Sunday 14 July 2013

திவ்யா வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது

- 0 comments

‘திவ்யா வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது’: இளவரசனின் தந்தை சொல்கிறார் elavarasan unfulfilled desire father speech 

 

இளவரசன் கடைசியாக எழுதிய கடிதத்தில் நான் இறந்த பிறகு திவ்யா என்னை பார்க்க வருவார் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் நேற்று உடல் அடக்கத்தில் அவர் கலந்து கொள்ளாததால் இளவரசனின் கடைசி ஆசை நிறைவேறவில்லை.
நத்தம் காலனியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செல்லன்கொட்டாயை சேர்ந்த திவ்யாவை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார் இளவரசன். இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7–ந்தேதி திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது நடந்த பிரச்சினை காரணமாக திவ்யா தனது தந்தையின் இறுதிசடங்கில் பங்கேற்கவில்லை. பின்னர் பிரச்சினைகள் முடிந்து மீண்டும் திவ்யா தனது கணவர் இளவரசனுடன் தர்மபுரியில் வசித்து வந்த நிலையில் திடீரென அவருடன் செல்ல மறுத்து விட்டார்.
[Continue reading...]

பெரியாறு அணையில் நீர்மட்டம் குறைகிறது periyar dam water level decrease

- 0 comments

பெரியாறு அணையில் நீர்மட்டம் குறைகிறது periyar dam water level decrease

 

கேரளாவில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியல் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக நீர்மட்டமும் உயர்ந்தது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயத்திற்கு முதல்போக சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை.

அவ்வப்போது சாரல்மழை மட்டுமே பெய்து வருகிறது. இன்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.50 அடியாக இருந்தது.

அணைக்கு நீர்வரத்து 1132 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 1372 கனஅடியாகவும் இருந்தது. கொள்ளளவு 3519 மி.கனஅடியாகும். வைகை அணையின் நீர்மட்டம் 49.80 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 871 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 60 கனஅடியாகவும் இருந்தது. கொள்ளளவு 1967 மி.கனஅடியாகும்.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 22 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 8 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 8 கனஅடியாகவும் இருந்தது. கொள்ளளவு 22.52 மி.கனஅடியாகும்.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 27,88 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை. நீர் வெளியேற்றம் 3 கனஅடி. கொள்ளளவு 5.41 மி.கனஅடியாகும்.

தேக்கடியில் மட்டும் 2.2 மி.மீ மழை பதிவானது. மற்ற பகுதிகளில் வெயில் அடித்து வருகிறது. தொடர்ந்து மழை குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டம் குறையுமோ என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.  

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger