Wednesday 25 December 2013

இன்று சுனாமி நினைவு தினம்: மாயமான 3 மகள்களை 10 ஆண்டுகளாக தேடும் தாயின் பரிதாபம் Today Memorial Day tsunami missing 3 daughters 10 year old mother of looking searching

- 0 comments

Img இன்று சுனாமி நினைவு தினம்: மாயமான 3 மகள்களை 10 ஆண்டுகளாக தேடும் தாயின் பரிதாபம் Today Memorial Day tsunami missing 3 daughters 10 year old mother of looking searching

ஆலந்தூர்,டிச.26-

கடந்த 2004–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26–ந்தேதி தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமி பேரலையில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்து, 10–ம் ஆண்டு தொடங்குகிறது.

இந்த சுனாமிக்கு தனது கணவரின் உயிரை பறிகொடுத்து விட்டு அன்று முதல் மாயமான 3 மகள்களையும் கடந்த 10 ஆண்டுகளாக தேடி வரும் ஒரு தாயின் நிலைமையை நினைத்து பார்க்க பரிதாபமாக உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:–

சென்னையை அடுத்த தாம்பரம் பெருங்களத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் செண்பகவள்ளி (வயது 50). இவர், இதற்கு முன்பு ஆவடியை அடுத்த வேப்பம்பட்டில் குடியிருந்து வந்தார். அப்போது அவருடைய கணவர் கோவிந்தசாமி மற்றும் மகள்கள் குமுதா(17), அனுசியா(16), கவிதா(13) ஆகியோர் கடந்த 2004–ம் ஆண்டு சுற்றுலாவாக கன்னியாகுமரிக்கு சென்றனர்.

அங்கிருந்து டிசம்பர் மாதம் 25–ந்தேதி வேளாங்கண்ணிக்கு சென்றனர். அங்கு மறுநாள் (26–ந்தேதி) ஏற்பட்ட சுனாமி பேரலையில் சிக்கினார்கள். இதில் மீட்பு குழுவினர் கோவிந்தசாமியை மட்டும் காயங்களுடன் நாகப்பட்டினத்தில் மீட்டனர். பின்னர் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிந்தசாமிக்கு நினைவு திரும்பியது.

அப்போது அவர், தனது மனைவியிடம், ''நமது மகள்கள் 3 பேரும் சுனாமியில் சிக்கவில்லை. அவர்கள் தப்பிச்சென்றுவிட்டனர். அவர்களை கண்டுபிடி'' என்று கூறி விட்டு பரிதாபமாக இறந்துவிட்டார். தற்போது செண்பகவள்ளி, சுனாமியில் கணவரை இழந்து, மகள்களையும் தொலைத்து விட்டு பெருங்களத்தூரில் தனிமையில் வசித்து வருகிறார்.

வருமானத்துக்கு தாம்பரம் மெப்சில் உள்ள ஒரு கேண்டினில் வேலை பார்த்து வருகிறார். அத்துடன் சுனாமியின் போது மாயமான தனது மகள்களையும் தீவிரமாக தேடி வருகிறார். இதற்காக சுனாமியில் இறந்தவர்கள் மற்றும் அதில் சிக்கி மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்து அதில் தனது மகள்கள் இருக்கிறார்களா? என தேடி வருகிறார்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக தேடியும் இன்னும் அவரது மகள்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களின் நிலை என்ன ஆனது? என்றும் தெரியவில்லை. இதுபற்றி செண்பகவள்ளி, கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறும்போது,

''கடந்த 2004–ம் ஆண்டு சுனாமியில் சிக்கிய எனது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது என்னிடம் மகள்கள் சாகவில்லை. அவர்களை கண்டுபிடி என்று கூறி விட்டு இறந்து விட்டார்.

நானும் கடந்த 10 ஆண்டுகளாக எனது மகள் 3 பேரையும் தேடி வருகிறேன். அவர்கள் உயிருடன் தான் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் எப்படியும் அவர்களை கண்டுபிடித்துவிடுவேன்'' என உறுதியுடன் தெரிவித்தார்.

''அந்த தாயின் நம்பிக்கை வீண் போகாமல், கணவரை இழந்து தவிக்கும் அவருக்கு ஆறுதலாக அவரின் 3 மகள்களையுமாவது அவருடன் சேர்க்க கடவுள் வழி செய்யட்டும்'' என வேண்டியபடி அந்த பகுதி மக்களும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
...

[Continue reading...]

2013 ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 254 கோடி சம்பாதித்த சூதாட்ட விடுதி அதிபர் அடெல்சன் Casino magnate Adelson made 254 crore per day in 2013

- 0 comments

Casino magnate Adelson made 254 crore per day in 2013 .

2013 ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 254 கோடி சம்பாதித்த சூதாட்ட விடுதி அதிபர் அடெல்சன் Casino magnate Adelson made 254 crore per day in 2013

வாஷிங்டன், டிச. 26-

2013-ம் ஆண்டின் அதிகம் சம்பாதித்த நபராக சூதாட்ட விடுதிகள் (கேசினோ) நடத்திவரும் அமெரிக்க தொழிலதிபர் அடெல்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் லாஸ் வேகாஸ், சீனாவின் மக்காவ் மற்றும் சிங்கப்பூரில் விதவிதமான சூதாட்ட மையங்களை தொடங்கியுள்ளார்.

இங்குள்ள சூதாட்ட விளையாட்டுகளில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்கள் அந்த விடுதிகளுக்கு படையெடுக்கின்றனர். இதனால், கேசினோ சூதாட்ட விடுதிகளுக்கு இந்த ஆண்டு கொள்ளை லாபம் கிடைத்துள்ளது.

இதையடுத்து கேசினோ அதிபர் ஷெல்டன் அடெல்சனின் ஒரு நாளைய வருமானம் 254 கோடி ரூபாய் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது. இச்சாதனையின் மூலம் உலகின் முன்னணி கோடீஸ்வரரான வாரன் பப்பெட்டை அடெல்சன் முந்திவிட்டார் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டில் மட்டும் 41 மில்லியன் டாலர் சம்பாதித்த கேசினோ அதிபரின் சொத்து மதிப்பு 37 பில்லியன் டாலர் ஆகும். பேஸ்புக் வலைதள அதிபர் மார்க் ஸுகெர்பெர்க் இந்த ஆண்டில் ஒரு நாளைக்கு 230 கோடி வீதம் சம்பாதித்து இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மூன்றாவதாக அமேசன் அதிபர் ஜெப் பெஸோஸ் உள்ளார். 
...

[Continue reading...]

மேற்கு வங்காளம்: சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு சாமியார் கைது children harassment priest arrested in West Bangladesh

- 0 comments

Img மேற்கு வங்காளம்: சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு சாமியார் கைது children harassment priest arrested in West Bangladesh

கொல்கத்தா, டிச. 26-

மேற்கு வங்காள மாநிலம் ஷகாபூரில் மடம் நடத்தி வந்த சாமியர் ஒருவர் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட 4 பேர்களில் 3 சிறுவர்கள். அவர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு தருவதாக சிறுவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

'இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 377–ன் கீழ் ஓரினச் சேர்க்கை கொள்வது கிரிமினல் குற்றம், இந்தக் குற்றத்துக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கலாம்' என்று சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பு கூறியது. போலீசார், சாமியார் மீது பிரிவு 377ன் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் சாமியாரை போலீசார் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவர்கள் சாமியாரின் மேற்பார்வையில் ஆசிரமத்தில் படித்து வந்துள்ளனர்.

...

[Continue reading...]

தேவயானி கோப்ரகடே கைது: அமெரிக்க அதிகாரி விசா விவரங்களை தவறாக படித்ததே காரணம் devyani khobragade arrested U.S. official visa information due to wrong lesson

- 0 comments

Img தேவயானி கோப்ரகடே கைது: அமெரிக்க அதிகாரி விசா விவரங்களை தவறாக படித்ததே காரணம் devyani khobragade arrested U.S. official visa information due to wrong lesson

நியுயார்க், டிச.25-

விசா விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட விவரங்களை, அமெரிக்க அதிகாரி மார்க் ஸ்மித் தவறாக புரிந்துகொண்டதே தேவயானி கோப்ரகடே கைதுக்கு காரணம் என அவரது வழக்கறிஞர் டேனியல் அர்ஷாக் தெரிவித்துள்ளார். விசா விண்ணப்பத்தில் படிவம் டி.எஸ்.160 ல் தனது சம்பளம் 4500 டாலர் என்று தேவயானி குறிப்பிட்டதை, சங்கீதா ரிச்சர்டு எதிர்பார்த்த சம்பளமாகவும், ஆனால் தேவயானி சங்கீதாவுக்கு 1560 டாலர் தர சம்மதித்தாகவும் தவறாக புரிந்து கொண்ட மார்க் ஸ்மித், தனது விசாரணையில் தேவயானி குற்றவாளி என துல்லிமாக அறிந்துள்ளதாக கூறி கைது செய்துள்ளார்.

இவ்விவரங்களை இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் பரிசீலிக்கும்போது, தேவயாணி போதுமான சம்பளம் பெறுவதால் சங்கீதாவுக்கு அவர் சம்பளம் தரமுடியும் என்றும், அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் சரியானது என முடிவுக்கு வரமுடியும் எனவும் டேனியல் தெரிவித்துள்ளார்.

ஸ்மித் செய்த சிறிய தவறால் எவ்வளவு பெரிய கொடூரமான விஷயம் நடந்துவிட்டது என டேனியல் மேலும் தெரிவித்துள்ளார்.
...

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger