Monday 29 August 2011

செங்கொடியே அவசர��்பட்டு விட்டாய் - கவிஞர் இரா.இரவி

- 0 comments


செங்கொடியே தற்கொலை ஏன் ? புரிந்தாய்
முத்துக்குமார் உயிர் மாய்த்தப் போது

கடிதத்தில் எழுதியதைக் கடைபிடித்து இருந்தால்
ஈழத்தில் லட்சம் தமிழர்களை இழந்திருக்க மாட்டோம்

மூன்று உயிர்களைக் காக்க மேலும்படிக்க

http://mobilesexpicture.blogspot.com




  • http://mobilesexpicture.blogspot.com


  • [Continue reading...]

    செ‌ன்செ‌க்‌ஸ் 567.50பு‌ள்‌ளிக‌ள் உய���்வு

    - 0 comments


    செ‌ன்செ‌க்‌ஸ் 567.50பு‌ள்‌ளிக‌ள் உயர்வுமும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 16,080.74 புள்ளிகளில் தொடங்கியது செ‌ன்செ‌க்‌ஸ் 567.50பு‌ள்‌ளிக‌ள் உயர்ந்து 116,416.33 புள்ளிகளில் முடிவடைந்தது.

    தே‌சிய ப‌ங்கு ச‌ந்தையான ‌நி‌ப்டி171.80 பு‌ள்‌ளிக‌ள்‌ உயர்ந்து 4919.60 மேலும்படிக்க

    http://mobilesexpicture.blogspot.com




  • http://mobilesexpicture.blogspot.com


  • [Continue reading...]

    3 பேரின் தூக்குத்தண்டனையை ரத்து ச���ய்யும் அதிகாரம் எனக்கு இல்லை: ஜெ��லலிதா

    - 0 comments


    3 பேரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை ஜெயலலிதா ஜனாதிபதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து ராஜிவ் கொலையாளிகள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற சிறை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்ற�ர். இந்நிலையில் முதல்வர் ஜெ., மேலும்படிக்க

    http://mobilesexpicture.blogspot.com




  • http://mobilesexpicture.blogspot.com


  • [Continue reading...]

    3 பேரை தூக்கிலிடும் முடிவில் யாரு���் குறுக்கிடக் க��டாது-சுப்ரமணிய சுவாமி

    - 0 comments


    3 பேரை தூக்கிலிடும் முடிவில் யாரும் குறுக்கிடக் கூடாது-சுப்ரமணிய சுவாமிஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை தூக்கிலிடும் முடிவில் யாரும் கு�ுக்கிடக் கூடாது. கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள மேலும்படிக்க

    http://mobilesexpicture.blogspot.com




  • http://mobilesexpicture.blogspot.com


  • [Continue reading...]

    ஹாசினி

    - 0 comments
    [Continue reading...]

    தூக்கு தண்டனையை ���ிறுத்த கோரி பு��ிய தமிழகம் கட்சியினர் தீக்குளிக��க முயற்சி!

    - 0 comments


    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 3 பேரின் தண்டனையை நிறுத்தக் கோரி, புதிய தமிழகம் கட்சியினர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள முருகன், சாத்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, வரும் 9ம் தேதி வேலூர் மத்திய சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

    இந்நிலையில், சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி, திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அப்போது, பாலு, புவனா மற்றும் கோபி ஆகியோர் தங்களது உடல் மீது திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.

    இதையடுத்து, தீக்குளிக்க முயன்ற பாலு, புவனா மற்றும் கோபி உள்ளிட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புதிய தமிழகம் கட்சியினர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    http://girls-stills.blogspot.com




  • http://girls-stills.blogspot.com


  • [Continue reading...]

    மரண தண்டனைக்கு எ���ிராக பிரான்ஸில் நடைபெற்ற போராட்���ம் (படங்கள் இணைப���பு)

    - 0 comments


    கருணை மனு நிராகரிக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள பேரறிவான், சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனையை நிறுத்துமாறு கோரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று பிரான்சில் ஞாயிற்றுக்கிமை இடம்பெற்றுள்ளது.

    பாரிசில் உள்ள மனித உரிமைச் சதுக்கத்தில் இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

    பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை நிறுத்தக் கோருவதோடு, தமிழகமெங்கும் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டங்களுக்கு, தார்மீக ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில், இக்கவனயீர்ப்பு போராட்டத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    பிரென்சு மொழியிலான தொடர் முழக்கங்கங்களையும், விளங்களையும் முன்னிறுத்தி இக்கவனயீர்ப்பு போராட்டத்தை மக்கள் பிரதிநிதி சிவசுப்பிரமணியம் மகிந்தன் அவர்கள் நெறிப்படுத்தினார்.

    மூவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை விவகாரம் தொடர்பில், நா.த.அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரனினால் வெளியிடப்பட்ட அறிக்கையினை, உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள் வெளிப்படுத்தியதோடு, உலகப்பரப்பெங்கும் உள்ள தமிழர் அமைப்புக்கள் இத்தகைய கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

    புலம்பெயர் தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் இந்திய மத்திய அரசுக்கு தெரியப்படுத்தும் நோக்கில், பிரான்சில் உள்ள இந்திய தூதரகத்திடம் மனுவொன்று கைளிக்கப்படவுள்ளதாக, துணை அமைச்சர் சிவகுருநாதன் சுதர்சன் அவர்கள் தெரிவித்தார்.

    மூவரது மரண தண்டனையை நிறுத்தும் நோக்கிலான தொடர் செயற்பாடுகளை, உரியவழிமுறைகள் ஊடாக பிரான்சில் தொடர்சியாக முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேவேளை, தமிழகத்தில் தீயினில் காவியமாகிய செல்வி.செங்கதிருக்கு வணக்கம் செலுத்தும் அஞ்சலி நிகழ்வொன்று, நாளை செவ்வாய்கிழமை லாசப்பல் பகுதியில் மாலை 17மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நா.த.அரசாங்க மக்கள் பிரதிநிதிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

    நாதம் ஊடகசேவை
    தகவல்துறை அமைச்சகம்
    நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்







    http://girls-stills.blogspot.com




  • http://girls-stills.blogspot.com


  • [Continue reading...]

    மரண தண்டனைக்கு எ���ிராக நடுவன் அரச�� அலுவலகங்கள் முற்றுகை! (காணொளி இண��ப்பு)

    - 0 comments


    கோவையில் இன்று மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிராய் சட்டக்கல்லூரி மாணவர்கள் அணி அணியாக பிரிந்து ஒவ்வொரு நடுவன் அரசு அலுவலகங்களாக சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இன்று கோவையில் அனைத்து கட்சிகளின் சார்பில் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்ததற்கு இணங்க, அனைத்துக்கட்சியினரும் தொடர்வண்டி நிலையம் அருகில் குவிந்திருக்க, அங்கு காவல் துறையும் பெரும்படையை குவித்திருந்தது.

    இந்த நிலையை மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக எடுத்துக்கொண்டு கோவை மாநகரில் அமைந்துள்ள நடுவன் அரசு அலுவலகங்களை நோக்கி அணி அணியாக படையெடுத்தனர்.

    முதலில் ஒரு அணி அவினாசி சாலை மேம்பாலம் அருகில் அமைந்துள்ள கடவு சீட்டு அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. இன்னொரு அணியோ கோவை பந்தய சாலையில் அமைந்துள்ள மண்டல வருமான வரி ஆணையர் அலுவலகத்தினை முற்றுகையிட்டது.

    மேற்படி நிகழ்ந்த போராட்டங்கள் குறித்து காவல்துறைக்கு தெரிந்திருக்கவில்லை. காவல்துறையின் கவனம் தொடர்வண்டி நிலையத்திலேயே இருந்தது. மாணவர்கள் தொடர்ந்து முக்கிய சாலை சந்திப்புகள் வழியாக நடுவன் அரசு அலுவலகங்களை நோக்கி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். இதனைக்கண்ட பாதசாரிகள், பயணிகள், மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் பதட்டம் அடைந்தனர். என்ன நிகழ்கிறது என்று யாருக்கும் அங்கு தெரிந்திருக்கவில்லை. இதனால் கோவை மாநகரில் நாள் முழுதும் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.



    http://girls-stills.blogspot.com




  • http://girls-stills.blogspot.com


  • [Continue reading...]

    சாம்பார் பற்றிய ���கவல்!

    - 0 comments


    சாம்பார் என்றதும் நம் நினைவுக்கு வருவது,இரண்டு செய்திகள்.

    ஒன்று தமிழ்நாட்டின் முக்கிய உணவான சாம்பார்.

    மற்றொன்று ஜெமினி கணேசன்!

    அவர் ஏன் சாம்பார் என்றழைக்கப்பட்டார் என்பது இன்று வரை எனக்குத் தெரியாது.

    இப்பதிவு ஜெமினி கணேசன் பற்றியதல்ல.
    உண்மையான அசல் சாம்பார் பற்றியது.

    நானூறு ஆண்டுகளுக்கு முன்தான் மிளகாய் என்பது இந்தியாவுக்கு அறிமுகமாயிற்று. தக்காளி,உருளைக் கிழங்கு,வெங்காயம் ஆகியவையும், வெள்ளையர்களால் இங்கு கொண்டு வரப் பட்டவையே!

    எனவே நியாயமாக நமக்கு உடன் எழும் சந்தேகம்"அதற்கு முன் தமிழ்நாட்டில் சாம்பார் எப்படித்தயாரிக்கப் பட்டது?வடநாட்டில்,தக்காளியும்,வெங்காயமும் இல்லாமல் சப்பாத்திக்குப் பக்க வாத்தியமான சப்ஜிகள் எப்படிச் செய்தார்கள்?"

    ஆனால் 400 ஆண்டுகளுக்கு முன்பே,தென்னாட்டில் புளி பயன்படுத்தப்பட்டது. அப்போதும் அவர்கள் குழம்பு செய்திருக்க வேண்டும்.ஆனால் மிளகாய் இல்லாததால் மிளகு உபயோகப் படுத்தப் பட்டிருக்க வேண்டும்.கேரளாவின் மிளகூட்டலும், தமிழகத்தின் பொரித்த குழம்பும், புளி,மிளகாய் இல்லாமல்,மிளகு,சீரகம் மட்டும் கொண்டு தயாரிக்கப் படுபவையே.


    இந்த சாம்பார் என்பது எப்போது எப்படி வந்தது?

    இது பற்றிய ஒரு தகவல்--
    "தஞ்சை மண் முன்பு மராத்தியர்களால் ஆளப்பட்டது.அவர்களில் ஒரு அரசனான, சம்போஜி சமையலில் வித்தகர்(பீமன்,நளன் போல்!)

    ஒரு நாள் அவர் தனது பிரிய உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தார்.ஆம்தி என்று அழைக்கப்படும் குழம்பு போன்ற ஒரு பதார்த்தம்.புளிக்குப் பதிலாக 'கொகும் ' என ஒரு பொருளை-மராத்தா பகுதியில் கிடைப்பது- உபயோகிப்பார்கள்.ஆனால் அன்று மராத்தாவிலிருந்து கொகும் வந்து சேரவில்லை .அதை எப்படி ராஜாவிடம் சொல்வது என எல்லோரும் பயந்து கொண்டிருந்தனர்.ராஜாவின் விதூஷகர் அவரிடம் அங்கு புளி என்று ஒன்று கிடைக்கும் அதை உபயோகிக்கலாம் என்று சொல்ல,அன்று சம்போஜி, துவரம் பருப்பு,காய்கள்,மிளகாய் ,புளி உபயோகித்துச் செய்த குழம்பு எல்லோருக்கும் மிகவும் பிடித்து விட்டது.சம்போஜி செய்த அந்த உணவுதான் சாம்பார் எனப் பின்னாளில் வழங்கப்பட்டது!

    வெங்காய சாம்பார் என்றாலே நாக்கில் நீர் ஊறும்!

    அதைச் சுவையாகச் செய்வதெப்படி?

    இதோ திருமதி ஜெயஸ்ரீ கோவிந்தராஜனின் செய்முறை---

    தேவையான பொருள்கள்:
    சின்ன வெங்காயம் – 25
    புளி – சிறிய எலுமிச்சை அளவு
    தக்காளி – 2
    துவரம் பருப்பு – 1/2 கப்
    சாம்பார்ப் பொடி - 1 1/2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் – 1
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு – தேவையான அளவு
    மசாலா அரைக்க:
    சின்ன வெங்காயம் – 6
    தனியா – 1 டீஸ்பூன்
    தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லித் தழை - சிறிது
    தாளிக்க:
    எண்ணை, கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை
    செய்முறை:
    • துவரம்பருப்பை வேக வைத்துக் கொள்ள்வும்.
    • புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
    • மசாலா சாமான்களை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
    • வாணலியில் எண்ணையச் சூடாக்கி, கடுகு, சீரகம், பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து அத்துடன் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை வதக்கிக் கொள்ள வேண்டும்.
    • வெங்காயம் வதங்கியதும், தக்காளித் துண்டுகள், புளிக் கரைசல், உப்பு, மஞ்சள் தூள், சாம்பார்ப் பொடி சேர்த்துக் கொதிக்க விடவும்.
    • கொதிக்கத் தொடங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்க்கவும்.
    • இறுதியில் வேகவைத்த துவரம்பருப்பைச் சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும்.
    • இந்தச் சாம்பாருக்கு மணத்தையும் சுவையையும் தருவதில் மசாலாவில் அரைத்துவிடும் சின்னவெங்காயம், கொத்தமல்லித் தழையின் பங்குதான் மிக முக்கியமானது. ஹோட்டல் சாம்பாரின் சுவையை அதுவே தருகிறது. எனவே சாம்பாருக்கு சின்ன வெங்காயம் உரிக்க நேரமில்லாவிட்டாலும், அதற்குப் பதில் பெரிய வெங்காயத்தை மெலிதாக நீளவாக்கில அரிந்துபோட்டு, மசாலாவிற்கு மட்டும் 4,5 சின்ன வெங்காயம் உபயோகித்தாலே ஓரளவு சுவையைக் கொண்டுவந்து விடலாம்.

    நன்றி ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்!

    சாம்பார் மணக்கிறதா?!




    http://photo-actress-hot.blogspot.com




  • http://photo-actress-hot.blogspot.com


  • [Continue reading...]

    உடன் பிறப்பே!உனக���கொரு சோதனை!

    - 0 comments


    உடன் பிறப்பே!

    உனக்காக நான் வருந்திடுகிறேன்.

    எத்தகைய சோதனையை நீ எதிர்கொள்ளப்போகிறாய் என்பதை அறிந்திடுவாயா?

    திருடனுக்குத் தேள் கொட்டியது போல் என்பார்கள்!அவனால் கத்திட முடிந்திடுமா?கதறிட முடிந்திடுமா?அழுதிடத்தான் முடிந்திடுமா?

    பொறுத்துக் கொண்டிடத்தான் வேண்டும்.

    அது போல்தான் உன் நிலை!

    நாளை முதல் ஒரு வாரம் தினம் ஒரு பதிவென்று உன்னை நான் தாக்கினால்,என்ன செய்திட முடியும்?

    படித்திடுவாய்!

    பொறுத்துக் கொள்வாய்.

    வாக்களிப்பாய்!

    கருத்துச் சொல்வாய்!

    ஆம். ஏனென்றால்,

    நீ என் உடன் பிறப்பாயிற்றே!

    விட்டுக் கொடுத்திடுவாயா? அதுதானே நம் பண்பு,பாடம் ,பகுத்தறிவு!

    வா உடன் பிறப்பே!பள்ளத்தில் பாய்ந்து வரும் வெள்ளம் போல் வா!

    நன்றி!




    http://photo-actress-hot.blogspot.com




  • http://photo-actress-hot.blogspot.com


  • [Continue reading...]

    கடவுள் கேட்கும் ���ரம்!....கவிதை

    - 0 comments


    இந்த வார நட்சத்திரமாக விளங்க அழைத்து எனக்கும் ஒரு அங்கீகாரமும் , கௌரவமும் அளித்த தமிழ்மணத்துக்கு முதற்கண் என் நன்றி!
    .............................
    எதையுமே கடவுள் வாழ்த்துடன் தொடங்குவதுதானே மரபு!இதோ--

    "பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
    நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
    துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
    சங்கத் தமிழ்மூன்றுந் தா !"

    நான் கேட்டுவிட்டேன்,கடவுள் என்ன சொல்கிறார்?!-----இதோ

    உனக்கு வேண்டுவன எல்லாம் என்னிடம் கேட்கின்றாய்
    எனக்கு வேண்டுவ தென்ன வென்று நீ கேட்டதுண்டா?

    பண்டிகைகள் கொண்டாடி படையல் படைக்கின்றாய்
    உண்பதற்கு விதவிதமாய் செய்து மகிழ்கின்றாய்

    பிள்ளையாராய்க் கும்பிட்டுக் கொழுக்கட்டை படைக்கின்றாய்
    பிரப்பம் பழம் விளாம்பழமெனப் பலபழமும் கொடுக்கின்றாய்

    கண்ணனாய் வணங்கி வெண்ணைய் வைக்கின்றாய்
    எண்ணெய்ப் பலகாரம் பலவும் படைக்கின்றாய்.

    கோவில்களில் எனக்கு பால் தயிர் பன்னீர் என்று
    ஓய்வில்லாமல் அபிஷேகம் பலவும் செய்கின்றாய்.

    உண்டியல் தேடிப் போய் பணம் நகை எனப் பலவும்
    கொண்டு போய் நீ தவறாமல் கொட்டுகின்றாய்.

    திருக் கல்யாணம் என்று சொல்லி யெனக்குத்
    தினம் தினம் திருமணம் செய்விக் கின்றாய்

    பட்டு வேட்டிப் புடவை கழுத்தில் தாலியெனப்
    பலவும் வாங்கி யெனக்கு நீ அணிவிக்கின்றாய்


    நான் உன்னை என்றுமே கேட்டதில்லை
    எனக்கு இவையெல்லாம் கட்டாயம் வேண்டுமென்று

    இன்று நான் சொல்கின்றேன் கேள் மனிதா
    என் விருப்பம் என்னவென்று நீ அறிய.

    நான் என்றுமே கொடுப்பவன்தான்,கேட்பவன் அல்ல!

    படைக்கின்ற பழங்களெல்லாம் பசித்தவர்க்குக் கொடு
    உடைக்கின்ற தேங்காயெல்லாம் நலிந்தவர்க்கு உண்ணக் கொடு.

    குடம் குடமாய்க் கொட்டுகின்ற பாலெல்லாம் கொண்டு போய்
    குடிக்கக் கஞ்சி கூட இல்லாக் குழந்தைகளுக்குக் கொடு.

    எனக்குப் போர்த்துகின்ற வேட்டி சேலை இவை எல்லாம்
    கனக்கின்ற குளிரில் வாடும் கணக்கற்றோருக்குக் கொடு.

    கட்டுக்கட்டாய் உண்டியலில் கொட்டுகின்ற பணத்தில் நீ
    கட்டித்தா இலவச கல்விச்சாலை,மருத்துவமனை இவையெல்லாம்.

    திருக் கல்யாணம் செய்விக்கும் செலவினிலே
    திக்கற்ற பெண்களுக்குத் திருமணம் செய்து வை!

    என்னிடம் எப்போதும் நீ வரம் வேண்டி நிற்பாய்
    இன்று நான் கேட்கின்றேன் இந்த வரம் நீ தா!


    டிஸ்கி--(இந்தக் கவிதைக்கான விதை பல ஆண்டுகளுக்கு முன் விழுந்தது.அப்போது கரூரில் இருந்தோம்.ஒரு நாள் அம்மன் கோவில் சென்று திரும்பியவுடன் என் தாயார்(தற்போது வயது 93) சொன்னார்கள்."குடம் குடமாப் பாலபிஷேகம் பண்ணினா.அப்ப எனக்குத் தோணித்து இப்படிப் பாலெல்லாம் வீணாப்போறதே.இதுக்குப் பதிலா யாராவது பசித்த ஏழைக் குழந்தைகளுக்குக் குடுக்கக் கூடாதான்னு.உடனே சந்நிதியில் நின்னு இப்படி யோசிக்கறது தப்புன்னு அம்மன் கிட்ட மன்னிப்பும் கேட்டுண்டேன்"

    நான் சொன்னேன் "தவறில்லை.உன்னை அப்படி யோசிக்க வைத்ததே அந்த அம்மன்தானே!")



    http://photo-actress-hot.blogspot.com




  • http://photo-actress-hot.blogspot.com


  • [Continue reading...]

    கிட‌ப்‌பி‌ல் இர��‌ந்த கருணை மனு உ��னடியாக ‌நிராக‌ர���‌த்தது ஏ‌ன்? ‌தி���ுமா ச‌ந்தேக‌ம்

    - 0 comments


    11 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த கருணை மனுவை இப்போது உடனடியாக நிராகரித்து பேர‌றிவாள‌ன், முருக‌ன், சா‌ந்‌த‌ன் ஆ‌‌கியோரை தூக்கில் போட வேண்டிய அவசியம் என்ன? எ‌ன்று ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் தொ‌ல்.‌திருமாவளவ‌ன் கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

    சென்னை அருகே மறைமலைநகரி‌ல் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நே‌ற்‌றிரவு நடைபெ‌ற்ற மரண தண்டனை ஒழிப்பு மாநா‌ட்டி‌ல் தொ‌ல்.‌திருமாவளவ‌ன் பேசுகை‌யி‌ல், தனக்கு எதிரானவர்கள் எந்த நாட்டை ஆண்டாலும் அவர்களை அழிப்பதைக் குறியாகக் கொண்டு அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.

    சதாம் உசேனைக் கொன்றதும் இப்படித்தான். ராஜீவ்காந்தி கொலையில் சர்வதேச சதி உள்ளது என்று ஜெயின் கமிஷன் குறிப்பிட்டபோதும் அது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை.

    ஒருவேளை ராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் கொன்று இருந்தாலும், அவர்கள் எப்போதும் கூட்டுச் சதி செய்வது கிடையாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். விடுதலைப்புலிகளின் தலைமை எடுக்கும் முடிவு அவர்களின் முக்கிய நிர்வாகிகளுக்கே சில சமயங்களில் தெரியாது.

    மாபெரும் தலைவரான ராஜீவ்காந்தியைக் கொல்லும்போது பேரறிவாளனிடம் பேட்டரி வாங்கித்தான் கொல்ல வேண்டுமா? விசாரணை முழுமையாக முடிவடையாத நிலையில் இவர்களைத் தூக்கில் போடவேண்டிய அவசியம் இல்லை.

    11 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த கருணை மனுவை இப்போது உடனடியாக நிராகரித்து பேர‌றிவாள‌ன், முருக‌ன், சா‌ந்‌த‌ன் ஆ‌‌கியோரை தூக்கில் போட வேண்டிய அவசியம் என்ன? எனவே 3 பேரின் உயிரைக் காப்பாற்ற வேலூர் சிறையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவேண்டும் என்று தொல். திருமாவளவன் கூ‌றினா‌ர்.

    http://tamil-vaanam.blogspot.com




  • http://tamil-vaanam.blogspot.com


  • [Continue reading...]

    முதல்வரின் பேச்��ு வேதனை தருகிறது: ராமதாஸ்

    - 0 comments


    கருணை மனுக்களை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், அதை மாற்றுவதற்கு முதலமைச்சர் என்ற முறையில் தமக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறி தமது கடமையிலிருந்து விலகிக் கொள்ள முதல்வர் ஜெயலலிதா முயன்றிருக்கிறார். இது மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

    தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனுக்களும் குடியரசு தலைவரால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், அவர்களை தமிழக முதல்வர் காப்பாற்றுவார் என்று ஒட்டுமொத்த தமிழகமும் நம்பிக்கொண்டிருக்கிறது.

    ஆனால், கருணை மனுக்களை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், அதை மாற்றுவதற்கு முதல்வர் என்ற முறையில் தமக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறி தமது கடமையிலிருந்து விலகிக் கொள்ள ஜெயலலிதா முயன்றிருக்கிறார். இது மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது.

    3 பேரின் தூக்கு தண்டனை தொடர்பாக தமிழகச் சட்டப் பேரவையில் விளக்கமளித்த முதல்வர், 1991ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தை காரணம் காட்டி, இம்மூவரையும் தம்மால் காப்பாற்ற முடியாது என்று கூறியுள்ளார்.

    மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியிருப்பது வெறும் கடிதம் மட்டுமே. அந்தக் கடிதத்தைவிட அதிகாரம் படைத்த அரசியல் சட்டத்தில், ""ஒருவரின் கருணை மனுவை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்தாலும், அவர் மீண்டும் ஆளுநரிடம் கருணை மனு தாக்கல் செய்யலாம். அதன்மீது மாநில அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று ஆளுநர் முடிவெடுக்கலாம்" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதற்கான அதிகாரத்தை ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் வழங்கும் அரசியல் சட்டத்தின் 161ஆவது பிரிவு தீர்ந்து போகாத இறையாண்மை கொண்டது என்றும், ஒருவரின் கருணை மனுவை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்ததாலேயே, அவரின் கருணை மனுவை மீண்டும் ஆய்வு செய்யும் அதிகாரம் மாநில ஆளுநரிடமிருந்து பறிக்கப்படாது என அரசியல் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி ஆந்திரத்தைச் சேர்ந்த பூமய்யா, கிருஷ்ட கவுடு ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்துவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 1976ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ""ஒருவரின் கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்துவிட்டதாலேயே, சம்மந்தப்பட்டவரின் 2ஆவது கருணை மனுவை பரிசீலிக்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கோ அல்லது ஆளுநருக்கோ இல்லாமல் போகாது" என்று உறுதிபடத் தெரிவித்திருக்கிறது. இந்த கருத்தை அரசியல் சட்ட வல்லுநர்கள் பலரும் தெரிவித்திருக்கின்றனர்.

    எனவே இந்த மூவரின் சார்பிலும் ஆளுநரிடமும், முதல்வரிடமும் அளிக்கப்பட்டுள்ள கருணை மனுக்கள் மீது முதலமைச்சர் அவர்கள் அமைச்சரவையைக் கூட்டி சாதகமான முடிவை எடுக்க முடியும்.

    கேரளத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சி.ஏ. பாலன் என்பவரின் கருணை மனுக்களை குடியரசு தலைவரும், ஆளுநரும் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், 1957ஆம் ஆண்டில் கேரள சட்ட அமைச்சராக பொறுப்பேற்ற வி.ஆர். கிருஷ்ணய்யர், அப்போதிருந்த மத்திய அரசிடம் போராடி அவருக்கு விடுதலை பெற்றுத் தந்தார். இதையெல்லாம் முன்னுதாரணமாகக் கொண்டு மூவரின் உயிரையும் காப்பாற்ற முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சட்டப்படியான உரிமைகள் ஒருபுறம் இருக்க, இம்மூவரையும் காக்க அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளையும் முதல்வர் மேற்கொள்ள இயலும்.

    இலங்கை இனப்படுகொலைக்கு காரணமானவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி பெருமை தேடிக் கொண்ட முதல்வர் அவர்கள், இம்மூவரின் தூக்கு தண்டனையையும் இரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

    மூவரின் உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்று முதல்வர் அவர்கள் மனது வைத்தால், அதை சாதிக்க எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. அவை அனைத்தையும் முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    http://tamil-vaanam.blogspot.com




  • http://tamil-vaanam.blogspot.com


  • [Continue reading...]

    கடும் மன உளைச்சல���ல் பேரறிவாளன், ச���ந்தன், முருகன்

    - 0 comments


    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கும் பேரறிவாளவன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும், அவர்களைத் தனித் தனி செல்களில் அடைத்து வைத்திருப்பதால் ஒவ்வொரு நிமிடத்தையும் மரண வேதனை போல அனுபவித்து வருவதாகவும் அவர்களது வக்கீல் ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார்.

    தூக்குத் தண்டனைக்கு நாள் குறிக்கப்பட்டு விட்ட நிலையில் மூன்று பேரையும் தனி அறைகளில் அடைத்து வைத்துள்ளனர். அவர்களை யார் பார்க்க வந்தாலும் தீவிரமாக விசாரிக்கப்படுகிறது. அவர்களை 24 மணி நேரமும் கண்காணிக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கழிப்பிடம் சென்றாலும் கூட யாராவது சிலர் கண்காணித்தபடி உள்ளனராம்.

    நேற்று மூவருக்கும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் மூவரும் உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    நேற்று மூன்று பேரையும் வழக்கறிஞர்கள் ராஜீவ் காந்தி, பாலாஜி மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் அடங்கிய வக்கீல்கள் குழு சந்தித்துப் பேசியது. பின்னர் இந்த சந்திப்பு குறித்து ராஜீவ் காந்தி கூறுகையில்,

    3 பேரின் தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்காக ஜெயிலில் உள்ள 3 பேரிடமும் தனித்தனியாக பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது.

    மூன்று பேரையும் 10-க்கு 10 அறையில் அடைத்துக் கொடுமைப்படுத்தி வருகின்றனர். இது மரண தண்டனையை விட மோசமானதாக இருப்பதாக பேரறிவாளன் தெரிவித்தார். மேலும் அவர்களைக் கண்காணிக்க 40க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து சிறைத்துறை டிஜிபி டோக்ராவுக்கு பேரறிவாளவன் கடிதம் எழுதியுள்ளார்.

    போலீஸாரின் இந்த செயல் தனக்கு பெரும் மரண வேதனையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துவதாகவும், மரண வேதனையை ஒவ்வொரு நிமிடமும் அனுபவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக தெரிவதாகவும் அவர் கூறியுள்ளார். தனது உயிருக்கு ஏதாவது ஊறு ஏற்பட்டால் அதற்கு போலீஸார்தான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    சிறை போலீஸார் தவிர உளவுத்துறையினரும் அவ்வப்போது வந்து விசாரணை என்ற பெயரில் மூ்வரையும் மேலும் வேதனைப்படுத்துகின்றனர் என்றார் ராஜீவ் காந்தி.

    http://tamil-vaanam.blogspot.com




  • http://tamil-vaanam.blogspot.com


  • [Continue reading...]

    என் அப்பாவுடன் வ���ழ அனுமதியுங்கள் - சோனியாவுக்கு ம��ருகன் மகள் கண்ணீர்க் கடிதம்

    - 0 comments


    என் தந்தையை மன்னித்து விடுங்கள். எனது தாய்க்கு காட்டிய கருணையை எனது தந்தைக்கும் காட்டி, என்னை எனது தந்தையுடன் வாழ அனுமதியுங்கள் என்று முருகன், நளினியின் மகள் அரித்ரா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

    தூக்குக் கயிற்றின் முன்பு முருகன் உள்ளிட்ட மூவர் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களது மரணத்திற்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து அவர்களைக் காப்பாற்ற பல்வேறு வகையான போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் முருகன்-நளினி தம்பதியின் மகள் அரித்ராவும் தனது தந்தையைக் காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்து வருகிறார். தற்போது 20 வயதாகும் அரித்ரா, லண்டனில் வசித்து வருகிறார். இவர் பிறந்தது வேலூர் சிறையில். அன்று முதல் இன்று வரை பெற்றோருடன் சேர்ந்து வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் அரித்ரா.

    நேற்று அவர் தனது தந்தையைக் காப்பாற்ற நடந்து வரும் போராட்டங்களில் தானும் பங்கேற்க விரும்புவதாக தமிழ்த் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கண்ணீருடன் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    சோனியாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஒரு பெண்ணாக, உங்களின் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் மகள், மகன் தங்களது தந்தையை இழந்து வாடும் பிரிவை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

    தந்தை, தாய் இல்லாமல் வாழும் எந்தக் குழந்தையும் எப்படிப்பட்ட சிரமங்களை சந்திக்கும் என்பதை உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.

    இன்று அதே நிலையில்தான் நான் உள்ளேன். பெற்றோர் இருந்தும் அவர்களுடன் சேர்ந்து வாழ முடியாத அவல நிலையில் உள்ளேன். உங்களது மகள் தந்தையை இழந்து வாடுவதைப் போல நானும் தந்தையை இழந்து வாடப் போகிறேன் என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.

    எனது தாயாருக்கு கருணை காட்டி, மனம் இரங்கி, மன்னித்து ஆயுள் தண்டனையாக மாற்றி எனக்கு அருள் புரிந்தீர்கள். இன்று அதேபோல எனது தந்தைக்கும் மனம் இரங்கி, அவரை மன்னித்து எனக்காக அவரது உயிரைக் காப்பாற்றுங்கள். எனது அப்பாவுடன் நான் சேர்ந்து வாழ அனுமதி கொடுங்கள். எனது தந்தையை மன்னியுங்கள் என்று உருக்கமாக கூறியுள்ளார் அரித்ரா.

    http://tamil-vaanam.blogspot.com




  • http://tamil-vaanam.blogspot.com


  • [Continue reading...]

    மூவரையும் தூக்க��லிடுவதை தடுத்து நிறுத்துவதற்கு ��ட்டப்படி அதிகார���் இல்லை: சாமி

    - 0 comments


    முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு விவகாரம் தொடர்பாக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அவ்வறிக்கையில், ''கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் 3 குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதை இப்போது தடுத்து நிறுத்துவதற்கு அரசியலமைப்பு சட்டப்படி அதிகாரம் இல்லை. எனவே நான் குறுக்கிட முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா சரியாகத்தான் கூறியுள்ளார்.

    எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் ஆகஸ்ட் 15-க்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்வேன் என்ற எனது அச்சுறுத்தலின் காரணமாக 12 ஆண்டுகளாக செயலற்று இருந்த மத்திய அரசு இறுதியாக ஒரு முடிவெடுத்துள்ளது.

    செப்டம்பர் 9-ம் தேதி இவர்கள் மூவரையும் தூக்கிலிடும் முடிவில் இதற்குமேலும் குறுக்கீடு இருக்கக்கூடாது.

    மேலும் மற்றொரு குற்றவாளியான நளினிக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதை நீதிமன்றம் ரத்து செய்ய முடியும்'' என்று தெரிவித்துள்ளார்.

    http://tamil-vaanam.blogspot.com




  • http://tamil-vaanam.blogspot.com


  • [Continue reading...]

    உயிரை மாய்த்துக�� கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடாத��ர்கள்: சீமான்

    - 0 comments


    ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடக் கூடாது என்பதற்காக தீயிட்டுக் கொண்டு தன் இன்னுயிரைத் துறந்துள்ள காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த செங்கொடியின் தியாகம் பெரும் மன வேதனையை தருகிறது.

    அவருக்கு எமது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழினத்தின் மீட்சிக்காக நடந்த பல போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவரான தோழர் செங்கொடியின் உயிர் தியாகம் மூன்று பேரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதால் ஏற்பட்ட ஏமாற்றம், ஆற்றாமை ஆகியவற்றின் வெளிப்பாடாகும்.

    எப்படியாவது மூன்று பேரின் உயிரையும் காப்பாற்றிட வேண்டும் என்ற உறுதியான மனவேகத்தில் தன் உடலைத் தீக்கு இரையாக்கிவிட்டார் தோழி செங்கொடி. அவருடைய இந்தத் தியாகம், மரண தண்டனை நிச்சயப்படுத்தப்பட்டுள்ள மூவரின் உயிரை எப்பாடு பட்டாவது காப்பாற்றிட வேண்டும் என்கிற தமிழினத்தின் வேட்கையை பறை சாற்றுகிறது.

    ஆயினும் மூவரின் உயிரைக் காக்க தமிழினம் தீவிரமாகப் போராடி வரும் வேளையில் அதற்கான சட்ட ரீதியான போராட்டத்தை இன்று தொடங்கவுள்ள நிலையில் செங்கொடி உயிர் துறந்திருப்பது வேதனையைத் தருகிறது.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் தமிழினத்தின் மீது தொடுக்கப்பட்ட இனப்படுகொலைப் போரை நிறுத்துமாறு கோரி முத்துக்குமார் தொடங்கி 18 பேர் தீக்குளித்து உயிர் நீத்தனர். ஆனால் மத்திய, மாநில அரசுகள் அவர்களின் உயிர் தியாகத்தை கிஞ்சித்தும் மதிக்கவில்லை.

    இதயமற்ற காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் நீடிக்கும் காலம் வரை மனித உயிருக்கு மதிப்பளிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது தவறு. மனிதனின் உயிர் விலை மதிப்பற்றது. அதனை தண்டனை என்ற பெயரால் கூட சட்டம் பறித்து விடக்கூடாது என்றுதான் நாம் போராடி வருகிறோம்.

    அந்தப் போராட்டத்திற்கு வலு சேர்ப்போம். இன்று தொடங்கும் சட்ட ரீதியான நமது போராட்டம் வெற்றி பெறும், அதன் மூலம் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனை குறைக்கப்படும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதுமட்டுமின்றி, மக்களின் எழுச்சி மரண தண்டனைக்கு எதிராக வலிமை பெற்று வருகிறது.

    எனவே, இதற்கு மேலும் எவரொருவரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

    http://tamil-vaanam.blogspot.com




  • http://tamil-vaanam.blogspot.com


  • [Continue reading...]

    மரண தண்டனையை தூக���கில் போட வேண்டு��்: நக்கீரன் கோபா��் பேச்சு (படங்கள�� இணைப்பு)

    - 0 comments


    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு நிறைவேற்றவிருக்கும் தூக்கு‌த் தண்டனையை ரத்து செய்யக்கோரி, சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌‌றிஞ‌ர்கள் கயல்விழி, அங்கையற்கன்னி, வடிவாம்பாள் ஆகிய மூன்று பேர் சென்னை கோயம்பேடு பேரு‌ந்து நிலையம் அருகே இ‌ன்று 4வது நாளாக உண்ணாவிரதம் இரு‌ந்து வரு‌கி‌ன்றன‌ர்.

    இவ‌ர்களு‌க்கு அ‌ர‌சிய‌ல் க‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌‌ள், நடிக‌ர்க‌ள், இய‌க்குந‌ர்க‌ள் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு தர‌ப்‌பி‌னர் ஆதரவு தெ‌ரி‌வி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.

    இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர். அதில் நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் பங்கேற்றார்.

    மூவரின் தூக்குத்தண்டனைக்கு எதிராகவும், உண்ணாவிரதம் இருக்கும் மூவருக்கு ஆதரவாகவும் நக்கீரன் கோபால் குரல் கொடுத்தார்.

    அவர், ''பொதுவாக நமக்கெல்லாம் இல்லாத தைரியம் இந்த மூன்று பேருக்கும் இருக்கிறது. இதை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

    யாராவது ஒரு கல்லெறியனுமே; அந்த கல்லு இந்த மூன்று பேரின் உருவமாக வந்திருக்கிறது. இன்று 4வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

    தேகம் ஒல்லியாக இருப்பவர்களுக்கு உண்ணாநோன்பு இருப்பதில் கஷ்டம் இருக்காது. ஆனால் உடம்பு குண்டாக இருப்பவர்கள் உண்ணாநோன்பு இருப்பதில் மிகவும் கஷ்டப்படுவார்கள். அப்படி இருந்தும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

    இது பெரிய விசயம். ஒரு விடியலை நோக்கி இந்த மூவரும் உண்ணாவிரதம் இருப்பதை தமிழகமே இன்று கவனிக்கிறது.

    தூக்கில் போட வேண்டும்..... மரண தண்டனையை தூக்கில் போட வேண்டும். இனறைக்கு ஜனநாயம்

    பேசுகிறோம். காந்தியம் பேசுகிறோம். காந்திய முறையில்தான் நாம் சுதந்திரத்தை வாங்கியிருக்கோம் என்று படிக்கிறோம்; சொல்கிறார்கள். காந்திய வழியில்தான் நம் நாடு நடக்கிறது என்கிறார்கள்.

    ஆனால், அரசாங்கம் இன்று மூன்று பேரை காட்டுமிராண்டித்தனமாக தூக்கில் போட்டுத்தான் ஆவேன் என்று தேதியை குறித்திருக்கிறது.

    நாம் காட்டுமிராண்டிகள்தான் என்று சொல்லாமல் சொல்கின்ற ஒரு நிர்வாகத்தின் கீழ்தான் இருக்கின்றோம்.

    ஒரு அன்னா ஹசாரே என்கிற காந்தியவாதி உண்ணாவிரதம் இருக்கிறார். பாராளுமன்றத்தில் இந்த விவகாரத்தை விவாதிக்கிறார்கள். இந்த அளவிற்கு பாராளுமன்றம் இந்த விவகாரத்தை கையில் எடுத்ததற்கு காரணம், மீடியாதான்.

    மீடியாவின் முயற்சியால்தான் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டது. இதனால்தான் மத்திய அரசே பயந்து பாளுமன்றத்தில் லோக்பால் நிறைவேற்றியிருக்கிறது. இதே போல் இந்த மூன்று சகோதரிகளின் உண்ணாவிரதத்தை மீடியாக்கள் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். பிரிவிணை பார்க்காமல் மீடியாக்கள் இந்த விசயத்தில் ஒன்று படவேண்டும்.

    கால அவகாசம் குறைவாக் இருப்பதால் இந்த நிமிடத்தில் இருந்து உறுதிமொழி எடுத்து மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் மீடியாக்கள். ஏன் என்றால் விட்டுவிட்டால் பிடிக்க முடியாது.

    செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரி இந்த விவகாரம் ஆகிவிடக்கூடாது. அதனால் அன்னா ஹசாரே மாதிரியான பொதுவான ஒரு நபரை வைத்து போராடவும் வேண்டும்.

    தூக்குதண்டனையை தடுப்பதற்கு ஒரு குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். இன்னும் பத்து நாட்கள்தான் இருக்கிறது. அதற்குள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மனிதநேயமிக்க அனைவரையும் ஒன்றினைத்து பெரும் போராட்டமாக ஆரம்பித்து மக்கள் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட எழுச்சியால்தான் தூக்குத்தண்டனையை நிறுத்த முடியும்.

    மூன்று உயிர்களுக்காக நேற்று ஒரு தீக்குளித்து இறந்தது. இப்போது மூன்று உயிர்கள் போராடிக்கொண்டிருக்கிறது.

    இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு அனைத்து பத்திரிகை முதலாளிகளையும் சந்தித்து இந்த போராட்டத்தை மக்களிடையே பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்று கெஞ்சிக்கேட்க வேண்டும். அதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

    நிச்சயமாக நக்கீரன் மற்றும் நக்கீரன் சார்ந்த ஊடகம் இந்த பிரச்சனையை மக்களிடம் தொடர்ந்து

    எடுத்துச்செல்லும். மக்கள் எழுச்சி மூலமாக இந்த மூன்று பேரின் மரணதண்டனை நிச்சயமாக நிறுத்தப்படும்.

    நான்காவது நாளாக இந்த பெண்கள் உண்ணாவிரதத்தை தொடர்கிறார்கள். இந்த உண்ணாநோன்பு வெற்றி பெற்ற உண்ணா நோன்பாக முடியும் என்று நம்புகிறேன்'' என்று பேசினார்.




    நக்கீரன்

    http://tamil-vaanam.blogspot.com




  • http://tamil-vaanam.blogspot.com


  • [Continue reading...]

    புயல் கிளம்புது��ேய்.....!!!

    - 0 comments



    எலேய் மக்கா நான் இதோ வாரேன் பஹ்ரைன், ஆனால் என்னை பார்க்க வருகிற மக்காக்கள் பலமான கிப்ட் கொண்டு வந்துதான் என்னை பாக்கோணும் ஜாக்கிரதை, அதுக்காக பிஞ்ச தக்காளி [[விக்கி இல்லை ஹி ஹி]] கல்லு, அழுகின முட்டை, கூமுட்டை, அருவா, கடப்பாரை, சுத்தியல், உளி'ன்னு கொண்டு வந்துராதீக.....!!!

    அடுத்து தயவு செய்து எனக்கு பிளக்ஸ் பேனர், கொடி, கம்பு, இத்யாதிகள் வைத்து பஹ்ரைன் அரபிகளை ஓட வைத்து விடாதீர்கள், ஏர்போர்ட்டை நாற வைத்து விடாதீர்கள், பன்னிகுட்டி சவுதியில இருந்து என்னவெல்லாமோ அனுப்பபோறார்னு எனக்கு அப்பவே தகவல் வந்தாச்சு....!!!

    கக்கு மாணிக்கம் வேற மிரட்டிட்டே இருக்காரு, ஷார்ஜா தாதா ஒருத்தர் என்னை பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்னு மிரட்டுறார், சிபி சனியன் ஒளிஞ்சதுன்னு சந்தோசப்பட்டு குப்புற கவுந்துட்டானாம்.....

    இருங்கடி உங்களுக்கு அங்கே வந்து வேட்டு வைக்கிறேன்....!!


    http://tamil-sex-video.blogspot.com




  • http://tamil-sex-video.blogspot.com


  • [Continue reading...]

    காஞ்சியில் தீக்��ுளித்த செங்கொடி - கூடுதல் தகவல்களுடன் ஒரு அலசல்.

    - 0 comments





    "நிரபரதித் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்வோம்" என்ற போராட்ட வாசகத்தை ஏந்தி நிற்கும் இளம்பெண் தான் செங்கொடி.

    பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, காஞ்சிபுரம் வட்டாச்சியர் அலுவலகம் முன் இன்று மாலை, தீக்குளித்த செங்கொடி, தனது தீக்குளிப்பதற்கு முன்னதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

    "தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்- இப்படிக்கு தோழர் செங்கொடி" என்று அந்த கடிதத்தில் அவர் எழுதியுள்ளார்.

    முத்துக்குமாரைப் போலவே, தாய் இல்லாமல் வளர்ந்த செங்கொடி வறுமையான சூழ்நிலையிலும், கொள்கை உணர்வோடு வாழ்ந்து வந்தவர். இருபத்தி எழு வயது நிறைந்த இந்த பெண்ணை கல்லூரி படிப்பை படிக்க வைத்தது காஞ்சிபுரத்தில் உள்ள மக்கள் மன்றம் என்ற அமைப்பு தான்.

    மக்கள் மன்றம் இப்போது ராஜீவ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு, வரும் ஒன்பதாம் தேதி தூக்குத்தண்டனையை எதிர் நோக்கி காத்திருக்கும் பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரை, மரணத்திலிருந்து மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட செங்கொடியின் மரணம் இப்போது,  பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை தகர்க்க போராடும் தமிழ் உணர்வாளர்களை மட்டுமில்லாது, அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    மூன்று தமிழர்களின் உயிரை காப்பாற்ற நடந்து வரும் போராட்டத்தில், இப்போது ஒரு இளம்பெண் உயிர் பலியாகி இருப்பது வருத்ததை ஏற்படுத்தும் விஷயமாகி விட்டது.

    இலங்கை தமிழர்களின் பிரச்சனையின் போது, முத்துக்குமார் தீக்குளித்தபோதே, இது தவிர்த்திருக்கபட வேண்டும் என்று கருதப்பட்ட நிலையில், இப்போது செங்கொடியின் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

    தமிழர்களுக்காக களத்தில் நின்று போராடுவதற்கு தான் இப்போது இளைஞர்கள் தேவைப்படுகிறார்களே அன்றி உயிரை மாய்த்துக்கொள்ள அல்ல என்பதை தான் தமிழ் இயக்கங்களை சார்ந்தவர்கள் கருத்து.

    செங்கொடியின் போராட்டம், மரண தண்டனைக்கு எதிரான போராட்டத்தின், அனைத்து தரப்பு மக்களின் கவனத்தை ஈர்த்து, போராட்டத்தை தீவிரமாக்கும் என்றாலும் கூட,
    ஒரு மரணத்துக்கு, மற்றொரு மரணம் தீர்வாகி விடாது என்னும் சூழ்நிலையில், இது போன்ற தற்கொலைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது தான் எம் கருத்து.

    தீக்குளித்த செங்கொடியின் ஆத்மா, மூவரின் உயிர் மீட்பால் சாந்தியடையட்டும்.


    http://devadiyal.blogspot.com




  • http://devadiyal.blogspot.com


  • [Continue reading...]

    ஜென் குருவுடன் ச���ல மணி நேரங்கள்- சாரு சந்திப்பு -1

    - 0 comments


    இலக்கிய சந்திப்பு என்றால் டிரையாக இருக்கும் என்ற நிலையை மாற்றி, ஈசிஆரில் அல்ட்டி மேட் ரைட்டர் பங்கு பெறும் இலக்கிய சந்திப்பு என்ற போதே சற்று ஆச்சரியமாக இருந்தது...ஆனால் அடுத்தடுத்து பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன என முதலில் தெரியவில்லை..

     நான் செல்வதற்குள், துல்லியமாக திட்டமிட்டு ஏற்பாடுகளை முடித்து இருந்தார்கள்.. சிலரை முதன்முறையாக சந்த்திக்கிறேன்.. ஆனாலும் பல நாள் பழகியவர்களை சந்திப்பது போலவே இருந்தது... சுரேஷ், மணிவண்ணன், ஞானசேகரன், பாலா, பிரபாகரன், சிவம் , சிபி, செல்வம் மாணிக்கம், மணிகண்டன், சதீஷ், பிரபு ராமகிருஷ்ணன், பார்த்திபன்,கிருபா சங்கர் கார்த்திகேயன், வெற்றி, சிவம், ஜான், வில்லன் வில்லன், சரவண குமார் என ஒவ்வொருவரையும் பற்றியும் நிறைய சொல்லலாம்.. சாருவிடம் இப்படி ஒரு சக்தி வாய்ந்த இளம் படை இருப்பது பெருமையாக இருந்தது..
    சாரு வருவ்தற்கு முன் இலக்கியம், அரசியல் , சினிமா என பல விஷ்யங்கள் குறித்து பேசிக்கொண்டு இருந்தோம். திடீரென பரபரப்பு..

    ஒரு ஜென் குரு காரில் இருந்து இறங்கினார்... அட.. நம்ம சாரு... வித்தியாசமான தோற்றம்...பேச்சிலும் நிறைய வித்தியாசங்கள்...
    பாஸ்கரும், பாத்திபனும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்..சற்று நேரத்துக்கு பின் உரையாடல் தொடங்கியது... கேள்வி கணைகள் பாய்ந்தன.. பதில்களும் கருத்து செறிவுடன் வந்தன...

    *************************************************

    திடீரென அய்யப்பனை தரிசிக்க சென்றீர்களே .. இந்த எண்ணம் எப்படி வந்தது?

    பல காரணங்கள்..
    என் நண்பர் ஒருவரை அடிக்கடி சந்திப்பது வழ்க்கம்..அவரது அய்யப்பன் அனுபவங்கள் ஆச்சர்யமாக இருந்தன,, நேர்மையாக , ய்தார்த்தமாக இருந்தன... அவர் இப்படி சொல்வதே எனக்கு ஓர் அழைப்பாக தோன்றியது..

    வாழ்வில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அம்சமும் ஒரு காரணம்..அமெரிக்காவில் ஒரு மில்லியனர் சற்றும் எதிர்பாராத வகையில் சிறை செல்ல வேண்டியதாகி விட்டது...அவசரத்தில் ஷேவிங் செட் பைக்கு பதில் , ரிவால்வர் பையை எடுத்து வந்ததுதான் அவர் செய்த பிழை.. வாழ்வின் இந்த எதிர்பாராத த்ன்மை, அபத்தம் போன்றவை அச்சமூட்டக்கூடியவை... இதை சமாளிக்கும் வலிமையை பெறுவதன் ஆலயம் சென்றதற்கு ஒரு காரனம்..

    அரசன் போல இருக்கும் ஒருவனை, நிர்வாணப்படுத்தி, கழுதை ஊர்வலம் நடத்தி அசிங்கப்படுத்வது போல சிலர் எனக்கு எதிராக செயல்பட்டனர்... அவர்கள் மேல் எனக்கு இப்போது எந்த கோபமும் இல்லை..மன உளைச்சலும் இல்லை.... அந்த பாதிப்பில் இருந்து விடுபட்டு  மீண்டெழ ஆலய பயணம் தேவைப்பட்டது..எனவே அவர்களும் ஒரு காரணம்...

    சில நாடுகளில் எழுத்தாளனை சிறையில் தள்ளி அவன் வாயை அடைப்பார்கள்.. நம் நாட்டில் போலியான அவதூறுகளால் அவனை அடக்க நினைப்பார்கள்... இதை சமாளிக்க்கும் மனோ வலிமை தேவை

    நீங்கள் எதிர்பார்த்தது சபரிமலையில் கிடைத்ததா?

    வாழ்க்கை என்பதே எதிர்பாராமல் கிடைத்த ஒன்று...  எதிர்பார்ப்புக்கெல்லாம் அப்பாற்பட்டது அய்யப்பன் தரிசனம்... கடவுள் இருக்கிறார் இல்லை. என்பதற்கு அப்பாற்பட்டு, ஒருவர் சபரி மலை செல்லவில்லை என்றால் அவர் வாழ்வில் ஒரு முக்கிய விஷ்யத்தை தவற விடுகிறார் என பொருள்.. அது ஓர் அற்புதம்... அந்த அனுபவத்தை பெறாமல் ஒருவர் இழந்து விட்டால், மிகப்பெரிய ஒன்றை அவர் இழந்து விட்டார் என்று அர்த்தம்..

    ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கோயிலில் முதல் மரியாதை... சுலப்மாக சாமி தரிசனம் செய்யலாம்.. ஏழை கியூவில் நிற்க வேண்டும்... இப்படி ஏற்ற தாழ்வு இருக்கும் கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்?

    இந்த ஏற்ற தாழ்வைத்தான் சீரோ டிகிரி பேசுகிறது..பிச்சாவரம் சந்திப்பில் ஓர் ஆட்டின் கழுத்தை அறுத்து, சமைத்து உண்டு மகிழ்ந்தோம்... ஓர் ஆட்டின் வலி எங்களுக்கு ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறது? என கேட்டு கொண்டேன்..அந்த வலியை என்னால் என்றும் மறக்க முடியாது... புணர்ச்சி முடிந்ததும் இறந்து விடும் பூச்சி பற்றி சீரோ டிகிரியில் எழுதி இருக்கிறேன்... பெண் பூச்சியின் அழைப்பு ஒலி , ஆண் பூச்சிக்கு மரணமாகிறது...
    இது போல எத்தனையோ  ஏற்ற தாழ்வுகள் உலகில்  இருக்கின்றன.. இதற்கு முன் நீங்கள் சொன்ன , விவகாரம் மிக மிக சாதாரணமானது...

    எழுத்தாளனாக இருப்பது துன்பம் மிகுந்த வேலை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.அப்படி இருந்தும் சிலர் ஏன் எழுதுகிறார்கள்?

    பல் காரணங்கள்... எழுத்து மீதான தீராத காதல்...
    எழுத்தின் மீதான அடிக்‌ஷன்
    ஒருவன் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்களை சந்த்திதாலும், மூச்சு விட மற்ப்பதில்லை... எழுத்து மூச்சு போன்ற விஷ்யம்..

    படிப்பவர்கள் சிலராக இருந்தாலும், அவர்கள் காட்டும் அன்பு நிஜம்.. அந்த அன்புக்காக எவ்வளவு சிரமங்களையும் சந்தித்து எழுதலாம்


    ( சீரோ டிகிரியை எப்படி படிப்பது? எழுத்தாளன் ஆவது எப்படி? வாழ்க்கை என்றால் என்ன ? அடுத்த நாவல் எதைப்பற்றியது ? )  அடுத்த பாகத்தில்.... 

    இரண்டாம் பாகம் படிக்க இதை சொடுக்கவும்


    http://thehotstills.blogspot.com




  • http://thehotstills.blogspot.com


  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger