Saturday 5 May 2012

படைபலப் போட்டி: குழம்பிய ஆசியக் குட்டையில் மீன் பிடிக்கும் அமெரிக்கா

- 0 comments


அமெரிக்கா தனது உலக வல்லாதிக்கத்தைப் பாதுக்காக்க தனது படை பலத்தைக் கூட்டுகிறது. அமெரிக்காவிற்கு ஈடு கொடுக்க சீனா தனது படை பலத்தைப் பெருக்குகிறது. சீனாவின் படை பலத்திறு ஈடு கொடுக்க இந்தியா தனது படைபலத்தைப் பெருக்கிறது. இந்தி� �ாவிற்கு ஈடு கொடுக்க பாக்கிஸ்த்தான் தனது படை பலத்தைப் பெருக்குகிறது. சீனாவின் படை பல அதிகரிப்பு ஒஸ்ரேலியா முதல் ஜப்பான ஈறாக மத்திய கிழக்கு நாடுகள் வரை ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது. சின்னஞ்சிறு சிங்கப்பூரில் இருந்து பென்னம் பெரிய ஜப்பான் வரை படைக்கலன்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்குகின்றன. அமெரிக்கா இலாபமீட்டுகிறது. சிங்கப்பூர் உலகின் பத்தாவது பெரிய படைக்கலன ் இறக்குமதி செய்யும் நாடு. வியட்னாம், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஒஸ்ரேலியா ஆகிய நாடுகள் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கிக் குவிக்கின்றன.

தீர்க்கப்படாத ஆசியப்பிரச்சனைகள்
இந்தியா சீனாவிடை எல்லைப் பதட்டம். தீர்க்க ப்படாத எல்லைப் பிரச்சனை. அப்படியே இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானிடையும். தென் கொரியாவை அழிக்க நினைக்கும் வட கொரியா. ஜப்பானின் வர்த்தகக் கடற்போக்குவரத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைக்கும் சீனா. தென் சீனக் கடல் முழுவதும் (மற்ற நாட்டுக் கடற்படுக்கை உட்பட) தனது என அடம்பிடிக்கும் சீனா. இப்படி ஒரு கொதி நிலை ஆசியா எங்கும். ஏபரல் மாதம் வட கொரியா, இந்தியா, பாக ்கிஸ்த்தான் ஆகிய மூன்று நாடுகளும் தங்கள் நீண்ட தூர ஏவுகணைகளைச் பரீட்சித்துப் பார்த்தன.

 இந்திய சீனப் போட்டி
சீனா தனது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் தனது தடங்கலற்ற கடல் வழி வழங்கற்பாதையை உறுதி � ��ெய்யவும் தனது பாது காப்ப்புச் செலவீனங்களை அதிகரித்தது. 2011இல் சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக ஒஸ்ரேலியா தனது தேசிய பாதுகாப்புக் கொள்கையை மீளாய்வு செய்தது. மொத்த ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள வறியவர்களிலும் அதிக வறியவர்களைக் கொண்ட இந்தியா உலகின் மிகப்பெரிய படைக்கலன் இறக்குமதி நாடாகியது. கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியா தனது அணுப் படைக்கலன்களை இரட்டிப்பாக்கியுள்ளத� ��. பாக்கிஸ்த்தானிடம் இந்தியாவிலும் பார்க்க அதிகமான அளவு அணுப் படைக்கலன்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. பாக்கிஸ்தானிடம் உள்ள அணுப்படைக்கலனகள் தீவிரவாதிகள் கைக்குப் போய்ச்சேரும் ஆபத்து உள்ளது. 2015இல் இந்தியாவின் பாதுகாப்புச் செலவீனம் 80 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் இந்தியா நூற்றுக்கு மேற்பட்� � கடபடைக் கப்பல்களை தனது படைக்குச் சேர்க்கவிருக்கிறது. இந்தியா சீனாவிலும் பார்க்க கிட்டத்த்தட்ட இரு மடங்கு தனது கடற்படையை நவீன மயப்படுத்தச் செலவு செய்கிறது. சீனாவின் படை பலம் இந்தியாவிலும் இரண்டு மடங்கு என்று சொல்லலாம். சில அம்சங்களைப் பொறுத்தவரை மூன்று மடங்கு என்றும் சொல்லலாம். ஆனால் கடற்படை வலிமையில் சினாவிற்கு இந்தியா பெரும் சவாலாக இருக்கிறது. சீனப் பொருள ாதாரம் இந்தியாவினதிலும் பார்க்க மூன்று மடங்கு பெரியது. சீனாவிற்கு படைக்கலன் அதிகரிப்புப் போட்டியில் இந்தியா ஈடாகமாட்டாது என்பது பலரது கருத்து. ஆசிய நாடுகளின் 2011இல் தமது பாதுகாப்பிற்கு செலவிட்ட தொகை

சீனாவின் தாழ்வு மனப்பான்மை

நேட்டோப் படைகள் அடிக்கடி உலகின் பல பகுதிகளிலும் சென்று படை நடவடிக்கைக்களில் ஈடுபட்டு வருகின்றன. சீனா 1979இல் வியட்னாமில் மூக்க� �டை பட்டதன் பின்னர் வேறு எங்கும் போரில் ஈடுபட்டதில்லை. சீனாவின் கடற்படை ஒரு கடற் போரில் கூட ஈடுபட்டதாக சரித்திரம் இல்லை. தனது படையின அனுபவமற்றவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மை சீனாவிற்கு உண்டு. சீனா தனது படை பலத்தைப் பரீட்சிக்கவும் கள அனுபவம் பெறவும் முயலுமா என்ற அச்சம் பலரிடம் உண்டு. சுவிட்சலாந்தின் நிலப்பரப்பிலும் முன்று மடங்கு நிலப்பரப்புக் கொண்ட இந்தியாவின் � ��ருணாச்சலப் பிரதேசத்தை தன்னுடையது என்கிறது சீனா. இந்தியாவின் எல்லைகளுக்குள் பல இடங்களில் சீனா புகுந்து படை நிலைகளை அமைத்துள்ளது.

 ஆசியாவும் மக்களாட்சியும்
ஆசியர்கள் மக்கள் தொகையிலும் உழைப்பிலும் மூளைத் திறனிலும் ஐரோப்பா வாழ் ஐரோப்பியர்களையும் வட அமெரிக்கா வாழ் ஐரோப்பியர்களையும் மிஞ்சக் கூடியவர்கள். இவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வதாலும் சரியா� �� ஆட்சியாளர்களையோ சரியான ஆட்சி முறைமையையோ கொண்டிருக்காததால் பின் தங்கி விடுகிறார்கள். சீனாவில் அரச முதலாளித்துவம். இந்தியாவில் மக்களாட்சி முறைமை. ஆனால் மக்களாட்சி முறைமைக்குத் தேவையான அரசியல் கட்சிகளுக்குள் மக்களாட்சி முறைமை இல்லை. கட்சிகள் தனிப்பட்ட குடும்பங்கள் அல்லது தனிப்பட்ட குழுவினர்களின் பிடியில் இருக்கின்றன. கட்சிக்குள் மக்களாட்சி முறைமை சரியாக � ��ல்லாவிடில் மக்களாட்சி முறமை வேலை செய்யாது. ஊழல் நாட்டில் தவிக்க முடியாத ஒரு அம்சமாகிவிட்டது.

ஊர் இரண்டுபடக் கொண்டாடுக் கூத்தாடியாக அமெரிக்கா
சீனா தனது படைத்துறையை அபரிமிதமாகப் பெருக்க ஆசிய-பசுபிக் நாடுகள் சீனாவிற்கு அஞ்சி அமெரிக்காவிடம் படைக்கலனகளை வாங்குவதுடன் தமது பாதுகாப்பிற்கு அமெரிக்காவை நாடுகின்றன. அமெரிக்க இந்த நாடுகளுடன் தனது வர்த்தகத்த� �� வளர்த்தும் படைத்துறை ஒத்துழைப்பை அதிகரித்தும் தனது உலக ஆதிக்கத்தைப் பெருக்குகிறது.

http://tamilsexstorys2u.blogspot.com


[Continue reading...]

பின் லாடன் கொல்லப்படு ஒராண்டின் பின்னர்????

- 0 comments


ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டு இன்றுடன் ஒரு ஆண்டு ஆகிவிட்டது. இன்று அது இரு வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று இன்னும் அவரது இயக்கமான அல் கெய்தா அழிவு விளைவிக்கக்� ��ூடிய ஒரு தீவிரவாத இயக்கமா? மற்றது ஒசமா பின் லாடன் கொலை பராக் ஒபாமாவின் வெற்றிக்கு வழிவகுக்குமா? பின் லாடன் கொல்லப்படதைத் தொடர்ந்து இன்னொரு அல் கெய்தா தலைவர் அன்வர் அல் அவ்லாக்கியும் கொல்லப்பட்டார். இவர் அமெரிக்காவில் பிறந்த இசுலாமிய மதபோதகர். பின்னர் அதியா அப் அல் ரஹ்மான் என்ற ஒரு முக்கிய அல் கெயதா தலைவரும் கொல்லப்பட்டார்.

பின் லாடன் கொலைக்கு பராக் ஒபாமா ப ெருமைப்பட முடியாது அவரது இடத்தில் ஜிம்மி காட்டர் இருந்திருந்தாலும் ஒசாமா பின் லாடனைக் கொல்ல உத்தரவிட்டிருந்திருப்பார் என்கிறார் பராக் ஒபாமாவுடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவிருப்பவராகக் கருதப்படும் மிட் ரூணி. பின் லாடன் கொலை செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு நாளில் பராக் ஒபாமா ஆப்கானிஸ்த்தானிற்கு திடீர்ப் பயணத்தை மேற்கொண்டு அங்கிருந்த அமெரிக்கர்களு� �்கு உரையாற்றவிருக்கிறார். இது அவரது தேர்தல் உத்தி. இனி வரும் நாட்களில் அமெரிக்கத் தேர்தல் களத்தில் பின் லாடன் கொலை பெரிதாக அடிபடலாம்.

பின் லாடன் இருக்கும் போதே அவர் தனது இயக்கத்தை ஒரு franchise இயக்கமாக மாற்றிவிட்டார்.  அதன் படி அல் கெய்தாவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தமது நடவடிக்கைகளை தமது எண்ணப்படி மேலிடத்தின் கட்டளைக்குக் காத்திராமல் செய்ய முடியும். அமெரிக� ��க இரட்டைக் கோபுரத் தாக்குதல்களுக்குப் பின்னர் பின் லாடன் கடுமையாகத் தேடப்பட்டதால் அவரால் தனது இயக்கத்தினருடன் தொடர்பாடல்கள் மேற்கொள்வது கடினம் என்ற நிலை ஏற்பட்டது. இதைச் சமாளிக்க தனது இயக்கத்தை ஒரு franchise இயக்கமாக மாற்றியிருந்தார் பின் லாடன். பின் லாடன் கொல்லப்பட்ட பின்னர் இந்த franchise இயக்கங்களுக்கிடையே ஒற்றுமை குறைந்து விட்டது. அல் கெய்தாவின் தற்போதைய தலைவரான � ��ன்வர் அல் அவ்லாக்கி இந்த இயக்கங்களை ஒருங்கிணைத்து செயற்படுத்த மிகுந்த சிரமத்தை எதிர் நோக்குகிறார். சோமலியா, யேமன், ஈராக் போன்ற நாடுகளில் செயற்படும் அல் கெய்தாவினர் அன்வர் அல் அவ்லாக்கியின் தலமையில் திருப்தியடையவில்லை. அரபு வசந்தத்தில் ஈடுபட்ட போராளிகள் அல் கொய்தாவின் கொள்கைகளால் கவரப்பட்டவர்களுமல்ல. அமெரிக்க எதிர்ப்பை முக்கிய நோக்கமாகக் கொண்டவர்களுமல்ல� ��்.

அய்மன் அல் ஜவாஹ்ரி  Ayman al-Zawahri தற்போது அல் கெய்தாவின் தலைவராகக் கருதப்படுகிறார். அவரது தற்போதைய பிரச்சனை அமெரிக்கவிற்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதிலும் பார்க்க  அமெரிக்க ஆளில்லா விமானங்களிடமிருந்து தன்னையும் தனது அமைப்பையும் பாதுகாப்பதே. ஆப்கானிஸ்த்தானில் பதுங்கும் அல் கெய்தா Al Qaeda in the Arabian Peninsula (AQAP) அரபு குடாநாட்டில் அல் கெய்தா என்னும் பெயரில் யேமனில் வளர்� �்து வருகிறது. யேமனில் அதிக ஆளில்லா விமானத் தாக்குதல் நடாத்த அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ பராக் ஒபாமாவிடம் அனுமதி கோரியுள்ளது.

இலண்டன் ஒலிம்பிக் மைதானத்தில் அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் பாணியில் தற்கொலை விமானத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் ஒலிம்பிக் மைதானக் கூரைகளில் ஆறு இடங்களில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. இது அல் கெய்தா பற்றிய பயம் இன்னும் மேற்கு நாடுகளை ஆட்டிப் படைக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

பின் லாடன் கொல்லப்பட்ட பின்னர் 2011-ம் ஆண்டு ஜூலையில் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயின் முன்னாள் தலைவரும் தற்போதைய அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலருமான லியோன் இ பானெற்றா பாக்கிஸ்த்தான் பயணம் மேற் கொண்டிருந்தபோது "We are within reach of strategically defeating al-Qaeda" தந்திரோபாய ரீதியில் நாம் அல் -கெய்தாவைத் தோற்கடிக்கும் நிலையை அண்மித்து விட்டோம்" என்றார். ஆனால் 2012 ஏப்ரல் 15 திகதி ஆப்கானிஸ்த்தானில் பல இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் அவரது கூற்றை மறுதலித்தன.

அல் கெய்தா பலவீனப்பட்டுவிட்டது என்று மேற்கு நாடுகளின் படைத்துறை ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்த போதும் மேற்கு நாடுகளுக்கு குறிப்பாக ஐக்கிய அமெரிக்கவிற்கு எதிரான இசுலாமியர்களின் எதிர்ப்பு உணர்வு மாறியதாகவோ அல்லது குறைந்ததாகவோ இல்லை. அதே வேளை அல் கெய்தவிற்கு அமெரிக்க ஆதரவு இசுலாமிய நாடுகளான எகிப்து, ஜோர்தான், துருக்கி மற்றும் பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளில் குறைவாகக் காணப்படுவதாக வாஷிங்டன் போஸ்ற் பத்திரிகையின் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

பின் லாடனின் கடைசிக் கனவு 9-11 இரட்டைக் கோபுரத் தாக்குதல் போல் அமெரிக்கவின் பொருளாதாரத்தி� ��்கு நெற்றியடி கொடுக்கக் கூடிய ஒரு தாக்குதல் நடத்த வேண்டும் என்பதே. பின் லாடன் இறந்து ஒரு ஆண்டு கடந்தும் அக்கனவை அல் கெய்தா நிறைவேற்றவும் இல்லை பின் லாடனின் கொலைக்குப் பழிவாங்கவுமில்லை. இது அல் கெய்தாவின் பலவீனத்தின் எடுத்துக் கட்டா?

http://tamilsexstorys2u.blogspot.com


[Continue reading...]

கணவன் இறப்பதை SKYPEஇல் பார்த்த மனைவி

- 0 comments



ஆப்கானிஸ்த்தானில் நிலை கொண்டிருக்கும் ஐக்கிய அமெரிக்காவின் படையில் மருத்துவப் பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு அதிகாரி அமெரிக்காவில் இருக்கும் தனது மனைவியுடன் SKYPEஇல் காணொளி மூலமாக உரையாடிக் கொண்டிருக்கும் போ து இறந்துள்ளார். Capt. Bruce Kevin Clark என்பவருக்கே இந்த பரிதாபகர இறப்பு நடந்துள்ளது.

குடும்பத்தில் மிகுந்த அக்கறையுடையவரானவர் 43 வயதான Capt. Bruce Kevin Clarkஎன்று அவரின் மனைவியில் சகோதரர் தெரிவித்துள்ளார். படையில் சேவை செய்து கொண்டிருக்கும் போது  பல விருதுகளையும் பதக்கங்களையும் Capt. Bruce Kevin Clark பெற்றிருந்தார்.
குடும்பத்துடன் Capt. Bruce Kevin Clark


Capt. Bruce Kevin Clark இன் இறப்புத் தொடர்ப்பாக அமெரிக்கப் படையினர் தீவிர விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.

http ://tamilsexstorys2u.blogspot.com


[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger