Tuesday 20 August 2013

கூடங்குளம் அருகே வெடிகுண்டு வெடித்து Bomb blast near Koodankulam public panic

- 0 comments
Bomb blast near Koodankulam public panic 

கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி கிராமத்தில் கடந்த ஜூன் மாதம் 10–ந்தேதியில் இருந்து ஒரு தரப்பினர் நாட்டு வெடிகுண்டு வெடித்து சோதனை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் வெளியில் நடமாடவே பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணிக்கு கூத்தங்குழி ஊருக்கு வடபுறம் உள்ள கடலோர பகுதியில் 3 குண்டுகள் வெடித்தன.
இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தடுத்து நடந்து வரும் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு காரணம் என்ன என்பது தெரிய வில்லை. அணுமின் நிலையத்தில் இருந்து சில கி.மீ. தொலைவில் இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து வருவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இங்கு சோதனை நடத்தப்படும் வெடிகுண்டுகள் வேறு இடங்களுக்கு கடத்தப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே இதுபற்றி போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கின்றனர் மக்கள்.
[Continue reading...]

வீராட் கோலி சிறந்த கேப்டன் Dhoni opinion Virat kohli is a good captain

- 0 comments
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக வீராட் கோலி ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் கேப்டனாக பணியாற்றினார். டோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட அந்த போட்டியில் இந்தியா 5 ஆட்டத்திலும் வென்று முத்திரை பதித்தது.
இந்த நிலையில் வீராட் கோலியை கேப்டன் டோனி பாராட்டியுள்ளார். சிறந்த கேப்டனாக உருவாகுவார் என்று கூறியுள்ளார். இது குறித்து டோனி கூறியதாவது:–
[Continue reading...]

தலைவா படம் வெளிவர நடவடிக்கை எடுத்த ஜெயலலிதாவுக்கு நன்றி - நடிகர் விஜய்

- 0 comments

தலைவா படம் வெளிவர நடவடிக்கை எடுத்த ஜெயலலிதாவுக்கு நன்றி: நடிகர் விஜய் அறிக்கை thalaiva movie release action jayalalitha wish actor vijay statement

 

நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஆகஸ்ட் 9–ந்தேதி வெளிவர வேண்டிய ‘தலைவா’ திரைப்படம், சில அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்களில் திரையிட முடியவில்லை. கடந்த பத்து தினமாக நான், தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.

மீடியாக்களில் வந்த பல கட்டுக்கதைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இந்த பிரச்சினையில் தலையிட்டு ‘தலைவா’ திரைப்படம் சுமூகமாக வெளிவர நடவடிக்கை எடுத்துள்ளார். பல வேலைகளுக்கு நடுவிலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னோடு பொறுமை காத்த அத்தனை ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு ‘தலைவா’ திரைப்படத்தை குடும்பத்தோடு தியேட்டரில் பார்த்து ரசிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger