Tuesday 11 October 2011

செல்போன் காதலர்கள் தற்கொலைக்கு முயற்சி-காதலி பலி, காதலர் 'சீரியஸ்'

- 0 comments
 
 
 
செல்போனில் காதல் வளர்த்த காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றதில், காதலி பலியானார். காதலன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை செக்கடிவிளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(29). வேன் டிரைவர். இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகியும் குழந்தை இல்லை. இந்நிலையில், கன்னங்குளம் பகுதியை சேர்ந்த ஞானதாஸ் என்பவர் மகள் பிரிஸ்கா(22) என்பவருடன் கண்ணனுக்கு செல்போன் பேச்சு மூலம் பழக்கம் ஏற்பட்டது. பிரிஸ்கா தனியார் கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
 
அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் குறித்து தெரிந்து கொண்ட பிரிஸ்காவின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று காலையில் கண்ணனை தொடர்பு கொண்ட பிரிஸ்கா உடனே தன்னை வந்து அழைத்து செல்லுமாறு கூறினார். இதையடுத்து கண்ணனும், பிரிஸ்காவை கன்னங்குளத்தில் இருந்து பால்குளம் பை-பாஸ் சாலை வழியாக அழைத்து சென்றார்.
 
அப்போது 2 பேரின் வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிப்பதை தொடர்ந்து, 2 பேரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக பிரிஸ்கா கொண்டு வந்திருந்த விஷ மாத்திரையை பழத்தில் கலந்து, 2 பேரும் சாப்பிட்டனர். பின்னர் 2 பேரும் மீண்டும் காதல் கதைகளை பேசி கொண்டிருந்தனர்.
 
சிறிது நேரத்தில் 2 பேருக்கும் தலைச்சுற்றல் ஏற்பட்டு, வாந்தி எடுத்தனர். கண்ணனுக்கு லேசான தெளிவு இருந்ததால், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்து, தகவல் தெரிவித்தார்.
 
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், வேனில் மயங்கி கிடந்த 2 பேரையும், நாகர்கோவில் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பிரிஸ்கா இறந்தார். கண்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
மனைவி உள்ள போது, கல்லூரி மனைவி ஒருவரை காதலித்து வாலிபர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.



[Continue reading...]

அணு உலைப் பணிகளை நிறுத்தும் வரை உண்ணாவிரதம்- கூடங்குளம் போராட்டக் குழு

- 0 comments
 
 
 
தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகள் அனைத்தையும் முழுமையாக நிறுத்தும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று போராட்டக் குழு அறிவித்துள்ளது. இதனால் கூடங்குளம் விவகாரம் மேலும் வலுத்துள்ளது.
 
கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் கட்டப்பட்டு அணு மின் நிலையம் உற்பத்திக்குத் தயாராகி விட்டது. டிசம்பர் மாதத்தில் முதல் யூனிட் உற்பத்தியைத் தொடங்கவுள்ளது.
 
இந்த நிலையில் இந்த அணு மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், விவசாயிகள் ஆகியோரைத் திரட்டி திடீர் போராட்டம் தொடங்கியது. இவர்கள் அனைவரும் இணைந்து போராட்டக் குழுவை அமைத்து உதயக்குமார் தலைமையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.
 
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தார். மேலும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் கடிதம் எழுதினார். மேலும் அமைச்சரவையிலும் மக்களின் அச்சத்தைப் போக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வரை அணு மின் நிலையப் பணிகளை நிறுத்தி வைக்குமாறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்ட கூடங்குளம் போராட்டக் குழுவினர் சென்னை சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். தொடர்ந்து பிரதமரையும் இக்குழு சந்தித்தது.
 
இந்த சந்திப்பின்போது உயர் மட்டக் குழு அமைப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். இந்தக் குழு கூடங்குளம் சென்று மக்களை நேரில் சந்தித்து அவர்களது கருத்துக்களை அறியும் என்றும் அவர் அறிவித்தார். இதற்கு சம்மதம் தெரிவிப்பதாக டெல்லியில் கருத்து தெரிவித்த போராட்டக் குழுவினர் தமிழகம் திரும்பியதும் திடீரென மாறினர்.
 
இடிந்தகரையில் தற்போது மீண்டும் உண்ணாவிரதப் போராட்ட்டைத் தொடங்கியுள்ளனர். செவ்வாய்க்கிழமை கால அவகாசம் தருவதாகவு்ம், அதற்குள் அணு மின் நிலையப் பணிகளை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கெடு விதித்தனர்.
 
இருப்பினும் இதுவரை எந்த முடிவையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. இதையடுத்து இன்று போராட்டக் குழு கூடி விவாதித்தது. அதன் இறுதியில் தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்றுமாறு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தீர்மான முடிவுப்படி மத்திய அரசு கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகளை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.
 
இந்த முடிவை மத்திய அரசு அமல்படுத்தும் வரை, அணு மின் நிலையப் பணிகளை முற்றாக நிறுத்தும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை காலவரையின்றி நீட்டிப்பது என முடிவெடுக்கப்பட்டதாக போராட்டக் குழு தெரிவித்துள்ளது.
 
மறுபக்கம் போராட்டக் குழுவிலிருந்து பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டோர் விலகியுள்ளனர். அவர்கள் போராட்டக் குழுவினரை சில மர்ம நபர்கள் இயக்குவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் உண்ணாவிரதம் தொடரும் என போராட்டக் குழு அறிவித்திருப்பதால் கூடங்குளம் விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.



[Continue reading...]

ஆன்லைனில் துணியை தொட்டு பார்த்து வாங்கலாம்

- 0 comments
 
 
தீபாவளி நெருங்க நெருங்க பஜார்களில் கூட்டம் அலை மோதுகிறது. ஜவுளி எடுத்து வெளியே வருவதற்குள் விழி பிதுங்குகிறது. குழந்தை குட்டிகளுடன் தீபாவளி பர்ச்சேஸ் முடிப்பது பெரும் பாடாக இருக்கிறது.
 
இவ்வாறு அனுபவப்பட்டு அலுத்துப் போனவர்கள்தான் பெரும்பாலும் ஆன்லைனில் ஷாப்பிங்கை முடிக்கின்றனர்.
 
பேஸ்ட், பிரஷ், சோப், கேமரா, பீரோ, கட்டில்.. ஆகியவற்றை ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்குவதில் பிரச்னை இல்லை.
 
ஜவுளி? ஆயிரம்தான் டிஸ்பிளேயில் தெரிந்தாலும், முந்தானை உள்பட முழு புடவையின் டிசைனையும் பார்க்க முடிந்தாலும், புடவையை தொட்டுப் பார்த்து வாங்கினால்தான் பெண்களுக்கு திருப்தி.
 
 
 
 
 
ஆன்லைனில் எப்படி தொட்டுப் பார்த்து வாங்குவது? சாத்தியம் என்கிறார் ஷரோன் பர்லே. லண்டனின் ப்ரூனல் பல்கலைக்கழகத்தில் டிசைனிங் துறையில் பேராசிரியராக இருக்கிறார்.
 
இவரது தலைமையில் டிசைனிங் மற்றும் இணையதள நிபுணர்கள் கொண்ட குழுவினர் 'டிஜிட்டல் சென்சோரியா' என்ற தலைப்பில் ஒரு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆராய்ச்சி பற்றி ஷரோன்,
 
 
அனிமேஷனில் ஒரு வகை 'ஸ்டாப் மோஷன் அனிமேஷன்'. அதாவது, பொம்மைகளை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி, ஒவ்வொரு பொசிஷனையும் படமெடுத்து, அதை படமாக ஓட்டுவது.
 
இந்த டெக்னிக்கையும் தொடுதிரை (டச் ஸ்கிரீன்) தொழில்நுட்பத்தையும் இணைத்து புதுவித தொழில்நுட்பம் உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். ஐபோன், ஐபேட், டேப்லட் கம்ப்யூட்டர்களின் டச் ஸ்கிரீன் உதவியுடன், நிஜத்தில் துணியை தொட்டுப் பார்ப்பதுபோன்ற உணர்வை பெற முடியும்.
 

அடிப்படை தொழில்நுட்பம் தயாராகிவிட்டது. அதை மேம்படுத்தி மெருகூட்டுவதற்கான ஆய்வு நடந்து வருகிறது என்று ஷரோன் கூறினார்.
 


[Continue reading...]

10 லட்சம் வாடிக்கையாளர்கள் தவிப்பு - பிளாக்பெர்ரி மெசேஜ் சேவை துண்டிப்பு

- 0 comments
 
 
இன்டர்நெட் மற்றும் உடனடி செய்தி பரிமாற்ற வசதிகள் அடங்கிய பிளாக்பெர்ரி செல்போன்களை கனடாவைச் சேர்ந்த 'ரிசர்ச் இன் மோஷன்' என்ற நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
 
 
அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா என உலக நாடுகளில் சீனா, ஜப்பான் தவிர மற்ற நாடுகளில் இந்த செல்போன் பிரபலமாக உள்ளது. இதில் அனுப்பப்படும் மெசேஜ்களை அவ்வளவு எளிதில் மற்றவர்கள் படிக்க முடியாது என்பதால் இதற்கு தனி வரவேற்பு உள்ளது.
 
 
 
 
இந்தியாவில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் பிளாக்பெர்ரி செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
 
பிளாக்பெர்ரி மெசேஜ்களை படிக்கும் வசதி தொடர்பாக மத்திய அரசுக்கும் 'ரிசர்ச் இன் மோஷன்' நிறுவனத்துக்கும் இடையே பிரச்னை எழுந்தது.
 
மெசேஜ்களை படிக்கும் வசதியை தராவிட்டால் பிளாக்பெர்ரி போனுக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்ததை தொடர்ந்து அந்த வசதியை அளிக்க பிளாக்பெர்ரி முன்வந்தது.
 
இந்நிலையில் இந்திய நேரப்படி நேற்று பகல் 3.30 மணியிலிருந்து பிளாக்பெர்ரி செல்போனில் இன்டர்நெட் மற்றும் மெசேஜ் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
 
 
இதனால் உலகம் முழுவதும் உள்ள பிளாக்பெர்ரி வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வாடிக்கையாளர்கள் பேஸ்ஃபுக் மற்றும் டுவிட்டரில் தங்கள் புகாரை பதிவு செய்துள்ளனர்.
 
 
பிளாக்பெர்ரியில் அனுப்பப்படும் மெசேஜ்கள் கனடாவில் உள்ள சர்வர் வழியாக மற்றவர்களுக்கு செல்லும். இந்த சர்வரில் ஏற்பட்டுள்ள சிறிய பழுதுதான் பிரச்னைக்கு காரணம் என பிளாக்பெர்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது. 'ஓரிரு நாளில் பிரச்னை சரி செய்யப்பட்டுவிடும் என நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



[Continue reading...]

அம்மாவான சிம்ரன்!

- 0 comments
 

தெலுங்குப் படம் ஒன்றில் அம்மா வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் நடிகை சிம்ரன்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் கனவு தேவதையாகத் திகழ்ந்த சிம்ரன், திருமணத்துக்கு பின் பட வாய்ப்புகளை இழந்தார். மீண்டும் கதாநாயகி வேடம் வந்தால் நடிப்பேன் என்று அடம் பிடித்துவந்தார்.

ஆனால் அக்கா, அண்ணி வாய்ப்புகளே வந்தன. அந்த வேடங்களிலும் சில படங்களில் நடித்தார். அப்போது அம்மா வேடத்தில் நடிக்க பலர் அழைத்தனர். அம்மாவாக நடிக்கும் அளவுக்கு எனக்கு வயதாகி விடவில்லை. அம்மா வேடத்தில் நடிக்கவே மாட்டேன் என்று மறுத்து வந்தார்.

தொடர்ந்து வாய்ப்புகளே இல்லாமல் போனதால் தற்போது அவர் பிடிவாதம் தளர்ந்துள்ளது.

தெலுங்கு படமொன்றில்அம்மா வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம். இவருக்கு மகனாக நடிப்பவர் உபேந்திரா. இருவரும் ஏற்கனவே சத்யம் படத்தில் நடித்துள்ளனர். உபேந்திராவுக்கு ஐம்பது வயதுக்கு மேல்! அவருக்கு அம்மாவாக நடிக்க சிம்ரன் ஒப்புக்கொண்டது திரையுலகில் ஒரு சின்ன ஆச்சர்யம்தான். ஆனால் பெரிய தொகையை இதற்கு சம்பளமாகப் பேசியுள்ளார் சிம்ரன் என்ற தகவல் தெரியவந்ததும் அந்த ஆச்சர்யமும் காணாமல் போய்விட்டது.

சினிமா உலகில் பணத்துக்குதானே முதலிடம்!

[Continue reading...]

விஷாலுக்கு வந்த பக்குவம்!

- 0 comments
 

தோல்விகள்தான் மனிதனை நிதானத்துக்கு கொண்டு வருகின்றன என்பது எத்தனை உண்மையாது, என்கிறார்கள் விஷாலின் இப்போதைய முடிவைக் கேட்ட சிலர்.

அவன் இவன் படத்தில் விஷாலுக்கு கிடைத்த நல்ல பெயரை மொத்தமாக துடைத்துவிட்டதாம் பிரபு தேவா இயக்கத்தில் உருவான வெடி. இந்தப் படத்துக்கு நல்ல பப்ளிசிட்டி,ஏக எதிர்ப்பார்ப்பு இருந்தும், படம் அதற்கேற்ப இல்லாததால் தோல்வியைத் தழுவிவிட்டது.

இதனால் தனது மார்க்கெட் நிலையை நன்கு உணர்ந்த விஷால், தனது அடுத்த படத்துக்கு சம்பளத்தை கணிசமாகக் குறைத்துக் கொண்டார் என கோலிவுட்டில் பரபரக்கிறார்கள்.

இத்தனைக்கும் வெடி அவர்களது சொந்தத் தயாரிப்புதான். இந்தப் படத்தின் லாப நஷ்டம் விஷால் குடும்பத்தினருக்குதான். என்றாலும் நடைமுறை யதார்த்தத்தை புரிந்து நடந்து கொண்ட விஷாலைப் பாராட்டுகிறார்கள்.

இந்தப் பக்குவம் மற்றவர்களுக்கும் வராதா என ஏக்கத்தோடு கேட்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

அப்படின்னா… எல்லார் படமும் தோல்வியைத் தழுவ வேண்டி வருமே பரவால்லயா என எதிர்க்கேள்வி கேட்கிறார்கள் சில வாய்த் துடுக்கு நாயகர்கள்!

[Continue reading...]

தீவிர சிகிச்சை பிரிவில் டி.எம்.எஸ் அனுமதி

- 0 comments
 
 
 
 
 
பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்திரராஜனுக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சென்னை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரையை சேர்ந்தவர் டி.எம்.சவுந்திரராஜன். டி.எம்.எஸ். என்று அன்போடு அழைக்கப்படும் இவர், திரையுலக ஜாம்பவான்களான எம்ஜிஆர், சிவாஜி கணேசன், என பலருக்கும் பின்னணி பாடியிருக்கிறார்.
 
சமீபத்தில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். இந்நிலையில் டி.எம்.எஸ்.க்கு மீண்டும் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனே அவரது உறவினர்கள் அவரை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.



[Continue reading...]

அனுஷ் நெருக்கமாக நடிப்பதற்கு தயங்க மாட்டேன்! – அனுஷ்

- 0 comments

நடிகை அனுஷ்கா ஹைதராபாத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நான் நடிகையாவேன் என்று

கனவிலும் நினைக்கவில்லை. எதிர்பாராமல் அது நடந்தது. அறிமுகமானபோது ரொம்ப கஷ்டப்பட்டேன்.

சினிமாவோடு என்னால் ஒத்துப்போக முடியவில்லை. சினிமாவை விட்டு ஓடிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் இப்போது சினிமாவை முழுமையாக புரிந்துகொண்டேன். இனி சினிமாதான் வாழ்க்கை என்று முடிவு செய்துவிட்டேன். நான் நடித்த பல படங்கள் ஹிட்டாகி உள்ளன. வெளியில்

செல்லும்போதெல்லாம் ரசிகர்கள் சூழ்ந்து நின்று பாராட்டுகிறார்கள். இந்த புகழ் சினிமா மூலம் கிடைத்தது என்று நினைக்கும்போது திரையுலகம்மேல் மரியாதை ஏற்படுகிறது. நான் இருக்க வேண்டிய இடம் சினிமா என்பதை புரிந்துகொண்டேன்.

நல்லவேளை சினிமாவை விட்டு ஓடவில்லை. ஓடிப்போய் இருந்தால் சந்தோஷங்களை இழந்து இருப்பேன். காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதற்கு நான் தயங்குவது இல்லை. எந்த கேரக்டர் என்றாலும் ஈடுபாட்டோடு நடித்தால்தான் ஜெயிக்க முடியும். நான் ஈடுபாட்டுடன் நடிப்பதால்தான் முதல் நிலைக்கு வந்து இருக்கிறேன்.

ஸ்வீட்டியின் நம்பர் ஒன் ரகசியம் இதாம்பா… நல்லா நோட்

[Continue reading...]

அரசியல் அனுபவமும்! குத்து ரம்யாவின் புலம்பலும்!!

- 0 comments
 
 
சினிமாவில் இருந்து அரசியலுக்கு தாவிய நடிகை குத்து ரம்யா, அரசியலில் தனக்கு கிடைத்த மோசமான அனுபவத்தை நெருங்கியவர்களிடம் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறாராம். "குத்து" படத்தில் அறிமுகமானதால் "குத்து" ரம்யா என்று தமிழ் ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகை திவ்யா ஸ்பந்தனா. கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். அவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் ஹிட் என்பதால் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க முன்னணி கன்னட ஹீரோக்கள் முண்டியடிக்கின்றனர்.
 
இந்நிலையில் திடீரென ரம்யா அரசியலில் குதித்தார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல், மீது கொண்ட அபிமானத்தால் இளைஞர் காங்கிரஸில் சேர்ந்தார். அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்ததாலோ என்னவோ, எடுத்த எடுப்பிலேயே கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு காங்கிரஸ் மூத்த தலைவர்களை எரிச்சலடைய வைத்தது. உடனே தலைமைக்கு புகார் பறந்தது. தன் இஷ்டத்திற்கு அவர் பேசி வருகிறார் என்று ரம்யா மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து ரம்யாவுக்கு விளக்கம் கேட்டு கட்சி தலைமை நோட்டீஸ் அனுப்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த குத்து ரம்யா, போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டார். நினைத்தது எதுவும் நடக்காமல், அரசியலில் அலைக்கழிப்புக்கு ஆளான ரம்யா, அந்த கசப்பான, மோசமான அனுபவங்களை நெருங்கியவர்களிடம் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.




[Continue reading...]

5ம் வகுப்பு மாணவியை கடத்தி பலாத்காரம் செய்ய முயன்ற பாதிரியார்

- 0 comments
 
 
 
கேரளாவில் 5ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.
 
கேரளா மாநிலம் கண்ணூர் அருகே உள்ள வடக்கஞ்சேரியைச் சேர்ந்தவர் சாம்சன். இவர் அங்குள்ள கிறிஸ்தவ குருத்துவ மடத்தில் உள்ள இளநிலை குருத்துவ கல்லூரியில் ஆசிரியராக உள்ளார்.
 
இந்த நிலையில் வடக்கஞ்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்ற சாம்சன் அந்த வழியாக சென்ற 5ம் வகுப்பு மாணவியை வழிமறித்தார். அதன்பின்பு அந்த மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வேகமாகச் சென்றார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றதும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் மாணவி சத்தம் போட்டாள். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் சாம்சனை பிடித்தனர். மேலும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
 
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சாம்சனை கைது செய்தனர்.



[Continue reading...]

உள்ளாட்சி தேர்தல்: 17, 19 தேதிகளில் அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை

- 0 comments
 
 
உள்ளாட்சித் தேர்தலையொட்டி அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய இரு தினங்களும் தேர்தல் நடக்கும் பகுதிகளில் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
த்மிழக உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டங்களில் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வசதியாக இந்த இரு நாட்களும் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
 
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 17 மற்றும் 19-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, வாக்குப்பதிவு நடைபெறும் மேற்கண்ட இரு நாட்களும் அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை விடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
 
அதன்படி, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் 17-ந் தேதி அன்று அனைத்து அரசு அலுவலகங்களும், அரசு கல்வி நிறுவனங்களும், அரசு சார்ந்த நிறுவனங்களும் மூடியிருக்கும்.
 
இதேபோல், 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் 19-ந் தேதி அன்று அனைத்து அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.



[Continue reading...]

ராத்திரியில் நர்ஸிடம் செக்ஸ் பேச்சு, எஸ்.எம்.எஸ் அனுப்பியவர் கைது

- 0 comments
 
 
 
 
 
ஆபாச எஸ்.எம்.எஸ், மற்றும் பேச்சு மூலம் பல பெண்களுக்கு தொல்லை கொடுத்து வந்த செங்கல்பட்டை சேர்ந்த வாலிபரை, ஒரு நர்ஸ் மூலம் போலீசார் கைது செய்தனர்.
 
காஞ்சிபுரம் மாவட்டம், திருமலைவையாவூர் பகுதியை சேர்ந்தவர் அம்பிகா. தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக இவரது மொபைல்போனுக்கு, குறிப்பிட்ட நம்பரில் இருந்து ஆபாச எஸ்.எம்.எஸ்.கள் வந்தன.
 
மேலும் நள்ளிரவில் அதே நம்பரில் இருந்து பேசிய நபர், ஆபாசமாக பேசி, அம்பிகாவுக்கு தொல்லை கொடுத்தார். இந்த தொல்லை தொடரவே, மன உளைச்சல் தாங்க முடியாத அம்பிகா இதுகுறித்து, வடக்கு மண்டல ஐ.ஜி. சைலேந்திரபாபுவிடம் புகார் செய்தார்.
 
ஐ.ஜி உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன், மறைமலைநகர் போலீசார் விசாரித்தனர். இதில் செங்கல்பட்டு தனியார் கார் கம்பெனியில் வேலை செய்யும் அந்தோணி பெனட்டிக் (21) என்பவர் தான், அம்பிகாவின் மொபைல் போனுக்கு அழைத்து பேசி தொல்லை கொடுத்தார் என தெரிந்தது.
 
அந்தோணியிடம் நடத்திய விசாரணையில், அவர் அம்பிகா மட்டுமின்றி பல பெண்களுக்கும் இதுபோல செக்ஸ் தொல்லை கொடுத்தது தெரிந்தது. பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிந்த போலீசார், அந்தோணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.



[Continue reading...]

ரஜினியின் கல்வி அறக்கட்டளை நிர்வாகியை மிரட்டியவர் கைது!

- 0 comments
 
 
நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா கல்வி அறக்கட்டளை நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த மும்பை சினிமா பைனான்ஸியர் கைது செய்யப்பட்டார்..
 
ராகவேந்திரா கல்வி அறக்கட்டளை நிறுவனம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாகியை ரூ. 2.5 கோடி கடன் பிரச்சினை தொடர்பாக, மிரட்டியதாக பிரபல மும்பை சினிமா பைனான்சியர் சுசில்குப்தா (வயது 62) மீது தேனாம்பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
 
இது தொடர்பாக இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் அசோக்குமார், உதவி கமிஷனர் ராஜராஜன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.
 
கொலை மிரட்டல் வழக்கில் பைனான்சியர் சுசில்குப்தா நேற்று மாலை கைது செய்யப்பட்டார். உடனடியாக அவர் நீதிமன்ற காவலில் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.



[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger