Tuesday 15 October 2013

அனுஷ்காவை வெட்கப்பட வைத்த பாடல்! Anushka special news

- 0 comments

அனுஷ்காவை வெட்கப்பட வைத்த பாடல்!

by admin
TamilSpyToday,
தமிழில் 'நான் ஈ' படத்தை இயக்கிய ராஜமௌலி தெலுங்கில் இயக்கி வரும் படம் 'ராணி ருத்ரம்மா தேவி'. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் ராணி ருத்ரம்மா தேவி வேடத்தில் அனுஷ்கா நடித்து வருகிறார்.

இப்படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகளில் அதிரடிக் காட்சிகளை இயக்குனர் படமாக்கினார். இந்த காட்சிகளில் நடிப்பதற்காக ஆயுதம் மற்றும் தற்காப்பு கலைகளை கற்று, நடித்து வந்தார் அனுஷ்கா. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் பாடல் மற்றும் கிளுகிளுப்பான காட்சிகளை படமாக்கி வருகிறார் ராஜமௌலி.

இதற்காக பிரம்மாண்ட அரண்மனை போன்று செட் போடப்பட்டு, அதில் அனுஷ்கா ஆடிப்பாடும் அந்தப்புர பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் கவர்ச்சி மிகுதியாகவும், அதேவேளையில் தத்ரூபமாகவும் இருப்பதற்காக ஆடைகளை குறைத்து நகைகளை மட்டுமே கொண்டு உடம்பை மறைத்தபடி காட்சியை படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.

இந்த காட்சியை படமாக்கும்போது ஒட்டுமொத்தப் படக்குழுவும் நின்று அனுஷ்காவின் அழகை வேடிக்கை பார்த்ததால் வெட்கத்தில் கூனிக்குறுகி போய்விட்டாரம் அனுஷ்கா. அந்த காட்சியில் நடிக்க ரொம்பவே தயக்கம் காட்டினாராம். அதன்பிறகு இயக்குனர் வேடிக்கை பார்த்த படக்குழுவினரை வெளியே அனுப்பிவிட்டு இயக்குனர், கேமராமேன் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே அந்த காட்சியை படமாக்கினார்களாம். அதன்பிறகு அந்த பாடல் காட்சியில் தைரியமாக நடித்தாராம் அனுஷ்கா.

Show commentsOpen link

[Continue reading...]

காதல் தகராறில் பள்ளி தோழனை குத்திக்கொன்ற இந்திய வம்சாவழி மாணவன் கைது Indian american student arrested for killing high school friend

- 0 comments

அமெரிக்கா: காதல் தகராறில் பள்ளி தோழனை குத்திக்கொன்ற இந்திய வம்சாவழி மாணவன் கைது Indian american student arrested for killing high school friend
Tamil NewsToday,

வாஷிங்டன், அக். 16-

அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவழி வாலிபரான ராகுல் குப்தா (24) ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயோமெடிக்கல் படித்து வந்தார்.

அவரது பிறந்த நாளையொட்டி வாஷிங்டனின் புறநகர் பகுதியான மேரிலாண்டில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் ராகுல் குப்தா மது விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.

தங்கள் வீட்டின் அருகே கூச்சலும், கூக்குதலும் கேட்பதாக மேரிலேண்ட் பகுதியில் வசிக்கும் ஒரு பெண் கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை போலீசாருக்கு தகவல் அளித்தார்.

விரைந்து வந்த போலீசார் அங்குள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் கத்திக்குத்துகளுடன் கிடந்த பிணத்தையும் ஒரு வாலிபரையும் கைது செய்தனர்.

அந்த வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட மார்க் எட்வர்ட் வாக் என்பவன் தன்னுடன் விர்ஜினியாவில் உள்ள லேங்லி பள்ளியில் ஒன்றாக படித்தவன் என்றும் தனது காதலியும் அவனும் சேர்ந்து தனக்கு துரோகம் செய்து விட்டதாகவும் தெரிவித்தான்.

இதனால், தனது பிறந்தநாள் மதுவிருந்தின் போது இருவருக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டதாகவும் தன்னை வாக் கத்தியால் குத்த வந்ததாகவும், அந்த கத்தியை பறித்து அவனை குத்திக் கொன்றதாகவும் ராகுல் குப்தா வாக்குமூலம் அளித்தான்.

இதனையடுத்து, போலீசார் அவனை கைது செய்தனர்.
...
Show commentsOpen link

[Continue reading...]

இரகசியமாக படம்பிடிக்கப்பட்ட அனுஷ்காவின் முதலிரவுக் காட்சி! Anushka first night scene

- 0 comments

இரகசியமாக படம்பிடிக்கப்பட்ட அனுஷ்காவின் முதலிரவுக் காட்சி!

by abtamil
Tamil newsYesterday,

குணசேகரின் ருத்ரம்மாதேவி படத்தில் அனுஷ்கா நடித்து வருகிறார். 3D யில் இப்படம் தயாராகி வருகிறது.

காகத்தியா வம்சத்தில் வந்த 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இளவரசி ருத்ரம்மாதேவியை பற்றிய கதை இது. அனுஷ்கா ருத்ரம்மாதேவியாக நடித்துள்ளார். சமீபத்தில் சில காட்சிகள் ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் படமாக்கப்ப்டது. முக்கியமாக அனுஷ்காவின் முதலிரவுக் காட்சியும், ஒரு பாடல் காட்சியும்.

இதற்காக அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தோட்டா தரணியின் கைவண்ணத்தில் பிரமாண்டமான அரண்மனை அரங்கும், வண்ணமயமான அந்தப்புரமும் அமைக்கப்பட்டது. முதலிரவுக் காட்சியை படமாக்கப்பட்ட போது படத்தின் இயக்குனர் குணசேகர், கேமராமேன் அஜய் வின்சென்ட் இருவரைத் தவிர மற்றவர்கள் அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அனுஷ்காவுடன் நடிகர் ராணாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மகேஷ் பாபுக்கு கெஸ்ட் ரோல். இளையராஜா இசையில் உருவான பாடலை அந்தப்புர அரங்கில் படமாக்கினர். அனுஷ்காவுடன் சாரா ஷா, நடாலியா கவுர் ஆகிய இருவரும் நடனமாடினார்கள். நடனத்தை அமைத்தவர் ராஜு சுந்தரம்.

இந்தப் படத்துக்காக குதிரையேற்றம், வாள் பயிற்சி என பல சண்டைகளை அனுஷ்கா படப்பிடிப்புக்கு முன்பே பயிற்சி செய்தார் என்பது முக்கியமானது.

Show commentsOpen link

[Continue reading...]

டெல்லி தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றும்: கருத்து கணிப்பில் தகவல் Survey opts BJP to capture more seats in Delhi polls

- 0 comments

டெல்லி தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றும்: கருத்து கணிப்பில் தகவல் Survey opts BJP to capture more seats in Delhi polls

Tamil NewsToday,

புதுடெல்லி, அக்.16-

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

ஆளும் காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் பா.ஜ.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

தேர்தலின் முடிவு எப்படி இருக்கும்? என்பது தொடர்பாக கடந்த 9ம் தேதியில் இருந்து 12ம் தேதி வரை சுமார் 4 ஆயிரம் வாக்காளர்களிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

இந்த கருத்து கணிப்பு முடிவுகளின் படி, 34 சதவீதம் வாக்குகளை பெற்று பா.ஜ.க. 28 இடங்களை கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.

15 சதவீதம் வாக்குகளை பெறும் ஆம் ஆத்மி கட்சி 18 இடங்களில் வெற்றி பெறலாம் என்றும் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் வெற்றிபெறும் எனவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாவிட்டால் பா.ஜ.க.வுக்கு மேலும் 15 சதவீதம் ஓட்டுகள் கிடைக்கும் எனவும் கருதும் வாக்காளர்களில் 32 சதவீதம் பேர் டெல்லி முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகிக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

ஷீலா தீட்சித் மீண்டும் முதல் மந்திரியாக 27 சதவீதம் பேரும், பா.ஜ.க.வின் சார்பில் விஜய் கோயல் முதல் மந்திரியாவதற்கு 27 சதவீதம் பேரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

18-23 வயதுக்குட்பட்ட முதன்முறை வாக்காளர்கள் தற்போதைய முதல் மந்திரி ஷீலா தீட்சித்தின் நிர்வாகத்தின் மீது அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இந்த கருத்து கணிப்பு முடிவின் நிலவரங்கள் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் வேட்பாளரை பொருத்து மாறக்கூடியவை எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
...
Show commentsOpen link

[Continue reading...]

சாதுவின் கனவில் ‘1000 டன் தங்கப்புதையல்’: உ.பி. அரண்மனை வளாகத்தை தோண்டுகிறது அரசு sadhu dreams 1000 tonnes gold treasure

- 0 comments

சாதுவின் கனவில் '1000 டன் தங்கப்புதையல்': உ.பி. அரண்மனை வளாகத்தை தோண்டுகிறது அரசு sadhu dreams 1000 tonnes gold treasure

Tamil NewsToday,

உன்னாவ், அக். 15-

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள டான்டியா கேரா கிராமத்தில் 19-ம் நூற்றாண்டின் அரண்மனை ஒன்று பாழடைந்த நிலையில் உள்ளது. ராவ் ராம் பக்ஸ் சிங் ஆட்சி செய்த இந்த அரண்மனைக்குள் 1000 டன் தங்கம் புதைக்கப்பட்டிருப்பது போன்று தனக்கு கனவில் தெரிந்ததாக யோகி சுவாமி ஷோபான் சர்க்கார் என்ற சாது கூறியுள்ளார். இதுதொடர்பாக மத்திய வங்கிக்கு அவர் கடிதம் எழுதியிருக்கிறார்.

இதையடுத்து இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, டான்டியா கேரா கிராமத்திற்கு தொல்பொருள் ஆய்வாளர்கள் குழுவை அனுப்பியிருக்கிறது. அவர்கள் வெள்ளிக்கிழமை அரண்மனை வளாகத்தை தோண்டி தங்கள் ஆய்வுப் பணியை தொடங்க உள்ளனர்.

இந்த அரண்மனையில் புதையுண்டு கிடக்கும் தங்கத்தை அரசு கைப்பற்றினால், பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியா மீண்டு வருவதற்கு உதவியாக இருக்கும் என்று சாது தெரிவிக்கிறார்.

1000 டன் தங்கம் இருப்பதாக கண்ட சாதுவின் கனவு பலித்தால், ஓராண்டுக்கு இறக்குமதி செய்யும் தங்கத்திற்கு இணையாக இருக்கும்.

அரண்மனைக்கு பின்புறம் இரண்டு இடங்களில் தலா 100 சதுர மீட்டர் அளவுக்கு பள்ளம் தோண்ட தொல்பொருள் ஆய்வுக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எனினும், அந்த மண்ணில் புதையல் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று ஆய்வுக்குழு தலைவர் மிஷ்ரா தெரிவித்தார்.
...
Show commentsOpen link

[Continue reading...]

சென்னை சென்ட்ரலில் இருந்து ஒடிசாவிற்கு இன்று ஏசி சிறப்பு ரெயில் இரவு 9.30 மணிக்கு புறப்படுகிறது Chennai central to Orissa AC special train today start

- 0 comments

சென்னை சென்ட்ரலில் இருந்து ஒடிசாவிற்கு இன்று ஏசி சிறப்பு ரெயில் இரவு 9.30 மணிக்கு புறப்படுகிறது Chennai central to Orissa AC special train today start

சென்னை, அக். 15–

ஒடிசா மாநிலத்தை 'பைலின்' புயல் தாக்கியதை அடுத்து கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. பஸ், ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து ஒடிசா மாநிலத்திற்கு செல்லக்கூடிய 4 ரெயில்கள் நேற்றும், இன்றும் ரத்து செய்யப்பட்டது.

சென்ட்ரலில் இருந்து கோரமண்டலுக்கு இன்று காலை ரெயில் புறப்பட்டு சென்றது. அந்த ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் தவித்தனர்.

அங்கு நிவாரணப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதால் படிப்படியாக ரெயில் போக்குவரத்து சீரடைந்து வருகிறது.

ஒடிசா மாநிலத்திற்கு செல்லக்கூடிய மக்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்து வருவதை அறிந்து தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில் ஒன்று அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து புவனேஸ்வருக்கு இந்த ரெயில் (எண். 02829) இரவு 9.30 மணிக்கு புறப்படுகிறது. சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது.

இந்த ரெயில் நாளை இரவு 7 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயிலில் அனைத்து பெட்டிகளும் ஏ.சி. பெட்டிகளாகும். 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிகள்–10, 2 அடுக்கு குளிர்சாதன பெட்டிகள்–4 இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ரெயில் கூடூர், ஒங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், பலசா, பெர்காப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

...

shared via

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger