Tuesday 16 August 2011

பிரிட்டன் இளைய ச���ுதாயத்தை மீட்க ��ில வாரங்களில் புதிய கொள்கைகள்: டேவிட் கேமரூன்

- 0 comments


சோம்பேறித் தனம், பொறுப்பற்ற தன்மை, சுயநலம் ஆகியவற்றின் பிடியில் சிக்கியுள்ள பிரிட்டன் இளைய சமுதாயத்தை மீட்கவும், ஒழுக்கம் உள்ள சமுதாயமாக ஆக்கவும் இன்னும் சில வாரங்களில் புதிய கொள்கைகள் வகுக்கப்படும்' என பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் சமீபத்தில் உருவான கலவரம் நான்கே நாட்களில் நாடு முழுவதும் பரவியது. இச்சம்பவங்களில் இதுவரை இளைஞர்கள், இளம்பெண்கள் உட்பட 1,700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவங்களில் நடந்த திருட்டுகள், கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்முறைகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதேநேரம், ஏழை பணக்காரர் வித்தியாசமே இந்த கலவரங்களுக்குக் காரணம் என வலியுறுத்தும் சமூக நிபுணர்கள், கைது செய்யப்பட்டோருக்கு சிறைத் தண்டனை அளிக்கும் பட்சத்தில் அவர்கள் சமூகத்துக்கு மேலும் கேடு செய்வோராக மாறவே வாய்ப்புகள் அதிகம் எனவும் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கேமரூன் கூறியதாவது:இந்தக் கலவரங்கள் நமக்கு ஓர் எச்சரிக்கை மணி. பிரிட்டனின் தற்போதைய இளைய சமுதாயம், சோம்பேறித் தனம், பொறுப்பற்ற தன்மை, சுயநலம் ஆகியவற்றின் பிடியில் சிக்கியுள்ளது.

நடந்த முடிந்த கலவரங்கள் பணத்திற்காக நடக்கவில்லை. கலவரக்காரர்களில் பெரும்பான்மையோர் தகப்பன் இல்லாத சூழலில் வளர்ந்தவர்கள். அல்லது முன்னுதாரணமான ஆண் ஆளுமையைத் தெரிவு செய்து வளராதவர்கள்.ஏன் இவர்கள் இவ்வளவு மோசமாக நடந்து கொண்டனர்? அவர்களை வீட்டில் கவனிக்க ஆள் இல்லாமல் இருந்திருக்கலாம்.அதனால் அவர்கள் தங்கள் மீதான கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம். இந்த மோசமான குணங்களில் இருந்து அவர்களை மீட்டு, ஒழுக்கம் உள்ளவர்களாக ஆக்க சில நடவடிக்கைகள் தேவை.

அமைச்சரவையின் இரு மூத்த அமைச்சர்கள் இன்னும் சில வாரங்களில் இளைய சமுதாயத்தின் ஒழுக்க நெறிகளுக்கான புதிய கொள்கைகளை வகுப்பர். அவற்றில், 16 வயதில் உள்ள அனைவருக்கும் தேசிய மக்கள் சேவை பயிற்சி அளிக்கப்படும்.

இதன் மூலம் அவர்களுக்குப் போதுமான உடற்பயிற்சியும், சமூகத்தில் கலந்து பழகுவதற்கான பயிற்சியும், மக்களுக்கு உதவிகள் செய்வதற்கான பயிற்சியும் அளிக்கப்படும்.இது மட்டுமின்றி, கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படும் 1,20,000 குடும்பங்களின் குறைகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும். இதன் மூலம் அக்குடும்பங்களின் இளைய தலைமுறையினர் கல்வியில் நாட்டம் செலுத்த வழி வகுக்கப்படும்.

அரசியல்வாதிகள், ஒழுக்கம் பற்றிய கருத்துகளை வெளிப்படுத்துவதில் அதீத எச்சரிக்கையுடன் இருக்கின்றனர். தங்கள் பெயர் கெட்டு விடுமோ என்றோ அல்லது நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் நம்மை எதிர்ப்பரே என்று பயந்தோ எது சரி எது தவறு என்று வெளிப்படையாகச் சொல்வதற்குத் தயங்குகின்றனர். புதிய மனித உரிமைகள் மசோதா விரைவில் கொண்டு வரப்படும். அதன் மூலம் மனித உரிமைகளை தங்கள் வசதிக்கேற்ப திரிக்கும் போக்கு தடுத்து நிறுத்தப்படும்.இவ்வாறு கேமரூன் தெரிவித்தார்.


http://video-news-tamil.blogspot.com




  • http://video-news-tamil.blogspot.com


  • [Continue reading...]

    தமிழர் தாயகப் பக���திகளில் வெடிக்கும் போராட்டங்கள��!

    - 0 comments


    மர்ம மனிதர்களின் தொல்லையினைக் கண்டித்து இன்று காலை முதல் மு.ப.11.00மணிவரை மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட குறிஞ்சாமுனையில் பிரதான வீதியை மறித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மு.ப. 11 மணிவரை வீதிப் போக்குவரத்து அனைத்தும் துண்டிக்கப்பட்டது. தொடர்ச்சியாக இரவில் இனந்தெரியாத மர்ம மனிதர்கள் வருவதாகவும் வீடுகளுக்குள் புகுவதாகவும் பெண்களை குறிவைத்து பலாத்காரத்தில் ஈடுபட முயற்சிப்பதாகவும் இதனால் தாம் அச்சத்துடன் வாழ்வதாகவும் இரவில் நித்திரை கொள்ள முடியதுள்ளதாகவும் தெரிவித்தனர்.

    இதனால் தங்களது பிள்ளைகளின் கல்வி பாதிப்பதாகவும் பரீட்சை எழுதும் மாணவர்கள் பரீட்சைக்கு தயார்படுத்த முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் ஆகியோரிடம் தங்களுக்கு வவுணதீவுப் பொலிஸ் மீது நம்பிக்கையில்லை எனவே பொலிஸ் நிலையத்தை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இலங்கைத் தீவில் மர்ம மனிதனுக்கு எதிராக தொடர்ந்தும் தமிழ் மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

    பொலிஸாரே இரவில் தமது வீடுகளுக்குள் புகுந்து தொல்லை கொடுப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதற்குப் பதிலழித்த பாராளுமன்ற ஊறுப்பினர்கள் பொலிஸாரே பொதுமக்களின் பாதுகாப்பினை மேற்கொள்ள வேண்டும். சட்டத்தையும் ஒழுங்கையும் அவர்களே பாதுகாக்க வேண்டும்.

    பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவர்களுடையது. எனவே பொலிஸ் நிலையத்தை அகற்றுவதற்கு பதிலாக இப்போது இருக்கும் பொலிஸாரை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோர முடியும் என தெரிவித்தனர். இதனையடுத்து பொது மக்கள் தற்போது சேவையில் உள்ளவர்களை இடமாற்றி பொறுப்பு வாய்ந்த தமிழ் அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதிர்வு

    http://video-news-tamil.blogspot.com




  • http://video-news-tamil.blogspot.com


  • [Continue reading...]

    மரணதண்டனையிலிருந்து நம்மவர் உயி���் மீட்போம்!: நாடுகடந்த தமிழீழ அரச���ங்கம்

    - 0 comments


    முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தம் மீதான மரணதண்டனையினை சிறைத் தண்டனையாக மாற்றுமாறு விடுத்த வேண்டுகோளை இந்தியக் குடியரசுத் தலைவர் வெகுகாலம் தாண்டிய நிலையில் நிராகரித்துள்ளார் என்ற செய்தி, அதுவும் அவர்கள் சிறையிடப்பட்டு 20 ஆண்டுகள் தாண்டிய பின்னர் கருணை மனு கையளிக்கப்பட்டு 11 வருடங்கள் கடந்த பின்னர் இவ்வேண்டுகோளை நிராகரித்துள்ளார் என்ற செய்தி நம்மையெல்லாம் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

    மரணதண்டனை மானிட தர்மத்துக்கு முரணானது. அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களின் முக்கிய அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகிய வாழ்வுரிமைக்கு (right to live) எதிரானது.

    இவ்விடத்தில் மரணதண்டனை அடிப்படை மனித உரிமைக்கு எதிரானதென்பதால் மரணதண்டனையானது அரசுகள் மேற்கொள்கின்ற படுகொலை என்றே கருதப்பட வேண்டுமென்ற அனைத்துலக மன்னிப்புச் சபையின் கூற்று மிகவும் அர்த்தம் பொதிந்தது.

    ஐக்கிய நாடுகள் பொதுச்சபைத் தீர்மானமொன்று மரணதண்டனையைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டியதென அரசுகளைக் கோரியிருந்தமையும் இங்கே கவனத்துக்குரியது.

    உலக நாடுகள் 193ல் இன்று மரணதண்டனை முற்றாக ஒழிக்கப்பட்டோ அல்லது நடைமுறைப்படுத்தப் படாமலோ இருப்பதென்பதும் 58 நாடுகளில் மட்டுமே மரணதண்டனை நடைமுறையில் பயன்படுத்தப்படுகிறது என்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    உலக அரங்கில் நீதி வழங்கப்படும் நடைமுறையிலிருந்து மரண தண்டனை முற்றாக ஒழிக்கப்பட வேண்டுமென உலகெங்குமிருந்து எழும் குரல்களோடு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னை இணைத்துக் கொள்வதுடன் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இம் மூவரது மரண தண்டனையினை சிறைத் தண்டனையாக மாற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மனிதாபிமான, சட்ட அடிப்படையில் உடனடியாக மேற்கொள்ளும்படி இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசியல் சமூகத்தினையும் மரணதண்டனைக்கு எதிராகக் குரல்கொடுக்கும் அனைத்துலக சமூகத்தினையும் கோரி நிற்கிறது.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கு மிகவும் அரசியல் மயப்பட்ட நிலையில் நடற்தேறிய ஒரு வழக்கு. இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தடா சட்டத்தின் கீழ் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை என்றே முதன் முதலில் தீர்ப்பு வழங்கப்பட்டமை இவ் வழக்கின் அரசியல் தன்மையினை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியது.

    பின்னர் தமிழ் உணர்வாளர்களது ஆதரவுடன் உச்ச நீதிமன்றில் நடைபெற்ற சட்டப்போரின் விளைவாக இக் குற்றம் தடா சட்டத்துக்குட்பட்ட பயங்கரவாதக் குற்றமல்ல என்பது வெளிப்படுத்துப்பட்டதுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 19 பேருக்கு முழு விடுதலை அளிக்கப்பட்டு எஞ்சிய 7 பேரில் நால்வருக்கு அந்நேரம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரில் ஒருவரான நளினியின் மரணதண்டனை மனிதாபிமான அடிப்படையில் ஏற்கெனவே சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டபோது ஏனைய மூவரின் மரணதண்டனையும் அவ்வாறு மாற்றப்படுமெனவே எதிர்பார்க்கப்பட்டது.

    இந் நிலையில் தான் இந்திய உள்துறை அமைச்சின் பரிந்துரையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் மரணதண்டனையினை உறுதி செய்திருப்பது எமக்கெல்லாம் மிகவும் கவலையளிக்கிறது.

    மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பவர்களின் குரலாக பேரறிவாளன் வெளிப்படுத்தியுள்ள கருத்து இந்திய மற்றும் தமிழ்நாட்டு மக்களதும் உலக சமுதாயத்தினதும் மிகுந்த கவனத்துக்குரியது. 'நாம் கோருவதெல்லாம் உயிர்ப்பிச்சையல்ல. மறுக்கப்பட்ட நீதியினையே' என அவர் மிகத் தெளிவாகத் தமது உரிமைக் குரலை வெளிப்படுத்தியுள்ளார்.

    இவ் விடயத்தில் மூன்று தளங்களில் இவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். வெகுவாக அரசியல் மயப்பட்ட நிலையில் இவ் வழக்கு நடைபெற்றமை இவ் வழக்கில் இவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டதற்கு அடிப்படையாக அமைந்தது. இது இவர்களுக்கான நீதி மறுக்கப்பட்ட முதலாவது தளம் ஆகும்.

    தடா சட்டத்தின் கீழ் இவர்கள் உயர் நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்வதற்கான உரிமை மறுக்கப்பட்டமை இரண்டாவது தளமாகும்.

    இதேவளை 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு – ஒரு ஆயுட்தண்டனைக் காலத்துக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து விட்ட இவர்களுக்கு - இவ்வளவு காலம் தாழ்த்தி மரணதண்டனையினை உறுதி செய்துள்ளது நீதி மறுக்கப்படும் மூன்றாவது தளம் ஆகும்.

    இவ்வாறு மிகவும் காலம் தாழ்த்தி மரண தண்டனையினை நடைமுறைப்படுத்துவது மனித உயிரினை இழிமைப்படுத்தும் செயலெனவும் நீண்ட சிறைப்படுத்தலின் பின்னர் ஒருவரைத் தூக்கிலிடுவது அருவருக்கத்தக்க செயலெனவும் பிரித்தானிய பிரிவி கௌன்ஸில் 1993ல் தீர்ப்பளித்தது இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.

    இத்தகையதொரு பின்புலத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன் சாந்தன் ஆகியோரின் மரணதண்டனையினை ரத்துச் செய்யும் வகையில் இந்திய உள்துறை அமைச்சகம் தமது பரிந்துரையினை இந்தியக் குடியரசுத் தலைவருக்கு மீள வழங்க வேண்டும் என நாம் இந்திய அரசைக் கோருகிறோம்.

    ஈழத் தமிழ் மக்கள் மீது முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து சிறிலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலைக்கு இந்திய அரசும் துணைநின்றது என்ற ஆழ்ந்ததொரு துயரும் காயமும் தமிழீழம், தமிழ்நாடு முதற்கொண்டு அனைத்து உலகத் தமிழ் மக்கள் மத்தியிலும் உண்டு.

    இதனைக் கவனத்திற் கொண்டும் ஏற்கெனவே நொந்து போயிருக்கும் மக்களின் மனஉணர்வுகளுக்கு மதிப்பளித்தும் இம் மூவருக்குமான மரணதண்டனையினை ரத்துச் செய்யும் முடிவினை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகிறோம்.

    இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 161 ன் கீழ் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முடிவின் அடிப்படையில் தமிழக ஆளுனராலும் மரணதண்டனையினை ரத்துச் செய்வதற்கான பரிந்துரையினை வழங்க முடியும்.

    உலகத் தமிழ் மக்களின் உணர்வுகளையும் உரிமைக்குரலையும் பிரதிபலித்து நிற்கும் தமிழக முதலமைச்சர் இவ் விடயத்தில் தலையிட்டு மரணதண்டனையினை ரத்துச் செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும் எனவும் கோரி நிற்கிறோம்.

    இவற்றை விட மரணதண்டனையினை நிறைவேற்றுவதற்கு எதிரான தடை உத்தரவினை நீதிமன்றத்தின் ஊடாக பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது ஆதரவினை வழங்கி நிற்கிறது.

    மரணதண்டனைக்கெதிராக உலகில் செயற்படும் மனித உரிமை அமைப்புக்களின் கவனத்தினை இவ் விடயம் நோக்கித் திருப்பி இம் மரண தண்டனைகளுக்கெதிரான அனைத்துலக உணர்வலைகளைத் தட்டியெழுப்புவதற்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஈழத் தமிழ் மக்களது ஆதரவோடு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

    இம் மரணதண்டனைகளுக்கெதிராக இந்திய தமிழ்நாடு அரசுகளுக்கும் மனிதஉரிமை அமைப்புக்களுக்கும் தமது உணர்வுகளை உடனடியாக வெளிப்படுத்துமாறு உலகத் தமிழ் மக்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டி நிற்கிறது.

    நன்றி

    விசுவநாதன் ருத்ரகுமாரன்
    பிரதமர்
    நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

    http://video-news-tamil.blogspot.com




  • http://video-news-tamil.blogspot.com


  • [Continue reading...]

    மரண தண்டனைக்கு எ���ிரான மக்கள் இயக��கம் (காணொளி இணைப��பு)

    - 0 comments


    ராஜீவ் கொலை வழக்கில் பொய்குற்றம் சாட்டப்பட்டு இருபத்தொரு ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணைமனு நிராகரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து, "மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம்" சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர்கள் சேரன், அமீர், கௌதமன், புகழேந்தி தங்கராஜ், சிபிச்சந்திரன், ஓவியர் வீர சந்தானம், ஓவியர் மருது, விடுதலை ராஜேந்திரன், பேராசிரியர் சரஸ்வதி, மருத்துவர் எழிலன், திருமுருகன், வழக்கறிஞர் ரஜினிகாந்த், டிவி.எஸ்.எஸ்.மணி, கவிஞர் இன்குலாப், மீனவர் அமைப்பைசார்ந்த மகேஷ், சீதையின் மைந்தன் மற்றும் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.









    http://video-news-tamil.blogspot.com




  • http://video-news-tamil.blogspot.com


  • [Continue reading...]

    தமிழர்களுக்கு ப��டிக்காத டாப் ஃபைவ் வார்த்தைகள்

    - 0 comments


    மற்ற மொழியினரை விட , அன்றாட வாழ்வில் அதிக வார்த்தைகள் பயன்படுத்துவது தமிழர்கள்தான்.. காரணம் மற்ற மொழியினர் அவரவர் தாய் மொழியில் பேசுவார்கள்.. நம்மவர்கள் தமிழ் , ஆங்கிலம் என இரண்டிலும் -அரைகுறையிலாவது -பேசுவார்கள்.

    இப்படி பேசினாலும் இவர்கள் ஐந்து வார்த்தைகளை பயன் படுத்துவதே இல்லை என்பது வியப்பூட்டும் ஒன்று.. இதை பலர் உற்று கவனித்து இருக்க வாய்ப்பில்லை..எனவே பொது நலன் கருதி , தமிழர்களுக்கு பிடிக்காத ஐந்து வார்த்தைகளை தொகுத்து தருவதில் பிச்சைக்காரன் டாட் பிலாக்ஸ்பாட் டாட் காம் பெருமைப்படுகிறது....


    1 ஆச்சர்யப்படுத்திய வார்த்தை

    சில ஆண்டுகளுக்கு , என் வாழ்வில் முதன் முதலாக  ஒரு வெளினாட்டு தூது குழுவினருடன் அலுவலக பணிக்காக ஒரு விருந்தில் கலந்து கொண்டேன். அப்போதுதான் இப்படி ஒரு வார்த்தை இருப்பதே எனக்கு தெரிய வந்தது..

    ஆனால் ஏன் இந்த வார்த்தையை பயன் படுத்துகிறார்கள்.. இதன் அர்த்தம் என சரியாக புரியவில்லை.. பிறகு ஒருவரிடன் கேட்டு அர்த்தம் தெரிந்து கொண்டேன்...

    sorry என்றால் வருந்துகிறேன் என அர்த்தமாம்.. அவர்கள் எதற்கெடுத்தாலும் வருத்தப்ப்டுவது புதுமையாக இருந்தது...  தெரியாமல் மேலே உரசிவிட்டால்., பேச்சின் போது இடையூறு ஏற்படும் நிலை உருவாக்கினால், சொன்ன நேரத்தை விட இரண்டு நிமிடங்கள் தாமதமாக வந்தால் என அவர்கள் வருத்தம் தெரிவிப்பது , ஆச்சரியமாக இருந்தது.. நம் ஊரில் , கூட்ட்டதில் நடக்கும்போது யார் மீதாவது மோதினால் , எருமை மாடு போல செல்வோமே தவிர வருதம் தெரிவிக்க மாட்டோம்...

    நாம் பயன்படுத்தாத வார்த்தை - சாரி, வருந்துகிறேன்

    டிப்ஸ் - இந்த வார்த்தையை அவ்வபோது பயன்படுத்தி பாருங்கள்...  மற்றவர்களை ஆச்சர்யப்படுத்தலாம்..

    எசாரிக்கை - அதிகமாக இதை பயன்படுத்தாதீர்கள்.. உங்களை பலவீனமானவராக நினைத்துக்கொள்வார்கள்

    2 . நன்றி மறந்த தமிழன்
     இந்த வார்த்தையை , சென்ற தலை முறையினர் பயன்படுதுவதில்லை.. இப்போது பரவாயில்லை... இளம் தலைமுறையினர் பயன்படுத்துகிறார்கள்.. தேங்க்ஸ் - நன்றி என்பதே அந்த வார்த்தை...  முன் பின் தெரியாதவருக்கு , ஒரு சிறிய உதவி செய்திருப்பீர்கள்... அவர் அதை அலட்சியமாக ஏற்றுக்கொண்டு நகர்ந்து செல்வார்... நன்றி சொல்ல மாட்டார்..

    பெரிய உதவிக்கும் நன்றி கிடைக்காது..  ஆனால் இளைஞர்கள் நன்றி சொல்லாவிட்டாலும் தேங்க்ஸ் சொல்கிறார்கள்... நல்லது...

    டிப்ஸ் - இந்த வார்த்தையை பயன்படுத்தினால் , உங்களுக்கு உதவியருக்கு மகிழ்ச்சி ஏற்படும். அடுத்து உதவி கேட்டால் செய்ய வாய்ப்பு இருக்கிறது

    எச்சரிக்கை - டிக்கட் தரும் கண்டக்டருக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லாதீர்கள்... அவர் அதிர்ச்சி அடையக் கூடும்.. நாம் இன்னும் அந்த அளவுக்கு வளரவில்லை

    3 வாழ்க ஆங்கிலம்

    இந்த வார்த்தையும் சென்ற தலைமுறையில் புழக்கத்தில் இல்லை... ஆங்கில வளர்ச்சியால் பயன்பாட்டுக்கு வந்த வார்த்தை இது..

    யாரிடமாவது உதவி கேட்கும்போது, அல்லது ஒன்றை செய்ய சொல்லும்போது, ப்ளீஸ் என்று ஆரம்பித்து சொல்வது இப்போது நடைமுறைக்கு வந்து இருக்கிறது,,,,  ஆனால் தயவு செய்து என்ற வார்த்தை ஒழிந்தே போய் விட்டது...

    டிப்ஸ் - அலுவலக பயன்பாட்டில் கூட , சென்ற தலைமுரையினர் , ப்ளீஸ் என்பதை பயன்படுத்துவதில்லை. இது தவறு...

    எச்சரிக்கை - அப்படிப்பட்டவர்களிடன் இந்த வார்த்தையை பயன்படுத்தீர்கள்..எதிர் விளைவே ஏற்படும்...


    4 எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்

        இது மிகவும் முக்கியமான வார்த்தை... அலுவலகம், குடும்பம், சாலையில் வழி கேட்பது போன்ற பல சந்தர்ப்பங்களில் இந்த வார்த்தை பயன்பாடு இல்லாமையால் பெரும் தொல்லைகள் ஏற்படும்... ஒரு விஷயம் தெரியாது என நம் மக்கள் சொல்லவே மாட்டார்கள்...

                தெரியாத ஒன்றைக்கூட தெரியும் என்பது போல காட்டிக்கொள்ள விரும்புவதால் ஏற்படும் பிரச்சினைகள் பல... ஒருவரிடம் வழி கேட்கிறீர்கள்.. அவருக்கு தெரியாவிட்டாலும், ஏதோ ஒரு பதிலை சொல்லி உங்களை அனுப்புவார்.. ஆனால் தெரியாது என மட்டும் சொல்ல மாட்டார்..

    சில அலுவலகங்களில் ஒரு விண்ணப்பத்துக்காக  சென்று இருப்பீர்கள்.. சம்பந்தப்ப்ட்டவர் தனக்கு அது தெரியாது என சொல்ல மாட்டார்.. ஆனல் தன் அறியாமையை மறைக்கும் பொருட்டு , உங்கள் விண்ணப்பத்தில் தவறு இருக்கிறது என்பது போல எதையாவது பேசி அனுப்புவார்..

    டிப்ஸ்- ஒருவருக்கு ஒன்று தெரியாது என்பதை அவர் பேசுவதை வைத்து முடிவெடுத்து, சீக்கிரம் அவரிடம் இருந்து தப்பிக்க பாருங்கள்..

    எச்சரிக்கை- உண்மையிலேயே விஷயம் தெரிந்தவர்களை சந்தேகப்பட்டு விடாதீர்கள்

    5 முடியாதது எதுவும் இல்லை..

    தன்னம்பிக்கை நூல்களை படித்து படித்து, எல்லாம் தன்னால் முடியும் என நினைக்க ஆரம்பித்து விட்டது தமிழகம்.. தன்னால் செய்ய முடியாத வேலையை ஏற்று கொள்வார்கள் சிலர்...

    உதாரணமாக ஒரு சட்டை தைக்க நினைக்கிறீர்கள்.. இந்த தேதிக்குள் தர  முடியாது என சொல்ல மாட்டார் டெய்லர்.. முடியும் என சொல்லி விடுவார் ... ஆனால் சொன்ன நேரத்தில் தராமல் இழுத்தடிப்பார்,,,  அவர் முடியாது என சொல்லி இருந்தால் நாம் வேறு யாரிடமாவது வேலையை கொடுத்து இருக்கலாம்

    டிப்ஸ் - பத்து நிமிடம் என்பது ஆபத்தான வார்த்தை... பத்து நிமிடத்தில் முடித்து விடுகிறேன்.. பத்து நிமிடத்தில் செய்து விடுகிறேன் என யாராவது சொன்னால், அந்த வேலை முடியாத ஒன்று என்ப்தை உணர்ந்து கொள்ளுங்கள்

    எச்சரிக்கை - இந்த விஷயத்தில் யாரும் திட்டமிட்டு தவறு செய்வதில்லை... தமிழர்களின் டைம் கான்ஷியஸ் குறைபாடே இது.. எனவே தேவையில்லாமல் டென்ஷன் ஆகாதீர்கள்



    http://girls-stills.blogspot.com




  • http://girls-stills.blogspot.com


  • [Continue reading...]

    அவளின் நினைப்பி��் அவனின் பிரச்சனைகள்

    - 0 comments


    இது ஒரு பொண்ணோட அட்வைஸ்.  ஒரு பொண்ணு தன்னோட தோழிக்கு செய்யுற அட்வைஸ்..  1.    நீ அவனிடம் அன்பாய் நடந்து கொண்டால், நீ அவனை காதலிக்கிறாய் என்பான், அவ்வாறு நீ நடந்து கொள்ளாத பட்சத்தில் உன்னை கர்வி என்பான் 2.    நீ அழகாய் உடை அணிந்தால் அவனை கவரவே உடை அணிகிறாய் என்பான், அவ்வாறு இல்லாத பட்சத்தில் உன்னை பட்டிக்காடு என்பான் 3.    நீ அவனிடம் விவாதம் செய்தால் உன்னை பிடிவாதாக்காரி என்பான், நீ அமைதியாய்

    http://tollywwod.blogspot.com




  • http://tollywwod.blogspot.com


  • [Continue reading...]

    மறையும் சிடி-டிவ���டிக்கள்

    - 0 comments


    கம்ப்யூட்டர் மார்க்கட்டில் இருந்து சிடி மற்றும் டிவிடிக்கள் மறையும் காலம் வந்துவிட்டது. பிளாப்பி டிஸ்க்குகளைப் போல இவையும் காணமால் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.
    ஒரு காலத்தில், 1985க்கு முன்னர், +2 சயின்ஸ் லேப் பிராக்டிகல் ரெகார்ட் அளவிலான டிஸ்க்குகள் பயன்பாட்டில் இருந்தன. துளையிடப்பட்டு பயன்படுத்தப் பட்டு வந்த கார்டுகளுக்குப் பதிலாக இவை பயன்பாட்டில் இருந்தன. இவற்றை ஐந்தே கால் அங்குல அகல அளவிலான டிஸ்க்குகள் வெளியேற்றின. இதன் கொள்ளளவு கேபி அளவிலேயே இருந்தன. அடுத்து வந்த சிறிய பிளாப்பி டிஸ்க்குகள் 1.44 எம்பி அளவு டேட்டாவைக் கொள்ளும் அளவில் இருந்தன. பின்னர் அதிக அளவில் கொள்ளளவு கொண்டி ருந்த ஸிப் டிரைவ்கள் ஒரு சிலரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. சிடி, அதன் பின் டிவிடி வந்த பின்னர், பிளாப்பி டிஸ்க்குகள் மறைந்து, அதற்கான ட்ரைவினை கம்ப்யூட்டரில் காண்பது அரிதாக உள்ளது.
    இப்போது பிளாஷ் ட்ரைவ், எக்ஸ்டர்னல் ட்ரைவ் வந்த பின்னர், டிவிடி ட்ரைவ் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்குப் பதில் அளிக்கும் வகையில், தற்போது வந்து கொண்டிருக்கும் மேக் கம்ப்யூட்டர்களில் டிவிடி ட்ரைவ் பொருத்தப்படுவதில்லை. பெர்சனல் லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும், டிவிடி ட்ரைவ் ஒரு விருப்பத் தேர்வாக அமைக்கப்பட்டு, தனியே வாங்கிப் பயன்படுத்தும் வகையில் உள்ளன. விரைவில் டிவிடிக்களும் சிடிக்களும் காணாமல் போய்விடும் என்றேஅனைவரும் எதிர்பார்க்கின்றனர். இதற்கான முக்கிய காரணங்கள் ஆறினை இங்கு பார்க்கலாம்.
    1. சத்தம்: சிடி மற்றும் டிவிடி ட்ரைவ்கள் இயக்கத்தின் போது, உள்ளே சுழலும் மற்றும் நகரும் பாகங்கள் இயங்குவதால், தேவையற்ற சத்தம் ஏற்படுகிறது. எக்ஸ் பாக்ஸ் 360 போன்ற சாதனங்களில் இந்த சத்தம் சற்று அதிகமாகவே உள்ளது.
    2. பராமரிப்பு: அதிக வேகத்தில் சிடிக்களைச் சுழற்றி, லேசர் கதிர்கள், அவற்றைப் படிக்கையில், தூசு சேர்ந்து அவையும் சுழற்சியில் பங்கேற்கின்றன. இவை சேராமல் இருக்க இதனை நாம் பராமரிக்க வேண்டியுள்ளது. மேலும், விரைவில் தங்கள் பயன் நாட்களை இழந்திடும் கம்ப்யூட்டரின் துணை சாதனமாக, சிடி ட்ரைவ் உள்ளது.
    3. இயக்க சக்தி: மிக அதிக வேகத்தில் டிவிடிக்களை சுழற்ற வேண்டிய நிலையில், அதற்கான மின் சக்தியும் சற்று அதிகமாகவே செலவாகிறது. இதனால் லேப்டாப் போன்ற கம்ப்யூட்டர்களில் பிரச்னை ஏற்படுகிறது.
    4. வேகம்: சிடி அல்லது டிவிடியிலிருந்து டேட்டா படிக்கப்படுகையில், அதிக வேகத்தில் அவை சுழல்கின்றன. இதே நிலை ஹார்ட் டிஸ்க் அல்லது சாலிட் ஸ்டேட் டிஸ்க்கில் ஏற்பட்டாலும், சுழல் வேகம் குறைவாகவே உள்ளது. அதிக வேகத்தில் டிவிடி சுழன்றாலும், தகவல் அனுப்பிப் பெறும் விஷயத்தில், ஹார்ட் டிஸ்க் மற்றும் பிறவற்றிலிருந்து தகவல்களைப் பெறுவதே அதிக வேகத்தில் நடைபெறுகிறது.
    5.மீடியா: இந்த ஒரு விஷயத்தில் தான், பலரும் சிடி, டிவிடிக்கள் காணாமல் போவதைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை. முதலாவதாக, டிஸ்க்குகள் அதிக இடத்தை எடுத்துக் கொள்கின்றன. பல மாதங்கள் கழித்து, நாம் சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றினை மீண்டும் இன்ஸ்டால் செய்வதாக இருந்தால், அந்த குறிப்பிட்ட சாப்ட்வேர் உள்ள சிடி அல்லது டிவிடி எங்கே உள்ளது என்று பல சிடிகளுக்கிடையே தேட வேண்டியுள்ளது. பயன்படுத்தாமல் பல காலம் இருந்தாலும், அதில் ஸ்கிராட்ச் எதுவும் இல்லாமல், ஈரப்பதத்தினால், மேலாகப் பங்கஸ் பூச்சு எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் இந்த பிரச்னைகளுக்காக ஹார்ட் டிஸ்க்கினை ஒப்பிட்டுப் பார்த்தால், விலை குறைவு, அளவிற்கு எல்லை இல்லை மற்றும் தேடிப் பார்த்து அறிவது மிக எளிது.
    6. வசதி: இணையம் இப்போது நமக்கு எல்லாவிதத்திலும் உதவுகிறது. பைல்களை ஸ்டோர் செய்து எப்போது வேண்டு மானாலும் அதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். பல வேளைகளில் கட்டணம் எதுவுமின்றி இந்த சேவை கிடைக்கிறது.
    மேற்கண்ட காரணங்களினால், நிச்சயம் சிடி, டிவிடிக்களின் பயன்பாடு விரைவில் இல்லாமல் போகும்.




    http://tollywwod.blogspot.com




  • http://tollywwod.blogspot.com


  • [Continue reading...]

    5 வயது சிறுமியை ப��ாத்காரம் செய்த முன்ற ஆட்டோ டிரைவ���ுக்கு அடி

    - 0 comments


     தெருவில் விளையாடிக் கொண்டிருந்த, ஐந்து வயது சிறுமியை அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ய முன்ற ஆட்டோ டிரைவருக்கு அடிஉதை விழுந்தது.

    கொடைக்கானலைச் சேர்ந்த மணி (28). திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் ஆட்டோ டிரைவராக உள்ளார். மணி வீட்டுக்கு அருகில் வீதியில் 5 வயது சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தாள்.

    அந்த சிறுமியை தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்ற மணி, பாலியல் தொல்லை செய்துள்ளார். இதையடுத்து வெளியே வந்த சிறுமி, அழுது கொண்டிருப்பதைப் பார்த்த சிலர், விசாரித்த போது நடந்த உண்மையை அந்த சிறுமி கூறியுள்ளாள்.

    இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள், மணியை அடித்து உதைத்தனர். அத்துடன் போலீசாரிடம் மணியை ஒப்படைத்தனர்.

    படுகாயம் அடைந்த மணியை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர்







    http://tollywwod.blogspot.com




  • http://tollywwod.blogspot.com


  • [Continue reading...]

    காய்கறி, பழங்களி���் ரசாயனம் ஜாக்க��ரதை!

    - 0 comments


    நமது அன்றாட உணவில் காய்கறிகள், பழங்களுக்கு முக்கிய பங்குண்டு. இந்தியர்களின் உணவில் 23 சதவீதம் காய்கறிகள் இடம் பெற்றுள்ளன என, ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், நார்ச்சத்து உள்ளிட்டவை, காய்கறி, பழங்களிலிருந்து கிடைக்கின்றன. பல்வேறு நோய்களைத் தடுக்கும் மருந்தாக, பச்சைக் காய்கறிகள், பழங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன், இயற்கை உரங்களைக் கொண்டு விளைவித்த காய்கறி, பழங்களை தோட்டத்தில் இருந்து நேரடியாகப் பறித்துச் சாப்பிட்டோம். ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் கலக்காமல் அவை நமக்குக் கிடைத்தன.

    இன்று, விதைகளைப் பதப்படுத்துவதில் துவங்கி, மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும் வரை பல்வேறு கட்டங்களில், காய்கறி, பழங்களில் ரசாயனப் பொருள்களும், பூச்சிக் கொல்லி மருந்துகளும், மறைமுகமாகச் சேர்க்கப்படுகின்றன.
    இந்தியாவில் உற்பத்தியாகும் 10 கோடி டன் காய்கறிகளை, பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க,6,000 டன் பூச்சிக் கொல்லி மருந்து பயன்படுத்தப்படுகிறது. இது, சர்வதேச அளவுடன் ஒப்பிட்டால் 70 சதவீதம் அதிகம். இந்தியாவில் விளைவிக்கப்படும் காய்கறி, பழங்களில், ரசாயனப் பொருள்களின் அளவு, அனுமதிக்கப்பட்டதை விட அதிகம் உள்ளதாக, "உலக காய்கறி மையம்' (அ.ங.கீ.ஈ.இ.,) எச்சரித்துள்ளது.

    பெரு நகரங்களின் சுற்று வட்டார பகுதிகளில், விளை நிலங்கள் குறைந்துவிட்டதால், நீண்ட தொலைவில் உள்ள கிராமப் புறங்களில் இருந்து காய்கறிகள் தருவிக்கப்படுகின்றன. இந்த காய்கறிகள், குளிர்பதன குடோன்களில் சேமித்து வைக்கப்படுகின்றன. இவ்வாறு சேமித்து வைக்கும்போது, பூச்சி, புழுக்கள் தாக்காமல் இருக்க, பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. பயிர் நிலையிலேயே, ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் காய்கறிகளோடு கலந்துவிட்ட நிலையில், அவற்றை சேமித்து வைக்கும்போது, காய்கறிகளின் மீது பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுவதால், அதில் சேரும் ரசாயனத்தின் அளவும் அதிகமாகிறது. இதுதவிர, காய்கறிகள் வாடாமல் இருக்க, அலுமினியம் பாஸ்பைட், பேரியம் கார்பனேட் போன்ற ரசாயனங்கள் தெளிக்கப்படுகின்றன. பழங்களை பழுக்க வைக்கவும், புத்தம் புதிதாக தோற்றமளிக்கவும், "காப்பர் சல்பேட்' பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு, விதைகளைப் பதப்படுத்துவதிலிருந்து மார்க்கெட்டில் விற்கும் வரை, பல ரசாயன பொருள்கள் சேர்க்கப்படுகின்றன.

    உணவு வகைகளை, பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க, குறிப்பிட்ட அளவு பூச்சிக் கொல்லி மருந்துகளையும் ரசாயனப் பொருள்களையும் பயன்படுத்திக் கொள்ள உணவு கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதித்துள்ளது. ஆனால், நடைமுறையில் அளவுக்கு அதிகமாக ரசாயனம் சேர்க்கப்படுகிறது. மத்திய வேளாண் அமைச்சகம், 2009ல் நடத்திய ஆய்வில், காய்கறி, பழங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 60 கிலோ எடையுள்ள ஒருவரது உடலில், நாள்தோறும் 0.48 மில்லி கிராம் வரை பூச்சிக் கொல்லி மருந்து சேர்ந்தால் பாதகம் இல்லை என அளவிடப்பட்டுள்ளது.

    தட்டுப்பாடு இல்லாமல், உணவுப் பொருள்கள் கிடைக்க வேண்டுமானால், பூச்சிகளிலிருந்து விளை பொருள்களை பாதுகாப்பது அவசியம்தான். இதற்காக, பூச்சிக் கொல்லி மருந்துகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவில் தான், ஒரு வரைமுறை இல்லாமல் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதைக் கண்காணிக்க அமைப்புகள் இல்லை. உயிர் வாழ உணவு அவசியம், ஆனால், அந்த உணவே உயிரைப் பறிக்கும் எமனாக மாறுவதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது.
    பழக் கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் ஆப்பிள் பழங்கள், பார்க்க, "பளபள' என, அழகாக இருக்கும். ஆனால், அதன் மேலே பூசப்பட்டிருக்கும் மெழுகின் ஆபத்து பலருக்கு தெரியாது. பிரேசில் நாட்டில் உள்ள ஒரு வகை பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் மெழுகை மட்டுமே பழங்கள், காய்கறிகளில் பூசுவதற்கு, உலக சுகாதார மையம் அனுமதித்துள்ளது. இந்த மெழுகுக்கு பதிலாக, செயற்கையாக தயாரிக்கப்படும் ரசாயன மெழுகை பயன்படுத்துகின்றனர். இது, உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.




    http://tollywwod.blogspot.com




  • http://tollywwod.blogspot.com


  • [Continue reading...]

    தாடியும் கவர்னர��ம்

    - 0 comments


    ஆகஸ்ட் 15.. சுதந்தர தினத்தின்று கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றியிருக்கிறார் முதல்வர் ஜெ. "வன்முறைகளுக்கு இடம் கொடாமல், அஹிம்சை மூலமே அடிமை விலங்கைத் தகர்தெறிந்த தியாகச் செம்மல்கள் வலம் வந்த இடம் என்ற பெருமை பெற்றது நம் தமிழகம்" என்று தனது உரையில் குறிப்பிட்ட முதல்வர், வழக்கம் போல திமுகவையும் குட்டித் தீர்க்கத்தவறவில்லை. “ஐந்தாண்டு கால திமுகவின் கொடுங்கோல் ஆட்சி மறைந்து அதிமுக ஆட்சி வந்ததும் மீண்டும் ஒரு சுதந்திரம் கிடைத்த உணர்வு [...]

    http://famousstills.blogspot.com




  • http://famousstills.blogspot.com


  • [Continue reading...]

    மக்கள் நலத்திட்��ங்கள் தொடரும் - ஜ���யலலிதா

    - 0 comments


    மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் - ஜெயலலிதாஏழை, எளியவர்களின் வாழ்வில் வளம் ஏற்பட மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்று சுதந்திர தின விழாவில் தேசிய கொடி ஏற்றி வைத்து, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

    நாட்டின் 65வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கோட்டை மேலும்படிக்க

    http://actressmasaala.blogspot.com




  • http://actressmasaala.blogspot.com


  • [Continue reading...]

    தினபலன் -16-08-11

    - 0 comments




    மேஷம்:
    பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகளைச் சந்திக்கலாம். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த வேலை ஒன்று முடியாமல் அதை நீங்களே செய்ய நேரிடலாம். சோர்வு, சோம்பல் ஆட்கொண்டாலும் அவசரமாக முடிக்க வேண்டிய வேலைகளால் அவதிப்படலாம். ஜம்பமாகப் மேலும்படிக்க

    http://actressmasaala.blogspot.com




  • http://actressmasaala.blogspot.com


  • [Continue reading...]

    அபோதாபாத்தில் த��ையில் விழுந்த ஹெலிகாப்டரை சீன என���ஜினீயர்கள் சோதித்து பார்த்தனர்

    - 0 comments


    பாகிஸ்தானில் அபோதாபாத்தில் பதுங்கி இருந்த பின்லேடனை பிடிப்பதற்காக அமெரிக்க ராணுவம் நவீன ஹெலிகாப்டரில் அங்கு வந்தபோது அது பழுதாகி தரையில் விழுந்தது. இதனால் அதை கைவிட்ட அமெரிக்க ராணுவத்தினர் அதை வேறுயாரும் பார்வையிட்டு அமெரிக்க மேலும்படிக்க

    http://actressmasaala.blogspot.com




  • http://actressmasaala.blogspot.com


  • [Continue reading...]

    சேனைகிழங்கு ரோ��்ட்

    - 0 comments


    சேனைகிழங்கு ரோஸ்ட்தேவையான பொருள்கள்:


    சேனைக்கிழங்கு – 1 /4 கிலோ
    எண்ணெய் ,உப்பு – தேவையான அளவு
    மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
    கரம்மசாலா தூள் -1 ஸ்பூன்
    மஞ்சள்தூள் - மேலும்படிக்க

    http://actressmasaala.blogspot.com




  • http://actressmasaala.blogspot.com


  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger