Monday 7 November 2011

ஒரு புறக் குடியி���ுப்பாளருடன் நேர்முகம்!

- 0 comments



நான்: எப்ப வந்தே அருண்?எத்தனை நாள் தங்குவாய்?

அருண்:மூன்று வாரம் விடுப்பு. அதுவே அதிகம்!


நான்:ரெண்டு வருடம் கழித்து வந்திருக்கே!அப்பா,அம்மாவோட கொஞ்ச நாள் இருக்க வேண்டாமா?இங்கு என்ன இல்லை? அமெரிக்கா   மாதிரி பெரிய மால்கள் இருக்கின்றன. விலையும் குறைவு.

அருண்:  உண்மைதான். நல்ல கடைகள் இருக்கின்றன .விலையும் குறைவுதான் .நல்ல    உணவு விடுதிகள் இருக்கின்றன.ஆனால் சாலைகளும், போக்குவரத்தும் படு மோசம். 

நான்:சரிதான்.ஆனால் அது மிகச் சிறிய விஷயம்.கொஞ்சம் அனுசரித்துப்     போக வேண்டியதுதான்.

அருண்;நான் ஏன் இந்தப் போகுவரத்து நெரிசலோடும்,மசத்தனமான கூட்டத்தோடும்,குப்பையோடும் அனுசரித்துப் போக வேண்டும்?

நான்: அதை விடு.அப்பா அம்மா எப்படியிருக்காங்க?அம்மாவுக்கு உடம்பு சரியில்லையெனக் கேள்விப்பட்டேனே?

அருண்;பரவாயில்லை.மருத்துவர் மருந்து கொடுத்திருக்கிறார்.அப்பா      கவனித்துக் கொள்கிறார்.

நான்:அவருக்கும் வயதாகி விட்டது. எப்படி சமாளிப்பார்?அதுவும் நீ அருகில் இல்லாததே இருவருக்கும் பெரிய குறையாக இருக்கும்.

அருண்:அவர் கொஞ்சம் அனுசரித்துப் போக வேண்டியதுதான்.

நான்: சரி யு.எஸ்.ஸில் எல்லாம் எப்படி இருக்கிறது.உங்கள் சாப்பாடெல்லாம் எப்படி? இதே இட்லி,தோசை,உப்புமாதானே!இதுதான்   மிக நல்ல உணவு.

அருண்:இல்லை.தினம் காலை  பெட்டியில் அடைக்கப்பட்ட தானிய வகைகள் சாப்பிடுவோம்.மதிய உணவுக்கு  இடையீட்டு ரொட்டி எடுத்துச் செல்வேன் இரவு  குளிர் பதனப் பெட்டியில் வைக்கப்பட்ட சமைத்த உணவைச் சூடு படுத்திச் சாப்பிடுவோம்!தினம் சமைப்பதெல்லம் முடியாது.வாரம் ஒரு முறைதான் சமையல்.

நான்:இதெல்லாம் உடல் நலத்துக்கு உகந்ததல்லவே?

அருண்;என்ன செய்ய,அனுசரித்துப் போக வேண்டியதுதான். புரதச் சத்துக்காக அவ்வப்போது அசைவமும் சாப்பிடுவோம்.

நான்:நீங்கள் சைவம் ஆயிற்றே!இப்போதெல்லாம் பல அசைவ உணவு சாப்பிடுபவர்களே ,சைவத்துக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

அருண்;இருக்கும் இடத்துக்குத் தக்கபடி அனுசரித்துப்போக வேண்டியதுதான்.

நான்:சென்னையிலே வளர்ந்தவன் நீ.அங்குரொம்பக் குளிரோ?

அருண்: ஆமாம்.கடுங்குளிர் ,பனிப்பொழிவு எல்லாம்தான்.ஆனால் வீட்டில்  மின் வெப்பமூட்டி இருக்கிறது.அதிகம் வெளியே போக மாட்டோம்.அனுசரித்து நடக்கக் கற்றுக் கொண்டோம்!

நான்: உன் மனைவியும் வேலை பார்க்கிறாளல்லவா?

அருண்:ஆமாம்.இருவரும் சம்பாதித்தால்தான் வசதியாக இருக்க முடியு.வீட்டுக்குக் கடன் வாங்கியிருக்கிறோம்.காலை 8 மணிக்குபோனால் மாலை 6மணிக்கு வருவோம்.ள்ளியில் படிக்கும் எங்கள் மகன் வந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ, கணினியில் விளையாடிக்கொண்டோ இருப்பான்.பசித்தால் குளிர் பதனப் பெட்டியிலிருந்து ஏதாவது எடுத்துச் சாப்பிடுவான்.

நான்:அங்கு கலாசாரம் எல்லாம் வேறாயிற்றே.பையன் அந்தக் கலாசாரத்தில் வளர்ந்தால் கவலை இல்லையா?

அருண்:அதெல்லாம் அவன் இஷ்டம்.யாரும் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை.அனுசரித்துப் போக வேண்டியதுதான்.

நான்:அங்கு நீ என்ன வேலை பார்க்கிறாய்?இந்தியாவில் இதே மாதிரி வேலை கிடைக்காதா?

அருண்:அங்கு மென் பொருள் துறையில்தான் இருந்தேன்.மீபத்தில் வேலை போய் விட்டது. இப்போது ஒப்பந்த அடிப்படையில் ஒரு வேலை கிடைத்திருக்கிறது.எப்படியோ அனுசரித்துப்போக வேண்டியதுதான்.

நான்:உனக்கு இந்தியாவிலேயே நல்ல வேலை கிடைக்குமே. இப்போதெல்லாம் நல்ல சம்பளமும் கிடைக்கிறது,மென்பொருள் துறையில்.

அருண்:உண்மைதான்.நல்ல சம்பளம் கிடைக்கும்.அதிகம் சேமிக்கவும்  முடியும்.ஆனால் அந்தக் கூட்டம்,போக்குவரத்து நெரிசல் ,குப்பை...சே நான் ஏன் அனுசரித்துப்போக வேண்டும்?தலை எழுத்தா?

நான்:சரி பார்ப்போம்!



http://cmk-mobilesms.blogspot.com



  • http://oruwebsite-tamil.blogspot.com

  • [Continue reading...]

    அம்மாவுக்கு ஒரு ���ோவில்!

    - 0 comments


    சில நாட்களுக்கு முன் மகனால் சரியாக நடத்தப்படாத ஒரு தாய் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன்.ஆனால் இன்று,  இறந்து விட்ட தன் தாய்க்காக ஒரு கோவில் கட்டிய ஒரு அன்பு மகனின் கதை--கதையல்ல நிஜம்.


    2007ஆம் ஆண்டு  64 வயதில் காலமான தனது தாயின் மீது  அபரிமித அன்பு கொண்ட ,துறையூரைச் சேர்ந்த சுரேஷ் குமார்,தன் தாயின் நினைவாக ஐந்து கோடிச் செலவில்  ஒரு நினைவாலயம் கட்டியிருக்கிறார். 30000 சதுர அடியில் கட்டப்பட்ட  அந்த நினைவாலயத்தில், அவரது தாயின் 64 படங்கள் உள்ளன.அந்தப் படங்கள் உடைந்த வளையல் களாலும், தீக்குச்சிகளாலும்,மணிகளாலும் உருவாக்கப்பட்டவை.அவரின் அஸ்தி எல்லா நதிகளிலும் தூவப்பட்ட பின்,அந்த ஆலயத்தில் உள்ள அத்தாயின் வெண்கலச்சிலையின் கீழ் 64 அடி ஆழத்தில் புதைக்கப் பட்டதாம்.64 அடி உயர ஒரு ஸ்தூபி கட்டிடத்தின் முன் உள்ளது.அந்த இடத்தின் மொத்த அளவு 2.5 ஏக்கர்.


    தனது சொந்த சேமிப்பில் அந்தக் கோவில் கட்டப்பட்டதாகவும், தாய் மீது உள்ள அவரது அன்பை பணத்தால் அளவிட முடியாது என்றும் சுரேஷ் குமார் சொல்கிறார்.


    ஒரு இடுகாட்டின் அருகில் கட்டப்பட்ட அந்த நினைவாலயத்தில் இடு காட்டுக்கு, வரும் மக்கள் நீராடுவதற்காக ஒரு 7 நட்சத்திரக் குளியலறை  இருக்கிறதாம்.(அப்படி என்றால் என்ன?)


    அது தவிர ஏதாவது நிகழ்ச்சிகள் நடத்த ஒரு பெரிய கூடமும் உள்ளதாம்-இலவசமாகக் கிடைக்கும்.


    உங்களில் பலர் கேட்கலாம்"5 கோடியைச் செலவழித்து,ஒரு நினைவாலயம் கட்டுவதற்குப் பதில்,தாயின் பெயரில் ஒரு அறக்கட்டளை தொடங்கி அதன் மூலம்,ஏழை மாணவர்கள் கல்விக்கும்,ஆதரவற்ற  முதியோரின் வாழ்வுக்கும், உதவலாமே,அது மேலும் சிறப்பாக இருக்குமே "என்று.


    நீங்கள் அறிவு பூர்வமாகச் சிந்திக்கிறீர்கள்.அவரின்  தாயன்பு அவரை உணர்ச்சி பூர்வமாகச் சிந்திக்க வைத்து விட்டது.


    அவரது அன்புக்குத் தலை வணங்குவோம்!


    இப்படிப்பட்ட ஒரு மகனைப் பெற அத்தாய்


    எந்நோற்றாள் கொல்?

    (செய்தி:இந்தியாவின் நேரங்கள்-2-11-2011)



    http://cmk-mobilesms.blogspot.com



  • http://oruwebsite-tamil.blogspot.com

  • [Continue reading...]

    துணை--(முதல் பகுத��)

    - 0 comments



    முருகேசன் பேருந்து நிலையத்துக்கு வந்து சேர்ந்தபோது மணி 8.அவன் போக வேண்டிய பேருந்து 9 மணிக்குத்தான்.அவன் எப்போதுமே இப்படித்தான்,குறிப்பிட்ட  நேரத்துக்கு  மிக முன்பாகவே தயாராகி விடுவான்.இதனாலேயே அவனை நண்பர்கள் முன்சாக்கிரதை முருகேசன் என்று அழைப்பார்கள்.


    பேருந்து நிலையத்துக்கு வந்ததும் உட்கார இடம் இருக்கிறதா எனப்பார்த்தான்.எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் இருந்தனர்.ஒரு இருக்கை அருகில் சென்று,பையைத் தன் இரு கால்களுக்கிடையே வைத்துக் கொண்டு நின்றான்.அவன் பார்வை சுற்றி வந்தது.தெரிந்த முகங்கள் எதுவும் காணப்படவில்லை.சீட்டு முன் பதிவு எதுவும் செய்யாத நிலையில் தனக்குப் பேருந்தில் உட்கார இடம் கிடைக்குமா என்ற கவலையில் இருந்தான்.


    சிறிது நேரம் சென்றது.


    "முருகேசன் சார்" என்ற குரல் கேட்டு இது வந்த திசையில் பார்த்தான். அவன் பணி புரியும் தொழிற்சாலையில் வேறு பிரிவில் இருக்கும்  சரவணன்,இரண்டு பெண்களுடன்  வந்து கொண்டிருந்தான்

    முருகேசன் அருகில் வந்த சரவணன்"எங்க சார்,சென்னைக்கா?"எனக் கேட்டான்.முருகேசன் ஆமாம் எனத்தலையாட்டியதும் "முன்பதிவு செய்து விட்டீர்களா?"எனக்கேட்டான்.

    "இல்லை.பேருந்து வந்த பின்தான் பார்க்க வேண்டும்"

    "ரொம்ப நல்லதாப்போச்சு"என்ற சரவணன் உடன் இருந்த  பெண்களைக் காட்டிச் சொன்னான் "இது என் மனைவி.அது அவ  தங்கச்சி ராணி.விடுமுறைக்காக வந்திருந்தா.இவளை இன்னைக்குச் சென்னையிலே கொண்டு போய் விடறதுக்காக பதிவு செய்திருந்தேன். திடீரென்று நாளைக்கு எனக்கு இங்கே முக்கியமான வேலை வந்துடுச்சு. என்னோட டிக்கட்டை என்ன செய்யலாம்,இங்க வந்ததும் யார் கிட்டயாவது  வித்துடலாமான்னு யோசிச்சுக் கிட்டே இருந்தேன். மச்சினிச்சிக்கு வேறே ராத்திரி நேரத்திலேதுணை இல்லாம அனுப்பறோமேன்னு கவலை.
    நல்ல வேளை நீங்க வந்தீங்க. என் டிக்கட்டை நீங்க எடுத்துக்குங்க. டிக்கட் பிரச்சினையும் தீர்ந்தது ;ஒரு நல்ல துணையும் கிடைத்தது."

    இரண்டு டிக்கட்டுகளையும் எடுத்து முருகேசனிடம் கொடுத்து ''நீங்களே ரெண்டையும் வச்சுக்குங்க.அடுத்தடுத்த சீட்தான்" என்று சொன்னான் சரவணன். முருகேசன் வாங்கிக்கொண்டு தன் டிக்கட்டுக்கான பணத்தைக் கொடுத்தான்.

    பேருந்து வந்தது .இருவரும் ஏறினர்.அந்தப்பெண்  சன்னலோர இருக்கையில் அமர்ந்துகொண்டு,தன் அக்காவிடம் பேச ஆரம்பித்தாள். அவன் பக்கத்து இருக்கை
    யில் மனமின்றி அமர்ந்தான்.

    பேருந்து புறப்பட்டது.அவன் அவளிடம் தனக்குச் சன்னலோர இருக்கையில்  அமராவிடில் பிரச்சினையாகும் என்று சொல்லி மாற்றிக் கொண்டான்.

    இரவு 12 மணி அளவில் ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்ற போது, நடத்துனர்,"வண்டி 5 நிமிடம் நிற்கும் " என்று சொல்லி விட்டு இறங்கிச் சென்றார்.அவள் அவனிடம் தண்ணீர் இருக்கிறதா எனக்கேட்டாள் அவனிடம் இல்லை.

    அவள் சொன்னாள்"போய் ஏதாவது குளிர்பானம் வாங்கி வாருங்களேன். ரொம்பத் தாகமாக இருக்கிறது"சொல்லியறே தன் கைப்பையிலிருந்து பணம் எடுத்தாள்.

    முருகேசனுக்கு எப்போதுமே பேருந்திலிருந்து இறங்கினால்,அது அவனை விட்டு விட்டுப் போய்விடுமோ என்ற பயம் உண்டு.அவனது பாதிக் கனவுகள் அது போன்றவைதான்.

    "இங்கெல்லாம் நல்ல பானங்கள் கிடைக்காதே.பஸ் புறப்பட்டு விட்டால் "என அவன் தயங்கியதைக் கண்ட அவள் தானே போய் வாங்கி வந்து அவனுக்கும் கொடுத்தாள்.அவனுக்கு வெட்கமாக இருந்தது.

    நடத்துனர் வந்தார்;பேருந்து புறப்பட்டது,சிறிது நேரத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டன.

    (தொடரும்)





    http://cmk-mobilesms.blogspot.com



  • http://oruwebsite-tamil.blogspot.com

  • [Continue reading...]

    நிச்சயமா “அது” இ���்லை!

    - 0 comments



    ஒரு சிறு விளக்கம். "துணை" முதல் பகுதிக்கு வந்த பின்னூட்டங்களைப் பார்க்கும்போது, நிறைய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருப்பதை உணர்கிறேன்.  இக் கதையில் , திருப்பங்களோ,'அது' போன்ற சமாசாரங்களோ கிடையாது.நான் தொடரும் போட்ட காரணம் அதிகமாகத்  தட்ட முடியவில்லை என்பதுதான்.இது வாழ்க்கையின் அபத்தங்களைக்  கூறும் ஒரு கதை .அவ்வளவே!எனவே எதையும் எதிர்பார்த்து ஏமாற வேண்டாம்!


    காலை முதல் கணினி தகராறு!திரையில் 'no signal input'  என்றே செய்தி வந்து கொண்டிருந்தது. பொறியாளரிடம் கூறினேன். மழைக்காலம் எனவே ram இல் ஈரம் படிந்திருக்கும்.துடைத்துப் போட்டால் சரியாகி விடலாம் என்று கூறி வருவதாகச் சொன்னார். நானே எடுத்துத் துணியால் துடைத்துப் போட்டேன். சரியாகவில்லை. பொறியாளர் வந்து  ram ஐ எடுத்து ரப்பரால் துடைத்து விட்டுப் போட்டார் .சரியாகி விட்டது!அவர் சரி செய்து விட்டுப் போகும்போது மணி மாலை 3.45.  மணி 4 முதல் 5 வரை மின்சாரம் துண்டிப்பு.5.30க்கு ஒரு  நிச்சயதார்த்தத்துக்குப் புறப்பட்டேன்.திரும்பி வீடு வந்து சேரும்போது மணி இரவு 8.இதற்கு மேல் யோசித்து,எண்ணங்களைச் சொற்களாகித் தட்டிப் பதிவேற்றுவதென்பது என்னால் இயலாத செயல். எனவே துணை நிறைவுப்பகுதி நாளைதான்.


    முடிக்கும் முன் சில  சிந்தனைகள்---


    1)பணம் மகிழ்ச்சியைத்தராது;ஆனால் ஒரு சைக்கிளின் மீது அமர்ந்து அழுவதை விட,ஒரு பென்ஸ் காரினுள் அமர்ந்து அழுவது வசதியாகத்தான் இருக்கும் !

    2)உன் எதிரியை மன்னித்துவிடு:ஆனால் அந்த அயோக்யனின் பெயரை மறக்காதே!

    3)கஷ்டத்தில் இருக்கும் ஒருவனுக்கு உதவி செய்;அவன் உன்னை நிச்சயம் நினைப்பான்,அவன் மீண்டும் கஷ்டப்படும்போது!

    4)பலர் இன்னும் உயிருடன் இருக்கக்காரணம் –அவர்களைக் கொல்வது சட்டப்படி குற்றமாகும்!

    5)மது எந்தப் பிரச்சினையையும் தீர்த்துவிடுவதில்லை;--பாலும்தான்!




    http://cmk-mobilesms.blogspot.com



  • http://oruwebsite-tamil.blogspot.com

  • [Continue reading...]

    படம் பாருங்கள்!ர���ியுங்கள்!சிரியுங்கள்!!

    - 0 comments


                                                       குழாயிலிருந்தே குடிக்கலாம்!

                                                   இப்படியும் குளிர வைக்கலாமா?!

                                                                     என்ன ஏரியா?!

          பிறக்கும்போதே லேப்டாப்!ஒரு வேளை ஒரு பிரபல பதிவரின்,என் இனிய நண்பரின், சிறுவயதுப் படமோ?!

                                                       வரலாறு காணாத கூட்டம்!!


     


    http://cmk-mobilesms.blogspot.com



  • http://oruwebsite-tamil.blogspot.com

  • [Continue reading...]

    நிழல் நிஜமாகிறத��!

    - 0 comments


    சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழ்த் திரைப்படம் வந்தது அதன் பெயர்- தமிழ் இல்லை, இந்தி—தோஸ்த்.ரகுவரன்,சரத்குமார் நடித்தது.அதில் இன்சூரன்ஸ் பணத்துக்காக ரகுவரன் ,சரத்குமாரால் கொல்லப்பட்டது போல் ஒரு நாடகம் போட சரத்குமாருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்படுகிறது. விடுதலையாகி வரும் சரத்,ரகுவரனைப் பார்த்துவிட்டு  உண்மையைப் புரிந்து கொண்டு கடைசியில் தண்டனை கொடுத்த நீதிபதி முன்பே ரகுவரனைக் கொன்று விடுகிறார்.கேள்வி-ஒரே குற்றத்துக்கு இரண்டு முறை தண்டிக்க முடியுமா?


      ஓரளவுக்கு இது போல் ஒரு நிகழ்ச்சி உ.பி யில் நடந்திருக்கிறது.ஒருவரைக் கொன்றதாக மூன்று பேருக்கு செஷன்ஸ் நீதி மன்றம் ஆயுள் தண்டனை  வழங்க மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதி மன்றம், தண்டனையை  உறுதி செய்தது. அவர்கள் தண்டனை பத்தாண்டுகள் முடிந்து விட்ட நிலையில்,கொலை செய்யப் பட்டதாகக்  கருதப்பட்ட நபர் உயிரோடு திரும்பி வந்து, தான் இத்தனை ஆண்டுகள் இமாசலப் பிரதேசத்தில் வேலை பார்த்து வந்ததாகச் சொல்லியிருக்கிறார்.இப்போது அவர்கள் ஜாமீனில்(!)  விடப்பட்டிருக்கின்றனர்.மூவரும் உச்ச நீதி மன்றத்தில் தலா ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

     கம்பிகளுக்குப் பின் கழித்து விட்ட பத்தாண்டுகளை யாராலாவது திருப்பித்தர இயலுமா? ஆயுள் தண்டனைக்குப் பதிலாக மரண தண்டனை கொடுத்திருந்தால்? போன உயிரைத் திருப்பி வரவழைக்க முடியுமா?மரணதண்டனை என்பது ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கு இந்த  ஒரு காரணம் போதாதா?

    சொல்லுங்கள்!





    http://cmk-mobilesms.blogspot.com



  • http://oruwebsite-tamil.blogspot.com

  • [Continue reading...]

    துணை-(நிறைவுப் பகுதி)

    - 0 comments


      தூங்கிக்கொண்டிருந்த ராணி திடீரென்று விழித்தாள்.அவள் காலில் ஏதோ ஊர்வது போல் இருந்தது.காலை உதறிக் கொண்டாள்.ஏதுவும் இல்லை.மீண்டும் இருக்கையில் சாய்ந்து  கொண்டாள். உடனே தூக்கம் வரவில்லை.சிறிது நேரம் கழித்து மீண்டும், காலில் ஏதோ உராய்வது தெரிந்தது.காலை முன்னே இழுத்துக் கொண்டாள்.சற்று நேரத்தில்  அவள் இடுப்பில்  கை படுவதை உணர்ந்தாள். திரும்பி முருகேசனைப் பார்த்தாள். தூங்கும் அவரை எழுப்ப வேண்டியதுதான்.
     

    "சார்,சார்," அவன் காதருகில் வாய் வைத்துக் கூப்பிட்டாள்.முருகேசன் விழித்துக் கொண்டு அவளைப் பார்த்தான்.


    "சார்,பின் சீட்டில இருக்கற ஆளு,காலை உரசரான்;இடுப்பில கை வைக்கிறான். கொஞ்சம் சத்தம் போடுங்க"


    முருகேசன் திகைத்தான்.இது என்னடா வம்பாப் போச்சு என யோசித்தான்.அவனுக்குப் பொதுவாகவே இந்த மாதிரிச் சண்டை போடுவதென்றால் பயம்.இப்போது அவள் சொல்லி விட்டாள்  .என்ன செய்வது .எழுந்து பின்னால் பார்த்தான்.அந்த மங்கிய ஒளியில் பொன்னம்பலம் போன்று ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டான்.அவன்
    தோளில் தட்டவும் அவன் இவனைப் பார்த்தான்.


    "சார், பொண்ணுமேலே கால் ,கையெல்லாம் படுதாம்.பார்த்து உக்காருங்க"
    என்று அவன் மெல்லச் சொல்லவும் அந்த ஆள் "ஏதோ தெரியாம பட்டிருக்கும் இதைப்போய்ப் பெரிசாச் சொல்ல வந்துட்டீங்க?" என்றுகேட்டான். முருகேசன் பேசாமல் உட்கார்ந்து  அவளைப் பார்த்து "நீங்க வேணா என் சீட்டுக்கு வந்துடுங்க" என்று சொன்னான்.


    "உங்களுக்கு அதெல்லாம் பிரச்சினையாச்சே?அதுவும் இவனுக்குப் பயந்து சீட்டை மாற்றுவதா?" எனச் சொல்லி விட்டு ஒரு முடிவுக்கு வந்தவளாக அமர்ந்தாள்.


    சிறிது நேரம் கழித்து அவன் மீண்டும் தன் வேலையை ஆரம்பித்தான்.ராணி எழுந்தாள்.சீட்டிலிருந்து வெளியே வந்தாள்;பின்னால் சென்று அவன் கன்னத்தில் ஒரு அறை விட்ட படியே"கண்டக்டர்.லைட்டைப் போடுங்க!"எனச் சத்தம் போட்டுச்  சொன்னாள்.

    நடத்துனர் என்னவோ எனப் பயந்து விளக்கைப் போட்டார்.இவளைப் பார்த்ததும் அருகில் வந்தார்.

    ராணி சொன்னாள்"இந்த ஆள் என் கிட்டே வம்பு பண்ணிக்கிட்டே வரான். அடுத்த ஊர் வந்ததும் போலிஸ்  ஸ்டேசனுக்குப் போங்க.ஒரு புகார் குடுக்கணும்."


    இதையெல்லாம் எதிர்பார்க்காத அவன் திகைத்துப் போய் அமர்ந்திருந்தான். மற்றப் பயணிகளும் எழுந்து வந்து விட்டனர்.பலருக்கு நேரம் ஆகிவிடுமே என்ற கவலை வந்து விட்டது.இந்த மாதிரி நேரத்தில் வீரம் காட்டும் ஓரிருவர்,தர்ம அடி போட்டனர். பின் அவளிடம் விடும்மா. போலிஸுக் கெல்லாம் போனாப் பிரச்சினை பெரிசாயிடும்  எனச் சொல்லி விட்டு,கண்டக்டரிடம் அவனை இடம் மாற்றி அமர்த்தும் படிசொல்லி விட்டு,அவளையும் சமாதானப் படுத்தினர்.


    பின் பயணம் தொடர்ந்தது.


    அந்த முழு நிகழ்வின் போதும் முருகேசன் பிரமித்துப் போய்
    உட்கார்ந்திருந்தான்.


    மீதிப் பயணம் வேறு எதுவும் நிகழ்வின்றிக் கழிந்தது.பேருந்து காலை நிலையத்தை அடைந்தது.தாம்பரத்திலேயே அந்த ஆள் இறங்கி விட்டான்.நிலையத்தில் முருகேசனும். ராணியும் கீழே இறங்கினர்.அவர்கள் இறங்கியவுடன் அருகில் வந்த பெரியவரைப் பார்த்து 'அப்பா' எனக் கூப்பிட்ட ராணி,முருகேசனிடம்,"என் அப்பா "என அறிமுகம் செய்து வைத்தாள்.



     பின் தன் அப்பாவிடம் சொன்னாள்"அத்தான் என்னைத் தனியா அனுப்பணுமேன்னு கவலைப்பட்டுக் கிட்டேஇருந்தாங்க.நல்ல வேளையா சார் வந்தார். சார் பேர் முருகேசன்.அத்தானோடுதான் வேலை பார்க்கிறார். அத்தான் சொன்ன படி எனக்கு ஒரு நல்ல வழித்துணையாக இருந்தார்.பயமே இல்லாமல் இருந்தது" என்றாள்.


    அவர் முருகேசனிடம்"ரொம்ப நன்றி சார்.வீட்டுக்கு அவசியம் வாங்க" எனச் சொல்லிப் புறப்பட்டார்.


    ராணியும்" ரொம்பத் தாங்க்ஸ் சார்" என புன்முறுவலோடு சொல்லி விட்டு அப்பாவுடன் சென்றாள்.


    முருகேசன் அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றான்.
                        ----------------------------------------------------

    கதை முடிந்தது.பலரது எதிர் பார்ப்புகள் பொய்த்துப் போயிருந்தால் நான்   பொறுப்பல்ல! :)).இது ஒரு "இருத்தலியல்" வகையைச் சேர்ந்த சிறுகதை எனச்    சொல்லிக் கொள்ளத்தான் ஆசை.இதில் வாழ்க்கையின் முரண்களின் மீதான ஒரு எள்ளல் இருக்கிறது அவ்வளவே.உங்கள் கருத்தை, எதுவாயிருப்பினும். கூறுங்கள்.





    http://cmk-mobilesms.blogspot.com



  • http://oruwebsite-tamil.blogspot.com

  • [Continue reading...]

    கலாநிதி மாறன் குடும்பத்தோடு பின்லாந்து போனதின் மர்மம் என்ன?

    - 0 comments
     
     
     
    குடும்பத்தோடு சன் டிவி குழும தலைவர் கலாநிதி மாறன் திடீரென பின்லாந்து கிளம்பிப் போய் விட்டார். சிபிஐ விசாரணை வளையத்தின் கீழ் உள்ள நிலையில் அவர் குடும்பத்தோடு பின்லாந்து போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
     
    ஏர்செல் நிறுவனம் சிவசங்கரன் வசம் இருந்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திடம் அதை விற்று விடுமாறு கலாநிதி மாறனும், அப்போது தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த கலாநிதியின் தம்பி தயாநிதி மாறனும் நிர்ப்பந்தித்ததாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும், ஏர் செல் நிறுவனத்திற்கு 2ஜி உரிமங்களை வழங்காமல் தயாநிதி மாறன் இழுத்தடித்தார் என்பதும் சிபிஐ வைத்துள்ள குற்றச்சாட்டு. வேறு வழியில்லாமல் மலேசிய நிறுவனத்திடம் ஏர்செல்லை சிவசங்கரன் விற்ற பின்னர் படு வேகமாக அந்த நிறுவனத்திற்கு 2ஜி உரிமங்களை தயாநிதி மாறன் வழங்கினார். இதற்குப் பிரதியுபகாரமாக மேக்சிஸ் நிறுவனம் சன் டைரக்டர் நிறுவனத்தில் ரூ. 629 கோடி அளவுக்கு முதலீடுகளைச் செய்தது.
     
    இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதையடுத்து தயாநிதி மாறன் தனது பதவியை ராஜினாமா சதெய்தார். இந்த வழக்கில் தயாநிதி மாறன், ஆஸ்ட்ரோ ஆல் ஏசியா நிறுவனம், மேக்சிஸ் நிறுவனம் ஆகியவற்றின் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கலாநிதி மாறனும் குற்றம் சாட்டப்பட்டோரில் ஒருவர் ஆவார்.
     
    இந்த வழக்கை படு தாமதமாக தாக்கல் செய்த சிபிஐ இன்னும் தாமதமாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் குடும்பத்தினரின் வீடுகள், அலுவலங்கள், சன் டிவி அலுவலகம் ஆகியவற்றில் ரெய்டுகளை நடத்தியது. இந்த நிலையில், கலாநிதி மாறன் தனது மனைவி காவேரி, மகள் காவியா ஆகியோருடன் திடீரென பின்லாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். தனி விமானத்தில் சென்ற இவர்கள் தங்களுடன் பெருமளவில் லக்கேஜ்களையும் கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
     
    நேற்று அதிகாலையில் இந்த விமானம் சென்னையை விட்டுக் கிளம்பியுள்ளது. துபாய் போய் அங்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டு அங்கிருந்து பின்லாந்து போயுள்ளது.
     
    திடீரென கலாநிதி மாறன் பின்லாந்து கிளம்பிப் போயிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை வளையத்தின் கீழ் உள்ள நிலையில், இன்னும் விசாரணைக்கு அழைக்கப்படாமல் உள்ள நிலையில் அவர் குடும்பத்தோடு பின்லாந்து போயிருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
     
    அவர் சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதால் வெளிநாடு போவதாக இருந்தால் சிபிஐயிடம் அனுமதி வாங்கிய பின்னர்தான் செல்ல முடியும். ஆனால் அவர் அனுமதி பெற்றாரா என்பது தெரியவில்லை. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
     
    விசாரணையிலிருந்து தப்புவதற்காகவே கலாநிதி மாறன் வெளிநாடு போய் விட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. எப்படி ஐபிஎல் ஊழல் விவகாரத்தில் விசாரணைக்கு வராமல் லண்டனில் உட்கார்ந்தபடி லலித் மோடி டேக்கா கொடுத்துக் கொண்டிருக்கிறாரோ அதேபோல கலாநிதி மாறனும் செய்வாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
     
    மேலும் பின்லாந்து நாட்டுடன் இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான எந்த ஒப்பந்தமும் இல்லை. எனவே ஒருவேளை பின்லாந்தில் கலாநிதி மாறன் தங்கி விட்டால் அவரை அங்கிருந்து கொண்டு வருவது மத்திய அரசுக்குப் பெரும் சவாலானதாக இருக்கும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
     
    கலாநிதி மாறன் ஓய்வுக்காக போயிருக்கிறாரா அல்லது ஒரேயடியாக அங்கு போய் விட்டாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.



    [Continue reading...]

    பிரபாகரன் மீது ஆணையாக ....: பதவியேற்பு விழாவில் பரபரப்பு

    - 0 comments
     
     
     
    உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பதவி ஏற்பின் போது கடவுள் மீது ஆணையாக என்றும், தங்களின் குலதெய்வத்தின் மீதோ அல்லது விரும்பிய தெய்வத்தின் பெயரிலோ, அல்லது தாங்கள் சார்துள்ள அரசியல் கட்சியின் தலைவரின் பெயரிலோ சத்தியம் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள்.
     
    பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் உளமார என்று உறுதி கூறி பதவி ஏற்ப்பார்கள். ஆனால் நாம் இதுவரையிலும் கேட்காத ஒரு தலைவரின் பெயரில், அதாவது நம் நாட்டிலேயே இல்லாத, அரசியல் கட்சி நடத்தாத ஒரு இராணுவ அமைப்பை நடத்தி வந்த விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரனின் பெயரில் பதவி ஏற்றுள்ளார். யார் இவர் என்று பார்ப்போம்.
     
     
    பழனி நகராட்சியின் 1வது வார்டு அ.தி.மு.க கிளைக் கழக செயலாளராகவும், பழனி நகர எம்.ஜி.ஆர் மன்ற துணை தலைவராகவும் இருப்பவர் சோலை கேசவன். இவருக்கு வயது 55. தீவிர அ.தி.மு.க கட்சிக்காரரான இவர், பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பத்திரபதிவு அலுவலகத்தின் அருகில் பத்திரம் எழுதி வருகிறார்.
     
     
    கடந்த 2001 உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க சார்பில் பழனி நகராட்சி 1வது வார்டு உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2006 தேர்தலில் அதே வார்டில் போட்டியிட்டு தோற்றுப்போனார். இந்த முறை அ.தி.மு.கவின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போனதால், சுயேச்சையாக போட்டியிட்டு அ.தி.மு.க வேட்பாளரை காட்டிலும், 120 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
     
     
    கடந்த 25ம் தேதி நகர மன்ற உறுப்பினராக பதவி பிரமானம் எடுக்கும் போது, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் வளர்த்து உருவாக்கப்பட்ட, உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவரான தம்பி பிரபாகரன் அவர்களின் விடுதலை வேட்கையின் மீது ஆணையாக நான், எனக்கு வாக்களித்த மக்களுக்கும், இந்த நாட்டுக்கும், நாட்டின் இறையாண்மைக்கும் கடமை தவறாமல் பணியாற்றுவேன் என்று உறுதி கூறுகிறேன் என்று பிராமானம் எடுத்துள்ளார்.
     
     
    உங்களுக்கு எப்படி பிரபாகரன் மீது இவ்வளவு பற்றுதல் என்று சோலை கேசவனிடம் கேட்டோம்..?
     
     
    1980-86 ஆண்டுகளில், ஈழ விடுதளைப்போர் துவங்கிய காலகட்டங்களில், தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தான் பிரபாகரனை வளர்த்தார். பிரபாகரனின் தாய் எம்.ஜி.ஆர்... தந்தை இந்திராகாந்தி. இவர்களின் வளர்ப்பால் தான் அந்த இயக்கம் நம் தமிழினத்துக்கு விடுதலையும், தனி நாடும் என்னுடைய வாழ்நாளிலேயே வாங்கி கொடுக்கும் என்று நம்பியிருருந்தேன்.
     
     
    ஆனால், சோனியா என்ற ஒருவரால் என்னைப் போன்ற கோடான கோடி தமிழ் மக்களின் கணவும், விருப்பமும் நாசமாய் போனது. எப்படி போனாலும் பிரபாகரனின் விடுதலை வேட்கை ஒருக்காலும் தோற்காது. அது நம் இனத்துக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும், எம்.ஜி.ஆர் அவர்களின் எந்த திட்டமும் தோற்றது கிடையாது. அவரால் வளர்க்கப்பட்ட, வழிகாட்டப்பட்ட யாரும் தோற்கவும் மாட்டார்கள்.
     
     
    இன்றில்லை... நாளை நிச்சயம் தமிழீழம் மலரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு... பிரபாகரன் அதை செய்து முடிப்பார். அவரது விடுதலை வேட்கை பலம் மிகுந்தது. அந்த விடுதலை வேட்கையை நானும் நம்புகிறேன், அதனால் தான் நான் பிரபாகரனின் விடுதலை வேட்கையின் மீது ஆணையாக பதவி ஏற்றுக்கொண்டேன் என்று கூறுகிறார்.
     
     
    உங்களைப்போலவே உலகத்தமிழர்கள் பலரும் நம்புகிறார்கள்.



    [Continue reading...]

    சிவாஜி பேரன் கல்யாணம்- திரையுலகம் வாழ்த்து

    - 0 comments
     
     
     
    நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் துஷ்யந்த் திருமணம் சென்னையில் இன்று நடந்தது. அதில் திரையுலகினர் பலர் திரளாக கலந்து கொண்டு வாழ்த்தினர்.
     
    துஷ்யந்த்தும் முன்பு நடிகராக இருந்தவர்தான். மச்சி, சக்சஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது சிவாஜி பிலிம்ஸ் நிறுவனப் பொறுப்பில் இருக்கிறார்.
     
    துஷ்யந்த்துக்கும் சென்னையைச் சேர்ந்த அபிராமிக்கும் திருமணம் நிச்சயமானது. இவர்களின் திருமணம் இன்று மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
     
    திருமணத்தில் திரையுலகினர் பலர் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
     
    முன்னதாக நேற்று நடந்த திருமண வரவேற்பில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு துஷ்யந்த், அபிராமியை வாழ்த்தினார். அப்போது சசிகலாவும் உடன் இருந்தார்.



    [Continue reading...]

    ஏழரை அறிவு - நமீத�� விமர்சனம்

    - 0 comments




    ஏழாம் அறிவு இசை வெளியிட்டு விழாவில் அதன் இயக்குனர் முருகதாஸ்,

    "இந்த படம் வந்தால் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு கர்வம் வரும். அந்த கர்வம் தலைக்கேறி நீங்கள் இறந்து விடவும் வாய்ப்புண்டு" என சொன்னார்.

    அப்போதே என் நரம்புகள் எல்லாம் புடைத்து லேசாய் ஒரு கர்வம் என் மனதுக்குள் நெளிந்தது.

    அதனால் தீபாவளி அன்று குளித்து முடித்ததும் அம்மா செய்த லட்டுகளில் இரண்டை எடுத்து அவசர அவசரமாய் வாயில் போட்டு கொண்டு சத்யம் தியேட்டரை நோக்கி ஓடினேன். தமிழர் மறந்த பெருமையை அறிய பத்து ரூபாய் டிக்கெட் ஒன்றை வாங்கி கொண்டு உள்ளே சென்றேன்.

    படம் ஆரம்பித்தது. போதி தர்மரை பற்றி விளக்கி கொண்டே ஒரு டாகுமெண்டரி ஓடியது. சூர்யா காவி வேட்டியை கட்டி கொண்டு பாவாடை சாமியார் போன்ற தோற்றத்தில் எதோ சித்து வேலைகளை செய்து கொண்டிருந்தார்.  தூக்கம் கண்ணை கட்டிக்கொண்டு சொக்கியது. முடியவில்லை.

    சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தால், ஜடையை எல்லாம் கட் செய்துவிட்டு தாடியை ட்ரிம் செய்து பேண்ட் சர்ட் அணிந்து, வாரணம் ஆயிரம் கெட்டப்பில் சூர்யா ஒரு டிவி சேனலுக்கு, தான் தினமும் மஞ்சள் போடுவதால்தான் தன் முக அழகு கூடியது என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.

    சரி எதோ சொல்ல வர்றார்ன்னு நிமிர்ந்து எழுந்து உட்கார்ந்தால் படத்தை முடிச்சிட்டாங்க. ரொம்ப நேரம் தூங்கி எல்லாத்தையும் மிஸ் பண்ணிட்டோமா? தமிழர் பெருமையை பற்றி தெரியாம இன்னிக்கு வீட்டுக்கு போக கூடாதுன்னுட்டு அடுத்த ஷோவில் ஒரு டிக்கெட் எடுத்து மறுபடியும் வந்து உட்கார்ந்தேன்.

    இந்த தடவையும் தூங்கிட கூடாதுன்னு பக்கத்தில் இருக்கிறவரிடம் சொல்லி அடிக்கடி என்னை கிள்ளிக் கொண்டே இருக்க சொன்னேன்.

    டாகுமெண்டரி முடிந்து அயன் பாதியாகவும் வாரணம் ஆயிரம் பாதியாகவும் படம் போனது. நடுநடுவில் மானே, தேனே, டி.என்.ஏ என்று ஷ்ருதி உளறி கொண்டிருந்தார்.

    ஒரு Genre விலிருந்து இன்னொரு Genre விற்கு திடீர் திடீரென தாவுவது நம் ஆட்களால் மட்டும் முடியும் காரியம்.

    கொஞ்ச நேரம் வரலாற்று படம்
    கொஞ்ச நேரம் விஜய் படம்.
    கொஞ்ச நேரம் Sci - Fi


    எல்லா பாடல்களிலும் நாயகி ஷ்ருதியை விட சூர்யாவே திறந்த மார்புடன் அதிகம் கவர்ச்சி காட்டுகிறார். பெண் ரசிகர்களை தியேட்டருக்கு வரவைக்க "சூர்யாவின் அதிரடி கவர்ச்சியில் ஏழாம் அறிவு" என்று நாளிதழில் விளம்பரம் கொடுக்கலாம். சோகப் பாட்டுக்கெல்லாம் நன்றாக விஜய் மாதிரி டான்ஸ் ஆடுகிறார்.

    இன்னும் இருபத்தி நாலு மணி நேரங்களில் 
    இன்னும் நாலு மணி நேரங்களில்
    இன்னும் இரண்டு நொடிகளில் 

    என்று ஏழாம் அறிவு படத்திற்கு செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுவது போல இவர்கள் Count Down போட்ட அலம்பல்கள் சாதாரண பாமரனால் கூட ஜீரணிக்க முடியாது.

    அவனவன் அவதார் போன்ற படங்களை எடுத்து அமைதியாக வெளியிடுகிறான். ஆனால் இந்த கொசுக்கள் ஒரு படத்தை எடுத்து விட்டு வந்து நம் காதில் போடும் சத்தங்கள் தாள முடியவில்லை.

    முருகதாஸை ராக்கெட்டுடன் கட்டி செவ்வாய்க்கு அனுப்பி, அங்கு வாழும் வேற்றுகிரக வாசிகளுக்கு (?) தமிழரின் பெருமையை உணர்த்த செய்யலாம்.

    நமீதா டச்: ஏழாம் அறிவு - தமிழர்களுக்கு ஏழரை.

    இப்படத்தின் மூலம் இயக்குனர் நோக்கு வர்மம் செய்து நம்மை கொல்கிறார்.

    அவசியம் மிஸ் பண்ணாமல் இந்த படத்தை பாருங்கள். நாம் மறந்து போன தமிழ் உணர்வை நம்முடைய டி.என்.ஏ வை தூண்டி விடுவதன் மூலம் மீண்டும் கொண்டு வந்து இயக்குனரும் தயாரிப்பாளரும் கல்லா கட்டுகின்றனர்.



    http://girls-tamil-actress.blogspot.com



  • http://tamilhot.blogspot.com

  • [Continue reading...]

    சென்னையில் ஒரு ம���ைக்காலம் - ஆபாயி���் (அப்படியே சாப்���ிடுங்க)

    - 0 comments




    சென்னை பெங்களூருவாக மாறி விட்டது.

    "இங்கிருக்கிற பொண்ணுங்க எல்லாம் ரொம்ப அழகாவும், மாடர்ன் ஆகவும் மாறிட்டாங்களா?" என்று கேட்காதிர்கள்.

    அதிகமாய் மழை பெய்வதால், பகலிலேயே குளிர்கிறது.

    வெய்யில் காலத்திலேயே சாயங்காலம் வெளியே சென்று சூடாய் நாலு பஜ்ஜியை உள்ளே தள்ளி தண்ணியை குடிக்கும் நம்ம ஆளுங்களுக்கு இப்போது சொல்லவே வேண்டாம்.

    இந்த குளிரில் ஆபிஸ் போகவே தோன்றவில்லை. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கு.

    பாதைஎல்லாம் பள்ளமாக மாறி பருவ பெண்ணை பார்க்கும் வயசு பையனை போல பல்லிளிக்கிறது. மழை காலம் முடிந்த பிறகு அம்மாவிடம் மனு போட்டு இன்னொரு உள்ளாட்சி தேர்தல் நடத்த சொல்ல வேண்டும்.

    Shoe போட்டு கொண்டு ஆபிஸ் செல்பவர்களின் நிலைமை படு திண்டாட்டம். சில இடங்களில் முட்டியளவு தண்ணீர் நிற்கிறது. பாவாடை அணிந்திருந்தால் எளிதாய் தூக்கி பிடித்துக்கொண்டு கடந்து விடலாம்.

    இந்த மாதிரி நேரங்களில், நமது அரசு கிரியேடிவ் ஆன போட்டிகள் நிறைய வைத்து பரிசு கொடுத்து மக்களை குஷி படுத்தலாம்.

    • ஒரு பள்ளத்தில் கூட விடாமல் வண்டியை ஓட்டுவது.
    • ரோட்டில் உள்ள பள்ளத்தை தாண்டும் Long Jump. 
    • தேங்கி உள்ள நீரில் நீச்சல் போட்டி மற்றும் படகு போட்டி.

    இன்னும் என்ன மாதிரி போட்டி வைக்கலாம்? என நீங்களும் கமெண்டில் சொல்லலாம்.

    நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே சென்னையில் வாழ முடியும்.

    ஆனால் இந்த கொட்டும் மழையில், சிட்டியில் சில பேர் மட்டுமே சந்தோசமாய்  வண்டியோட்டி செல்ல முடியும்.

    அவர்கள் ஆட்டோகாரர்கள்.



    தமிழ் சினிமாவில் பாட்டே இல்லாமலும், ஒரே ஒரு பாட்டுடனும் நிறைய படங்கள் வந்து விட்டது.

    தமிழ் சினிமாவை முன்னுக்கு கொண்டுவர முக்கி கொண்டிருக்கும் இயக்குனர்களாக அறியப் படும் செல்வராகவன், முருகதாஸ் போன்றோர் ஏன் இன்னும் தயங்குகிறார்கள்?

    இன்னும் எத்தனை நாளுக்கு தான் கூடுவாஞ்சேரியில் கனவு கண்டு நியூயார்க்கில் போய் டூயட் பாடுவது? பின்னால் வெள்ளையர்களை சேர்த்து கொண்டு ஆடும் பாலிவுட் காய்ச்சல் இன்னும் கோலிவுட்டை விடவில்லை.

    சமீப காலங்களில் திரையரங்கில் பாடல் வரும் போதெல்லாம், "ஐயோ பாட்டு போட்றாதிங்க" என்று மக்கள் அலறும் சத்தம் அதிகரித்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் நம் இயக்குனர்கள் இதை கேட்காமல் ஜடமாக இருப்பது தான் ஆச்சர்யம்.

    படம் முடிந்தவுடன் பாடல்களை தனியாய் போடலாமே. இஷ்டம் உள்ளவர்கள் பார்க்கட்டும். தம் அடிக்க செல்பவர்கள் டீ கடையில் போய் தம் அடிக்கட்டும்.




    டெக்னாலஜி வளர்ந்த நாடுகள் எடுக்கும் Sci-Fi படங்களை மட்டுமே நம்மால் நம்ப முடிகிறது. அமெரிக்காவில் 4G, Automatic driving, வீடுகளில் உள்ள செக்யூரிட்டி கன்ட்ரோல் என்று பல விதங்களில் அவர்கள் நமக்கு ஒரு decade முன்னதாக போய் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் இன்னும் 2G ஊழலே முடியவில்லை.

    நம் நாட்டில் தற்போது என்ன காலாச்சாரம், டெக்னாலஜி உள்ளது என்று அறிந்து அதை வைத்து படம் எடுத்தால் தான் ஒரிஜினலாக இருக்கும்.

    நம்மூரில் முக்கால்வாசி ட்ராபிக் சிக்னல்கள் Manual ஆகத்தான் Operate செய்யப் படுகின்றன. அப்படி இருக்கையில் நம் நாட்டில் உள்ள ட்ராபிக் சிக்னல்களை ஒரு லேப்டாப் வைத்துக் கொண்டு ஹாக் (Hack) செய்வது போன்று படத்தில் காண்பிப்பதை பார்க்கையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டு தான் சிரிக்க தோன்றுகிறது. திரையரங்கில் பார்க்கையில் அப்படி செய்ய முடியாது என்பதும் வருத்தம்.



    நம் இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள். சயின்ஸ் வளர்ந்த பிறகு Sci-Fi  படங்களை எடுங்கள். அதுவரை உங்கள் அறிவு திறமைகளை எங்கேயாவது பரணில் ஒளித்து வையுங்கள். அல்லது மதுரையை சுற்றியோ அல்லது தென்காசியை சுற்றியோ பனைமரத்தடியில் கேமராவை தூக்கி சென்று படம் எடுத்து கொண்டிருங்கள்.

    தான் நினைத்த கதைக்கு சரியான டெக்னாலஜி இல்லை என்ற காரணத்தினால் பத்து வருடத்திற்கு மேலாக காத்திருந்தாரே அவதார் இயக்குனர் ஜேம்ஸ் காமருன், அவர் தான் உண்மையான படைப்பாளி.

    சும்மா மொக்கையாக எதோ எழுதி, ஹிட்ஸ் வரவேண்டும் என்ற காரணத்திற்க்காக, அந்த பதிவை உடனடியாக வெளியிடும் என்னை போலவே நம் இயக்குனர்களும் இருக்கிறார்கள்.




    எங்கள் வீட்டில் பெண் தேடும் படலம் மும்முரமாய் போய் கொண்டிருக்கிறது என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். அஷ்டம சனி அந்த சனி இந்த சனி என்று என் அப்பா கோவில் கோவிலாய் என்னை அலைகழிக்கும் போதெல்லாம் எனக்கு கடவுளின் மேல் வெறுப்பு அதிகரிக்கிறது.

    போன வாரம் என் அப்பா எனக்கு கால் செய்து "ஒரு பெண் ஜாதகம் வந்திருக்கு. பொண்ணு எஸ்.ஐ ஆக வேலை பார்க்குது. ஓகே வா?" அப்படின்னு கேட்டார்.

     எனக்கு "ராமன் தேடிய சீதை" படத்தோட கிளைமாக்ஸ் ஞாபகம் வந்தது.

    "வேண்டாம்ப்பா அதெல்லாம் நமக்கு ஒத்து வராது" என்று சொல்லிவிட்டேன்.

    இப்போது தமிழ் நாட்டில் ஏகப்பட்ட ராமன்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். சீதையை கண்டுபிடிப்பதற்குள் அவர்களுக்கு நடிகர் சேரனின் வயசு ஆகிவிடுகிறது. எங்கள் ரூமில் நாங்கள் மூன்று ராமன்கள்.

    என்னோட சீதை எங்கே இருக்கிறாளோ? தெரியவில்லை.



    இங்கிருந்து Onsite செல்லும் நம் IT யில் பணி புரியும் ஆண்கள் சில பேர் அங்கு சென்றதும் பெண்களாகி விடுகிறார்கள். கிட்டதட்ட Onsite என்பது அவர்களுக்கு புதுசாக கல்யாணம் ஆகி செல்லும் மாமியார் வீடு போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அது அவர்களுக்கு சந்தோசத்தையும் பயத்தையும் ஒருசேர ஏற்படுத்துகிறது.

    அவர்கள் பொதுவாய் செய்யும் வேலைகள் சில 
    • சாப்பாடு செய்வது, பாத்திரம் கழுவுவது
    • அழுகை சீரியல், தமிழ் மொக்கை படங்கள் ஒன்று விடாமல் பார்ப்பது.
    • இந்தியாவில் இருக்கும் நண்பர்களிடம் கால் செய்து கதற கதற மொக்கை போடுவது
    • அடிக்கடி குடும்பத்தினருக்கு கால் செய்து குசலம் விசாரிப்பது.

    வாசல் தெளித்து கோலம் மட்டும் போட முடியாது அவர்களால்.




    http://girls-tamil-actress.blogspot.com



  • http://tamilhot.blogspot.com

  • [Continue reading...]

    வேலாயுதம், 7ம் அறிவு எது பெஸ்ட்?

    - 0 comments
     
     
    இம்முறை தீபாவளியை தித்திப்பாக கொண்டாட வெளிவந்துள்ள இரு பிரமாண்ட திரைப்படங்கள், விஜயின் 'வேலாயுதம்', சூர்யாவின் '7ம் ஆறிவு'.
    தீபாவளிக்கு முதல் நாளே, இந்தியா, மலேசியா சிங்கப்பூர், மாத்திரமல்லாது ஐரோப்பிய நாடுகளில் பலவற்றிலும் படத்தின் பிரிமியர் ஷோ காண்பிக்கப்பட்டதால், இதுவரை படம் பார்த்த ரசிகர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற சில ஹாட் விமர்சனங்கள் இவை!
    ரோபோ சத்தியா (மாத்தி யோசி பேஸ்புக்) பக்கத்திலிருந்து...
    சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடித்த 'ஏழாம் அறிவு' பற்றி

    16வது நூற்றாண்டிலிருந்து ஆரம்பமாகும் படம், ஆச்சரியத்தக்க காட்சி அமைப்புடனும், போதிதர்மனின் வாழ்க்கை பற்றிய கதையுடனும் நகர்கிறது. முதல் பாதியின் இரண்டாவது பகுதி முழுவதும் கொஞ்சம் தொய்வு! பொருந்தாத பாடல்களும், சுமாரான காதல் காட்சிகளும் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். ஆனால் இடைவேளைக்கு 30 நிமிடம் முதல் தொடங்கும் ஸ்கிரீன் பிளே, கிளைமேக்ஸ் காட்சி வரை போட்டு தாக்குகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இந்த ஆராய்ச்சி முயற்சிக்காக சல்யூட் அடிக்கலாம். இது சூர்யாவின் படமல்ல. சூர்யாவின் பக்கபலம், கடின உழைப்புடன் உருவாகியுள்ள பக்கா முருகதாஸின் திரைப்படம். ஸ்ருதி ஹாசனிடமிருந்து இவ்வளவு அழகான பெர்மோஃபன்ஸ் எதிர்பார்த்திருக்க முடியாது.

    ஹரிஸ் ஜெயராஸ் இசையில் இன்னும் என்ன தோழா, மற்றும் யெம்மா யெம்மா பாடல்கள் மாத்திரம், ஸ்கோர் பண்ணுகிறது. பின்னணி இசை, ஏ.ஆர்.ரஹ்மானிடம் கொடுத்திருந்தால் போட்டுத்தாக்கியிருப்பார்.

    எல்லாரையும் விட கிங் என்றால் அது டோங் லீ தான். ஹிப்னோத்திக் மண்டையனாக ஒவ்வொரு காட்சியிலும் தூள் கிளப்புகிறார். எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் போது, நல்ல சினிமாவை விரும்புவர்களுக்கு இப்படம் பிடிக்கும். தமிழனுக்கு பெருமை சேர்க்கும் படமாக அமையும்!

    ஆனால் படத்தின் பிரிமியர் ஷோ பார்த்த மலேசிய ரசிகர்கள் சிலரிடமிருந்து படத்திற்கு எதிர்மறையான காமெண்டுக்கள் குவிகின்றன. படம் 'மொக்கை',முருகதாஸின் படமா என நம்பவே முடியவில்லை, கிளைமேக்ஸ் காட்சியில் ஹரிஸின் பின்னணி இசை சொதப்பல் என்கிறார்கள்.
    ஒருவேளை அனைத்து தரப்பினரையும் கவரும் காமர்ஷியல் ஹிட்டாக இருக்கவில்லை என்பதும் வெற்றியின் காரணியை தீர்மானிக்கும் போல.

    மறுபக்கம் விஜயின் வேலாயுதத்துக்கு சல்யூட் காமெண்ட் அடித்து தொடக்கி வைத்திருக்கிறார் ஜெயம் ரவி.

    தனது டுவிட்டர் பக்கத்தில், 'ஹாட்ஸ் ஆஃப் விஜய் னா.. இதுவரை வெளிவந்ததில் விஜயின் பெஸ்ட் பெர்மோஃபென்ஸ், வேலாயுதம் + விஜய் : வெற்றி தான் என அனல் பறக்க' டுவிட் அடித்திருக்கிறார்.

    காமெடியும், கிளைமேக்ஸ் காட்சியும் அசத்தல் என்கிறார்கள் மேலும் சில விஜய் ரசிகர்கள்!

    ஆக இம்முறை தீபாவளி, தமிழ் திரை ரசிகர்களுக்கு நல்ல விருந்து தான். ஆனால் இந்த ரேஸில் அதிக வசூலை குவிக்க போவது எது?, தீர்மானிக்க போவது நீங்கள் தான் என்பதால் பதிலையும் உங்களிடமே விட்டு விடுகிறோம். இரு படங்களையும் பார்த்துவிட்டீர்கள் என்றால் உங்கள் கருத்துக்களையும் காமெண்டுக்களில் தெரிவியுங்களேன்!
    [Continue reading...]

    ஜின்னா மேடத்திட��் கோத்தபாயவும் விழுந்துவிட்டார்?

    - 0 comments


    கொள்ளுப்பிட்டியில் உள்ள தொடர்மாடி வணிக வளாகத்தில் 6 வது மாடியில் இரகசியமாக விபச்சார விடுதி நடத்திவந்த ஜின்னா மேடம் கைதானது யாவரும் அறிந்ததே. உள்ளூர் மற்றும் வெளியூர் பெண்களை வைத்து உயர்ந்த மனிதர்கள் மட்டும் செல்லக்கூடிய வகையில் அந்த விபச்சார விடுதி அமைந்திருந்தது.

    கொழும்பில் உள்ள பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெரும் புள்ளிகள் என அனைவரும் அங்கே செல்வது வழக்கம். கோத்தபாயவின் சிறப்பு உத்தரவின் பேரில் இவ்விடுதி பொலிசாரல் முற்றுகையிடப்பட்டது. காரணம் கோத்தபாயவுக்கே வெளிச்சம். அப்போது 14 பெண்களோடு சேர்ந்து கைதான ஜின்னா மேடத்தை இதுவரை பொலிசார் நன்றாகவே நடத்தி வருகின்றனர். இவரை விடுதலை செய்யச் சொல்லி அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மட்டத்தில் இருந்து பல அழுத்தங்கள் வந்தவண்ணம் உள்ளதாம். ஆனால் இப்போது கதை வேறு விதமாகப் போகிறது.

    அதாவது விபச்சார விடுதி வழக்கில் சிக்கிய ஜின்னா மேடத்தை அவ்வழக்கில் போடாது அவர் கைதாகும் போது சிறுத்தையின் தோலை வைத்திருந்தார் என்று பொலிசார் கூறியுள்ளனர். ஆஹா இது என்ன புதுக்கதை என்று கேட்கிறீர்களா? ஆம் இப்ப பொலிசார் கூறுகிறார்கள் அவர் அனுமதியின்றி சிறுத்தையின் தோலை வைத்திருந்தார் என்று. அதற்கு மிக மிக குறைந்த பட்ச தண்டனை தான். ஆனால் விபச்சார விடுதி ஒன்றை நடத்தினார் என்று சொன்னால் அதற்கான தண்டனை என்னவென்று அனைவருக்கும் தெரியுமல்லவா.

    தற்போது இந்த வழக்கு திசைமாறிப் போகிறது. ஜின்னா மேடத்திடம் கோத்தபாயவும் விழுந்துவிட்டார் போலும்.

    அதிர்வு

    http://kannottam.blogspot.com



  • http://kannottam.blogspot.com

  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger