Wednesday 16 October 2013

பாராளுமன்ற தேர்தல்: காங்கிரசை விட பாரதீய ஜனதா அதிக இடங்களை பிடிக்கும் கருத்து கணிப்பில் தகவல் parliament election bjp take more than seat congress

- 0 comments
பாராளுமன்ற தேர்தல்: காங்கிரசை விட பாரதீய ஜனதா அதிக இடங்களை பிடிக்கும்  கருத்து கணிப்பில் தகவல்      parliament election bjp take more than seat congress
பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழும் என்று கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் வருகிற 2014–ம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டசபை தேர்தல் நடக்கிறது. இது முடிந்ததும் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தலை சந்திக்க நாடு முழுவதும் உள்ள தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும், இதர சிறிய கட்சிகளும் இப்போதே தயாராகி வருகின்றன. முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா குஜராத் முதல்– மந்திரி நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளது. அவர் நாடு முழுவதும் இப்போதே சுற்றுப்பயணம் செய்து கட்சி கூட்டங்களில் பேசி வருகிறார்.அதே சமயம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறியில் உள்ளது. தற்போது காங்கிரசில் ராகுல் காந்தி முன்னிலைப் படுத்தப்பட்டு வருகிறார். அவர்தான் பிரதமர் வேட்பாளர் என்று காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருகிறார்கள். என்றாலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.இதற்கிடையே பாரதீய ஜனதா நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து இருப்பதால் அந்த கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும், வட மாநிலங்களில் நரேந்திர மோடி அலை வீசுவதாகவும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.டைம்ஸ் நவ் மற்றும் இந்தியா டி.வி. இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது. அதில் 2014 பாராளுமன்ற தேர்தலில் பாராதீய ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழும் என்று தெரிய வந்துள்ளது.பாராளுமன்றத்தில் மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 543. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 272 இடங்கள் தேவை. வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா 162 தொகுதிகளை கைப்பற்றும். அதன் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 186 இடங்கள் வரை கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.அதே சமயம் காங்கிரசுக்கு வருகிற தேர்தலில் பெரும் இழப்பு ஏற்படும். காங்கிரசுக்கு தனியாக 102 இடங்களும் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 117 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பில் தெரிவிக்கிறது.இடதுசாரிகளுக்கு 32 இடங்களும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 31 இடங்களும், முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சிக்கு 25 இடங்களும், திரிணாமுல் காங்கிரசுக்கு 23 இடஙகளும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த கருத்துக்கணிப்பின் மூலம் பாரதீய ஜனதா தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றாலும் இதர கட்சிகளின் ஆதரவுடன்தான் ஆட்சி அமைக்ககூடிய நிலை ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. எனவே ஆட்சி அமைப்பதில் மாநிலக்கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும்.தற்போது காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்பது முடிவாகவில்லை. பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதாதளம், பிஜூ ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் வெளியேறி விட்டன.இதேபோல் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகள் வெளியேறிவிட்டன. சரத்பவாரின் தேசிய வாத காங்கிரசும் கூட்டணியில் நீடிப்பதா? என்ற இழுபறியில் உள்ளது. மராட்டியத்தில் இந்த இரு கட்சிகளிடையே சுமூக உறவு இல்லை.இதே போல் தேசிய அளவில் 3–வது அணி அமைக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. எனவே இப்போதைய நிலையில் பாரதீய ஜனதா தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும் நிலையில் இருந்தாலும், கூட்டணிகள் உருவாகும் போது நிலைமை மாறும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
[Continue reading...]

தி.மு.க.வில் புதிய பதவி - மு.க.அழகிரி பேட்டி not ask any post in dmk mk alagiri interview

- 0 comments
தி.மு.க.வில் புதிய பதவி எதுவும் கேட்கமாட்டேன்: மு.க.அழகிரி பேட்டி      not ask any post in dmk mk alagiri interview

முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி அமெரிக்காவில் இருந்து ஜெர்மன் வழியாக நள்ளிரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
அதன் விவரம் வருமாறு:-



கேள்வி:- ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?



பதில்:- வெளிநாட்டில் இருந்து இப்போது தான் வந்திருக்கிறேன். வந்து இறங்கியதும் என்னிடம் இந்த கேள்வியை கேட்கிறீர்களே?



கேள்வி:- நாடாளுமன்றத் தேர்தலில் தென்மாவட்டங்களில் தி.மு.க. வெற்றிக்காக பிரசாரம் செய்வீர்களா?



பதில்:- கட்சி தலைமை கேட்டுக் கொண்டால் பிரசாரம் செய்வேன்.



கேள்வி:- தி.மு.க. பொதுக்குழுவில் உங்களுக்கு கட்சியில் புதிய பதவி கேட்பீர்களா?



பதில்:- நான் எதுவும் கேட்கமாட்டேன


இவ்வாறு அவர் கூறினார்.
 ... 
[Continue reading...]

மீண்டும் கனவுக்கன்னி ரம்பா kanavu kanni ramba

- 0 comments

ரம்பா மீண்டும் நடிக்க வந்தது கணவரைப் பிரிந்ததாலா?
by Marikumar

ஒரு காலத்தில் கனவுக்கன்னியாக ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தவர் தொடையழகி ரம்பா. பின்னர் தொழிலதிபர் ஒருவரை மணந்து வெளிநாட்டில் செட்டில் ஆனார்.

தற்போது இரண்டரை வயதில் குழந்தை உள்ளது ரம்பாவிற்கு. இந்நிலையில் தனது அடுத்த இன்னிங்ஸ்க்கு ரெடியாகி விட்டாராம் ரம்பா. சிம்புவின் அக்காவாக தமிழ் எண்ட்ரி கொடுக்க இருக்கிறாராம்.

இனி, அக்கா, அண்ணி போன்ற நல்லா கதாபாத்திரங்கள் மட்டுமே இவரது பெஸ்ட் சாய்ஸாக இருக்குமாம். தமிழ் போலவே தெலுங்கிலும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளாராம் ரம்பா. கணவரைப் பிரிந்ததே ரம்பாவின் திரைஉலக மறு பிரவேசத்திற்கு காரணம் என சொல்லப் படுகிறது.
Share |

[Continue reading...]

குஜராத் ஆஸ்பத்திரியில் ஆசாராம் பாபுவுக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது Asaram underwent potency test in Gujarat hospital

- 0 comments

குஜராத் ஆஸ்பத்திரியில் ஆசாராம் பாபுவுக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது Asaram underwent potency test in Gujarat hospital

Tamil NewsToday,

அகமதாபாத், அக்.16-

குஜராத்தை சேர்ந்த ஆன்மிக தலைவர் ஆசாராம் பாபு (வயது 72), ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் வைத்து உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரை சேர்ந்த 16 வயது பெண் ஒருவரை அவர் கடந்த ஆகஸ்டு மாதம் 15–ந்தேதி இரவு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.

அவரது புகாரின் பேரில் ஆசாராம் மீது போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து ஆசாராம் பாபுவை இந்தூர் ஆசிரமத்தில் ராஜஸ்தான் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் விமானம் மூலம், சம்பவம் நடந்த ஜோத்பூருக்கு அழைத்து வரப்பட்டார்.

ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து அவர் ஜோத்பூரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஜாமின் வழங்கக் கோரி ஆசாராம் சார்பில் ஜோத்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆசாராமின் உடல்நிலை சரியில்லாததால், அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஆனால், அவருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், ஆசாராமை வெளியில் விட்டால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்று வாதாடினார்.

அரசுத் தரப்பு வாதத்தை ஏற்று, ஆசாராமின் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில், குஜராத்தில் உள்ள சூரத் ஆசிரமத்தில் வைத்து ஆசாராம் பாபுவும் அவரது மகன் நாராயண் சாயும் தங்களை கற்பழித்து விட்டதாக அக்கா- தங்கை இருவர் இவர்கள் மீது புகார் அளித்தனர்.

இது தொடர்பாக சந்த்கேடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசாராம் பாபுவை தங்களிடம் விசாரணைக்காக ஒப்படைக்க வேண்டும் என குஜராத் மாநில போலீசார் ஜோத்பூர் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இதற்கு நீதிபதியும் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து, அகமதாபாத் போலீஸ் துணை கமிஷனர் மனோஜ் நினாமா தலைமையிலான போலீசார் ஆசாராம் பாபுவை விமானம் மூலம் பலத்த பாதுகாப்புடன் குஜராத் தலைநகர் அகமதாபாத்திற்கு அழைத்து வந்தனர்.

அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க காந்திநகர் மாஜிஸ்திரேட் கோர்ட் நேற்று அனுமதி அளித்தது.

விசாரணையில் ஒருகட்டமாக உள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆசாராம் பாபுவுக்கு இன்று ஆண்மை தன்மையை உறுதிபடுத்தும் பரிசோதனை நடத்தப்பட்டது.

ஏற்கனவே ராஜஸ்தான் மாநில கோர்ட்டில் நடைபெற்று வரும் கற்பழிப்பு வழக்கில் அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டதும், அவர் முழு ஆண்மை தன்மையுடன் உள்ளார் என மருத்துவ அறிக்கை குறிப்பிட்டதும் நினைவிருக்கலாம்.
...
Show commentsOpen link

[Continue reading...]

மத்திய பிரதேசத்தில் கள்ளக்காதல் ஜோடியை அரை நிர்வாணமாக்கி ஊர்வலம்: 20 பேர் கைது Madhya Pradesh affair pair Semi nude 20 people arrested

- 0 comments

மத்திய பிரதேசத்தில் கள்ளக்காதல் ஜோடியை அரை நிர்வாணமாக்கி ஊர்வலம்: 20 பேர் கைது Madhya Pradesh affair pair Semi nude 20 people arrested
Tamil NewsToday, 02:41

போபால்,அக். 16-

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், கள்ளக்காதல் ஜோடியை அரை நிர்வாணமாக்கி, கரிபூசி ஊர்வலமாக அழைத்துச் சென்று அவமானப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த கிராமத்தில் வசித்து வந்த திருமணமான 35 வயது பெண் ஒருவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் 30 வயது வாலிபருடன் தொடர்பு வைத்துள்ளார். அவர்கள் இருவரும் அடிக்கடி வெளியூர் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இதுதொடர்பாக அந்த பெண்ணின் மாமியார் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டுள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய பஞ்சாயத்தார், கள்ளக் காதல் ஜோடியை அவமானப்படுத்தி தண்டனை வழங்கும்படி உத்தரவிட்டனர்.

அதன்படி, இருவரையும் பொதுமக்கள் பிடித்து அரை நிர்வாணப்படுத்தி கைகளை கட்டியுள்ளனர். பின்னர் அவர்களின் உடலில் கரியைப் பூசி அவமானப்படுத்தி, தெருத்தெருவாக ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

பஞ்சாயத்து கொடுத்த தண்டனையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
...
Show commentsOpen link

[Continue reading...]

பா.ராமச்சந்திர ஆதித்தன் மரணம்: ஜெயலலிதா இரங்கல் ramachandra adityan death Jayalalitha mourned

- 0 comments

பா.ராமச்சந்திர ஆதித்தன் மரணம்: ஜெயலலிதா இரங்கல் ramachandra adityan death Jayalalitha mourned
Tamil NewsToday, 19:05

சென்னை, அக். 16–

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:–

பிரபல பத்திரிகை அதிபரும், "மாலை முரசு" நாளிதழின் நிருவாக ஆசிரியருமான பா.ராமச்சந்திர ஆதித்தன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக போற்றப்படும் பத்திரிகைத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவம் ராமச்சந்திர ஆதித்தனுக்கு உண்டு. "மாலை முரசு" நாளிதழின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கிய ராமச்சந்திர ஆதித்தன், பாமர மக்களும் செய்திகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் செய்திகளை வெளியிட்டு பத்திரிகை உலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றார்.

"கண்மணி" மாத நாவல், "பொன்மணி" மாத இதழ் ஆகியவற்றை நடத்தி வரும் ராமச்சந்திர ஆதித்தன், "கதிரவன்" என்ற நாளிதழையும், "தேவி" என்ற வார இதழையும் சிறிது காலம் நடத்தி வந்தார்.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியை மீட்டெடுப்பதற்காக இவர் ஆற்றிய பங்கினை நான் நன்கு அறிவேன். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், மக்களிடையே நாட்டு நடப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் பெரிதும் துணை புரிந்தவர் ராமச்சந்திர ஆதித்தன்.

எளிமையானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான ராமச்சந்திர ஆதித்தனின் மறைவு பத்திரிகைத் துறைக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.

பா.ராமச்சந்திர ஆதித்தனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பத்திரிகை துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதல்–அமைச்சர் கூறி உள்ளார்.

...
Show commentsOpen link

[Continue reading...]

பா.ராமச்சந்திர ஆதித்தன் மரணம் malai murasu managing director ramachandra adityan death

- 0 comments
பா.ராமச்சந்திர ஆதித்தன் மரணம்      malai murasu managing director ramachandra adityan death

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகன் பா.ராமச்சந்திர ஆதித்தன். மாலைமுரசு நாளிதழின் நிர்வாக இயக்குனராக இருந்து வந்தார். சென்னை அடையாறு காந்திநகர் 3–வது தெருவில் வசித்து வந்த அவர் இன்று காலை 9 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79.பா.ராமச்சந்திர ஆதித்தன் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அடையாறு காந்தி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.பா.ராமச்சந்திர ஆதித்தனின் இறுதிச்சடங்கு நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அதன்பிறகு பெசன்ட் நகர் மயானத்தில் உடல் தகனம் நடைபெறுகிறது.பா.ராமச்சந்திர ஆதித்தனுக்கு, பங்கஜம் அம்மாள் என்ற மனைவியும், இரா.கண்ணன் ஆதித்தன், இரா.கதிரேச ஆதித்தன் ஆகிய 2 மகன்களும், கீதா என்ற மகளும் உள்ளனர்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger