Friday 2 December 2011

தேவராக இருப்போம��, தேவேந்திரரோடும் இருப்போம்!

- 0 comments


தென் தமிழகத்தைப் பாதிக்கும் முக்கியமான விஷயங்களில் ஒன்று சாதிக் கலவரங்கள். பெரும்பாலும் அவை தேவர் சமூகத்துக்கும் ப(ம)ள்ளர் சமூகத்துக்கும் இடையில்தான் நடக்கின்றன என்று சொல்லிவிடலாம். தேநீர் விடுதிகளில் இரட்டைக் குவளை என்பதில் ஆரம்பித்து பஞ்சாயத்தில் தலைவராக யார் நிற்பது என்பதுவரை சாதியின்பிடி வலுவாக இருக்கிறது. ஒருவகையில் முன்பைவிட இந்தப் பிரச்னை அதிகமாகியிருப்பதுபோலவே தெரிகிறது. இந்தப் பிரச்னையை இப்போது நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் பார்ப்பது ஒருபோதும் சரியான தீர்வுக்கு இட்டுச் செல்லாது. தென் தமிழகத்தின் சமூக அமைப்பை ஒருவர் [...]


http://kathaludan.blogspot.com



  • http://cmk-mobilesms.blogspot.com


  • [Continue reading...]

    உயிர் தோற்றம் - இ��்லாமிய பார்வையு���், பரிணாம கொள்கை���ும்

    - 0 comments


    மத நூல்களைப் படித்ததும் அதை அப்படியே ஏற்க வேண்டியதில்லை. பல் வேறு கேள்விகள் கேட்டு , தெளிவு பெறுவது ஆரோக்கியமானதே. அந்த வகையில், சென்ற பதிவில் எதிர் கேள்விகள் கேட்டவர்களை பாராட்டுகிறேன். அதற்கு உரிய பதில் அளித்த ஆன்மீக நாட்டம் கொண்ட நண்பர்களுக்கு நன்றிகள்.

    இஸ்லாமிய கருத்துக்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் , அந்த இஸ்லாமிய 
    சகோதரர்களின் பதிவுகளை பார்வையிடுமாறு கேட்டு கொள்கிறேன்.

    இஸ்லாமியர்கள் என அவர்களை அடையாளப்படுத்த விரும்பவில்லை. இஸ்லாம் சமுதாயத்தில் பிறந்த அனைவருக்கும் இஸ்லாம் தத்துவங்கள் முழுமையாக தெரிந்து இருக்கும் என சொல்ல இயலாது. இஸ்லாம் சமுதாயத்தில் பிறக்காத சிலருக்கு, அந்த தத்துவங்கள் தெரிந்து இருப்பதும் உண்டு.

    ஆக , சில சகோதரர்கள் இஸ்லாமிய கருத்துக்களை நன்றாக எழுதுகிறார்கள் என்றால் அவர்களின் தத்துவ அறிவுக்கு தலை வணங்க வேண்டுமே தவிர, முஸ்லீம்கள் என்பதால் அப்படி எழுதுகிறார்கள் என நினைக்க கூடாது. ஈடுபாடு இருந்தால்தான் இப்படி எழுத முடியுமே தவிர , இஸ்லாமியராக பிறப்பதால் மட்டுமே அந்த மத அறிவு வந்து விடாது.

     நான் எழுதுவது அறிவியல் பார்வையில், காமன் சென்ஸ் அடிப்படையில்.,
    எனவே எளிய முறையில், சில கேள்விகளுக்கு பதில் அளிக்க கடமைபட்டு இருக்கிறேன். இது அறிவியல் பார்வையாகும்.

    பார்க்கலாமா? 

    1 . பரிணாம வளர்ச்சி கொள்கையும் ,மத கொள்கையும் முரண் படுவது ஏன்?


    குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற பரிணாம கொள்கை இந்தியா போன்ற நாடுகளில்தான் முழு உண்மையாக கருத்தப்பட்டு வருகிறது. அறிவியலில் வளர்ந்த நாடுகள், இந்த கொள்கையை ஒரு ஹைப்போதீசிஸாகத்தான் நினைக்கின்றன. இன்னும் சிலரோ இந்த கொள்கையே தவறு, ஹைப்போதீசிஸ் என்ற தகுதியில் இருந்து இறக்கப்பட்டு, ஒரு கட்டுக்கதை என்ற அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும் என்கின்றனர்.


    அதென்ன ஹைப்போதீசிஸ்?


    சொல்கிறேன்.


     பெட்ரோல் விலை கூடிக் கொண்டே செல்கிறது. என்ன செய்யலாம் என யோசிக்கிறீர்கள். ஆய்வு செய்கிறீர்கள். கடைசியாக இதற்கு ஒரு தீர்வை கண்டு பிடித்தே விட்டீர்கள்.


    கீரையில் இருந்து பெட்ரோல் உருவாக்கலாம் என கண்டு பிடித்து விட்டீர்கள், ( ஒரு உதாரணத்துக்காகத்தான் )  உங்கள் வீட்டு தோட்டத்தில் கீரையை பறித்து , உங்கள் வீட்டில் பெட்ரோல் செய்தும் பார்த்து விட்டீர்கள் என வைத்து கொள்ளுங்கள். உங்கள் ஓட்டை பைக்கில் இந்த பெட்ரோல் நிரப்பி ஓட்டியும் பார்த்து விட்டீர்கள் என வைத்து கொள்ளுங்கள்.


    இதற்காக உங்களுக்கு விழா எடுப்பார்களா? சிலை வைப்பார்களா?


    மாட்டார்கள்.


    உங்கள் கண்டுபடிப்பு ஓர் அனுமானம்தான். அது இறுதி உண்மை அன்று.


    உங்கள் அனுமானம் இறுதி உண்மையாக ஏற்கப்பட வேண்டுமென்றால் , சில நிபந்தனைகள் உண்டு.


    1. ரிப்பீட்டபிலிட்டி 2. கணிக்கும் ஆற்றல் 3 புற வய சோதனையில் தேறுதல் 


    இதில் ஏதாவது ஒன்றையாவது பூர்த்தி செய்ய வேண்டும்.


    அதாவது, ஒரு நாள் கீரையில் இருந்து பெட்ரோல் செய்தால் போதாது. எப்போது யார் வந்து கேட்டாலும் , கீரையில் இருந்து பெட்ரோல் செய்து காட்ட வேண்டும். 


    இல்லை. இன்று வெள்ளிக்கிழமை. இன்று செய்ய முடியாது.. என் வீட்டில்தான் செய்ய முடியும் என்றெல்லாம் ஜகா வாங்கினால் ,  உங்கள் கண்டுபிடிப்பு தின தந்தியில் இடம்பெற்று , பின் கேலி செய்யப்பட்டு, மறக்கப்படும். 


    வெளிப்படையாக யார் வேண்டுமானாலும் சோதித்து பார்க்கும்படி இருக்க வேண்டும். என் நண்பர்கள் செய்தால் மட்டுமே பெட்ரோல் உருவாகும் என்று சொன்னால் செல்லாது...


    எல்லா கண்டு பிடிப்புகளையும் இது போல சோதனை செய்ய இயலாது.


    எனவே அவற்றுக்கு சலுகை உண்டு.


    பிரபஞ்சம் சுருங்கி கொண்டே வருகிறது என்ற ஒரு கண்டு பிடிப்பை ( ? !! ? )  வெளியிடுகிறீர்கள் என வைத்து கொள்ளுங்கள்.  ஆய்வு சாலையில் ஒரு பிரபஞ்சத்தை வைத்து சோதித்து பார்க்க முடியாது.


    இந்த நிலையில், நீங்கள் சுருங்குவதால் ஏற்படும் விளைவுகளை கணித்து சொன்னால் போதும், உங்கள் கண்டுபிடிப்பு ஏற்கப்படும்.


    பிரப்ஞ்சம் சுருங்குவதால், பூமியின் வெப்பனிலை கூடும்., .. நட்சத்தைர ஒளி நீளத்தில் மாற்றம் ஏற்பட்டு, நிறம் மாறும் . என சிலவற்றை கணித்து சொன்னால் போதும். உங்கள் கணிப்புகள் உண்மையானால், உங்கள் கண்டு பிடிப்பை ஏற்பார்கள்.


    பரிணாம வளர்ச்சி கொள்கை இந்த எந்த சோதனையிலுமே தேறவில்லை..


    ஓர் உயிரில் இருந்து இன்னொரு வகை உயிரினம் உருவாவதை நாம் பார்க்கவே இயலவில்லை. 


    தகுதியுடவை எஞ்சும் என ஒரு பம்மாத்து கொள்கை. தகுதி உடையவை மட்டும்தான் எஞ்சி வாழ்கின்றன என்பதற்கு என்ன ஆதாரம் என கேட்டால் ஆதாரம் இல்லை.. தகுதியே இல்லாதவை கூட குருட்டு அதிர்ஷ்டத்திலோ, கடவுளின் கருணையாலோ ( ? ! ) பிழைத்து இருக்க கூடுமே என கேட்டால் பதில் இல்லை.. 


    தகுதி உடைய உயிரினங்கள் கூட தற்செய்லலோ, இறை செயலாலோ ( ? ! ) அழிந்து போய் இருக்கலாமே என கேட்டாலும் பதில் இல்லை... 


    இவை உயிர் வாழ்கின்றன.. என இவை தகுதி உடையவை.. இவை அழிந்து விட்டன. அவை தகுதி அற்றவை என மேலோட்டமாக சொல்லி சென்று கொண்டே இருக்கின்றனர்.




    ஒரு காலத்தில் , அழுக்கு துணிதான் பரிணாம வளர்ச்சி அடைந்து எலியாக மாறுகிறது என்பது அறிவியல் கண்டு பிடிப்பாக இருந்தது.. வீட்டில் போட்டு வைத்து இருக்கும் பழைய துணியில் எலி இருப்பதை பார்த்து , இப்படி சொன்னார்கள்.. அடுத்த தலை முறையினர் , இந்த கண்டு பிடிப்பை கேலி செய்து தூக்கி போட்டனர்.


    அதே போல , பரிணாம கொள்கையும் அதிகார பூர்வமாக தூக்கி எறியப்படும் நிலையே நிலவுகிறது..


    சரி.. குரங்கில் இருந்து மனிதன் வரவில்லை  வேறு எப்படி உருவானான்?


    களிமண்ணில் இருந்து படைக்கப்பட்டானா? குர் ஆன் அப்படி சொல்கிறதா? 


    இதை அரை குறையாக படித்தால் என்ன தோன்றும்?


    பொற்கால,ம் படத்தில் முரளி செய்வது போல , யாரோ களிமண் பொம்மை செய்து , உயிர் கொடுத்து உலவ விடும் காட்சி மனதில் தோன்றும். 




    ஆனால் முழுமையாக படித்தால் தோன்றுவது வேறு..





    அவன் (அல்லாஹ்) தான் உங்களை களிமண்ணால் படைத்தான்.'' (அல் குர்ஆன் 6: 2)

    இன்னும் அவன் (அல்லாஹ்) உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பது அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.'' (அல் குர்ஆன் 30: 20)


    நிச்சயமாக நாம் அவர்களை பிசு பிசுப்பான களிமண்ணிலிருந்து படைத்திருக்கின்றோம்.அல்குர்ஆன்: 37:11


    உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரில் இருந்து அமைத்தோம் என்பதை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? ( 21: 30 )




    மண் , களி மண், தண்ணீர் என ஒவ்வொன்றும் அர்த்தம் மிக்கவை..


    முன்பே சொன்னபடி, அறிவியல் என்பது தற்காலிக உண்மை .. இன்றைய அறிவியல் நாளைய குப்பை.. 


    அப்படிப்பட்ட இன்றைய அறிவியலே கூட என்ன சொல்கிறது..


    முதல் உயிரி தண்ணீரில்தான் தோன்றியது..


    முதலில் மண் , அதாவது நிலம் தோன்றியது.. அதன் பின் தண்ணீர் ... அதன் பின் உயிரிகள் தோற்றம் என்பதுதானே அறிவியல். 


    மேற்கண்ட வசனங்களை இந்த பின்னணியில் பாருங்கள்


    சரி.. நம் உடல் எவற்றால் ஆனது? 




    கார்பன், கால்சியம் , பாஸ்பரஸ், பொட்டாசியம், சல்ஃபர், சோடியம் , மக்னீசியம்,. தாமிரம், துத்தனாகம், செலினியம் , மாலிப்டினம் , ஃப்லோரின், க்லோரின், அயோடின், மாங்கனீசு, கோபால்ட், இரும்பு, லித்தியம், ஸ்ட்ராண்டியம் , அலுமினியம் , சிலிக்கான், காரீயம், வெனெடியம், ஆர்சனிக், ப்ரோமின்  போன்ற பொருட்களால் ஆனதுதான் என் உடம்பு, உங்கள் உடம்பு, அமலா பாலின் உடம்பு...


    இந்த தனிமங்கள் எல்லாம் மண்ணிற்கும் பொதுவானவை என்பவைதான் இதில் இருக்கும் சுவாரஸ்யம். 


    ஆனால் மண்ணால் மட்டும் ஆனவன் அல்லன் மனிதன். களிமண், மண், ஈரமான மண், தண்ணீர் என்றெல்லாம் , வசனங்களில் வருவதை பாருங்கள்.


    அதாவது, மனிதன் உருவாவதற்கு ஏதுவான தனிமங்கள் கொண்ட மண் , அவன் உருவாக ஏதுவான நிலை .. இவைதான் மனிதன் உருவாக காரணம் என்பது அறிவியல்..


    ஆனால் அதற்கு அடுத்த நிலையில்தான் அறிவியல் தடுமாறுகிறது.


    இந்த தனிமங்கள் எல்லாம் தானாகவே ஒன்று சேர்ந்து மனிதனாக உருவாகி விட்டதா? ஆம்.. அப்படித்தான் நிகழ்ந்தது என வீம்புக்காக அறிவியல் , அவனம்பிக்கையுடம் சொல்லி வருகிறது.. ( கடவுள் அல்லது ஏதோ ஒரு இறை சக்திதான் காரணம் என்று சொன்னால், அறிவியலும் ஆன்மீகமும் 100% இணைந்து விடும். இப்போதே கூட ஸ்டீவன் ஹாக்கிங்ஸ் நூல்களை படித்தால் ஆன்மீக புத்தகம் படிப்பது போலத்தான் இருக்கிறது..




    ஆக, மனிதன் தோன்றும்போதே மனிதனாகத்தான்  தோன்றி இருக்க வேண்டும். இப்போதைய தோற்றத்தில் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஆதி மனிதன் சற்று மாறி இந்த வடிவை அடைந்து இருக்க கூடும், குரங்கு , பாம்பு, பல்லி , பன்றி போன்றவை மனிதனாக மாறி இருக்க வாய்ப்பில்லை.. மனிதன் , ஒரு வெளி சக்தி உதவியின்றி, தானகவே உருவாகி இருக்கவும் வாய்ப்பில்லை


    மத நம்பிக்கைகளை விடுங்கள்.. காமன் சென்ஸ் அடிப்படையில் எது லாஜிக்கலாக இருக்கிறது பாருங்கள்.. குரங்கில் இருந்து மனித்னா அல்லது அவன் தனி பிறவியா?


    2 . ஜன தொகை அதிகரித்து வரும் நிலையில் , இஸ்லாம் குடும்ப கட்டுப்பாட்டை ஏன் எதிர்க்கிறது ?


    ஓர் இஸ்லாமிய பெரியவருடன் பேசுகையில் அவர் சற்று வித்தியாசமான பதில் அளித்தார்.


    இஸ்லாம் மேல் செய்யப்படும் தவறான பிரச்சாரம் இது..  பாலுணர்வு என்பது இய்ற்கையானது. அதில் தவறு இல்லை. ஆனால் குடும்ப கட்டுப்பாடு சாதனங்களை பயன்படுத்தி , முறைகேடான பாலியல் உறவுகளில் ஈடுபடுவது தவறு.  உடல் உற்வை வெறும் கிளர்ச்சிக்காக ப்யனபடுத்த இந்த தடுப்பு சாதனங்கள் பயன்படுபவது தவறு.


    இன்னும் மோசமான போன் செக்ஸ் சாட், இண்டர் நெட் சாட் போன்றவை இயற்கையான பாலியல் முறைகள் அல்ல.. இதுவெல்லாம்தான் தவறு.
    ஆக, உண்மையாகவே எல்லொரும் ஆன்மீக உணர்வில் இருந்தால் , குடும்ப கட்டுப்பாடு சாதனங்களின் தேவையே இருக்காது என்பதே உண்மை


    என்றார் அவர்...


    3 குர் ஆனில் இடைச்செருகல் உள்ளதா?




    குர் ஆனில் இடைசெருகல் இருப்பது கடினம்..


    மூலப் பிரதிகள் இன்றும் கூட பல இடங்களில் பாதுகாத்து வரப்படுகின்றன. வேறு எந்த வேதத்துக்கும் இந்த பெருமை இல்லை.


    பெரும்பாலான குர் ஆன் நூல்களில், எந்த மொழி பெயர்ப்பாக இருந்தாலும் , மூல எழுத் து வடிவங்களும் கொடுக்கப்படும்,. எனவே யாராவது தவ்று செய்தாலும், அந்த தவறு உடனடியாக களையப்படும். 




    4  மனிதன் நாகரீக வளர்ச்சி பெற்ற பின் தானே குர் ஆன் அருளப்பட்டது? ஏன் அப்படி? அதற்கு முன் இறைத்தூதர் ஏன் அனுப்பபடவில்லை? 


    முகமது நபிக்கும் முன் பல நபிகள் அனுப்பப்பட்டுள்ளனர் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. இந்த கேள்வி அர்த்தம் அற்றது..



    ( மற்ற கேள்விகளுக்கு பதில் அடுத்த இடுகையில் ) 




    http://tamil-vaanam.blogspot.com



  • http://kathaludan.blogspot.com


  • [Continue reading...]

    போராளி விமர்சனம்

    - 0 comments
     
     
    நடிப்பு : சசிகுமார்,அல்லரி நரேஷ்,சுவாதி ,கஞ்சா கருப்பு ,சூரி
    இயக்கம் : சமுத்திர கணி
    தயாரிப்பு : சசிகுமார்

    ஒரு படம் எவ்வளவு சூப்பர் ஹிட் படமாக இருந்தாலும் ஏதோ ஒரு நிமிடம் அல்லது ஒரு நொடி அல்லது ஒரு துளியாவது கண்டிப்பாக போர் அடிக்கும். ஆனால் இந்தப்படத்தில் அப்படி ஒரு வாய்ப்பே இல்லை. படம் துவங்கியவுடன் சீட் நுனிக்கு வந்தால் படம் முடியும் வரை நம்மை அப்படியே உட்கார வைத்து விடுகிறார்கள்.


    ஒரு அபார்ட் மென்டுக்கு சசிகுமாரும் ,அல்லரி நரேஷும் குடி வருகிறார்கள் ,அங்கே இருபவர்களுகெல்லாம் உதவி செய்து நல்ல பெயரை பெறுகிறார்கள் ,ஆனால் அங்கே இருபவர்களுகேல்லாம் அதிர்ச்சியான செய்தி ஒன்று வருகிறது ,கிரமத்தி சசி யும் நரேஷும் மன நிலை தவறியவர்கள் என்று ,ஏன் அப்படி ஆனார்கள் ,அவர்களுடைய கதை என்ன என்பதை முடித்தவரை சுவாரசியமாக கொடுத்திருகிறார் சமுத்திரகனி ,தெலுங்கு நடிகராக இருந்தாலும் நன்றாக நடித்திருக்கிறார் நரேஷ்.

    சசிக்குமார் மிகச்சரியாக பாத்திரத்திற்கு பொருந்துகிறார். இயல்பாக நடிக்கிறார். தன்னம்பிக்கையுடன் கூடிய கதாபாத்திரம். சில நாட்களாக மனம் சரியில்லாமல் இருந்த எனக்கு அந்த கதாபாத்திரம் தான் தன்னம்பிக்கையை ஊட்டியுள்ளது.

    நரேஷ் துடிப்பாகவும் நகைச்சுவையுடனும் நடித்துள்ளார். நாக்கை கடித்துக் கொள்ளும் போது கண்கலங்க வைக்கிறார். காதலுக்காக அவர் முயற்சிக்கும் ஒவ்வொரு காட்சியும் சிரிப்பை வரவழைக்கிறது. கவிதை சொல்லும் போது இரண்டு புள்ளி ஒரு ஆச்சரியக்குறியுடன் நம் மனதில் அமர்ந்து கொள்கிறார்.,தெலுங்கு உரிமையை நரேஷ் வங்கி இருபதாக தகவல்

    சுவாதி நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ்த்திரையில் தோன்றுகிறார். பார்க்க அட்டகாசமாக உள்ளார்.
    கஞ்சா கருப்பு ,பரோட்டா சூரி தங்களுக்கு கொடுத்த வேலையை நன்றாக செய்திருக்கிறார்கள்


    போராளி - வெல்வான்
    [Continue reading...]

    மு.க.ஸ்டாலின் மீது நிலா மோசடி வழக்குப்பதிவு

    - 0 comments
     
     
     
    முன்னாள் துணை முதல் அமைச்சரும், தி.மு.க பொருளாளருமான மு.க.ஸ்டாலின் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் ரோட்டைச் சேர்ந்தவர் என்.எஸ்.குமார். இவர் போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து கடந்த 29ந்தேதி அன்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:
     
    எனக்கு சொந்தமான 2 1/2 கிரவுண்டு நிலம் தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் இருந்தது. அந்த இடத்தில் வீடு கட்டி வாடகைக்கு விட்டு இருந்தேன். அந்த வீட்டை மு.க.ஸ்டாலின் குடும்பத்துக்கு விற்க வேண்டும் என்று பலர் மிரட்டினார்கள். பக்கத்து வீட்டில்தான் மு.க.ஸ்டாலின் வசிக்கிறார். எனது வீட்டை பின்னர் வேணுகோபால் ரெட்டி என்பவர் பெயரில் மிரட்டி பத்திர பதிவு செய்து கொண்டனர். இதற்கு ரூ.5 1/2 கோடிக்கு வங்கி டி.டி.யாக கொடுத்தனர். பின்னர் ரூ.1 கோடியே 15 லட்சத்தை ரொக்கப்பணமாக கொடுத்தனர்.
     
    என்னிடம் வாங்கிய வீட்டை பின்னர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் பெயருக்கு மாதம் ரூ.20 ஆயிரத்துக்கு வாடகைக்கு விட்டது போல ஒப்பந்தம் போட்டு கொண்டனர். தற்போது அந்த வீட்டில் மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரை வசிக்கிறார். என் வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்து எனது வீட்டை எழுதி வாங்கிக்கொண்டனர். எனது வீட்டை மீட்டு தருவதோடு, இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
     
    இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கொலை மிரட்டல், சதித்திட்டம், வீடு புகுந்து மிரட்டுதல் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தனர். மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், வேணுகோபால்ரெட்டி, ராஜாசங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     


    [Continue reading...]

    கிளீனர் ஆன கால்பந்தாட்ட வீரர்கள் !

    - 0 comments
     


    இந்தியாவில் ஒருபுறம் கிரிக்கெட் விளையாட்டு வீர்ர்களுக்கு பணமழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. கிரிக்கெட் வாரியம், ஸ்பான்ஸர்கள் இவை தவிர, ஏதேனும் பெரிய போட்டிகளில் வென்றாலோ அல்லது தனிப்பட்ட சாதனைகளை நிகழ்த்தினாலோ முறியடித்தாலோ, அந்தந்த மாநில அரசு, தவிர மத்திய அரசு என வீர்ர்களை பணக்ரீடை செய்கின்றன.

    சமீபத்தில் பம்பாயில் நிகழ்ந்த டெஸ்ட் போட்டியில், டெண்டுல்கர் தனது நூறாவது சதத்தை நிறைவு செய்தாரானால் அவருக்கு நூறு தங்கக் காசுகள் வழங்கப்படுமென அகில இந்திய கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்திருந்தது. இப்படி கொட்டும் பண மழை எல்லாம் போதாதென்பது போல சூதாட்டங்களில் வேறு ஈடுபட்டு கிரிக்கெட் வீர்ர்கள் அவ்வப்போது மாட்டிக் கொள்வதும் நிகழ்வதுண்டு. முன்னாள் கேப்டன் அஸாருதீன், நட்சத்திர வீரர் ஜடேஜா போன்றோர்கள் உதாரணம்.


    இவை ஒருபுறமிருக்க இந்தியாவில் மற்ற விளையாட்டுக்கள் எங்கிருக்கின்றன என பூதக் கண்ணாடி போட்டுக் கொண்டு தேடினாலும் அகப்படாத அவலநிலை. இன்றைய தலைமுறையினருக்கு இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பது தெரிந்திருக்க நியாயமில்லை, தெரியவில்லை என்று குற்றமும் சொல்ல முடியாது. இதன் கதியே இப்படியென்றால் கால்பந்தாட்டம் எம்மாத்திரம்?

    ஆளுங்கட்சித் தலைவர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் என கட்சி பேதமின்றி ஏதேனும் ஒரு கட்சித் தலைவர் ஏதேனும் ஒரு ஜில்லா கிரிக்கெட் சம்மேளனத்திற்கோ, அல்லது மாநில கிரிக்கெட் சம்மேளனத்திற்கோ தலைமை வகித்துக் கொண்டிருப்பார். எதுவுமே கிடைக்காவிடில், கூடுவாஞ்சேரி கிரிக்கெட் குழுவின் தலைவராகவேனும் பொறுப்பு வகித்துக் கொண்டிருப்பார். ஆனால் கால்பந்து, ஹாக்கி சம்மேளனத்திற்கு ஒரு வார்டு மெம்பர் கூட தலைவர் பொறுப்புக்கு வரத் துணிய மாட்டார். காரணம் அங்கு செல்லாத ஓட்டைக் காலணாவைக் கூடப் பார்க்க முடியாது.

    இம்மாதிரியான பணப் பிரச்சனை மற்றும் ஸ்பான்ஸர் பிரச்சனைகளால் இந்தியாவில் மற்ற விளையாட்டுக்கள் எதுவுமே சோபிக்கவில்லை. 120 கோடி ஜனத்தொகையுள்ள ஒரு நாட்டில் அதிகபட்சம் ஒலிம்பிக்கில் இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைத்தாலே, ஒரு மாதத்திற்கு தலைப்புச் செய்தியாகின்ற கேவலம். இதையும் விட கேவலமான ஒரு நிகழ்வு மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

    கேவலம், அவமானம்! இதற்கும் கீழான வார்த்தைகள் கிடைக்கவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அவ்வணி இந்தியாவுடன் மோதும் நான்காவது சர்வதேச ஒரு தின கிரிக்கெட் போட்டி, மத்தியப் பிரதேச மாநிலம் ஹோல்கர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மூன்றாண்டுகளிக்கு இம்மைதானத்தில் நிகழவிருக்கும் சர்வதேசப் போட்டி என்பதால் மைதானத்தைச் சுத்தம் செய்யும் நிமித்தம், உள்ளூர் டிவிஷன் கால்பந்தாட்ட அணியினரை மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இதில் என்னவொரு அதிர்ச்சி என்றால், இவ்வணியில் உள்ள சுமார் 7 பேர், மாநில அணி வீரர்களாவர். இதுவெல்லாம் கூட அதிர்ச்சி இல்லை, இனி வரப் போவதுதான் அதிர்ச்சி. சுமார் 26,000 இருக்கைகள் கொண்ட மைதானத்தில், ஒவ்வொரு இருக்கைக்கும் சுத்தம் செய்ய ரூபாய் 2.75 வீதம் கூலி கொடுக்கப்படுகிறது என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம். ஒரு கப் டீ கூட இந்த விலைக்குக் கிடைக்காத நிலையில், ஒரு கால்பந்தாட்டக் குழுவை, அதிலும் மாநில வீர்ர்களைக் கொண்ட ஒரு குழுவை 2 ரூபாய் சொச்சத்திற்கு கூலியாட்களாக அமர்த்தியிருக்கிறது மத்தியப் பிரதேச கிரிக்கெட் சம்மேளனம். இது அவ்வணியினரைக் கேவலப் படுத்தும் செயல் அல்ல, ஒட்டு மொத்த கால்பந்தாட்ட்த்தையே கேலிக்குள்ளாக்கும் செயல். இந்தியாவைத் தவிர வேறு எங்குமே நடவாத செயல்.

    இதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, எங்களுடைய கிழிந்த ஷூக்களுக்குப் பதிலாக புதிய ஷூக்களும், இதர விளையாட்டு சாதனங்களையும் வாங்குவோம் என்கிறார் இந்த கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர்.

    இந்தியாவில் கால்பந்தாட்டம் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளது. இவ்விளையாட்டை முன்னெடுத்துச் செல்ல பலம் பொருந்திய அமைப்போ, பணபலமோ நம்மிடம் இல்லை. இதனால் இவ்வாறு செய்யும் வேலைகளின் மூலமாக்க் கிடைக்கும் வருவாயைக் கொண்டு எங்கள் விளையாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறோம் என்கிறார் தேஜ் செளஹான் எனும் கால்பந்தாட்ட வீரர்.

    மத்திய அரசாங்கத்தில் விளையாட்டுத் துறை அமைச்சகம் என்று ஒன்று இருப்பதாகக் கேள்வி. அந்த அமைச்சகம் விளையாட்டுக்களை முன்னேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டாலும் கூட பரவாயில்லை; ஒரு விளையாட்டையும், அதன் வீரர்களையும் இவ்வளவு கீழான நிலைக்குத் தள்ளாமலிருக்கவேனும் ஆவன செய்ய வேண்டும்.

    சச்சினுக்கு ஒரு வேண்டுகோள்: 100 அடித்த பிறகு ஒரு 100 ரூபாயை கால்பந்தாட்டதுக்கு நிதி உதவியாக தர வேண்டும்.

    கசாப் போன்றவர்களை பாதுகாக்க செலவு செய்யும் அரசு அதில் 10% கால்பந்தாட்டத்திற்கு செலவு செய்யலாம். இந்திய கிரிக்கெட் அணி இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அங்கே விளையட கூடாது. ஞாநி போன்றவர்கள் இதை பற்றி எழுதி சம்பந்தபட்டவர்களுக்கு கொண்டு போக வேண்டும்.

    [Continue reading...]

    நடந்தது என்ன? : மு.க. அழகிரி விளக்கம்

    - 0 comments
     
     
     
    மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு, மதுரை மாநகராட்சியில் உள்ள தெற்கு மண்டலத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு புதிய எம்பி அலுவலகம் கட்டி ஒதுக்கப்பட்டது.
     
     
    தற்போது ஆட்சி மாற்றத்தால் 30.11.2011 அன்று மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, அந்த இடத்தை பறித்து மீண்டும் மேற்கு மண்டல அலுவலகத்திற்காக ஒப்படைக்க மாநகராட்சி கமிஷனர் நடராஜன், மேயர் ராஜன் செல்லப்பாவிடம் ஒப்படைத்தார்.
     
     
     
     
    மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக டெல்லியில் இருந்தார்.
     
    இந்த நேரத்தில் மதுரை உள்ள எம்பி அலுவலக இடம் பறிக்கப்பட்டச் செய்தி, மு.க.அழகிரி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது.
     
    இதையடுத்து டெல்லியில் இருந்து 30.11.2011 அன்று அழகிரி அவசரமாக மதுரை திரும்பினார். இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி (01.12.2011) அழகிரி விளக்கம் அளித்தார்.
     
     
    அவர், ''நானே கடந்த நவம்பர் 1ம் தேதி மாநகராட்சி கமிஷனர் நடராஜனிடம் எம்.பி. அலுவலக சாவியை ஒப்படைத்துவிட்டேன். அதன்பிறகுதான் இந்த தீர்மானத்தை போட்டுள்ளார்கள். மற்றபடி என் அலுவலகத்தை பறிக்கவில்லை.
     
     
    இந்த உண்மையை கமிஷனர் வெளியே சொல்லாமல் மறைப்பதால், அதிமுக பொய் பிரச்சாரம் செய்கிறது. இது என்னை மிகவும் எரிச்சல் படுத்துகிறது'' என்று கூறினார்



    [Continue reading...]

    ஹீரோயின்கள் இடையே சண்டை மூட்டாதீர்கள் : அஞ்சலி கோபம்

    - 0 comments
     
     
     
    'எங்கேயும் எப்போதும்' படத்தில் ஜோடியாக நடித்த ஜெய்க்கும் அஞ்சலிக்கும் காதல் என்று வதந்தி பரவியது. இல்லவே இல்லை என்று அஞ்சலி மறுத்தார். இந்நிலையில் 3 ஹீரோயின்கள் படத்தில் அஞ்சலி நடிப்பதால் அதில் அவர் செகண்ட் ஹீரோயினாக நடிக்கிறார் என்று கிசுகிசு கிளம்பி உள்ளது. இதுபற்றி அஞ்சலி கூறியதாவது: நடிகருடன் காதல் என்று வதந்தி பரப்பி அதற்கு இப்போதுதான் மறுப்பு சொன்னேன். இதற்கிடையில் ஹீரோயின்களுக்குள் சண்டை மூட்டும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். விக்ரம் நடிக்கும் 'கரிகாலன்' படத்தில் 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இதில் முதலிடம் யாருக்கு என்கிறார்கள். முதல், இரண்டாவது என்று ஏன் பிரிக்கிறார்களோ தெரியவில்லை. 3 ஹீரோயின்களுக்கும் சமமான ரோல் என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். சோழ வரலாற்று பின்னணியில் இப்படம் அமைக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக ஆக்ஷன் வேடத்தில் நடிக்கிறேன். குதிரை ஏற்றம், சண்டை காட்சிகளில் நடிக்க பயிற்சி பெற்று வருகிறேன். இம்மாதம் 10ம் தேதி ஷூட்டிங் தொடங்குகிறது. விக்ரமுடன் நடிக்கும் காட்சிகள் ஐதராபாத்தில் படமாக உள்ளன. இவ்வாறு அஞ்சலி கூறினார்.



    [Continue reading...]

    அமெரிக்காவுடன் போருக்கு தயாராகும் பாகிஸ்தான்

    - 0 comments
     
     
     
    அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் பாகிஸ்தான் ராணுவ நிலைகளைத் தாக்கினால், பதிலடி கொடுக்க மேலிடத்து உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
     
    இந்த உத்தரவால் பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் நேரடிப் போர் மூளும் அபாயம் எழுந்துள்ளது.
     
    நேட்டோ படையினர் சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவ நிலை மீது தாக்குதல் நடத்தியதில் 24 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு நிலவுகிறது.
     
    இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ நிலைகளை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் தாக்கினால் திருப்பித் தாக்குமாறு கயானி உத்தரவிட்டுள்ளார்.
     
    இதுகுறித்து அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் நிலை கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவத்தினரை எதிராளிகள் தாக்கினால், திருப்பித் தாக்கலாம். எதிரி யாராக இருந்தாலும் சரி, என்ன செய்ய வேண்டும் என்று மேலிடத்தின் உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை. உங்களிடம் உள்ள அனைத்துப் பலத்தையும் பிரயோகித்து பதிலடி கொடுக்க உங்களுக்கு உரிமை உள்ளது.
     
    நேட்டோ படையினரே தாக்கினாலும் கூட தயங்காமல் பதிலடி கொடுங்கள். இதில் எந்தவித தயக்கமும் தேவையில்லை. இதற்காக யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. எந்த மட்டத்திலும் அனுமதிக்காக காத்திருக்கத் தேவையில்லை. கையில் இருக்கும் ஆயுத பலத்தை பயன்படுத்தி முழுமையான பதிலடியைக் கொடுங்கள் என்றார் கயானி.



    [Continue reading...]

    வடிவேலு திமுகவுக்கு 'குட் பை' அ.தி.மு.க.வில் சேருகிறார்?

    - 0 comments
     
     
     
    நடிகர் வடிவேலு அ.தி. மு.க.வில் சேர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல காமெடி நடிகர் வடிவேலு கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அப்போது விஜயகாந்த் எனது எதிரி என்று பலமாக சாடினார். அ.தி.மு.க. வையோ, ஜெயலலிதா வையோ, கூட்டங்களில் விமர்சித்து பேசவில்லை.
     
    தேர்தலில் தி.மு.க. தோற்றதால் வடிவேலு அதிர்ச்சியானார். தற்போது படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக அவர் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.
     
    இதற்கிடையில் வடிவேலு அ.தி.மு.க.வில் சேர முடிவு செய்துள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தரும், அ.தி.மு.க.வில் சேரப்போவதாக கூறப்படுகிறது.
     
    இப்ராகிம்ராவுத்தரும், விஜயகாந்தும் ஆரம்பத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். விஜயகாந்தை வைத்து ராவுத்தர் நிறைய படங்கள் தயாரித்துள்ளார். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இப்ராகிம் ராவுத்தர் காங்கிரசில் இணைந்து செயல்பட்டார். மூப்பனாருக்கு நெருக்க மானவராகவும், இருந்தார். இப்போது அவர் அ.தி.மு.க.வில் சேர முடிவு செய்துள்ளார்.
     
    வடிவேலுவும், இப்ராகிம் ராவுத்தரும் நேரில் சந்தித்து அ.தி.மு.க.வில் சேருவது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. விரைவில் இணைப்பு விழா நடக்கும் என தெரிகிறது.



    [Continue reading...]

    விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்கும் புதிய படம்!

    - 0 comments
     
     
    பழம் பெரும் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் அஜீத்.
     
    இந்தப் படத்தை 'சிறுத்தை' படத்தை இயக்கிய ஷிவா இயக்குகிறார்.
     
    எங்க வீட்டுப் பிள்ளை, நம்நாடு, உழைப்பாளி என பிரமாண்ட படங்களைத் தயாரித்த இந்த நிறுவனத்தின் நிறுவனரும் அதிபருமான மறைந்த பி நாகிரெட்டியின் 100 வது பிறந்த நாளையொட்டி, அவருக்கு மரியாதை செய்யும் விதத்தில் இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது.
     
    இந்தப் படத்தின் முறையான அறிவிப்பு இன்று விஜயா ஸ்டுடியோவில் வெளியிடப்பட்டது. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை பி வெங்கட்ராம ரெட்டி, பி பாரதி ரெட்டி தயாரிக்கின்றனர்.
     
    படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
     
    2012-ல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.



    [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger