Saturday 26 October 2013

சவுதியில் தடையை மீறி 60 பெண்கள் கார்களை ஓட்டிச் சென்றனர் 60 women drove cars in saudi arabia

- 0 comments

சவுதியில் தடையை மீறி 60 பெண்கள் கார்களை ஓட்டிச் சென்றனர் 60 women drove cars in saudi arabia

ரியாத், அக். 27-

சவுதி அரேபியாவின் சாலைகளில் பெண்கள் கார்களையோ இதர வாகனங்களையோ ஓட்டிச் செல்ல கூடாது என மதவாதிகள் தடை செய்துள்ளனர்.

இந்த தடையை மீறும் பெண்கள் போலீசார் மற்றும் மததலைவர்களால் தண்டிக்கப்பட நேரிடும் எனவும் அவர்கள் எச்சரித்தனர். கார்களை ஓட்டுவதால் பெண்களின் கருப்பை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் பயமுறுத்தினர்.

இந்த தடை அங்குள்ள பெண்ணியக்க வாதிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மதவாதிகளின் மிரட்டல்களுக்கு வலு சேர்க்கும் விதமாக அந்நாட்டில்  பெண்களுக்கு ஓட்டுனர் உரிமங்களும் வழங்கப்பட்டதில்லை.

இந்நிலையில், இந்த தடையை உடைத்தெறியும் விதமாக நேற்று கடை மற்றும் அலுவலங்களுக்கு கார்களை ஓட்டிச் சென்ற சுமார் 60 பெண்கள் தாங்கள் கார் ஓட்டிச் சென்ற புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ஓட்டுனர் உரிமங்களை வைத்துள்ள இவர்களில் பெரும்பாலான பெண்கள் போலீசாரின் கண்களிலும் மதவாதிகளின் கண்களிலும் மண்ணை தூவிவிட்டு தங்களது பெண்ணுரிமையை நிலைநாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

...

shared via

[Continue reading...]

ஒன்றுபட்ட ஆந்திராவை வலியுறுத்தும் கட்சிக்கு பாராளுமன்றத் தேர்தலில் ஆதரவு: ஜெகன் மோகன் parliamentary election that the partys support for a united Andhra Pradesh Jagan Mohan

- 0 comments

ஒன்றுபட்ட ஆந்திராவை வலியுறுத்தும் கட்சிக்கு பாராளுமன்றத் தேர்தலில் ஆதரவு: ஜெகன் மோகன் parliamentary election that the partys support for a united Andhra Pradesh Jagan Mohan

ஐதராபாத், அக். 26-

தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக ஆந்திராவில் இன்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஐதராபாத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பேசியதாவது:-

இது டெல்லியின் அகந்தைக்கும், தெலுங்கு மக்களின் சுய மரியாதைக்கும் இடையிலான போராட்டம். ஆந்திர மாநிலத்தை பிரிக்கும் முயற்சியை தடுப்பதற்கு வரும் மக்களவைத் தேர்தலில் நாம் 30 தொகுதிகளையும் மக்கள் நமக்கு வழங்க வேண்டும். ஒன்றுபட்ட ஆந்திராவை முன்னிறுத்தும் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கத் தயாராக இருக்கிறேன்.

நாம் 30 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அதன்பின்னர் யாரால் ஆந்திர மாநிலத்தைப் பிரிக்க முடியும் என்பதை பார்ப்போம். 30 தொகுதிகளில் வென்றால், ஒன்றுபட்ட ஆந்திராவை உருவாக்கக்கூடிய ஒரு பிரதமரை நம்மால் உருவாக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

[Continue reading...]

ஐ.பி.எல். போட்டியில் இருந்து புனே வாரியர்ஸ் அணி நீக்கம்: பி.சி.சி.ஐ. நடவடிக்கை Pune Warriors removed from Indian Premier League for payment default

- 0 comments

ஐ.பி.எல். போட்டியில் இருந்து புனே வாரியர்ஸ் அணி நீக்கம்: பி.சி.சி.ஐ. நடவடிக்கை Pune Warriors removed from Indian Premier League for payment default

சென்னை, அக். 26-

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் புனே வாரியர்ஸ் அணியை 2010–ம் ஆண்டில் சகாரா குழுமம் ரூ.1,702 கோடிக்கு விலைக்கு வாங்கியது. ஆனால் அந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ஆட்டங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் தங்கள் அணிக்கான ஆண்டு கட்டணத்தை 25 சதவீதம் குறைக்க வேண்டும் என்று புனே வாரியர்ஸ் அணி நிர்வாகம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்தது. இதனை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது.

மேலும் ஐ.பி.எல். போட்டியில் புனே வாரியர்ஸ் அணி தொடர ரூ.170.2 கோடியை வங்கி உத்தரவாத தொகையாக கட்ட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இது குறித்து பலமுறை ஞாபகப்படுத்தியும் சகாரா நிறுவனம் இந்த தொகையை கட்டவில்லை. இதற்கிடையில் இந்த ஆண்டு மே 21–ந் தேதி ஐ.பி.எல். போட்டியில் இருந்து புனே வாரியர்ஸ் அணி விலகுவதாக அந்த அணியின் உரிமையாளர் சுபத்ரா ராய் அறிவித்தார். ஆனால் இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு முறைப்படி கடிதம் அனுப்பவில்லை.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று (சனிக்கிழமை) நடந்தது. இதில் புனே வாரியர்ஸ் அணி பிரச்சினை பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது நிலுவைத் தொகையை செலுத்தாததால் புனே அணியின் ஐ.பி.எல். ஒப்பந்தத்தை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

...

shared via

[Continue reading...]

7 கிரகங்களுடன் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு New Solar Innovation With 7 planets

- 0 comments

7 கிரகங்களுடன் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு New Solar Innovation With 7 planets

லண்டன், அக் 26–

ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் எச்.டி. 10180 என்ற நட்சத்திரம் குறித்து கடந்த 6 ஆண்டுகளாக சிலியில் உள்ள லாசில்லா என்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 3.6 மீட்டர் டெலஸ்கோப் உதவியுடன் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் எச்.டி. 10180 நட்சத்திரத்தை சுற்றி ஒரு புதிய சூரிய குடும்பத்தை கண்டுபிடித்தனர்.

அதில் 7 கிரகங்கள் உள்ளன. அவற்றில் 5 கிரகங்கள் மிக தெளிவாக தெரிகின்றன. அதில் ஒன்று சனி கிரகம் போன்ற தோற்றத்தில் உள்ளது. இவை தவிர மிக சிறிய அளவில் வெளி கிரகங்களும் உள்ளன.

இந்த புதிய சூரிய குடும்பம் பூமியில் இருந்து 127 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. இது தற்போதுள்ள சூரிய குடும்பம் போன்றே உள்ளது. அது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாக விஞ்ஞானி கிறிஸ்டோபே லோவிஸ் தெரிவித்துள்ளார்.

...

shared via

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger