Sunday 25 August 2013

ஆட்டோ கட்டணம் அதிரடியாக குறைந்ததால் பயணிகள் மகிழ்ச்சி auto fare decrease passenger happy

- 0 comments

ஆட்டோ கட்டணம் அதிரடியாக குறைந்ததால் பயணிகள் மகிழ்ச்சி auto fare decrease passenger happy

26 Aug 13 02:06:05 AM by Tamil  |   Tags : தினசரி செய்திகள் , Daily News   |  6 views  |   0 comments

சென்னை, ஆக 26–

சென்னையில் பொது மக்களின் போக்குவரத்து வசதிக்கு பெரும் பங்காற்றுவது ஆட்டோக்கள் என்றால் அது மிகையாகாது. தமிழகம் முழுவதும் ஓடும் 2 லட்சத்து 14 ஆயிரம் ஆட்டோக்களில், சென்னையில் மட்டும் 71 ஆயிரத்து 470 ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆட்டோக்களில் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொது மக்கள் பரவலாக குற்றம் சாட்டி வந்தனர்.

இக்கட்டணம் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் ஆட்டோ கட்டணம் தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து முதல்– அமைச்சர் ஜெயலலிதா அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து சென்னையில் ஆட்டோக்களுக்கான கட்டணத்தை நிர்ணயித்து நேற்று காலையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இதன்படி முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.25 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூடுதல் கிலோ மீட்டருக்கும் 12 ரூபாய் கட்டணமாக வசூலிக்கலாம் என்றும், முடிவு செய்யப்பட்டுள்ளது.

காத்திருக்கும் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் 3 ரூபாய் 50 காசு (ஒரு மணி நேரத்துக்கு ரூ.42) என்றும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணிவரை 50 சதவீதம் கூடுதல் கட்டணம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இக்கட்டணம் நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வந்தது. ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். (குளோபல் பொசிசனிங் சிஸ்டம்) கருவி பொறுத்தவும், முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் குறிப்பிட்ட ஆட்டோ எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை எளிதாக கண்டு பிடித்து விடலாம். எலக்ட்ரானிக் டிஜிட்டல் பிரிண்டருடன் கூடிய மீட்டரை ரூ.80 கோடி செலவில் சென்னையில் ஓடும் அனைத்து ஆட்டோக்களிலும் பொறுத்தவும் அரசு முடிவெடுத்துள்ளது.

பாதுகாப்பாக பயணிக்க அலாரம் கருவியை ஆட்டோக்களில் பொறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவுகளை கடை பிடிக்காத ஆட்டோ டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முறைப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆட்டோ கட்டணத்தால் சென்னையில் ஆட்டோ கட்டணம் பாதியாக குறைந்துள்ளது. உதாரணத்துக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து வட சென்னை பகுதியான கொடுங்கையூருக்கு (11 கிலோ மீட்டர்) செல்வதற்கு சர்வ சாதாரணமாக ஆட்டோ டிரைவர்கள் 300 ரூபாய் கேட்பார்கள். அவர்களிடம் பேரம் பேசினால் 250 ரூபாய்க்கு சம்மதிப்பார்கள். பின்னர் வீட்டில் கொண்டு இறக்கி விட்டதும் ‘‘என்ன சார்... இவ்வளவு தூரம் வந்துடீங்களே, கூடுதலாக 30 ரூபாய் போட்டு தாங்க சார்’’ என்று கேட்டு வாங்கிக்கொள்வார்கள். ஆனால் இனி இந்த கட்டணம் பாதியாக குறையும். 11 கி.மீ. தூரத்துக்கு எழும்பூர்– கொடுங்கையூர்), வில்லிவாக்கம்– தி.நகர்), (சென்டிரல்– அடையார்) ரூ.133 மட்டும் கொடுத்தால் போதும்.

இதே போல் பெரம்பூரில் இருந்து சென்ட்டிரல் செல்ல (7 கி.மீட்டர்), தியாகராயநகரில் இருந்து வடபழனி செல்ல ரூ.60 (5 கி.மீ), எழும்பூரில் இருந்து தி.நகர் செல்ல ரூ.73 (6 கி.மீ), ஆகியவை மட்டும் கொடுத்தால் போதுமானதாகும்.

சென்னையில் ஆட்டோ பயணம் பெண்களுக்கு பல நேரங்களில் ஆபத்தானதாகவே இருந்து வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட கோயம்பேட்டில் இருந்து மாதவரம் நோக்கி ஆட்டோவில் சென்ற பெண் நகைக்காக படுகொலை செய்யப்பட்டார். இதே போல ஆட்டோக்களால் பல குற்றச் செயல்களும் நடைபெற்று வந்துள்ளன.

ஒரு சில ஆட்டோ டிரைவர்கள் செய்யும் இது போன்ற தவறுகளால் ‘‘ஆட்டோ பயணம் ஆபத்தானதோ’’ என்ற எண்ணம் பொதுவாக அனைவரது மனதிலும் இருந்து வந்தது. அலாரம் பொறுத்துவதால் பொது மக்கள் இனி அச்சமின்றி பயணிக்கலாம். நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆட்டோ கட்டணமும், ஆட்டோக்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு வசதிகளும் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

[Continue reading...]

மோடி பிரதமராவது உறுதி: பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு Modi to Prime Minister sure pon radhakrishnan speech

- 0 comments

ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்ககோரி பாரதிய ஜனதா இளைஞர் அணி சார்பில் கோவை காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு பாரதிய ஜனதா மாநில செயலாளர் பொன்.ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா அகில இந்திய இளைஞர் அணி தேசிய தலைவர் அனுராக்தீன் தாகூர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

ஏழை இந்து மாணவர்கள் கல்வி உதவித் தொகை வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சி தான் இந்த செயலை தொடர்ந்து செய்து வருகிறது. தமிழகத்தில் பாரதிய ஜனதாவுக்கு செல்வாக்கு 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்போது நாடெங்கும் நரேந்திரமோடி அலை வீசுகிறது.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மோடி தான் பிரதமர். அவர் பிரதமராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அவர் பிரதமரானதும் முதலில் போடும் கையெழுத்து இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கு உரியதாகத் தான் இருக்கும். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை கட்சியாக உருவாகி வருகிறது.

மேற்கண்டவாறு பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்

[Continue reading...]

புனே அருகே 11 வயது சிறுமி கற்பழிப்பு

- 0 comments

மராட்டிய மாநிலம் புனே அருகே உள்ள கிராமம் கலாண்ட்வாடி. இந்த பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமியை 22 வயது வாலிபர் ஒருவர் வழிமறித்து கரும்பு தோட்டத்துக்கு தூக்கி சென்றார். அங்கு அந்த சிறுமியை கற்பழித்தார். பின்னர் அவரது கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்று விட்டு அங்கிருந்து தப்பி ஓடினான்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போல டெல்லியில் 17 வயது இளைஞரை அவரது நண்பர்களே குத்தி கொன்றனர்.

டெல்லி சிரகவில் உள்ள மயூர்விகார் பகுதியை சேர்ந்தவர் ரவி. தனது நண்பர்களுடன் சேர்ந்து அவர் மது அருந்தினார். அப்போது அவர்களுக்குள் சிறிய தகராறு ஏற்பட்டது. 4 பேரும் சேர்ந்து ரவியை பீர் பாட்டிலால் குத்தினார்கள். பின்னர் அவர்கள் கல்லால் அவரது முகத்தை சிதைத்தனர்.

போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி 4 பேரையும் கைது செய்தனர்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger