Monday 19 March 2012

பெட்டியில் தலையில்லா பெண்ணின் முண்டம் கண்டுபிடிப்பு- போலீசார் தீவிர விசாரணை

- 0 comments

சென்னைக்கு வந்த டெல்லி ரெயிலில் வாலிபரின் தலையில்லா உடல் இருந்ததுபோல் டெல்லியிலும் பெண்ணின் தலையில்லா உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட இருவருக்கும் ஒற்றுமை உள்ளது இருவரும் காதலர்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்த டெல்லி செல்லவுள்ளனர். டெல்லியில் இருந்து சென்னை வந்த ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரெயிலில் இரும்பு பெட்டிக்குள் தலையில்லாத வாலிபரின் உடல் இருந்தது. இந்த உடலை கைப்பற்றி சென்ட்ரல் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல டெல்லியில் சப்கான் பிகாபார்க் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் உடலும் மீட்கப்பட்டது. சென்னை மற்றும் டெல்லியில் அடுத்தடுத்து 2 உடல்கள் தலையில்லாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது 2 மாநில போலீசாரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.கொலையுண்ட 2 பேரும் காதல் ஜோடியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 2 பேரின் உடல்களையும் அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதுதொடர்பாக உடனடி யாக டெல்லி போலீசாரை தொடர்பு கொண்டு பேசிய சென்ட்ரல் ரெயில்வே போலீசார் விரைவில் அங்கு சென்று விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். கொலையுண்ட வாலிபர் உடலுடன் சென்னை வந்த ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் உத்தரபிரதேசம், மகாராஸ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களை கடந்து 27 ரெயில் நிலையங்கள் வழியாக சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடைந்துள்ளது.ஆந்திரா, விஜயவாடா, சூலூர் போன்ற 7 முக்கிய ரெயில் நிலையங்களில் 15 நிமிடம் வரை இந்த ரெயில் நிற்பது வழக்கம். இந்த நேரத்தில்தான் கொலையாளிகள் வாலிபரின் உடல் அடங்கிய பெட்டியை ரெயிலில் ஏற்றி இருக்கவேண்டும். கொலை செய்யப்பட்ட வாலிபர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டுமே உறுதியாகி உள்ளது. அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் டெல்லியில் மீட்கப்பட்டுள்ளதால் இந்த வாலிபரும் டெல்லியை சேர்ந்தவராகத்தான் இருக்கவேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள். காதல் போட்டியில் டெல்லியைச் சேர்ந்த கூலிப்படையினர் யாராவது 2 பேரையும் கழுத்தை அறுத்து கொன்றிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைதேர்ந்த கொலைகாரர்களால் மட்டுமே இப்படி கொடூரமான கொலைகளை செய்து உடலை துணிச்சலுடன் ரெயிலில் ஏற்றி அனுப்ப முடியும்.ஒருவர் மட்டுமே இந்த கொலைகளை செய்திருக்க வாய்ப்பில்லை. 4 அல்லது 5 பேர் சேர்ந்து 2 பேரையும் தலையை துண்டித்து கொன்று இருக்கவேண்டும். போலீசாரின் கவனத்தை திசை திருப்புவதற்காக பெண்ணின் உடலை டெல்லியில் வீசி விட்டு, ஆணின் உடலை சென்னைக்கு ரெயிலில் ஏற்றி அனுப்பி உள்ளனர். கொலையாளிகள் 4 பேரும் உடலுடன் இருந்த இரும்பு பெட்டியை தூக்கி வந்து ரெயிலில் இருக்கைக்கு அடியில் வைத்திருக்க வேண்டும். இவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்கவும் போலீஸ் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கொலையுண்ட 2 பேரின் தலைகளையும் கொலையாளிகள் எங்கு வீசிச் சென்றார்கள் என்பது தொடர்ந்து மர்மமாகவே உள்ளது. அதனை தேடி கண்டுபிடிக்கும் பணியில் டெல்லி போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பெரும் சவாலாக விளங்கும் இந்த கொலை வழக்கில் துப்பு துலக்கி குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சேகர் உத்தரவிட்டுள்ளார் டி.எஸ்.பி. பொன்ராம், இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் கொலையுண்ட வாலிபரை அடையாளம் காணவும், கொலையாளிகளை பிடிக்கவும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.டெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை உள்ள 27 ரெயில் நிலையங்களில் பெரும்பாலான நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன இந்த கேமிராக்களில் கொலையாளிகள் நிச்சயம் சிக்கியிருக்க வேண்டும் என்று போலீசார் உறுதியாக நம்புகிறார்கள்.கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை பார்க்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்காக 4 மாநில போலீசாரின் உதவியையும் சென்னை போலீசார் நாடி உள்ளனர் இந்த வழக்கில் தற்போதைய நிலையில் இந்த கேமராக்களை மட்டுமே போலீசார் மலைபோல நம்பி இருக்கிறார்கள். அது கைகொடுக்குமா? என்பது போகப்போகத்தான் தெரியும்
[Continue reading...]

மெரினா கடற்கரையில் காங்கிரஸ் அரசுக்கு ஏதிராக அலையென திரண்ட தமிழர்கள் (120 படங்கள் இணைப்பு)

- 0 comments
இணைப்பு)
 

சிறீலங்கா அரசிற்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கேரியும் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பினை நடத்தகோரியும் இன்று சென்னை மெரினா கடற்கரையில்ஆர்ப்பாட்ட பேரணியினை நடத்தியுள்ளார்கள்.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் இன்று பிற்பகல் மெரினா கடற்கரையில் பாண்டிய மன்னிடம் நீதிகேட்டு போராடிய கண்ணகி சிலைக்கு அருகில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பன்னாட்டு விசாரணையினை நடத்து ,தனித்தமிழீழத்திற்கான வாக்கெடுப்பினை நடத்து,60ஆண்டு கால போராட்டத்தை கருத்தில்கொண்டு தமிழீழத்தை தனிநாடாக அறிவி,இலங்கை அரசு ராஜபக்சமீது சர்வதேச விசாரணை நடத்து,இலங்கை ஒரு தோல்வியுள்ள சனநாயக நாடு அங்கே நீதி கிடையாது,நல்லிணக்க ஆணையகத்தை நாங்கள் புறக்கணிக்கின்றோம்,என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு ஆயிரக்கணக்கான மக்கள் அலையென மெரினா கடற்கரையில் திரண்டார்கள். இடையில் விடுதலை பறை அடித்து சிங்கள அரசிற்கு எதிரான கோசங்களை மக்கள் எழுப்பினார்கள்.

இன் நிகள்வில் பேராசிரியர் தீரன்,தோழர் தியாகு,ஓவியர் வீரசந்தணம்,நல்லை சத்தியா,கவிஞர் தாமரை,அற்புதாம்மாள்,மகேஸ்வரி,மே 17 இயக்கஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு தற்போதைய சிறீலங்காவின் நிலைதொடர்பிலும் சிறீலங்காஅரசுமீது எவ்வாறான அழுத்தங்களை பன்னாடுகள் கொடுக்கவேண்டும் என்றும் அதற்கு தமிழகமக்களின் எழுச்சி எவ்வாறு செயல்வடிவம் கொடுக்கவேண்டும் என்பது தொடர்பிலும் எடுத்துரைக்கப்பட்டது. இறுதியில் கோசங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்று ஆர்பாட்டத்தினை நிறைவு செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியின் நிறைவாக சிறீலங்கா அரசுமீது பன்னாட்டு போர்குற்ற புலனாய்வு விசாரணை தேவை என்பதையும் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தப்பட்டது.

[Continue reading...]

கூடங்குளத்தில் உச்ச கட்ட கிளைமேக்ஸ் -வெற்றி யாருக்கு?

- 0 comments
 
 
பலரும் எதிர் பார்த்தது போலவே சங்கரன் கோவில் இடைத் தேர்தல் முடிந்த மறுநாளே தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உண்மை முகம் தெரிந்துவிட்டது.
 
கடந்த செப்டம்பர் 22 ம் தேதி தமிழக அமைச்சரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி கூடங்குளம் பகுதி மக்களின் அச்சம் தீரும் வரை அணு உலைப் பணிகளை நிறுத்தி வைக்கவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார் .
 
ஆனால் மக்களின் அச்சம் சிறிதளவும் தீராத நிலையில் அணுமின் நிலையம் தொடங்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று இன்று அமைச்சரவையைக்கூட்டி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள் .
 
அத்தோடு நில்லாமல் எந்த ஒரு தனி மனிதரையோ அல்லது பொதுச் சொத்தையோ அணு அளவுக்குகூட சேதம் விளைவிக்காமல் ஆறு மாதமாக போராடிவரும் அப்பாவி மக்களை கைது செய்து வருகிறார்கள் .இது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
 
என்னைப் பொறுத்தவரை போராட்டத்தின் இறுதிக்கட்டமாக இது இருக்கும் என்று கருதுகிறேன் .
 
கைது நடவடிக்கையை தொடர்ந்து போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் காலவரையற்ற உண்ணாநிலையைத் தொடங்கியுள்ளார் .மேலும் பல்லாயிரக்கணக்கானோர் இடிந்தகரையில் குவிந்து வருகின்றனர் .
 
வேற்றூர்களில் இருந்து வருபவர்களை தடுக்க ஆயிரக் கணக்கான போலீசார் குவிக்கப் பட்டுள்ளதால் கடலோர கிராம மக்கள் கடல் வழியாக இடிந்தகரையை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர் .
 
கிளைமேக்ஸ் தொடங்கிவிட்டது ,வெற்றி கூடங்குளம் பகுதி பொதுமக்களுக்கா இல்லை அணு உலைக்கா என்பது விரைவில் தெரிய வரும் என நினைக்கிறேன் .
 
கைது செய்யப் பட்ட கூடங்குளத்தை சார்ந்த வக்கீல் சிவசுப்பிர மணியன் மற்றும் போராட்டக் குழுவினர் .
 
கடல் மார்க்கமாக இடிந்தகரை நோக்கி வரும் கடலோர கிராம மக்கள் .
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger