Sunday 26 February 2012

காமெடி வேடத்தில் நடிக்க எனக்கு ஆர்வம் -நடிகை ஸ்ரேயா…

- 0 comments
 
 
கவர்ச்சி ஆடையில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று சர்ச்சைகளிலும் வழக்குகளிலும் சிக்கிய ஸ்ரேயா இப்போது அவற்றில் இருந்து விடுபட்டு அமைதியாய் இருக்கிறார். தெலுங்கு, ஆங்கில படங்களில் பிசியாக நடித்து வரும் அவர் ஐதராபாத்தில் பேட்டி அளித்தார். அப்போது அனுபவ முதிர்ச்சியோடு தத்து வார்த்தமாக பேசினார். அவர் கூறியதாவது:-
காலம் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லும். நேற்று போல் இன்று இருப்பது இல்லை. இன்று போல் நாளை இருப்பது இல்லை. என்னை பொறுத்தவரை, தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழிகளில் திருப்தியான வேடங்களில் நடித்து முடித்து விட்டேன்.
ஆனாலும் முழுக்க காமெடி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது. எனக்கு பிடிக்காதது திகில் கதைகள் திகில் படங்களை நான் பார்ப்பதே இல்லை. அது போன்ற படங்களில் நடிக்கவும் மாட்டேன். பணம் கொடுத்து பார்க்க வரும் ரசிகர்களுக்கு இது போன்ற பயங்கர கதைகளை காட்டுவது உகந்தது இல்லை.
[Continue reading...]

மாதவனிடமிருந்து காசு அடிச்சாரா ஆர்யா?

- 0 comments
 


மணிரத்னத்தின் அலைபாயுதே படம் மூலம் சாக்‌லெட் பாயாக அறிமுகமாகி, இளம் பெண்களின் கனவு நாயகனாக மேடி எனும் பெயரில் வலம் வந்தவர் நடிகர் மாதவன். தொடர்ந்து ரன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்த மாதவன், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தார். சிறு தடுமாற்றத்திற்கு பிறகு, தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இப்போது லிங்குசாமியின் வேட்டை படத்தில் நடித்து உள்ளார்.

வேட்டை படத்தில் நடித்த அனுபவம் குறித்து மாதவன் நம்மிடம் பேசியதாவது, அலைபாயுதே படத்தில் அறிமுகமாகி, திரும்பி பார்ப்பதற்குள் பல வருஷம் உருண்டோடி விட்டது. நான் நடித்து சூப்பர் ஹிட் ஆன படங்களில் லிங்குசாமியின் ரன் படமும் ஒன்று. கிட்டத்தட்ட அந்த படம் வந்து 10 வருஷமாச்சு. இந்த பத்து வருஷத்துல, லிங்குசாமி பத்துபேர் கொண்ட எனர்ஜி வச்சிருக்கார். ஆனால் நான் பத்து கிலோ எடை வெயிட் போட்டிருக்கேன். ரொம்ப நாள் கழித்து தமிழில் எனக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைச்சுருக்கு.

வேட்டை படத்‌தின் கதையை லிங்குசாமி சொன்னபோது, நீங்க தான் இந்த படத்தில் நடிக்கணும், இல்லேனா, இந்த கதையை அப்படியே தூக்கி வச்சுடுவேன் என்று லிங்குசாமி கூறினார். அந்தளவுக்கு என் மேல் அவர் நம்பிக்கை வச்சிருந்தார். அவருக்காக நான் ஒப்புக்கொண்டு இந்த படத்தில் நடித்தேன். நான் எப்பவும் ஒன்று சொல்வேன். தமிழில் யங் சூப்பர் நடிகர்னா அது ஆர்யா தான். அவர் இந்த படத்துல என் தம்பியா நடிச்சுருக்காரு. படப்பிடிப்பில் எப்போதும் என்னை லந்து பண்ணிக்கிட்டே இருப்பான் ஆர்யா. இரண்டு பேரும் இந்தபடத்துல சூப்பரா நடிச்சிருக்கோம். படப்பிடிப்பின் போது எங்களுக்குள் எந்த போட்டியும் கிடையாது. எல்லாமே செட்டுக்கு வெளியே தான். குறிப்பாக சீட்டு விளையாடுவதில் தான் எங்களுக்குள் அதிகம் போட்டியிருக்கும். சீட்டு விளையாட்டுல ஆர்யா, என்கிட்டே இருந்து ரொம்ப காசு அடிச்சுட்டான். அதிகமுறை அவன் தான் ஜெய்ச்சிருக்கான்.

படப்பிடிப்பு தளத்திலேயே நான் தான் ரொம்ப சீனியர்னு எல்லோரும் என்னை பீல் பண்ண வச்சிடாங்க. லிங்குசாமி கூட மாதவன், செட்டிற்கு வந்த மம்முட்டி வந்த மாதிரி ஒரு உதறல் இருக்கும் என்று சொல்றார். ஆனால் செட்டில் நான் ரொம்ப ஜாலியாத்தான் இருப்பேன். மன்மதன் அம்பு சூட்டிங்கில் கமல் சார் கூட சேர்ந்து நடிச்சப்போ, அவர் என்னை குழந்தை மாதிரி பார்த்துக்கொண்டார். அதை என்னால் எப்பவும் மறக்கவே முடியாது.

தமிழில் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி என்று கேட்கீறாங்க...? நான் வருஷத்துக்கு ஒரு படம் பண்ணிகிட்டுதான் இருந்தேன். இடையில் ஏனோ, தானோ என்று சில படங்களில் நடித்து மாதவன் மரியாதையை குறைச்சிட்டேன். அப்புறம் தான் நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பிச்சேன். இந்தியில் கூட இரண்டு படத்தில் பிஸியாக இருக்கேன். அடுத்து இரண்டு தமிழ் படங்களில் நடிக்க உள்ளேன்.

தமிழ் சினிமாவிற்கு நான் அறிமுகமானதை விட இப்போது பலமடங்கு வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. ரசிகர்கள் ரொம்ப மாறிட்டாங்க, படத்தோட ரிசல்ட்ட கூட உடனே சொல்றாங்க. நான் சினிமாவில் அறிமுகமாகும் ‌போதே எனக்கு 30வயசு. அதற்கு அடுத்து எவ்வளவோ மாற்றங்கள். இப்பகூட என்னை பாருங்க, உடல் பருமனாக, முடி எல்லாம் நரைத்து விட்டது. காலம் போய்கிட்டே இருக்கு. அதேசமயம் எனக்கான ரசிகர்கள் எப்பவும் இருப்பாங்க என்று நம்புகிறேன்.
[Continue reading...]

இந்திய அணி படுதோல்வி - சச்சின் ஏமாற்றம்

- 0 comments
 

சிட்னியில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரின், முக்கிய லீக் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் 87 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா 19 புள்ளிகளுடன் பைனலுக்கு தகுதி பெற்றது.
 
இப்போட்டியில் முதலில் "பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்தது. வார்னர்(68), டேவிட் ஹசி(54), வேட்(56) அரைசதம் கடந்து அசத்தினர்.
 
எட்டக் கூடிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சேவக்(5) சோபிக்கவில்லை. 100வது சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சச்சின்(14) சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட்டானார்.
 
காம்பிர்(23), கோஹ்லி(21), தோனி(14), ரவிந்திர ஜடேஜா(8), அஷ்வின்(26), இர்பான் பதான்(22) தாக்குப்பிடிக்கவில்லை. இந்திய அணி 39.3 ஓவரில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வி அடைந்தது.
 
 
பைனல் வாய்ப்பு எப்படி?:
 
இந்திய அணி பைனலுக்கு முன்னேறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது இலங்கை(15 புள்ளி), இந்திய(10 புள்ளி)அணிகள் முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தில் உள்ளன.
 
இந்திய அணி அடுத்த போட்டியில்(பிப்., 28) இலங்கைக்கு எதிராக மிகப் பெரும் வெற்றியை "போனஸ் புள்ளியுடன் பெற வேண்டும்.
 
"போனசாக ஒரு புள்ளியை பெற தவறினால், பைனல் வாய்ப்பு கிடைக்காது. அதே நேரம் இலங்கை அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில்(மார்ச் 2) தோல்வி அடைய வேண்டும்.
 
ரன்ரேட்டிலும் முன்னிலை பெறும்பட்சத்தில் இந்தியாவுக்கு பைனல் வாய்ப்பு கிடைக்கலாம்.
[Continue reading...]

84வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு! ஹூகோ, தி ஆர்ட்டிஸ்ட் படங்களுக்கு 5விருது!!

- 0 comments
 

சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடந்தது. இதில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர். விருதுகள் விபரம் வருமாறு...

* ஹூகோ படத்திற்கு 5 விருது : ஹூகோ படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவு, கலை, விஷூவல் எபக்ட்ஸ், சவுண்ட் மிக்சிங் உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருது கிடைத்தது.

* தி ஆர்ட்டிஸ்ட் படத்திற்கும் 5 விருது : ஹூகோ படத்தை போன்று தி ஆர்ட்டிஸ்ட் படத்திற்கு 5 விருதுகள் கிடைத்ததுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த படம், இயக்குநர், இசையமைப்பு, ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருது கிடைத்துள்ளது.


* சிறந்த இயக்குநருக்கான விருது, "தி ஆர்ட்டிஸ்ட்" படத்திற்காக மைக்கேல் ஹசானாவிசியஸ்க்கு கிடைத்தது.


* சிறந்த படத்திற்கான விருது, "தி ஆர்ட்டிஸ்ட்" படத்திற்கு கிடைத்துள்ளது.


* சிறந்த நடிகருக்கான விருது, "தி ஆர்ட்டிஸ்ட்" படத்தில் நடித்த ஜீன் துஜார்தினுக்கு கிடைத்தது.


* சிறந்த நடிகைக்கான விருது, "தி அயன் லேடி" என்ற படத்தில் நடித்த மெரில் ஸ்ட்ரீப்க்கு கிடைத்தது.


* சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருது ஈரானின், "ஏ ஷெப்ரேஷன்" என்ற படத்திற்கு கிடைத்தது.


* சிறந்த துணை நடிகருக்கான விருதை, "பிகினர்ஸ்" படத்தில் நடித்த 82வயதான கிறிஸ்டோபர் பிளம்பர் பெற்றார். இவர் வெல்லும் முதல் ஆஸ்கர் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.


* சிறந்த துணை நடிகைக்கான விருது, "தி ஹெல்ப்" படத்தில் நடித்த ஆக்டிவா ஸ்பென்சருக்கு கிடைத்தது.


* சிறந்த விஷூவல் ‌எபெக்ட்ஸ் விருதுக்கான விருது ஹூகோ படத்திற்கு கிடைத்தது.


* சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருது, "ராங்கோ" படத்திற்கு கிடைத்தது.


* சிறந்த ஆவணப்படத்திற்கான விருது, "அன்டிபிட்டடு" படத்திற்கு கிடைத்தது.


* சிறந்த படத்தொகுப்புக்கான விருது, "தி கேர்ள் வித் தி டிராகன் டாட்டூ" என்ற படத்திற்காக கிரிக் பாக்ஸ்டர் மற்றும் அங்கூஸ் வால் ஆகி‌யோருக்கு கிடைத்தது.


* சிறந்த இசையமைப்பாளருக்கான விருது, "தி ஆர்ட்டிஸ்ட்" படத்தில் இசையமைத்த லூடுவிக்கிற்கு கிடைத்தது.


* சிறந்த திரைக்கதைக்கான விருது, "மிட்நைட் இன் பாரிஸ்" என்ற படத்திற்காக உட்டி ஆலனுக்கும், "தி டிஸடண்டன்ஸ்" என்ற படத்திற்காக அலெக்ஸாண்டர் பயினி ஆகிய இருவருக்கும் கிடைத்தது.
[Continue reading...]

ஓளி மயமான வாழ்த்துக்கள்....

- 0 comments
 
 
தமிழ்நாடு இருளில் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் தொழிற்சாலைகளுக்கு மாவட்ட வாரியாக வார மின்விடுமுறை நாட்களை மின்வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ளதாவது:
ஈரோடு மாவட்டத்திற்கு திங்கட்கிழமை, சென்னை தெற்கு மற்றும் திருப்பத்தூர் பகுதிகளுக்கு திங்கட்கிழமை, சென்னை வடக்கு மற்றும் மதுரை பகுதிகளுக்கு புதன்கிழமையும், கோவை பகுதிக்கு வியாழக்கிழமையும், நெல்லை, திருப்பூர் மற்றும் நீலகிரி பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமையும், திருச்சி, விழுப்புரம் மற்றும் வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சனிக்கிழமையும் தொழிற்சாலை வார மின்விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 27ம் தேதி முதல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்வெட்டு 2 மணிநேரமாக அதிகரிக்கப்படுவதாகவும், மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு 4 மணிநேரமாக மின்வெட்டு இருக்கும். மாநிலத்தில், நாள் ஒன்றுக்கு 12,500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், நமக்கு 8,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. தினந்தோறும் 4 ஆயிரம் மெகாவாட்ஸ் அளவிற்கு மின்பற்றாக்குறை ஏற்படுகிறது. ஆண்டுதோறும், மின்வெட்டு 10 சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பள்ளிகளுக்கு முடிந்தவரை தடையின்றி மின்சாரம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. காற்றாலை மின்உற்பத்தி ஜூன் மாதம் துவங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், அது துவங்கினால் மின்வெட்டு படிப்படியாக தளர்த்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தொழிற்சாலை மற்றும் வணிக மின் பயனீட்டாளர்களுக்கு, 40 சதவீத மின்வெட்டு.
* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு, 2 மணி நேர மின் தடை.
* நகர மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு, 4 மணி நேர மின் தடை.
* வணிக பயனீட்டாளர்களுக்கு, மாலை 6 மணி முதல், 10 மணி வரை மின் பயனீட்டு கட்டுப்பாடு.
* தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் மின்சார விடுமுறை.
இதில், தொழிற்சாலைகளுக்கான மின்சார வார விடுமுறை, வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
மின்சார வார விடுமுறை விபரம்:--------------------------------------------------
திங்கள் ஈரோடு மண்டலம் (ஈரோடு, நாமக்கல், கோபி, சேலம், ஓமலூர், ராசிபுரம், வாழப்பாடி மற்றும் மேட்டூர்)
செவ்வாய் சென்னை தெற்கு மண்டலம் (அடையார், கே.கே., நகர், போரூர், கிண்டி, தாம்பரம், அண்ணா நகர், அம்பத்தூர், ஆவடி), திருப்பத்தூர் பகிர்மான வட்டம் (திருப்பத்தூர், வாணியம்பாடி, பள்ளிகொண்டா, ஆம்பூர், குடியாத்தம், பேர்ணாம்பூர்,
புதன் சென்னை வடக்கு மண்டலம் (அண்ணா சாலை, மயிலாப்பூர், எழும்பூர், தி.நகர், தண்டையார்பேட்டை, பெரம்பூர், பொன்னேரி) மற்றும் மதுரை மண்டலம் (மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, பழநி, காரைக்குடி, சிவகங்கை)
வியாழன் கோவை மண்டலத்தில், திருப்பூர் மற்றும் நீலகிரி மின்பகிர்மான வட்டம் நீங்கலாக
வெள்ளி திருநெல்வேலி மண்டலம் (திருநெல்வேலி, வள்ளியூர், சேரன்மகாதேவி, திசையன்விளை, அம்பாசமுத்திரம், கடையநல்லூர், சிவகிரி, தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, ஆலங்குளம், சங்கரன்கோவில், கலிங்கப்பட்டி) மற்றும் திருப்பூர், நீலகிரி பகிர்மான வட்டம்
சனி திருச்சி, விழுப்புரம் மற்றும் வேலூர் மண்டலத்தில் திருப்பத்தூர் பகிர்மான வட்டம் நீங்கலாக
இந்த அடிப்படையில், மின்சார வார விடுமுறை அமலாகும் என, மின் வாரியம் அறிவித்துள்ளது.
இதில் ஞாயிற்றுக்கிழமையைக்காணோமே .அன்று எல்லா பக்கமும் விடுமுறையா?
இதில் அதாவது மின் தட்டுப்பாடு மற்றும் 10 மணி நேர மின் தடை தமிழ் நாட்டை உலுக்கி இருளாக்கிக்கொண்டிருக்கும்போதும் யாரவது அதிலும் குறிப்பாக பத்திரிகைகள் -ஊடகங்கள் முதல்வர் ஜெயலலிதா,மின் துறை அமைச்சரை குறை கூறி கண்டித்திருக்கிறார்களா?இல்லையே?

அதுவே கருணாநிதி ஆட்சிகாலத்தில் கருணாநிதியையும்,ஆற்காடு வீராசாமியையும் எப்படி எல்லாம் திட்டினார்கள்-நக்கலடித்து செய்திகள் வெளியிட்டார்கள்?அப்போதுஆங்காங்கே தலைகாட்டி இப்போது தலைவிரித்து ஆடும் மின் தடைக்கு அப்போது முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் மின் உற்பத்தி திட்டங்களே துவக்க வில்லை அதனால்தான் தட்டுப்பாடு என்று கருணாநிதி கூப்பாடு போட்டார்.புதிதாக மின் உற்பத்தி திட்டங்களும் துவக்கப்பட்டன.
இன்று ஜெயலலிதா கூறும் உடன்குடி திட்டமும் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டு வேலை ஆரம்பிக்கப் பட்டு .அய்யா வைகுண்டராஜன் மறைமுக எதிர்ப்பு வேலையால் ஆமைவேகத்தில் பணிகள் நடந்தன.இப்போது இவர் ஆள வந்து ஓராண்டு ஆகிறதே .அந்த திட்டத்தை ஏன் விரைவு படுத்த வில்லை? இன்னமும் கருணாநிதியை குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்?

கருணாநிதிதான் மின் தடையால் பதவியை இழந்து வீட்டில் இருக்கிறாரே?அவரை இன்னமும் மைனாரிட்டி என்று சொல்லிக்கொண்டிருக்காமல் ஆக வேண்டிய வேலையை பாருங்கள் அம்மையாரே.உங்களுக்[காவது]கு ஒளி மயமான எதிர்காலம் பிறக்க பிறந்தநாள்[தாமதமான] வாழ்த்துக்கள்.!


 
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger