Saturday 7 April 2012

3000 ஆண்டுகளானாலும் பிரபாகரன் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! - விக்ரமபாகு

- 0 comments



Prabhakaran
இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளானாலும் பிரபாகரன் நா மம் வரலாற்றில் வாழும். அதனை எவராலும் அழித்துவிட முடியாது, என இலங்கையின் நவசமாஜக் கட்சி பொதுச் செயலாளர் விக்ரமபாகு கருணாரத்ன கூறியுள்ளார்.

தாய்நாட்டு வளங்களை விற்பனைசெய்து பிழைப்பு நடத்தும் அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் ஒப்பிடுகையில் தாய்மண் மீது வேலுப்பிளை பிரபாகரன் அதிக பற்றுக் கொண்� �ிருந்தார் என்றும் அவர் புகழ்ந்துள்ளார்.

பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டி:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தான் பிறந்த மண்ணுக்காக விடுதலை வேண்டிப் போராடியவர். அவர் தாய் மண்ணுக்காக முள்ளிவாய் க்கால் வரை சென்று தனது உயிரையே கொடுக்கத் துணிந்தவர். அவர் உயிருக்குப் பயந்து ஓடி ஒளியவில்லை. அவரின் குடும்பமே மண்ணுக்காகத் தன்னைத் தியாகம் செய்தது. வரலாற்றில் அவருக்கு நிகரான ஒருவரைப் பார்ப்பது கடினம்.

பிரபாகரன் தமிழர்களின் உரிமைகளையும் அடையாளங்களையும், வளங்களையும் பாதுகாக்கவே போராட� ��னார். தான் பிறந்த மண்ணைக் காப்பதற்கு எந்த அபாயமுனையிலும் நின்று பாடுபட்டார்.

அவரின் கொள்கைகளை நாம் ஏற்கமாட்டோம். அவர் சிற்சில தவறுகளை இழைத்திருந்தாலும் அவர் ஒரு சிறந்த விடுதலைப் போராளி. அதனை நாம் ஒருபோதும் மறுக்க முடியாது.

அவர் தேசத்துரோகி அல்லர். பிரபாகரன் என்ற நாமம் இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும். இதனை எவராலும் அழித்துவிடமுடியாது. இது உண்மையும்கூட.

தாய்நாட்டு வளங்களை விற்பனைசெய்து பிழைப்பு நடத்தும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் ஒப்பிடுகையில் தாய்மண் � ��ீது பிரபாகரன் மிக அதிக பற்றைக் கொண்டிருந்தார்.

மக்களை வீதியில் இறக்கிப் போராடித்தான் தேசப் பற்றைக் காட்டவேண்டுமென்றில்லை. அது மனதில் இருந்தால்போதும்.

பொருள்களின் விலைகளைத் தொடர்ச்சியாக அதிகரித்து மக்களின் � �டிவயிற்றில் அடிக்கும் மகிந்த அரசு முதலில் நிர்வாக முறைமையைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஏனைய விடயங்களைப் பற்றிச் சிந்திக்கலாம் பார்க்கலாம்.

இவ்வாறு விக்கிரமபாகு கருணாரத்ன அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். ராஜபக்சேவை எதிர்த்து இவர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர் என்பது குறி ப்பிடத்தக்கது.


http://tamil70.blogspot.com

[Continue reading...]

மாரடைப்பில் தடுக்க கூடியதும், தடுக்க முடியாததும்! - மருத்துவப்பார்வை - வீடியோ

- 0 comments


hard attack
மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் காரணிகளை நாம் இரண்டு வகையாக பிரிக்கலாம்.
ஒன்று மாற்ற முடியாத காரணிகள் .அதாவது இயற்கையாகவே அமையப் பெற்ற காரணிகள் .இவற்றை நாம் மாற்ற முடியாது.உதாரணமாக ஆண்கள், வயதானவர்கள், இதயநோயால் பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்களைக் கொண்டவர்கள் போன்றோரில் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் சற்று அதிகம் ஆனாலும் இது சம்பந்தமாக நம்மால் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ள ம� �டியாது.
ஆனால் அடுத்த வகையான காரணிகள் கட்டுப் படுத்தக் கூடியவை.
மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் , ஆனால் நம்மால் கட்டுப் படுத்தக் கூடிய காரணிகள்.
நீரழிவு நோய் - இந்த நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்� ��்பம் அதிகம் ஆனாலும் இவர்கள் ஒழுங்காக மருந்துகளை பாவிப்பதன் மூலமும் , உணவுக் கட்டுப் பாட்டின் மூலமும் இந்த நோயை கட்டுப் பாட்டில் வைத்திருந்தால் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தைகுறைக்கலாம்.
புகைத்தல்- புகைத்தல் மாரடைப்பு ஏற்படுவதற்கு காரணமான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். ஆனாலும் புகைக்காத நபர்களில் கூட மாரடைப� ��பு ஏற்படலாம்.

அதிகரித்த கொழுப்பு /கொலஸ்ரோல் - சரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி மூலம் நமது கொலஸ்ரோலை கட்டுப்பாடாக வைத்திருப்பதன் மூலம் நமக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை குறைத்துக்  கொள்ள முடியும். அப்படியும் இது கட்டுப்படுத்தப் பட முடியாவிட்டால் கொலஸ்ரோலைக் குறைப ்பதற்கான மருந்துகள்பாவிக்கப்படலாம்.
உயர் குருதி அமுக்கம்(Hyper Tension) - இந்த நோய் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம். சரியான மருந்துகள் , உடற்பயிற்சி,உணவுக் கட்டுப் பாடு மூலம் இதையும் நாம் கட்டுப் பாடாக வைத்திருந்து மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை குறைத்துக் கொள்ள முடியும்.
மன அழுத்தம்(stressful life) - அதிகரித்த மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும்.தியானம் போன்ற ஆக்க பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தைக் குறைக்கலாம்.
அதிகரித்த உடற்பருமன்(Obesity)- நமது உடல் நிறையை கட்� �ுப்பாடாக வைத்திருப்பது அவசியமாகும்.


http://tamil70.blogspot.com

[Continue reading...]

சசிகலாவுடன் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று அரை மணி நேரம் சாமி கும்பிட்ட ஜெ

- 0 comments



jeya,sasi,sasikalaதங்கை சசிகலாவுடன் மீண்டும் இணைந்துள்ள முதல்வர் ஜெயலலிதா இன்று சசிகலாவுடன் சேர்ந்து கோட� �டூர்புரம் பி்ள்ளையார் கோவிலுக்குச் சென்று அரை மணி நேரம் மனமுருக சாமி கும்பிட்டார்.
தனக்கு எதிராக செய்தார் என்று கூறி சசிகலாவையும், அவரது குடும்பத்தாரையும் சில மாதங்களுக்கு முன்பு நீக்கினார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் சில நாட்களுக்கு முன்பு திடீரென எனக்கு அக்காத ான் முக்கியம், உறவினர்கள் தேவையில்லை. அக்காவுக்கு துரோகம் செய்தவர்கள் எனக்கும் துரோகம் செய்தவர்களே என்று உருக்கமாக ஒரு அறிக்கை வெளியிட்டார் சசிகலா.
இதனால் உருகிப் போன ஜெயலலிதா, சசிகலாவின் அறிக்கையை ஏற்று அவரை மீண்டும் சேர்த்துக் கொள்ள சம்மதித்தார். இதையடுத்து மீண்டும் போயஸ்தோட்டத்துக்குள் புகுந்தார் சசிகலா. அவரும், ஜெயலலிதாவும் அப்போது சந்தித்துக் கொண்டது உருக்கமாக இருந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஜெயலலிதாவும், சசிகலாவுமாக சேர்ந்து கோட்டூர்புரம் பிள்ளையார் கோவிலுக்குச் சென்றனர். அங்கு அரை மணி நேரம் இரண் டு பேரும் சேர்ந்து மனமுருக சாமி கும்பிட்டனர்.


http://tamil-paarvai.blogspot.com

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger