Wednesday 9 October 2013

ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் விபச்சாரம் செய்த ஐந்து பிரபல நடிகைகள் அதிரடி கைது. மும்பையில் பெரும் பரபரப்பு mumbai IAS Officer arrest for actress sex

- 0 comments

ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் விபச்சாரம் செய்த ஐந்து பிரபல நடிகைகள் அதிரடி கைது. மும்பையில் பெரும் பரபரப்பு.

by abtamil
Tamil newsToday,

மும்பை ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு சொந்தமான ஒரு வீட்டில் ஐந்து பிரபல நடிகைகள் விபச்சாரம் செய்ததாக மும்பை போலீஸார் அதிரடியாக கைது செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள ஒரு வீட்டில் பாலிவுட் நடிகைகள் சிலர் ஹை கிளாஸ் விபச்சாரத்தில் ஈடுபட்டுவருவதாக மும்பை போலீஸாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து, அதிரடியாக சோதனை செய்த போலீஸார் ஐந்து பிரபல பாலிவுட் நடிகைகளை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நடிஐகள் அனைவரும் டெலிவிஷன் தொடர்கள் மற்றும் போஜ்புரி மொழிகளில் நடித்துவரும் பிரபல நடிகைகள் என தெரியவந்துள்ளது. மும்பையில் உள்ள மீரா டவர் என்ற அபார்ட்மெண்ட் வீட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் வீட்டை வாடகைக்கு எடுத்த நடிகைகள் அதில் பெரும் பணக்காரர்களை வரவழைத்து விபச்சாரம் செய்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த ஐந்து நடிகைகளுக்கு இமிதியா கான் என்பவர் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளதாகவும் அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றும் போலீஸார் தெரிவித்தனர். மும்பையில் உள்ள மீரா டவுன் பகுதி முழுவதும் ஐ.ஏ.எஸ் அதிகார்கள் போன்ற உயரதிகாரிகள் வசிக்கும் இடம் என்பதால் விபச்சாரம் செய்ய பாதுகாப்பான பகுதி என முடிவு செய்து அந்த பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர் அந்த ஐந்து நடிகைகள். அந்த பகுதிக்கு ஒரு வாடிக்கையாளர் போல வேடம் அணிந்து சென்ற போலீஸ் ஒருவரிடம் முதலில் ரூ.1 லட்சம் பேரம் பேசிய நடிகைகள், பின்னர் ரூ.25000க்கு உல்லாசமாக இருக்க ஒப்புக்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நடிகைகள் பெயர் மற்றும் விபரங்களை தெரிவிக்க போலீஸார் மறுத்துவிட்டனர்.

Show commentsOpen link

[Continue reading...]

முடிவுக்கு வந்த தொப்புள் பிரச்சனை! வெட்டப்படும் முதலிரவுக் காட்சிகள்! Naiyandi tamil movie nasriya news

- 1 comments

முடிவுக்கு வந்த தொப்புள் பிரச்சனை! வெட்டப்படும் முதலிரவுக் காட்சிகள்!

by admin
TamilSpyYesterday,

'தொப்புளுக்கு டூப் போட்டுட்டாங்க' என்று துவங்கிய நஸ்ரியா நஸீமின் தொப்புள் விவகாரம் பல விதத்தில் விஸ்வரூபம் எடுத்து தற்போது முடிவிற்கு வந்திருக்கிறது. 'நல்ல குடும்பப் படத்தை செக்ஸ் படம் மாதிரி பிரபலப்படுத்திட்டாங்காளே' என்று கஷ்டப்பட்ட இயக்குனர் சற்குணம், நய்யாண்டி படக்குழுவுடன் பேசி நஸ்ரியாவிற்கு திரைப்படத்தை திரையிட்டுக் காட்டி அவர் வேண்டாம் என்று சொல்லும் காட்சிகளை நீக்கிவிடலாம் என்று பிரச்சனையை முடிக்க ஐடியாவும் கொடுத்திருக்கிறார்.

இன்று(09.10.13) காலை ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் தனது வக்கீலுடன் நய்யண்டி திரைப்படத்தைப் பார்த்த நஸ்ரியாவின் தந்தை

* முதலிரவில் தனுஷ் – நஸ்ரியாவின் கால்கள் பின்னிப் பிணைந்திருக்கும் காட்சி

* எழுந்து அமர்ந்த பின் நஸ்ரியாவின் முதுகில் வியர்வை வருகின்ற காட்சி

* தனுஷ் மடியில் நஸ்ரியா படுத்து உறங்கும் காட்சி

ஆகிய மூன்று காட்சிகளையும் நீக்கிவிடுமாறு கூறியிருக்கிறார். நஸ்ரியாவின் தந்தை கூறிய மூன்று காட்சிகளையும் நீக்க படக்குழு ஒப்புக்கொண்டதால் பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது. தொப்புள் விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதையடுத்து இன்று(09.10.13) மாலை 7.30-க்கு பத்திரிக்கையாளர்களை நஸ்ரியா சந்தித்து பேசுகிறார்.

பிரச்சனைக்கு மூலக்காரணமாக இருந்த தொப்புள் காட்சி படத்தில் இருந்ததா? குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம் என்று சற்குணம் கூறியது மேற்கூறிய முதலிரவுக் காட்சிகள் இடம்பெற்றிருந்த நய்யாண்டி திரைப்படத்தைத் தானா? என்பதெல்லாம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிற்குப் பிறகு தான் தெரியவரும் என்பதால் தமிழ்த் திரையுலகம் முழுவதும் நஸ்ரியாவின் வரவை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறது.

Nazriya Hot Navel Video Full Story

Show commentsOpen link

[Continue reading...]

காதலர் டோடி ஃபயீதின் கருவை வயிற்றில் சுமந்ததால் இளவரசி டயானா கொல்லப்பட்டாரா?: வெளிவராத புதிய தகவல் Diana killed for carrying Dodi fayed baby in womb

- 0 comments

காதலர் டோடி ஃபயீதின் கருவை வயிற்றில் சுமந்ததால் இளவரசி டயானா கொல்லப்பட்டாரா?: வெளிவராத புதிய தகவல் Diana killed for carrying Dodi fayed baby in womb

Tamil NewsToday,

லண்டன், அக்.10-

இங்கிலாந்து இளவரசர் சார்லசை திருமணம் செய்து கொண்ட டயானா, 31-8-1997ம் ஆண்ட காதலர் டோடி ஃபயீத்துடன் பாரீஸ் நகர கார் விபத்தில் பலியானார்.

சார்லசுடன் வாழ்ந்த போதே இன்னொரு நபரை காதலிப்பதாக டயானா அளித்த பேட்டி இங்கிலாந்து ராஜ குடும்பத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனையடுத்து, டயானாவை விவாகரத்து செய்து விடும்படி சார்லசை ராணி எலிசபத் வற்புறுத்தினார்.

இந்நிலையில், பாரீஸ் நகரில் தங்களை புகைப்படம் எடுக்க துரத்தி வந்த பத்திரிகையாளர்களிடம் இருந்து தப்பிக்க காரை வேகமாக ஓட்டும்படி டிரைவருக்கு டயானா உத்தரவிட்டார்.

சரங்கப்பாதை வழியாக சென்ற கார் பக்கசுவரில் மோதியதால் டயானா - டோடி ஃபயீத் இருவருமே விபத்தில் சிக்கி பலியாகினர்.

இங்கிலாந்தின் உளவுத் துறையின் ரகசிய ஏற்பாட்டின் படி, அரச குடும்பம் தான் டயானாவை கொன்று விட்டது என்று முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கடந்த மாதம் குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், அலன் பவர் என்பவர் டயானாவின் மர்ம மரணம் தொடர்பாக புதிய புத்தகம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

விபத்துக்கு பின்னர் பாரீசில் உள்ள பிட்டி - சல்பெட்ரியர் ஆஸ்பத்திரிக்கு டயானாவை தூக்கி வந்தபோது அவரது வயிற்றை எக்ஸ்-ரே எடுத்து பார்த்த டாக்டர் எலிசபத் டயான் மற்றும் செவிலிப் பெண் ஒருவர் வயிற்றினுள் 6 - 10 வார கருவினை கண்டதாக ஆஸ்பத்திரி குறிப்பேடுகளில் பதிவு செய்துள்ளனர்.

அரச குடும்பத்தின் கவுரவத்தை காப்பாற்றவே எம்-16 உளவாளிகளை ஏவி டயானாவை இங்கிலாந்து அரண்மனை வட்டாரங்கள் தீர்த்து கட்டி விட்டது.

கர்ப்பமாக இருந்த அவரது வயிறு வெளியே தெரியாதபடி, டயானாவின் பிணத்தை தைலத்தில் போட்டு டோடி ஃபயீத்தின் குழந்தை அவரது கருவில் வளரும் ரகசியத்தை இங்கிலாந்து அரச வம்சத்தினர் மறைத்து விட்டனர் எனவும் தனது புத்தகத்தில் அலன் பவர் குறிப்பிட்டுள்ளார்.
...
Show commentsOpen link

[Continue reading...]

நஸ்ரியாவின் பிரச்சனைக்கு காரணம் தனுஷ் actor danush with nasriya song

- 0 comments

நஸ்ரியாவின் பிரச்சனைக்கு காரணம் தனுஷ்

by abtamilan tamil cinema news

நையான்டி படத்திற்கு குறிப்பாக அந்த பாடல் காட்சிக்கு யுடூப் தளத்தில் ஹிட் கொடுக்க தனுஷால் ஏற்பாடு செய்யப்பட்ட சதிச்செயல் தான் நஸ்ரியா விவகாரம்

பாவம் இதில் நஸ்ரியா மாட்டிக் கொண்டார்

முஸ்லீம் இயக்கம் நஸ்ரியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து இப்படத்திற்கு தடை கோருமா ?

Actress nasriya dupe news..

[Continue reading...]

சேலத்தில் பலத்த மழை: வீடு இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி heavy rain in Salem house wall collapse 3 death

- 0 comments

சேலத்தில் பலத்த மழை: வீடு இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி heavy rain in Salem house wall collapse 3 death

Tamil NewsToday,

சேலம், அக்.9–

சேலத்தில் நேற்று இரவு பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இரவு 9 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாமல் கொட்டியது. தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது. இந்த மழைக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள். அதன் விபரம் வருமாறு:–

சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் உள்ள வடக்கு பொன்னம்மாப்பேட்டை ஏரிக்கரை ரோட்டில் ராமமூர்த்தி நகர் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 50). தறித்தொழிலாளி. பீடா கடையும் வைத்துள்ளார்.

இவரது 2–வது மனைவி கல்யாணி (வயது 40). முதல் மனைவி தனியே கோவையில் வசித்து வருகிறார். சீனிவாசனும், அவரது மனைவியும் வீட்டில் தறி நெய்தும் வந்தனர்.

நேற்று இரவு சீனிவாசன் மனைவி கல்யாணி, மகள் ஜானகி (வயது 22), பேத்திகள் நந்தினி (வயது 8), திவ்யா (வயது 10), பேரன் சஞ்சய் (வயது 8) ஆகியோர் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். நேற்று இரவு பெய்த பலத்த மழையால் வீட்டு சுவர் நனைந்து பொதும்பிபோய் இருந்தது.

இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் வீடு திடீரென்று இடிந்து விழுந்தது. இதனால் வீட்டுக்கு தூங்கி கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறினார்கள்.

இதை கேட்ட அக்கம் பக்கம் இருந்தவர்கள் அங்கு ஓடிவந்து அனைவரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதுபற்றி சேலம் அம்மாப்பேட்டை போலீசுக்கும், செவ்வாய் பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் கோட்ட தீயணைப்பு அதிகாரி எழில் அரசு, உதவி கோட்ட அதிகாரி முருகேசன், சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு அதிகாரி வெங்கடாசலம் மற்றும் வீரர்கள் உடனே சம்பவ இடம் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய சீனிவாசன், மகள் ஜானகி, பேத்தி நந்தினி ஆகியோர் அதே இடத்தில் இறந்தனர்.

கல்யாணி, திவ்யா, சஞ்சய் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இவர்களை தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் இருந்து காப்பாற்றி உடனே சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சீனிவாசனும், அவரது குடும்பத்தினரும் வசித்து வந்த வீடு ஓட்டு வீடாகும். இந்த பகுதி தாழ்வான பகுதி ஆகும். சிறிய மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி நிற்கும். நேற்று இரவு பலத்த மழை பெய்ததால் சீனிவாசனின் வீட்டு சுவர் ஈரம் ஏற்பட்டு இடிந்து விழுந்தது.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். சம்பவ இடத்திற்கு சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் பாபு, உதவி கமிஷனர்கள் ரவிசங்கர், சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர்கள் கண்ணன் சூரியமூர்த்தி, ராஜா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து சேலம் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

...
Show commentsOpen link

[Continue reading...]

ராமேசுவரத்தில் தேவர் சிலை அவமதிப்பு: மறியல் போராட்டம் போலீசார் குவிப்பு thevar statue insulting in rameswaram blockade protest police focus

- 0 comments

ராமேசுவரத்தில் தேவர் சிலை அவமதிப்பு: மறியல் போராட்டம் போலீசார் குவிப்பு thevar statue insulting in rameswaram blockade protest police focus

Tamil NewsToday,

ராமேசுவரம், அக். 9-

ராமேசுவரத்தில் ரெயில் நிலையம் செல்லும் வழியில் அரசு ஆஸ்பத்திரி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வெண்கல சிலை உள்ளது. நேற்று இரவு மர்ம ஆசாமிகள் யாரோ இந்த சிலையை அவமதிப்பு செய்துள்ளனர். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் தேவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றிய தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது. அங்கு ஏராளமானோர் கூடிவிட்டனர். பின்னர் அவர்கள் தேவர் சிலையை சுத்தம் செய்து மாலை அணிவித்தனர். பின்னர் அவர்கள் சிலையை அவமதிப்பு செய்தவர்களை உடனே கைது செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. மோகன்ராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகநயினார் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.

மறியல் செய்தவர்கள் தேவர் சிலையை அவமதித்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். போலீசார் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். இது சம்பந்தமாக ராமேசுவரம் கோவில் நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலையை அவமதித்தவர்களை தேடி வருகிறார்கள். அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளதால் மண்டபம், உச்சிப்புளி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
...
Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger