Saturday 8 October 2011

திமுக அதிமுக வேட்பாளர்களாக மாமியார் மருமகள் போட்டி

 
 
 
புதுக்கோட்டை நகரசபையில் அ.தி.மு.க தி.மு.க. வேட்பாளராக மருமகள் மாமியார் போட்டியிடுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
புதுக்கோட்டை நகராட்சி 24வது கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் மலர்விழி போட்டியிடுகிறார். ஏற்கனவே கவுன்சிலராக இருக்கும் இவருக்கு கட்சி சார்பில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
 
இவரை எதிர்த்து அவரது மாமியார் ஜோதி தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரது கணவர் லட்சுமணன், நகரசபை முன்னாள் தி.மு.க. உறுப்பினர் ஆவார்.
 
மேலும் ஜோதி அ.தி.மு.க. வேட்பாளர் மலர்விழியின் கணவர் முத்துவின் சின்னம்மாள். தேர்தல் பிரசாரத்தில் இருவரும் ஒருவரையொருவர் விமர்சித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். ஒரே வார்டில் அதுவும் பிரதான கட்சியின் வேட்பாளராக மாமியாரும், மருமகளும் போட்டியிடுவது தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger