Monday 19 September 2011

கூடங்குளம் போரா��்டம் வெற்றியை நோக்கி....!!!

- 0 comments



கூடங்குளம் அணு மின் நிலையம் பிரச்னை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கும், முதலவர் ஜெயலலிதாவும் தொலைபேசியில் பேசினர்.

அப்போது, பிரதமர் அலுவலக மத்திய இணையமைச்சர் நாராயணசாமி கூடங்குளம் வருகை தர இருப்பதாக முதல்வரிடம் பிரதமர் தெரிவித்தார்.


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அந்த கடிதத்தில், தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழு டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்து, கோரிக்கை மனு ஒன்றை அளிக்க இருப்பதாகவும், அதற்கு தேதி மற்றும் நேரத்தை ஒதுக்கி தரும்படியும் கேட்டுக்கொண்டார்.


மேலும், இந்த பிரச்னையில் சுமூக தீர்வு ஏற்படும் வரையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிகள் எதையும் மேற்கொண்டு தொடர வேண்டாம் என்றும் பிரதமரை முதல்வர் ஜெயலலிதா அந்த கடிதத்தின் மூலம் கேட்டுக்கொண்டார்.


அந்த கடிதத்தை படித்த பின், பிரதமர் மன்மோகன் சிங் திங்கட்கிழமை மாலை சுமார் 6.30 மணி அளவில் முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.


அப்போது, முதல்வர் ஜெயலலிதா, இந்தியாவிலேயே அறிவில் சிறந்த முதல்வர் என்றும், இந்த பிரச்னை குறித்து அவரது வழிகாட்டுதல் தனக்கு தேவை என்றும் பிரதமர், முதல்வர் ஜெயலலிதாவிடம் கூறினார்.

அதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், சுமார் 100 பேருடன் ஆரம்பித்த போராட்டம், நாளுக்கு நாள் வளர்ந்து, தற்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதில் பங்கு கொண்டுள்ளார்கள் என்று தெரிவித்தார்.


மத்திய இணையமைச்சர் நாராயணசாமி வருகை...


பின்னர் பிரதமர் மன்மோகன்சிங் தொடர்ந்து பேசும்போது, இந்த பிரச்னை தொடர்பாக, பிரதமர் அலுவலக மத்திய இணையமைச்சர் நாராயணசாமியை அனுப்பி வைப்பதாகவும், அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.


முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியை கூடங்குளம் சென்று, அந்த பகுதி மக்களுடன் கலந்து உரையாடுமாறு கேட்டுக்கொண்டதுடன், ஏற்கனவே தனது கடிதத்தில் தெரிவித்தபடி, தமிழ்நாட்டு குழுவை பிரதமர் சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கித் தரும்படி கேட்டுக்கொண்டார்.


அதற்கு பிரதமர் பதில் கூறுகையில், தான் ஐக்கிய நாடுகள் சபை கூட்டம் தொடர்பாக நியூயார்க் செல்ல இருப்பதாகவும், வரும் 27-ம் தேதி திரும்பி வந்தவுடன், அதற்கான நேரம் ஒதுக்கித் தருவதாகவும் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசும்போது, அறிவில் சிறந்த முதல்வர் ஜெயலலிதா, இந்த பிரச்னை தொடர்பாக வழிகாட்டும்படி மீண்டும் கேட்டுக்கொண்டார். பிரதமரின் ஒத்துழைப்புக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துக்கொண்டார் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : விகடன். 


http://sugamananeram.blogspot.com



  • http://sugamananeram.blogspot.com

  • [Continue reading...]

    பரல்கள்--லிமெரிக���கும் பிறவும்!

    - 0 comments


    உங்களுக்குத் தத்தீச்சி மகரிஷி பற்றித் தெரியுமா?! அகில இந்திய வானொலி பண்பலையில் ஒரு கண்தான விளம்பரத்தில், கர்ணனையும், தத்தீச்சியையும் உதாரணமாகக் கூறுகிறார்கள்.இது நாள் வரை கேள்விப்படாத பெயராக இருக்கிறதே எனத் தேடிப் பார்த்தேன்(நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாமோ என்னவோ).விவரம் கிடைத்தது. தேவ-அசுர யுத்தம் நடந்தபோது தேவர்கள் தங்கள் ஆயுதங்களையெல்லாம், பாதுகாப்புக்காக தத்தீச்சி ரிஷியிடம் ஒப்படைத்துச் சென்றனர்.

    அசுரர்களால் அவற்றைக் கவர முடியவில்லை.பலகாலம் சென்றும் தேவர்கள் திரும்பி வந்து ஆயுதங்களைப் பெற்றுக் கொள்ளாததால், மகரிஷி அவற்றைப் புனிதத் தண்ணீர்ப் பானையில் போட்டுக் கரைத்துக் குடித்துவிட்டார்!

    சிறிது காலம் சென்று தேவர்கள் வந்து கேட்ட போது நடந்ததைக் கூறி, ஆயுதங்களைப் பெறத் தன்னைக் கொன்று எலும்புகளை எடுத்துக் கொள்ளும்படிக் கூறினார்.தேவர்கள் மறுக்கவே,அவர் தீயில் பாய்ந்து உயிர் நீத்தார்.பிரம்மா அங்கு வந்து அவரது எலும்புகளிலிருந்து ஆயுதங்கள் செய்து தேவர்களுக்கு அளித்தார்.முதுகெலும்பில் செய்யப் பட்டதே இந்திரனின் வச்சிராயுதம்.

    விளம்பரத்தில் ,தெரியாத ரிஷியின் பெயர் சொல்வதற்குப் பதில்,நாம் அறிந்த குமணன்,சிபிச் சக்கிரவர்த்தி எவர் பெயரையாவது சொல்லியிருக்கலாமோ?ஆனால் இதிலும் ஒரு நன்மை.நான் தேடித் தெரிந்துகொண்டேன் ஒரு புதிய தகவலை!!

    .....................................................

    எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா?!

    மணமாகி ஏழாண்டுகள் கழிந்தால்,அந்த' ஏழாண்டு அரிப்பு ' வந்து விடுகிறது. பழைய உறவில் அலுப்புத்தட்டிப்,புது உறவில் நாட்டம் பிறக்கிறது.இதுவே மண விலக்குக்குக் காரணமாகிறது.இதைத்தடுக்கச் சைனாவில் ஒரு திட்டம் கொண்டு வந்திருக்கிறார்களாம்.

    செய்ய வேண்டுவது என்னவென்றால்,கணவனோ,மனைவியோ,தபால் இலாகா புதிதாக அறிமுகம் செய்திருக்கும் சிறப்பு அஞ்சல் உறை ஒன்று வாங்கி அதில் தன் மனதில் இருக்கும் காதலையெல்லாம் கொட்டி ஒருகடிதம் எழுதி அனுப்பி விட்டால்,அக்கடிதம் ஏழாண்டுகளுக்குப் பிறகு பெறுநருக்குக் கிடைக்கும். அதைப் படிப்பவர் "அந்த நாள்ஞாபகம் நெஞ்சிலே வந்து" பிரச்சினைகள் இருந்தால் தீர்ந்து விடும் என்பது நம்பிக்கை!

    எனக்கு ஒரு சந்தேகம்---பெறுநர்(அனுப்புநரும்) பழைய விலாசத்தில் இல்லாமல் வேறு இடத்துக்குப் போயிருந்தால் என்ன செய்வார்கள்?

    …………………………………..

    லிமெரிக் எழுதி ரொம்ப நாளாச்சு! (சிந்து கவி-நன்றி நிரூ)

    இதோ-


    "சிங்காரி சரசு விட்டா ஒரு லுக்கு

    ரங்குவுக்கு ஏறிச்சு ஒரே கிக்கு

    போனான் உடனே அவ வீடு

    தங்கினான் சில நாள் அவளோடு

    இப்ப அவன் கையில் திருவோடு!"



    http://oruwebsite-tamil.blogspot.com



  • http://oruwebsite-tamil.blogspot.com

  • [Continue reading...]

    பரமக்குடி சொல்ல��ம் செய்திகள்

    - 0 comments


    பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்த 6 மனிதர்களுக்கு அஞ்சலிகள். பரமக்குடியில் தலித்துகள் (பள்ளர்கள்?) 6 பேர் காட்டுமிராண்டித்தனமாக போலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது அரசு முன்னின்று நடத்தும் வன்முறை என்கிறார்கள். அரசு தரப்பில் செயல்பட்ட காவல்துறையினர் அத்தனை பேருமே தேவர்களா எனத் தெரியவில்லை. காமராஜர் காலத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கொலை வழக்கு சமயத்தில், தேவர்கள் கை ஓங்கியிருந்த பகுதிகளில் உள்ள அனைத்து காவல்துறையினரும் தலித்துகளாகவே நியமிக்கப்பட்டார்கள் என்ற ஒரு பேச்சு உண்டு. உண்மையா எனத் தெரியவில்லை. [...]

    http://tamilhot.blogspot.com



  • http://tamilhot.blogspot.com

  • [Continue reading...]

    தேவர் அல்ல அசுரர���

    - 0 comments


    பரமக்குடி படுகொலைகளை முன்வைத்து இணையத்தில் நடைபெறும் விவாதங்களில் கீழ்கண்ட கேள்விகளும் கவலைகளும் ஆலோசனைகளும் முன்வைக்கப்படுகின்றன. 'தெய்வத் திருமகன் என்று தேவர் அழைக்கப்படும்போது, கொண்டாடப்படும்போது ஏன் அநாவசியமாக இம்மானுவேல் சேகரனுக்கும் அதே பெயரை வைக்கவேண்டும்? எதற்காக இம்மானுவேலுக்குக் குரு பூஜை செய்யவேண்டும்? எதற்காக தேவர்களை அநாவசியமாக உசுப்பேத்தி தூண்டிவிடவேண்டும்? இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்துவதுதான் நோக்கம் என்றால் அமைதியாகச் செல்லவேண்டியதுதானே? போயும் போயும் ஜான் பாண்டியன் போன்ற ஒரு ரவுடியின் கீழ்தான் தலித்துகள் திரளவேண்டுமா?' 'பரமக்குடிக்கு எதற்கு எல்லாரும் [...]

    http://tamilhot.blogspot.com



  • http://tamilhot.blogspot.com

  • [Continue reading...]

    வினாடியும் நொடி��ும் ஒன்றா? - தமிழ் படும் பாடு

    - 0 comments



    தமிழர்கள் அந்த காலத்திலேயே பல் துறைகளிலும் கில்லாடிகளாக விளங்கினர் என்பது பலருக்கு தெரியாது.. கணிதம், பொறியியல், கட்டடவியல், மருத்துவம் என அவர்கள் தொடாத துறை இல்லை.

    தஞ்சை பெரிய கோயில் இன்றும் நம்மை பிரம்மிக்க வைக்கிறது என்றால், அதற்கு காரணம் அன்றைய தொழில் நுட்பம்..

    அன்றைய கண்க்கீடுகள், அளவைகள்,  உலோகவியல், கட்டடம் கட்டும் முறை பற்றியெல்லாம் இன்னொரு பதிவில் விரிவாக அலச உத்தேசம்..

    அன்று கூறிய சில, கால வெள்ளத்தால் எப்படி மாறி இருக்கிறது என்பதை மட்டும் ஷார்ட் அண்ட்  ஸ்வீட்டாக இப்போதைக்கு பார்க்கலாம்..

    ___________________________________________________


    ஓர் ஆங்கில புத்தகதை பெருமைக்காக புரட்டியபோது, சில ஆங்கில சொற்களுக்காக அகராதியை நாடினேன்.. செகண்ட் என்ப்தற்கு அதில் அர்த்தம்,  வினாடி அல்லது நொடி என்று இருந்தது..

    வினாடியும் நொடியும் ஒன்றுதான் என நினக்கிறோம்.. தப்பு..

    கண் சிமிட்டும் நேரம் என்கிறோமே... இரண்டு முறை கண்  சிமிட்டும் நேரம்தான், நொடி என வரையறை செய்துள்ளனர்...  எனவே செகண்ட் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையானது நொடிதான்.

    வினாடி என்றால்?

    14.4 செகண்ட் சேர்ந்தால் ஒரு வினாடி.

    60 வினாடி = ஒரு நாழிகை ( 24 நிமிஷம் )  ( சித்த நாழில வந்துட்றேன் என்ற வார்த்தை பிரயோகத்தை சிலர் கேட்டு இருக்கலாம்.)

    60 நாழிகை = ஒரு நாள்


    கால வெள்ளத்தில் பொருள் சிதைந்து விட்டது... அர்த்த மாறிய வேறு சிலவற்றை பார்க்கலாம்
    ____________________________________

    வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை... போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை..

    வாக்கு கற்றவனுக்கு  வாத்தியார் வேலை.. போக்கு கற்றவனுக்கு போலீஸ் வேலை என்பது இப்படி மாறி விட்டது

    ______________________________________________________


    காக்கா பிடித்தல்...

    கைய காலை பிடிச்சி வேலையை முடித்தேன் என்பது , கால்கையை பிடித்தேன் என்பதுதான் காக்கா பிடித்தேன் என மாறி விட்டது... காக்கா வலிப்பு என்ப்தையும் கவனிக்கவும்..

    ____________________________________________


    சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

    கிராமங்களில் பார்க்கலாம்.. தலையில் பானையை சுமந்து செல்பவர்கள் , தலை மேல் ஒரு துணியை வாட்டமாக அமைத்து அதற்கு மேல் பானையை வைப்பார்கள்..இந்த துணிக்கு சும்மாடு என்று பெயர்..

    ஒருவனுடைய குடுமி என்னதான் அடர்த்தியாக  இருந்தாலும் அது சும்மாடு ஆக முடியாது.
    சோழியன் குடிமி சும்மாடு ஆகுமா என்பதுதான் திரிந்து சோழியன் குடுமி சும்மா ஆடுமா? என மாறி விட்டது

    ****************************




    http://tamilfashionshow.blogspot.com



  • http://tamilfashionshow.blogspot.com

  • [Continue reading...]

    மலைவாழ் மக்களுக��கு மின் விசிறிக்குப் பதில் மின் அடுப்பு: ஜெயலலிதா

    - 0 comments


    மலைவாழ் மக்களுக்கு மின் விசிறிக்குப் பதில் மின் அடுப்பு ஜெயலலிதா "இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டத்தில், மலைவாழ் மக்களுக்கு, மின் விசிறிக்கு பதில் மின் அடுப்பு வழங்கப்படும்," என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக, அவர் நேற்று வெளியிட�ட அறிக்கை:

    இந்த மேலும்படிக்க

    http://photo-actress-hot.blogspot.com



  • http://photo-actress-hot.blogspot.com

  • [Continue reading...]

    திருச்சி இடைத்த��ர்தலில் திமுக போட்டி இல்லையா?

    - 0 comments


    திருச்சி இடைத்தேர்தலில் திமுக போட்டி இல்லையாதிருச்சி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்பது குறித்து யோசித்து முடிவு செய்யப்படும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

    இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியதாவது:-

    திருச்சியில் அந்த தொகுதியில் வெற்றிபெற்று, அமைச்சராக பதவியே�்க வருகின்ற நேரத்தில் சிறுபான்மை மேலும்படிக்க

    http://photo-actress-hot.blogspot.com



  • http://photo-actress-hot.blogspot.com

  • [Continue reading...]

    அரக்கோணம் ரயில் ���ிபத்தின்போது டிரைவர் குடிபோதைய��ல் இல்லை

    - 0 comments


    அரக்கோணம் ரயில் விபத்து சம்பவத்தின்போது சென்னை கடற்கரை-வேலூர் விரைவு ரயில் டிரைவர் ராஜ்குமார் குடிபோதையில் இல்லை என்று தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரி டிஎஸ்பி பொன்ராமு நேற்று தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

    அரக்கோணத்தை அடுத்த சித்தேரியில் மேலும்படிக்க

    http://photo-actress-hot.blogspot.com



  • http://photo-actress-hot.blogspot.com

  • [Continue reading...]

    உள்ளாட்சி தேர்த��் - அ.தி.மு.க.வுடன் கம்யூனிஸ்டு கட்��ியினர் பேச்சுவா���்த்தை

    - 0 comments


    உள்ளாட்சி தேர்தல் - அ.தி.மு.க.வுடன் கம்யூனிஸ்டு கட்சியினர் பேச்சுவார்த்தைஉள்ளாட்சி தேர்தலில் இடம் பங்கீடு குறித்து முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் அ.தி.மு.க. தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ��கில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பிரதிநிதிகள் தனித்தனியாக மேலும்படிக்க

    http://photo-actress-hot.blogspot.com



  • http://photo-actress-hot.blogspot.com

  • [Continue reading...]

    டி.வி. நிகழ்ச்சியில் மனைவி, மாமியாரிடம் அடிவாங்கி��வர் டி.வி நிறுவன��் மீது வழக்குத்தொடர முடிவு

    - 0 comments


    டி.வி. நிகழ்ச்சியில் மனைவி மற்றும் மாமியாரிடம் அடிவாங்கியவர் அந் நிகழ்சியை ஒளிபரப்பிய டி.வி நிறுவனம் மீது வழக்குத்தொடர முடிவு செய்துள்ளார்.

    சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் பிரின்ஸ் (வயது 40), இவர் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தார். மேலும்படிக்க

    http://photo-actress-hot.blogspot.com



  • http://photo-actress-hot.blogspot.com

  • [Continue reading...]

    தினபலன் - 19-09-11

    - 0 comments


    மேஷம்:
    வருமானத்தை அதிகரிக்கும் விஷயங்களில் நாட்டம் செல்லும். உங்களின் செயல்பாடுகளை பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படலாம். பிறரை நம்பி எந்தக் காரியத்தையும் ஒப்படைக்காமல் அனைத்தையும் நீங்களே செய்ய முற்படுவீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். சுபகாரிய மேலும்படிக்க

    http://photo-actress-hot.blogspot.com



  • http://photo-actress-hot.blogspot.com

  • [Continue reading...]

    எனது கணவருக்கு ப��� பெண்களுடன் தொட��்பு - அ.தி.மு.க., வே���்பாளர் பரஞ்ஜோதி மீது, அவரது இரண்��ாவது மனைவி பரபரப்பு புகார்

    - 0 comments


    எனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு -  அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதி மீது, அவரது இரண்டாவது மனைவி பரபரப்பு புகார்திருச்சி மேற்கு சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏ.,வும், சுற்றுச்சூழல் அமைச்சராகவும் இருந்த மரியம்பிச்சை, சாலை விபத்தில� இறந்ததால், திருச்சி மேற்கு சட்டசபைத் தொகுதிக்கு, அக்டோபர் 13ல் இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க., சார்பில்,இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பரஞ்ஜோதி மேலும்படிக்க

    http://photo-actress-hot.blogspot.com



  • http://photo-actress-hot.blogspot.com

  • [Continue reading...]

    கமலஹாசனுடன் பிர��ல பதிவர்கள் சந்திப்பு...!!!

    - 0 comments



    ஒரு பெரிய பதிவர் சந்திப்பு நடக்கப்போகுது இங்கே கமலஹாசன் தலைமையில, அதுவும் மொக்கை சந்திப்பு. பேச்சு ஆரம்பிக்குது.

    கோமாளி செல்வா : நான் ஒரு சின்ன கதை சொல்லி கூட்டத்தை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் சொல்லட்டுமா?

    பன்னிகுட்டி : டேய் பன்னித்தலையா நெல்லை பதிவர் சந்திப்புல உன் கதையை கேட்டுட்டு நான் இனி நெல்லை பக்கமே வரமாட்டேன்னுட்டு சித்ரா அமெரிக்காவுக்கும், தமிழ்வாசி காசிக்கும் ஓடிபோயிட்டாங்க, ஏண்டா நாங்க நல்லாயிருக்குறது உனக்கு பிடிக்கலையா பிச்சிபுடுவேன் பிச்சி அப்பிடியே ஓரமா போயி ஒன்டிக்க...

    இ அ பாபு : அண்ணே சின்னபையன் ஆசைபடுறான் சொல்லிட்டு போகட்டுமே...

    பன்னிகுட்டி : யாரு இவன் சின்னப்பையனா..? விரல  குடுத்தா கடிக்கதெரியாதா...? டேய் இவன் நம்மளை டவுட் கேட்டே கொன்னுருவான்ய்யா பரவாயில்லையா...? உயிரோட வீட்டுக்கு போகவேண்டாம்னு கன்பார்ம் பண்ணிட்டியா...

    சிபி : எனக்கு அலாஸ்கா ரேங், பலஸ்கா ரேங் என்னான்னு கேட்டு, நீங்க இத்தனை மணிக்குதான் பதிவு போடணும், நீங்க பதிவு  போடுறதாலே எனக்கு அலாஸ்கா குலஸ்கா ரேங் கண்ணுக்கு தெரியமாட்டேங்குது [[கண்ணாடியை கழட்டுடா பரதேசி]] அப்பிடின்னு நிறைய பேருக்கு மெயில் அனுப்பி கொல்லனும் அதனால மீட்டிங்கை உடனே முடியுங்க அக்காங்...

    பன்னிகுட்டி : டேய் கண்ணாடி தலையா கொஞ்சம் தள்ளு, ஏண்டா அலக்ஸா அலக்சாண்டர்ன்னு எதுக்குடா இப்பிடி நாட்டுல அலையுறீங்க, நாலு கில்மா பதிவு போட்டமா, பத்துபேர் வந்து ஜொள்ளு விட்டானான்னுட்டு போகவேண்டியதுதானே, இல்லன்னா இருக்கவே இருக்கு விகடன், மனோ'ன்னு ஒரு நாதாரி குமுதத்தை போட்டு நக்கு நக்குன்னு நக்கி காப்பி பேஸ்ட் போடுது ம்ஹும்...

    விக்கி உலகம் : என்னாது அலாஸ்கா'வா அது யாரு அமலா பால் தங்கச்சியா அல்லது தப்சி அக்காவா..?

    நிரூபன் : எனது பால பிராயத்திலே, நான் ஹாயாக ஆயி போக காட்டுக்கு போகையிலே,  ஒரு கன்னிப்பெண் காட்டுக்கு போகையிலே, கரடி ஒன்னு வந்தினும், அதுகிட்டே இருந்து அவளை அழுது புரண்டு கதைத்து காப்பாத்தினேன், அப்புறமா அவள் பெயரை கேட்டேன் அலாஸ்கா எண்டு சொன்னாளா பிலாஸ்கா எண்டு சொன்னாளா மறந்துட்டன்.

    சிரிப்பு போலீஸ் : ஐ அண்ணே அதென்ன அலாஸ்கா சாப்பாடு...?? மணக்குது மணக்குது சோறு சோறு சோறு, முட்டை...பிரிபிரியாணி பிரிபிரியாணி.....

    பன்னிகுட்டி : ஏண்டா பன்னாடை,  அவனவன் அலாஸ்கா யாருண்ணே தெரியாம முட்டி மோதிட்டு இருக்கான் படுவா வாயா, உனக்கு முட்டை சோறு கேக்குதா, புண்ணாக்கை கரைச்சி வாயிக்குள்ளே ஊத்திபுடுவேன் ஜாக்கிரதை ஆமா...

    வானதி : அங்கிள் அங்கிள், அலாஸ்கா என்பது எந்த எந்த நாட்டின்  பெயர் அங்கிள்....?

    ராஜி : அண்ணே அண்ணே அலாஸ்கான்னா கூடங்குளம் ஊரின் மறு பெயர்தானே...?

    கல்பனா : அலாஸ்கான்னா..............ம்ம்ம்ம் நான் விஞ்ஞானம் படிக்க ரஷ்யா போனபோது ம்ம்ம்ம் மறந்து போச்சி அவ்வ்வ்வவ்........அது ஒரு வகை கொக்குன்னு நினைக்கிறேன், மனோ அண்ணா அடிக்காதீங்க அடிக்காதீங்க...[[நான் இந்த மீட்டிங்குக்கு போகதேன்னு சொன்னேன் கேட்டியா]]

    சென்னை பித்தன் : அலாஸ்கா, நான் மதுரையில் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக இருந்தபோது, இந்த நோயில ஒரு பேஷன்ட் வந்ததா மைல்டா ஒரு டவுட்டு நினைவில் இருக்கு இருங்க கூலிங் கிளாசை கழட்டிட்டு கொஞ்சம் யோசிக்கிறேன்.....

    ரமணி "குரு" : அலாஸ்கா, என்பது ஒருவித கவிதை பிராந்தி [[பிராண்டி அல்ல]] உள்ளவங்களுக்கு வந்து சங்கடபடுத்துற காதல் கவிதைன்னு சைக்கிள்கடை வைத்துவிட்டு தூய தமிழில் இங்கிலீஷ் பேசும் என் நண்பன் சொன்னான்...

    கரன் : இல்லை இல்லை அலாஸ்கா'ன்னா கலைஞர் டீம் செய்த வேறொரு ஊழலின் பெயர், விசாரணை ஆரம்பம்னு, நெட்தமிழ்'ல நியூஸ் போட்டுருக்காயிங்க...

    கவிதைவீதி : ம்ம்ம்ம் நான், கவிதை காதல் மோதல் சாதல் தாடி கர்மம், போடி வாடி சாடி ஓடி, நொந்து அப்பிடீன்னு ஒரு கவிதை எழுதலாம்னு இருக்கேன். அதுக்கு இந்த அலாஸ்கா தலைப்பு பொருந்தும்னு நினைக்கிறேன் "பாட்டுரசிகன் " மீது சத்தியமா....

    கோமதி : அலாஸ்கா, இது எங்க பாளையங்கோட்டையில விளையிற ஒருவித பயிர், இதை மயில்கள் [[இருந்தாதானே]] விரும்பி சாப்பிடும், இதை நன்றாக கழுவி தண்ணி ஊத்தி கொதிக்கவச்சி, வெங்காயம் சீரகம் தக்காளிஎல்லாம் போட்டு.....[[கல்பனா ஓவென அழுவதை கேட்டு நிறுத்துகிறார்]]

    கோ செல்வா : கண்டிப்பா இது ஒரு நடிகை பெயர்தான், சோனியா பிந்த்ரே, அமலா பால், அந்தரா மாலி, மாதிரி இது அலாஸ்கா  ரேங்.....[[சிரிப்பு போலீஸ் கல்லெடுக்க கீழே குனியவும் அடங்குகிறான்]]

    கே ஆர் விஜயன் : நிறுத்துங்கய்யா மச மசன்னு பேசிட்டு, ம்ம்ம் அலாஸ்கா, இது என் கடையில ஆபீஸ் டிராயருக்குள்ளே ஒளிச்சி வச்சி நான் மாத்திரம் பார்க்கும் ஒருவித சிடி டைப்'ன்னு நினைக்கேன்...

    மாப்பிளை" ஹரீஸ் : விஜயன் அண்ணே ஏன் அண்ணே எனக்கு அந்த அலாஸ்கா சிடி'யை காட்டலை..?? [[விஜயன் முறைக்கவும், இரும் இரும் உங்க வீட்ல போட்டு குடுக்குறேன்னு சைலன்ட் ஆகிறான்]]

    பன்னிகுட்டி : ஐயோ அய்யய்யோ கொக்கமக்கா எல்லாரும் என்னமா சொல்லுறாங்கோ, எனக்கு தலைய பிச்சிகிட்டு தெருவுல ஓடனும் போல இருக்குடா சிபி....

    அடுத்து கமலஹாசன் பேச [[கொல்ல]] வருகிறார்....

    கமலஹாசன் : ம்ம்ம்ம் ஆங், அலாஸ்கா என்பது என்னான்னு, யாருன்னு தெரியாத நியாயமான கேள்வி, அலாஸ்கா ஆணா பெண்ணான்னு சொல்லி, சொல்லாமல் எஸ்கேப் ஆகலாம்னு பார்த்தாலும் சொல்லி சொல்லி பன்னிகுட்டி என்னை கடிச்சி வச்சிருவார் அல்லது பேசியாவது கடிப்பார்னு சொல்லமுடியும்,

     சொல்லமுடியாதுன்னு நான் அலாஸ்காவை கேட்டு அலாஸ்கா குலாஸ்கா  என்று என்னை குழப்பும் பதிவர்களின் மனநிலையில் நான் இருந்து பார்க்கும் போது, அப்பிடியே பார்க்காவிட்டாலும் பார்த்து என்னை முறைக்கும் சிபி என்ற நாதாரி, சாரி  தப்பா நினைக்காதீங்க எங்க நெருக்கம் அப்பிடின்னு சொன்னால், இதெல்லாம் உனக்கொரு பொழப்பா என்று கேட்கும் துப்பாக்கி, மன்னிக்கணும் விக்கி இடம் நான் பேசணும்.

    அலாஸ்கா ஊரா நாடா அல்லது கெரகமா [[கிரகம்]] யோசிக்கணும். நான் கெரகம்னு சொன்னால், அதை படைத்தவன் யாருன்னு ஆத்திகவாதிகள் நாத்தியவாதியாகிய என்னை கடவுள் உண்டு இல்லைன்னு என்னை தாக்க வந்தாலும்  தாக்கி தாக்கி நொந்தாலும், நான் ஆத்திகவாதியால் நாத்திகவாதி ஆகி டவுசர் கிளிஞ்சதை சொல்வதை விட  சொல்லாமல் சொல்லி சொல்லி வாயிபுண்ணாக வேண்டாம்னு நிரூபன் வேண்டிகிட்டதாலே, அலாஸ்கா பற்றி முடிவெடுக்கும் நிலையின் காலகட்டத்துக்குள்  நாம் வந்திருக்கிறோம்,

     இதை நான் கடுமையாக சொல்லுவேன், யா, மிகவும் கடுமையாக சொல்லுவேன் சொன்னால் கிருஷ்ணாசாமி வெடிகுண்டு மிரட்டல் வந்தாலும் சொல்லமாட்டேன்னு  அர்த்தமில்லை. நான், நான் பயப்படுவேன் பயந்து, பயப்படாத மாதிரி நடிச்சி காட்டி நடிப்பு என் உயிர் அலாஸ்கா அலாஸ்கா ரேங்.......

    பதிவர்கள் எல்லாரும் தலையை பிச்சிகிட்டு, தலை தெறிக்க ஓடுகிறார்கள்....

    ஆனால் தமிழ்வாசி மட்டும் கமல் அருகில் வந்து, அவர் காலில் விழுந்து கால் சுண்டு விரலை மட்டும் பிடிச்சுட்டு சொல்றான், கமல் சார் கமல் சார், நீங்களும் புரியாம மற்றவங்களும்  புரியாம, தெளிவா குழப்புறதுல உங்களை மிஞ்ச யாருமே கிடையாது சார் என்று கண்ணீர் விடுகிறான்.

    இதுக்கிடையில், பதிவர் சந்திப்புக்கு என்னை ஏன்டா  கூப்பிடலை நான் அலாஸ்கா சாப்பாடு திவானந்தாகிட்டே சொல்லி ஏற்பாடு பண்ணியிருப்பேன்ல, எல்லா தடியங்களும் எங்கே...?? என ஆபீசர் பெல்ட்டை உருவ.....

    பிரகாஷ் கமலை போட்டு குடுக்குறான், ஆபீசர் அண்ணே எல்லாம் நல்லாத்தான் போயிகிட்டு இருந்துச்சி, இவர் பேசுன பேச்சில கோமாளியும், ரமேஷும் அங்கேயே சூ சூ போயிட்டாயிங்க, பன்னிகுட்டி நான் பூ மிதிக்க போறேன்னுட்டு ஓடுறாரு, விக்கி நான் தீவிரவாதிகிட்டேயே போயிருறேன்னு ஓடிட்டாரு, நிரூபன் பாத்ரூம் போனவரு போனவருதான் காணவே இல்லை என சொல்லவும் கடுப்பான ஆபீசர்...

    எலேய் யாருலேய் அங்கே,  திவானந்தா ஹால் கதவை எல்லாம் சட்டுனு பூட்டுலேய்  என அலற [[பிரகாஷ் கால் கடகட.... ]] இதை கவனித்த ஆபீசர், தம்பி நீ போலாம்னு சைகை காட்டுகிறார். கதவு பூட்டப்படுகிறது.

    கொஞ்சநேரம் கழித்து கதவு திறக்கையில், பதினாறு வயதினிலே கோவணம் கோலத்தோடு வெளியே வந்து பி எம் டபள்யூ காரில் ஏறி பறக்கிறார் கமல். ஆபீசர் மறுபடியும் பெல்டை இடுப்பில் சொருவுகிறார், திவானந்தா தூக்கிகட்டிய வேஷ்டியோடு அண்டர்வேர் தெரிய வெளியே வருகிறார் கையை முறுக்கியபடி.....

    டிஸ்கி : சும்மா ஜாலியா எடுத்துக்கோங்க.......


    http://tamil-smsworld.blogspot.com



  • http://tamil-smsworld.blogspot.com

  • [Continue reading...]

    கன்யாகுமரி மாவட��டம் சில செய்திகள்...!!!

    - 0 comments


    குமரி மாவட்டம் -பொன்விழா ஆண்டு -சில துளிகள்
    சுதந்திரத்துக்குப்பின் கேரள மாநிலத்தோடு இணைந்திருந்த குமரி மாவட்டம் ,பின்னர் மக்களின் தொடர் போராட்டங்களால் 1956-ல் தமிழகத்துடன் இணைக்கப்பட்டு இந்த வருடம் 50 ஆண்டுகள் ஆகிறது.
    எங்கள் குமரி மாவட்டம் குறித்து நானறிந்த சில தகவல் துளிகள்.


    * இந்திய திரு நாட்டின் தெற்கு முனை – முக்கடலும் சங்கமிக்கும் குமரிமுனை அமைந்துள்ள மாவட்டம்

    * கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்து ,பெரும்பான்மைத்தமிழர்கள் மார்ஷல் நேசமணி தலைமையில் தாய்த்தமிழகத்தோடு இணைக்கக்கோரி மாபெரும் இயக்கம் நடத்தி,போராடி பின்னர் தமிழகத்தோடு இணைக்கப்பட்ட மாவட்டம்.

    * தமிழகத்தில் எழுத்தறிவில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்.

    * பரப்பளவில் குறைந்ததெனினும் ,மலைகளும் கடலும் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் ,தென்னை ,வாழை நிறைந்த மாவட்டம்.

    * தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் அதிக சதவீதத்தில் இருக்கும் மாவட்டம் (ஆனால் பா.ஜ.க-வின் சட்டமன்ற கணக்கை தொடங்கி வைத்த மாவட்டம்)


    * 'ஆசிரியர் மாவட்டம்' என்று சொல்லுமளவுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக ஆசிரியர்களை அனுப்பி வைத்த மாவட்டம்.

    * இந்தியாவின் உயர்தர ரப்பர் விளையும் மாவட்டம்...!!!

    * கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை , 'தமிழ்த்தாய் வாழ்த்து' தந்த மனோன்மனியம் சுந்தரனார் பிறந்த மாவட்டம் (வள்ளுவரும் இங்கே பிறந்ததாக ஒரு சாரார் சொல்கின்றனர்)

    * கலைவாணர் N.S.கிருஷ்ணன் ,திரையிசைத் திலகம் K.V.மகாதேவன் ,அவ்வை சண்முகம் போன்ற கலையுலக ஜாம்பவான்களின் சொந்த மாவட்டம்.

    * சொந்த ஊரில் தோற்கடிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜரை ,உச்சி முகர்ந்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்த பெருந்தலைவரின் செல்ல மாவட்டம்.ஜீவா பிறந்த மாவட்டம்.

    * சமீபத்தில் இந்தியாவிலேயே சுத்தமான பஞ்சாயத்து யூனியன் (மேல்ப்புறம்) என்ற ஜனாதிபதி விருதினை தட்டிச்சென்று ,தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மாவட்டம்.

    * இந்தியாவிலேயே முதல் பெண் பேருந்து ஓட்டுனரை தந்த மாவட்டம்.

    * மாநில கட்சிகளுக்கு இணையாக தேசிய கட்சிகள் (காங்கிரஸ் ,பா,ஜ,க ,கம்யூனிஸ்ட்) செல்வாக்கை இன்னும் தக்கவைத்திருக்கும் மாவட்டம் . ஆனால் எந்த கட்சிக்கும் கோட்டையாக இல்லாத மாவட்டம் .திராவிட கட்சிகளுக்கு சோதனை தந்த மாவட்டம் .அதனால் 'நெல்லை எங்கள் எல்லை! குமரி எங்கள் தொல்லை!" என்று கலைஞரை புலம்ப விட்ட மாவட்டம்.

    * தமிழகத்தில் அதிகமாக காற்றலை மூலம் மின் உற்பத்தி நடைபெறும் மாவட்டம்.

    * தமிழகத்தில் மாவட்ட தலைநகரின் பெயரில் அழைக்கப்படாத மாவட்டம் (மாவட்ட தலைநகர் – நாகர்கோவில்).

    டிஸ்கி : நாஞ்சில் மனோவை உங்களுக்கு தந்ததும் [[கொன்னதும்]] இந்த மாவட்டம்தான்....!!! எவம்லேய் அங்கே குனியுறது...???


    நன்றி : http://nagercoil.wordpress.com/page/212/


    http://tamil-smsworld.blogspot.com



  • http://tamil-smsworld.blogspot.com

  • [Continue reading...]

    கூடங்குளம் போரா��்டத்துக்கு ஆதரவ���க துள்ளி எழும் ப���ிவுலகம்...!!!

    - 0 comments



    கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டத்துக்கு ஆதரவாக பதிவர்கள் படையெடுக்கும் இந்த நேரத்தில், நேற்று தம்பி பலே பிரபு சாட் பண்ணினான், அண்ணே இந்த உண்ணாவிரத போராட்டத்தில்  ஈடுபட்டிருக்கும் நம் பதிவர் கூடல்பாலா போன் நம்பர் உங்ககிட்டே இருக்கான்னு, அதற்க்கு நான் இல்லை தம்பி தேடிபார்கிறேன், கிடைத்தால் உனக்கு தருகிறேன் உனக்கு கிடைத்தாலும் எனக்கு அனுப்பு என சொன்னேன்.

    தம்பி நல்ல பொறுப்பா எனக்கு இன்றைக்கு கூடல்பாலாவின் போன் நம்பர் அனுப்பியிருந்தான் [[நன்றி தம்பி]] பரபரவென மனசினுள் பதட்டம் வந்தது. தாமதிக்காமல், உடனே போன் செய்தேன் பாலா'வுக்கு. அவர் சொன்ன போராட்டங்களின் விவரம் கீழே....

    இன்றைக்கு உண்ணாவிரதம் ஆறாவது நாளாக நடைபெறுகிறது, கள்ளிகுளம் காலேஜ் ஸ்டுடன்ட்ஸ், கூத்தங்குளி அன்னை அப்பா காலேஜ் ஸ்டுடன்ஸ், இன்னும் ஒரு காலேஜ் ஸ்டுடன்ஸ்'களும் மேலும் கலந்து கொண்டார்களாம்.

    உண்ணாவிரதம் இருப்பவர்கள் மொத்தம் நூற்றி இருவது பேர், மேலும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இருவதாயிரத்துக்கும் மேலாக இருக்கிறது.

    நாகர்கோவில் டாக்டர் உதயகுமார் பொறுப்பாக போராட்டத்தை கவனிக்கிறாராம், இவர் உலகநாடுகள் அனைத்துக்கும் போய் வருபவர், ஜப்பான் ஹிரோஷிமா, நாகசாகி நேரில் போயி பத்துநாள் தங்கியிருந்து பார்த்திட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்று ஐந்து அமைச்சர்கள் பேச்சி வார்த்தை நடத்தியிருக்கிறார்கள், அவர்கள் சொன்னது போராட்டத்தை கைவிட்டுட்டு, அம்மாவுடன் பேச வாருங்கள் என சொன்னார்கள். மக்கள் உண்ணாவிரதம் இருந்துகிட்டே பேச்சு வார்த்தை நடத்தலாமே என சொல்ல அமைச்சர்கள் எஸ்கேப்...!!!

    வைகோ, அண்ணன் சீமான், வெள்ளையன்  போன்ற தலைவர்கள் நேரில் போயி போராட்டத்தை வலுபடுத்தினார்கள்.

    வணிகர் சங்கம் வெள்ளையன் அவர்கள் தமிழகம் எங்கும் கடையடைப்பு நடத்த போகிறார், போராட்டத்துக்கு ஆதரவாக....

    போராட்டம் நடக்கும் இடத்தில்  இருந்து பதினைந்து மைல் சுற்றளவுக்கு, வாகனங்கள் உள்ளே போகாதபடி போலீசார்
    தடுத்து வைத்து  இருக்கிறார்கள்...!!!

    காலையிலேயே கௌசல்யா கூடல்பாலா'வுக்கு போன் செய்து நானும் வரட்டுமா என்று கேட்டதற்கு, பதினைந்து மைல் சுற்றளவுக்கு போலீஸ் உள்ளே வர போலீஸ் கெடுபிடி பண்ணுமே மேடம், வந்து கஷ்டப்பட்ட வேணாம்னு பாலா சொன்னாராம்....!!!

    இன்றைக்கு பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் போராட்டத்துக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டதோடு அல்லாமல் ஜி கே மணியை போராட்ட இடத்துக்கு அனுப்பி வைக்கிறார்.

    சரத்குமார் போராட்டத்துக்கு ஆதரவாக அறிக்கையும், குரலும் குடுத்து வருகிறார்.

    விஜயகாந்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விட்டதுமல்லாமல், நேரில் வருகிறாராம்....!!!

    திமுக'வும் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும்படி தீவிரமாக யோசிப்பதும் அல்லாமல், ஸ்டாலின் நேரில் வருவதாக இருக்கிறதாம்...!!!

    ஜெயலலிதா, அணுமின் நிலையம் பாதுகாப்பாவே இருக்கிறது என்கிறார்...!!! [[ மக்களுக்கு பாதுகாப்பு எங்கே மேடம்...?]]

    கூடல்பாலா போராட்டத்தின் பேச்சுக்கள், போட்டோக்கள் எல்லாம் நிறைய எடுத்து வச்சிருக்காராம், ஆனால் லேப்டாப்பின் நெட் கனெக்ஷன் டெத் ஸ்லோவா இருக்கிறதுனாலே பதிவில் போடமுடியவில்லை'ன்னு மிகவும் வருத்தப்பட்டார்...

    அவரிடம் பேசினதில் இருந்து தெரியவந்தது என்னான்னா, பதினஞ்சி மைல் சுற்றளவுக்கு உள்ளே மக்கள் [[போராட்டத்துக்கு]] போகமுடியாதபடி போலீஸ் தடை செய்வது ஏன்..?? அடங்கொன்னியா உனக்கும் சேர்த்துதானே போராடுறாங்க...?? சுனாமி, பூகம்பம் வந்தா மக்களை  பாதுகாக்க முடியாத அணு உலையை வச்சிட்டு, எப்பிடிய்யா மக்கள் நிம்மதியா இருப்பாங்க...???

    அண்ணே இன்னும் ரெண்டுநாள்ல போராட்டம் முடிவுக்கு வந்துரும்ண்ணே, இந்தபோராட்டம் மட்டும் சக்சஸ் ஆச்சுன்னா, இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களின் அணு உலைகளும் மூடும்படி, நாம் உலகத்துக்கே முன்மாதிரியா இருப்போம் அண்ணே'ன்னு கூடல்பாலா சொன்னார் [[நான் நெகிழ்ந்து போனேன், உமக்கு நல்ல மனசுய்யா...!!!]]

    பதிவுலகம் இப்போதான் ஷாக் அடிச்சாமாதிரி துள்ளி எழும்பி இருக்கு, பதிவர்களே, சுனாமியால் ஜப்பானில் அணு உலையால் மக்கள் பட்ட இன்னல்களை கண்டோம் அல்லவா..? நாம் சுனாமி வந்ததுக்கே தாங்கமுடியாத வேதனையை அனுபவித்தோமே..? அதேஇடத்தில் அணு உலையும் வந்தால்......நினச்சி கூடபார்க்க முடியவில்லை.

    நாம் எலியோ பூனையா குரங்கோ அல்ல சோதனை செய்து பார்க்க, கூடுமானவரை கைகோர்த்து போராடுவோம்....

    லைவ் நியூஸ் தெரிந்துகொண்டு பதிவிடுங்கள் போனைபோடுங்கள் கூடல்பாலாவுக்கு 0091'9940771407

    koodalpaalaa'வின்  பிளாக் 
    ஆணிவேர் வலைத்தளம்

     மனதோடு மட்டும் கௌசல்யா
    தமிழ்வாசி" பிரகாஷ்
    போராட்டத்தில் தமிழ்வாசியின் இந்த பதிவு மேடையில் வாசிக்கபட்டதாம்...!!!
    வைறை சதீஷ்


    http://tamil-smsworld.blogspot.com



  • http://tamil-smsworld.blogspot.com

  • [Continue reading...]

    கூடல் பாலா: வெற்றியை நோக்கி ஒரு மரண பயணம்

    - 0 comments


    கூடல் பாலா: வெற்றியை நோக்கி ஒரு மரண பயணம்: தமிழகத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றும் முயற்சியான கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி 127 பேர் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரத...

    டிஸ்கி : நான் இன்றைக்கு லீவில் இருப்பதால் பதிவுலகம் வர முடியவில்லை மக்கா நாளைக்கு வந்து கலக்குறேன். 


    http://tamil-smsworld.blogspot.com



  • http://tamil-smsworld.blogspot.com

  • [Continue reading...]

    அட்ரா சக்க: அணு ச��்தி... அழிவு சக்தி! கூடங்குளம் குப்பைக்கூளம...

    - 0 comments


    அட்ரா சக்க: 'அணு சக்தி... அழிவு சக்தி! கூடங்குளம் குப்பைக்கூளம...: கூடங்குளம் வேண்டாம்!'' உக்கிரமாகும் உண்ணாவிரதம்! 'அ ணு சக்தி... அழிவு சக்தி!' என்ற கோஷம் உலகம் முழுவதும் வலுத்...

    டிஸ்கி : என் உயிர் நண்பன் சிபி,கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றி எழுதுடா ராஸ்கல்'ன்னு நான் திட்டினதுக்கு, நீ யார்டா மூதேவி அதைப்பற்றி சொல்ல எனக்கு தெரியாதான்னு சொல்லி பதிவு போட்டுட்டான், இனி அரசாங்கம் இறங்கிவரும்னு நம்பிக்கை வந்துருச்சி மனசில்....[[எலேய் அண்ணா, நன்றிடா மக்கா]] நான் இன்னைக்கு பதிவு போடலை.....நமக்கு முதல்ல இந்த பிரச்சினை தீரனும் அம்புட்டுதான்......

    டிஸ்கி : கூடல்பாலாவுக்கும், டாக்டக்ர் உதயகுமாருக்கும், மற்றும் மக்களுக்கும் நாஞ்சில்மனோ சொல்லிக்கொள்வது, பதிவர்கள் நாங்கள் எல்லோரும் உங்களுக்கு சப்போர்ட்டாக உள்ளோம் என்பதை மறுபடியும் உங்களுக்கு உறுதி செய்கிறோம்....




    http://tamil-smsworld.blogspot.com



  • http://tamil-smsworld.blogspot.com

  • [Continue reading...]

    என் வாழ்க்கையில�� என்னை தேடிவந்த ��ாதல் புயல் சூறாவளியாக.....!!!

    - 0 comments


    நான் பஹ்ரைன் வந்த இரண்டாம் வருஷம் நடந்த ஒரு மோதல், சாரி காதல்....

    நான் ஹோட்டலில் வெயிட்டராக பணிபுரிந்த ஆரம்பகாலம், எங்கள் ஹோட்டலுக்கு புதிதாக அக்கவ்ண்டண்டாக பணிபுரிய கேரளா கோட்டயத்தில் இருந்து ஒரு புதிய பெண் வந்தாள், அழகோ அழகு கொள்ளை அழகு....!!!

    எங்கள் ஹோட்டல் முதலாளி முதற்கொண்டு, மானேஜர், டிஷ்வாசர்கள் கூட அவள்மீது மையல் கொண்டிருந்தார்கள், ஆனால் அவள் மையல் கொண்டதோ சாதாரண சர்வரான என்மீது [[எலேய் அடிக்க வராதீங்கப்பா இது உண்மை, மட்டுமல்ல என் வீட்டம்மாவுக்கும் தெரியும்]]

    நான் தமிழன் என்பதால் என்மீது ஒரு ஈர்ப்பு'ன்னு அடிக்கடி சொல்வாள், தமிழர்களை மிகவும் நேசிக்கும் மனம் [[அதுக்கு ஒரு சென்டிமென்ட் உண்டு சொன்னால் அழுதுருவீங்க ஸோ வருங்காலத்துல சொல்லுவேன், யாராவது மலையாளிங்க தமிழனை தாக்கும் போது]] அவளுடையது...!!!


    அவள் பெயர் சு'மீதா   [[பெயர் மாற்றபட்டுள்ளது]] கொள்ளையே கொள்ளை போகும் அழகு, அவளுக்காகவே தனியாக மேக்கப் போட்டுகொண்டுவரும் மானேஜர்கள், மற்றைய ஸ்டாப்'கள், ஆனால் எனக்காகவே தன்னை அலங்கரித்துக்கொண்டு, என்னிடம் மட்டும் வந்து கேட்பாள் "எங்கென உண்டு" என்று...

    எனக்கு பொதுவா ஒரு குணம் உண்டு அதிகம் அழகா இருக்குற பெண்களை பிடிக்காது, காரணம் அவர்களின் ஆணவம். அதுலதான் சம்மட்டி அடி விழுந்தது!!!! சுமிதா பார்க்க நடிகை மீனா போல இருப்பாள், என்கூட வேலைபார்ப்பவர்கள் எல்லாருக்கும் [[மலையாளிகள்]] செமையான கடுப்பு....

    அவள் என்னோடு பழகும் விதமும், அவள் எனக்கு வாங்கித்தரும் [[மறுத்தும் விடமாட்டாள்]] பரிசு பொருட்கள், நான் வேண்டாம் என்று சொன்னதால் நேரில் என் ரூமுக்கே வந்துவிட்டாள், அதுக்கு பயந்தே அவள் என்ன வாங்கிதந்தாலும் உடனே வாங்கிவிடுவேன்.

    எனக்கு மலையாளம் சரியாக பேச கத்து தந்ததும் அவள்தான், [[பொம்பளைங்க கத்து தந்தா சீக்கிரம் கத்துக்கலாம் ம்ஹும் அதுவும் அழகான பெண்கள்??? கேட்கவே வேண்டாம் போங்க]] 

    இவளின் நோக்கம் [[காதல்]] அறிந்து இடையிடையே என் மனைவி பற்றியும், எனக்கு ஒரு பையன் [[பெண்குழந்தை அப்புறமா பொறந்தது]] இருக்குறான் என்பது பற்றியும் நாசுக்காக சொல்லுவேன், அவள் அதை பொருட்படுத்தவே இல்லை...

    அடபாவிமகள் காதலை சொல்லியே விட்டாள், ஹோட்டல் மொத்தமும் சொல்லியும் விட்டாள். நான் எவ்ளோ எடுத்து சொல்லியும், கடுப்பான மலையாளிகள் போட்டுகுடுத்தும் அவள் அசையவே இல்லை....

    நான் கல்யாணம் ஆனவன், எனக்கு ஒரு குழந்தையும் இருக்குன்னு எவளவோ சொல்லியும் கேட்பதாக இல்லை, என்னையும் கல்யாணம் பண்ணிக்கோ இல்லைன்னா செத்துருவேன்னு ஒருநாள் கத்தியால் கையை அறுத்து விட்டாள், மனசுகேக்காமல் ஓடிப்போனேன் பார்க்க, என்னை கட்டிபிடித்து அழுத அழுகை இன்னமும் ரணமாக நெஞ்சில இருக்கு....


    அவள் குடும்பத்தார் எவளவோ எடுத்து சொல்லியும், எங்கள் முதலாளி அவளை மிரட்டியும் அவள் அசரவில்லை, ஏன்னா நான் கல்யாணம் ஆனவன் அவளை கல்யாணம் செய்ய எனக்கு மனமில்லைன்னு [[வீட்டம்மாகிட்டே வாயில அடி வாங்கவேண்டி பயந்து]] எல்லாருக்கும் தெரியும்....

    முதலாளி [[மலையாளி]] என்னை கூப்பிட்டு மிரட்டினான், இப்பவே சர்ச் கூட்டிட்டு போயி ரெண்டுபேரையும் கல்யாணம் செய்து வச்சிருவேன்னு மிரட்டினான், சார் நான் யாரையும் காதலிக்கவும் இல்லை அது எனக்கு தேவையும் இல்லை என கடுமையாக சொன்னேன்....

    எல்லாருக்கும் ஆச்சர்யமோ ஆச்சர்யம், எப்பிடிடா இந்த ஆதிவாசி மாதிரி இருக்குற பாண்டிக்கு இந்த கிளி சிக்குச்சுன்னு, அவளின் கண்ணீர் என்னை வெகுவா கரைக்க ஆரம்பிச்சது, என் வீட்டம்மாகிட்டே எதுவும் மறைக்க மாட்டேன், அவளிடம் சொன்னதும் ஈசியா சொல்லிவிட்டாள், நோ பிராப்ளம் அத்தான், எனக்கு கொள்ளிவைக்க வந்துருங்க....

    எவளவோ கெஞ்சி பார்த்தேன் கோபப்பட்டேன், அடியும் விழுந்தது, அசரவில்லை [[காதல் அம்புட்டு பவர்போல]] அவள்.....என்ன செய்யன்னு யோசனையா இருந்தப்போ, சக தோழி திவ்யா என் அவஸ்த்தையும் அவள் அவஸ்த்தையும் புரிந்தவளாய் எனக்கு ஐடியா தர ஆரம்பித்தாள்...

    சுமிதா'வுக்கு எது எது பிடிக்காதோ அதையெல்லாம் செய்ய சொன்னாள், அதையெல்லாம் செய்தேன், அவளுடன் பணிபுரியும் மற்ற சேச்சிகளும் அவளை பிரைன் வாஷ் செய்ய....

    இதுக்கிடையில் என் நண்பன் [[மலையாளி]] அவள் மீது காதல் செய்ய [[எனக்கும் அவனுக்கும் ஒரு அலைவரிசை கிடடையாது]] அவனும் ஒருநாள் தன் கையை அறுத்து காதலை சொல்ல, சேச்சி'களும் சுமிதாவை மூளைசலவை செய்ய, நண்பனின் காதலுக்கு சம்மதித்தாள்.

    அவனும் "உடனே" அவளை ஊருக்கு கூட்டிக்கொண்டு போயி திருமணம் செய்துகொண்டான். கல்யாணம் முடிந்து திரும்பி வந்தார்கள், எனக்கு பிரமோசன் கிடைக்க ஆரம்பிச்சுச்சி, ஊரில் இருந்து வந்தவள் என்னோடு பேசவும் இல்லை, ஏன் ஒரு ஹாய் கூட சொல்லவில்லை, நானும் கண்டுக்கவில்லை, வேலை விஷயமாக ஏதும் கேள்வி இருந்தால், கேள்விக்கேற்ற பதில் மட்டுமே.....

    அழகான ஒரு பெண் குழந்தையும் பிறந்தது அவர்களுக்கு, அதுவரைக்கும் நானும் அவளும் பேசினதே கிடையாது, அந்த குழந்தையின் முதல் பிறந்த நாளுக்கு பெரிய பங்ஷன் வைத்தார்கள், என்ன நினைத்தார்களோ எனக்கும் அழைப்பு வந்தது.

    எனக்கு போகவே மனசில்லை, காரணம் பங்சனுக்கு வரும் எல்லாருக்குமே எங்கள் விஷயம் தெரியும், ஆனாலும் மலையாளி நண்பர்கள் என்னை வலுகட்டாயமாக கொண்டு போகவே, குழந்தைக்கு ஏதாவது வாங்கணுமே என்று ஒரு தங்க மோதிரம் வாங்கி சென்றேன்...

    என்னை வரவேற்றது அவள் கணவன், அவன் கையில் மோதிரத்தை குடுத்தேன், எல்லார் கண்களும் என்மீது, சுமிதா தெரியாதவள் போல நின்றிருந்தாள்.

    நான் வேகமாக வெளியேறினேன் சில நண்பர்களுடன் பேசிவிட்டு, லி ஃ ப்'டில் வராமல் மாடிப்படி வழியே கடகடவென இறங்கினேன், இரண்டாவது ஃப்லோர் வரவும் சுமிதா எனக்காக காத்திருந்தாள், என்னை ஓடிவந்து கட்டிக்கொண்டாள், அவள் என்னோடு பேசாதது காரணம் அவள் கணவனாம்..

    கல்யாணம் முடிந்து முதல் இரவில் அவளிடம் வாங்கிய முதல் சத்தியம், என்னோடு பேசக்கூடாது என்றாம்...!!!! ஆகவேதான் பேசவில்லை என்றாள், என் நெஞ்சை  அவள் கண்ணீரால் நனைத்தாள், நானும் தடுக்கவில்லை, காதலின் அன்பு எனக்கு தெரியாதா என்ன....

    அழுதுவிட்டு சொன்னாள், மனோ என் குழந்தையின் பெயர் என்ன தெரியுமா...?? உன் பேர்தான் வச்சிருக்கேன் மனு'ன்னு [[என்னை அப்பிடிதான் கூப்பிடுவாள்]] நீ பங்க்சன்ல பாதியில போகாதே மனு, என்மீது கொஞ்சமாவது அன்பு இருந்தா என் குழந்தையை கையில் எடுத்து ஒரு முத்தம் கொடுத்து விட்டு போ என்றாள்...

    உன்னோடு நான் பேசினதுல என் மனபாரம் எல்லாம் காற்றோடு போயிருச்சி என்றாள், அவளை லிப்டில் அனுப்பிவிட்டு நான் படியில் நடந்து போனேன், போயி குழந்தையை கையில் எடுத்து முத்தம் கொடுத்தேன், குழந்தை என்னை கையால் வருடியது, கையை கவனித்தேன் விரலில் நான் கொடுத்த மோதிரம் பளிச்சிட்டது...!!!!

    விடைபெற்றேன், அவள் முகம் பார்த்தேன் பரம திருப்தியாக சைகையால் விடை கொடுத்தாள் அந்த தேவதை!!!!

    மறக்க நினைச்ச விஷயம் பத்து வருஷமாச்சு, திடீர்னு இன்னைக்கு பேஸ்புக் சாட்'ல தேவதை வந்தேவிட்டாள் அதே அழகோடு, என் மீது அன்பை பொழிந்து, ஆனால் இது காதல் அல்ல நட்பு என்று சொல்லி சிரிக்கிறாள்....!!!!


    என் பேஸ்புக்ல தேவதை வந்துருக்கா, என் பேஸ்புக் அக்கவுட்ன்ல அவள் போட்டோவும் இருக்கு கண்டுபிடிக்கிறவங்க கண்டு பிடிச்சிக்கோங்க[[இந்த பதிவு அவளின் அனுமதி பெற்றே இட்டுருக்கிறேன்]], அவளுக்கு இப்போது இரண்டு குழைந்தைகள் இருக்காம் [[வாழ்க செல்லம் வளமுடன்]] இப்பவும் ஐ லவ் யூ'டான்னு சொல்லி என்னை கலாயிக்கிறாள் ஹா ஹா ஹா ஹா....!!!! 



    http://tamil-smsworld.blogspot.com



  • http://tamil-smsworld.blogspot.com

  • [Continue reading...]

    பனைமரம்....!!!

    - 0 comments



    ஆரம்பம்: பனமரத்தின் ஆரம்பம் இந்தியா, பர்மா எனச் சொல்லப்படுகிறது. தற்போது இது இலங்கை, இந்தியா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப்படுகின்றது.

     பனையில் பல இனங்கள் உண்டு. ஆனாலும் Borassus flabellifer (Family: Arecaceae)  என்ற இனமே இக்கட்டுரையில் விபரிக்கப் படுகின்றது. இது ஆங்கிலத்தில் palmyrah, toddy palm  என்று வழங்கப்படும்.

    பனை மரத்தின் விபரம்: நட்டாயிரம் வருடம், பட்டாயிரம் வருடம் என்று தமிழர் வாழ்வோடு ஒன்றி, ஒரு வாழிவாதாரப் பங்கு கொண்ட மரமாகத் திகழும் பனை ஒரு வரண் நில வளரியாகும். நன்றாக வளர்ந்த பனைமரம் 10-30 மிட்டர் உயரம் வரை இருக்கும். இது வேர் (root), அடிமரம் (trunk), ஓலைகளைக் கொண்ட முடி (crown) என மூன்று பகுதிகளைக் கொண்டது. வேர்ப் பகுதி நார் வகையானது, நிலத்தில் படர்ந்து வளரும், ஆணிவேர் இல்லை. அடிமரம் நீண்ட, கறுப்பு நிறமுடையது, உருண்டையானது. இதன் பருமன் மேல்நோக்கி குறைந்து கொண்டு போகும்.

    முடிக்கு கிட்டவர இதன் பருமன் சீரானதாக இருக்கும். அடிமரத்தில், விழுந்த ஓலை மட்டைகளின் அடையாளங்கள் (scars)  கிடையான கோடுகளாக காணப்படும். பனைகள் கிளைகள் அற்றவை. ஆனாலும் கிளைகள் உள்ள மரங்களும் அரிதாக உண்டு. பனைமரத்தின் வட்டு என அழைக்கப்படும் முடிப்பகுதியின், நுனியில் 10-30 வரை விசிறி போன்ற ஓலைகளைக் கொண்டிருக்கும். ஓலைகளின் எண்ணிக்கை, மரத்தின் வளர்ச்சியையும், செழிப்பையும் பொறுத்தது. முடியின் மையப்பகுதியில் ஒன்று அல்லது இரண்டு, விரியாத குருத்தோலைகள் இருக்கும். இவை மென்மஞ்சள் அல்லது பழுப்பு நிறமானவை.  நன்றாக விரிந்த ஓலைகள் தடிப்பானவை, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. இவற்றின் இலைப்பரப்பு நீளப்பாட்டில் ஈக்குகளுடன் ஒட்டியபடி இருக்கும். ஓலைகள் மரத்துடன் பனம் மட்டை எனப்படும் தண்டுப்பகுதியுடன் ஒட்டிக்கொணடிருக்கும். பன மட்டைகள் நீண்டு, வளைந்தவை, மெல்லிய மஞ்சள் நிறமானவை. மேல்பக்கத்தில் குழியாகவும், கீழ்பக்கத்தில் குவிவாகவும் இருக்கும். கரைகள் வாள் போன்ற கறுப்பு நிறமுடைய கருக்குகளைக் கொண்டிருக்கும். இதன் காரணமாக பனம்மட்டையை கருக்கு மட்டை என்றும் கூறுவர். பனம் மட்டைகள் மரத்தின் வட்டுடன் ஒட்டியபடி இருக்கும். இப்படி ஒட்டும் பகுதிகள் Y உருவ அமைப்புடையவை. கங்கு மட்டையென அழைக்கப்படும் இவை பன்னாடை என்று அழைக்கப்படும் மெல்லிய வலை போன்ற அமைப்புக்களால் மரத்துடன் சேரக்கப்பட்டிருக்கும்.

    பனைமரம் இருபூந்துணர்த் தாவரமாகும். அதாவது ஆண்மரமும், பெண்மரமும் வேறானவை. இரு மரங்களும் பூக்கும்போது பூம்பாளைகள் எனப்படும் பூந்துணர்களை உருவாக்குகின்றன. பூந்துணர்கள் தோன்றும் வரை இவற்றை ஆண், பெண் மரங்கள் என இனம் காண்பது கடினம். பனை மரத்தில் இரண்டு முக்கிய வகை மரங்கள் உள்ளன. ஒன்று கரிய நிறமுடைய பழங்களைத் தருவன, மற்றையது செம்மண்ணிற நிறத்தையுடைய பழங்களைக் கொண்டன.
    மேலொட்டிகள்: பனைமரம் இதர மரங்களுக்கும் ஆதாரங்களாக உள்ளன. பனங்கத்தாளை எனப்படும் ஒரு வகை ஓர்க்கிட் பனை மரங்களில் மேலொட்டியாக வாழ்வதை நாம் பார்க்கக் கூடியதாகவுள்ளது. ஆலமரங்கள் அநேக சந்தர்ப்பங்களில் தமது வாழ்க்கையை பனை மரத்தில் மேலொட்டியாக ஆரம்பிக்கின்றன. பின் இவை வளரத் தொடங்க, கீழ் நோக்கி பனை மரத்தைச் சுற்றி வளர்ந்து, காலப்போக்கில் பனைமரத்தின் அடியை முற்றிலும் மூடும். இந்நிலையில் பாரப்பவர்களுக்கு பனை மரம் ஆலமரத்தின் நடுவிலிருந்து முளைத்ததாகத் தோன்றும்.

    பனம் மரத்தின் ஆரம்ப வாழ்க்கை பனங்கொட்டை எனப் பொதுவாக அழைக்கப்படும் பனம் விதையிலிருந்து தொடங்கும். விதைகள் பனம்பழங்களில் தோன்றுபவை. மரத்திலிருந்து கனிந்த பனம்பழங்கள் நிலத்தில் விழுந்தபின் இவ்விதைகள் தானாகவே முளைக்கத்தொடங்கும். விதைகள் முளைத்து பனங்கிழங்கைத் தோற்றுவித்து அதன் உணவுச்சக்தியைப் பாவித்து வளரத்தொடங்கும். வளரும்போது உண்டாகும் முதல் இலை விரியாதது. இந்நிலையில் இதனை பீலி என்று அழைப்பர்.
    வடலி: பனை மிகவும் மெதுவாக வளரும் ஒரு மரம். குறைந்த வயதுடைய சிறிய பனைமரத்தை வடலி என்று அழைப்பார்கள்.. வடலியில் ஓலைகளும் அவற்றின் மட்டைகளும் மரத்தில் ஒட்டியபடி இருப்பதை எப்போதும் காணலாம். வடலி வளர்ந்து முற்றாக பயன் தர 15-20 வருடம் வரை செல்லும்.
    பனைமரத்தின் ஒவ்வொரு பாகமும் பிரயோசனத்திற்குரியது. உணவு, மரத்தேவை, பானம், விறகு, விளையாட்டுப்பொருட்கள் உட்பட பிரயோசனங்களை பட்டியல் போடலாம். இதன் காரணமாக பனை ஒரு கற்பகதரு அல்லது கற்பகவிருட்சம் என அழைக்கப்படுகிறது. பனைமரத்தின் உபயோகங்களை நுனியிலிருந்து அடிமரம் வரை பார்ப்போம்.

    1. குருத்து

    பனைமரத்தை, அதனது மரத்தேவைக்காக அல்லது நிலங்கள் தேவைப்படும் போது வெட்டி வீழ்த்துவார்கள். சிலசமயம் பலத்த காற்றோடு கூடிய மழைக் காலங்களில் அல்லது சூறாவளிகளின் போது பன மரங்கள் பாறி விழுவதுண்டு. அப்படியான சமயங்களில் மரத்தின் முடிப்பகுதியைப் பிளந்து அதன் நடுவில் இருக்கும் இளம் குருத்துப் பகுதியை வெளி மட்டைகளிலிருந்து பிரித்து எடுப்பார்கள். இந்த இளம் குருத்து விருத்தியடையாத குருத்தோலைகளையும் மட்டைகளையும் கொண்டிருக்கும். இது வெள்ளை நிறமுடையதும் மென்மையானதாகவும், இனிமையாகவும் இருக்கும். பலர் இதனை விரும்பிச் சாப்பிடுவர்.

    2. குருத்தோலை

    பனைமரத்தின் முடியின் நடுவிலுள்ள இளம், விரியாத நிலையில் உள்ள ஓலை குருத்தோலை எனப்படும். இது மெல்லிய மஞ்சள் நிறமுடையது. இதனை வெட்டி வெய்யிலில் காயவைத்து ஈக்கிலை நீக்கியபின் கடினமாக வரும் பகுதியை பல பாவனைகளுக்கு உபயோகிக்கலாம்.

    2.1 ஏடு

    காய வைத்து எடுக்கப்பட்ட குருத்தோலைகளை சிறு துண்டங்களாக வெட்டி ஏட்டுச்சுவடிகளாக முந்தைய காலங்களில பாவித்திருக்கிறார்கள். இவற்றில் பலருடைய ஜாதகக் குறிப்புகள், காண்டங்கள் என்பன எழுதப்பட்டுள்ளன. இன்றும் கூட சிறு பிள்ளைகளுக்கு அரிச்சுவடியை அறிமுகப் படுத்துவதற்கு ஏடு தொடக்கல் என்ற முறையை பின்பற்றுகிறார்கள். அப்போது கொத்து என அழைக்கப்படும் ஒரு மரப்பாத்திரத்தில் நெல்லை நிரப்பி ஒரு பனை ஓலைத்துண்டை கம்பியில் குத்தி வைப்பார்கள்.

    2.2 கைப்பணிப்பொருட்கள்

    காயவைக்கப்பட்ட குருத்து ஓலைகளை ஈக்கிலிருந்து பிரித்தெடுத்து மெல்லிய நார்களாக வெட்டிப் பின்னி பனம் ஓலைப் பெட்டிகள், பனங்கட்டிக் குட்டான்கள், நீற்றுப்பெட்டி, பாய்கள் போன்றவை செய்வதற்கு பாவிப்பர். கைப்பைகள், தொப்பிகள் போன்றவையும், காற்றாடி உட்பட பல வகையான விளையாட்டுப் பொருட்களும் தற்போது நவீன முறையில் செய்யப்படுகின்றன. சில சமயம் இவ்வோலைகளை பச்சை, நீலம், சிவப்பு போன்ற நிறங்களால் சாயமூட்டுவார்கள். சாயமூட்டப்பட்ட ஓலைகள் சாயவோலை எனப்படும். இவையையும் பாவித்து அலங்காரமாக செய்யப்படும் பொருட்கள் அழகாகவிருக்கும். பனம்பெட்டிகள் அரிசி, பருப்பு போன்றவைகளை கொண்டு செல்வதற்கும், சேமிப்பதற்கும், பனங்கட்டிக்குட்டான்கள் வெவ்வேறு அளவுகளில் செய்யப்பட்டு பனங்கட்டிகளைப் போடுவதற்கும், நீற்றுப்பெட்டி பிட்டு, மா போன்றவற்றை அவிப்பதற்கும், பாய்கள் பந்திகளில் சாப்பிடுவதற்கு விரிப்பதற்கும், படுப்பதற்கும், புகையிலை, கருவாடு  போன்றவற்றை சுருட்டி வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கும் பாவிக்கப்படுகின்றன. முன்பு பனம் ஓலையினால் செய்யப்பட்ட குடை, உமல், பறி என்ற பைகளும், மடிப்பெட்டி என அழைக்கப்பட்ட purse ம் இப்போது பாவனையில் அதிகம் இல்லை.
    பனம் ஓலைகளும், ஈக்கில்களும் கடற் தொழிலாளர்களால் இறால், மீன், கணவாய் போன்றவைகளை சேர்த்துப் பிடிக்க உதவுகின்றன.

    3. பச்சை ஓலை

    பனை மரத்தின் முடியிலுள்ள முக்கிய பகுதி பச்சை ஓலைகள். இவை பல பயன்களையுடையவை.

    3.1 கொள்கலன்கள்

    பச்சை ஓலைகளை பனம்மட்டையிலிருந்து வெட்டியெடுத்து, மடித்து கொள்கலங்களாகச் செய்து மீன், இறைச்சி போன்றவற்றை கொண்டு செல்வதற்கு பயன்படுத்துவர். மேலும் இவ்வோலைகள் பிளா, தட்டுவம் என அழைக்கப்படும் பாத்திரங்களை செய்வதற்கும் உதவும். இவை கள்ளு, கஞ்சி போன்றவை குடிப்பதற்கும் தண்ணீர் மெள்ளுவதற்கும் உபயோகமானவை.

    3.2 கூரை, வேலி

    பச்சைஓலைகளை பனம் மட்டையுடன் வெட்டி வெய்யிலில் வாடவிட்டு ஒன்றன்மேல் ஒன்றாக நீளவாட்டில் அடுக்கி தட்டையாக்குவர். இவ்வாறு தட்டையாக்கப்பட்ட ஓலைகளிலிருந்து பனம் மட்டைகள் வெட்டப்பட்டு வீட்டுக் கூரைகளுக்கும், பனமட்டையுடன் கூடிய ஓலைகள், வேலிகள் அடைப்பதற்கும் பாவிக்கப்படும். ஓலைகளை சிலசமயம் தட்டி எனப்படும் மறைப்புகளை செய்வதற்கும் பாவிப்பர்.

    3.3 கால்நடையுணவு

    பச்சை ஓலைகளிலிருந்து ஓலைப்பகுதியை ஈக்கிலிருந்து நீக்கி, மெல்லிய வார்களாக அரிந்து மாடுகளுக்கு உணவாக பயன் படுத்துவர். இவ்வாறு ஓலை கிழித்து எடுக்கப் பட்டபின் மட்டை உட்பட மிஞ்சிய ஈக்குடன் கூடிய பகுதி மூரிமட்டை என அழைக்கப்பட்டு வேலிகளுக்குப் பயன்படும். சில சமயம் ஈக்குகள் எதுவுமில்லாமல் பனம் மட்டைகள் மட்டும் வேலிகளுக்கு பாவிக்கப்படும்.

    3.4 உரம்

    பச்சை ஓலைகள் தோட்டங்களுக்கு உரமாகவும் உபயோகமுள்ளன. குறிப்பாக மண் பரப்பான நிலங்களுக்கு இவைகள் தாழ்க்கப்படும்போது இவை உரமாவது மட்டுமல்லாமல் நீரை தேக்கி, பயிர்களை வளர்ச்சியடையவும் வைக்கின்றன.

    3.5 எரிபொருள்

    வேலிகளுக்கும், கூரைகளுக்கும் பாவிக்கப்படும் ஓலைகள், மட்டைகள் என்பன சிறிது காலத்திற்கு பிறகு உக்கத் தொடங்கும். இதனால் இவற்றை புது ஓலைகளினால் மாற்றவேண்டும். இவ்வாறு மாற்றும் போது பழைய ஓலைகள் எரி பொருளாக உபயோகிக்கப்படுகின்றன.

    4. பனம் ஈக்கு

    பனை ஓலைப்பெட்டிகளின் விளிம்புகளை பலப்படுத்த ஈக்குகளைப் பாவிப்பர். பனம் ஈக்கிலிலிருந்து கூடைகள், தூரிகைகள் என்பன செய்யப்படுகின்றன. வெங்காயங்களை பழுதுபடாமல் தூர இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு பனம் ஈக்கினால் பின்னப்பட்ட காற்றோட்டமுடைய வெங்காய கூடைகள் இன்னும் பாவனையில் உள்ளன.

    5. காவோலை

    பனை ஓலைகள் முதிர்ச்சியடைய காய்ந்து, கபிலநிறமாக மாறி முடியிலிருந்து தொங்கி கொண்டிருக்கும். இவை காற்று வீசும்போது ஆடி மரத்தோடு உரசும் ஒலி கேட்பதற்கு ரம்மியமாக இருக்கும். காவோலை என அழைக்கப்படும் இவ்வோலைகள் நன்றாக காய்ந்தபின் மரத்திலிருந்து தானாக விழும். இவ்வோலைகளை எரிபோருளாகவும் பச்சை ஓலைகளைப் போலவே, மணல் தன்மை கூடிய தோட்ட மண்ணுக்கு இவைகளைத் தாழ்ப்பதன் மூலம் அவை உக்கி உரமாவதோடு நீரையும் தேக்கி வைக்கும்.

    6. பனம் மட்டை

    பனம்மட்டை வலிந்த நார்களைக் கொண்டது. கருக்கு நீக்கப்பட்டபின் நார்களைத் தனிப்படுத்தி வலிமையான பொருட்களான கடகம், பட்டை, சுளகு, போன்றவை செய்யப்படுகின்றன. இவ்வகை கொள்கலன்கள் மேலும் பலமாக இருப்பதற்காக அவற்றின் விளிம்புகள் தடித்த நார்களால் செய்யப்பட்டிருக்கும். கடகம் கல், மண் போன்ற பாரமான பொருட்ளை கொண்டு செல்வதற்கு உகந்தது. சுளகு அரிசி, நெல் போன்றவற்றை புடைப்பதற்கு பிரயோசனமானது. பட்டை அகலமானது, கீழ்ப்பகுதி எண்கோண வடிவுள்ள முனைகளைக் கொண்டது. கிணற்றிலிருந்து தண்ணீரை அள்ளி பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு பாவிக்கப்படும். தற்போது நீரிறைக்கும் இயந்திரங்கள் இருப்பதால் பட்டைகளின் பாவனை அற்றுப் போய்விட்டது எனச் சொல்லலாம்..
       
    உறி, திருகணை, இடியப்பத்தட்டு, கயிறு போன்றவை செய்வதற்கும் பனம் மட்டையிலிருந்து பெறப்படும் நார்கள் பிரயோசனமானவை. வடலி போன்ற சிறிய பனைகளிலிருந்து மட்டையுடன் பெற்ற சிறிய, இளம் ஓலைகளப் பாவித்து பனை விசிறிகள் செய்யப்படுகின்றன.
     
    பனை மரமேறிகள் பனம் நாரை கால் பாதங்களில் வட்டமாகக் கோர்த்து பனை மரமேறுவதற்கு உபயோகிப்பார்கள். விளக்கீடு சமயங்களில் பனம் நார் தடிகள் தீப்பந்தம் செய்வதற்கு உகந்தன.

    7. கங்கு மட்டை

    பனம்மட்டையின் மரத்தோடு சேர்ந்திருக்கும் கங்கு மட்டை எனப்படும் பகுதி மிகவும் வலிமையான சிராம்பு போன்ற நார்களைக் கொண்டது. இந்நார்கள் கடுமையான நிலங்களை துப்பரவாக்கக் கூடிய பனந்தும்புத்தடிகள், துடைப்பங்கள என்பனவற்றிற்கும், கயிறு என்பன செய்வதற்கும் உபயோகமானவை.

    கங்கு மட்டை

    ஒரு நல்ல எரிபொருள்.  இவற்றை சேகரித்து வீட்டில் மழை படாத ஒரு பகுதியில் தூக்கி கட்டி விடுவார்கள். இவை மழைகாலங்களில் அடுப்பெரிப்பதற்து மிகவும் பிரயோசனமானவை.

    8. பன்னாடை[[சிபி அல்ல]]

    கங்குமட்டையை பனைமரத்துடன் ஒட்டவைத்திருக்கும் வலை போன்ற பன்னாடை சிலசமயம் கள்ளு வடிப்பதற்கு வடியாக உபயோகிக்கப்படும். அத்துடன் பன்னாடை அடுப்பை மூட்டுவதற்கு சிறந்த எரிபொருள்.

    9. பாளைகள்

    ஆண், பெண் இரண்டு பனைகளிலும் பூக்கள் பாளைகளில் தோன்றுகின்றன. இவை இவற்றின் பயன்கள் முடிந்தபின் காய்ந்து மரத்திலிருந்து விழும். இவ்வாறு பெறப்படும் காய்ந்த பாளைகளும் எரிபொருளாக பயன்படுகின்றன.

    10. பதநீர்

    ஆண், பெண் இருவகையான மரங்களிலிருந்தும் அவற்றின் பூந்துணரான பூம்பாளைகளிலிருந்து பதநீர், கள்ளு போன்ற பானங்கள் பெறப்படுகின்றன. ஆண் பனையிலிருந்து அரிபனை, வள்ளுபனை முறைகளிலும், பெண்பனையிலிருந்து தட்டுபனை, காய்வெட்டி முறைகளிலும் பாளைகள் ஒன்றாக சேர்த்து கட்டப்பட்டு மென்மையாக தட்டப்படும். இப்படித் தட்டும்போது அவற்றின் திசுக்கள் சிதைபடும். இதனால் அவற்றிலிருந்து சாறு வெளியேறும். வெட்டப்பட்ட பாளைகளின் நுனியில் பானை போன்ற முட்டிகளைக் கட்டிவிடுவார்கள். இவற்றில் வெளியேறும் திரவம் சேகரிக்கப்படும். இத்திரவம் மெல்லிய வெள்ளை நிறமுடையது, இனிமையானது. இதுவே பதநீர் அல்லது கருப்பணி என அழைக்கப்படும் திரவம். முட்டியின் உட்பகுதியில் சுண்ணாம்பை பூசி வைப்பார்கள். இது பதநீர் கள்ளாக நொதித்து மாறுவதை தடுக்கும். சுண்ணாம்பைத் தவிர Acronuchia pendunculata, Vateria capillata  என்ற மரங்களின் பட்டைகளும் நொதித்தலைத் தடுக்கும் ஆற்றலையுடையவை.

    பதநீர் அதிக அளவில் சீனித்தன்மை கொண்டதினால் ஒரு சுவையான பானமாகவுள்ளது. கருப்பநீரில் 12-16% சீனித்தன்மை உள்ளதெனவும், அதில் சுக்கிரோசு வெல்லம் 11% எனவும் அதைத்தவிர குளுக்கோசு, பிரக்ரோசு, புரதம் என்பனவும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தவிர பதநீர் அதிகளவில் பொட்டாசியம், கல்சியம், போஸ்பரஸ், மக்நீசியம் போன்ற கனிப்பொருட்களையும் கொண்டுள்ளது. மேலும் பல முக்கியமான அமினோ அமிலங்களும், உயிர்ச்சத்துக்களான அஸ்கோபிக் அமிலம் (vitamin C) பன்ரோதீனிக் அமிலம் (vitamin B5), ரைபோபிளேவின் (vitamin B1) என்பனவும் இதில் உண்டு.

    பதநீர் ஒரு குளிர்மையான பானம் என்றமைவதால் சிலசமயம் பொக்குளிப்பான், சின்னமுத்து போன்ற நோயை உடையவர்களுக்கு நோய்த்தன்மையை குறைப்பதற்கு கொடுக்கப் படுகின்றது. சருமவியாதிகளான தோல்நேய், அக்கி போன்றவற்றிற்கும் பதநீர் நல்லது. பதநீரில் குரோமியம் போன்ற கனிப்பொருள் இருப்பதால் நீரிழிவுள்ளவர்களின் இரத்த அளவை இது குறைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    11. சர்க்கரைப் பெருட்கள்

    பனை மரத்திலிருந்து பெறப்படும் பதநீரை காய்ச்சி அதனிலிருந்து நீரை அகற்றி பனஞ்சீனி, கல்லக்காரம், பனங்கட்டி, கருப்பட்டி போன்ற இனிப்புடைய பதார்த்தங்கள் பெறப்படுகின்றன. பனங்கட்டியில் 70% சுக்கிரோசு வெல்லம் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. பனங்கட்டிகள் வேவ்வேறு அளவிலான பனங்கட்டி குட்டான்களில் அடைக்கப்படுகின்றன. கோவில் திருவிழாக் காலங்களில் கடலை, கச்சான் போன்றவற்றுடன் சிறிய பனங்கட்டிக் குட்டான்களும் விற்கப்படுவதுண்டு.

    தற்போது பனந்தேன், பனம்பாணி என்பன பதநீரிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. பனை வெல்லம், சில்லுக்கருப்பட்டி, பனங்கற்கண்டு, chocolate, ginger toffee என்பனவும் உற்பத்தி செய்யப் படுகின்றன. பதநீரை அரிசி, பயறு என்பனவற்றுடன் சேர்த்துக் காய்ச்சி கருப்பணிக்கஞ்சி செய்வதும் உண்டு.

    12. கள்ளு[[பன்னிகுட்டி கவனத்திற்கு]]

    முட்டியின் உட்பகுதியில் சுண்ணாம்பை பூசாமல் விட்டால் பதநீரை காற்றிலுள்ள மதுவங்கள் (yeasts) போன்ற நுண்ணங்கிகள் நொதித்து (fermentation) அதனை வெள்ளை நிறமுடைய பனங்கள் அல்லது கள்ளு என்னும் பதார்த்தமாக மாற்றும். கள்ளு 5-6 வீதம் மது (ethyl alcohol) வைக்கொண்டிருக்கும். இது பலரால் விரும்பிப் பருகப்படும் ஒரு பானம்.

    பனங்கள்ளு வேறு பாவனைகளுக்கும் உபயோகமானது. அப்பம் போன்ற உணவுப்பண்டங்களை புளிக்க வெப்பதற்கு சிறிது கள்ளை சேர்ப்பார்கள். இதிலுள்ள மதுவங்களின் தொழிற்பாட்டால் நொதித்தலின் போது தோற்றுவிக்கப்படும் காபனீரொட்சைட் என்னும் வாயு அப்பத்தை பொங்க வைக்கும். உடம்பில் புண்களால் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதற்கும் கள்ளு உதவுகின்றது. வறுத்த பிஸ்கோத்தை கள்ளில் ஊறவிட்டு புண்ணை மூடி கட்டினால் osmosis மூலம் வீக்கத்திலுள்ள நீர் வெளியேறி வீக்கம் குறையும். பனங்கள் நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்திலுள்ள வெல்லத்தின் அளவையும் கட்டுப்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    13. வினாகிரி

    கள்ளை முற்றாக நொதிக்க வைத்தால் அது அமிலமாகி (acetic acid)  புளித்த கள்ளாக மாறும். இதிலிருந்து வினாகிரி தயாரிக்கலாம். வினாகிரி, இறைச்சி வகைகளை மென்மையாக்குவதற்கு பாவிக்கப்படும். கள்ளு முட்டிகளின் அடியில் இறந்த மதுவங்களும், மிச்சமுள்ள பொருட்களும் சேர்ந்து மண்டி எனப்படும் அடைசலைத் தோற்றுவிக்கும்.

    14. பனஞ்சாராயம்

    கள்ளை வடிகட்டி தூர்மையாக்கி பனஞ்சாராயம் பெறலாம். பனஞ் சாராயத்தின் மணத்திற்கு அது கொண்டுள்ள ethyl acetate எனப்படும் இரசாயனப் பதார்த்தம் காரணம். சிலர் கள்ளுடன் பல வகையான உடம்பிற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களைச் சேர்த்துக் காய்ச்சுவர். இது கசிப்பு எனப்படும். இது நல்ல பானமல்ல.

    15. நுங்கு [[கக்கு மாணிக்கம் கவனத்திற்கு]]

    பெண் பனையின் பாளையிலிருந்து உண்டாகும் இளம் பனங்காய்கள் கொத்தாக குலைகளில் தோன்றும். இவை சில குறித்த மாதங்களிலேயே தோன்றத் தொடங்கும். இக்காய்கள் பொதுவாக மூன்று கண்கள், என அழைக்கப்படும் குழிகளைக் கொண்டிருக்கும். சில இரண்டு கண்களையும் இன்னும் சில ஒரு கண்ணையும் உடையவை. இவற்றில் ஜெலி போன்ற திரவப்பதார்த்தம் உண்டு. இது நுங்கு அல்லது நொங்கு என்று அழைக்கப்படும். இது சுவைப்பதற்கு ருசியானது. காயை வெட்டி நுங்கை உறிஞ்சிக் குடிப்பார்கள். நுங்கின் மேல்பகுதியில் மூன்று, கோது போன்ற செவியமைப்பையுடைய அமைப்புக்கள் உண்டு. இவை பணிவில் அல்லது பணுவில் என அழைக்கப்படும். நுங்கை குடிப்பதற்கு சிலர் இதனைப் பாவிப்பர். பணிவிலைப் பாவித்து சிலர் கஞ்சி, கூழ் போன்றவற்றையும் குடிப்பது உண்டு.
    நுங்கு 10-11% வெல்லத்தையும், 2% புரதத்தையும், கொண்டுள்ளது. காயை நுங்குக்காக வெட்டியபின் சிறிது நேரத்தில் வெட்டிய மேற்பரப்பு மண்ணிறமாக மாறும். இதற்கு காரணம் இதிலுள்ள polyphenols  என்னும் பதார்த்தங்கள் காற்றிலுள்ள ஒக்சிஜனினால் ஒக்சியேற்றப்பட்டு மண்ணிறமான quinone என்னும் பதார்த்தங்களை தோற்றுவிப்பதினால். நுங்கு சாப்பிட்டபின் மிகுதியாக இருக்கும் பகுதி கோம்பை என அழைக்கப்படும். இதனை சிறு துண்டுகளாக வெட்டி மாடுகளுக்கு உணவாகக் கொடுப்பார்கள்.
    காய் முதிர்ச்சி அடைய அடைய நுங்கு நீர்த்தன்மையை இழந்து கெட்டியானதாக மாறும். இந்நிலையில் காய்களை சீக்காய் என அழைப்பார்கள். சீக்காய் சாப்பிடக்கூடியது அல்ல என்றாலும் சிலர் இது முற்றாக வைரமாகுமுன் சீவிச் சாப்பிடுவதுமுண்டு. இவை விருத்தியடைந்து பனம்பழமாகவும் நுங்கு இருந்த பகுதி பனம் விதையாகவும் மாறும்.

    15. பனம்பழம்

    ஒவ்வொரு பனம்பழத்திலும் பொதுவாக பனம்விதைகள் மூன்று காணப்படும். சிலவேளை இரண்டு விதைகளுடனும் அல்லது ஒரு விதையுடனும் பனம் பழங்கள் காய்ப்பதுண்டு. சிலர் பனம்பழத்தைச் சூப்பி சாப்பிடுவதுண்டு. பனம் பழத்தை அடுப்பில் சுட்டுச் சாப்பிடுவதும் உண்டு. பனம்பழங்களை மாடுகளும் விரும்பிச் சூப்பிச் சாப்பிடும்.
     
    பனம்பழத்தின் தோல் கருமை நிறமுடையதும் நார்த்தன்மை கொண்டதுமாகும். இதன் உள்ளே மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறமுடைய மிகவும் நார்த்தன்மை கொண்ட பழக்கூழ் உள்ளது. பனம்பழத்தின் இந்நிறங்களுக்கு carotene, lycopene எனப்படும் நிறப் பொருள்கள் காரணம். பனங்கூழைப் பிழிந்து பனங்களி எடுப்பார்கள். பனங்களி சத்துள்ளது. இதில் வெல்லம் 14-16%, புரதம் 4% மற்றும் கரட்டின், உயிர்ச்சத்து A,  C, E என்பவை உள்ளன. உயிர்ச்சத்து A கண்களுக்கு நல்லது. உயிர்ச்சத்து C ம், E ம் சிறந்த ஒக்சியேற்ற எதிரிகள் ; (antioxidants). எமது உடம்பில் அனுசேப தாக்கங்கள் காரணமாக பல free radicals  என்னும் பதார்த்தங்கள் தோன்றுகின்றன. இவை எமது உடம்பிலுள்ள கலங்களை அழிக்க வல்லன. ஒக்சியேற்ற எதிரிகள் இந்த free radicals இன் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும். அத்துடன் இவை இரத்தத்திலுள்ள கொலஸ்ரரோலயும் குறைக்க வல்லன.

    பனங்களி உவர்ப்பு கலந்த இனிமையைக் கொண்டது. இதன் உவர்ப்புத் தன்மைக்கு flabelliferins என்னும் இராசயானப் பதார்த்தங்கள் காரணமாகும். இவை நுண்ணுயிர் கொல்லித் தன்மை கொண்டவையென ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

    16. பனம்பழப் பொருட்கள்

    பனங்களியிலிருந்து தயாரிக்கப்படும் பனங்காய்ப் பணியாரம் பலருக்கு விருப்பமான, சுவையான சிற்றுண்டி. பனம்பழத்திலிருந்து பனம்பாணி, பனம்ஜாம், palmyrah cordial, palmyrah crush போன்ற பொருட்களும் தற்போது தயாரிக்கப் படுகின்றன.

    பனங்களியைப் பாயில் ஊற்றி, வெயிலில் காயவைத்து அதனிலிருந்து பனாட்டு என்னும் பதார்த்தத்தைப் பெறுவார்கள். சில சமயம் இதனைப் புகை போட்டு வைத்தால் நீண்டகாலம் வைத்து பாவித்து உண்ணலாம். பனாட்டை தேனில் தோய்த்து காயவைத்து பாணிப்பனாட்டு தயாரிக்கப் படுகின்றது. தற்போது palmyrah nectar எனப்படும் பனம்குளிர்பானம் பனங்களியிலிருந்து தயாரிக்கப் படுகின்றது. பனம் ஐஸ்கிறீம், பனம் biscuits, chocolates, fruit bars என்பனவும் தற்போது செய்யப்படுகின்றன.

    பனம்பழத்தில் saponins என்னும் பொருட்கள் உள்ளன. இவை நுரைக்கும் சக்தியைக் கொண்டன. இதனால் பனங்களியைப் பாவித்து உடுப்புகள் தோய்த்ததும் உண்டு. பனங்களியின் இந்த குணாதிசயத்தைப் பாவித்து shampoo, சவர்க்காரம் போன்றவை செய்ய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். பனங் களியில் அதிகளவு pectin உள்ளது. இதனைப் பிரித்தெடுத்து ஐஸ்கிறீம், soup போன்ற உணவுப்பண்டங்களுக்கு ஒரு தடிப்பாக்கியாக (thickner) பாவிக்கலாம்.
     
    17. பனம் விதை

    பனம் விதை ஓரளவிற்கு நீள் வட்டமானது, ஆனால் தட்டையானது. விதையின் மேற்பரப்பு முழுவதும் மென்மையான நார்களால் சூழப்பட்டிருக்கும். இந் நார்கள் மெத்தைகள், வாசல் பாய்கள் போன்றவை செய்வதற்கு உகந்தன. பனம் விதையை எரிபொருளாகவும் பாவிக்கலாம்.

    18. பூரான்

    சிலர், பனங்கொட்டைகளை அவை முளைக்குமுன் சேகரித்து அவற்றை இரண்டாகப் பிளப்பார்கள். இவற்றின் உள்ளே சாம்பல் நிறமுடைய பகுதியிருக்கும். இதன் நடுவில் வெள்ளை நிறமான, மென்மையான விதையின் முளையத்தைக் (embryo)  கொண்ட பகுதி  இருக்கும். இது பூரான் எனப்படும். இது மிகச் சுவையானது, பலரால் விரும்பி உண்ணப்படுவது. பூரான் முளைக்கும் பனை விதைக்கு உணவாகப் பயன்படுவது. பனம் விதைகள் முளைத்து பனங்கிழங்குகள் தோன்றியபின் இப்பூரானின் சத்துக் குறைந்து, சுருங்கி, நீர்த்தன்மையாக மாறும். இந்நிலையில் இதனை சீத்தல், சிதவல் அல்லது சீந்தல் என அழைப்பர்.

    19. பனங்கிழங்கு

    பனம்மரத்திலிருந்து தானாக கனிந்து விழுந்த விதைகள் நாளடைவில் முளைத்து பனங்கிழங்குகளைத் தோற்றுவிக்கும். இதைத்தவிர, பனம் விதைகள் சேகரிக்கப்பட்டு நிலத்தில் படைபடையாக அடுக்கப்பட்டு மண்ணால் மூடப்படும். இது பனம்பாத்தி எனப்படும். மூன்று, நாலு மாதங்களில் விதைகள் முளைத்து அவற்றிலிருந்து பனங்கிழங்குகள் தோன்றும். பனங்கிழங்கு பனைமரத்தின் வேர்ப்பகுதியல்ல. இது உண்மையில், முளைத்த விதையிலிருந்து உண்டான முதல் இலையின் இலை மடலாகும். இது பருத்து அதிகளவில் மாச்சத்தைக் (starch) கொண்டிருக்கும். அத்துடன் அதிகளவில் நார்களைக் கொண்டவை. இவற்றின் தோல் கடற்பஞ்சு போல் மென்மையாக இருக்கும். இவற்றை தோலை நீக்கியபின், நீரில் அவித்து இரண்டாகப் பிளந்து, நார்களை நீக்கிச் சாப்பிடுவார்கள். சிலர் பனங்கிழங்கை உப்பு, வெங்காயம், மிளகு என்பனவற்றுடன் சேர்த்துச் சாப்பிடுவதுமுண்டு.  பனங்கிழங்கு அதிக நார்ச்சத்தைக் கொண்டிருப்பதால் உடம்பிற்குத் தேவையான நார்ச்சத்தைக் கொடுப்பதோடு ஒரு நல்ல மலம் இளக்கியாகவும். தொழில் படும். மேலும் வயிற்றுளைவு, நெஞ்சு நோய் போன்ற பல நோய்களுக்கு அருமருந்தாகவும் உள்ளது. பனங்கிழங்கைச் சாப்பிட்டு பலர் நீண்டகாலம் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகின்றது.

    20. ஒடியல்

    முதிர்ந்த பனங்கிழங்கின் தோலை நீக்கியபின் அவற்றைப் பிளந்து வெய்யிலில் காயவைப்பார்கள். இது காய்ந்து கடினமாக மாறும். இது ஒடியல் எனப்படும். ஒடியலை அரைத்து பெறப்படும் மா ஒடியல் மா எனப்படும்.  ஒடியல் மாவில் 82% காபோவைதரேற், 3% புரதம், அத்துடன் கல்சியம், பொற்றாசியம் என்பன இருப்பதாக அறியப்பட்டுள்ளது. ஒடியல் மாவை சிலசமயம் முருங்கை இலையுடன் சேர்த்து ஒடியல்புட்டு செய்வார்கள்;. ஒடியல் மாவின் முக்கிய பாவனை ஒடியல் கூழ் தயாரிப்பு. ஒடியல் கூழ் செய்யமுன் ஒடியல் மாவை நீரில் கரைத்து பல முறை கழுவி, கழுவிய நீரை வெளியே ஊற்றுவார்கள். இது ஒடியலிலுள்ள கசப்பத் தன்மையைக் குறைக்கும். பல வகையான சைவ, மாமிச ஒடியல் கூழ்கள் தயாரிக்கப் படுகின்றன. ஒடியல் மாவை வேறு மா வகைகளுடன் சேர்த்து தோசை, இட்டலி, இடியப்பம், பாண் என்பனவும் செய்ய முயற்சிக்கப்படுகின்றது.

    21. புளுக்கொடியல்

    பனங்கிழங்கை அவித்து காய வைத்தபின் அது புளுக்கொடியல் எனப்படும். இது ஒடியலிலும் பார்க்க வைரமானது. இதனை நேரடியாகவே சாப்பிடலாம் அல்லது புளுக்கொடியல் மாவாக்கி சிற்றுண்டியாகப் பயன்படுத்தலாம். புளுக்கொடியலை உரலில் இடித்து தேங்காய்ப்பூ, சர்க்கரையுடன் சேர்த்து பெறப்படும் துவையல் மிக ருசியானது. புளுக்கொடியலை தேங்காய் சொட்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதும் உண்டு. சில சமயம் பனங்கிழங்கை சிறிய சில்லுகளாக வெட்டிக் காய வைத்து புளுக்கொடியல் சில்லுகள் செய்வர்.

    22. ஊமல் கொட்டை

    பனங்கிழங்கை நீக்கியபின் மிஞ்சி இருக்கும் பனம்விதை ஊமல் கொட்டை எனப்படும். இதனுடைய சுவர்கள் lignin என்னும் தடித்த, வைரமான பதார்த்தினாலானவை. இதனால் இது ஒரு சிறந்த எரிபொருளாகப் பாவிக்கப் படுகின்றது. ஊமல் கொட்டையிலிருந்து பனங்கரியும் (charcoal) தயாரிக்கலாம்.

     23. அடிமரம்

    பனைமரத்தின் அடிமரப்பகுதி மிகவும் வைரமானது. நீன்ட காலம் பாவிக்கக்கூடியது. இதில் உள்ள இரசாயனப் பொருட்கள் பங்கசுக்களால் தோற்றுவிக்கப்படும் உக்கலையும், பூச்சி அரித்தலையும் தடுக்கும் வல்லமை உள்ளன. இதன் காரணமாக, வைரமான மரம் பல வீட்டு, கட்டிட வேலைகளுக்கு பரவலாக பாவிக்கப்படுகின்றது. இதனுடைய வைரத்தின் தடிப்பு மேல்நோக்கி குறைந்து கொண்டு போகும். சிலர் வைரமுடைய அடிமரத்தை நீள்பாகமாக இரண்டு பகுதியாக பிளந்து உள்ளேயுள்ள மென்மையான பகுதியை நீக்குவர். இதன்பின் இரண்டு பகுதியையும் ஒன்றாக்கி கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுக்க பாவிக்கப்படும் துலா செய்வதற்கு உபயோகிப்பார்கள். தற்போது துலாவின் பாவனை குறைந்து கொண்டு வருகின்றது.

    வைரத்தின் தடிப்பு குறைந்த மரப்பகுதி அவற்றின் தடிப்பைப் பொறுத்து தீராந்தி, வளை, துலாவின் அச்சு, மாட்டு வண்டிலின் பார் சட்டம் போன்றவை செய்ய பாவிக்கப்படும். இன்னும் வைரம் குறைந்த மரம் சிலாகை செய்ய பாவிக்கப்படும். இவ்வாறான மரங்கள் மண், கல் வீட்டுக்கூரைகளில் அதிகளவில் பாவிக்கப்படுகின்றன. இவ்வாறாக பாவிக்கப்படும் மரங்கள் 100 வருடம் வரை இருக்கும் எனச் சொல்லப்படுகின்றது.
    விழாக்காலங்களிலும், திருமணம் போன்ற வைபவங்களின் போதும் பந்தல்கள் போட பனம் வளைகளும், சிலாகைகளும் பெருமளவில் உதவுகின்றன.
     
    வைர மரத்திலிருந்து ஏணி, விளையாட்டுப் பொருட்கள், மரச் செதுக்கல்கள், சிற்பங்கள், குவளைகள், உணவுத்தட்டுகள், பென்சில்கள், வளையல்கள் போன்ற பல விதமான பொருட்கள் தற்போது தயாரிக்கப்படுகின்றன.

    24. சோத்தி

    பனை மரத்தின் வைரமாகாத உட்பகுதி வெள்ளையாகவும் மென்மையாகவும் இருக்கும். இது சோத்தி எனப்படும். ஒரு காலத்தில் இப்பகுதியை மக்கள் உணவாக சாப்பிட்டதாகவும் கதைகள் உண்டு. சிலர் இவற்றை காயவைத்து எரிபொருளாக பாவிப்பர்.

    பனமரத்தின் வைரம் குறைந்த மேல் மரப்பகுதி மரக்குற்றியாக வெட்டப்பட்டு தூண்களாகவும், பாலங்கள் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இதே வகையான குற்றிகளைப் பிளந்து சோத்தியை நீக்கி நீர்த் தொட்டி போல் செய்து, நீரை நிறைத்து மாடுகள் நீர் குடிப்பதற்கு உபயோகித்ததுண்டு. இவை பனம் கொட்டு எனப்படும். சிலர் இவ்வாறு சோத்தி நீக்கப்பட்ட நீள் மரத்துண்டுகளை பீலிகளாகப் பாவித்து நீர் பாய்ச்சுவதற்கும் உபயோகித்திருக்கின்றார்கள். பனைமரத்தின் வைரத்தை கட்டுமானப் பொருட்கள் செய்யும்போது அவற்றின் பட்டையை செதுக்கி நீக்குவார்கள். சிராய் என அழைக்கப்படும். இவை சிறந்த எரிபொருள். வெட்டிய பனைமரத்தின் அடிப்பகுதியை (stump)  சிலர் அதன் நடுவிலுள்ள மென்மையான பகுதியை நீக்கி குண்டாளம் போல் செய்வார்கள். பின் இதனுள் சுண்ணாம்புச் சிப்பிகளைப் போட்டு சுண்ணாம்புக் கொப்பரைகளாகப் பாவிப்பார்கள். சில சமயம் இந்த அடிப்பகுதி வெட்டிப் பிளக்கப்பட்டு எரிபொருளாகவும் பாவிக்கப்படும்.

    25. பனம்வேர்

    பனை மரத்தின் வேர் கருமையானது, பென்சில் அளவு தடிப்புடையது. வெட்டிய மரங்களிலிருந்து சிலர் இவற்றை எடுத்து எரிபொருளாகப் பாவிப்பர். பனம்வேரையும் மருந்து மூலிகையாகப் பயன்படுத்தலாம் எனச் சொல்லப்படுகிறது.

    இவ்வாறு பனை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மனித குலத்திற்கு உணவாகவும், இன்னபிற தேவைகளுக்காகவும் பயன்படுகின்றது. தேவையற்றது என்றோ, வீணானது என்றோ வீசி எறிவதற்கு பனை மரத்தில் ஒன்றுமேயில்லை. பனை மரத்தைப் போல எல்லா விதத்திலும் பிரயோசனமான மரம் வேறெதுவுமில்லை. அது ஒரு கற்பகத்தரு.
    பனை மரம் இவ்வளவு உபயோகங்களைக் கொண்டிருந்தாலும் இன்னும் இதன் பாவனைகள் முழுமையாக உபயோகிக்கப்படவில்லை என்றே சொல்லலாம். பனைமரத்தை பொருளாதார ரீதியில், வர்த்தகத்திற்குரிய முறையில் வளப்படுத்துவதற்கு என்ன காரணங்கள் தடையாக உள்ளன, என்ன முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும் என ஆராய வேண்டும்.
    முதலாவதாக, பனை மரம் முற்றாக பயனைத்தர நீண்ட காலம் எடுக்கின்றது. தென்னை மரத்தைப் போல குறுகிய காலத்தில் பயனைத் தரக்கூடிய புதிய வகைகள் இன விருத்தி செய்யப்பட வேண்டும். இத்துடன் குள்ளமான பனை மரங்களை உருவாக்க முடியுமா என ஆராய வேண்டும்.
    இரண்டாவதாக, தற்போது தென்னை, பேரீச்சை, எண்ணை மரம் போன்ற மரங்களை tissue culture என்னும் முறையில் உருவாக்க வெற்றிகரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இம்முறையில் இம்மரங்களின் நுனிப்பகுதிகளிலிருந்து மிகச்சிறிய துண்டுகள் எடுக்கப்பட்டு செயற்கையாக ஆய்வு கூடங்களில் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் ஒரு சிறிய துண்டிலிருந்து நூற்றுக்கணக்கான மரங்களை உருவாக்கலாம். இதில் இன்னுமொரு நன்மை என்னவெனில் இவ்வாறு தோற்றுவிக்கப்படும் மரங்கள் எல்லாவிதத்திலும் ஒரேமாதிரியானவையாகவும், ஒத்த குணாதிசியங்களை உடையதாகவும் இருக்கும். இத்தொழில் நுட்பமுறையை பாவித்து பனைமரங்களையும் நூற்றுக்கணக்கில் மிகவும் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளனவா என ஆராய வேண்டும்.
    மூன்றாவதாக, பனை மரத்தின் உற்பத்தி பொருட்களான நுங்கு, பனம்பழத்திலிருந்து பெறப்படும் உணவு, நீர்பானங்கள், பனை ஓலையிலிருந்து பெறப்படும் வெவ்வேறு வகையான கைப்பணிப்பொருட்கள், பனை மரத்தின் வைரத்திலிருந்து பெறப்படும் உற்பத்திப்பொருட்கள் என்பனவற்றை புதிய தொழில் நுட்பங்களைக் கொண்டு மேலும் நவீனப்படுத்தி மிகவும் இலாபகரமான முறையில் உற்பத்தி செய்ய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். மேலும், ஆராய்ச்சிகள் குறிப்பாக பனையின் உணவுப் பொருட்களின்  ஊட்டத்தை கூட்டும் வகையில், கசப்பு தன்மையைக் குறைத்து மேற் கொள்ளப்பட வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளான சவர்க்காரம், shamboo,  பற்பசை என்பனவற்றை பெரும் அளவில் செய்ய வேண்டும்.

    நாலாவதாக, பல காலம் தொட்டே பனையின் பல பகுதிகள் மருந்தாக பாவிக்கப்பட்டுள்ளன. ஆராய்வுகளின்படி பனை மரத்திலிருந்து பெறப்படும் பல பொருட்களில் உயிர் கொல்லி சக்தி உள்ளதென்றும், தோல் மற்றும் எலும்பு நோய்களுக்கு மருந்து மூலிகையாக உபயோகம் உள்ளதென்றும், இருதயத்தின் தசையை வலுப்படுத்துமென்றும் சிறுநீரக நோய்க்கு அருமருந்து என்றும் கூறப்படுகின்றது. பனை ஓலைச்சாறு, பதநீர், பனங்களி, ஒடியல் போன்றவற்றின் மருத்துவ குணாதிசயங்களை முற்றாக ஆராய்ந்து மென்மேலும் அவற்றை பயன் உள்ளதாக புதிய தொழில் நுட்பங்கள் மூலம் மூலிகை மருந்துகளாக பெற முயற்சிகள் மேற் கொள்ளப்படவேண்டும்.
    இப்படியான செய்கைகளை செய்வோமானால் நாம் பனை மரத்திற்கு அது நமக்கு அரிய பங்கினை அளித்தமைக்கு நன்றி உடையவர்களாக இருப்போம்...


    நன்றி : http://www.manaosai.com/




    http://tamil-smsworld.blogspot.com



  • http://tamil-smsworld.blogspot.com

  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger