Saturday 31 August 2013

டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை 3 years sentence to juvenile in Delhi molestation case

- 1 comments

டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் முதல் தீர்ப்பு: குற்றம் சாட்டப்பட்டவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை 3 years sentence to juvenile in Delhi molestation case

டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக அடித்து கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் ராம்சிங் என்ற குற்றவாளி திகார் சிறையில் தற்கொலை செய்துகொண்டான். இவர்களில் ஒரு குற்றவாளிக்கு 17 வயதே ஆவதால் அவன் மீதான வழக்கு மட்டும் டெல்லியில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
[Continue reading...]

Friday 30 August 2013

15 மொழிகளில் பதில் அளிக்கும் நரேந்திர மோடி twitter website 15 languages answer modi

- 0 comments

டுவிட்டர் இணையதளத்தில் 15 மொழிகளில் பதில் அளிக்கும் நரேந்திர மோடி twitter website 15 languages answer modi 

 

குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி இணைய தளம் டுவிட்டரில் தனது கருத்தக்களை வெளியிட்டு வருகிறார். அதில் அவர் பல மொழிகளையும் பயன்படுத்துகிறார். சமீபத்தில் உடல்நலம் குன்றிய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு நரேந்திர மோடி டுவிட்டர் இணைய தளத்தில் அவர் குணம் அடைய வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இந்த தகவலை அவர் ஆங்கிலம் குஜராத்தி மொழிகளில் மட்டுமல்லாது உருது, இந்தி, வங்காளி உள்பட 13 மொழிகளில் வெளியிட்டு இருந்தார்.
[Continue reading...]

மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய்க்கு 41 ஆண்டு சிறைத்தண்டனை

- 0 comments

மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய
தாய்க்கு 41 ஆண்டு சிறைத்தண்டனை:
சென்னை மகளிர் கோர்ட் தீர்ப்பு daughters
forced prostitution mother jail 41 years

பெற்ற மகள்களை பாலியல் தொழிலில்
ஈடுபடுத்திய
புதுச்சேரி தாயாருக்கு 41
ஆண்டு சிறைத்தண்டனை விதித்து
சென்னை மகளிர் நீதிமன்றம்
தீர்ப்பளித்தது.
மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய
புதுச்சேரியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ
என்பவரை கடந்த 2005-ம்
ஆண்டு சென்னையில் சி.பி.சி.ஐ.டி.
போலீசார் கைது செய்தனர்.
அவருக்கு உதவியாக இருந்த
புரோக்கர்கள் ஆனந்த், கர்ணன் ஆகியோரும்
கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான
வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில்
நடைபெற்று வந்தது.
7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த
இவ்வழக்கின்
விசாரணை இப்போது முடிவடைந்து
இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றங்கள்
நிரூபணமானதால், ஜெயஸ்ரீக்கு இந்திய
தண்டனைச் சட்டத்தின்கீழ்
இரண்டு முறை தலா 10 ஆண்டுகள்
சிறைத் தண்டனையும், விபச்சார
தடுப்புச் சட்டத்தின்கீழ் 3 முறை தலா 7
ஆண்டு சிறைத்தண்டனையும்
விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
புரோக்கர்கள் இருவருக்கும் தலா 10
ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது
.
ஜெயஸ்ரீக்கு விதிக்கப்பட்ட 41
ஆண்டு சிறைத் தண்டனையையும் அவர்
10 ஆண்டுகளில் அனுபவிக்க வேண்டும்
என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

[Continue reading...]

பெண்களின் தலைமுறை மாற்றங்கள்.... Message from தமிழால் இணைவோம்

- 0 comments

தமிழால் இணைவோம்:
பெண்களின் தலைமுறை மாற்றங்கள்....

1. நம்ம அம்மாவெல்லாம் சிக்கு கோலம் போட்டாங்க.
நமக்கு ரங்கோலி தான் போடத் தெரியும். சிக்கு கோலம் நம்மகிட்ட சிக்கித் தவிக்கும்.

2. நம்ம அம்மாவெல்லாம் கை முறுக்கு சுட்டு இருப்பாங்க. நமக்கு கேரட் அல்வாவும், குலோப் ஜாமும் தான் செய்யத் தெரியும்.

3. நம்ம அம்மாவெல்லாம் அம்மில அரைச்சு குழம்பு வச்சுருப்பாங்க. நமக்கு சக்தி, ஆச்சி ன்னு மாசாலா தூள கண்ணுல காட்டுனாத்தான் குழம்பு வைக்கவே தெரியும்.

4. நம்ம அம்மாவெல்லாம் சேலைல 3 அல்லது 4 மடிப்பு வச்சுத் தான் கட்டுவாங்க.நாம 5 இல்லை 6 வச்சுத் தான் கட்டுவோம்.

5. நம்ம அம்மாவெல்லாம் மஞ்சள் பூசி குங்குமம் வச்சாங்க. நாம மஞ்ச பூசுனாலும் மூஞ்சுல ஒட்டாத கஸ்தூரி மஞ்சளைத் தான் பூசுவோம்.ஸ்டிக்கர் பொட்டு தான் வைப்போம்.

6. நம்ம அம்மாவெல்லாம் பட்டையா தான் கொலுசு போடுவாங்க. நமக்கு மெலிசா உள்ள கொலுசு தான் புடிக்கும். அதுலயும் நடக்கறப்ப சத்தம் அதிகம் வரக்கூடாது.

7. நம்ம அம்மாவெல்லாம் மூக்குத்தி போட்டு இருப்பாங்க. நமக்கு அதுலாம் புடிக்காது. ஆனா காதுல 4 ஓட்ட போட்டு 4 கம்மல் மாட்ட புடிக்கும்.

8. நம்ம அம்மாவெல்லாம், எத்தனை பேருக்கு சமைக்க சொன்னாலும் சரியா அளவுபாத்து சமைப்பாங்க. நமக்கும் அளவுக்கும் ரொம்ப தூரம். ஒன்னு பத்தாம சமைப்போம் இல்லன்னா பத்து நாளைக்கு வர மாறி சேர்த்து சமைப்போம்.

# உண்மையா, இல்லையா??

-ஆதிரா

[Continue reading...]

ஆண்களின் தலைமுறை மாற்றங்கள்.. Message from தமிழால் இணைவோம்

- 0 comments

தமிழால் இணைவோம்:
ஆண்களின் தலைமுறை மாற்றங்கள்..

1.நம்ம அப்பாவெல்லாம் பெல்ஸ் பேன்ட்டும், கட்டம் போட்ட சட்டையும் தான் அதிகம் அணிந்தார்கள். நாம் ஜீன்சும் டீ ஷர்ட்டும் தான் அதிகம் அணிகிறோம்.

2.நம்ம அப்பாவெல்லாம் சீப்பை வைத்து தான் தலை வாரினார்கள். நமக்கு கைகளை சீப்பாக்கி தலைவாரினால் தான் பிடிக்கும்.

3.நம்ம அப்பாவெல்லாம் மீசையை வீரத்தின் அடையாளமாகப் பார்த்தார்கள். நாம் வயதின் அடையாளமாகப் பார்க்கிறோம். மீசை பெரிதாய் இருந்தால் வயதானது போல் தெரியும் என்று அடிக்கடி ட்ரிம் செய்து விடுவோம்.

4.நம்ம அப்பாவெல்லாம் மாதம் ஒரு முறை தலைமுடியை சுத்தமாக ஒட்ட வெட்டிவிடுவார்கள். நாம் மாதம் இருமுறை வெட்டினாலும் பட்டும் படாமல் தான் வெட்டுவோம்.இல்லைன்னா கடைக்காரரிடம் சண்டைக்கு போவோம்.

5.நம்ம அப்பாவெல்லாம் டிவிஎஸ் எக்ஸ்செல் வண்டிதான் ஓட்டினார்கள். நாம இப்ப அதையெல்லாம் வண்டியாகவே ஒற்றுக்கொள்ள மாட்டோம்.

6.நம்ம அப்பாவெல்லாம் முக்கியமான செய்தியை நேர்ல பாத்து தான் பேசுவாங்க. நாம எவ்ளோ பெரிய செய்தியையும் சின்னோண்டு சம்ஸ் ல முடிச்சுருவோம்.

7.நம்ம அப்பாவெல்லாம் அவங்க அப்பாகிட்ட வெளிய போறப்ப சொல்லிட்டு தான் போவாங்க. நாம போயிட்டு வந்துக் கூட சொல்ல மாட்டோம் எங்க போனோம்ன்னு.

8.நம்ம அப்பாவெல்லாம் கஞ்சிக்கே கஷ்டம்னாலும் கடன் வாங்க யோசிப்பாங்க.நாம கடன் வாங்கி கார் ரே வாங்குவோம்.

-ஆதிரா

Visit our Page -► தமிழால் இணைவோம்

[Continue reading...]

டாப்-20 ஊழல்கள் Top 20 scams

- 0 comments

இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய டாப் 20 ஊழல்கள் சிறப்பு பார்வை Top 20 scams that made India ashamed

கடுமையான பொருளாதார சிக்கலில் இந்தியா சிக்கித் தவிக்கும்   இவ்வேளையில், நமது நாட்டில் நடைபெற்ற டாப்-20 ஊழல்களை தெரிந்துக் கொள்வது நலமாக இருக்கும்.

1987-போபர்ஸ் ஊழல்


சுவீடன் நாட்டில் இருந்து இந்திய ராணுவத்துக்கு போபர்ஸ் ரக பீரங்கிகள் வாங்குவதற்காக போடப்பட்ட 285 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் முன்னாள் அரசியல்வாதிகள் சிலர் கமிஷன் பெற்றதாக குற்றச்சாட்டு. 13-7-2013 அன்று இந்த ஊழலின் மையப்புள்ளியான குவாத்ரோச்சியின் மரணத்துக்கு பின்னர் இந்த ஊழல் வழக்கு கைவிடப்பட்டது.

1990-ஹவாலா ஊழல்

பா.ஜ.க. ஆட்சி காலத்தில் பிரபல ஹவாலா ஏஜெண்ட்கள் ஜெயின் சகோதரர்கள் மூலம் இந்திய அரசியல்வாதிகள் சுமார் 18 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு. இவ்விவகாரத்தில் முன்னாள் துணை பிரதமர் அத்வானி உள்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. போதுமான ஆதாரங்கள் இல்லாததால் இவ்வழக்கில் யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை.

1992-பங்குச்சந்தை ஊழல்

போலி வங்கி ஆவணங்களின் மூலம் பங்குச் சந்தையில் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு.  குற்றம் சாட்டப்பட்ட ஹர்ஷத் மேத்தா மீது அவர் சாகும் 2001 வரை வழக்கு நடைபெற்றது. அவரது மரணத்துக்கு பின்னர் இவ்வழக்கு கைவிடப்பட்டது.

1996-கால்நடை தீவன ஊழல்

பீகார் மாநில முதல் மந்திரியாக லல்லு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது கால்நடைகளுக்கு தீவனங்கள் வாங்கியதாக போலி ரசீதுகள் தயாரித்து சுமார் ஆயிரம் கோடி ரூபாய் சுரண்டியதாக குற்றச்சாட்டு.

ஊழல் உறுதி செய்யப்பட்டதால் லல்லு பிரசாத் யாதவ் பதவி விலகல். வழக்கு இன்னும் நடைபெற்று வருகிறது.

2001-பங்குச்சந்தை ஊழல்

போலி ஆவணங்களின் மூலம் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்வதாக கூறி கனரா வங்கியில் 48 கோடி ரூபாய் மோசடி செய்த கேத்தன் பரேக்குக்கு 2017 வரை பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய தடை.

2003-தாஜ் காரிடர் ஊழல்

உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவில் யமுனை நதிக்கரையோரம் அமைந்துள்ள தாஜ்மஹாலை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றுலாவாசிகளை கவரும் வண்ணம் மேம்படுத்த மாயாவதியின் ஆட்சிக் காலத்தில் 175 கோடி ரூபாயில் திட்டம் தீட்டப்பட்டது.

இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர், தனது பதவி காலத்தில் 1.1 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்ற மாயாவதியின் சொத்து மதிப்பு 15 கோடி ரூபாயாக உயர்ந்தது. ஒரேயொரு வங்கி கணக்கில் மட்டும் 2 1/2  கோடி ரூபாய் பிடிபட்டது. இந்த ஊழல் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

2005-நீர் மூழ்கி கப்பல் ஊழல்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் நிறுவனமான தாலேஸ் தயாரிப்பில் ஸ்கார்பென் நீர்மூழ்கி போர் கப்பல்களை வாங்க தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிதி மந்திரியாக இருந்த 2005ம் ஆண்டு 19 ஆயிரம் கோடி ரூபாயில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை பெற தாலேஸ் நிறுவனம் இந்திய அரசியல்வாதிகளுக்கு ரூ.500 கோடி லஞ்சம் தந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

பின் நாளில், இந்த ஊழலை தூக்கி சாப்பிடும் அளவுக்கு அடுக்கடுக்காக பெருகி வந்த இதர ஊழல்களில், நீர்மூழ்கி கப்பல் ஊழல் விவகாரம் மறக்கடிக்கப்பட்டது.

2008-ஓட்டுபோட எம்.பி.க்களுக்கு லஞ்சம்

22-7-2008 அன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு காங்கிரஸ் கட்சி லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை ஆதரித்து வாக்களிப்பதற்காக ஒரு எம்.பி.க்கு 10 கோடி ரூபாய் வரை காங்கிரஸ் தலைவர் சதீஷ் சர்மா தந்ததாக குற்றம் சாட்டிய பா.ஜ.க. எம்.பி.க்கள் அந்த பணப்பையுடன் வந்து பாராளுமன்றத்தில் புயலை ஏற்படுத்தினர்.

2008-மதுகோடா ஊழல்

2006 முதல் 2008 வரை இரண்டே ஆண்டுகள் ஜார்கண்ட் முதல் மந்திரியாக இருந்த மதுகோடா 2 ஆயிரம் கோடியை கொள்ளையடித்து பல்வேறு வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டன.

விசாரணை நடைபெற்று வருகிறது. சிறை தண்டனை அனுபவித்து வந்த மதுகோடா சமீபத்தில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

2009-சத்யம் நிறுவன ஊழல்

பங்குகளின் மதிப்பை அதிகரிக்கச் செய்வதற்காக உண்மையான வரவு-செலவு அறிக்கையை மாற்றி ரூ.300 கோடி அதிகம் சம்பாதித்தது போல் கணக்கு காட்டியதாக சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு மீது குற்றச்சாட்டு. வழக்கு நடைபெற்று வருகிறது.

2010-பெல்லாரி சுரங்க ஊழல்

கர்நாடக முதல் மந்திரியாக எடியூரப்பா பதவி வகித்த போது ரெட்டி சகோதரர்கள் எனப்படும் கருணாகர ரெட்டி மற்றும் ஜனார்த்தன ரெட்டி ஆகியோருக்கு முறைகேடான வகையில் சுரங்க உரிமம் அளித்த வகையில் மாநில அரசுக்கு 16 ஆயிரத்து 85 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு.

ரெட்டி சகோதரர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.

2010-காமன்வெல்த் விளையாட்டு ஊழல்

2010-ம் ஆண்டு புதுடெல்லியில் காமன்வெல்த் நாடுகள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற போது இப்போட்டியின் அமைப்பாளராக செயல்பட்ட சுரேஷ் கல்மாடி பல்வேறு காண்டிராக்ட்களில் ஊழல் செய்து நாட்டுக்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு. வழக்கு நடைபெற்று வருகிறது.

2010- 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்

2-ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை தொலைத்தொடர்புக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அத்துறையின் முன்னாள் மந்திரி ஆ.ராசா இந்திய அரசுக்கு ரூ.30 ஆயிரத்து 984 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக சி.பி.ஐ. குற்றச்சாட்டு.

இந்த இழப்பை சி.ஏ.ஜி. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என யூகத்தின் அடிப்படையில் கூறியிருந்தது. இந்த குற்றச்சாட்டையடுத்து ஆ.ராசா பதவி விலக நேரிட்டது. வழக்கு நடைபெற்று வருகிறது.

2011-ஆதர்ஷ் ஊழல்

கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு வழங்குவதற்காக கட்டப்பட்ட 31 மாடி ஆதர்ஷ் குடியிருப்பில், சட்டமீறலாக அரசியல்வாதிகளும், உயிருடன் உள்ள ராணுவ உயரதிகாரிகளும் ஒதுக்கீடு பெற்று பலனடைந்ததாக குற்றச்சாட்டு.

இதில், தற்போதைய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, அப்போதைய மகாராஷ்டிரா முதல் மந்திரி அசோக் சவான் ஆகியோர் பலன் அடைந்ததை வருமான வரித்துறை, சி.பி.ஐ. ஆகியவை நடத்திய விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, மகாராஷ்டிரா முதல் மந்திரி அசோக் சவான் பதவி விலகினார்.

2011-ஆண்ட்ரிக்ஸ் தேவா ஊழல்

இந்திய விண்வெளி துறையான ஆண்ட்ரிக்ஸ் தேவா மல்டிமீடியா நிறுவனத்துக்கு 70 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ஜி.சாட் செயற்கைக்கோளில் இருந்து ஒதுக்கீடு செய்து அரசுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு.

2011-டாட்ரா டிரக் ஊழல்

விதிமுறைகளை மீறிய வகையில் லண்டனை சேர்ந்த ஓர் இடைத்தரகரின் மூலம் ராணுவத்துக்கு 600 டாட்ரா ரக வாகனங்களை வாங்கிய வகையில் கடந்த 14 ஆண்டுகளாக ராணுவ உயரதிகாரிகள் 750 கோடி ரூபாய் வரை கமிஷன் பெற்றதாக குற்றச்சாட்டு.

இந்த குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் விதமாக முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், டாட்ரா நிறுவனம் எனக்கு கூட 14 கோடி ரூபாய் லஞ்சமாக தர சிலர் முன் வந்தனர். நான் அதை மறுத்து விட்டேன் என கூறியிருந்தார்.

இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.

2012-நிலக்கரி சுரங்க ஊழல்

2004-2009க்கு இடைப்பட்ட காலத்தில் தனியாருக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி. அறிக்கை குற்றம் சாட்டியது. பின்னர் இந்த இழப்பு 1.86 லட்சம் கோடி தான் என சி.ஏ.ஜி. பல்டி அடித்தது.

இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.

2013-வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல்

இந்திய விமானப் படைக்கு இத்தாலியில் உள்ள பின் மெக்கானிக்கா நிறுவனத்திடமிருந்து 12 வி.வி.ஐ.பி. (மிக முக்கியமான தலைவர்களை ஏற்றிச் செல்லும்) ஹெலிகாப்டர்களை வாங்க 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதில், இந்திய விமானப் படையின் முன்னாள் தளபதி தியாகி உள்பட பல்வேறு அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தை பெற்ற பின் மெக்கானிக்கா நிறுவனத்திடமிருந்து ரூ.370 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு.

பாதுகாப்பு மந்திரி அந்தோணியின் உத்தரவின்பேரில் மேலிட விசாரணை நடைபெற்று வருகிறது.

2013-ரெயில்கேட் ஊழல்

ரெயில்வே துறையின் ஒப்பந்தங்களை வழங்குவதாக உறுதியளித்து, ஒப்பந்தகாரர்களான இருவரிடமிருந்து 90 லட்சம் ரூபாயை பவன்குமார் பன்சாலின் மருமகன் லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு. பவன்குமார் பன்சால் பதவி விலக நேரிட்டது. விசாரணை நடைபெற்று வருகிறது.

2013-உ.பி. சுகாதார ஊழல்

உத்தரபிரதேச முதல் மந்திரியாக மாயாவதி பொறுப்பேற்றிருந்தபோது, கிராமப்புற சுகாதார நிதியில் இருந்து 10 ஆயிரம் கோடி ரூபாய் சுரண்டப்பட்டதாக குற்றச்சாட்டு. சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.

மொத்தத்தில், இந்தியாவில் 1992 முதல் இதுவரை வெளிச்சத்திற்கு வந்த ஊழல்களில் மட்டும் 80 லட்சம் கோடி ரூபாய்க்கும் அரசியல்வாதிகளின் பைகளை சென்றடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
[Continue reading...]

பொல்லாதவரம் பொருளாதாரம் tamil kavithai

- 0 comments

பொல்லாதவரம்  பொருளாதாரம்

====காலை முதல்
====மாலை வரை
====உழைத்து
====வாங்கிவந்த
====காசுக்கு
====நிம்மதியாய்
====உண்ண
====முடியவில்லை
====ஒருவேளை உணவு
====பொல்லாதவரமாய்
====போனது
====பொருளாதாரம் ...
                      ..கவியாழினி.

[Continue reading...]

Thursday 29 August 2013

தேர்தலுக்காக, உணவு பாதுகாப்பு சட்டம் For the election Congress introduced food safety

- 0 comments

தேர்தலுக்காக, உணவு பாதுகாப்பு சட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்துள்ளது: சீமான் பேச்சு For the election Congress introduced food safety law seeman speech 

 காரைக்கால் நகராட்சி திடலில், நாம் தமிழர் கட்சியின் புதுச்சேரி மாநில மகளிர் பாசறை சார்பில் வீரத்தமிழச்சி செங்கொடி நினைவுநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

செங்கொடி ஏன் வீரத்தமிழச்சியாக, வீரமங்கையாக போற்றப்படுகிறாள்? 10 பேர்கள் சேர்ந்து ஒருவனை வீழ்த்துவது வீரம் அல்ல. தனது உயிரைக் கொடுத்து இன்னொரு உயிரை காப்பதுதான் வீரமாகும். அப்படித்தான் தனது உயிரைக் கொடுத்து 3 அண்ணன்களின் உயிரை அவள் காத்துள்ளார். அதனால்தான் அவள் வீரத்தமிழச்சியாகவும், வீரமங்கையாகவும் போற்றப்படுகிறாள்.

தமிழர்களை இனவெறியால் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் ஏற்றி அவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள். அவனுக்கு ஒரு தோட்டா போதாதா? அது தேவையில்லை. எங்களுக்கு வேண்டியது எல்லாம் நாடு ஒன்று மட்டும்தான்.

மரணம் தண்டனையாக இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கருத்து. உணவுப்பாதுகாப்பு மசோதா என்ற ஒரு மசோதாவை மத்திய அரசு பாராளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளுக்கு பிறகு இப்பொழுதுதான் சோற்றுக்கு உத்தரவாதம் கொண்டு வருகிறார்கள்.

இது சோனியாவின் கனவுத் திட்டமாம். 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு, 10-வது ஆண்டு இறுதியில் இந்த உணவு பாதுகாப்பு மசோதாவை கொண்டு வருவதன் அவசியம் என்ன? ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே கொண்டு வந்திருக்க வேண்டியதுதானே? தேர்தல் வர உள்ளதால், இதன் மூலம் ஓட்டை பிரிக்க நினைக்கிறார்கள்.

நமது நாட்டு ரூபாயின் மதிப்பு சர்வதேச அளவில் சரிந்துள்ளது. உலகளவில் ஊழல் நிறைந்த நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நிலக்கரி ஊழலில் பிரதமர் சம்பந்தப்பட்டிருக்கிறார். கூட்டி சொல்ல முடியாத அளவிற்கு அவர்கள் ஊழல் செய்து மொத்தத்தையும் கூட்டி அள்ளிச் சென்றுள்ளார்கள்.

இன்று நம்மிடையே வலிமை இல்லை. எல்லோரும் கெஞ்சி பெற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். நமது நிலை நிச்சயம் உயரும். பசி, பட்டினி போக்கப்படும். நம்மிடம் எந்த வலிமையும் இல்லை. ஆனால் வாக்கு உரிமை என்ற ஆயுதம் உள்ளது. அதுதான் அறிவாயுதம். அந்த அறிவாயுதத்தால் புரட்சியை ஏற்படுத்த வேண்டும்.

அந்த புரட்சித் தீயை செங்கொடி, முத்துக்குமார் போன்றவர்கள் ஏற்றி வைத்துள்ளார்கள். என்ன விலை கொடுத்தேனும் நமது இனத்தை காப்பாற்ற வேண்டும். மூன்று பேர்களும் விடுதலை ஆகும் வரை களத்தில் இருப்போம்.

இவ்வாறு சீமான் பேசினார்.

 

[Continue reading...]

வன்முறையை தூண்டும் வகையில் திருமாவளவன் case of violent spoken thirumavalavan cuddalore court order appear

- 0 comments

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு: திருமாவளவன் ஆஜராக கடலூர் கோர்ட்டு உத்தரவு case of violent spoken thirumavalavan cuddalore court order appear 

கடலூர் அருகே உள்ள கீழ் குமாரமங்கலம் புதுக்கடை வீதியில் கடந்த 18.10.1997 அன்று இரவு விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பேசினர்.

அவர்கள் வன்முறையை தூண்டும் வகையிலும், ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் கடலூர் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடலூர் மாஜிஸ்திரேட்டு 2-வது கோர்ட்டில் நீதிபதி பிரபாவதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கில் தொடர்புடைய சித்திரைமூர்த்தி, திருவள்ளுவன் ஆகிய 2 பேரும் ஆஜராகினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அமுதவன் ஆகிய 2 பேரும் ஆஜராகவில்லை. இதையடுத்து இவ்வழக்கு தொடர்பான நகல்களை அடுத்த மாதம் 6-ந் தேதி திருமாவளவன், அமுதவன் ஆகிய 2 பேரும் நேரில் ஆஜராகி பெற்று செல்ல வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 

[Continue reading...]

இன்னும் 5 வருடங்கள் காங்கிரஸ் வசம் கொடுங்கள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து இந்தியா மீளும் - கருணாநிதி

- 0 comments

தி.மு.க. தலைவர்
கருணாநிதி வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய
ரூபாயின்
மதிப்பு தொடர்ந்து சரிந்து 68.80 என
வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதார
நெருக்கடியிலிருந்து அமெரிக்கா
தன்னைப் பாதுகாத்துக்
கொள்வதற்காகத்தான் டாலரின்
மதிப்பை உயர்த்துவதற்கான
நடவடிக்கைகளில்
இறங்கியிருப்பதாகவும், அதன்
விளைவாகத்தான் இந்தியா,
இந்தோனேசியா, பிரேசில்,
தென்னாப்பிரிக்கா, துருக்கி போன்ற
நாடுகளின் நாணயங்களின்
மதிப்பு வேகமாக
சரிந்து வருவதாகவும்
சொல்லப்படுகிறது.
ஜவஹர்லால் நேரு 17 ஆண்டுகள்
பிரதமராக இருந்தார்.
அப்போது டாலருக்கு நிகரான இந்திய
ரூபாய் மதிப்பு 4.76 ஆகும்.
இந்திராகாந்தி 15 ஆண்டுகள் பிரதமராக
இருந்தபோது, ரூபாய் மதிப்பு 11.36
ஆகும். ராஜீவ்காந்தி காலத்தில் ரூபாய்
மதிப்பு 16.22 ஆகும். பி.வி.நரசிம்மராவ்
காலத்தில் 35.43 ஆகும். வாஜ்பாய்
காலத்தில் ரூபாய் மதிப்பு 45.31 ஆகும்.
மன்மோகன் சிங்கின் 9 ஆண்டு கால
ஆட்சியில் 68.80 ஆகும்.
இது வரலாறு காணாத வகையில் மிகப்
பெரிய வீழ்ச்சியாகும்.
தொய்வடைந் திருக்கும் இந்தியப்
பொருளாதாரத்தைத்
தூக்கி நிறுத்தி வலுவூட்டாவிட்டால்,
டாலருக்கு நிகரான ரூபாயின்
மதிப்பு 75 ஆகச் சரியும்
நிலைமை உள்ளது என்று வல்லுநர்கள்
எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.
மொத்தத்தில், நடப்பாண்டு,
ஜனவரி முதல், இதுவரை, அமெரிக்க
டாலருக்கு எதிரான ரூபாயின்
மதிப்பு 19.50 சதவிகிதத்திற்கும்
அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இது இந்தியப் பொருளாதாரத்தில்
இதுவரை கண்டும் கேட்டுமிராத
காரிருளாகும்.
அமெரிக்க டாலரின்
நிலைமை இவ்வாறிருக்க,
இங்கிலாந்து பணமான
“பவுண்டு”க்கு நிகராகவும் ரூபாயின்
மதிப்பு சரிந்துள்ளது.
ஒரு “பவுண்டு”க்கு நிகரான
ரூபாயின் மதிப்பு 106 ஆகக்
குறைந்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றிய
பணமான “யூரோ” வுக்கு நிகரான
ரூபாயின் மதிப்பு 92 ஆகவும், சுவிஸ்
“பிராங்க்” மதிப்பில் ரூ.75 ஆகவும்,
கனடா டாலர் மதிப்பில் ரூ. 65 ஆகவும்,
ஆஸ்திரேலிய டாலர் மதிப்பில் ரூ. 60
எனவும், நியூசிலாந்து டாலர் மற்றும்
சிங்கப்பூர் டாலர் மதிப்பில் ரூ.50க்கும்
சரிந்துள்ளது. குவைத் “தினார்”
மதிப்பு இந்திய ரூபாயில்
ரூ.240க்கு அதிகம் என்ற
நிலையை எட்டியுள்ளது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் சங்கிலித்
தொடர் போன்ற விளைவுகள்
ஏற்படுவது தவிர்க்க முடியாதது. கடந்த
சில நாட்களாக பங்கு சந்தையிலும்
சரிவு ஏற்பட்டு வருகிறது.
முதலீட்டாளர்களின் பங்குகளின்
மதிப்பு 170 லட்சம்
கோடி குறைந்துள்ளது. ரூபாய்
மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க மத்திய
அரசு பல்வேறு நடவடிக்கைகளை
எடுத்து வருவதாகக் கூறப்பட்டாலும்,
எதுவும் உடனடியாகப் பயனளிப்பதாகத்
தெரியவில்லை.
பொதுத்துறை எண்ணெய்
நிறுவனங்களும்,
இறக்குமதி நிறுவனங்களும்
டாலரை அதிக அளவில்
கொடுத்தே கொள்முதல் செய்கின்றன.
எண்ணெய் நிறுவனங்கள் அதிக அளவில்
அமெரிக்க டாலர்களை வாங்குவதால்,
அன்னிய நாடுகளில் வெளிச்சந்தையில்
இந்திய ரூபாயின்
மதிப்பு சரிந்து வருகிறது.
சிரியா நாட்டில் நடைபெற்று வரும்
கலவரத்தால் 27-8-2013 அன்று லண்டன்
வர்த்தக சந்தையில் கச்சா எண்ணெய்
விலை 0.4 சதவிகிதம் உயர்ந்தது.
விலை மேலும் அதிகரிக்கும்
என்று கூறப்படுகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் நிறைவான
பொருளாதார அறிவு படைத்தவர்தான்.
அவர்தான்
இருபதாண்டுகளுக்கு முன்பு நடை
பெற்ற புதிய பொருளாதாரச்
சீர்திருத்தங்களுக்குக் காரணகர்த்தாவாக
இருந்தவர். பழைய பொருளாதார
உத்திகள் பலனளிக்காது என்றால், புதிய
முறைகளைக்
கையாண்டு வெகுவிரைவில்
தீர்வு காண வேண்டும்.
மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்,
ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த
மத்திய அரசு தீவிர
நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும்
, நிதிப் பற்றாக்குறையை மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் 4.8
சதவிகிதமாகக் குறைக்க
நடவடிக்கை எடுத்து வருவதாகவும்
சொல்லியிருக்கிறார். மேலும்
நடப்பு கணக்குப் பற்றாக்குறையை 7
ஆயிரம் கோடி டாலருக்குள் அடக்க
வேண்டுமென்று நம்முடைய
நிதியமைச்சர்
கருத்து தெரிவித்துள்ளார்.
நாம் அதிக
அளவுக்கு ஏற்றுமதி செய்தால் நடப்புக்
கணக்கில் உபரி ஏற்படும். நாம் அதிக
அளவுக்கு இறக்குமதி செய்தால்
நடப்புக் கணக்கில்
பற்றாக்குறை ஏற்படும். இந்தப்
பற்றாக்குறை அதிகமாக
ஏற்படும்போது, பொருளாதார
நெருக்கடியை உண்டாக்கும். நடப்புக்
கணக்கு பற்றாக்குறை என்பதுதான்;
தற்போது 8900 கோடி டாலர்
பற்றாக்குறையாக அதிகரித்துள்ளது.
இந்த அளவிற்கு நடப்புக் கணக்கு பற்றாக்
குறை அதிகமாகக் காரணம்,
கச்சா எண்ணெய், தங்கம்
ஆகியவற்றை அதிகமாக
இறக்குமதி செய்வதுதான்
என்று அரசு தெரிவிக்கும் காரணம்
மட்டுமே உண்மையானதல்ல.
நாம் இறக்குமதியைப் பற்றிப்
பேசும்போது,
இறக்குமதி செய்யப்படும் மூலப்
பொருள்களைப் பற்றியும்
புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு தயாரிப்பாளர்
ஏதாவது ஒரு பொருளை உற்பத்தி
செய்வதற்காக மூலப்
பொருளை இறக்குமதி செய்வதுதான்
மூலதனப் பொருள் இறக்குமதி.
அப்படி மூலப்
பொருளை இறக்குமதி செய்து, புதிய
பொருள்களைத் தயாரித்து அதிக
விலைக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம்
இறக்குமதியால் ஏற்படும் நடப்புக்
கணக்குப் பற்றாக்குறையை ஈடுகட்ட
முடியும்.
2004-2005இல் மூலப் பொருள்களின்
இறக்கு மதி 2550 கோடி டாலர்
அளவுக்கு இருந்தது. தற்போது 58700
கோடி டாலருக்கு மூலப் பொருள்கள்
இறக்குமதி செய்யப்படுகின்றன.
இதுபோன்ற காரணங்களால்தான் டாலர்
மதிப்பு மிகவும் உயர்ந்து,
அதற்கு நிகரான இந்திய ரூபாயின்
வெளி மதிப்பு வரலாறுகாணாத
அளவிற்கு வீழ்ச்சி அடைந்து வருகிறது.
இந்த
ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை
ரூபாய் மதிப்பு 18 சதவிகிதம்
வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக
இந்த நிதி ஆண்டில் பொருளாதார
வளர்ச்சி 5 சதவிகிதத்திற்கும்
கீழே செல்லும் என்று கூறப்படுகிறது.
நமது இயற்கை வளங்கள் எல்லை யற்றவை.
நமது மனித வளம் ஈடு இணையற்றது.
இந்தியா விடுதலை அடைந்ததற்குப்
பின்னர் எத்தனையோ சவால்களைச்
சந்தித்து முன்னேறி வருகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள இந்தப்
பொருளாதாரச் சோதனையிலும்
இந்தியா நிச்சயம் வெற்றிபெறும் என
எதிர்பார்ப்போம்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

[Continue reading...]

பா.ஜனதா தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு bjp leaders house petrol bomb throw in dindigul

- 0 comments
திண்டுக்கல் பழனி ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார் (27). இவர் 10–ம் வார்டு பா.ஜனதா கிளை தலைவராக உள்ளார். இவருக்கு சத்தியமீனாட்சி என்ற மனைவி உள்ளார். இவர் தற்போது 6 மாத கர்ப்பிணியாவார்.
வேன் டிரைவராக வேலைபார்த்து வரும் பிரவீன்குமார் தினமும் ஒட்டன்சத்திரத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் இருந்து திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு காய்கறிகளை ஏற்றி கொண்டு வருவது வழக்கம். பிரவீன்குமார் வேலைக்கு சென்று விட்டு சுமார் 10 மணிக்கு தான் வீடு திரும்புவாராம்.

நேற்று காலை வழக்கம்போல பிரவீன்குமார் வேலைக்கு சென்றுவிட்டார். இரவு 11 மணி ஆகியும், கணவர் பிரவீன்குமார் வீடு திரும்பாததால் அவரது வருகைக்காக சத்தியமீனாட்சி தனது மாடி வீட்டு வாசலில் காத்து கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் பிரவீன்குமார் வீட்டு முன்பு உள்ள தெருவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் நீண்ட நேரமாக அங்கும், இங்குமாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

இதை கவனித்த சத்தியமீனாட்சி ஒருவித பயத்துடனேயே தனது கணவர் வருகைக்காக வீட்டு வாசற்படியில் நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடீரென கீழே நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் தாங்கள் வைத்திருந்த பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை பிரவீன்குமார் வீட்டின் மீது சரமாரியாக வீசி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.
பெட்ரோல் நிரப்பிய பாட்டில்கள் வெடித்து தீப்பிடித்தது. அந்த சமயத்தில் வீட்டு வாசற்படியில் நின்று கொண்டிருந்த சத்தியமீனாட்சிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர் அலறியடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடி கதவை பூட்டி கொண்டார்.

பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் பிரவீன்குமார் வீட்டின் அருகே சென்ற கேபிள் வயர்கள் தீயில் கருகி நாசமானது. மேலும் அவரது வீட்டின் சுவரில் பல இடங்களில் லேசான கீறல்கள் ஏற்பட்டன. மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசியதில் பிரவீன்குமார் மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுபற்றி தகவல் அறிந்த பா.ஜனதா மாவட்ட நிர்வாகிகள் போஸ், தனபாலன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் பிரவீன்குமார் வீட்டின் முன்பு குவிந்தனர். அந்த சமயத்தில் வேலையை முடித்து விட்டு வீடு திரும்பிய பிரவீன்குமார் தனது வீட்டின் முன்பு பொதுமக்கள் குவிந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அப்போது தனது மனைவியிடம் நடந்த சம்பவத்தை பற்றி கேட்டு அறிந்தார். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து அறிந்த திண்டுக்கல் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் அங்கு சிதறி கிடந்த பாட்டில்கள் துண்டுகளை சேகரித்தனர்.
[Continue reading...]

Wednesday 28 August 2013

சோனியாகாந்தியின் செல்போன் திருடு போய்விட்டது hospital soniya gandhi cellphone theft

- 0 comments
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடந்த திங்கட்கிழமை உணவு பாதுகாப்பு மசோதா விவாதத்தில் பங்கேற்றார். இரவு பாராளுமன்றத்தில் இருந்தபோது, சோனியா காந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மசோதா மீதான ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் பாதியிலேயே எழுந்து வெளியே வந்தார். 
பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை சோனியா வீடு திரும்பினார். அப்போது கைப்பையில் இருந்த அவரது செல்போன் காணாமல் போனதை அறிந்து திடுக்கிட்டார்.

அதுவிலை உயர்ந்த பிளாக் பெர்ரி செல்போன் அந்த எண்ணுக்கு போன் செய்தால் ‘சுவிட்ச் ஆப்’ என்று வருகிறது. எனவே அதை யாரோ திருடிச் சென்று விட்டார்கள் என்பது உறுதியாகி உள்ளது.
சோனியாகாந்தியின் போனை தேடும் பணியில் அவரது சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் சிக்னல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே கடைசியாக அந்த போனுக்கு சிக்னல் தொடர்பு கிடைத்த இடத்தின் சுற்று வட்டாரத்தில் அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.

திங்கட்கிழமை காலை பாராளுமன்ற அலுவலில் பங்கேற்ற சோனியாகாந்தி, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம், அங்குள்ள அவரது அறை ஆகிய இடங்களுக்கு சென்றார்.
பின்னர் ஆஸ்பத்திரிக்கு சென்று செவ்வாய்க்கிழமை காலை அவர் வீடு திரும்பும் வரை சென்ற இடங்களில் எல்லாம் செல்போன் இருக்கிறதா? என்று அதிகாரிகள் தேடினார்கள். தொடர்ந்து தேடுதல் வேட்டையும், விசாரணையும் தீவிரமாக நடந்து வருகிறது.
[Continue reading...]

பட்டப்பகலில் ஏ.டி.எம். வேனில் இருந்து 3.80 கோடி கொள்ளை Rs 3.80 crores looted from ATM Van

- 0 comments

மும்பையில் பட்டப்பகலில் ஏ.டி.எம். வேனில் இருந்து 3.80 கோடி கொள்ளை Rs 3.80 crores looted from ATM Van in Mumbaiமும்பை நகரின் தானே பகுதியில் பட்டப்பகலில் ஏ.டி.எம். வேனில் இருந்து ரூ.3.80 கோடியை சிலர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சினிமாவில் வருவதைப் போன்ற இந்த பரபரப்பு சம்பவம் தொடர்பாக மும்பை போலீசார் கூறியதாவது:-

தானே அருகே உள்ள நலசோபரா மாவட்டம், பதங்கர் பூங்கா பகுதியின் ஆக்சிஸ் பேங்க் ஏ.டி.எம்.மிற்கு நேற்று மாலை 3.30 மணியளவில் ஏ.டி.எம். இயந்திரங்களுக்கு பணம் போடும் பாதுகாப்பு வாகனம் பணத்துடன் வந்தது.

ஏ.டி.எம். வாகனம் அங்கு எந்த நேரத்திற்கு வரும்? என்பதை முன்கூட்டியே நோட்டமிட்டு வைத்திருந்த ஒரு கும்பல் குவாலிஸ் காரில் தயாராக ஏ.டிஎம். அருகே காத்திருந்தது.

பணம் போடும் வாகனம் ஏ.டி.எம். வாசலருகே வந்து நின்றதும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கதவை திறந்துக் கொண்டு இறங்கினார். தயாராக காத்திருந்த கும்பலை சேர்ந்த சிலர், கையில் ஹாக்கி மட்டைகளுடன் வாகனத்தில் இருந்தவர்களை சரமாரியாக தாக்கினர்.

வங்கி ஊழியர்கள் அவர்களுடன் மோதிக்கொண்ட இருந்த வேளையில் மற்ற சிலர் வாகனத்துக்குள் ஏறி, உள்ளே இரந்த பணப்பெட்டிகளை தயாராக காத்திருந்த காரில் ஏற்றிக்கொண்டு சில நிமிடங்களில் தப்பித்தலைமறைவாகி விட்டனர்.

வாகனத்தில் இருந்த மொத்த பணம் ரூ.3 கோடியே 80 லட்சம் என தெரிய வந்துள்ளது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது .

இவ்வாறு போலீசார் கூறினார்.

[Continue reading...]

நவநீதம் பிள்ளையை திருமணம் செய்ய தயார் Navaneetham pillai ready to get married sri lanka minister speech

- 0 comments

நவநீதம் பிள்ளையை திருமணம் செய்ய தயார்: இலங்கை மந்திரி திமிர் பேச்சு Navaneetham pillai ready to get married sri lanka minister speech 

இறுதிக்கட்ட போரில் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை சென்றுள்ளார். அவர் வருகைக்கு சிங்கள வெறியர்களும், புத்தபிட்சுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், சிங்கள மந்திரி மேர்வின் சில்வா அவரை அவமதிக்கும் வகையில், நவநீதம்பிள்ளையை திருமணம் செய்ய தயாராக இருப்பதாக திமிருடன் கேலி கிண்டலாக பேசியுள்ளார். ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், இலங்கை குவேனியை விஜயனுக்கு திருமணம் செய்து வைத்தது போன்று நவநீதம்பிள்ளை விரும்பினால் நாளையே அவரை திருமணம் செய்ய தயாராக இருக்கிறேன் என்றார்.

மேலும் அவர் கூறும்போது, கிறிஸ்துவுக்கு முன்னரே உலகத்துடன் இலங்கை தொடர்பு கொண்டிருந்தது. ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடிக்கும் முன்னரே இலங்கையில் பறக்கும் எந்திரம் பயன்படுத்தப்பட்டதாக நூல்களில் கூறப்பட்டுள்ளது. வரலாற்றை கற்பிக்கும் நோக்கில் என்னுடன் அவர் இலங்கையை சுற்றி பார்க்க வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

 

[Continue reading...]

Tuesday 27 August 2013

கோவா குத்தாட்ட விடுதியில் விபசாரம்

- 0 comments

கோவா குத்தாட்ட விடுதியில் விபசாரம்: உ.பி. மாநில சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. கைது Samajwadi UP MLA arrested in Goa bar

பனாஜி, ஆக.28-

உல்லாச நகரமான கோவாவில் உள்ள பனாஜியில் குத்தாட்டம் போட்ட உத்தரபிரதேச மாநில சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. மகேந்திர சிங்கை கோவா போலீசார் நேற்று கைது செய்தனர்.

பனாஜி நகரில் உள்ள நடன விடுதி ஒன்றில் குத்தாட்டம், கும்மாளம் மற்றும் விபசாரம் நடப்பதாக கோவா போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, அந்த விடுதிக்கு விரைந்த போலீசார், தன்னிலை மறந்து போதையில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த சிலரை கைது செய்தனர்.

பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 6 பெண்களையும் அந்த விடுதியில் இருந்து போலீசார் மீட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. மகேந்திர சிங் என்பதை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

உத்தரபிரதேச சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான இவரது மாமனார் அஜய் பிரகாஷ் சிங், முலாயம்சிங் யாதவிற்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.எல்.ஏ. மகேந்திர சிங் குத்தாட்ட விடுதியில் கைது செய்யப்பட்ட தகவலை முறைப்படி உத்தரபிரதேச சபாநாயகருக்கு தெரிவித்து விட்டதாக கோவா போலீசார் தெரிவித்தனர்.

அவர் மீதும் அவருடைய கூட்டாளிகள் இருவர் மீதும் விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

[Continue reading...]

பெங்களூரில் குழந்தைகளை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த காமக்கொடூரன் கைது Bangalore Police arrest suspected serial child

- 0 comments

பெங்களூரில் குழந்தைகளை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த காமக்கொடூரன் கைது Bangalore Police arrest suspected serial child

பெங்களூர், ஆக. 27-

பெங்களூரில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. குழந்தையை கடத்தி, அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் மர்ம நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் 16 குழந்தைகள் கடத்தப்பட்டதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட குழந்தைகள் அனைவரும் 6 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள். குழந்தைகளை கடத்தும் அந்த ஆசாமி, வெகு தூரம் கொண்டு சென்று பாலியல் தொல்லை கொடுத்து பின்னர் விடுவித்துள்ளான். இதனால் அனைத்து குழந்தைகளும் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், குழந்தைகள் கடத்தல் வழக்கு தொடர்பாக, 30 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இதுவரை 31 கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதை ஒப்புக்கொண்டுள்ளான்.

மேலும் பல்வேறு பைக், நகை திருட்டுக்கள் மற்றும் மோசடியிலும் அவன் ஈடுபட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

[Continue reading...]

Monday 26 August 2013

கம்பம் அருகே டியூசன் சென்ற மாணவி கற்பழிப்பு: ஆசிரியர் கைது kampam near tution went student harassment teacher arrested

- 0 comments

கம்பம் அருகே டியூசன் சென்ற மாணவி கற்பழிப்பு: ஆசிரியர் கைது kampam near tution went student harassment teacher arrested

26 Aug 13 10:55:32 AM by Tamil  |   Tags : தினசரி செய்திகள் , Daily News   

கம்பம், ஆக. 26-

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கூடலூரில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

கூடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்த அந்த மாணவி, ஆசிரியர் ரவிக்குமாரிடம் டியூசன் படித்து வந்தார். சம்பவத்தன்று டியூசன் சென்ற மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் ரவிக்குமார், பின்னர் அவரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறத

[Continue reading...]

Sunday 25 August 2013

ஆட்டோ கட்டணம் அதிரடியாக குறைந்ததால் பயணிகள் மகிழ்ச்சி auto fare decrease passenger happy

- 0 comments

ஆட்டோ கட்டணம் அதிரடியாக குறைந்ததால் பயணிகள் மகிழ்ச்சி auto fare decrease passenger happy

26 Aug 13 02:06:05 AM by Tamil  |   Tags : தினசரி செய்திகள் , Daily News   |  6 views  |   0 comments

சென்னை, ஆக 26–

சென்னையில் பொது மக்களின் போக்குவரத்து வசதிக்கு பெரும் பங்காற்றுவது ஆட்டோக்கள் என்றால் அது மிகையாகாது. தமிழகம் முழுவதும் ஓடும் 2 லட்சத்து 14 ஆயிரம் ஆட்டோக்களில், சென்னையில் மட்டும் 71 ஆயிரத்து 470 ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆட்டோக்களில் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொது மக்கள் பரவலாக குற்றம் சாட்டி வந்தனர்.

இக்கட்டணம் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் ஆட்டோ கட்டணம் தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து முதல்– அமைச்சர் ஜெயலலிதா அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து சென்னையில் ஆட்டோக்களுக்கான கட்டணத்தை நிர்ணயித்து நேற்று காலையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இதன்படி முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.25 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூடுதல் கிலோ மீட்டருக்கும் 12 ரூபாய் கட்டணமாக வசூலிக்கலாம் என்றும், முடிவு செய்யப்பட்டுள்ளது.

காத்திருக்கும் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் 3 ரூபாய் 50 காசு (ஒரு மணி நேரத்துக்கு ரூ.42) என்றும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணிவரை 50 சதவீதம் கூடுதல் கட்டணம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இக்கட்டணம் நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வந்தது. ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். (குளோபல் பொசிசனிங் சிஸ்டம்) கருவி பொறுத்தவும், முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் குறிப்பிட்ட ஆட்டோ எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை எளிதாக கண்டு பிடித்து விடலாம். எலக்ட்ரானிக் டிஜிட்டல் பிரிண்டருடன் கூடிய மீட்டரை ரூ.80 கோடி செலவில் சென்னையில் ஓடும் அனைத்து ஆட்டோக்களிலும் பொறுத்தவும் அரசு முடிவெடுத்துள்ளது.

பாதுகாப்பாக பயணிக்க அலாரம் கருவியை ஆட்டோக்களில் பொறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவுகளை கடை பிடிக்காத ஆட்டோ டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முறைப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆட்டோ கட்டணத்தால் சென்னையில் ஆட்டோ கட்டணம் பாதியாக குறைந்துள்ளது. உதாரணத்துக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து வட சென்னை பகுதியான கொடுங்கையூருக்கு (11 கிலோ மீட்டர்) செல்வதற்கு சர்வ சாதாரணமாக ஆட்டோ டிரைவர்கள் 300 ரூபாய் கேட்பார்கள். அவர்களிடம் பேரம் பேசினால் 250 ரூபாய்க்கு சம்மதிப்பார்கள். பின்னர் வீட்டில் கொண்டு இறக்கி விட்டதும் ‘‘என்ன சார்... இவ்வளவு தூரம் வந்துடீங்களே, கூடுதலாக 30 ரூபாய் போட்டு தாங்க சார்’’ என்று கேட்டு வாங்கிக்கொள்வார்கள். ஆனால் இனி இந்த கட்டணம் பாதியாக குறையும். 11 கி.மீ. தூரத்துக்கு எழும்பூர்– கொடுங்கையூர்), வில்லிவாக்கம்– தி.நகர்), (சென்டிரல்– அடையார்) ரூ.133 மட்டும் கொடுத்தால் போதும்.

இதே போல் பெரம்பூரில் இருந்து சென்ட்டிரல் செல்ல (7 கி.மீட்டர்), தியாகராயநகரில் இருந்து வடபழனி செல்ல ரூ.60 (5 கி.மீ), எழும்பூரில் இருந்து தி.நகர் செல்ல ரூ.73 (6 கி.மீ), ஆகியவை மட்டும் கொடுத்தால் போதுமானதாகும்.

சென்னையில் ஆட்டோ பயணம் பெண்களுக்கு பல நேரங்களில் ஆபத்தானதாகவே இருந்து வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட கோயம்பேட்டில் இருந்து மாதவரம் நோக்கி ஆட்டோவில் சென்ற பெண் நகைக்காக படுகொலை செய்யப்பட்டார். இதே போல ஆட்டோக்களால் பல குற்றச் செயல்களும் நடைபெற்று வந்துள்ளன.

ஒரு சில ஆட்டோ டிரைவர்கள் செய்யும் இது போன்ற தவறுகளால் ‘‘ஆட்டோ பயணம் ஆபத்தானதோ’’ என்ற எண்ணம் பொதுவாக அனைவரது மனதிலும் இருந்து வந்தது. அலாரம் பொறுத்துவதால் பொது மக்கள் இனி அச்சமின்றி பயணிக்கலாம். நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆட்டோ கட்டணமும், ஆட்டோக்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு வசதிகளும் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger