Sunday 27 October 2013

A promotion for Soori!

- 0 comments

A promotion for Soori!

Comedian Soori, better known as Parotta Soori, has been steadily making a mark in the industry! He has been having a wonderful 2013, with his movies Kedi Billa Killadi Ranga and Varutha Padadha Vaalibar Sangam have become huge hits, and his comedy portions have been well appreciated. The latest news is that, Soori's wife has delivered a bonny baby boy! Soori also has quite a number of movies in hand, including Maan Karate and Jilla.

Galatta.com wishes Soori and his family all the very best!

shared via

[Continue reading...]

மாமியார் மைத்துனர்கள் தாக்கியதில் கருச்சிதைவு ஏற்பட்ட பெண்ணுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு: அபுதாபி கோர்ட் உத்தரவு abudhabi court orders 50 thousand dinar compensation to miscarried woman

- 0 comments

மாமியார் மைத்துனர்கள் தாக்கியதில் கருச்சிதைவு ஏற்பட்ட பெண்ணுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு: அபுதாபி கோர்ட் உத்தரவு abudhabi court orders 50 thousand dinar compensation to miscarried woman

அபுதாபி, அக். 28-

மாமியார் மற்றும் மைத்துனர்கள் தாக்கியதில் கருச்சிதைவு ஏற்பட்ட பெண்ணுக்கு 50 ஆயிரம் திர்ஹம் இழப்பீடு வழங்குமாறு கணவர் வீட்டாருக்கு அபுதாபி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அபுதாபியை சேர்ந்த ஒரு பெண் தனது 2 குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் வாழ்ந்து வந்தார். சம்பவத்தன்று மாமியாருடன் அவருக்கு வாய் தகராறு ஏற்பட்டது.

அப்போது அருகில் இருந்த 3 மைத்துனர்கள் மற்றும் ஒரு மைத்துனி தாய்க்கு பரிந்து பேசி அந்த பெண்ணை கண்மூடித் தனமாக தாக்கினார்கள். நான்கைந்து பேர் சூழ்ந்துக் கொண்டு தாக்கியதில் நிலைதடுமாறிய் அந்த பெண் கீழே விழுந்தார். விழுந்த வேகத்தில் அவரது வயிற்றில் இருந்த 3 மாத கரு சிதைந்தது. இதனையடுத்து, அந்த பெண் கோர்ட்டை நாடினார்.

மாமியார் குடும்பத்தினர் 3 ஆண்டுகளாக தன்னை அடித்து, உதைத்து சீத்தரவதை செய்ததாகவும், தற்போது ஏற்பட்ட கருச்சிதைவுக்கு இழப்பீடாக அவர்கள் 1 லட்சம் திர்ஹம் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கணவரின் குடும்பத்தார் 50 ஆயிரம் திர்ஹம் (இந்திய மதிப்புக்கு சுமார் 85 லட்சம் ரூபாய்) இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மாமியார் மற்றும் 3 மைத்துனர்களுக்கு தலா 200 திர்ஹம் அபராதமும் விதிக்கப்பட்டது.

...

shared via

[Continue reading...]

சரிதாவை ஏமாற்றிவிட்டு கணவர் வேறு திருமணம் – வழக்கு actress saritha divorce news

- 0 comments

சரிதாவை ஏமாற்றிவிட்டு கணவர் வேறு திருமணம் – வழக்கு

நடிகை சரிதாவுக்கும் மலையாள நடிகர் முகேசுக்கும் கடந்த 1989–ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஷர்வன், தேஜஸ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சரிதாவுக்கும் முகேசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் விவாகரத்து செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் முகேசுக்கும் கேரளாவில் பிரபல நடன ஆசிரியையாக உள்ள தேவிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். கேரளாவில் உள்ள ரிஜிஸ்டர் அலுவலகத்தில் அவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

முகேஷ் 2–வது திருமணம் செய்து கொண்டதை அறிந்ததும் நடிகை சரிதா அதிர்ச்சி அடைந்தார். தங்கள் இருவருக்கும் விவாகரத்து ஆனதாக கூறப்பட்ட தகவலை மறுத்துள்ள அவர் 2–வது திருமணம் செய்த கணவர் முகேஷ் மீது வழக்கு தொடரப்போவதாகவும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நடிகை சரிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

என் மகன் ஷர்வன் துபாயில் மருத்துவ படிப்பு தொடர்வதால் அங்கு தங்கி இருக்கும் சூழ்நிலையில் உள்ளேன். 2 நாட்களுக்கு முன்பு முகேஷ், தேவிகா என்ற பெண்ணை சட்டவிரோதமாக திருமணம் செய்து கொண்டதாக பத்திரிகைகள் மூலம் அறிந்தேன்.

கடந்த 2007–ம் ஆண்டு முதல் அவரிடம் எந்த ஜீவனாம்சமும் இல்லாமல் விவாகரத்து பெற தயாராக இருந்தேன். அவர் எந்த பதிலும் அளிக்காமல் தொடர்ந்து தட்டிக் கழித்து வந்தார். மகன்கள் ஷர்வன், தேஜஸ் இருவரும் என்னுடன் இருக்கிறார்கள்.

எந்த அறிவிப்பும் இல்லாமல் சட்டப்படி விவாகரத்தும் பெறாமல் முகேஷ் திருமணம் செய்திருப்பதாக வெளிவந்த செய்தி என்னை மிகவும் பாதித்துள்ளது. எனவே முகேஷ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன்.

shared via

[Continue reading...]

தேவர் ஜெயந்தி விழா: பரமக்குடி பகுதியில் 3,500 போலீசார் பாதுகாப்பு Devar Jayanthi festival 3500 police protection in Paramakudi area

- 0 comments

தேவர் ஜெயந்தி விழா: பரமக்குடி பகுதியில் 3,500 போலீசார் பாதுகாப்பு Devar Jayanthi festival 3500 police protection in Paramakudi area

பரமக்குடி, அக். 27–

பரமக்குடி டி.எஸ்.பி. வினோத் சாந்தாராம் நிருபர்களிடம் கூறியதாவது:–

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா வருகிற 28,29,30 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மாவட்டத்தில் சட்டம்–ஒழுங்கை பாது காக்கும் வகையில் பரமக்குடி பகுதியில் 3 ஆயிரத்து 500 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புலனாய்வு துறை, குற்றப்பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் முதல் திருவரங்கம் வரையிலும், கிருஷ்ணா தியேட்டர் முதல் சத்திரக்குடி வரையிலும், கிருஷ்ணா தியேட்டர் முதல் பார்த்தி பனூர் வரையிலும், பரமக்குடி ஒட்டப்பாலம் முதல் பாண்டியர் கிராமம் வரையிலும் இரு மார்க்கங்களிலும் ஒரே நேரத்தில் போலீசார் ரோந்த வாகனங்கள் மூலம் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

பரமக்குடி புறநகர் பகுதிகளான காந்தி நகர், மஞ்சள்பட்டிணம், கிருஷ்ணா தியேட்டர் பகுதிகளில் வாகன சோதனைச்சாவடி அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் மாவட்டத்தில் விழாவிற்கு வாகனங்களில் வந்து செல்பவர்கள் கண்டிப்பாக சொந்த வாகனங்களில் மட்டுமே வந்து செல்ல வேண்டும். வாடகை வண்டிகளில் வந்து செல்லக்கூடாது. மேலும் பரமக்குடியில் பல்வேறு பகுதிகளும் 9 சி.சி.டி. கேமரா மூலம் போலீசார்கள் கண்காணிப்பு பகுதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பரமக்குடி மற்றும் பார்த்திபனூரில் 28–ம்தேதி மாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார்களின் கொடி அணிவகுப்பு நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்பட தென் மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 16 மோப்பநாய்கள் மாவட்ட எஸ்.பி.மயில்வாகணன் உத்தரவின்பேரில் பரமக்குடி டி.எஸ்.பி. வினோத் சாந்தாராம் தலைமையில் அபிராமம், பார்த்திபனூர் பகுதிகளில் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன.

...

shared via

[Continue reading...]

கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டி மீது கல் வீச்சு: நெற்றி காயத்தால் பணிகள் பாதிப்பு Kerala Chief Minister hurt as protesters throw stones

- 0 comments

கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டி மீது கல் வீச்சு: நெற்றி காயத்தால் பணிகள் பாதிப்பு Kerala Chief Minister hurt as protesters throw stones

கண்ணூர், அக். 27-

கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி இன்று போலீஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக கண்ணூர் சென்றார். அங்கு அவர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடது சாரி ஜனநாயக முன்னணி அமைப்பினர் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர். அப்போது சிலர் அவர் மீது திடீரென கல் வீசி தாக்கினர்.

அவர் காரில் வரும்போது இரண்டு பக்கமும் போராட்டக்காரர்கள் அவரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் காரின் பின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அப்போது கார் கண்ணாடித்தூள் பட்டு உம்மன் சாண்டியின் நெற்றியில் காயம் ஏற்பட்டது. மேலும் ஒரு கல் அடியும் விழுந்தது.

இந்த தாக்குதலின் போது அவருடன் மந்திரி கே.சி. ஜோசப்பும் உடன் இருந்தார். இச்சம்பவத்தால் கலக்கம் அடையாத உம்மன் சாண்டி அந்த போலீஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். மேற்கொண்டு அவரது நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை. தாக்குதல் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசின் மந்திரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கேரள எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் உம்மன் சாண்டி பதவி விலக வேண்டும் என்று இடது சாரி ஜனநாயக முன்னனி அங்கு போராட்டம் நடத்தி வருகிறது.

...

shared via

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger