Saturday 8 October 2011

kungumachimzh-01-10-2011 (Download Tamil Magazine)

- 0 comments

kungumachimzh-01-10-11 (Download Tamil Magazine)

[Continue reading...]

ரா ஒன் இசை வெளியீடு... பங்கேற்கிறார் சூப்பர் ஸ்டார்?

- 0 comments
 
 
 
உடல் நிலை பாதிக்கப்பட்டு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ரா ஒன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் திங்கள்கிழமை காலை சென்னையில் நடக்கிறது.
 
இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினி பங்கேற்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
ஆனால் ரஜினி வருவது முற்றிலும் எதிர்ப்பார்க்காத ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்க மறுக்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்.
 
இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு நடிகர் ஷாரூக்கான் நாளை சென்னை வருகிறார். முதல் வேலையாக, சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது போயஸ் இல்லத்தில் சந்திக்கும் ஷாரூக், பின்னர் ஐபிஎல் போட்டியைக் காணச் செல்கிறார்.
 
நாளை மறுநாள் சத்யம் திரையரங்கில் இசை வெளியீட்டு விழா நடக்கிறது.
 
வரும் தீபாவளிக்கு இந்தி மற்றும் தமிழ் (டப்பிங்) மொழிகளில் வெளியாகிறது ரா ஒன். ரஜினி நடித்திருப்பதால் அந்தக் காட்சியைக் காண ரஜினி ரசிகர்களும் பொதுவான ரசிகர்களும் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர்.
 
இந்தப் படத்தை அபிராமி ராமநாதன் பெரும் விலைக்கு வாங்கியுள்ளார். 20-க்கும் அதிகமாக முதல்நிலை அரங்குகளில் ரா ஒன் வெளியாக உள்ளது.



[Continue reading...]

கிளிநொச்சியில் ஆயுததாரிகள் கொடூரம் : வீடு புகுந்து ஒருவர் வெட்டிக் கொலை

- 0 comments
 

கிளிநொச்சி மாவட்டம், வட்டக்கச்சியில் வீடு ஒன்றிற்குள் நேற்று அதிகாலை புகுந்த ஆயுததாரிகள் குடும்பஸ்தர் ஒருவரை வெட்டிக் கொலை செய்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர் அதேவீட்டில் இருந்த பெண்ணையும் ஆயுததாரிகள் கழுத்தில் குத்திக் காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். கிளிநொச்சி மாவட்டம், வட்டக்கச்சியில் மாயவனூர் சிவன் கோயிலை அண்மித்துள்ள பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொலை நடந்த இடத்திலிருந்து சிறிது தூரத்திலேயே இராணுவக் காவலரண் ஒன்று இருக்கின்றபோதும் கொலையாளிகளால் எதுவித இடையூறும் இன்றித் தப்பிச் செல்ல முடிந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தம்பிராசா சௌந்தரராஜன் (வயது 50) என்பவரே சம்பவத்தில் கொல்லப்பட்டார். இவர் திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்தவர். தொழில் நிமித்தம் வட்டக்கச்சியில் தங்கியிருந்தார்.

இவரது உறவினரான மாயவனூர் தியாகராசா சாந்தி (வயது 39) கத்தியால் குத்தப்பட்டதில் கழுத்தில் படுகாயமடைந்தார். கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காகப் பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இவரும் இவரது இளவயது மகளும் அண்மையிலேயே அந்தப் பகுதியில் மீளக்குடியமர்ந்திருந்தனர். இவர்களது வீடு பாதுகாப்பானதாக இருக்கவில்லை. வீட்டுக்குக் கதவு, ஜன்னல்கள் இல்லை. மகளின் பாதுகாப்புக்காக இரவில் எப்போதும் தூக்கமின்றியே இருக்க வேண்டியிருக்கிறது என்றார் சாந்தி.

இவர்களது உறவினரான சௌந்தரராஜன் கடந்த 3 மாதங்களாக இவர்களது வீட்டில் தங்கியிருக்கிறார். தொழில் நிமித்தம் அவர் அங்கு தங்கியிருந்துள்ளார். அதிகாலை 3 மணியளவில் நானும் மகளும் படுத்திருந்த அறைக்குள் டோச் அடித்தபடி ஒருவர் வருவதைக் கண்டு பயந்துபோய் யாரது? என்று சத்தமிட்டேன். உடனே எனது கழுத்தில் கூரான ஏதோ ஒன்றால் குத்திவிட்டு அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டார் என்றார் சாந்தி. அதன் பின்னர் சத்தமிட்டு அயலவர்களைக் கூட்டி அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றிருக்கிறார் அவரது மகள். அம்மாவை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல முயன்றபோதே சொந்தரராஜன் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டோம்" என்கிறார் சாந்தியின் மகள்.

உடனடியாக கிளிநொச்சிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. சௌந்தரராஜனின் சடலத்தின் அருகே டோச் லைற் ஒன்று கண்டெடுக்கப்பட்டது என்று பொலிஸார் கூறினர். கிளிநொச்சி மாவட்ட நீதிவான் பெ.சிவகுமார் நேற்றுக் காலை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அவரது உத்தரவுக்கமைய கொலையுண்டவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் அது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சௌந்தர்ராஜனின் மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இன்னும் சில தினங்களில் அவர் நாடு திரும்ப இருந்தார் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

[Continue reading...]

சனல் 4 காணொளியை ஐ.நா திரையிட மூன்று மில்லியன் லஞ்சம்?

- 0 comments
 
 
சனல் 4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் காணொளி ஆவணப்படத்தை மூன்று அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து, எதிர்வரும் 12 ஆம் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் திரையிட தீர்மானித்துள்ளன. இந்த நிலையில், சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் திரையிட ஐரோப்பாவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வலையமைப்பு மூன்று அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு மூன்று மில்லியன் யூரோக்களை லஞ்சமாக வழங்கியுள்ளதாக இலங்கையில் இருந்து வெளியாகும் சிங்கள நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பல நாடுகளிலும் திரையிடப்பட்ட சனல் 4 காணொளி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் முதல் முறையாக திரையிடப்படவுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச நெருக்கடிக் குழு மற்றும் மனித உரிமை கண்காணிப்பகம் என்பன இணைந்து இக்காணொளியை ஐரோப்பிய பாராளுமன்றில் திரையிடவுள்ளன.
[Continue reading...]

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் புலிகளுடன் கூடி கும்மாளம் அடித்தவர்கள் -குணதாச அமரசேகர!

- 0 comments
 

இந்தியா தனது நாட்டுப் பிரச்சினைகளையே தீர்த்துக்கொள்ள இயலாமல் சிக்கித் தவிக்கும் நிலையில் இலங்கை உள் விவகாரங்களில் மூக்கை நுழைக்க முயற்சிக்கின்றது. இந்திய அரசின் தலையீட்டை நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.இவ்வாறு தெரிவிக்கின்றார் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர.

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இன்று இலங்கை வருகிறார். அவரது இலங்கைப் பயணத்தில் ஜனாதிபதி உட்பட அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவார். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும்பொருட்டு அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்றுவரும் பேச்சுகளில் எவ்வாறான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது தொடர்பாகவும் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஆராய்வார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு தரப்பினரிடமும் இந்த விடயங்கள் தொடர்பாக அவர் கேட்டறிவார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையிலேயே கலாநிதி குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரியவருவதாவது:

இந்திய அரசு மட்டுமல்ல, மேற்கத்தேய நாடுகளும் இலங்கை உள்விவகாரங்களில் மூக்கை நுழைக்க முயற்சிக்கின்றன. இந்திய அரசின் அழுத்தங்களே நாளாந்தம் அதிகரித்த வண்ணமுள்ளன. சர்வதேச சமூகத்தின் தலையீட்டை நாம் அனுமதிக்கமாட்டோம். இந்திய நாட்டில் தீர்க்கமுடியாத எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. அவற்றைத் தீர்ப்பதற்கு முதலில் வழிதேடுங்கள். பின்னர் மற்றைய விடயங்களைப் பார்க்கலாம் என இந்திய அரசுக்குக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காகவே தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இலங்கைக்கு எதிராகச் செயற்படுகின்றனர். தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுள் சிலர் புலிகளுடன் கூடி கும்மாளம் அடித்தவர்கள்தான் என்பதை எவராலும் மறந்துவிடமுடியாது. இவ்வாறானவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து இந்திய மத்திய அரசு இலங்கையின் விவகாரங்களில் தலையிட முனையக்கூடாது. அவ்வாறு செயற்பட நினைத்தாலும் அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.

ஆயுதப் போராட்டம் மூலம் பெறமுடியாததை சிலர் இராஜதந்திர ரீதியில் நகர்வுகளை முன்னெடுத்துப் பெற முனைகின்றனர். இதற்கு இந்தியா உட்பட மேற்கத்தேய நாடுகள் துணை நிற்கின்றன. அந்நாடுகளின் அண்மைக்கால செயற்பாடுகள் அதனையே நிரூபிக்கின்றன என்றார்.

[Continue reading...]

மும்பை அணியை சமாளிக்குமா சாமர்சட்! *இன்று இரண்டாவது அரையிறுதி

- 0 comments
 

சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20′ தொடரில் இன்று நடக்கவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ், சாமர்சட் அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் முறையாக பைனலுக்கு முன்னேற மும்பை இந்தியன்ஸ் அணி காத்திருக்கிறது.
மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20′ கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், ஹர்பஜன் சிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இங்கிலாந்தின் சாமர்சட் அணியை எதிர்கொள்கிறது.
மைதான அனுபவம்:
கேப்டன் சச்சின், முனாப் படேல் உள்ளிட்ட எட்டு வீரர்கள் காயம் காரணமாக விளையாடாத போதும், இன்றைய போட்டியில் மும்பை அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். ஏனெனில் மும்பை அணி, சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டு லீக் போட்டியில் விளையாடியது. இந்த அனுபவம் மும்பை அணிக்கு கைகொடுக்கலாம். ஆனால் சாமர்சட் அணி, தகுதிச் சுற்றுப் போட்டிகளை ஐதராபாத் மைதானத்திலும், லீக் சுற்றுப் போட்டிகளை பெங்களூரு மைதானத்தில் விளையாடியது. இதனால் சாமர்சட் அணிக்கு சேப்பாக்கம் மைதானம் குறித்த அனுபவம் குறைவாக இருக்கும்.
போலார்டு எழுச்சி:
மும்பை அணிக்கு பிளிஜார்டு, கன்வர் ஜோடி சிறந்த துவக்கம் அளிக்கும் பட்சத்தில், இமாலய இலக்கை அடையலாம். ஜேம்ஸ் பிராங்க்ளின் தனது பொறுப்பான ஆட்டத்தை இன்றும் தொடரலாம். இதுவரை சொல்லிக் கொள்ளும்படி விளையாடாத போலார்டு, சைமண்ட்ஸ் இன்று முழுத்திறமையை வெளிப்படுத்தினால், ரசிகர்கள் "சிக்சர்' மழையில் நனையலாம். ஹர்பஜன், சதிஷ், சுமன் உள்ளிட்டோரும் பேட்டிங்கில் அசத்தினால் நல்லது. "ஆல்-ரவுண்டராக' அசத்தி வரும் மலிங்கா, இன்றும் பேட்டிங்கில் கைகொடுக்கும் பட்சத்தில், சுலப வெற்றி பெறலாம்.
மும்பை அணியின் வேகப்பந்துவீச்சு லசித் மலிங்காவை எதிர்நோக்கி உள்ளது. இதுவரை நான்கு விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ள இவர், இன்று எழுச்சி கண்டால் நல்லது. இவருக்கு அபு நேசிம் அகமது, போலார்டு, சதிஷ், ஜேம்ஸ் பிராங்க்ளின் உள்ளிட்ட வேகங்கள் கைகொடுக்கும் பட்சத்தில், எதிரணியின் வேட்டையை தடுக்கலாம். சுழலில் ஹர்பஜன் சிங் இருப்பது பலம்.
மெர்வி நம்பிக்கை:
சாமர்சட் அணியின் கீஸ்வெட்டர், பீட்டர் டிரிகோ ஜோடி இன்று சூப்பர் துவக்கம் அளிக்க வேண்டும். வான் டெர் மெர்வி, ஜேம்ஸ் ஹில்டிரத், ஜாஸ் பட்லர், நிக் காம்ப்டன், அருள் சுப்பையா உள்ளிட்டோர் "மிடில்-ஆர்டரில்' கைகொடுக்கும் பட்சத்தில் வலுவான இலக்கை பதிவு செய்யலாம். தமிழக வீரர் முரளி கார்த்திக், கேப்டன் அல்போன்சா தாமஸ் உள்ளிட்டோர் பேட்டிங்கிலும் சாதித்தால் நல்லது.


சாதிப்பாரா தாமஸ்:
சாமர்சட் அணியின் வேகப்பந்துவீச்சில் கேப்டன் அல்போன்சா தாமஸ் நம்பிக்கை அளிக்கிறார். இவருக்கு லீவிஸ் கிரிகோரி, பீட்டர் டிரிகோ உள்ளிட்ட வேகங்கள் ஒத்துழைப்பு அளித்தால் நல்லது. சுழலில் முரளி கார்த்திக் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மைதானம் குறித்த அனுபவம் இவருக்கு இருக்கும் என்பதால், சுழல் ஜாலம் காட்டலாம். இவருடன் இணைந்து வான் டெர் மெர்வி, ஜார்ஜ் டாக்ரல் துல்லியமாக பந்துவீசும் பட்சத்தில் சுலப வெற்றி பெறலாம்.

வருகிறார் சூர்யகுமார் யாதவ்
காயம் காரணமாக லீக் சுற்றில் விளையாடாத மும்பை அணியின் "ஆல்-ரவுண்டர்' சூர்யகுமார் யாதவ், சாமர்சட் அணிக்கு எதிரான இன்றைய அரையிறுதியில் களமிறங்க உள்ளார். இவரது வருகையால், மும்பை அணியில் ஆறு வெளிநாட்டு வீரர்களும், எட்டு இந்திய வீரர்களும் இருப்பர். கேப்டன் சச்சின் உள்ளிட்ட எட்டு முன்னணி வீரர்கள் காயம் காரணமாக பங்கேற்காத நிலையில், லீக் சுற்றின் போது ஐந்து வெளிநாட்டு வீரர்களை விளையாடும் லெவன் அணியில் சேர்த்துக் கொள்ள மும்பை அணிக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டது.
தற்போது சூர்யகுமார் யாதவ் வருகையால், ஒரு வெளிநாட்டு வீரரை, சாம்பியன்ஸ் லீக் நிர்வாகம் திரும்ப பெற்றுக் கொண்டது. இதன்படி இன்றைய அரையிறுதியில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாடும் லெவன் அணியில் இடம் பெற முடியும்.

[Continue reading...]

பைனலுக்கு முன்னேறியது பெங்களூரு அணி: கெய்ல், கோஹ்லி அபாரம்

- 0 comments
 

நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் கெய்ல், கோஹ்லி அபார ஆட்டத்தை வெளிப்படுத்த, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.
மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20′ கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்த முதலாவது அரையிறுதியில், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், நியூ சவுத் வேல்ஸ் (ஆஸ்திரேலியா) அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் வெட்டோரி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.
கைப் வாய்ப்பு:
பெங்களூரு அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. காயம் காரணமாக சுழற்பந்துவீச்சாளர் சையது முகமது நீக்கப்பட்டு, முகமது கைப் சேர்க்கப்பட்டார். நியூ சவுத் வேல்ஸ் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
ஸ்மித் அபாரம்:
முதலில் பேட்டிங் செய்த நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு ஷேன் வாட்சன் (3) ஏமாற்றினார். பின் இணைந்த டேவிட் வார்னர், டேனியல் ஸ்மித் ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. பெங்களூரு பந்துவீச்சை பதம்பார்த்த வார்னர், "சிக்சர்' மழை பொழிந்தார். அபாரமாக ஆடிய வார்னர், 40வது பந்தில் அரைசதம் அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த டேனியல் ஸ்மித், பட்கல் வீசிய ஆட்டத்தின் 14வது ஓவரில், ஒரு இமாலய "சிக்சர்' அடித்து தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 146 ரன்கள் சேர்த்த போது டேனியல் ஸ்மித் (62 ரன்கள், 42 பந்து, 3 சிக்சர், 7 பவுண்டரி), அரவிந்த் வேகத்தில் "போல்டானார்'.
வார்னர் சதம்:
தொடர்ந்து அதிரடி காட்டிய வார்னர், 62வது பந்தில் சதம் அடித்தார். அரவிந்த் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் இரண்டு "சிக்சர்', இரண்டு "பவுண்டரி' உட்பட 23 ரன்கள் எடுத்த வார்னர், அணியின் ஸ்கோரை வலுவாக்கினார். நியூ சவுத் வேல்ஸ் அணி, 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய வார்னர், 68 பந்தில் 11 "சிக்சர்', 6 "பவுண்டரி' உட்பட 123 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். பெங்களூரு சார்பில் தில்ஷன், அரவிந்த் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
கெய்ல் அதிரடி:
சவாலான இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு தில்ஷன் (4) ஏமாற்றினார். பின் இணைந்த கிறிஸ் கெய்ல், விராத் கோஹ்லி ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. நியூ சவுத் வேல்ஸ் பந்துவீச்சை வெளுத்துவாங்கிய கெய்ல், 20 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த கோஹ்லி, தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். கம்மின்ஸ் வீசிய ஆட்டத்தின் 14வது ஓவரில் ஒரு இமாலய "சிக்சர்' அடித்து பந்தை மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்ட கெய்ல் (92 ரன்கள், 41 பந்து, 8 சிக்சர், 8 பவுண்டரி) அதே ஓவரில் அவுட்டானார்.
கோஹ்லி நம்பிக்கை:
அடுத்து வந்த சவுரப் திவாரி (0), மயங்க் அகர்வால் (7) சோபிக்கவில்லை. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி, அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஸ்டீவன் ஸ்மித் வீசிய ஆட்டத்தின் 19வது ஓவரில், தொடர்ந்து இரண்டு பவுண்டரி அடித்த கைப் (13*), அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். பெங்களூரு அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி (84 ரன்கள், 49 பந்து, 3 சிக்சர், 10 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார். இதன்மூலம் பெங்களூரு அணி, முதன்முறையாக சாம்பியன்ஸ் லீக் தொடரின் பைனலுக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருதை பெங்களூரு அணியின் கோஹ்லி பெற்றார்.

வார்னர் சாதனை

பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில் 68 பந்தில் 123 எடுத்து அவுட்டாகாமல் இருந்த, நியூ சவுத் வேல்ஸ் அணியின் டேவிட் வார்னர், தொடர்ந்து இரண்டாவது சதம் அடித்தார். முன்னதாக இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 69 பந்தில் 135 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதன்மூலம் "டுவென்டி-20′ அரங்கில் அடுத்தடுத்து இரண்டு சதம் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனை படைத்தார்.

200வது "சிக்சர்'

மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20′ தொடரின் 200வது சிக்சரை, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் கிறிஸ் கெய்ல் அடித்தார். நேற்று நடந்த நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில், ஸ்டூவர்ட் கிளார்க் வீசிய ஆட்டத்தின் நான்காவது ஓவரின் 4வது பந்தில் ஒரு இமாலய "சிக்சர்' அடித்த கெய்ல், தொடரின் 200வது சிக்சரை பதிவு செய்தார்.
* தொடரின் முதல் சிக்சரை அடித்த பெருமை கிறிஸ் கெய்ல்லை சேரும். இதனை வாரியர்ஸ் அணிக்கு எதிராக அடித்தார். தொடரின் 100வது சிக்சரை மும்பை இந்தியன்ஸ் வீரர் போலார்டு, கேப் கோப்ராஸ் அணிக்கு எதிராக அடித்தார்.

[Continue reading...]

சிகிச்சைக்குப் பின் சூப்பர்ஸ்டார் ரஜினி ; அதிகாரப்பூர்வ படம்

- 0 comments
 
 
சிங்கப்பூரில் இருந்து சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், விமானநிலையத்தில் தூரத்தில் இருந்தபடியே கையசைத்து சென்றார். அதன்பிறகு அவரது புகைப்படம் வெளியாகவில்லை.
 
ராணா படத்தில் அவர் விரைவில் நடிக்கவிருக்கிறார். ஷாருக்கானின் ரா-1 திரைப்படத்தின் ஒரு காட்சியில் நடித்துள்ளார் என்றெல்லாம் பேசப்பட்டாலும், ரஜினியின் புதிய தோற்றம் வெளியாகவில்லை; இந்நிலையில் சிகிச்சைக்கு பின் உள்ள ரஜினியின் புகைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
 
ரஜினி சிகிச்சைக்கு பின் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். ராணா படப்பிடிப்பில் ஏப்ரல் 29-ந்தேதி அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார். பின்னர் உயர்தர மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சொன்றார். அங்குள்ள மவுண்ட் எலிச பெத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
 
பூரண குணமடைந்தபின் கடந்த ஜுலை 13-ந்தேதி சென்னை திரும்பினார். இதையடுத்து மீண்டும் ராணா பட வேலைகள் துவங்கின. ரஜினி மீண்டும் ராணா படத்தில் நடிப்பார் என்று அவரது மருமகனும், நடிகருமான தனுஷ் அறிவித்தார். வீட்டில் ஓய்வு எடுத்து வரும் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு யூகமான செய்திகள் கடந்த சில நாட்களாக உலா வரத்துவங்கின.
 
ரஜினி முன்பு போல் சுறுசுறுப்பாக இல்லை என்றும் ராணா படத்தை நிறுத்தப்போவதாகவும் தகவல்கள் வெளியாயின. ராணா வரலாற்று படம் என்பதால் கத்தி சண்டை போடுவது, குதிரையேற்றம் போன்ற காட்சிகளில் ரஜினியால் நடிக்க இயலாது என்றும் கூறப்பட்டது. அண்ணாமலை, படையப்பா மாதிரியான கதையை தயார் செய்யும்படி ரஜினி அறிவுறுத்தி இருப்பதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இதனை மறுத்தார்.
 
`ராணா' படம் நிறுத்தப்படவில்லை என்றும் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் அவர் கூறினார். ரஜினி வீட்டில் ஓய்வு எடுத்த பிறகு அவரது பூர்வீக படம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனவே அவர் எப்படி இருக்கிறார் என்று அறிய முடியாமல் இது போன்ற சர்ச்சையான கருத்துகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
 
தற்போது முதல் தடவையாக பூரண குணம் அடைந்த ரஜினியின் அதிகாரபூர்வ படம் வெளியிடப்பட்டு உள்ளது.
 
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன்பாபுவின் மகள் லட்சுமி இந்த படத்தை வெளியிட்டு உள்ளார். சமிபத்தில் அவர் சென்னை வந்து ரஜினியை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
 
அப்போது அவருடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார். அந்த படத்தை ரஜினி ரசிகர்களுக்கு தசரா பரிசாக அளிப்பதாக கூறி வெளியிட்டு உள்ளார். லட்சுமி கூறும்போது, ரஜினி அங்கிள் மிக நலமாக இருக்கிறார் என்றார்.



[Continue reading...]

வீனஸ் கோளில் ஓசோன் கண்டுபிடிப்பு

- 0 comments

லண்டன் : பூமியைப் பொன்று வீனஸ் கோளிலும் ஓசோன் அடுக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை பூமியிலும், செவ்வாயிலும் மட்டுமே ஓசோன் அடுக்கு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. தற்போது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வீனசில் நடத்திய ஆய்வில் அங்கு ஓசோன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீனசில் உள்ள ஓசோன் அடுக்கு பூமியில் உள்ளதைப் போன்று 3 மடங்கு உயரத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

[Continue reading...]

திமுக அதிமுக வேட்பாளர்களாக மாமியார் மருமகள் போட்டி

- 0 comments
 
 
 
புதுக்கோட்டை நகரசபையில் அ.தி.மு.க தி.மு.க. வேட்பாளராக மருமகள் மாமியார் போட்டியிடுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
புதுக்கோட்டை நகராட்சி 24வது கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் மலர்விழி போட்டியிடுகிறார். ஏற்கனவே கவுன்சிலராக இருக்கும் இவருக்கு கட்சி சார்பில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
 
இவரை எதிர்த்து அவரது மாமியார் ஜோதி தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரது கணவர் லட்சுமணன், நகரசபை முன்னாள் தி.மு.க. உறுப்பினர் ஆவார்.
 
மேலும் ஜோதி அ.தி.மு.க. வேட்பாளர் மலர்விழியின் கணவர் முத்துவின் சின்னம்மாள். தேர்தல் பிரசாரத்தில் இருவரும் ஒருவரையொருவர் விமர்சித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். ஒரே வார்டில் அதுவும் பிரதான கட்சியின் வேட்பாளராக மாமியாரும், மருமகளும் போட்டியிடுவது தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



[Continue reading...]

'போனா போகட்டும் ஒரு பொம்பளன்னு பார்த்தா நீ ஊரை ஏய்க்க...': தேமுதிக பிரச்சாரத்தில் விஜயகாந்த் பாட்டு

- 0 comments
 
 
 
 
 
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, உள்ளாட்சித் தேர்தலில் உடன்பாடு எட்டாததையடுத்து, அக்கூட்டணியில் இருந்து விலகியது.
 
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து தனித்துப் போட்டியிட தேமுதிக முடிவு செய்தது.
 
 
இதையடுத்து தனது கட்சி வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து விஜயகாந்த் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். அவரைப் போலவே அவரது மனைவியும் நீங்கள் (விஜயகாந்த்) தெற்கே என்றால், நான் வடக்கே என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
 
 
தேமுதிக வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தலைவர் பக்கத்தில் இல்லாத குறையைப் போக்க, அவர் நடித்த படங்களின் பாடல்களை ஒலிக்க செய்து, தொண்டர்களை உற்சாகப்படுத்துகின்றனர்.
 
 
சென்னை வளசரவாக்கத்தில் இன்று (08.10.2011) காலை தேமுதிக சார்பில் மேயர் வேட்பாளராக போட்டியிடும் வேல்முருகன் பிரச்சாரத்தை துவங்கினார். அவர் பிரச்சாரம் மேற்கொண்ட வாகனத்தில், விஜயகாந்த் நடித்த சின்னக்கவுண்டர் படத்தில் வரும்,
 
 
''சுட்டி சுட்டி உன் வால கொஞ்சம் சுருட்டிக் கொள்ளடி... வட்டி வட்டியும் முதலுமா வாங்கிக்கொள்ளடி... போனா போகுது ஒரு பொம்பளன்னு பார்த்தா நீ ஊரை ஏய்க்க பார்ப்பதென்னடி... வீணா வரிஞ்சிக்கட்டி வம்பிழுத்ததாலே இப்போது மாட்டிக்கிட்டு முழிப்பதென்னடி...'' என்ற பாடல் ஒலிப்பரப்பட்டது. இந்த பாடல் ஒலிப்பரப்பட்டபோது, பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தேமுதிக தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.



[Continue reading...]

‘புலி வருது…’ – திருகோணமலையில் பூச்சாண்டி காட்டும் ராணுவம்

- 0 comments

திருகோணமலை: புலிகள் குறித்த அச்சம் காரணமாக திருகோணமலை பகுதிகளில் இராணுவம் மற்றும் போலீஸாரின் ரோந்து நடவடிக்கைகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. தமிழருக்கு எதிரான கெடுபிடிகளும் அதிகரித்துள்ளன.

திருகோணமலை நகர்ப் பகுதியில் உள்ள பெரும்பாலான இராணுவ தடுப்பரண்கள் அகற்றப்பட்டிருந்தும் ஒருநாளுக்கு நான்கு தடவைகளுக்கு மேல் இவர்கள் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

'புலிகளை அழித்துவிட்டோம் என நாடாளுமன்றத்தில் மார்தட்டிக் கூறிய அதிபர் மகிந்த ராஜபக்சே, தற்போது யாரை அழிப்பதற்காக இராணுவத்தை நடுவீதியில் நடக்க விட்டிருக்கின்றார்?' என்று அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

ஆனால் புலிகள் தாக்கக் கூடிய சூழல் உள்ளதாக ராணுவத்தினர் தங்கள் ரோந்துக்கு காரணம் கூறி வருகின்றனர்.

இதேவேளை மேற்குலக நாடுகளை ஏமாற்றும் பொருட்டு நாட்டில் உள்ள அனைத்து இன, மத மக்களும் பயமின்றியும் சுதந்திரமாகவும் வாழக் கூடிய நிலையில் உள்ளனர் என்றும், தற்போது அபிவிருத்திப் பணிகளே நடைபெற்று வருகின்றது என்றும் அரசாங்கத் தரப்பால் கூறப்பட்டு வருகின்றது.

ஆனால் அவர்கள் தெரிவிக்கும் தகவல்களுக்கு எதிர்மாறான செயல்பாடுகள் தமிழர் பகுதிகளில் நாளுக்கு நாள் அரங்கேற்றப்பட்டு வருகின்றது.

அத்துடன் பாடசாலைக்கு மாணவிகள் செல்லும் பாதையில் தமது தொலைபேசி எண்கள் எழுதப்பட்ட தாள்களை வீசுவதும் அவர்களின் ரோந்துப் பணிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த மாணவிகளிடம் தவறாக நடக்கவும் சிலர் முயன்று வருகின்றனர் என புகார் கிளம்பியுள்ளது.

இன்னொருபக்கம் போக்குவரத்துப் போலீஸாரின் அட்டகாசங்கள் அளவுக்கு மீறிச் செல்வதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் செல்லும் ஆண்களிடம் கேட்கப்படும் வாகன ஆவணங்களை விட, பெண்களிடம் வித்தியாசமான முறையிலும், தீவிரமான முறையிலும் கேட்டு விசாரணை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

[Continue reading...]

ஈரோடு: 2 குழந்தைகளை எரித்து கொலை செய்த தாயும் தற்கொலை

- 0 comments
 

ஈரோடு: குடும்பத் தகராறில் மனமுடைந்த பெண் தனது 2 குழந்தைகளுக்கு தீவைத்துவிட்டு, தானும் தீக்குளித்து பலியானார்.

ஈரோடு மாவட்டம், சங்கு நகரை சேர்ந்தவர் சரவணராஜ். ஜவுளி வியாபாரியான இவருக்கு சுபத்ரா என்ற மனைவியும், லிங்கேஸ்வரன்(9) என்ற மகனும், இலக்கியா(1) மகளும் உள்ளார். இவர்கள் சரவணராஜின் பெற்றோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர்.

சமீபக்காலமாக அவ்வப்போது சரவணராஜ் -சுபத்ரா இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதை சரவணராஜின் பெற்றோர் தலையிட்டு, சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டது. அதை மறந்துவிட்ட சரவணன் நேற்று வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டார்.

இதை நினைத்து மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சுபத்ரா காலை முதல் வீட்டில் யாரிடமும் சரியாக பேசவில்லை. மதியம் 12 மணியளவில், சுபத்ராவின் அறைக்குள் குழந்தைகளுடன் உள்ளே சென்று கதவை பூட்டி கொண்டார்.

பின்னர் அவர் வெகுநேரமாகியும் அவர் வெளியே வரவே இல்லை. சிறிது நேரத்திற்கு பின் அந்த அறையில் இருந்து புகை வருவதும், 2 குழந்தைகளின் அலறல் சத்தமும் கேட்டது. இதில் சந்தேகமடைந்த சரவணராஜின் பெற்றோர், அந்த அறையை தட்டி பார்த்தனர்.

பின்னர் அருகில் இருப்போரின் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது, சுபத்ரா மற்றும் 2 குழந்தைகளும் தீயில் எரிந்து கொண்டிருப்பது தெரிந்தது. உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து, 3 பேரையும் மீட்டனர். ஆனால் அதற்குள் அதிகளவிலான தீக்காயமடைந்த சுபத்ரா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

குழந்தைகள் 2 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில், குடும்பத் தகராறில் தான் மட்டும் தற்கொலை செய்து கொண்டால் 2 குழந்தைகளும் அனாதையாகி விடுவார்கள் என்ற பயத்தில், தன்னோடு குழந்தைகளுக்கும் தீவைத்து கொளுத்திவிட்டு, சுபத்ரா தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

[Continue reading...]

மங்காத்தா பற்றி விவாதித்த சூர்யா

- 0 comments
 

சூர்யாவின் உறவினர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெங்கட் பிரபு படம் இயக்குவது உறுதியாகிவிட்ட நிலையில். அதில் ஹீரோவாக‌ நடிக்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அது யாராக இருக்கும் என்று விசாரித்தால் கோலிவுட்டின் பலரும் கைகாட்டுவது நம்ம 'போதி தர்மா' சூர்யாவைத்தான். இது வெறும் யூகத்தின் அடிப்படையிலான செய்தியாக இருக்காது என்று சொல்கிறவர்கள், சமீபத்தில் வெங்கட் பிரபுவை சந்தித்த சூர்யா மங்காத்தா பற்றி பாராட்டியதோடு சில விசயங்கள் பற்றி விவாதித்ததாகவும் சொல்கிறார்கள்.

[Continue reading...]

இந்திய அரசின் தலையீட்டை நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் – கலாநிதி குணதாச அமரசேகர.

- 0 comments

இந்தியா தனது நாட்டுப் பிரச்சினைகளையே தீர்த்துக்கொள்ள இயலாமல் சிக்கித் தவிக்கும் நிலையில் இலங்கை உள் விவகாரங்களில் மூக்கை நுழைக்க முயற்சிக்கின்றது. இந்திய அரசின் தலையீட்டை நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.இவ்வாறு தெரிவிக்கின்றார் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர.

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இன்று இலங்கை வருகிறார். அவரது இலங்கைப் பயணத்தில் ஜனாதிபதி உட்பட அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவார். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும்பொருட்டு அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்றுவரும் பேச்சுகளில் எவ்வாறான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது தொடர்பாகவும் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஆராய்வார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு தரப்பினரிடமும் இந்த விடயங்கள் தொடர்பாக அவர் கேட்டறிவார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையிலேயே கலாநிதி குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரியவருவதாவது:

இந்திய அரசு மட்டுமல்ல, மேற்கத்தேய நாடுகளும் இலங்கை உள்விவகாரங்களில் மூக்கை நுழைக்க முயற்சிக்கின்றன. இந்திய அரசின் அழுத்தங்களே நாளாந்தம் அதிகரித்த வண்ணமுள்ளன. சர்வதேச சமூகத்தின் தலையீட்டை நாம் அனுமதிக்கமாட்டோம். இந்திய நாட்டில் தீர்க்கமுடியாத எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. அவற்றைத் தீர்ப்பதற்கு முதலில் வழிதேடுங்கள். பின்னர் மற்றைய விடயங்களைப் பார்க்கலாம் என இந்திய அரசுக்குக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காகவே தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இலங்கைக்கு எதிராகச் செயற்படுகின்றனர். தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுள் சிலர் புலிகளுடன் கூடி கும்மாளம் அடித்தவர்கள்தான் என்பதை எவராலும் மறந்துவிடமுடியாது. இவ்வாறானவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து இந்திய மத்திய அரசு இலங்கையின் விவகாரங்களில் தலையிட முனையக்கூடாது. அவ்வாறு செயற்பட நினைத்தாலும் அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.

ஆயுதப் போராட்டம் மூலம் பெறமுடியாததை சிலர் இராஜதந்திர ரீதியில் நகர்வுகளை முன்னெடுத்துப் பெற முனைகின்றனர். இதற்கு இந்தியா உட்பட மேற்கத்தேய நாடுகள் துணை நிற்கின்றன. அந்நாடுகளின் அண்மைக்கால செயற்பாடுகள் அதனையே நிரூபிக்கின்றன என்றார்.

[Continue reading...]

மன்னாரில் பெருந்தொகை குண்டுகள் மீட்பு

- 0 comments
 

மன்னார், விடத்லைதீவு பிரதேசத்திலிருந்து மோட்டார் குண்டுகள் உட்பட பெருந்தொகையான கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் விடத்லைதீவு பாலம்பட்டி – நாயாறு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை மன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.81 மில்லி மீற்றர் வர்க்க மோட்டார் குண்டுகள் 4, 61 மில்லி மீற்றர் மோட்டார் குண்டு 1 மற்றும் 33 குண்டுகள் என்பனவே கைபப்ற்றப்ட்டன என மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

[Continue reading...]

கடலில் படகு மூழ்கியது: உயிர் தப்பினார் பிரபல சினிமா பாடலாசிரியர்

- 0 comments
 
 
பிரபல சினிமா பாடலாசிரியர் சினேகன். இவர் உயர்திரு 420 என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
 
சினேகன் ரணம் என்ற படத்துக்கு பாடல் எழுதுகிறார். இப்படத்தின் மியூசிக் கம்போசிங்கிற்காக இசையமைப்பாளர் மரியா மனோகர், இயக்குனர் விஜய் சேகரன், ஆகியோருடன் சினேகன் மலேசியா அருகில் உள்ள லிங்காவி தீவுக்கு சென்றார்.
 
அங்கு படகில் பயணம் செய்தபோது திடீரென்று படகு கவிழ்ந்தது. சினேகன் கடலில் மூழ்கி தத்தளித்தார். நீச்சல் தெரிந்ததால் உயிர் தப்பினார். படகில் பயணம் செய்து மூழ்கிய இதர பயணிகள் சிலரையும் சினேகன் காப்பாற்றினார். பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று பயணிகளை மீட்டனர்.



[Continue reading...]

லைபீரியா அதிபர் உள்பட 3 பெண்களுக்கு அமைதிக்கான நோபல்!

- 0 comments
 
 
 
எலன் ஜான்சன் சர்லீப், லேமா போவீ மற்றும் தவக்குல் கர்மன் ஆகிய 3 பெண்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.
 
அமைதிக்கான நோபல் பரிசு சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை எலன் ஜான்சன் சர்லீப், லேமா போவீ மற்றும் தவக்குல் கர்மன் ஆகிய 3 பெண்கள் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றனர். அவர்களுக்கு 1.5 மில்லியன் டாலர் பரிசுத் தொகை பிரித்துக் கொடுக்கப்படும்.
 
எல்லன் ஜான்சன் சர்லீப் மேற்கு ஆப்ரிக்க நாடான லைபீரியாவின் அதிபராக உள்ளார். 'லைபீரியாவின் இரும்பு பெண்மணி' என்று அழைக்கப்படும் அவர் தான் ஒரு ஆப்பிரிக்க நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவரும், லேமா போவீ, கர்மன் ஆகியோர் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்ணுரிமைக்காக அஹிம்சா முறையில் போராடி வருவதற்காக அவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.
 
லேமா போவீ மத்திய லைபீரியாவில் பிறந்தவர். 6 குழந்தைகளின் தாய். அவர் லைபீரியப் பெண்களைத் திரட்டி அமைதி இயக்கத்தை துவங்கினார். அதன் மூலம் பெண்ணுரிமைக்காக அமைதியான முறையில் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்.
 
தவக்குல் கர்மன் ஒரு ஏமேனி அரசியல்வாதி, மனித உரிமை ஆர்வலர், பெண் பத்திரிக்கையாளர்கள் அமைப்பின் தலைவர். ஏமன் அதிபர் அலி அப்துல்லா சாலேவு்ககு எதிராக போராட்டங்கள் நடத்தி கைதானவர். மனித உரிமைக்காக போராடி வருபவர்.



[Continue reading...]

நீச்சலுடை மங்கைகளின் புதிய உலக சாதனை

- 0 comments
 

அவுஸ்திரேலியாவில் 357 பெண்கள் நீச்சலுடையுடன் சுமார் ஒரு மைல் தூரத்தற்கு கடற்கரையில் அணிவகுத்து நின்று புதிய உலக சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகர கடற்கரையிலே இப்புதிய சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. மேற்படி பெண்கள் நீச்சலுடையிலும் தலையில் இளம் சிவப்பு நிறத்திலான தொப்பியும் அணிந்தவாறு நின்றிருந்தனர்.

கின்னஸ் உலக சாதனைப் புத்தக வெளியீட்டு நிறுவன அதிகாரிகள் இந்நிகழ்வை மேற்பார்வை செய்தனர்.

இதற்கு முன்னர் கேமன் தீவுகளில் 331 பெண்கள் இணைந்து நிலைநாட்டிய சாதனையை இவர்கள் முறியடித்துள்ளதாக கின்னஸ் உலக சாதனை புத்தக நிறுவனத்தினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

'கோல்ட் கோஸ்ட் நகரமானது அழகான பெண்களையும் அழகிய கடற்கரைகளையும் கொண்டுள்ளது. இது நீச்சலுடை அணிவகுத்தலுக்கு மிகப் பொருத்தாமன இடமாகும்' என இதில் கலந்துக்கொண்ட ஹன்னா லின்ட்கிரேன் என்பவர் தெரிவித்துள்ளார்.

[Continue reading...]

அன்னை தெரசாவுடன் ஒப்புமைப்படுத்தி நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட சோனியா!

- 0 comments
 
 
 
 
 
அன்னை தெரசாவுடன் ஒப்புமைப்படுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு சர்வதேச விழிப்புணர்வு மையம் என்ற ஒரு அமைப்பு பரிந்துரைத்திருந்தது. ஆனாலும் சோனியாவுக்கு விருது கிடைக்கவில்லை.
 
 
 
சர்வதேச விழிப்புணர்வு மையம் என்ற ஒரு அமைப்பு சோனியா காந்தியின் பெயரை இந்த விருதுக்குப் பரிந்துரைத்திருந்தது. உலக அமைதியை விரும்புபவர் சோனியா காந்தி, சிறந்த சமூக சேவகர் என்றெல்லாம் அந்த அமைப்பு புகழாரம் சூடியிருந்தது.
 
 
 
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் மஜாஸ் முங்கேரி கூறுகையில், தான் மணமாகி வாழ வந்த இந்தியாவை தனது தாய்நாடாகவே தத்தெடுத்துக் கொண்டவர் சோனியா காந்தி (என்ன கொடுமை சார் இது, இந்தியா இவங்கள தத்தெடுதிச்சா? அல்லது இந்தியாவ இவங்க தத்தெடுதாங்களா? பாவம் இந்திய திருநாடு அனாதையா தான் இருந்து இருக்கு...!). இந்தியாவின் அமைதிக்காக மட்டுமல்லாமல், சர்வதேச அமைதிக்காக பாடுபட்டு வருபவர் சோனியா காந்தி. (இது உண்மை தாங்க ஒரு இனத்தையே அழிச்சு அமைதியை நிலைநாட்டலாம்ன்னு ஒரு புது வரலாறே எழுதினவங்களாச்சே!).
 
 
 
அன்னை தெரசாவுக்கு உள்ள அதே அளவிலான மரியாதை சோனியாவுக்கும் உள்ளது. நலிவடைந்த பிரிவினருக்காக ஓயாமல் உழைத்து வருகிறார் சோனியா. (ஒரு சின்ன திருத்தம் அன்னை தெரசா சொந்த பந்தமின்றி தவிக்கும் ஆதரவற்ற அனாதைகளை அரவணைத்து வாழவச்சாங்க. ஆனா, நம்ம சோனியாஜி சொந்த பந்தங்களோட வாழ்ந்திட்டு இருந்த தமிழினத்தை அழிச்சு ஆதரவின்றி அனாதையா நிக்க வச்சாங்க...)
 
 
 
சோனியா காந்தியின் அயராத முயற்சியால் அண்டை நாடுகளில் தீவிரவாதம் ஒழிந்துள்ளது. நட்பு நாடுகளாக அவை மாறியுள்ளன என்றார் முங்கேரி.
 
 
 
இருப்பினும் சோனியா காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கவில்லை. (அடுத்த வருடம் ராஜபக்சேக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு சிபாரிசு பண்ணுங்க).
 
 
 
உண்மையான அமைதிக்கு புது அர்த்தம் கற்றுக் கொடுத்தவர் மகாத்மா காந்தி. உலகுக்கே அகிம்சை என்ற மாபெரும் தத்துவத்தை கற்றுக் கொடுத்து அறிமுகப்படுத்தியவர் மகாத்மா காந்தி. அவருக்கே விருது கொடுக்காமல் பாலிட்டிக்ஸ் செய்து பாரபட்சமாக நடந்த அமைப்பு நோபல் அமைப்பு. இதற்காக அது சமீபத்தில் வருத்தம் கூட தெரிவித்திருந்தது என்பது நி்னைவிருக்கலாம்.




[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger