‘திவ்யா வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது’: இளவரசனின் தந்தை சொல்கிறார் elavarasan unfulfilled desire father speech
இளவரசன் கடைசியாக எழுதிய கடிதத்தில் நான் இறந்த பிறகு திவ்யா என்னை பார்க்க வருவார் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் நேற்று உடல் அடக்கத்தில் அவர் கலந்து கொள்ளாததால் இளவரசனின் கடைசி ஆசை நிறைவேறவில்லை.
நத்தம் காலனியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செல்லன்கொட்டாயை சேர்ந்த திவ்யாவை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார் இளவரசன். இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7–ந்தேதி திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது நடந்த பிரச்சினை காரணமாக திவ்யா தனது தந்தையின் இறுதிசடங்கில் பங்கேற்கவில்லை. பின்னர் பிரச்சினைகள் முடிந்து மீண்டும் திவ்யா தனது கணவர் இளவரசனுடன் தர்மபுரியில் வசித்து வந்த நிலையில் திடீரென அவருடன் செல்ல மறுத்து விட்டார்.

