Thursday 10 October 2013

மாணவர்கள் மனதில் வன்முறை வளர்வதற்கு சினிமாவே காரணம்: வைகோ குற்றச்சாட்டு Growth of violence in students mind due to cinema Vaiko accusation

- 0 comments

மாணவர்கள் மனதில் வன்முறை வளர்வதற்கு சினிமாவே காரணம்: வைகோ குற்றச்சாட்டு Growth of violence in students mind due to cinema Vaiko accusation

Tamil NewsToday, 10:45

சென்னை, அக்.11-

வல்லநாட்டில் கல்லூரி முதல்வர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், மாணவர்கள் மனதில் வன்முறை வளர்வதற்கு சினிமாவே காரணம் என்று வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இதயத்தை உறைய வைக்கும் கொடூரமான துன்பச் செய்தி, அறிந்த மாத்திரத்தில் அனைவரையும் பலத்த அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறது. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்குச் செல்லுகின்ற வழியில், வல்லநாட்டுக்கு அருகில் உள்ள குழந்தை ஏசு பொறியியல் கல்லூரியின் முதல்வர் சுரேஷ் அதே பொறியியல் கல்லூரியின் 3 மாணவர்களால், கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

பேருந்துகளில் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறுகளில் இந்த மாணவர்கள் நடந்து கொண்ட விதம் கல்லூரியின் ஒழுங்குக்குக் கேடு ஏற்படுத்தும் என்று எண்ணி, இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தற்காலிக நீக்கம் செய்து உள்ளார். அதனால், இந்த மாணவர்கள், அவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் லட்சோபலட்சம் மாணவர்கள், கல்வியில் முனைப்போடு, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்போடு, பெற்றோரின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்கின்ற குறிக்கோளோடு பயின்று வருகிறார்கள், அமைதி காத்து வருகிறார்கள். ஆனால், அண்மைக்காலமாக, ஒரு சில மாணவர்கள், கல்லூரிகளுக்குள் மோதிக் கொள்வதும், ஆயுதங்களைக் கொண்டு தாக்கும் வன்முறையில் ஈடுபடுவதும், மிகவும் விபரீதமான நிலையை ஏற்படுத்துகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு, கல்லூரிகளில் மாணவர்கள் இடையே அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட, வேறு விதமான குறுகிய உணர்வுகளோ, எண்ணங்களோ ஏற்பட்டது கிடையாது. ஆகக்கூடுதலாக சத்தம் போட்டுப் பேசி சண்டை போட்டுப் பின்னர் சேர்ந்து கொள்வார்களே தவிர, கத்தி, அரிவாள் கொண்டு தாக்குவது போன்ற நிகழ்வுகள் கிடையாது.

கடிதோச்சி மெல்ல எறிக என்பது போல, ஆசிரியர்கள் கண்டிப்பது, மாணவர்களின் நன்மைக்காகத்தான்; ஒரு தந்தை பிள்ளையைக் கண்டிப்பதைப் போலத்தான். ஆனால், மாணவர்கள், கொடிய ஆயுதங்களைக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவது, விதைநெல்லே அழியும் பெருங்கேடு ஆகும். பள்ளி ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர்களை, கல்லூரி முதல்வரை, பேராசிரியர்களை, மாணவர்கள் தாக்குகின்ற ஒரு நிலை ஏற்படுமானால், பயிரே வேலியை அழிக்கின்ற கேடாக முடியும்.

இத்தகைய வன்முறை இளம் உள்ளங்களில் மாணவர்களின் மனதில் வளர்வதற்கு, அண்மையில் வருகின்ற திரைப்படங்களின் வன்முறைக் காட்சிகளும் ஒரு காரணம் ஆகும். பல இடங்களில் மதுவும் ஒரு காரணம் ஆகும்.

இந்தப் படுகொலைக்குப் பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, இதைச் செய்த மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உயர்ந்த இலட்சியங்களுக்காக, தமிழகத்தின் உயர்வுக்காகப் பாடுபட வேண்டிய மாணவர் சமுதாயம், நமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பு வாய்ந்த மாணவர் சமுதாயம், வள்ளுவப் பெருந்தகை உள்ளிட்ட நமது முன்னோர்கள் வகுத்த அறநெறிகளை மனதில் கொண்டு, வன்முறைகளுக்கு இடம் கொடுக்காமல், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.
...
Show commentsOpen link

[Continue reading...]

நய்யாண்டி நடாத்திய நாடகம் Naiyandi movie drama

- 0 comments

எதிர்பார்த்தபடி நய்யாண்டி நடாத்திய நாடகம் முடிந்தது..
by admin
TamilSpyToday,

திரைப்படத்தை விளம்பரம் செய்ய மலினமான முறையில் நய்யாண்டி குழுவினர் நடாத்திய நாடகம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.

இது குறித்து வெளியான செய்தி..

'களவாணி', 'வாகை சூடவா' ஆகிய படங்களை இயக்கிய ஏ.சற்குணம் இயக்கத்தில் தனுஷ்-நஸ்ரியா ஜோடியாக நடித்துள்ள படம் 'நய்யாண்டி'.

இந்த படத்தில் தனக்கு பதில் டூப் நடிகையை வைத்து பாடல் காட்சியொன்றை படமாக்கி இருப்பதாக நடிகை நஸ்ரியா குற்றம் சாட்டினர். போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்தார்.

டூப் நடிகையின் ஆபாச காட்சிகளை நீக்காமல் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்றும் போர்க்கொடி தூக்கினார். நஸ்ரியா புகாரின் பேரில் போலீசார் நேற்று நய்யாண்டி படத்தை பார்த்தனர்.

நஸ்ரியா தந்தை நசீம் மற்றும் அவரது வக்கீல் ஆகியோரும் போலீசாருடன் படம் பார்த்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு விமானம் மூலம் சென்னை வந்த அவர் நுங்கம்பாக்கம் '4 பிரேம்' தியேட்டரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நான் 'யூடியூப்'பில் நய்யாண்டி பட டிரைலரை பார்த்தேன். அதில் ஒரு 'டூப்' காட்சி இருந்தது. அந்த காட்சி என் அனுமதியின்றி எடுக்கப்பட்டு இருந்தது. அது என்னை ஏமாற்றுவது போல இருந்தது. எனவேதான் போலீசில் புகார் கொடுத்தேன். தற்போது அந்த காட்சி டிரைலரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. மேலும் முழு படத்தையும் நான் பார்த்தேன். அதில் 'டூப்' காட்சி இல்லை. அதனால் சமரசம் ஆகிவிட்டேன்.

எனவே போலீசில் கொடுத்த புகாரை நான் வாபஸ் வாங்குகிறேன். என் அனுமதியின்றி 'டூப்' காட்சி இடம் பெற்றதால்தான் புகார் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

நான் இதை விளம்பரத்துக்காக செய்யவில்லை. எனக்கு பிடித்த கதை, கதாபாத்திரமாக இருந்தால் ஏ.சற்குணம் இயக்கத்தில் மீண்டும் நடிப்பேன்.

இவ்வாறு நடிகை நஸ்ரியா கூறினார்.

பேட்டியின் போது தயாரிப்பாளர் கதிரேசன், வழக்கறிஞர் தியாகேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து டைரக்டர், தயாரிப்பாளர் மற்றும் நஸ்ரியா இடையே புதிய ஒப்பந்தம் போடப்பட்டு அதில் கையெழுத்திட்டனர்.

பின்னர் கமிஷனர் அலுவலகத்திலும் இந்த ஒப்பந்த நகலை சமர்ப்பித்து சமரசமானார்கள்.

இதையடுத்து 'நய்யாண்டி' படம் திட்டமிட்டபடி நாளை (11-ந் தேதி) தமிழகம் முழுவதும் ரிலீசாகிறது. தனுஷ் ரசிகர்கள் தியேட்டர்களில் கட்-அவுட், கொடி, தோரணைகள் அமைத்து அமர்க்களப்படுத்தி வருகிறார்கள்.

Show commentsOpen link

[Continue reading...]

யுவராஜ் சிங் அதிரடி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 20 கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி Australia against cricket india target win

- 0 comments

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 20 கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி Australia against cricket india target win

Tamil NewsToday,

ராஜ்கோட், அக். 10-

ஜார்ஜ் பெய்லி தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 7 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று மாலை நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் டோனி, பந்துவீச முடிவு செய்தார். முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் அதிரடியாக ஆடியதால் ஸ்கோர் விறுவிறுவென ஏறியது. மேடின்சன் 16 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 34 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் வாட்சன்(6), பெய்லி(0) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனாலும், பின்னர் வந்த மேக்ஸ்வெல் அதிரடியாக 4 சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அவர் 27 ரன்களிலும், ஹேடின் 5 ரன்களிலும் பெவிலியன் திரும்பினார்.

அதேசமயம் மறுமுனையில் அரை சதம் கடந்து அபாரமாக ஆடிக்கொண்டிருந்த ஆரோன் பின்ச், 89 ரன்கள் குவித்தார். அவரது விக்கெட்டை வினய் குமார் கைப்பற்றினார். ஹென்ரிக்ஸ் 12 ரன்கள் சேர்த்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது.

இந்தியா தரப்பில் புவனேஸ்குமார், வினய் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

இதையடுத்து 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணியில் சர்மா மற்றும் தவான் களம் இறங்கினர்.

ஆட்டத்தின் 2வது ஓவரில் சர்மா 8 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்த விக்கெட்டுக்கு தவானுடன் ஜோடி சேர ரெய்னா களம் இறங்கினார். இவர் 19 ரன்னில் அவுட் ஆனார். மறு முனையில் சிறப்பாக விளையாடி கொண்டிருந்த தவான் 32 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.  அடுத்து களம் இறங்கிய கோலி 29 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

5 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த யுவராஜ் சிங் மற்றும் தோனி, அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர். யுவராஜ் சிங் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார்.

இறுதியில் இந்தியா 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 202 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

யுவராஜ் சிங் 35 பந்துகளில் 77 ரன்னும், தோனி 21 பந்தில் 24 ரன்னும் எடுத்தனர்.
...
Show commentsOpen link

[Continue reading...]

மைனர்களுக்கு மது விற்க தடை tasmark minors

- 0 comments

மைனர்களுக்கு மது விற்க தடை

by Marikumar

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 21 வயது நிரம்பாதவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து டாஸ்மாக் கடைகளுக்கு அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் 21 வயது நிரம்பாதவர்களுக்கு மதுவகைகள் விற்பனை செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை அமல்படுத்தும் விதமாக இந்த மாத துவக்கத்தில் இருந்து டாஸ்மாக் கடைகளில் இதுகுறித்த அறிவிப்பு நோட்டீஸ்கள் ஒட்டப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டிருந்தது.

மேலும் தற்போது அரசு உத்தரவை செயல்படுத்தும் விதமாக நோட்டீஸ்கள் அச்சிட்டு ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. அதில் 'அரசு உத்தரவின்படி 21 வயது பூர்த்தியடையாதவர்களுக்கு மதுபானங்கள் விற்கப்பட மாட்டாது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு மாநிலம் முழுவதும் உள்ள எட்டாயிரத்திற்கும் அதிகமான் டாஸ்மாக் கடைகளிலும் ஒட்டப்பட உள்ளது. மேலும் 21 வயது நிரம்பாதவர்களுக்கு மதுவகைகள் விற்க கூடாது என்று டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கும் ஸ்பெஷ்லாக் உத்தரவிடப்பட்டுள்ளது.
Share |

Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger