Monday 10 October 2011

ஜாக்சன் துரையும�� அரசியல்வாதிகளு���், பதிவர்களும்....!!!



ஜாக்சன் துரை : எனக்கா எண்ணிக்கை தெரியவில்லை, அகம்பிடித்தவ[னே] சொல்கிறேன் கேள், உன் நிலத்தில் வளையும் விளைச்சலுக்கு கிஸ்தி கொடுக்கவில்லை, எங்கள் பேரரசுக்கு கீழரசாக இருக்க திரைப்பணம் செலுத்தவில்லை, வெகுகாலமாக வரிப்பணமும் வந்து சேரவில்லை, இந்த பாக்கிக்கெல்லாம் வட்டியும் செலுத்தவில்லை....?

கோபலலிதா : கிஸ்தி திரை வரி வட்டி ஹா.....எங்களோடு தேர்தலில் போட்டியிட்டாயா, தெருத்தெருவா பிரச்சாரம் செய்தாயா, குலைஞரை வறுத்து எடுத்தாயா, இல்லை காலைதான் வாருனாயா ஸ்டுப்பிட், பறங்கியர் கம்பெனி ஒன்னும் தமிழ்நாட்டுக்குள்ளே இருக்காது, மானங்கெட்டவனே எச்சரிக்கிறேன் உன்னை, சுசிகலா அந்த நாயை கொஞ்சம் அவுத்து விடு.....ஜாக்சன் அங்கேயே ச்சூ ச்சூ ஆகிறார்...
---------------------------------------------------------------------------

ஜாக்சன் துரை : எனக்கா எண்ணிக்கை தெரியவில்லை, அகம்பிடித்தவனே சொல்கிறேன் கேள், உன் நிலத்தில் வளையும் விளைச்சலுக்கு கிஸ்தி கொடுக்கவில்லை, எங்கள் பேரரசுக்கு கீழரசாக இருக்க திரைப்பணம் செலுத்தவில்லை, வெகுகாலமாக வரிப்பணமும் வந்து சேரவில்லை, இந்த பாக்கிக்கெல்லாம் வட்டியும் செலுத்தவில்லை....?

குலைஞர் : கிஸ்தி திரை வரி வட்டி ம்ம்ம்ம், தம்பி ஜாக்சன் துரை அவர்களே, தாங்கள் சற்று பொறுமையாக இருந்து என் குடும்ப நிலவரங்களை பாருங்கள். தேர்தலிலே நிற்காமல் எம் பி ஆனீர்களா, அமைச்சர் ஆகாமலே ஸ்பெக்ட்ரம்'ல் ஊழல் செய்தீர்களா..? கோடி கோடியாக மக்களின் பணத்தை திண்றீர்களா, அல்லது தாங்கள் எனக்கு மாமனா மச்சானா..?? யாருய்யா இங்கே பி ஏ, பழகிரி'யை உடனே வரச்சொல்.......

ஜாக்சன் துரை : நோ நோ வேணாம் வேணாம் எதுக்கு சும்மா தூங்கிட்டு இருக்கிற ஆளை டிஸ்டப் பண்றீங்க, போடா'ன்னா போயிடப்போறேன்னு, ஜாக்சன் ஓடுகிறார்...
-----------------------------------------------------------------------------

ஜாக்சன் துரை : எனக்கா எண்ணிக்கை தெரியவில்லை, அகம்பிடித்தவனே சொல்கிறேன் கேள், உன் நிலத்தில் வளையும் விளைச்சலுக்கு கிஸ்தி கொடுக்கவில்லை, எங்கள் பேரரசுக்கு கீழரசாக இருக்க திரைப்பணம் செலுத்தவில்லை, வெகுகாலமாக வரிப்பணமும் வந்து சேரவில்லை, இந்த பாக்கிக்கெல்லாம் வட்டியும் செலுத்தவில்லை....?

குஜய்காந்த் : கிஸ்தி திரை வரி வட்டி ஏய், [[கண்ணை குத்த விரலை நீட்டுகிறார்]] என்னோடு ஓல்டு மங்கு ரம்மு அடித்தாயா, அதையும் சோடா ஊத்தாமல் ராவா அடித்தாயா, ஊறுகாயை நக்கினாயா, செட்டிநாட்டு கோழிக்கறி சாப்பிட்டாயா, கடும் வெயிலில் அரை அடித்துவிட்டு பிரச்சாரம் செய்தாயா, எல்லாத்துக்கும் மேல வேட்பாளரை அறைந்தாயா, மானங்கெட்டவனே நீ எனக்கு மாமனா மச்சானா சுதீஷ் மாதிரி, விட்டம்னா பேந்துரும் மண்டை........

ஜாக்சன் குடு குடுன்னு ஓடுறார் ஓடுறார் நான் ஸ்டாப்பாக.......
---------------------------------------------------------------------------------

ஜாக்சன் துரை : எனக்கா எண்ணிக்கை தெரியவில்லை, அகம்பிடித்தவனே சொல்கிறேன் கேள், உன் நிலத்தில் வளையும் விளைச்சலுக்கு கிஸ்தி கொடுக்கவில்லை, எங்கள் பேரரசுக்கு கீழரசாக இருக்க திரைப்பணம் செலுத்தவில்லை, வெகுகாலமாக வரிப்பணமும் வந்து சேரவில்லை, இந்த பாக்கிக்கெல்லாம் வட்டியும் செலுத்தவில்லை....?

பன்மொகன் சிங்[டி] : ஜாக்சனின் காலில் நெடுஞ்சானாக விழுகிறார், விழுந்து கால் சுண்டு விரலை பிடித்துக்கொண்டு, மிஸ்டர் ஜாக்சன் நீங்க சரியா கணக்கை செக் பண்ணாம வந்துட்டீங்கன்னு நினைக்கிறேன், நான் உங்களுக்கு வட்டிக்கு குட்டி, குட்டிக்கு வட்டியெல்லாம் ஒரு மாசத்துக்கு முன்பே அனுப்புறது வழக்கம் என்பதை தங்கள் சமூகத்துக்கு தெரிவித்து கொள்கிறேன்.....

சூனியா பூந்தி ஓடி வருகிறார்....

சூனியா பூந்தி : மிஸ்டர் ஜாக்சன் விடுங்க விடுங்க அவர் நம்ம சிங்கிடி'தான் அதனால அவரை விட்டுருங்க.......

சிங்கு ஜாக்சன் போகும் வரை காலில் இருந்து எழும்பாமல் கிடக்கிறார்...
----------------------------------------------------------------------------------------

ஜாக்சன் துரை : எனக்கா எண்ணிக்கை தெரியவில்லை, அகம்பிடித்தவனே சொல்கிறேன் கேள், உன் நிலத்தில் வளையும் விளைச்சலுக்கு கிஸ்தி கொடுக்கவில்லை, எங்கள் பேரரசுக்கு கீழரசாக இருக்க திரைப்பணம் செலுத்தவில்லை, வெகுகாலமாக வரிப்பணமும் வந்து சேரவில்லை, இந்த பாக்கிக்கெல்லாம் வட்டியும் செலுத்தவில்லை....?

போபதாஸ் : கிஸ்தி திரை வரி வட்டி ச்சே, எங்களோடு ரோட்டுக்கு வந்தாயா, ஜாதி கட்சி ஆரம்பித்தாயா, ரோட்டின் மரங்களை வெட்டி தள்ளினாயா, பசுமை தாயகம் அமைத்து மரம் நட்டாயா, பண்பு மணிக்கு அமைச்சர் பதவி வாங்கி தந்தாயா, இல்லை குரங்கு மாதிரி கட்சி விட்டு கட்சி தாவினாயா, மானம் ரோஷம் கெட்டவனே உன் தலையை பைலாபுரம் தோட்டத்தின் மரத்துக்கு உரமாக புதைத்து விடுவேன். கூப்புடுங்கடா மாடுவேட்டி பொரு'வை.....

ஜாக்சன் குதிரையில் தொங்கியபடி ஓடுகிறார்...
----------------------------------------------------------------------------------------

ஜாக்சன் துரை : எனக்கா எண்ணிக்கை தெரியவில்லை, அகம்பிடித்தவனே சொல்கிறேன் கேள், உன் நிலத்தில் வளையும் விளைச்சலுக்கு கிஸ்தி கொடுக்கவில்லை, எங்கள் பேரரசுக்கு கீழரசாக இருக்க திரைப்பணம் செலுத்தவில்லை, வெகுகாலமாக வரிப்பணமும் வந்து சேரவில்லை, இந்த பாக்கிக்கெல்லாம் வட்டியும் செலுத்தவில்லை....?

பைகோ : கிஸ்தி திரை வரி வட்டி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், கார்லிகோ சொன்னானே, மாலிசிகோ சொன்னானே, கிலோபிசியா சொன்னானே, அவ்வ்வ்வ்வ்வ்வ் குடிலினோ சொன்னானே அவ்வ்வ்வ்வ்வ்வ்.......என அழுது புரண்டு உருள்கிறார்.....

ஜாக்சன் எஸ்கேப்......
------------------------------------------------------------------------------------

ஜாக்சன் துரை : எனக்கா எண்ணிக்கை தெரியவில்லை, அகம்பிடித்தவனே சொல்கிறேன் கேள், உன் நிலத்தில் வளையும் விளைச்சலுக்கு கிஸ்தி கொடுக்கவில்லை, எங்கள் பேரரசுக்கு கீழரசாக இருக்க திரைப்பணம் செலுத்தவில்லை, வெகுகாலமாக வரிப்பணமும் வந்து சேரவில்லை, இந்த பாக்கிக்கெல்லாம் வட்டியும் செலுத்தவில்லை....?

சென்னிமலை சிபி : கிஸ்தி திரை வரி வட்டி ஹா, என்னோடு பதிவுலகம் வந்தாயா, அலக்சா ரேங் பார்த்தாயா, ஏன் காப்பிபேஸ்ட்'டாவது பண்ணினாயா, விகடனை ஒரு வரி பாக்கி இல்லாமல் எழுதினாயா, மானங்கெட்டவனே என்னோடு கில்மா படம் காண வந்தாயா, அங்கே கில்மா படத்தில்  கொஞ்சி விளையாடும் சேச்சிகளை கண்டாயா, ஓடிவிடு இல்லையேல் மறுபடியும் காப்பி பேஸ்ட் எழுதி கொண்டேபுடுவேன் என கர்ஜிக்க......ஓடுகிறார் ஜாக்சன்....
----------------------------------------------------------------------------------

ஜாக்சன் துரை : எனக்கா எண்ணிக்கை தெரியவில்லை, அகம்பிடித்தவனே சொல்கிறேன் கேள், உன் நிலத்தில் வளையும் விளைச்சலுக்கு கிஸ்தி கொடுக்கவில்லை, எங்கள் பேரரசுக்கு கீழரசாக இருக்க திரைப்பணம் செலுத்தவில்லை, வெகுகாலமாக வரிப்பணமும் வந்து சேரவில்லை, இந்த பாக்கிக்கெல்லாம் வட்டியும் செலுத்தவில்லை....?

சப்ரமனியம் சுவாமி : கிஸ்தி திரை வரி வட்டி ஹி, என்னோடு கோர்ட்டுக்கு வந்தாயா, செருப்பு விளக்குமாறு அடி வாங்குனாயா, கோர்ட்டுக்குள் வைத்து அழுகுன முட்டை அடியாவது வாங்குனாயா, ஸ்பெக்ட்ரம்'மில் பங்கு தராததுக்கு கோர்ட்டில் வழக்காவது தொடர்ந்தாயா மானங்கெட்டவனே, நீ எத்தனை கில்மா'க்களுடன் லீலை செய்தாய் என்பது பற்றி முழு ஆதாரமும் என்கிட்டே இருக்கு இப்பவே கோர்ட் போறேன் வழியை விடு......அய்யய்யோ வட்டி வாங்க வந்த இடத்திலே என்னையை மாட்டி விடுராங்களேன்னு கெஞ்சிகிறார் ஜாக்சன்...
-------------------------------------------------------------------------------------
ஜாக்சன் துரை : எனக்கா எண்ணிக்கை தெரியவில்லை, அகம்பிடித்தவனே சொல்கிறேன் கேள், உன் நிலத்தில் வளையும் விளைச்சலுக்கு கிஸ்தி கொடுக்கவில்லை, எங்கள் பேரரசுக்கு கீழரசாக இருக்க திரைப்பணம் செலுத்தவில்லை, வெகுகாலமாக வரிப்பணமும் வந்து சேரவில்லை, இந்த பாக்கிக்கெல்லாம் வட்டியும் செலுத்தவில்லை....?

சங்கரலிங்கம் ஆபீசர் : கிஸ்தி திரை வரி வட்டி ம்ம்ம்ம் : பெல்ட்டை சறேல்னு உருவுகிறார், ஜாக்சன் துரை கால் மட்டும் கிடு கிடுன்னு ஆடுது....என்னோடு ரெய்டுக்கு வந்தாயா, மாம்பழ கலப்படங்களை பிடித்தாயா, கைது செய்தாயா, கோர்ட்டில் நிறுத்தினாயா, தண்டனை வாங்கி கொடுத்தாயா, பதிவர்களுக்கு இடைக்கிடை வந்து பெல்ட் அடி கொடுத்தாயா மானங்கெட்டவனே, யாரை கேட்கிறாய் கிஸ்தி, யாரிடம் கேட்கிறாய் திரை, ஒரு ஆபீசரிடமே வட்டி கேட்கிறாயா...?? எலேய் திவானந்தா ஓடி வாலேய் இங்கே....

திவானந்தா : என்னங்க ஆபீசர் என்னா சொல்றான் துரை....???

ஆபீசர் : அவனை ரெண்டு கையையும் பின்னால கட்டி பிடிச்சுக்கோ...எனக்கூற, திவானந்தா லுங்கியை கோவணம் போல தூக்கி கட்டிட்டு ஜாக்சனை பிடித்துக்கொள்ள, வெள்ளையனை ஆபீசர் பெல்ட்டால் பகடை ஆடுகிறார்.....
-------------------------------------------------------------------------------------------

"மனோ"தத்துவம் : சும்மா இருக்குற வேலியை பிடுங்கினால் பாம்பு கடிக்கும்.




http://dinasarinews.blogspot.com



  • http://dinasarinews.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger