Wednesday 24 July 2013

டி.வி. பெண் தொகுப்பாளர் மானபங்கம்

- 0 comments
மும்பையைச் சேர்ந்த தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் தனது தந்தை மற்றும் இரண்டு நண்பர்களுடன் கொல்கத்தா வந்திருந்தார். நேற்று முன்தினம் அவர்கள் உணவு வாங்குவதற்காக ஹவுரா ரெயில் நிலையம் அருகே காரை நிறுத்தினர். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி, காருக்குள் இருந்த பெண் தொகுப்பாளரின் கையைப் பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளான்.
[Continue reading...]

வேலை வாங்கி தருவதாக இளம்பெண்கள் விபச்சாரம்

- 0 comments
பெங்களூரில் வேலை வாங்கி தருவதாக
கூறி வெளிமாநில
இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய 9 பேர்
கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம்
இருந்து ரொக்க பணம்,
செல்போன்களை போலீசார் பறிமுதல்
செய்தார்கள்.
பெங்களூர் கெங்கேரி உபநகர்
விஸ்வேசுவரய்யா லே-அவுட்டில் உள்ள
வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசார
தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல்
கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார்,
வீட்டிற்குள்
புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.
மேலும் அங்கிருந்த 4
பேரை பிடித்து விசாரித்தார்கள்.
விசாரணையில் சந்திரசேகர் (வயது 33),
சிவு(25), கணேஷ்(25), மகேஷ்(23) ஆகியோர்
என்பதும், ஆந்திரா, மேற்கு வங்காள
மாநிலத்தை சேர்ந்த
இளம்பெண்களை பெங்களூரில்
வேலை வாங்கி தருவதாக
அழைத்து வந்து விபசாரத்தில் தள்ளியதும்
தெரியவந்தது.
மேலும் ஹைடெக் அளவில் விபசார தொழில்
நடத்தி லட்சக்கணக்கில் பணம்
சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, சந்திரசேகர் உள்பட 4
பேரையும் போலீசார் கைது செய்தார்கள்.
அவர்களிடம் இருந்து ரூ.10,500 ரொக்கப்
பணம், 4 செல்போன்கள் பறிமுதல்
செய்யப்பட்டன. 4 பேர் மீதும்
கெங்கேரி போலீசார்
வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இதுபோல, இந்திராநகர் 4-வது பிளாக்,
சி.எம்.எச் ரோட்டில் விபசார தொழில்
நடத்தி வந்த ராஜூவ்(22), ராஜேஷ்(23),
சுவாமி(22), கார்த்திக்(30), சாகர்(49) ஆகிய 5
பேரையும் குற்றப்பிரிவு போலீசார்
கைது செய்தார்கள். இந்திராநகர் போலீசார் 5
பேர் மீதும் வழக்கு பதிவு செய்தார்கள்.
கைதானவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம், 8
செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.
[Continue reading...]

நடிகை மஞ்சுளா உடல் தகனம்: நடிகர் நடிகைகள் அஞ்சலி Actress Manjula body cremated

- 0 comments
நடிகை மஞ்சுளா சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். நடிகர்கள் சிவகுமார், சத்யராஜ், சூர்யா, ராதாரவி, சந்திரசேகர், அதர்வா, மன்சூர் அலிகான், சிங்கமுத்து, ராஜா, நடிகைகள் ஜோதிகா, ஸ்ரேயா ரெட்டி, டைரக்டர்கள் சேரன், ஆர்.வி.உதயகுமார் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

மஞ்சுளா உடல் பிற்பகல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஏற்றப்பட்டு இறுதி சடங்கு நடந்தது. அப்போது அவரது கணவரும், நடிகருமான விஜயகுமார், மகள்கள் ப்ரீத்தா, ஸ்ரீதேவி, வனிதா ஆகியோர் கதறி அழுதனர்.
பின்னர் மஞ்சுளா உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு போரூரில் உள்ள மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு கணவரும் நடிகருமான விஜயகுமார் தீ மூட்டினார்.
மஞ்சுளா மறைவுக்கு நடிகர், நடிகைள் டுவிட்டரில் அனுதாபம் தெரிவித்து உள்ளனர்.

நடிகை குஷ்பு கூறியிருப்பதாவது:–
மஞ்சுளா இல்லாமல் வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியவில்லை. அவர் அழகான பெண் ரொம்ப நேசிக்கிறேன். எனது குழந்தைகள் அன்பான பாட்டியை இழந்துள்ளனர். எனக்கும் சுந்தர்சிக்கும் திருமணம் நடக்க காரணமாக இருந்தவர், என் சந்தோஷத்துக்கு காரணம் அவர்தான்.

நடிகை ராதிகா கூறி இருப்பதாவது:–
மஞ்சுளா அக்கா அன்பானவர். அவருடன் இருந்த இனிய நாட்களை நினைத்து பார்க்கிறேன். என் மேல் நிறைய அன்பு காட்டினார்.
தனுஷ் மனைவி ஐஸ்வர்யா சொல்கிறார், மஞ்சுளா எல்லோரிடமும் பாசமாக இருப்பார். நல்ல அம்மா சிறந்த தோழி.

நடிகை திரிஷா கூறியிருப்பதாவது:–
மஞ்சுளா எப்போதுமே என் நலன் விசாரிப்பார். என்னை வாழ்த்தவும் செய்வார். அவரை இழந்தது பெரிய வலி ஏற்பட்டுள்ளது. மஞ்சுளா குடும்பத்தினர் இந்த இழப்பில் இருந்து மீண்டு சகஜ நிலைக்கு வர இறைவனை வேண்டுகிறேன். என் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger