Thursday 19 September 2013

முஸ்லிம் உலக அழகிக்கான போட்டியில் நைஜீரிய பெண்ணுக்கு பட்டம் Nigerian wins Muslim only beauty pageant in Jakarta

- 0 comments

முஸ்லிம் உலக அழகிக்கான போட்டியில் நைஜீரிய பெண்ணுக்கு பட்டம் Nigerian wins Muslim only beauty pageant in Jakarta
Tamil News

ஜகர்த்தா, செப். 20-

இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவில் முஸ்லிம் பெண்களுக்கான உலக அழகிப்போட்டி புதன்கிழமை நடந்தது. உலகிலேயே அதிகம் முஸ்லிம்கள் வசிக்கும் நாடான இந்தோனேசியாவில் நடந்த இப்போட்டியில் உலக முழுவதும் உள்ள முஸ்லிம் நாடுகளில் இருந்து அழகிகள் வந்து கலந்துகொண்டனர்.

இஸ்லாம் மதக்கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக இப்போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியின் இறுதியில் 20 அழகிகள் தேர்வு செய்யபட்டனர். அதில் நைஜீரியாவை சேர்ந்த ஒபாபியி ஆயிஷா அஜிபோலா என்ற 21 வயது பெண் 'உலக முஸ்லிமா 2013' என்ற இந்த பட்டத்தை வென்றார்.

ஆன்லைன் மூலம் தேர்வு செய்யப்பட்ட 500 பேர்களில் இருந்து நைஜீரியாவின் அஜிபோலா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 2200 அமெரிக்க டாலர் பரிசளிக்கப்படுகிறது. மேலும் அவர் மெக்கா மற்றும் இந்தியா சென்று வர டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

இப்போட்டியை நடத்தக்கூடாது என்று முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
...
Show commentsOpen link

[Continue reading...]

அனுஸ்காவின் உத்தட்டை கடித்து முத்தம் கொடுத்து அசத்திய அமீர்கான் video

- 0 comments

அனுஸ்காவின் உத்தட்டை கடித்து முத்தம் கொடுத்து அசத்திய அமீர்கான் video
by abtamil

ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,

அனுஸ்காவின் உத்தட்டை கடித்து முத்தம் கொடுத்து அசத்திய அமீர்கான் video

Show commentsOpen link

[Continue reading...]

ஓடிப்போன காதல் ஜோடி கவுரவக் கொலை: ஊர்மக்கள் முன்னிலையில் நடந்த கொடுமை eloping couple honour killing in Haryana

- 0 comments

அரியானாவில் ஓடிப்போன காதல் ஜோடி கவுரவக் கொலை: ஊர்மக்கள் முன்னிலையில் நடந்த கொடுமை eloping couple honour killing in Haryana
Tamil NewsToday,

ரோட்டாக், செப். 19-

அரியானா மாநிலம் ரோட்டாக் அருகே உள்ள கர்னாவதி கிராமத்தைச் சேர்ந்த நிதி பாரக் (20) என்ற பெண் தர்மேந்தர் பாரக் (23) என்ற வாலிபரைக் காதலித்துள்ளார். ஒரே கல்லூரியில் படித்து வந்த இவர்களின் காதலுக்கு பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை இருவரும் ஊரைவிட்டு ஓடிவிட்டனர்.

பெற்றோர் விசாரித்ததில் டெல்லியில் அவர்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை ஊருக்கு வரும்படி அழைத்த பெண்ணின் பெற்றோர், எந்த தொந்தரவும் கொடுக்காமல் திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.

இதை நம்பிய நிதியும், தர்மேந்தரும் நேற்று ஊருக்கு வந்தனர். ஆனால் சில மணி நேரத்தில் அவர்களை நிதியின் குடும்பத்தினர் கடுமையாக அடித்து உதைத்துள்ளனர். அப்போதும் ஆத்திரம் தணியாத அவர்கள், நிதியை ஊர் மக்கள் முன்னிலையில் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தனர். அவரது காதலனின் கை, கால்களை உடைத்து சித்ரவதை செய்தனர். பின்னர் தலையை துண்டித்து கொன்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் கர்னாவதி கிராமத்திற்கு வந்தபோது பெண்ணின் உடலை உறவினர்கள் எரித்துக்கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓடிவிட்டனர். பின்னர், பாதி எரிந்த நிலையில் நிதியின் உடலையும், தர்மேந்தரின் உடல் பாகங்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து, பெண்ணின் தந்தை, மாமன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர்.

பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த கவுரவக் கொலை அரியானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

...
Show commentsOpen link

[Continue reading...]

காதல் கணவருடன் சேர்ந்து வாழ கைக்குழந்தையுடன், 3 ஆண்டாக போராடும் இளம்பெண் woman three years struggle police complaint

- 0 comments

காதல் கணவருடன் சேர்ந்து வாழ கைக்குழந்தையுடன், 3 ஆண்டாக போராடும் இளம்பெண் woman three years struggle police complaint
Tamil NewsToday, 05:30

சென்னை, செப். 19–

தண்டையார்பேட்டை சிவாஜி நகரில் வசித்து வருபவர் சுகுணா. இவர் நேற்று தனது கைகுழந்தையுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:–

எனது வீட்டு அருகில் வசித்து வந்த காசிராம் என்பவர் 4½ ஆண்டுக்கு முன்னர் என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் கோவைக்கு என்னை அழைத்துச் சென்று குடும்பம் நடத்தினார். பெண் குழந்தை பிறந்தது. இதன் பின்னர் சென்னைக்கு வந்து அவரது வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். அப்போது எனது கணவரை வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு அவரது குடும்பத்தினர் என்னையும், எனது குழந்தையையும் தாக்கினர்.

2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றோம். இது தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் சமாதானப்படுத்திய பின்னர் கணவர் என்னை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். 3 மாதங்கள் அங்கு தங்கியிருந்த நான் கொடுமைகளை அனுபவித்தேன். தற்போது கணவர் என்னை பிரிந்து சென்று விட்டார். அவரை திருமணம் செய்து குழந்தை பெற்ற பின்னர் 3½ ஆண்டுகளாக அவருடன் சேர்ந்து வாழ்வதற்கு போராடி வருகிறேன். எனது தாயார் கூலி வேலை செய்து என்னை காப்பாற்றி வருகிறார்.

நானும் எனது குழந்தையும் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே இது சம்பந்தமாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாடு அதில் கூறப்பட்டுள்ளது.

...
Show commentsOpen link

[Continue reading...]

இளம்பெண் பாலியல் புகாரில் கைது செய்ய நடவடிக்கை: கருப்பசாமி பாண்டியன் முன் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு young girl molested arrest action karuppasamy pandian bail manu

- 0 comments

இளம்பெண் பாலியல் புகாரில் கைது செய்ய நடவடிக்கை: கருப்பசாமி பாண்டியன் முன் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு young girl molested arrest action karuppasamy pandian bail manu

Tamil NewsToday, 05:30

நெல்லை, செப்.19-

நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மீது நெல்லை டவுணை சேர்ந்த தமிழரசி என்ற இளம்பெண் போலீசில் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. சுமித் சரணிடம் கொடுத்துள்ள மனுவில், நான் அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் கருப்பசாமி பாண்டியனை சந்தித்து பேசினேன். இதைத் தொடர்ந்து அவரது அழைப்பை ஏற்று குற்றாலம் பங்களாவுக்கு, நானும் என்னுடைய தந்தையும் சென்றோம்.

அங்கு எனது தந்தையை அறையை விட்டு வெளியேற்றி விட்டு கருப்பசாமி பாண்டியன் ஆபாசமாக பேசினார். மேலும் பாலியல் தொந்தரவு கொடுத்து, கொலை மிரட்டலும் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

டி.ஐ.ஜி. சுமித் சரண் உத்தரவின் பேரில் குற்றாலம் போலீசார் விசாரணை நடத்தி கருப்பசாமி பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர் மீது பாலியல் தொந்தரவு, பெண்ணுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவரது உதவியாளர் அல்லல் கார்த்திக் மீதும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து கருப்பசாமி பாண்டியனும், அவரது உதவியாளரும் கேரளா தப்பிச் சென்று விட்டதாக தெரிகிறது.

அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர். இந்த நிலையில் கருப்பசாமிபாண்டியன் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "தி.மு.க உள்கட்சி தேர்தல் தொடர்பாக விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா மீது தலைமைக்கழகத்தில் புகார் செய்தேன்.

இந்த அரசியல் விரோதம் காரணமாக என் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
...
Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger