Sunday 14 August 2011

நடிகை குட்டி பத்���ினி தி.மு.க., முன்���ாள் எம்.எல்.ஏ. மீ��ு நில அபகரிப்பு ��ுகார்

- 0 comments


நடிகை குட்டி பத்மினி தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ. மீது நில அபகரிப்பு புகார்முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் தனது ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்து விட்டதாக நடிகை குட்டி பத்மினியின் மகள் கீர்த்தனா போலீசில் புகார் அளித்துள்ளார். பிரபல நடிகை குட்டி பத்மினி, சென்னை ��ுங்கம்பாக்கம் காம்தார் மேலும்படிக்க

http://naamnanbargal.blogspot.com




  • http://naamnanbargal.blogspot.com


  • [Continue reading...]

    தினபலன் - 14-08-11

    - 0 comments


    மேஷம்:

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். விட்டுப் போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கரை காட்டுவீர்கள்.






    ரிஷபம்:


    யோகங்கள் வந்து சேர மேலும்படிக்க

    http://naamnanbargal.blogspot.com




  • http://naamnanbargal.blogspot.com


  • [Continue reading...]

    சட்டசபை கூட்டங்��ளில் தி.மு.க. உறுப்பினர்கள் கலந்த�� கொள்வார்கள்

    - 0 comments


    சட்டசபை கூட்டங்களில் தி.மு.க. உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்சட்டசபைக் கூட்டத்தொடரில் திமுக பங்கேற்கப் போவதாக திமுக பொருளாளரும், சட்டசபைக் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சட்டசபையில் திமுக உறுப்பினர்களுக்கு ஒரே வரிசையில் இடம் ஒதுக்கவில்லை என்றுதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தொடரைப் புறக்கணித்து வந்தனர்.

    இந்த நிலையில் மேலும்படிக்க

    http://naamnanbargal.blogspot.com




  • http://naamnanbargal.blogspot.com


  • [Continue reading...]

    மலையாள கரையோரம்....!!!

    - 0 comments


    பத்து வருஷம் முன்பு நடந்த சம்பவம், 
    தொழில் தர்மத்தை மீறிவிட்டான்னு சொல்றவங்க உள்ளே போகாதீங்க, ஏன்னா...... நான் சொல்ல போறவிங்க அப்போ வெள்ளித்திரையை கலக்கிகிட்டு [[கதாநாயகி]] இருந்தவிங்க, இப்போ சின்னத்திரையில் சீரா, யோக்கியமா நடக்கணும் வாழணும்னு நமக்கு புத்திமதி சொல்றாயிங்க...!!! அவிங்க யோக்கியதை என்னான்னு நீங்களும் தெரிஞ்சிக்கோங்க, என் நெருங்கிய பதிவுலக நண்பர்களுக்கு அந்த [[சுரேஷ் கோ, சுக'மான]] நடிக, நடிகையை, அவர்கள் யாருன்னு புரியும் ஸாரி தெரியும்....!!!


    பஹ்ரைன் ஹோட்டலில் நான் வெயிட்டராக பணி புரிந்த சமயம், கலை நிகழ்ச்சிக்காக வரும் மலையாளம், தமிழ் நடிக, நடிகைகள் எங்கள் ஹோட்டலில்தான் அதிகபட்சமாக தங்குவார்கள், காரணம்....... அந்த ஹோட்டல் மலையாளி மேனேஜ்மென்ட்....!!!


    நடிகைகள் தனியாகவும், சிலர் அம்மாக்களோடும், பாட்டிகளோடும் [[ உதாரணம் நம்ம நடிகை லட்சுமி மகள் ஐஸ்வர்யா, பாட்டியுடந்தான் வருவார்]] இப்பிடி தனியாக வரும் நடிகைகளுக்கும் தனி அறைதான் கொடுக்கப்படும், ஹீரோக்களுக்கும் தனி அறைதான், சிரிப்பு போலீஸ் ஸாரி காமெடி நடிகர்கள் ரெண்டு ரெண்டு பேராக தங்குவார்கள்.....!!!


    இப்படி அவரவர் ரேஞ்ச் அனுசரிச்சி ரூம் ஒதுக்கப்படும், அவர்கள் பஹ்ரைன் வரும் நேரம் எங்கள் ஹோட்டல், சவூதி, கத்தார், துபாய் நாட்டிலிருந்து வரும் மலையாளிகள், தமிழர்களால் ஹோட்டல் நிறைந்து காணப்படும்....!!! 


    என்ன...... கலை நிகழ்ச்சி பார்க்க ஆர்வமா வாராயிங்களா....? அதான் இல்லை...!!! [[ஹி ஹி கள்ள பயலுக பாஸ்]] அவிங்க பண்ணுற லூட்டியும், நடிகைங்க பண்ணுற அலம்பலும், நடிகைக்காக ஹீரோக்கள் படும் அவஸ்தையும், படு சுவாரஸ்யமாகவும், ஆச்சர்ய, அருவருப்பாகவும் இருக்கும்...!!!


    இப்பிடி பட்ட ஒரு சுபநாளில் [[வெளங்கிரும்]] நான் ரூம் சர்வீசில், இரவு டியூட்டியில் இருக்கும் போது [[நேரம் இரவு ரெண்டு மணி]] போன்....கேரளாவின் ரெண்டு சூப்பர் ஸ்டார்களின் நேர் அடுத்த ஹீரோ, தமிழிலும் இவர் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்....!!!


    ரெமிமார்ட்டின் மினியேச்சர் பாட்டல் ஐந்தும், ஐஸ் கியூப்சும், சோடாவும் கொண்டு வரசொன்னார்....[[இப்பிடி இரவு நேரம் இவர்கள் ஆர்டர் செய்யும் போது எங்களுக்கு ஜாலியா இருக்கும் ஹி ஹி]] வேகமாக எடுத்து சென்றேன், அவர் ஒரு சிங்கிள் ரூமில் தங்கி இருந்தார்....!!!


    சூப்பரான ரூம், டோர் பக்கம்தான் பாத்ரூம், உள்ளே போயிட்டு வெளியே வர வேண்டுமானாலும், உள்ளே வரவேண்டுமானாலும், பாத்ரூமை தாண்டிதான் வரணும் போகணும். அப்பிடி நான் ஆர்டர் கொண்டுபோய், காலிங் பெல் அடிச்சதும், கம்மிங் என கெம்பீர சத்தம், உள்ளே போனேன் அயிட்டம் எல்லாம் எங்கே வைக்கணுமா அங்கே வைத்து விட்டு, இன்னும் ஏதாவது வேணுமான்னு கேட்டேன், நோ தேங்க்ஸ் சொன்னதும் நான் கிளம்பி பாத்ரூம் பக்கம் வந்து, மெயின் டோரை திறக்கவும்......


    நடிகர் என்னை அழைத்தார், ஹலோ......என்ன சார் என கேட்டுக்கொண்டே டோர் பிடியை விடவும் அது "கிடிக்" என்ற சத்தத்துடன் லாக் ஆனது, நான் திரும்ப வந்து நடிகரிடம் ஆர்டர் எடுத்து விட்டு, டோர் நோக்கி நடக்கவும் அந்த சம்பவம் நடந்தது.......!!!


    படார் என பாத்ரூம் கதவை திறந்துகொண்டு ஒரு பெண் பச்சை நிரவாணமாக என்முன் வந்து நிற்க, [[ஒரு டவலாவது கையில வச்சிருக்க கூடாதா பாவி]] அவள் வீல் என அலற, நான் ஸ்தம்பித்து நிற்க....அந்த நடிகை சுத்த தமிழ் சுக'மான நடிகை......!!! 


    அவர் மறுபடியும் பாத்ரூமுக்குள் ஓட, நடிகர் ஹா ஹா ஹா ஹா என பயங்கரமா இருந்து சிரிக்கிறார் [[ஹி ஹி]] சரி பாத்ரூமுக்குள் ஓடிய நடிகை கதவையாவது சாத்தியிருக்கலாம் ஹய்யோ ஹய்யோ.....!!!


    சம்பவம் என்னான்னா, நான் ஆர்டர் கொண்டு வந்ததும் இந்த நடிகை பாத்ரூம் போயி ஒளிஞ்சிருக்கு, நான் ரூம் உள்ளே வந்ததும் மெயின் டோர் "கிடிக்" என லாக் ஆகும் சத்தம் பாத்ரூம் உள்ளே கேட்க்கும், அதே போல் நான் வெளியே போனாலும் இந்த "கிடிக்" சத்தம் கேட்க்கும்....!!!


    அங்கேதான் விதி விளையாடி விட்டது, நான் வெளியே போக டோரை திறக்கவும், நடிகர் என்னை திரும்ப கூப்பிடவும், நான் டோர் பிடியை விடவும் அது "கிடிக்" என அடையவும், உள்ளே இருந்த சுக'மான நடிகைக்கு நான் போய்விட்டதாக நினச்சிட்டு வெளியே வந்துட்டாங்க....!!!


    அப்புறம் என்ன......பத்துநாள் நான் பட்ட அவஸ்தை இருக்கே........சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம..."நம்பவும்" முடியாம ஹய்யோ ஹய்யோ....!!! இப்போ நினைச்சாலும் குலை நடுங்குது....!!!!

    நன்றி : கூகுள்.







    http://tamil-friend.blogspot.com




  • http://tamil-friend.blogspot.com


  • [Continue reading...]

    தக்காளியிடமும், ���ிபியிடமும் டைவர்ஸ் கேட்கும் கம்���ியூட்டர்...!

    - 0 comments


    என் மகள் எனக்கு சொன்ன ஒரு கம்பியூட்டரின் வேதனை....!!!


    நான் ஒரு கம்பியூட்டர், என்னை எல்லாரும் விரலால் குத்தி குத்தி கொல்றாயிங்க...!

    என்னை அங்கே இங்கேன்னு தூக்கி எரியுறாங்க....!

    டெலிட் பொத்தானை ஏன் டிலிட் பண்ணலைன்னு பிச்சி எடுக்குறாங்க...!


    ஷிப்ட் பட்டனை ஏன் இன்னும் ஷிப்ட் பண்ணலைன்னு புடுங்குறாங்க....!

    நேரான ஒரு இடத்தில் வைக்காமல் என்னை போட்டு அலைகளிக்கிறார்கள்...!

    சார்ஜிங் சமயம் என்னை படுத்துற இடமிருக்கே சொல்லி மாளாது..!


    ஏன் இவங்க எனக்கு ஒரு துணி தச்சி போடாம நிர்வாணமாகவே வச்சி மானத்தை வாங்குறாங்க....!!

    என்னை பேக்கினுள் நேரே வைக்காமல் உல்டா உல்டாவா வச்சி கொல்லுறாங்க...!


    ஒருத்தன் என்னடான்னா அதிகாலையிலேயே எழும்பி, விரலால் என்னை குத்தி குத்தி கொல்றான் [[ஹி ஹி நாந்தேன்]]

    வேலை வேணும்னாலும் என்னை குத்தி கொல்றாணுக, வேலை இல்லைன்னாலும் என்னை கொல்றாணுக....!


    சிபி'கிட்டே இருந்தும், விக்கி'கிட்டே இருந்தும் நான் டைவர்ஸ் வாங்கலாம்னு வக்கீலை பார்க்க போனாலும், அவனும் என்னை குத்தி கொல்றான்...!

    கவிதை எழுதி கொல்றான், கதை எழுதி கொல்றான், ஜோக் எழுதி கொல்றான், நியூஸ் எழுதி கொல்றான்......!


    ஓடினேன்................ ஓடினேன்............... ஓடினேன்............ ஓடினேன்.........பில்கேட்ஸ்'சிடமே ஓடினேன் தீர்வு காண..........அவனும் என்னை குத்தி கொல்றானே கொல்றானே கொல்றானே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

    டிஸ்கி : ம்ம்ம்ம் இந்தக்காலத்து பிள்ளைங்க என்னமா யோசிக்கிரயிங்கப்பூ....!!!




    http://tamil-friend.blogspot.com




  • http://tamil-friend.blogspot.com


  • [Continue reading...]

    டெரர்கும்மியின் புதிர் போட்டி அறிமுகம்....!!!

    - 0 comments



    முதல் டிஸ்கி : மைனஸ் ஓட்டு போடுற புண்ணியவான் இதை படிக்க வேண்டாம்.


    டிஸ்கி : இந்த பதிவை உணவு உலகம், ஆபிசர் சங்கரலிங்கம் அவர்களின் தளத்தில் இருந்து காப்பி பேஸ்ட் செய்திருக்கிறேன், ஏன்னா, பதிவுலகின் அடுத்த கட்டத்தை நோக்கி டெரர்கும்மி பட்டையை கிளப்ப போவதை, சந்தோசமாக வாழ்த்தி அறிமுக படுத்திய ஆபீசருக்கு நன்றி சொல்லி,டெரர்குரூப்புக்கு வாழ்த்தும் சொல்ல கடமை பட்டுள்ளேன்...!!!



    வாங்க மக்கா எல்லாரும் போட்டியில் கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்து வாழ்த்துவோம்.....

    -------------------------------------------

    பதிவுலகில் புதிர் போட்டி-புத்திசாலிகளுக்கு மட்டும்.


     பதிவுலகம் என்றாலே பக்கம் பக்கமாய் எழுதுவது, நேரம் பத்தலேன்னு சொல்லிக்கிட்டு, உள்குத்து பதிலொ(வொ)ன்றைப் போட்டு, பல தர்க்கங்கள் உருவாக்கிவிடுவது என்பதொன்றே  எழுதாத சட்டம் என்று இயற்றி வாழ்பவர்கள் மத்தியில், எழுத்துலக பிரபலங்கள்   பதினாறு பேர்         இணைந்து நடத்தும், டெரர்கும்மி என்ற வலைத்தளத்தில் ஒரு வித்யாசமான அறிவிப்பைப் பார்த்தேன்.
    எதிர்வரும் 17.08.2011ல் புதிர் போட்டி ஒன்றை அவர்கள் துவக்க உள்ளனர்.இந்தூர், ஐஐம் மாணவர்களால் வருடாவருடம் நடத்தப்படும் "KLUELESS" விளையாட்டின் தாக்கத்தால் அந்த புதிர் போட்டியை  உருவாக்கியுள்ளனர்.

    என்ன புதிர் போட்டி இது?

    • 1.நேரடி கேள்விகள் இருக்காது.... படமாகவோ, எழுத்தாகவோ, மவுஸ் கிளிக்காகவோ இப்படி வித்தியாசமாக இருக்கும்

      2.ஒவ்வொரு கேள்விக்குமான விடைக்கும் க்ளூ கொடுக்கப்பட்ட்டு இருக்கும். பேஜ் சோர்ஸ், பேஜ் டைட்டில், url name, image name அல்லது வெப்பேஜில் ஏதாவது ஒரு இடத்தில் க்ளூ இருக்கும்... அதை கண்டுபிடித்து  விடை சொல்ல வேண்டும்


      3.விடைகளை அதற்கான ஆன்சர் பாக்சிலோ, url name மாற்றுவது போன்றோ, கிளிக் செய்வது போன்றோ இருக்கும்.... 


      4.விடையை  கொடுத்தவுடன் அடுத்த பக்கத்திற்கு (லெவலுக்கு)  செல்லும்


      5.இப்படி மொத்தம் 25 லெவல்களை யார் முதலில் முடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்....


      6. அனைத்து லெவல்களையும்  முடிப்பவர்களின் பெயர்கள் "HALL OF FAME"லும் "டெரர் கும்மி.காம்"மிலும் வெளியிடப்படும்.

      7.போட்டியில் கலந்து கொள்ள எந்த வித நிபந்தனையும் இல்லை. டெரர் கும்மியை சேர்ந்தவர்களை தவிர யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்


      8.புதிர் முடிக்க டைம் லிமிட் கிடையாது. முதலில் முடிப்பவர்களுக்கு பரிசு.
               கலந்து கொள்ள நினைப்பவர்கள், விளையாடிப் பார்க்க, மாதிரி போட்டிகளும் தளத்தில் உள்ளன.

      மன்னா, பரிசுத்தொகை எவ்வளவு?

      முதல் பரிசு: 5000 ரூபாய்
      இரண்டாம் பரிசு: 3000 ரூபாய்
      மூன்றாம் பரிசு: 1000 ரூபாய்
      இரண்டு ஆறுதல் பரிசு தலா 500 ரூபாய்.
       மேலதிக விவரங்களுக்கு: 
      Hunt for Hint புதிர் போட்டி அறிவிப்பு - பரிசு 10,000 ரூபாய்

                              போட்டிகள் நிறைந்த பதிவுலகிலே, புதிர் போட்டியொன்றை அறிவித்திருக்கும் டெரர்கும்மி நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறந்த இந்த முயற்சி, சிகரங்களை நோக்கி உங்களை அழைத்துச்செல்லும். 

      டிஸ்கி : ஜெயிக்கப்போவது யாரு....??? 
      எலேய் "சிரிப்புபோலீஸ்" எங்களை ஏமாத்தி சோறுன்னு நினச்சி ஒத்தைக்கு தின்னுபுடாதலெய், நான் ஜெயிச்சுட்டேன்னு சொல்லி மரியாதையா மொத்த பணத்தையும் அண்ணன் அக்கவுண்டுக்கு அனுப்பிரு, இல்லன்னா மொத்த குரூப்புக்கும் அருவா பார்சல் அனுப்பிருவேன் சாக்குரதை......[[ஹி ஹி]]


    http://tamil-friend.blogspot.com




  • http://tamil-friend.blogspot.com


  • [Continue reading...]

    பிரதமர் கொலை வழக���கில் தூக்குத்தண்டனை கைதிகள் மூவ���் தொடர்பில் தொட��ும் வாதங்கள்

    - 0 comments


    இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களை குடியரசுத் தலைவரும் நிராகரித்துவிட்ட நிலையில், அவர்களைத் தூக்கிலிடக்கூடாது என்று தமிழகத்தில் அரசியல்வாதிகள் பலர் குரல் எழுப்பி வருகிறார்கள்.

    வைகோ, நெடுமாறன் போன்ற தலைவர்கள், அந்த மூவருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றக்கூடாது என மத்திய அரசை ஏற்கனவே வலியுறுத்திய நிலையில், இன்று சனிக்கிழமை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசும்போது இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பப் போவதாகத் தெரிவித்தார்.

    போரில் பெருமளவில் தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமையும் என்று திருமாவளவன் கருத்துத் தெரிவித்தார்.

    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    அதே நேரத்தில், ராஜீவ் கொலையாளிகளுக்கு கருணை காட்டக்கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.

    எனினும், குடியரசுத் தலைவரும் கருணை மனுவை நிராகரித்துவிட்ட நிலையில், அந்த மூவருக்கும் வேறு ஏதாவது வாய்ப்புக்கள் இருக்கிறதா என்று உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் எம்.என். கிருஷ்ணமணி அவர்களிடம் கேட்டபோது,

    ஏற்கனவே குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியான வாய்ப்புகள் அதிகளவில் இல்லையென்று அவர் சுட்டிக்காட்டினார்.

    குடியரசுத் தலைவரிடம் மீண்டும் ஒரு முறை கருணை மனுக் கொடுத்தாலும் முதல் மனு நிராகரிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே அதுவும் நிராகரிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    அதேவேளை, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்குள் தண்டனையை நிறைவேற்றாவிட்டால் கைதிகளுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றக் கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் முன்னர் அளித்திருந்த தீர்ப்பை மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு பின்னர் மாற்றியமைத்து விட்டது என்றும் அவர் கூறினார்.

    ஆனால், ராஜீவ் கொலைக் குற்றச்சாட்டில் 20 ஆண்டுகளாக இவர்கள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ள நிலையில் அது மரண தண்டனையைவிடக் கொடியது என்றும் அதையே காரணமாகக் காட்டி அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ரிட் மனுச் செய்யலாம் என்றும் வழக்கறிஞர் கிருஷ்ணமணி தெரிவித்தார்.

    இந்தியாவில் தூக்கு தண்டனைகள் அபூர்வமாகத் தான் நிறைவேற்றப்படுகின்றன. கடைசியாக 2004 ம் ஆண்டில் தான் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

    http://devadiyal.blogspot.com




  • http://devadiyal.blogspot.com


  • [Continue reading...]

    தமிழர்கள் அழுக்��ானவர்கள் - அமெரி��்க துணை தூதர் மன��னிப்பு கேட்க வேண்டும்!: முதல்வர்

    - 0 comments


    எனது சருமம், தமிழர்களைப் போல அழுக்காகவும், கறுப்பாகவும் ஆகி விட்டது' என்று மவுரீன் சாவ் பேசியுள்ளார். இனவெறி கொண்ட இந்தப் பேச்சு, மிகவும் கண்டனத்துக்குரியது. இத்தகைய கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்குமாறு மவுரீன் சாவை வற்புறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அமெரிக்க தூதரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனிபர் மெக்இன்டைருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், அமெரிக்க துணை தூதர் மவுரீன் சாவ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியது, பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது.

    அதில், `நான் டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு ரயிலில் சென்றேன். இந்த பயண நேரம் 24 மணி நேரம்தான். ஆனால், 72 மணி நேரம் ஆகியும், அந்த ரெயில் ஒரிசா போய்ச் சேரவில்லை.

    அதனால், எனது சருமம், தமிழர்களைப் போல அழுக்காகவும், கறுப்பாகவும் ஆகி விட்டது' என்று மவுரீன் சாவ் பேசியுள்ளார்.

    இன வெறி கொண்ட இந்த பேச்சு, மிகவும் கண்டனத்துக்கு உரியது. இந்த கருத்து, ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கக் கூடியது என்று தங்களுக்கே தெரியும்.

    எனவே, இந்த கருத்துகளை வாபஸ் பெற்றுக்கொண்டு, தமிழர்களைப் பற்றி இத்தகைய கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்குமாறு மவுரீன் சாவை தாங்கள் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    http://devadiyal.blogspot.com




  • http://devadiyal.blogspot.com


  • [Continue reading...]

    செந்தளிர்கள் செ��்நீரான நாள் (காண��ளி இணைப்பு)

    - 0 comments


    வன்னிப் பிரதேசத்தில் வள்ளிபுனம் கிராமத்தில் 2006 ம் ஆண்டு ஆவணி மாதம் 14 ஆம் நாள் விடியற்காலை 7.30 மணியளவில் செந்தளிர்கள் செங்குருதியால் செந்நிறமானது செஞ்சோலை.

    எதிர்கால கனவுகளோடு தமது பள்ளி நாளை தொடங்கிய சின்னஞ்சிறு சிட்டுகளை நான்கு விமானங்களில் ஏறிவந்த கழுகுகள் கொத்தோடு பறித்து சென்ற கோரச் சம்பவம் நடந்தேறி இன்றோடு ஐந்து வருடங்களாகின்றன.

    சொல்லொணா துயருடன் மரித்தும் மலரான நம் செல்வங்களின் ஆத்ம சாந்திக்காக செங்குருதியால் எழுதப்பட்ட இந்த நாளில் ஏக்கங்களுடன் பிரார்த்திக்கிறோம் .....



    http://devadiyal.blogspot.com




  • http://devadiyal.blogspot.com


  • [Continue reading...]

    அனைத்து தமிழர்க��ையும் அவமதித்த அமெரிக்க துணை தூத���் மன்னிப்பு கேட��க வேண்டும்; ஜெயல��ிதா வற்புறுத்தல���

    - 0 comments



                                                   முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனிபர் மெக்இன்டைருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், அவர் கூறி இருப்பதாவது:-

    அமெரிக்க துணை தூதர் மவுரீன் சாவ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியது, பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. அதில், `நான் டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு ரெயிலில் சென்றேன். இந்த பயண நேரம் 24 மணி நேரம்தான். ஆனால், 72 மணி நேரம் ஆகியும், அந்த ரெயில் ஒரிசா போய்ச் சேரவில்லை.

    அதனால், எனது சருமம், தமிழர்களைப் போல அழுக்காகவும், கறுப்பாகவும் ஆகி விட்டது' என்று மவுரீன் சாவ் பேசியுள்ளார்.   இன வெறி கொண்ட இந்த பேச்சு, மிகவும் கண்டனத்துக்கு உரியது. இந்த கருத்து, ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கக் கூடியது என்று தங்களுக்கே தெரியும்.

    எனவே, இந்த கருத்துகளை வாபஸ் பெற்றுக்கொண்டு, தமிழர்களைப் பற்றி இத்தகைய கருத்து தெரிவி
    த்ததற்காக மன்னிப்பு கேட்குமாறு மவுரீன் சாவை தாங்கள் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுகëகொள்கிறேன்.



    இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.




    http://tamil-photo.blogspot.com




  • http://tamil-photo.blogspot.com


  • [Continue reading...]

    ஆண்கள் ஏன் உணர்ச���சிகளை அடக்கிக் ��ொள்கிறார்கள்.

    - 0 comments


    ஆண்கள் தங்களதுஉணர்ச்சிகளை வெளியே கொட்டாமல் அடக்கிக் கொள்கிறார்கள்.அதனால் பல பிரச்சினைகள்என்றும் ஒரு தகவலை படித்தேன்.உண்மையில் கோபமோ,ஆத்திரமோ எந்த உணர்வும் உள்ளேயேஅடக்கப்படுவது நல்லதல்ல.இருந்தும் ஏன் வெளியே கொட்டுவதில்லை? காரணம்சாதாரணமானது.அள்ளிக்கொள்ள ஆளிருந்தால் கொட்டுவார்கள்.

                                        ஆண்தனக்குள்ளேயே முடங்கிப்போவது அதிகம்.பெண்களுக்கு இந்த பிரச்சினைகள்குறைவு.பெரும்பாலும் எல்லாவற்றையும் வெளியே சொல்லிவிடுகிறார்கள்.அம்மா,சகோதரிகள்,தோழிகள் என்று அவர்களுக்கு நெருக்கமான உறவுகள்அதிகம்.ஆனால் ஆணுக்கு அப்படியெல்லாம் இல்லை.
                                         சகோதர உறவுஎன்பது முக்கியமானது.பெண்களைப்போல ஆண்களுக்கு இது அமைவதில்லை.சண்டை பிடித்துகோர்ட்டுக்கு போகும் அண்ணன் தம்பிகளை நீங்கள் பார்க்க முடியும்.அண்ணன் தம்பி உறவுவலுவாக இருப்பது மிகவும் குறைவு.பெண்களைக் கவனித்துப் பார்த்தால்தெரியும்.அக்கா,தங்கை உறவு என்பது மிக நெருக்கமானது.வேறெங்கும் இவ்வளவு பாசமானஉறவு நிலையை நீங்கள் காண முடியாது.

                                        மற்றவர்களிடமும்,பொருளாதரத்திலும் அந்தஸ்து பெறுவதற்காக ஆண்வெளியுலகத்துடன் அதிக உறவு நிலைகளை ஏற்படுத்தவேண்டியிருக்கிறது.போட்டி,பொறமை,துரோகம்,போட்டுக்கொடுப்பது போன்றவற்றை சமாளிக்க வேண்டியிருக்கிறது.அலுவலகத்திலோ,தொழில்செய்யும் இட்த்திலோ இதெல்லாம் சகஜம்.யாரிடமும் பகிர்ந்து கொள்வதுகூட கஷ்டம்தான்.

                                         நண்பர்களும் தெரிந்தவர்களும் ஒருவனது உணர்வுகளைப் பற்றி பகிர்ந்து கொள்வதைகேட்க விரும்புவதில்லை.நான்கு பேர் சந்தித்தால் ஆண்கள் ,அரசியலைப்பற்றியோ,சினிமாபற்றியோ,பெண்களைப்பற்றியோ பேசுவார்களே தவிர கஷ்ட்த்தை சொன்னால் ஓடிப்போய்விடுவார்கள்.ஜோக் சொல்லிக்கொண்டிருந்தால் வெகு நேரம் அங்கே இருப்பார்கள்.

                                          அரசியல்,சினிமா போன்றவற்றை அதிகம் தெரிந்து கொள்ள ஆசைப்படுவதற்கும் இதுவேகாரணம்.நான்கு பேர் முன்னால் விஷயம் தெரிந்தவன் என்று காட்டிக்கொள்வதற்கு என்றுஒரு ஆசிரியர் சொன்னார்.உண்மைதான்.ஆண்கள் கூடினால் உள்ளே அரித்துக்கொண்டிருக்கும்விஷயத்தை வெளியே விடாமல் ஏதேதோ பேசிவிட்டு டாஸ்மாக் தேடி போய் விடுகிறார்கள்.

                                          உள்ளேஇருப்பதை வெளியே சொல்லாமல் சரக்கு உள்ளே போன பிறகு உளறிக்கொண்டிருப்பார்கள்.மனிதஉறவுகளில் இணக்கமோ,நெருக்கமோ இல்லாதநிலை பெரும் நெருக்கடி.இந்த நெருக்கடி ஆணுக்குஅதிகம்.மது,சிகரெட் என்று ஒளிந்து கொள்வதற்கு இவை முக்கியமான காரணம்.பல நேரங்களில்குழந்தைகள்மீதும்,பெண்கள்மீதும் பாய்கிறான்.இதனால் வீட்டு உறவுகளும்துண்டிக்கப்பட்டுவிடுகின்றன.

                                          ஆண்கள்அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் உறவுகளை கண்டுபிடிப்பது முக்கியமானது.பல ஆண்களும்மனைவியிடம் தங்கள் பிரச்சினைகளை பகிர்ந்து கொள்வதில்லை.மனைவிக்கு போதுமான அளவுக்குஇதைப்பற்றி தெரியாது என்று நினைக்கிறான்.இது ஒரு பிரச்சினை.குறைந்தபட்சம்வெளியேவிட்ட திருப்தியாவது இருக்கும்.உணர்வு பூர்வமான ஆதரவு வீட்டில் கிடைக்கவாய்ப்புண்டு.



    http://tamil-photo.blogspot.com




  • http://tamil-photo.blogspot.com


  • [Continue reading...]

    அமெரிக்கத் துணை��்தூதரின் இனவெறி���் பேச்சு அதிர்ச��சியளிக்கிறது: திருமாவளவன்

    - 0 comments


    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ''சென்னையில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றும் மௌரீன் ச்சாவ் என்ற அம்மையார் தமிழர்களை இழிவுபடுத்தும்விதமாகப் பேசியிருக்கிறார்.

    சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவர்களிடையே வெள்ளியன்று (12.08.2011) பேசும்போது இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தாம் ஒரு மாணவியாக இருந்தபோது டெல்லியிலிருந்து ஒரிசாவுக்குப் புகைவண்டியில் பயணம் செய்ததாகவும் இருபத்து நான்கு மணி நேரத்தில் போகவேண்டிய அந்தப் புகைவண்டி 72 மணி நேரம் கழிந்தும்கூடப் போய்ச் சேரவில்லை என்றும் அந்தப் பயணத்தால் தனது சருமம் தமிழர்களைப்போல கறுப்பாகவும் அசிங்கமாகவும் மாறிவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

    அமெரிக்கத் துணைத்தூதரின் இந்தப் பேச்சு இனவொதுக்கல் தன்மை கொண்ட முறை தவறிய பேச்சு என்பதில் ஐயமில்லை.

    இதற்காக அமெரிக்கத் தூதரகம் வருத்தம் தெரிவித்திருக்கிறது என்ற போதிலும் இவ்வளவு இங்கிதமற்ற ஒருவர், இத்தனை முக்கியமான பொறுப்பில் இருப்பது இந்திய அமெரிக்க ராஜீய உறவுகளை நிச்சயம் பாதிக்கும்.

    இனவெறியை வெளிப்படுத்தும் விதமாகத் தமிழர்களை இழிவுபடுத்தியிருக்கும் மௌரீன் ச்சாவ் அம்மையார் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும். அத்துடன் அவரை அமெரிக்க அரசு உடனடியாகத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்.

    அண்மையில் அமெரிக்க அதிபருக்கு அடுத்த நிலையில் இருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தமிழகத்துக்கு வந்து தமிழக முதல்வரோடு பேச்சு நடத்தினார்.

    ஈழத் தமிழர்கள் குறித்து அப்போது அவர் சாதகமாகக் கருத்து தெரிவித்தார். ராஜ்பக்ச அரசின்மீது போர்க்குற்ற விசாரண நடத்தப்படவேண்டும் என்று அமெரிக்காவும் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருப்பது தமிழர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அமெரிக்கத் துணைத்தூதரின் இந்த ' இனவெறிப் பேச்சு ' அதிர்ச்சியளிக்கிறது.

    அமெரிக்கத் துணைத் தூதர் மௌரீன் ச்சாவ் அம்மையார் தனது இனவெறிப் பேச்சுக்காகப் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் அமெரிக்க அரசு துணைத்தூதர் மௌரீன் ச்சாவ் அம்மையாரை உடனடியாகத் திரும்ப அழைத்துக்கொள்ளவேண்டும் என்றும் இந்திய அரசு அமெரிக்கத் தூதரை அழைத்துத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்யவேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

    http://snipgallery.blogspot.com




  • http://snipgallery.blogspot.com


  • [Continue reading...]

    போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்���ையின் முழுமையான பதில் தேவை: ஐ.நா

    - 0 comments


    போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கையின் முழுமையான பதிலை எதிர்ப்பார்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

    இலங்கையின் போர்க்குற்றங்களை உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அது தொடர்பில் பரிந்துரைகளையும் தெரிவித்திருந்தது.

    இந்தநிலையில் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கருத்துரைத்த இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ், நிபுணர் குழு அறிக்கைக்கு ஒருபகுதி பதிலை இலங்கை அரசாங்கம் வழங்கிவிட்டதாக தெரிவித்திருந்தார்.

    எனினும் நிபுணர் குழு அறிக்கைக்கான முழுப்பதிலையும் ஐக்கிய நாடுகள் சபை எதிர்ப்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

    http://snipgallery.blogspot.com




  • http://snipgallery.blogspot.com


  • [Continue reading...]

    எங்கள் அருமை புல���் பெயர் தமிழர்க��ே, உங்களுக்கு மே ���தினேழு இயக்கத்தின் வேண்டுகோள்

    - 0 comments


    வணக்கம்.

    உங்களிடத்தில் முதல் முறையாக மே பதினேழு இயக்கம் கோரிக்கையும், வேண்டுகோளையும் வைக்கிறது.

    தமிழர்களின் மீதான தாக்குதலை இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனது தமிழர் எதிர்ப்பு நிலையை எந்த விலையை கொடுத்தேனும் காட்டுகிறது இந்திய அரசு. தமிழீழத்தின் மீதான இன அழிப்பு போரை நடத்தி கிட்டதட்ட ஒருலட்சத்தி நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை அழிப்பதற்கு துனை நின்று பிறகு அந்த கொலையாளிகளை உலக அரங்கில் காப்பற்ற செயல் பட்டுக் கொண்டு இருக்கும் இந்திய அரசு தமிழக மீனவர்கள் உட்பட அனைவரின் மீதும் தனது எதிர்ப்பு நிலையை தீவிரப்படுத்தியிருக்கிறது.

    தமிழர்களின் இந்த இக்கட்டான வரலாற்று சூழலில் தனது அரசியல், சமூக போராட்ட கட்டமைப்புகளை பிஞ்சு நிலையில் பெற்று இருக்கும் தமிழர்கள், தங்கள் மீது திணிக்கப்படும் இந்த அடக்குமுறைகள், கொலைகள் நம்மை எவ்வாறு கையறு நிலைக்கு கொண்டு சென்றுள்ளது என்பதை நாம் கவனிக்க முடியும். இந்த முறையில் இன்று தமிழக அரசியல் போரளிகளின் மீது கடும் தாக்கத்தையும் துயரத்தையும் ஏற்பட்டுத்தி இருப்பது தோழர்.பேரறிவாளன், தோழர்.முருகன், தோழர்.சாந்தன் திணிக்கப்பட்டு இருக்கும் மரணதண்டனை.

    கொலை செய்யப்பட்டவர் முன்னால் பிரதமர் என்கிற ஒரே காரனத்திற்காக நீதியை மறுத்து இருக்கிறது இந்த அரசு. சோடிக்கப்பட்ட இந்த வழக்கில் முதலில் தூக்கில் இடப்படுவதற்காக கைது செய்யப்பட்டவர்களில் 13பேர் ஈழத்தமிழர்களாகவும் 13 பேர் இந்திய-தமிழகத் தமிழ்ழர்களாகவும் இருக்கும் படி பார்த்துக் கொண்டது அரசு.பிறகு தூக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்ட 4 பேரில் இருவர் தமிழகத் தமிழர்களாகவும், 2 பேர் தமிழீழத்தமிழர்களாகவும் இருக்குமாறு பார்த்துக் கொண்டது.

    செய்யாத குற்றத்திற்காகவும், நிரூபனம் ஆகாத குற்றச்சாட்டு ஒன்றிற்காகவும் இந்த அப்பாவிகள் தமிழர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக இந்தியாவின் மத்திய அரசால் உயிர் பறிக்கபட இருக்கிறது.

    எந்த ஒரு அடிப்படை சட்ட வழிமுறையும் பின்பற்றப்படாமல் மெளனமாக்கப்பட்ட இந்த அப்பாவிகள், கதவிடுக்கில் சத்தமில்லாமல் பலியிடப்படும் சுவர் பல்லிகளாய், பலியிடப்பட காத்து இருக்கிறார்கள். எந்தவித கவனமும் இல்லாமல் விபத்தாய் இந்த படுகொலை நடக்கப் போகிறது. ஆனால் இது விபத்து அல்ல, மிகக் கவனமாய் திட்டமிடப்பட்ட நடத்தப்பட இருக்கிற படுகொலை. நம் கண்முன்னே நமது சகோதரர்கள் எந்தவித முகாந்திரமுமின்றி படுகொலை செய்யப்பட 21 வருடங்களாய் காக்க வைக்கப்பட்டு, விடுதலை கிடைக்கும் என நம்பிக்கை கொடுக்கப்பட்டு, இறுதியில் தூக்குக் கயிறை தழுவப்போகிறார்கள்.

    தமிழர்கள் எந்த ஒரு சமத்திலும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடிய வலிமை உள்ளவர்கள் அல்ல என்று நம்பும் இந்த இந்திய அரசைதமிழர்களாகிய நாம் வெல்லவேண்டும். ஆசியாவிலேயே யூத இனத்திற்கு அடுத்தபடியாக சர்வதேச அளவில் விரிந்து நிற்கக் கூடிய தமிழ்ச் சமூகம் தன் இனத்திற்கு நடக்ககூடிய அநீதியை தட்டிக் கேட்க வீதிக்கு உலகம் முழுவதும் வந்து நிற்கும் என்பதை புரிய வைக்க வேண்டும்.தமிழர்களுக்கு இன்னல் விளைவித்தால் சர்வதேசச் சமூகத்தில் அவமானத்தை பரிசாக பெற்றுக்கொள்ளும் நிலை இவர்களுக்கு வரும் என்பதை முகத்தில் அறைந்து உரைக்கவேண்டும்.

    திரு. பேரறிவாளன் , திரு. முருகன் , திரு. சாந்தன் அவர்களின் விடுதலை பெற்றுத்தரக் கூடிய ஒரு போராட்டத்தை நாம் எடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். இந்தப் போராட்டம் தமிழத்தினை விட்டு வெளியேவும் நடக்க வேண்டும். சர்வதேச அரங்கில் இந்த அநீதிக்கான போராட்டம் நடக்கும் பட்சத்தில் இந்திய அரசு நெருக்கடிக்கு உள்ளாகும். தமிழர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி தன்னையும், சிங்களத்தையும் காக்க நினைக்கும் இந்தியம், நமது ஒருங்கினைந்த போராட்டத்தினால் நிலைகுலையும். இந்தியாவின் தன் மரியாதையை உலக அரங்கில் இழக்கும் இந்த சமயத்தில், அதன் நேர்மையும் காந்திய முகமூடியும் கிழிக்கப்படும். இது நமக்கு இந்த சமயத்தில் அவசியமானதும், தேவையானதுமான ஒன்று. உலகெங்கும் உள்ள தமிழர்கள் தம் இனம் காக்க ஒன்று கூடி நிற்பார்கள் என்பதை உணர்த்தும் விதமாக புலம் பெயர் உறவுகளே உங்களுடைய போராட்டத்தினை பதிவு செய்யங்கள்.

    இவர்களின் நியாயங்களை உலகெங்கும் உள்ள பத்திரிக்கைகளில், ஊடகங்களில் பதிவு செய்யுங்கள். நிறைவு பேறாத விசாரணை, பாதியில் முடிக்கப்பட்ட கமிசன்கள், ஒத்து ஊதும் ஊடகங்கள் ஆகியவற்றால் தவறாக முடிவுற்ற இந்த வழக்கினையும், இந்திய அரசின் நேர்மையின்மையையும் காட்டுங்கள்...

    இந்தப் பஞ்சமா பாதகத்தினை செய்ய முனையும் இந்திய காங்கிரஸ் அரசின் தூதரகத்தின் முன்போ அல்லது முக்கியப் பகுதிகளையோ தேர்ந்தெடுத்து போராடலாம். இந்தப் போராட்டத்தின் அவசியம் நம் தமிழ் நிரபராதிகளை தூக்கில் போடப்பட கூடாது, இந்த அப்பாவிகள் தமிழர்கல் என்கிற ஒரே காரணத்திற்காகவே தூக்கிலேற்றப்படுகிறார்கள். விசாரனை முடியும் முன்பே, சந்தேகத்திற்குரிய நபராக சுப்ரமணியன் சாமி (முன்னால் மத்திய சட்ட அமைச்சர்-தமிழீழ விடுதலை எதிர்ப்பாளர், சந்திரசாமி ) மேலும் தமிழர்களாகிய நாம் ஒரே அணியில் நிற்போம் என்பதே.

    தமிழனுக்கு உலகில் எம்மூலையில் துன்பமும், அநீதியும் விளைவிக்கப்பட்டால் தமிழர்கள் நாம் ஒன்றாய் நிற்போம்.

    புலம் பெயர் தமிழர்களே களம் காணுங்கள் நம் பேரறிவாளன், முருகன், சாந்தனுக்காக.

    அனைத்து அமைப்புகளும், உணர்வாளார்களும் இனைந்து வரும் ஆகஸ்டு 20ம் தேதி நாங்கள் சென்னையில் பாரி முனை அருகில், கலெக்டர் ஆட்சியகம் முன்னால் லட்சம் தமிழர்களாய் ஒன்று கூடுகிறோம்.

    வரும் 18ம் தேதி வியாழன் 2000 இருசக்கர வாகனங்களில் வேலூரை நோக்கிய பிரச்சாரப் பயண்ம்.

    நீங்களும் கை கோருங்கள்.உங்கள் புலம் பெயர் நாடுகளில் இந்த அப்பாவிகளுக்காய் ஒன்று கூடி உரக்கக் குரல் கொடுங்கள்.. மேற்கத்திய எழுத்தாளர்கள், அறிஞர்கள், போராளிகள், அரசியல் அறிஞர்கள் என அனைவரின் ஆதரவினையும் சேகரித்துக் கொடுங்கள்....

    தமிழராய் ஒன்று கூடுவோம். நாம் வெல்வோம்.

    நன்றி.

    மே பதினேழு இயக்கம்.
    9444146806

    http://snipgallery.blogspot.com




  • http://snipgallery.blogspot.com


  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger