Thursday 16 February 2012

உலகின் செலவு குறைந்த நகரங்கள்

- 0 comments
 

இந்தியாவில் அதிக பணவீக்க விகிதத்தால் நாளுக்குநாள் விலைவாசி அதிகரித்து மக்களை திணறடித்து வருகிறது. ஆனால் உலகின் மிகக்குறைவான செலவாகும் நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் மும்பையும், தில்லியும் இடம்பெற்றுள்ளன.

பொருளாதார புலனாய்வுப் பிரிவு இதுதொடர்பாக நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

உலகின் செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் மும்பை 2-வது இடத்தையும், தில்லி 4-வது இடத்தையும் பெற்றுள்ளது.

உலக அளவில் மிகவும் செலவு குறைந்த நகரம் பாகிஸ்தானின் கராச்சி நகரமாகும். ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரம்தான் உலகிலேயே மிக அதிக செலவாகும் நகரம் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

பணவீக்க விகிதம்தான் அரசுக்கும், பொதுமக்களுக்கும் கவலைக்குரிய விவகாரமாக இருந்து வருகிறது. எனினும் சமீபகாலமாக பணவீக்க விகிதம் சிறிதளவு குறைந்து வருகிறது.

2011 டிசம்பரில் 7.47 சதவீதமாக இருந்த நாட்டின் பணவீக்க விகிதம் 2012 ஜனவரியில் 6.55 சதவீதமாகக் குறைந்தது. பணவீக்க விகிதம் குறைந்தாலும், விலைவாசி விகிதம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

பொருளாதார புலனாய்வுப் பிரிவு எடுத்த ஆய்வின்படி உலகின் 4 செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் இடம்பெற்ற கராச்சி, மும்பை, தில்லி ஆகியவை இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள நகரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு நகரம் தெஹ்ரான்.

இந்த 4 நகரங்களும் கடந்த ஆண்டும் இதே இடத்தைப் பெற்றிருந்தன.

எனினும் உலகின் அதிக செலவு பிடிக்கும் நகரங்கள் பட்டியலில் டோக்கியோவை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஜூரிச் நகரம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அடுத்தபடியாக டோக்கியோ, ஜெனிவா, ஓசாகா கோபே, ஓஸ்லோ, பாரிஸ், சிட்னி, மெல்போர்ன், சிங்கப்பூர் மற்றும் ஃபிராங்பர்ட் நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

400 பொருட்களின் விலைகளைக் கொண்டு இந்த ஆய்வை பொருளாதார புலனாய்வுப் பிரிவு நடத்தியது. அந்த பொருட்களில் உணவு, தண்ணீர், ஆடைகள், வீட்டுச்சாமான்கள் மற்றும் வாடகை, போக்குவரத்து, தனியார் பள்ளிக் கட்டணங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
[Continue reading...]

உங்கள் பாதங்களை அழகாக பராமரிக்க இதோ எளிய முறைகள்

- 0 comments
 

பாதங்களை பாதிப்பவை பித்த வெடிப்புகளும், விரல் இடுக்குகளில் ஏற்படும் புண்களும்தான். அழகான முகம் கொண்டவர்கள் கூட பாதங்களில் உள்ள பித்தவெடிப்புகள், புண்களினால் பாதிப்பிற்குள்ளாகின்றனர். முகத்தை பராமரிப்பதைப் போல பாதங்களையும் வாரம் ஒருமுறை கவனித்தால் பஞ்சுபோன்ற பாதங்களைப் பெறலாம். அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகள் உங்களுக்காக.மருதாணி இலைகள்

முற்காலங்களில் வீட்டின் கொல்லைப்புறத்தில் மருதாணி மரம் வைத்திருப்பார்கள் வாரம் ஒருமுறை அவற்றை பறித்து மைய அரைத்து கை, கால்களில் அழகு படுத்துவார்கள். அதனால் பாதங்கள் நோய் தாக்குவதில் இருந்து பாதுகாக்கப்பட்டது. இப்பொழுது மருதாணி அரைப்பதற்கெல்லாம் பொறுமை இல்லை. அதனால் ரெடிமேட் மெகந்தி வைத்து அழகு படுத்துகின்றனர். பாதங்களை பாதுகாக்க மீண்டும் பழைய நிலைக்கே திரும்ப வேண்டும் என்று அழகியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

மஞ்சள், வேம்பு

இந்தியாவின் மருத்துவ மூலிகைகளான மஞ்சளும், வேம்பும் பாதங்களை பாதுகாப்பதில் மிக முக்கியமானவை. வேப்பிலையை பறித்து மஞ்சள் அதனுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்கவேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.

வேப்ப எண்ணெய்

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.

வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

சுடுநீர், எலுமிச்சை

பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் இறந்துபோன செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாக பட்டுப்போல மாறும்.

இரவு நேரத்தில் உறங்கப் போகும் முன் நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

தரமான காலணிகள்

தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்தினாலும் சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானதை பார்த்து கவனித்து வாங்குவது நல்லது.

குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

[Continue reading...]

சொக்கலேட் ஆடை அவிழ்ந்ததால் அதிர்ச்சியடைந்த அழகி!

- 0 comments
 

சொக்கலேட் அழகிகளுக்கு இப்படியும் ஒரு விஷப் பரீட்சை. முழுக்க முழுக்க சொக்கலேட்டால் வடிவமைக்கப்பட்ட ஆடை திடீரென கழன்று விழுந்ததால் மொடல் அழகி அதிர்ச்சி அடைந்தார்.பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சாக்லேட் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் சொக்கலேட் திருவிழா நடத்தப்படுகிறது.

17-வது ஆண்டு திருவிழா தற்போது நடந்து வருகிறது. விழா தொடங்குவதை முன்னிட்டு சமீபத்தில் பிரத்யேக பேஷன் ஷோ நடந்தது. ஏராளமான அழகிகள் பங்கேற்றனர்.

வெள்ளை, பிரவுன் நிற சொக்கலேட் பார்கள், முந்திரி, பாதாம் மற்றும் பிளம் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்தி அவர்களது ஆடைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

பிரான்ஸ் மொடல் அழகியும் டிவி அறிவிப்பாளருமான கேரின் பெரி (29) சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

சொக்கலேட் பார்களால் செய்யப்பட்ட ஸ்கர்ட் அணிந்து அவர் மேடையில் தோன்றினார்.

பார்வையாளர்கள் மத்தியில் அவர் ஸ்டைலாக நடந்து வர.. ஸ்கர்ட்டின் முன்பகுதியில் இருந்த 2 சொக்கலேட் பார் திடீரென கழன்று விழுந்தன. சற்றும் எதிர்பாராத கேரின், நாணமடைந்து கையால் மறைத்துக் கொண்டார்.

அடுத்தடுத்து மற்ற பார்களும் விழுந்தது. சொக்கலேட் பார் பொருத்துவதற்கான வளையம் மட்டுமே இருந்தது.

அடுத்தடுத்து வலம் வர இருந்த அழகிகளின் சொக்கலேட் உடைகள் விழாமல் நன்கு பொருத்தப்பட்டுள்ளதா என்று உடனே சரிபார்க்கப்பட்டது. அதன் பிறகே அவர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

அங்கு இருந்த பார்வையாளர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான்.

[Continue reading...]

பணம் கடத்தி மாட்டிய

- 0 comments
 
குடியரசுத் தலைவர் மகன்!
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடந்து வரும் உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு, தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.
13ம் தேதி காலை அமராவதி அருகே, போலீசார் நடத்திய வாகனச் சோதனையில், நாக்பூரில் இருந்து வந்த காரின் முன்பகுதியில் ஒரு கோடி ரூபாய் மறைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கார் டிரைவர் பிரகாஷ் மஸ்ரம் மற்றும் ஆசிஸ் போதங்கர் ஆகியோரை விசாரித்ததில் தேர்தலில் வாக்காளர்களுக்குக் கொடுக்க கொண்டுவர்ப்பட்டது தெரிந்ததால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் விசாரித்ததில், அப்பணம் குடியரசுத்தலவர் பிரதிபா பாட்டீலின் மகனும், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,வுமான, ராவ்சாகிப் செகாவத்திற்காக கொண்டு வரப்பட்டது என தெரிந்தது.
ராவ் சாகிப் செகாவத்
 
இதுபற்றி குடியரசுத்தலவரின் அருமை மகனும்,சட்டமன்ற உறுப்பினருமான ஷெகாவத் "உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஏழை மற்றும் பெண் வேட்பாளர்களுக்கு பணம் தேவைப்படுகிறது. இவ்வாறு 87 பேருக்கு உதவுவதற்காக, மாநில காங்கிரசிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டிருந்தேன்.அதைத்தான் நாக்பூரில் இருந்து கொண்டு வந்தோம். இதை ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய் என பிரித்துக் கொடுக்க நினைத்திருந்தோம். மீதமுள்ள பணத்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்திருந்தோம். ஆனால், அதற்குள் பணம் போலீசாரிடம் சிக்கியது. இது குறித்து போலீஸ் கமிஷனருக்கு கடிதம் அளித்துள்ளேன். போலீசார் கோர்ட்டில் அத்தொகையை தாக்கல் செய்துள்ளனர். அதை பெற நாளை (இன்று) கோர்ட்டில் முறைப்படி விண்ணப்பித்து பெறுவோம். அப்பணம் கிடைத்தால், வேட்பாளர்களுக்கு உதவியாக இருக்கும்' என்றார்.
 
ஏழை வேட்பாளர்களுக்கு கட்சியில் இருந்து கொடுக்கும்பணத்தை முறைப்படி சட்டப்படியே கொடுக்கலாமே.இப்படி மறைத்து கொண்டு வர வேண்டிய கட்டாயம் என்ன வந்தது.
முறைகேடாக வாக்காளர்களுக்கு செலவிடதான் இப்பணத்தை இந்திய முதல் குடிமகளின் மகன் கடத்தியுள்ளார்.
இந்தியாவின் தலைவர்கள்,அமைச்சர்கள் நடந்து கொள்ளும் முறை குடிமக்களை தலை குனிய வைக்கிறது.
ஒரு நாட்டின் குடியரசு தலைவரின் மகனே தேர்தல் விதி முறைகளை -சட்டத்தை மதிக்க வில்லை எனில் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் விதிமுறையை மீறி முறை கேடு செய்ததுமில்லாமல் அதை எந்த குற்ற உணர்வும் இல்லாமல் நியாயப்படுத்துகிறார்.பிரதமர்,நிதியமைச்சர் போன்றவர்கள் இந்தியாவின் மாபெரும் ஊழல்களை நியாயப்பபடுத்துவதற்கு எந்த வகையிலும் இது குறைவானதல்ல.

இதுவரை அந்த பெரிய பொறுப்பில் இருந்த எந்த தலைவரின் குடும்பத்தினரும் இப்படி சட்ட,விதிகள் மீறலில் ஈடுபட்டதாக தெரியவில்லை.பிரதிபா பாட்டில் மகன் ஆரம்பித்து வைத்துள்ளார்.
இது குடியரசுத்தலைவரின் நாற்காலிக்கு ஒரு கறைதான்.பிரதிபா பாட்டில் என்ன சொல்ல-செய்யப்போகிறார்.
_____________________________________________________________________________________________

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிஇடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. மார்ச் மாதம் 18ம் தேதி வாக்குப் பதிவு நடக்கும் .



  • மனுத்தாக்கல் நாள்: பிப்.22
  • மனுத்தாக்கல் கடைசி நாள்: பிப்.29
  • வேட்பு மனுக்கள் பரிசீலனை : மார்ச் 1
  • வேட்பு மனுக்களை திரும்பப்பெறுவது: மார்ச் 3
  • வாக்குப் பதிவு : மார்ச் 18
  • வாக்கு எண்ணிக்கை : மார்ச் 21


_____________________________________________________________________________________________________
செய்திதாள்களுக்கான இணைய தளம்.


காலையில் பலருக்கு அன்றைய செய்தித் தாள்களைப் படிக்கவில்லை என்றால், எதனையோ பறி கொடுத்தது போல் இருக்கும். இப்போது ஏறத்தாழ அனைத்து பத்திரிக்கைகளும், தங்கள் செய்தித்தாளினை, தாங்கள் உருவாக்கிய இணைய தளங்களில் அமைத்து படிக்கத் தருகின்ற னர். சில செய்தித்தாள் நிறுவனங்கள் இதற்குக் கட்டணம் வசூலிக்கின்றன. பல வசூலிப்பதில்லை. இவற்றைப் படிக்க, இந்த செய்தித்தாள் இணைய தளங்களின் முகவரியினைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவற்றை நம்முடைய பேவரிட் தளப் பட்டியலில் போட்டு வைத்து இன்டர்நெட் இணைப்பில் கிளிக் செய்து படிக்கலாம். இதற்குப் பதிலாக, ஓர் இணைய தளம் சென்றால், அனைத்து இந்திய பத்திரிக்கைகளின் தளங்கள் அல்லது அவற்றிற்கான லிங்க்ஸ் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அப்படி நமக்குவசதிதரும்இணையதளம்தான்http://www.eazyhomepage.com/Indian_newspapers.html .

இந்த தளம் சென்றால்,பல இந்தியமொழிகளில், கிட்டத்தட்ட135 பத்திரிகை களின் இணையப் பதிப்பிற்கான தொடர்பு ஐகான்கள் தரப்பட்டுள்ளன. இவற்றில் கிளிக் செய்தால், நாம் விரும்பிய செய்தித்தாளை படிக்கலாம்.
________________________________________________________________________
தேசிய அவமானம்.

படத்தில் காணப்படும் இந்த இரண்டு வயது குழந்தை பெயர் ரஜினி.மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தது.ஊட்டச்சது குரைவால் பாதிக்கப்பட்டுள்ளது.
மிகவும் எடை குறைவு.எடையை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்தியா வல்லரசாகிக்கொண்டிருக்கிறது.ஆனால் அதில் வாழும் மக்களுக்கு நல்லரசாக இல்லையே?
உணவு இல்லாமல் பசியில் இந்தியாவில் நாளொன்றுக்கு 3000 குழந்தைகள் மடிகின்றதாம்.

இது அதே மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விகாசா[4 மாதம்]
இது இந்திய தேசிய அவமானம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி வருத்தப்பட்டாராம்.
இதை சரி செய்யும் மந்திர கோல் அவர் கையில் இல்லையே நாம் என்ன செய்வது.
அதிகாரங்களை தன்னிடம் வைத்துக்கொண்டு பார்வையாளர்போல் ஒரு நாட்டின் பிரதமர் வருத்தபடுவது[அல்லது நடிப்ப்பது]தான் தேசிய அவமானம்.
________________________________________________________________________

[Continue reading...]

எனது கவர்ச்சியை பணம் தீர்மானிப்பதில்லை - நடிகை அமலா பால்

- 0 comments
 


இயக்குனர் விஜய்யுடன் காதல் இல்லை. அவர் எனக்கு நெருக்கமான நண்பர் என்றார் அமலா பால். இது பற்றி அவர் கூறியதாவது: மைனாவில் கிராமத்து பெண்ணாக பாவாடை, தாவணி அணிந்து நடித்த நீங்கள் 'வேட்டை படத்தில் கவர்ச்சியாக நடித்தது ஏன்? என்கிறார்கள். எனது வேடத்தை தேர்வு செய்தபிறகு அதற்கு ஏற்றவகையில் நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஓவர் கிளாமராக நடிப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. என்னுடைய மனதுக்கு பிடித்த வேடங்களை மட்டுமே ஏற்கிறேன். எனது கவர்ச்சியை பணம் தீர்மானிப்பதில்லை. வேடம்தான் தீர்மானிக்கிறது. கமர்ஷியல் வெற்றியும் முக்கியம் என்பதால் கவர்ச்சியாக நடிக்க வேண்டி உள்ளது. 'ஆர்யாவுடன் லவ்வா? என்றார்கள். இப்போது இயக்குனர் விஜய்யுடன் இணைத்து பேசுகிறார்கள். அப்படி எதுவும் இல்லை. திரையுலகில் எனது நெருங்கிய நண்பர் விஜய். தனுஷுடன் '3 படத்தில் நடிக்க முடியாமல் போனது. ஆனால் மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். கிளாமராகத்தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் வரும்போது நிச்சயம் ஏற்று நடிப்பேன்.
[Continue reading...]

கன்னட படத்தில் நிர்வாணமாக நடித்த தமிழ் நடிகை

- 0 comments
 


கன்னட படத்தில் நிர்வாணமாக நடித்தது பற்றி பூஜா காந்தி பரபரப்பான பதில் அளித்தார். கொக்கி, திருவண்ணாமலை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூஜா காந்தி. கன்னடத்தில் 'தண்டுபால்யா' என்ற படத்தில் நடிக்கிறார். ஸ்ரீனிவாஸ் ராஜு இயக்குகிறார். இதில் கொள்ளை கும்பல் தலைவியாக நடிக்கும் பூஜா, போலீசில் பிடிபட்டதும் அவரை நிர்வாணமாக்கி விசாரிக்கிறார்கள். இந்த காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இக்காட்சியில் நடித்தது பற்றி பூஜா காந்தி கூறியதாவது:

தலை முதல் கால் வரை ஒட்டுத்துணிகூட இல்லாமல் இருப்பதுதான் டிக்ஷ்னரிப்படி நிர்வாணம். நான் அப்படி நடிக்கவில்லை. சேலை போர்த்தி இருப்பேன். அதை போலீசார் வலுக்கட்டாயமாக நீக்க முயல்வார்கள். நான் போராடுவேன். இந்த சீனில் பின்புறம் முழுவதும் தெரியும்படி நடித்தேன். லட்சுமி என்ற மாஃபியா கும்பல் தலைவியிடம் போலீசார் நடத்திய நிஜ விசாரணை காட்சிகளின் வீடியோவை இயக்குனர் எனக்கு போட்டுக்காட்டினார். லட்சுமியின் கூட்டாளிகளையும் நிர்வாணமாக்கியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் என்றார். லட்சுமி கதாபாத்திரத்தைதான் பூஜா ஏற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
[Continue reading...]

அஞ்சலியை அதிரவைத்த கபடி வீராங்கனைகள்

- 0 comments
 


மாநிலம் முழுவதும் இருக்கிற பெண் கபடி வீராங்கனைகளை ஒன்று திரட்டி ஒரு மிகப்பெரிய கபடி போட்டி ஒன்றை நடத்தி வருகிறது ஈரோட்டை சேர்ந்த பைரவா கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம்.

முதல் பதினாறு மாவட்டங்களை சேர்ந்த வீராங்கனைகள் ஈரோடு நகரத்தில் திரண்டு மேட்ச் ஆடினார்கள். இவர்களை ஊக்குவிக்க வந்திருந்தார் நடிகை அஞ்சலி. 'அக்கா, நாங்க உங்க கலருக்கு வரணும்னா என்ன செய்யணும்?' என்றெல்லாம் அஞ்சலியிடம் கேள்வி கேட்டு அதிர வைத்தார்கள் வீராங்கனைகள்.

நானும் உங்களை மாதிரி சாதாரண பொண்ணுதான். வெயில்ல நிற்காம ஏசியிலேயே இருக்கறதால் சிவப்பா இருக்கேன். உங்களை மாதிரி வெயிலில் நின்றால் கருப்பாகிவிடுவேன் என்று பதிலளித்த அஞ்சலி, அந்த போட்டியில் கலந்து கொண்ட ஒரு பெண்ணுக்கு அன்றைய தினம் பிறந்த நாள் என்று கேள்விப்பட்டவுடன் உடனே கேக் வரவழைத்து அங்கேயே அந்த கிராமத்து பெண்ணை குதூகலப்படுத்தினார்.

வர்றீங்களாக்கா ஒரு ஆட்டத்துக்கு என்று அவர்கள் அழைக்க, ஐயோ பொண்ணுங்களா ஆளை விடுங்க என்று ஓட்டமும் பிடித்தார்.
[Continue reading...]

டெல்லி அதிவேக ரயிலில் பயணித்த இலங்கை இராணுவ அதிகாரியின் பயணப் பை களவு

- 0 comments
 

புது டில்லி ரயில் நிலையத்தில் வைத்து மல்வா அதிவேக ரயிலில் இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரின் பயணப் பை இனந்தெரியாத நபர்களால் களவாடப்பட்டுள்ளது.கடந்த 13ம் திகதி களவாடப்பட்ட இந்தப் பயணப் பையில் இலங்கை இராணுவ அதிகாரியின் பணம், சடவுச்சீட்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணப் பையைத் தொலைத்த இலங்கை இராணுவ அதிகாரி மேஜர் டி.கே.களுதேவ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முகாம் ஒன்றில் பங்குபற்ற டெல்லியில் இருந்து இந்தூர் சென்ற இவர், தனது பயணப் பையில் கடவுச்சீட்டு, கடனட்டை, 4 ஆயிரம் ரூபா இந்திய பணம், 5 ஆயிரம் ரூபா இலங்கை பணம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்ததாக முறைப்பாடு செய்துள்ளார்.

பயணப் பை காணாமல் போன ரயிலின், குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு ஆசனத்தில் குறித்த இராணுவ அதிகாரி பயணம் செய்துள்ளார்.

இந்தூர் ரயில் நிலைய பொலிஸாரிடம் இவர் நேற்று (15) முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு டெல்லிக்கு விசாரணைக்கென அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

[Continue reading...]

துப்பாக்கி முனையில் 5 பேரால் பெண் கற்பழிப்பு:

- 0 comments
 

கொல்கத்தாவில் பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குற்றவாளிகளை அடையாளம் காட்டியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவர், தன்னுடைய நண்பர்களுடன் கடந்த 5.02.2012 அன்று இரவு கேளிக்கை விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் அறிமுகம் இல்லாத இளைஞர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. மது மயக்கத்தில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணிடம் பவ்யமாக பேசி, வீட்டில் இறக்கிவிடுதாக கூறி காரில் அழைத்துச் சென்றனர்.

அப்போது துப்பாக்கி முனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 10 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில்,

பிப்ரவரி 5ம் தேதி கேளிக்கை விடுதியில் இருந்து திரும்பி வரும்போது அந்த கேளிக்கை விடுதியில் நண்பர்களாகப் பழகிய 4 பேர் காரில் எனக்கு லிப்ட் கொடுத்தனர். நானும் அவர்களுடன் காரில் ஏறினேன். ஆனால் திடீரென அவர்களில் ஒருவர் துப்பாக்கி முனையில் என்னை பலாத்காரம் செய்தார். அவர்களை பேஸ்புக் உதவியுடன் அடையாளம் கண்டு அவர்களைப் பற்றி போலீசில் புகார் கூறினேன். ஆனால் போலீசார் அதை ஏற்காமல் என்னைக் கேலி செய்தனர்.

இந்த விவகாரத்தை தைரியத்துடன் வெளியுலகுக்கு கூறியுள்ளேன். விசாரணைகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு தகவல்களைக் கூறுவேன். காரில் இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர் என்றார்.

இறுதியில் கடும் நெருக்கடிக்குப் பின்னர் போலீசார் எஃப்ஐஆர் பதிவுசெய்தனர். அந்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்.

இதுகுறித்து கொல்கத்தா இணை போலீஸ் கமிஷனர் தமயந்தி சென் கூறுகையில், பிப்ரவரி 5 ம் தேதி அவர் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறுகிறார். ஆனால் பிப்ரவரி 9 ம் தேதிதான் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார் என்றார். அவரின் புகாரை போலீசார் வாங்க மறுத்தது குறித்து கேட்டபோது, இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger