Friday 2 September 2011

தூக்குத் தண்டனை��ை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி ���ண்டனில் ஆர்ப்பாட்டம் (காணொளி, பட��்கள் இணைப்பு)

- 0 comments


இந்திய முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது தண்டனையை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி நேற்று (30-08-2011) லண்டனில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

தமிழ் ஒருங்கமைப்புக்குழு (Tamil Solidarity) குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்து, மாலை 3:30 மணி முதல் 7:00 மணிவரை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக தூக்குத் தண்டனை பெற்றுள்ள கைதிகளில் ஒருவரான முருகனின் சகோதரி, சகோதரன் உட்பட்ட குழுவினர் தூதரகத்திற்குள் சென்று தூக்குத் தண்டனையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவைக் கையளித்தனர்.

இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட தூதரக அதிகாரி, இவ்வாறு மனு கையளிக்க வரும்போது, மனுதாரரை வரவேற்று அந்த மனுவைப் பெற்றுக்கொள்ளுமாறு இந்திய அரசாங்க மேல்மட்டத்தில் இருந்து தமக்கு முன்னரே அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும், குறித்த மனுவை இந்திய அரசாங்கத்திற்கு சமர்ப்பிப்போம் எனவும் தூதரக அதிகாரி கூறினார்.

மனுக் கையளிப்பைத் தொடர்ந்து மூன்று உறவுகளின் விடுதலைக்காக தனது உயிரை ஈகம் செய்த தியாகச்சுடர் செங்கொடி அவர்களுக்கான அக வணக்கமும், மலர் வணக்கமும் இடம்பெற்றது.



இதனையடுத்து முருகனின் சகோதரி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் செயலாளர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தூக்குத் தண்டனைக் கைதிகளுடன் சிறையில் இருந்த குணா உட்பட பலர் உரையாற்றினர்.

ஏற்கனவே பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் அடங்கிய மனு இந்தியத் தூதரகத்திடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த மக்களிடமும் மனுவுக்கான கையொப்பங்கள் பெற்றப்பட்டதுடன், மக்கள் தொடர்ச்சியாக மனுக்களை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மூன்று மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த ஆர்ப்பாடத்தில் கலந்துகொண்டவர்கள் தூக்குத் தண்டனைக்கு எதிராகவும், இந்திய அரசாங்கும் தூக்குத் தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ச்சியாக முழக்கங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது படங்கள் அடங்கிய பதாகைகளுடன், ஈகச்சுடர் வீரமங்கை செங்கொடி அவர்களின் திருவுருவப் படத்தையும் தாங்கி நின்றதை அவதானிக்க முடிந்தது.

தூக்குத் தண்டனை, மரண தண்டனைக்கு எதிரான வேற்றின மக்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த அதேவேளை, வீதியால் சென்ற வேற்றின மக்கள் பலர் இந்தத் போராட்டம் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டதுடன், அவர்கள் மத்தியில் துண்டுப் பிரசுரங்களும் வழங்கல் செய்யப்பட்டன.







http://kaamakkathai.blogspot.com




  • http://kaamakkathai.blogspot.com


  • [Continue reading...]

    தியாகச்சுடர் செ��்கொடிக்கு வீரவண���்கம் (காணொளி, படங்கள் இணைப்பு)

    - 0 comments


    முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி கடந்த ஞாயிறன்று தீக்குளித்து உயிர் துறந்த காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தை சேர்ந்த செங்கொடி உடல் இன்று (31.8.2011) மாலை அடக்கம் செய்யப்பட்டது

    காஞ்சிபுரம் அருகே மங்கல்பாடியில் நடந்த இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    செங்கொடியின் நினைவை போற்றும் வகையில் மங்கல்பாடியில் உருவச் சிலையும் திறக்கப்பட்டது.

    வைகோ, பழ.நெடுமாறன், திருமாவளவன், கிருஷ்ணசாமி, சத்யராஜ், கொளத்தூர் மணி, சேரன்,ஜான்பாண்டியன், ஜி.கே, மணி, சீமான், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், நளினி தாயார் பத்மாவதியம்மா, உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

    பல முக்கிய பிரமுர்கள் இறுதிச்சடங்கில் எழுச்சி உரையாற்றினர்.















    http://kaamakkathai.blogspot.com




  • http://kaamakkathai.blogspot.com


  • [Continue reading...]

    மூவரின் தூக்கு க���றித்து சட்டசபையில் தீர்மானம் நி���ைவேற்றியதற்கு பாராட்டு தெரிவிக��கிறேன்

    - 0 comments


    திமுக தலைவர் கருணாநிதி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அன்றாடம் ஆட்களை குறி வைத்து கைது செய்கிறார்களே?

    ஏற்கனவே இருந்த நெருக்கடி கால நிகழ்ச்சிகள் இப்போது மீண்டும் தொடர்கின்றன.

    உள்ளாட்சி மன்றத் தேர்தல் வரப்போகிற நேரத்தில் உங்கள் கட்சியின் வெற்றியை இது பாதிக்காதா?

    திட்டமிட்டு இப்படிச் செய்கிறார்கள். இது பாதிக்கிறதா இல்லையா என்பது தேர்தல் முடிவுக்குப்பிறகு தான் தெரியும்.

    5ஆம் தேதி முதல் சட்டமன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஏற்கனவே இரண்டு முறை கேட்டும் ஒரே பகுதியில் உங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அமர இடம் தரவில்லை. இப்போது உங்கள் அணுகுமுறை எப்படி இருக்கும்?

    உங்களைப் போன்றவர்கள் என்ன கருத்துக்களை சொல்கிறீர்களோ அதன்படி நடக்கும்.

    பேரவையில் மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். அது பற்றி உங்கள் கருத்து என்ன?

    தமிழக மக்களிடையே எழுந்த எழுச்சிக்குப்பிறகு, தீர்மானம் நிறைவேற்றுகிற அளவுக்கு முன்வந்ததற்கு பாராட்டு தெரிவிக்கிறேன். ஆனால், அமைச்சரவையில் முடிவெடுக்க வேண்டும் என்பது முக்கியம்.

    மத்திய சட்ட அமைச்சர், சட்டசபை தீர்மானம் கட்டுப்படுத்தாது என்று சொல்லியிருக்கிறாரே?

    சட்ட அமைச்சர் என்ன சொன்னார் என்பது பற்றி சட்ட நிபுணர்களோடு கலந்து பேசித்தான் பதில் சொல்ல முடியும்.

    http://kaamakkathai.blogspot.com




  • http://kaamakkathai.blogspot.com


  • [Continue reading...]

    தூக்குதண்டனையை ���ிறுத்திவைத்ததற���கு எதிர்ப்பு தெ��ிவிக்கிறார் சுப���பிரமணிய சுவாமி

    - 0 comments


    முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றுமாறு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் செய்தியாளர்களிடம், ''இது மோசமான முன்னுதாரணம்.

    இதற்காக உயர்நீதிமன்றத்தை நாடியது தவறானது.

    இது உச்சநீதிமன்றத்தால் கண்டனத்துக்குள்ளாகும்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

    http://kaamakkathai.blogspot.com




  • http://kaamakkathai.blogspot.com


  • [Continue reading...]

    ரொறன்ரோவில் இடம��பெற்ற உலகத் தமிழ் பேரவையின் பொது���்கூட்​டம்

    - 0 comments


    தாயகத்தில் தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்கு எதிராகப் பக்கச்சார்பற்ற அனைத்துலக விசாரணைகளின் அவசியத்தை அனைத்துலக மட்டத்தில் வலியுறுத்தவும் உலகத் தமிழர் பேரவையின் பொதுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை, கனடா, ரொறன்ரோவில் இடம்பெற்றது.

    கனடா ஐயப்பன் ஆலய மண்டபத்தில் ஆவணி 28ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏழு மணியளவில் ஆரம்பமான, இக்கூட்டத்தில், முனைப்பாகச் செயற்பட்டு வருகின்ற, உலகெங்கும் பரந்து வாழும் தமிழரின் அமைப்பான , உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்கலாநிதி எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளாரும், உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்களும் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்டனர்.

    அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட பொதுக்கூட்டத்தில் முதலில் உரை நிகழ்த்திய அருட்கலாநிதி இம்மானுவேல் அடிகள், உலகெங்கிலும் வாழும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களை ஒன்றிணைப்பதன் மூலம் இப்பேரவையானது 2009 ஆம் ஆண்டு ஆவணி (ஆகஸ்ட்) மாதம் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் 14 நாடுகளிலுள்ள அமைப்புகளுடன் பிரதிநிதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டு, உலகத் தழிழ் பேரவைக்கான அரசியல் யாப்பும் உருவாக்கப்பட்டது.

    உலகத் தமிழ் பேரவையை சம்பிரதாய பூர்வமாக 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர், மற்றும் பிரித்தானிய எதிர்க்கட்சிகளின் வெளிநாட்டுக் கொள்கைக்கு பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் சர்வதேசமயமான, சுயாதீனமான, ஜனநாயகப் பண்புகளோடு அகிம்சாவழியில் இப்பேரவையின் கருத்துருவாக்கம் அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

    பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உலகத் தமிழர் பேரவை ஆரம்பிக்கப்பட்டதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

    உலகத் தமிழர் பேரவையின் உடனடியான இலக்குகளாக அன்று வதை முகாம்களில் வாடும் எமது உறவுகள் தாயகபூமியில் இயல்புநிலை வாழ்க்கைக்கு திருப்புவதற்கு பாடுபடுவதும், தொடர்ந்து இனப்படுகொலையின் குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்துவதற்கு உழைப்பதுவுமாகவும், மேலும் ஐந்து கண்டத்திலும் வாழும் தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பேரவையின் முதன்மை இலக்குகளாக வரையறுக்கப்பட்டன என தனது உரையில் தெரிவித்தார்.

    அத்துடன் அறுபத்தைந்து நாடுகளில் தனது தூதுவர்கள் ஊடாக தனது இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சிறிலங்கா அரசை புலம்பெயர்ந்த உலகத்தமிழர்கள் ஒவ்வொருவரும் தமிழ் மக்களின் தூதுவர்களாக அர்ப்பணிப்புடன், இதய சுத்தியுடன் இலட்சியத்தில் அசையாத பற்றுடையவர்களாகச் செயல்பட்டு தம்மாலான வழிகளில் சிங்கள் அரசின் சதிகளை முறியடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

    தொடர்ந்து உரையாற்றிய உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்கள் இதுவரைகாலமும் உலகத் தமிழர் பேரவை எமது தாயக மக்களுக்கு நீதி கிடைக்க, ஒடுக்கு முறைகளை நீக்க குறிப்பாக முள்ளிவாய்க்கால் அவலத்திற்க்கு பின்னர் ஆற்றிய செயற்திட்டங்களை விளக்கினார்.

    பிரித்தானிய சனல் நாலு ஊடக தொலைக்காட்சி போர்குற்ற ஆதாரங்களை எமக்காக பெற்று சர்வதேச ரீதியில் காண்பிக்கப்பட்டதால் ஏற்பட்ட சர்வதேச தாக்கங்கள் பற்றிக் கூறினார்.

    அதேவேளை இந்தவிதமான ஆதாரங்களை, இன்றைய தாயக நிலைமைகளை மனதில்கொண்டு சாதாரணமக்கள் கூட தம்மால் முடிந்தளவுக்கு தமது நாடுகளில் தமிழரல்லாதவர்கள் மத்தியில் எடுத்துச்செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    உலகத் தமிழர் பேரவையின் அழைப்பையேற்று ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் மண்டபத்தை நிறைந்திருந்தனர். மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு பேரவை பேச்சாளர்கள் விபரமாகவும் திருப்தியாகவும் பதில்களை வழங்கினர்.

    இறுதியாக பல்வேறு திட்டங்களையும் முன்னெடுக்க நிதி உதவியையும் நேரத்தையும் கோரினர். மக்களின் வசதியை கருத்தில்கொண்டு கனேடிய வங்கி ஒன்றில் கணக்கு ஒன்று ஆரம்பிக்கப்படுள்ளதாகவும் கனேடிய மக்கள் இதில் தாமாகவே இணைந்து, மாதாந்த கொடுப்பனவுகளை மேற்கொண்டு, தாயக உறவுகளின் அரசியல் சமூக விடுதலைக்கு உதவவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்கள்.

    மக்கள் மத்தியில் இந்தக் கோரிக்கைக்கு பலத்த ஆதரவு கிடைத்தது. மேலும் இப்பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து உழைத்த தன்னார்வத் தொண்டர்களும், பொதுமக்களுக்கு இச் செய்திகளையும் தகவல்களையும் வழங்கிய வானொலி, தொலைக்காட்சி பத்திரிகை போன்ற ஊடகங்கள் அனைத்துக்கும் உலகத் தமிழ் பேரவை பேச்சாளர்கள் தமது மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

    http://kaamakkathai.blogspot.com




  • http://kaamakkathai.blogspot.com


  • [Continue reading...]

    செங்கொடி என் குட���ம்பத்தில் ஒருத்தி: பேரறிவாளன்

    - 0 comments


    முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரின் தூக்கை ரத்து செய்யக்கோரி தீக்குளித்து இறந்த தோழர் செங்கொடியின் இறுதி அஞ்சலியில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கலந்துகொண்டார்.

    அஞ்சலியில் அற்புதம்மா, ''தோழர் செங்கொடியின் மரணம், நாம் காலம் பூரா எண்ணி, வருந்தக்கூடிய ஒரு நிகழ்வாக அமைந்துவிட்டது. இந்த இளம் வயதில் இவ்வளவு துணிவாக மூன்று தமிழர்களின் உயிரை காப்பதற்காக தன் உயிரை தீக்கிரையாக்கியிருப்பது நம் அனைவராலும் எண்ணிப்பார்க்க முடியாத ஒரு வேதனை.

    நேற்று வழக்கு மன்றத்தில் முடிவு தெரிந்ததும் நான் உடனே வேலூர் சிறைக்கு சென்றேன். எதுக்குமே கண்கலங்கமாட்டான் என் மகன். ஆனால் நேற்று என்னைப்பார்த்ததுமே கண்கலங்கினான்.

    எல்லாம் முடிந்துவிட்டது. இனிமே வெற்றிதான். வெற்றியை நோக்கி நாம் போகவேண்டியதுதாண்டா என்று சொன்னேன்.

    எனக்கு அதப்பற்றி வருத்தம் இல்லம்மா. அது தானா நடக்கும். முழுமையா மகிழ்ச்சியடையும் நிலை இல்லையே. அந்த பொண்ணு ( செங்கொடி) ஏம்மா இந்த வேலையை செய்தது. நான் காலம் முழுவதும் எண்ணி வருந்தக்கூடிய வேலையை செய்துவிட்டதே. இரவெல்லாம் என்னால தூங்க முடியல. இதுதான் என் மனசுல ஆறாத வடுவாக ஆகிவிடும்னு நினைக்கிறேன்.

    நம் குடும்பத்தில் ஒருத்தி ஆகிவிட்டாள். அவள் பெண்போராளி என்று சொன்னான்.

    என் மகன் விடுதலை ஆனால் கூட நாங்கள் முழுமையான மகிழ்ச்சி அடைய முடியாது'' என்று கூறினார்.

    http://kaamakkathai.blogspot.com




  • http://kaamakkathai.blogspot.com


  • [Continue reading...]

    சொறியச் சொறிய கட���த்துச் செல்லும் முடிவே இல்லாத சிரங்கு… ராஜிவ் கொ���ை (காணொளி)

    - 0 comments


    தனுவின் நெற்றியில் இருந்த பொட்டு ராஜீவ் காந்தி படுகொலை மீண்டும் எழும் சந்தேகங்கள்.

    மறைந்த பாராதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணம் தொடர்பாக திருச்சி வேலுச்சாமி குமுதம் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியில் இதுவரை வெளிவராத இரகசியங்கள் பலதை வெளியிட்டுள்ளார்.

    ராஜீவ்காந்தியைக் கொல்வதற்கு வெடிகுண்டு கட்டிச் சென்ற பெண் என்று கூறப்படும் தனுவின் நெற்றியில் உள்ள பொட்டை முக்கிய தடயமாக அவர் முன் வைத்தார்.

    வெடிகுண்டு வெடிப்பதற்கு சுமார் 15 நிமிடங்கள் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சிவராசனுக்கு அருகில் மாலையுடன் நிற்கும் தனுவின் நெற்றியில் பொட்டு இல்லை.

    வெடிகுண்டு வெடித்து சிதறிக்கிடக்கும் தனுவின் சிதறிய உடலின் நெற்றியில் பொட்டு காணப்படுகிறது. இரண்டு படங்களையும் அவர் பகிரங்கமாகக் காட்டினார். பின் முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பினார்.

    பொட்டு வைத்தபடி குண்டைக் காவிச்சென்ற தனுவின் நெற்றியில் இருந்த பொட்டு குண்டு வெடிப்பில் அழிந்துவிட்டதென்றால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் இறந்த பின்னர் அவருடைய நெற்றியில் பொட்டு வந்ததென்றால் அதில் என்ன நியாயம் இருக்கப்போகிறது..?

    கொலையாளி ஒரு தமிழ் பெண்தான் என்று காட்டுவதற்காக அந்தப் பொட்டு அணிவிக்கப்பட்டதா..?

    இல்லை சிதறிக் கிடக்கும் உடலம் தனுவின் உடலம் இல்லாமல் வேறொரு பெண்ணின் உடலமா..?

    இல்லை புகைப்படம் எடுத்த பின் தனு பொட்டு வைத்தாரா..? அப்படி வைத்தால் அந்த நேரம் அவருக்கு எங்கிருந்து வந்தது பொட்டு..?

    மேலும்…

    சம்பவம் நடைபெற்றபோது ஒரு ஒளிப்படம் எடுக்கப்பட்டதாகவும், அதை இன்றுவரை உள்துறை செயலராக இருந்த கே.ஆர்.நாராயணன் விசாரணைக்காக ஒப்படைக்கவில்லை என்றும், இந்த வழக்கின் மர்மமே அதில்தான் புதைந்துள்ளதாகவும், சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்றும் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து மேலும் பல கேள்விகளை அவர் எழுப்பினார்.

    கேள்வி 01. அன்று ராஜீவ்காந்தி விசாரணைகளுக்கு பொறுப்பாக இருந்த ப.சிதம்பரம் அந்த விசாரணை அறிக்கைகள் முற்றாக தொலைந்துவிட்டதாகக் கூறினார்.. இது சரியா..?

    கேள்வி 02. கம்யூனிஸ்டான தா. பாண்டியன் அந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர். அவர் ப.சிதம்பரத்திடம் இதுபற்றி கேட்டபோது மழுப்பலான பதிலையே கொடுத்துள்ளார் ஏன் மழுப்பினார்..?

    கேள்வி 03. அரசியலை விட்டு முற்றாக ஒதுங்குவதாகக் கூறிய நரசிம்மராவ் ராஜிவ் இறந்ததும் எப்படி மறுபடியும் பிரதமரானார்..?

    கேள்வி 04. கொலை நடைபெற்று விசாரணைகள் தொடங்கவில்லை அதற்குள் புலிகளே காரணம் என்று சுப்பிரமணியசாமி முடிவுகட்டி சொன்னது எப்படி..?

    கேள்வி 05. சாதாரண பஞ்சாயத்து தலைவராகக்கூட இல்லாத சுப்பிரமணியசுவாமிக்கு இன்றுகூட பூனைப்படையின் பாதுகாவல் எதற்கு..?

    கேள்வி 06. ராஜிவின் சொத்துக்களையும் அரசியல் பலத்தையும் அனுபவிக்கும் முக்கியமான நால்வர் இந்த விவகாரத்தில் தொடர் மௌனம் காப்பது எதற்கு..?

    கேள்வி 07. இந்த விவகாரத்தின் முக்கியமான சந்தேக நபர்கள் எல்லாம் உயர்ந்த பட்டம், பதவிகளில் தொடர்ந்து நீடிப்பது எப்படி..?

    கேள்வி 08. சந்திராசாமிதான் அன்றைய வெடிகுண்டு பெல்டை பூசை செய்து சிவராசனிடம் எடுத்துக் கொடுத்தார் என்ற விவகாரத்தை சொன்ன நபரை கார்த்திகேயன் ஏன் தாக்கி பற்களை உடைத்தார்?

    கேள்வி 09. கார்த்திகேயன் புலிகளை மட்டும் குற்றவாளிகளாகக் காட்டுவதற்கு மேல் விசாரணைகளை முன் நகரவிடாது ஏன் தடுத்தார்..?

    மேற்கண்ட ஒன்பது கேள்விகளும் மேலும் பல புதிய கேள்விகளுக்கு தூண்டுதலாக அமைகின்றன. நேற்று முன்தினம் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டபோது பேரறிவாளன் உட்பட மூவருக்கும் தூக்குத்தண்டனை வழங்கலாம் என்ற முடிவை மு.கருணாநிதியே எடுத்தார்…என்றார். அப்படியானால் அந்த முடிவை அவர் எப்படி எடுத்தார். அவருக்கு பின்னால் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இருந்தாரா..?

    கேள்வி 10. விடுதலைப்புலிகள் இதில் எப்படி மாட்டுப்பட்டார்கள்..? புதுமாத்தளன் இறுதி நேரத்திலாவது இந்த உண்மையை விடுவிக்காமல் அவர்கள் ஆடுகளத்தில் இறுகிய மௌனமாக இருநத்து ஏன்..?

    கேள்வி 11. தென்னாசிய அரசியலில் என்ன நடக்கிறது.. என்ன நடந்தது.. ஈழத் தமிழர்கள் இதில் ஏன் பகடைக்காய்கள் ஆனார்கள்..?

    இதோ திருச்சி வேலுச்சாமியின் பேட்டியைக் கேட்டுப் பாருங்கள்:



    http://kaamakkathai.blogspot.com




  • http://kaamakkathai.blogspot.com


  • [Continue reading...]

    தெய்வ திருமகள் - ��மீதா விமர்சனம்

    - 0 comments





    இயக்குனரின் மதராசபட்டினம் படத்தால் கவரப்பட்டு காண சென்றேன் தெய்வ திருமகள். மதராசப்பட்டினம், டைட்டானிக் படத்தை இன்ஸ்பிரேசனாக வைத்து எடுத்திருந்தாலும், அதன் நேர்த்தியான திரைக்கதை மற்றும் எமி ஜாக்சனின் அழகு மற்றும் நடிப்பு அதை கண்டுகொள்ளாமல் பார்க்க செய்தது. விக்ரமும் அப்படியே நம்பி அவர் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பார்.

    ஆனால் தெய்வ திருமகள் "ஐ ஆம் சாம்" படத்தை முக்கால்வாசி அப்படியே உருவி எடுக்கப் பட்டிருக்கிறது. அதன் ட்ரைலர் பார்த்தாலே புரியலாம். இப்படத்தின் திரைக்கதையை பார்த்தால், மதராசப்பட்டினம் படத்தின் திரைக்கதையை இவர் எழுதியிருப்பாரா? என்று சந்தேகிக்க தோன்றுகிறது.  நல்லவேளை நான் இன்னும் ஒரிஜினல் படம் பார்க்க வில்லை. இல்லையென்றால் என்னால் இந்த படத்தை கடைசி வரை பார்த்திருக்க முடியாது. விக்ரமின் ஹேர் ஸ்டைல் கூட ஒரிஜினல் படத்தின் ஹீரோவை போல உள்ளது.

    தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு சொந்த சரக்கு தீர்ந்து விட்டதை சமீப காலமாய் வரிசையாய் வரும் ஆங்கில படத்தின் காப்பி கொட்டைகளே உதாரணம். அந்த வகையில் வேங்கையை காப்பி அடிக்காமல் சொந்தமாய் எடுத்திருக்கும் ஹரி வைரமாய் மிளிர்கிறார்.

    எனக்கு விமர்சனம் எழுதும் போது அவ்வளவாய் கதை சொல்ல பிடிக்காது. இந்த படத்திற்கு அதை சொல்வதும் தேவை இல்லாதது.

    விக்ரமின் நடிப்பு கதைக்கு ஏற்றார் போல நடிக்காமல், அவார்டுக்கு ஏற்றார் போல் நடித்திருக்கிறார். அடுத்த உலக நாயகன் ;-) கஷ்டப்பட்டு நடிச்சதுக்கு ஒரு அவார்ட் கொடுத்திருங்கப்பா! பாவம்.

    அந்த குட்டி பெண்ணின் அழகையும், சந்தானத்தின் காமெடியையுமே அதிகமாய் நம்பியிருக்கிறார் இயக்குனர். இது சத்தியமாய் குழந்தைகளுக்கான படமில்லை.

    தெய்வ திருமகனா? தெய்வ திருமகளா? என்று இந்த படத்தின் தலைப்பை மையப் படுத்தி பிரச்சினை ஏற்படுத்தியவர்களுக்கு தெரியவில்லை பிரச்சினை தலைப்பில் இல்லை என்று.

    இதில் இந்த விசிலடிச்சான் பன்றிகளின் அலம்பல் வேறு. அடுத்த முறை போகும் போது அவர்கள் வாயில் கட்டையை எடுத்து கொண்டு போய் சொருகி விட வேண்டும்.

    தொப்புள் காட்சி, ஆபாசம் இல்லாமல் எடுப்பது குடும்ப படம் என்றால், குடும்ப படம் என்ற ஒரே காரணத்துக்காக படத்திற்கு போக விருப்பப் பட்டால் போகலாம்.

    படத்திற்கு போகும் போது மறக்காமல் ஒரு கர்ச்சீப் எடுத்துட்டு போங்க. கிளைமேக்ஸ் காட்சிகளில் ஒரே உணர்ச்சி திருவிழா நடக்கிறது. இயக்குனருக்கு சன் டீவில ஒரு ப்ரைம் ஸ்லாட் ஒதுக்கி கொடுத்தால் சிறப்பாய் ஒரு சீரியல் எடுக்கக் கூடிய ஒளிவட்டம் தெரிகிறது.


    நமீதா டச்: தெய்வ திருமகள், பரிதாபமான கோலம்.





    http://tamil-dinamalar.blogspot.com




  • http://tamil-dinamalar.blogspot.com


  • [Continue reading...]

    டெல்லி போலீஸின் ���ெல்லியை கலக்கிய டாக்டர் விஜய்

    - 0 comments
    [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger