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ள நான் ரெடியாக இல்லை என்று கூறும்சன்னிலியோன்   அப்படி எந்த ஒரு முன் நிபந்தனையும் இல்லாமல் ஜிஸ்ம் 2 பட வாய்ப்பைப் பெற்றுள்ளாராம். இப்போது அவர் பாலிவுட்டில் புக்காகியுள்ள படங்களிலும் கூட அப்படித்தான் சுதந்திரமான வாய்ப்பைப் பெற� ��றுள்ளதாக அவரது தரப்பு கூறுகிறது.

இதுகுறித்துக் கேட்டால், நான் ஆபாசப் பட நடிகைதான். அதை மறுக்கவில்லை, ஆனால் நான் விபச்சாரி இல்லை என்று பொட்டில் அடித்தது போலக் கூறுகிறார் சன்னி.

நன்றி தட்ஸ் தமிழ்


http://navasakthy.blogspot.com




[Continue reading...]

நான் ரசித்தசிரிப்புகள் 9

- 0 comments


நான் ரசித்தசிரிப்புகள் 9

சோப்பு விளம்பரத்துல நடிக்க ஒரு பொண்ணு தேவை!
பொண்ணு அழகா இருக்கணுமா?
இல்ல அழுக்கா இருக்கணும்!
   &n bsp;           உஷா சாரதி

தலைவர்கள் மேலே ஊழல் புகார் வந்ததும் நிருபர்கள் எல்லோருக்கும் வெள்ளைப்பேப்பரை வரிசையா கொடுத்தாரே என்ன விஷயம்?
வெள்ளை அறிக்கை தர்றாராம்!.
                       தேனி முருகேசன்

டாக்டர் பட்டம் கொடுக்க வந்தவங்க கிட்ட நம்ம தலைவர் எதுக்கு பல் டாக்டர் பட்டம் கேக்கறாரு?
  அப்பத ்தானே எல்லோரட சொத்தையெல்லாம் பிடுங்கலாம்!
                        வி.சாரதிடேச்சு

ஆனாலும் அவரைப்போல ஒரு முன் யோசனைக்காரரை பார்க்க முடியாது!
  ஏன்?
கல்யாணபத்திரிக்கையோட கூடவே ஒரு மொய்கவரையும் குடுக்கிறாரே!
                         ஜா.ரவி
அரண்மணை ஆராய்ச்சிமணியை ஏன் ஒரே தடவை அடித்தாய்?

மிஸ்டு கால் கொடுத்தேன் மன்னா!
                     தீபிகா சாரதி

< b>மனைவி ஒரு மந்திரி சரிதானே!
இல்லப்பா மந்திரியை அடிக்கடி மாத்தலாமே!
                        ருக்மணி தேசிகன்.

பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்கு கவலை இல்லை!
நிஜமாவா?
 செக்கிங் ஏறினால்தான் கவலை!
                  வி. சாரதி டேச்சு
ஏன் உன் வீட்டு வேலைக்காரியை வேலையை விட்டு நிப்பாட்டிட்டே?
அவளும் என் புருஷனை கேவலமா திட்டுறது சந்தேகத்தை குடுத்தது!
             &n bsp;              டி.சேகர்.
தலைவரோட தமிழ் மொழிபெயர்ப்பு தாங்க முடியலை!
எப்படி?
பேங்க் பாஸ் புக்கை 'தேர்ச்சிபுத்தகம்'னு சொல்றாரு!
         பி.அப்பாதுரை
அவரு ரொம்ப டுபாக்கூரா?
ஆமா!குற்றப்பத்திரிக்கைக்கு பொறுப்பாசிரியரா இருக்கறதா சொல்றாரு!
                          லெ.நா.சிவகுமார்

தலைவருக்கு வாஸ்து நம்பிக்கை ரொம்ப ஜாஸ்திப்பா!
என்ன?
கன்னத்� ��ுல விழுந்த அறைக்கு வாஸ்து பார்க்க வாஸ்து நிபுனரை தேடுறாரே!
                 பி.ஜி.பி இசக்கி


< div class="MsoNormal" style="background-color: #d9ead3;">கட்சி ஆபிஸுக்கு எதிரே ஓட்டல் நடத்தறவனுக்கு ரொம்ப கொழுப்புத் தலைவரே!
ஏன்யா என்னாச்சு!
ஜெயில் சாப்பாடு கிடைக்குமுனு போர்டு வச்சிருக்கான்!
                            பா.தீபன்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!


http://navasakthy.blogspot.com




[Continue reading...]

கொலவெறியை ஓரம் கட்டும் 'கோவி்ந்தாய நமஹ'!

- 0 comments


கொலவெறி என்ற புகழ் பெற்ற இலக்கிய நயம் மிக்கப் பாடல் வந்தாலும் வந்தது, அதே பாணியில் ஏகப்பட்ட காப்பிகேட்கள் நடமாடத் தொடங்கி விட்டன. இருந்தும் எதுவும் கொலவெறியை ஓவர்டேக் செய்ய முடியவில்லை. ஆனால் தற்போது கொலவெறியை ஓரம் கட்டும் வகையில் ஒரு பாடல் மகா வேகமாக ஹிட் ஆகி கர்நாடகாவைக் கலக்கிக் கொண்டிருக்கிறது.

பியார்கே ஆக்பிட்டாய்த்தே என்று ஆரம்பமாகும் அந்தப் பாடல் கன்னடம் மற்றும் உருது மொழி கலந்த குண்டக்க மண்டக்க பாடலாகும். கோவிந்தாய நமஹ என்ற படத்தில் இப்பாடலை போட்டுள்ளனர். படு வேகமாக இந்தப் பாடல் பிரபலமாகியுள்ளது. இதுவரை யூடிய� �பில் பத்து லட்சம் ஹிட்டுகளுக்கு மேல் அடித்துள்ளதாம். படமும் சூப்பர் ஹிட் ஆகி விட்டது.

3 படம் போண்டியானதால், கொலவெறிப் பாடல் மீதான மோகமும் மங்கிப் போய் விட்டது. இதையடுத்து அந்த இடத்தை இந்த கோவிந்தாய நிரப்பும் என்று சொல்கிறார்கள்.

இந்த ஆண்டின் மிகப் பிரபலமான கன்னடப் பாடலாக இது உருவெடுத்துள்ளதாம். இப்பாடலுக்கு இசையமைத்துள்ளவர் குருகிரண். படத்தை இயக்கியி ருப்பவர் புதுமுகமான பவன் உடையார். சேத்தன் மற்றும் இந்து நாகராஜ் பாடலைப் பாடியுள்ளனர்.

சினிமா பாணி இசை, நாட்டுப் புற இசை என பலதையும் கலந்து பப்பளக்க வைத்துள்ளனர் இந்தப் பாடலை. இப்பாடலுக்கு டான்ஸ் போட்டிருப்பவர்கள் கோமல் மற்றும் பருல் யாதவ். பீஜப்பூர் கோட்டை மற்றும் இப்ராகிம் ரோஸா ஆகிய இடங்களில் பாடலைப் படமாக்கியுள்ளனர்.

பாட்டு எப்படி இருக்கிறது என்று 'ஹ ேளிபிட்டு ஹேளி குரு....'!

நன்றி தட்ஸ் தமிழ்


http://navasakthy.blogspot.com




[Continue reading...]

உலகிலேயே மோசமான கணவர் ஐன்ஸ்டீன்தான்!?

- 0 comments


உலகிலேயே மோசமான கணவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்தான் என்று ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய விஞ்ஞானியாக நாம் அனைவரும் ஐன்ஸ்டீனை நினைத்துக் கொண்டிருக்கையில் இப்ப டி ஒரு குண்டைப் போட்டுள்ளார் வால்டர் ஐசக்சன். இவர் எழுதிய 'நுiளெவநin: ர்ளை டுகைந யனெ ருniஎநசளந' என்ற நூலில்தான் உலகிலேயே மோசமான கணவர் ஐன்ஸ்டீன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐன்ஸ்டீன் தொழில் ரீதியாக எத்தனையோ பெரிய சாதனைகளைப் படைத்திருந்தாலும் அற்புதங்களை நிகழ்த்தியிருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் எதையும் சாதிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

தன்னுடன் பணியாற்றிய விஞ்ஞானி மிலவா மாரிக்கைத்தான் கல்யாணம் செய்து கொண்டு வாழ்ககை நடத்தினார் ஐன்ஸ்டீன். இவர்களது திருமண வாழ்க்கை 11 ஆண்டு காலமே நீடித்தது. இந்த 11 ஆண்டு காலமும் அவரிடமிருந்து எந்தவிதமான காதல் அணுகுமுறையும் இருந்ததில்லையாம். இருவரும் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்காக சம்பிரதாயத்திற்காக சேர்ந்து வாழ்க்கை நடத்தினார்கள� ��ம்.

தனது மனைவியை வேலைக்காரி போல நடத்தி வந்தாராம் ஐன்ஸ்டீன். அன்பையும் பரிவையும் அவர் தனது மனைவியிடம் காட்டியதில்லையாம். 11 ஆண்டு கால வாழ்க்கைக்குப் பின்னர்தான் தனது திருமண வாழ்க்கை தோல்வியடைந்த ஒன்று என்று அவருக்குப் புரிய வந்ததாம். ஐன்ஸ்டீனின் மனைவி மாரிக் ஐரோப்பாவிலேயே முதல் முறையாக கணிதம் மற்றும் இயற்பியல் படித்த முதல் பெண் என� ��பது குறிப்பிடத்தக்கது.

இத்தனைக்கும் ஐன்ஸ்டீனை விழுந்து விழுந்து கவனத்திவர் மாரிக் என்பது குறிப்பிடத்தக்கது. ஐன்ஸ்டீனின் அறையை மிகச் சிறப்பாக அவர் பராமரித்து வந்தார். அவருக்கு மூன்று வேளை உணவை தவறாமல் அவரது அறைக்கே கொண்டு வந்து கொடுத்தார். உடைகளை சுத்தமாக துவைத்து தேய்த்துக் கொடுத்தார். படுக்கை அறையை சுத்தமாக வைத்திருந்தார். ஆன� �ல் பதிலுக்கு மனைவிக்கு எந்த கைமாறும் செய்ததில்லையாம் ஐன்ஸ்டீன்.

மாறாகஇ மனைவிக்கு பல நிபந்தனைகளைப் போட்டு வைத்திருந்தாராம அவர். அதாவது அருகில் வந்து உட்காரக் கூடாது வெளியில் கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தக் கூடாது. தேவையில்லாமல் தன்னுடன் பேசக் கூடாது வெளியுலக தொடர்புகளை அதிகம் வைத்துக் கொள்ளக் கூடாது.. இப்படிப் போகிறது ஐன்ஸ்டீன� ��ன் நிபந்தனை லிஸ்ட்.

அதை விட கொடுமை தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று தனது மனைவி எதிர்பார்க்கக் கூடாது என்றும் கூறியிருந்தாராம் ஐன்ஸ்டீன். எந்த வகையிலும் தன்னைக் கவர முயற்சிக்க் கூடாது. அனுமதி இல்லாமல் பேசக் கூடாது என்பதும் அந்த நிபந்தனைகளில் ஒன்று.

11 ஆண்டு கால வேதனை வாழ்க்கைக்குப் பின்னர் ஐன� �ஸ்டீனை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றார். கூடவே தனது பிள்ளைகளையும் அழைத்துச் சென்று விட்டார்.

ஐன்ஸ்டீன் நடத்திய இந்த லட்சணமா இல்லறத்தில் பிறந்த குழந்தைகள் இருவர். ஒருவர் ஹான்ஸ் ஆல்பர்ட். இன்னொருவர் எட்வர்ட். 1902ம் ஆண்டு லிசரல் என்ற மகள் பிறந்தார். பின்னர் அவரைத் தத்துக் கொடுத்து விட்டனர். பிள்ளைகளோடு ஜூரிச் சென்ற மாரிக் ஐந்து ஆண்� �ுகளுக்குப் பின்னர் 1919ம் ஆண்டு விவாகரத்து கோரினார். அது பின்னர் கிடைத்தது.

அதன் பின்னர் ஐன்ஸ்டீன் 1919ம் ஆண்டே எல்சா என்பவரை மணந்தார். பி்ன்னர் அவரது செயலாளர் பெட்டி நியூமன்னுடனும் உறவு ஏற்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் வேறு ஒரு பெண்ணுடனும் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.

ரிலேட்டிவிட்டி தியரியை உலகுக்க� � அறிவித்த ஐன்ஸ்டீனால் ரிலேஷன்ஷிப்பை பராமரிக்க முடியாமல் போனது வியப்புக்குரியதுதான்...



http://xpundai.blogspot.in




[Continue reading...]

Tuesday 24 April 2012

இறந்த பின் மனைவியை புதைப்பதற்காக குட்டி தீவை விலைக்கு வாங்கிய பள்ளி ஆசிரியர்

- 0 comments


இறந்த பிறகு தனது உடலையும் மனைவியின் உடலையும் புதைப்பதற்காக இங்கிலாந்தில் குட்டி தீவை விலைக்கு வாங்கி உள்ளார் பள்ளி ஆசிரியர் கசிமிர் ரோசின்ஸ்கி இங்கிலாந்தின் ஹெர்ட்போர்ட் ஷயர் கவுன்டியில் உள� �ளது செயின்ட் ஆல்பன்ஸ் நகரம். இங்கு மெக்கன்சி என்ற பெயரில் குட்டி தீவு உள்ளது.
இங்கு தண்ணீர் சாலைகள் மின்சார வசதி எதுவும் இல்லை. இந்த குட்டி தீவு 18 மாதத்துக்கு முன்பு விலைக்கு வந்தது. ஆனால் யாரும் வாங்கவில்லை. இந்நிலையில் செயின்ட் ஆல்பன்ஸ் நகரில் உள்ள பீச்வுட் பார்க் பள்ளி ஆசிரியர் கசிமிர்  ரோசின்ஸ்கி குட்டி தீவை 46 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளார்.

கசிமிருக்கு தற்போது 50 வயதாகிறது. மனைவி பவுலின் மகன் மைல்ஸ்(12) மகள் லிடியாவுடன்(11) வாழ்ந்து வருகிறார்.

இதுகுறித்து கசிமிர் கூறியதாவது: மூன்று ஆண்டுக்கு முன்பு குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். அது என்னை மிகவும் பாதித்தது. இறந்த பின் எனது உடலை அமைதியான இடத்தில் புதைக்க வேண்டும் என்று விரும்பினேன்.

அதற்காக இந்த தீவை வாங்கி உள்ளேன். தீவுக்கு செல்வது அவ்வளவு எளிதல்ல என்பது தெரியும். எனினும் உலகின் அழகிய இடங்களில் மெக்கன்சி தீவும் ஒன்று.

நானும் எனது மனைவியும் இறந்த பின் இருவரின் உடலையும் இந்த தீவில் தான் புதைக்க வேண்டும் என்று குழந்தைகளிடம் கூறியுள்ளேன். அதை அவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன் என்றார� ��.


http://tamil-sexygirls.blogspot.com




[Continue reading...]

பார்வையை ஓட விடுவதில் ஆண்களை விட பெண்களே 'லீடிங்'!

- 0 comments


அழகான பெண் எதிரே வந்தால் அவர்களை ஆண்கள் பார்ப்பது சகஜம்தான். அதேபோலத்தான் பெண்களும். ஆனால் தங்களது ஜோடிகளுடன் போகும்போது எதிர்பாலினர் மீது பார்வையை ஓட விடுவதில் பெ ண்கள்தான் லீடிங்கில் இருக்கிறார்களாம்.
இதை ஒரு ஆய்வு நடத்திக் கண்டுபிடித்துள்ளனர் - வேற யாரு வழக்கம் போல வெளிநாட்டுக்காரங்கதான். சுற்றுலாத் தலங்களுக்கு ஜாலியாக டிரிப் வந்த ஜோடிகளைப் பிடித்து கருத்துக் கேட்டுள்ளனர். அதில் 56 சதவீத ஆண்கள் தங்களை கிராஸ் செய்த தங்கள் கண்ணில் பட்ட அழகான பெண்களை சைட் அடித்ததாக ஒத்துக் கொண்டனராம்.

அதேசமயம் கிட்டத்தட்ட 74 சதவீத பெண்கள் ஆமா சைட் அடிச்சேன் என்று ஒத்துக் கொண்டார்களாம்.

இப்படி சைட் அடித்ததாக ஒத்துக் கொண்ட பெண்களில் 77 சதவீத பெண்கள் தாங்கள் அடுத்த ஆணை சைட் அடித்ததை கணவர் பார்த்து விடாதவாறு மறைக்க முயற்சி செய்ததாக கூறினராம். இவர்கள் இதற்காக கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு 'பாதுகாப்பாக' சைட் அடித்தார்களாம். அதேப� �ல கணவர் ஏதாவது பொருள் வாங்க 'அந்தாண்டை' நகர்ந்ததும் இவர்கள் 'இந்தாண்டை' சைட் அடித்தார்களாம்.

சில பெண்கள் தங்களை விட அழகாக இருந்த பெண்கள் மீது பார்வையை ஓட விட்டனராம். நம்ம ஆள் அவளைப் பார்த்தாரா என்றும் வேவு பார்த்துக் கொண்டார்களாம்.

இந்த கருத்துக் கணிப்பு குறித்து அதை நடத்தி நிறுவனத்தின் இணை உரிமையாளர் � ��ிறிஸ் கிளார்க்சன் கூறுகையில் ஆணோ பெண்ணோ வெளியிடத்திற்குச் ஜோடியாக போகும்போது இருவருமே எதிர்பாலினரைப் பார்க்கத்தான் செய்கிறார்கள். இருப்பினும் இதில் பெண்களே முதலிடத்தில் இருப்பது வியப்பான ஒன்று என்றார்.

இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது. இரு பாலினருக்கும் உணர்வுகள் ஒன்றுதானே...!


http://tamil-sexygirls.blogspot.com




[Continue reading...]

கனடாவில் ஆரம்பமாகும் பனிப்புயல்: வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

- 0 comments


கனடாவின் ஓண்டேரியோ பகுதியில் இதமான வெப்பம் குறைந்துள்ளது. இன்னும் சில தினங்களில் பனிப்புயல் வீசப்போவதாக என்விரான்மெண்ட் கனடா என்ற வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
மெக்ஸிகோ வளை குட ாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி ஓண்டேரியோவுக்குள் வீசும்போது பனி பனிக்கட்டி மழை மற்றும் மழை எனப் பல பரிமாணங்களில் வெளிப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிகழ்வு ஞாயிறு இரவு தோன்றி திங்கள் முதல் செவ்வாய் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஓண்டோரியோவின் தென்மேற்கு மற்றும் மத்திய தென் பகுதிகளில் திங்கட்� ��ிழமை வாடைக்காற்று மணிக்கு 70 கி.மீ வேகத்தில் வீசும். அன்று 7 டிகிரி–10 டிகிரி என்கிற சராசரி வெப்பத்தை விடக் குறைவாக இருக்கும் காற்றின் வேகம் செவ்வாய்க்கிழமை தணியக்கூடும்.

கொட்டும் பனியானது கிங்ஸ்டன் ஒட்டாவா பீட்டர்பரோ ஹேமில்டன் மற்றும் டொரொண்டோவில் ஆகிய பகுதிகளில் பரவலாக இருக்கும். ஹேலியர்டன் பீட பூமியில் உறைபனி 5 முதல் 10 செ.மீ வரை பட� ��்ந்திருக்கும். ஒண்டேரியோவின் மத்திய தென் பகுதியில் ஒன்று அல்லது இரண்டு செ.மீ. வரை பனி உயர வாய்ப்புள்ளது.

கிழக்குப் பகுதியில் முதலில் சில செ.மீ வரை உயரும் பனி மழையானது பின்பு 25 மி.மீ. வரை உயர்ந்து அந்தப் பகுதி முழுவதையும் குளிர்விக்கும். எச்சரிக்கை விடும் அளவிற்கு இப்பனி ஆபத்தானது இல்லை என்றாலும் இந்தக் காலகட்டத்திற்கு தற்போதைய பனிய� �ன் அளவு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு மாலை லேக் தூய ஜீன் பகுதியில் 20 செ.மீ. உயரத்திற்கு பனி படரும். இந்தப்ப பனிப்புயலால் கார்இ வண்டி ஓட்டுவது கடினமாக இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.


http://tamil-sexygirls.blogspot.com




[Continue reading...]

மொஹான் பீரிஸ் சாட்சியாளராக அழைக்கப்படுவது குறித்து 17 ஆம் திகதி தீர்மானம்!

- 0 comments


Tuesday, April, 24, 2012
இலங்கை::ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு விசாரணையின் போது முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் சாட்சியாளராக அழைக்கப்படுவது குறித� ��து அடுத்த மாதம் 17 ஆம் திகதி தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது.

சரத் டீ.ஆப்ரூ மற்றும் எச்.என்.ஜே.பெரேரா ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு முன்னிலையில் இந்த ஆட்கொணர்வு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஹோமாகம நீதவான் அடுத்த மாதம் 17 ஆம் திகதி இது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி கிறிஸ்மான் வர்ண குலசூரிய நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மேற்பார்வையுடன், ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை நடைபெற்றது.

எனினும் சட்ட மா அதிபர் ஜெனிவாவில் அவரின் தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் அல்லாது வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமையவே உரையாற்றியுள்ளார் என்பதால் அவர� �� அழைப்பதில் பயனில்லை என்று பிரதிவாதிகள் சார்பாக ஆஜரான பிரதி சொலிஸ்டர் ஜெனரல் ஷவீந்ர பெர்ணான்டோ இதன்போது குறிப்பிட்டார்.

இந்த மனு எதிர்வரும் மே மாதம் 31 ஆம்திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை வழக்கு விசாரணையை பார்வையிடுவதற்காக அமெரிக்க மற்றும் ஜேர்மன் தூதரகங்களின் உத்தியோகத்தர்கள் இருவரும் � ��மூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


http://tamilsexstorys2u.blogspot.com




[Continue reading...]

ஒருதொகை சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் மூவர் கைது!:-இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

- 0 comments


Tuesday, April, 24, 2012
இலங்கை::சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஒருதொகை சிகரெட்களைக் கொண்டு வந்த மூவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துபாயில் இருந்து இன்று அதி காலை 5.20 அளவில் நாட்டை வந்தடைந்த இந்த நபர்களின் பயணப் பொதிகளுக்குள் இந்த சிகரெட் தொகை கண்டுபிடிக்கப்பட்டதாக விமான நிலைய சுங்கப் பிரிவு குறிப்பிடுகின்றது.

சுமார் 830 சிகரெட் காட்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை சுமார் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியுடையவை என மதிப்பிடப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவு தெரிவிக்கின்றது.

கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த ம� ��ன்று சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்புத் துறைமுகப் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாகனப் போக்குவரத்து மீறல் தொடர்பாக சட்ட � �டவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காகவே சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தர் 1,500 ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்டதாக ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.

வட்டரக்க பிரதேச வாகன சாரதி ஒருவரிடமே இந்தப் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்சம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சந்தேகநபர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டதுடன் இன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கஞ்சாவுடன் மன்னார் பேசாளை பகுதி இளைஞர் கைது!

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுடன் மன்னார் பேசாளை பகுதியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் இன்று 24ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி� ��ினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 9 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா மற்றும் 890 கிராம் வெள்ளை நிற குடு போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் அவரை தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.


http://tamilsexstorys2u.blogspot.com




[Continue reading...]

60 வருடகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தை அகற்ற உத்தரவு??

- 0 comments


Tuesday, April, 24, 2012
இலங்கை::தம்புள்ளைப் பள்ளிவாசல் சேதமாக்கப்பட்ட விவகாரத்தையடுத்து , கிழக்கில் திருகோணமலையில் 60 வருடகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தையும் அகற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது?.

திருகோணமலை பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்தப் பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், நகர அபிவிருத்தி அதிக� ��ரசபை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கையானது மக்களின் சமய விடயங்களில் கைவைக்கும் விடயமாக மாறியுள்ளதுடன் இந்து மதத்தையும் பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்த ஆலயம் சுமார் 60வருடங்களுக்கு முற்பட்ட பழைமைவாய்ந்தது. இந்த ஆலயம் கடந்த காலங்களில் நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்டிருந்தது. தற்ப ோது புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள நிலையில் வீதி அபிவிருத்தியைக் காரணம் காட்டி பிள்ளையார் மீது கைவைக்க முயற்சி எடுக்கப்படுகிறது.

இலங்கை அரசு நாட்டினுள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகின்ற நிலையிலேயே இவ்வாறான செயல்களும் நாட்டில் அரங்கேற்றப்படுகின்றன.

இதனால், மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.விசனம் தெரிவித்து ள்ளனர்.

(உறுதி செய்யபடாத செய்தி) 60 வருடகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தை அகற்ற உத்தரவு??


http://tamilsexstorys2u.blogspot.com




[Continue reading...]

Monday 23 April 2012

ரஜினியின் "பாபா' தோல்விக்கும் பார்சிலோனாவுக்கும் என்ன சம்மந்தம்? - நான் சப்பைக்கட்டு கட்டுகிறேன் அல்லது உண்மையை சொல்கிறேன்!

- 0 comments



இந்த பஞ்சாயத்துக்கு என்ன எதுக்குடா இழுக்கிற?



உதை பந்து தொடர்பில் பதிவுகளை எழுதும் உத்வேகத்தில் நான் எழுத ஆரம்பித்திருந்லும் அது எந்தளவிற்கு வரவேற்பை பெறும் என்பது எனக்கு ஒரு கேள்வியாகவே இருந்தது. நான் எழுதிய முதல் உதைபந்து பதிவில் ஒரு பின்னூட்டம் + 100 ஹிட ்ஸ் கூட கிடைப்பது சந்தேகம் என்று எழுதியிருந்தேன். ஆனால் இதுவரை எழுதிய இரண்டு உதை பந்து பதிவுகளும் பலத்த வரவேற்பை பெற்றிருக்கின்றது என்று பொய் சொல்லவில்லை சுமாராக ஒரு 400- 500 ஹிட்ஸ் கிடைக்கிறது, அத்தோடு பின்னூட்டங்களும் வருகிறது. "அருமை நண்பா' ரக பின்னூட்டங்களை தாண்டி சிறந்த உதைபந்தாட்ட ரசிகர்களிடமிருந்து பிரயோசனமான பின்னூட்டங்கள் வந்திருப்பது எனக ்கு தொடர்ந்தும் அவ்வப்போது உதை பந்து பதிவுகளை எழுத ஊக்கம் தருகிறது.

இது ஒரு பதிவாகவே எழுத எண்ணம் இருக்கவில்லை. (அப்போ என்ன வெண்ணைக்கு எழுதின என்று நீங்கள் கேட்பதி நியாயம் இல்லாமல் இல்லை. #இருக்கு எண்டுறியா? இல்ல எண்டுறியா?). சரி மேட்டருக் கு வருவோம் நேற்று இடம்பெற்று முடிந்த சம்பியன்ஸ் கிண்ண போட்டி தொடர்பில் நான் எழுதிய முன்னோட்டப் பார்வை பதிவை பார்த்துவிட்டு , நடந்து முடிந்த போட்டி தொடர்பில்  நண்பர் JZ தந்த பின்னூட்டங்களுக்கு பதில் தர ஆரம்பித்தேன் , கொஞ்சம் எழுத தொடங்கி விட்டு பார்த்தால் அது ஒரு பதிவு ரேஞ்சுக்கு நீண்டிருந்தது. சரி வந்தவரைக்கும் லாபம் என்று , கொஞ்சம் மேலதிக பிட்டுக்களும் சேர்த� �து ஒரு பதிவாக தயாரித்து விட்டேன். (எப்படி என் சாமர்த்தியம்? # உன் சாமர்த்தியத்தை நாய் விறாண்ட) இதை நண்பர் JZ தனக்குரிய பதிலாக பார்க்கலாம், ஏனையோர் "பார்சிலோனா எதிர் செல்சியா நடந்தது என்ன ?" ரீதியில் படித்துக் கொள்ளலாம்.

இது ஒரு பின்னூ ட்டமாக தயாரிக்கப்பட்டு பின்னர் பதிவிடும் நோக்கத்தில் தொகுக்கப்பட்டது. எடிட்டிங்கில் ஏதாவது கோளாறாகி தொடர்புத்தன்மை எங்காவது காணாமல் போயிருந்தால் மன்னிச்சூ....

நண்பரே தங்களது வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் எனது ஆத்மார்த்தமான நன� ��றிகள்! தொடர்ந்து உங்களது ஆதரவு எனக்கு வேண்டும். 




2009 என்பது முடிந்து போனது அதைப்பற்றி இப்போது பேசுவது அர்த்தமற்றது என்பது எனது தாழ்மையான கருத் து, அத்தோடு நடுவரின் பிழையான தீர்ப்பு என்பது பார்சினோலாவின் தவறில்லையே! இதை பதிலடியாக நீங்கள் எடுத்துகொண்டால் அதை இல்லை என்றும் மறுக்க முடியாது. நான் பார்சிலோனாவின் தீவிர ரசிகன் தான் , ஆனால் நடுநிலமையான உதைபந்தாட்ட ரசிகன். எனது பதிவைப் பார்த்தால் அது உங்களுக்கு புரிந்திருக்கும். நான் செல்சியாவை குறைத்து மதிப்பிடவில்லையே! நேற்றைய போட்டியில் செல்சியா வெல்லும் அ� �்லது சமநிலை என்று தானே குறிப்பிட்டிருந்தேன்.



ஆனால் நேற்றைய போட்டியை நீங்கள் பார்த்திருந்தால் புரிந்திருக்குமே, யார் பக்கம் ஆட்டம் இருந்தது என்� ��ு! 80% பந்து பார்சிலோனாவின் பக்கமே இருந்தது, அது போக நேற்றைய ஆட்டத்தில் அறிவிப்பாளர்கள் கூட பார்சிலோனா தான் ஃகோம் டீம் போல ஆடுவதாக குறிப்பிட்டிருந்ததை அவதானித்திருப்பீர்கள். உங்கள் மன சாட்சிக்கு தெரியும் எந்த அணியின் ஆட்டம் நேற்று சிறப்பாக இருந்தது என்று. சனியாஸ் ஒன்று , பண்ணாட ஃபப்ரிகாஸ் இரண்டு இறுதி நிமிடத்தில் பெட்ரோ ரொட்ரீகஸ் ஒன்று என்று இலகுவாக அடித்திருக்� � வேண்டிய நான்கு கோல்களை பார்சிலோன தவறவிட்டது காலக் கொடுமை என்பதை விட வேறு என்ன சொல்வது?


ஸ்பெயின் டீமில இடம் கெடச்ச மாதிரி தான்!



செல்சியாவின் மைதானத்தில் இவ் வாறான ஒரு சிறந்த ஆட்டத்தை பார்சிலோனாவால் வெளிப்படுத்த முடிந்திருகிறது என்றால் அவர்களது கோட்டையான நியூ கேம்பில் அவர்களது ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது. நான் எனது பதிவில் கூறியது போல இரண்டு கோல்களுக்கு அதிகமான கோல் அடித்து பார்சிலோனா வெல்வது உறுதி. இதை பார்சிலோனா ரசிகனாக சொல்லவில்லை ஒரு உதைபந்தாட்ட ரசிகனாக சொல்கிறேன்.நீங்கள் என்ன சொல� �கிறீர்கள்?



சொல்லப்போனால் செல்சி நேற்று ஆடிய தற்காப்பு ஆட்டம் அர்த்தமற்றது, காரணம் தங்களது சொந்த மைதானத்தில் தாக்குதல் ஆட்டம் ஆடி எதிரணிக்கு குறைந்தது இரண்டு கோல்களாவது அடித்தால் மட்டுமே பார்சிலோனா போன்ற வலிமையான அணிக்கு எதிராக அவர்கலது மைதானத்தில் தாக்குபிடிக்க முடியு� ��். 

செல்சியாவின் தடுப்பு ஆட்டம் அவர்கள் திட்டமிட்டு செய்தது இல்லை, வெளி மைதானத்தில் தடுப்பு ஆட்டம் ஆட வேண்டிய பார்சிலோன யாரும் எதிர் பார்க்காத வண்ணம் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியதால் செல்சியா தடுப்பு ஆட� ��டத்துக்கு நிர்பந்திக்கப்பட்டது எனலாம். ஏன் சொல்கிறேன் என்றால் போட்டியின் முதல் பதினைந்து நிமிடங்கள் செல்சியா தாக்குதல் ஆட்டத்துக்கு முனைந்ததை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள். ஆனால் அதை பொருட்படுத்தாமல் பார்சிலோனாவும் தாக்குதல் ஆட்த்தை தொடரவும் வேறு வழியின்றி தனது துருப்புக்களை பின் நகத்தியது செல்சியா. செல்சியாவின் நோக்கம் தாக்குதல் ஆட்டம் ஆடி பார்சிலோனா வின் பலவீனப்பட்ட பின்களத்தை ஊடுருவி  இரண்டு கோல்களாவது போடுவதாகதான் இருந்திருக்க வேண்டும்.

ஆனால் செல்சியாவின் இந்த நோக்கத்தை அறிந்து தானோ என்னமோ பார்சிலோனா தடுப்பில் இறங்காமல் தாக்குதல் ஆட்டத்தையே வெளிப்படுத்திய� �ு. சும்மா சொல்லக்கூடாது நான் குறைத்து மதிப்பிட்ட கிழட்டு சிங்கம் புயோலின் ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. யாரும் எதிர் பாராமல் ட்ரகோபா அடித்த அந்த கோல் தவிர செல்சியாவின் எந்தவொரு வீரரும் ஆடுவதற்கு புயோல்+ பார்சிலோனாவின் பின்களம் இடம் தரவில்லை என்றால் மிகையாகாது.

வட போச்சே!


நான் எதிர் பார்த்த அளவுக்கு செல்சியாவின் ஆட்டம் அவளவு சிறப்பாக இல்லை என்று தான் சொல்லுவேன். வயதாகி விட்டது அவர்கள் உடல் தகுதி போதாது என்று நான் குறிப்பிட்ட ட்ரக்கொபா கிஷோகர் சொன்னது நியாயம் என்பதை நேற்று நிரூபித்தார், பார்சிலோனாவின் பின்களவீரர்களது (நியாயமான + நியாயமற்ற) தாக்குதல்கள சமாளிக்க முடியாமல் � ��ிணறினார், அது போக தானே சில வேளைகளில் யாரும் தட்டி விடாமலே கீழே விழுந்தார். இந்த திணறல் ஆட்டம் நியூ கேம்பில் சுத்தமாக எடுபடாது. ஆனாலும் ஒரு கோல் அடித்து ரசிகர்களின் நாயகனாகி போனார்.


லம்பார்ட் மைதானத்தில் இருந்தாரா , இல் லைய என்பதே எனக்கு தெரியவில்லை. ஆஸ்லே கோல் சுமார், டெர்ரி எதிர் பார்த்ததைவிட சொதப்பல் ரகம் தான். ஆனால் செல்சியாவின் அசத்தல் இளம் வீரர் மியரல்ஸின் ஆட்டம் பிரம்மிக்கவைத்தது. அடுத்து அணியின் கோல் காப்பாளர் பீட்டர் சேச், மனிதர் இல்லாவிட்டால் பார்சிலோனாவுக்கு இரண்டு கோல் உறுதியாகியிருக்கும். அது போல் நடுக்கள வீரர் ரமிர்ஸ், மற்றும் மிகெல் ஆகியோரது ஆட்டமும் கவனிக்கப்ப� �� வேண்டியது.


பார்சிலோனா தோற்றதற்கு செல்சியா காரணம் இல்லை. பார்சிலோனாவே தான் காரணம். நான் சொதப்பும் என எதிர் பார்த்த பார்சிலோனாவின் பின் களம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த சிறந்த முன்களம் என பெயர் வாங்கிய முன்வரிசை சொதப்பியது. முன்வரிசை என ஒட்டு மொத்தமாக பழி போடுவ� �ை விட ஃபப்ரிகாஸ் என பச்சையாக சொல்லலாம். ஆர்சனலில் இருந்து ஸ்பெயின் அணியில் தனக்கு இடம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் இடைவிலகி பார்சிலோனாவுடன் சேர்ந்து ஆடும் இந்த பக்கிக்கு ஸ்பெயின் அணியில் இடம் குடுக்க கூடாது என்று பரிந்துரை செய்கிறேன்.

இங்கிலாந்து பிராந்திய அணிகளுக்கு ஆடும் ஸ்பெயின் வீரர்களுக்கு ஸ்பெயின் தேசிய அணியில் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைப்பது அரிது என்பதால் , ஃபப்ரிகாஸ் பார்சிலோனாவுக்கு மாறினார். ஆர்சனலின் பள்ளியில் இருந்து தெரிவான இந்த ஃபப்ரிகாஸ் ஆர்சனலுடனான தனது ஒப்பந்த காலம் முடிவைவதற்கு முன்னமே இடைவிலகியிருப்பதால் ஆர்சனல் இவருக்கு செலவழித்த செலவீங்கள� � பார்சிலோனா வழங்கும் சம்பள பணத்தில் கட்டி கட்டி கடனைத்து கொண்டிருக்கிறார் இந்த கடன்காரன்.

அந்த பன்னாடை நேற்று ஆடிய ஆட்டம் பார்சிலோனாவின் தோல்வியை உறுதி செய்தது எனலாம். மெஸ்ஸி கொடுத்த பந்தை "சிப்" பண்ணுகிறேன் பேர்வழி என� ��று கோட்டை விட்டதும், இடது காலால் அடிக்கப் போய் இன்னொரு பந்தை வெளியால் அடித்ததும் சொதப்பலின் உச்சக் கட்டம். இவரது பாஸ்களும் சொதப்பல் ஒஃப் த இயர். முதலாவது பாதியில் சனியாஸ் அடித்த பந்தும் இரண்டாம் பாதி இறுதியில் தியாகோ அடித்த பந்தும் கோல் கம்பத்தில் பட்டு திரும்ப வந்தது துரதிஷ்டத்தின் உச்சக்கட்டம்.

அது போல் எதிர் பார்த்த அளவு மெஸ்ஸி மற்றும் சனியாஸ் கூட சோபிக்கவில்லை.மெஸியின் தவறு தான் கோல் ஆகிப்போனது குறிப்பிடத்தக்கது.இதுவரை 243 கோல்களை  அடித்திருக்கும்  லியோனல் மெஸ்ஸி செல்சியாவுக்கு எதிராக கோல் ஏதும் அடிக்காமல் சொதப்பிய தொடர்ச்சியான ஏழாவது போட்டி இது. ஆனால் மெஸ்ஸி சில கோலுக்கான உதவிகளை (அஸிஸ்ற்) செய்தார், அதை பம்பிலிமாஸ் சாரி ஃபப்ரிகாஸ் மண்ணாக்கினார்.


நான் முதலில் குறிப்பிட்டது போல நேற்றைய தினம் தாக்குதல் ஆட்டம� �� ஆடியிருக்க வேண்டிய செல்சியா தடுப்பு ஆட்டம் ஆடியது அல்லது ஆடுவதற்கு நிர்பந்திக்கபட்டது எதுவானாலும் அது பார்சிலோனாவுக்கு கிடத்த முதல் வெற்றி எனலாம். போட்டிக்கு முன்னர் பார்சிலோனாவின் முகாமையாளர் பெப் குவாரியோலா சொன்னது நினைவிருக்கிறதா? "நாங்கள் ஒரு சமநிலைக்கோ அல்லது ஒன்ரு அல்லது இரண்டு என்ற குறைந்த எண்ணிக்கையிலான கோல்களோடோ போட்டியை முடித்து கொள்ளவே போராடுவ ோம்". இது நியூ கேம்பில் அதற்கு மேலதிகமாக கோல்களை பார்சிலோனா அடிக்கும் என்ற தன்நம்பிக்கையே காட்டுகிறது.

உனக்கு வட போச்சு எனக்கு வாழ்க்கையே போச்சு!


 செல்சியா நேற்று தாக்குதல் ஆட்டம் ஆடியிருந்தால் கூட  இரண்டு கோல்களை போட்டிருக்கலாமா என்பத� �� சந்தேகமே. காரணம் பார்சிலோனாவின் ஆட்டம் அவளவு சிறப்பாக இருந்தது. என்ன தான்  நேற்றைய தினம் செல்சியாவின் பதினொரு வீரர்களும் தடுப்பு ஆட்டத்தில் பிஸியாக இருந்திருந்தாலும் பார்சிலோனா அவர்களது கோல் பகுதில் வாழைப்பழம் போல நான்கு கோல் வாய்ப்புக்கள் உள்ளடக்கமாக பந்துகளை கொண்டுவந்ததை அவர்களால் தவிக்க முடியாது போனது. . செல்சியாவின் மைதானத்திலேயே இந்த நிலை என்றால் எந்த முறையான செல்சியாவின் தடுப்பு ஆட்டமும் பார்சிலோனாவின் மைதானமான நியூ கேம்பில்  பார்சிலோனாவை  தட ுத்து நிறுத்துமா  என்பது கேள்வியே!

இதை ஒரு பார்சிலோனா ரசிகனாக் சொல்லவில்லை நேற்றைய போட்டியில் செல்சியாவின் அற்புதமான ஆட்டம் ஒன்றை எதிர் பார்த்து ஏமாந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். நேற்ரைய போட்டியின் புள்ளிவிபரங்களையும் , ச� ��ல்சியா ஆடிய ஆட்டத்தையும் பார்த்த உங்களுக்கெ அது புரிந்திருக்கும்.பந்து கால்களில் இருந்த விகிதம் செல்சியா 20% , பார்சிலோனா 80%. இது நேற்றைய ஆட்டம் பாசிலோனா கைகளில் இருந்ததையே காட்டுகிறது.

20%
Possession
80%
209
Passes attempted
814
159 (76%)
Passes completed (success rate)
757 (93%)
Xavi (134)
Top individual passer
Jon Obi Mikel (32)
4
Attempts on goal
24
1
Attempts on target
6
(source BBC sports 18 April 2010)
  
இங்கு ஒன்றை குறிப்பிட வேண்டும் முதல் 17/04/2010 நடந்த இன்னொரு அரையிறுதியில் ஃகோம் டீமாக ஆடிய பயன் முனீக் அணி ஒரு மூர்கத்தனமாக, நாங்கள் ஃகோம் டீம் என்ற ஆதிக்கத்தில� �� பலம் வாய்ந்த மட்ரிட் அணிக்கெதிராக  சிறந்ததொரு  தாக்குதல் ஆட்டம் ஆடி இரண்டு கோல்கள் அடித்தது நினைவிருக்கலாம்.

இரண்டாவது சுற்று அரையிறுதி செல்சியாவுக்கு ஸ்டாம்ஃபோர்ட் பிறிட்ஜ் போல் கடினமானதாக  இருக்க போவதில்லை மாறாக மிகக் கடினமானதாக இருக்கப்போகிறது. அது போல் என்னதான் பார்சிலோனா தனது சொந்த மைதானத்தில் பலம் வாய்ந்ததாக இருந்தாலும் , தப்பி தவறி கூட செல்சியா நியூ கேம்பில் ஒரு கோலை போடும் பட்சத்தில் பார்சிலோனா மூன்று கோலகள் அடிக்கவேண்டிய கட்டாயம் உருவாகும். அது கொஞ்சம்  கடினமான பணியாக கூட இருக்கலாம்.

(இந்த பந்தியை ஒரு பொதுவான விமர்சனமாக பார்க்க வேண்டாம், இதை பார்சிலோனா ரசிகனாக எழுதுகிறேன்) ஒரு நடுநிலமையான உதைபந்தாட்ட விமர்சகனாக நான் அது ஒரு கடுமையான பணியாக இருக்கலாம் என கூறினாலும் ஒரு பார்சிலோனா ரசிகனாக , நியூ கேம்பில் பார்சிலோனாவுக்கு மூன்று கோல்கள் என்பது சாதாரணம் என்கிறது உள் மனத ு. மூன்று என்ன? செல்சியா நேற்று ஆடிய ஆட்டத்துக்கு நான்கே சாத்தியம் என்கிறது பட்சி. நேற்றே நான்கு அடித்திருக்க வேண்டியது! என்ன தான் "பாபா" படம் ஃபிளாப் என்று பொது இடத்தில் ஏற்றுக்கொண்டாலும், ஒரு ரஜினி ரசிகனாக அதை ஏற்றுக்கொள்ளாத மனநிலைதான் இதுவும்.

அது போக எதிர்வரும்  21ம் திகதி பார்சிலோனா , மட்ரிட் அணிகள் மோதும் லா லீகாவின் "எல் கிளாசிக்" ஆட்டம் வேறு வருகிறது. அதன் காய்ச்சல் இப்போதே பரவ ஆரம்பித்திருக்கிறது. இந்த வருட லா லீகாவின் ஆரம்ப கட்டத்தில் மட்ரிட்டின் மைதானத்தில் 1 - 3 என்று  மட்ரிட்டை வீழ்த்திய  பார்சிலோனா தங்களது மைதானத்தில் சோடை போகாது என நம்புகிறேன்.

இவ்விடத்தில் , பார்சிலோனா ரசிகனாக , அந்த அணிமீது இருந்த அசாத்திய நம்பிக்கையில், நேற்று செல்சியாவின் மீது பெட் கட்ட இருந்து , என் பேச்சைக்கேட்டு கட்டாமல் விட்டு பண் நஷ்டமான டென்மார்கில் இருக்கும் எனது � ��ச்சான் உஷாந்தன் ஜகநாதனிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.அரசியல்ல இதெல்லாம் சாதரணம் அப்பா! ஹி....ஹி...ஹி.....ஹி...

அட! மேற்சொன்ன ஏதாவது எதிர் வரும் 24ம் திகதி ந� �யூ கேம்பில் பிழைத்தும் போகும் பட்சத்தில் மீண்டும் ஒரு உண்மைசொல்லும் பதிவுடன் உங்களை சந்திக்கிறேன். அது வரையில் தொடர்ந்து இணைந்திருங்கள். பின்னூட்டம் தாருங்கள்! நன்றி வணக்கம்.ஹி....ஹி...ஹி.....ஹி...



யம்மா சகிரா! ஏதோ நீ என்னோட கேர்ள் ஃபிரண்டா இருக்கிறதால அடிக்கடி தோத்து இப்பிடி கட்டிப்பிடி வைத்தியம் வாங்கலாம் போல இருக்கே!




http://tamil-starmovies.blogspot.com




[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger