Thursday 31 January 2013

ஜெ’ வுக்கு நன்றி மும்பையில் கமல் மனம்திறந்த பேட்டி

- 0 comments
னக்கு வந்ததைப் போன்று யாருக்கும் பிரச்சினை வரக்கூடாது. கலைஞர்களை அவமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். பிரச்சினையை சந்தித்து வரும் நேரத்தில், ஊடகங்கள் எனக்கு ஆதரவாக நின்றது நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது என்று நடிகர் கமல் மனம் திறந்து கூறியிருக்கிறார். 

மும்பையில் பிப்ரவரி 1ல்(இன்று) விஸ்வரூபம் திரைப்படம் ஹிந்தியில் ரிலீஸாகிறது. அதற்காக மும்பை சென்றிருக்கும் அவர் விஸ்வரூபம் பிரச்சனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விளக்கம் கூறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து மும்பையில் பேசிய அவர் :
எனக்கு வந்ததைப் போன்று யாருக்கும் பிரச்சினை வரக்கூடாது. கலைஞர்களை அவமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர்களை ஹாலிவுட், பாலிவுட் என வேறுபடுத்தி பார்க்கவேண்டாம். பிரச்சினையை சந்தித்து வரும் நேரத்தில், ஊடகங்கள் எனக்கு ஆதரவாக நின்றது நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. மதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.

விஸ்வரூபம் பிரச்சினையில் முன்வந்து விளக்கம் அளித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி. சினிமா உலகமும் ரசகிர்கள் கொடுத்த ஆதரவும் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. போராட்டத்தில் நான் தனி ஆள் இல்லை. ஆதரவு அளித்த ஊடகங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

மிரட்டல் தொடர்ந்தால் நாட்டைவிட்டு வெளியேறுவது பற்றி பரிசீலனை செய்வேன். எனக்கு ஆஸ்கர் விருது தேவையில்லை, தேசிய விருதையே விரும்புகிறேன்.

நான் எதிர்கொள்ளும் எதிர்ப்பு மதரீதியானது அல்ல; அரசியல் ரீதியானது. மற்ற இடங்களில் படத்தைப் பார்த்தவர்கள் சிறப்பாக உள்ளதாக கூறுகின்றனர். விஸ்வரூபம் மூலம் விளம்பரம் தேட நான் முயற்சிப்பதாக கூறுவது மோசமானது. நான் கோபத்தில் பேசவில்லை, காயப்பட்டதால் பேசுகிறேன். நம்ப முடியாத அளவுக்கு எனக்கு இஸ்லாமிய சமுதாயத்தினரிடம் இருந்து ஆதரவு கிடைத்துள்ளது. எனது படத்திற்கு விதிக்கப்பட்ட தடையால் ரூ.30 கோடி முதல் ரூ.60 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
[Continue reading...]

Wednesday 30 January 2013

வகுப்பறையில் ஆபாசபடம்

- 0 comments
வால்பாறை : வால்பாறை, அரசு பள்ளி வளாகத்தில், ஆபாச நடவடிக்கைகளில்
ஈடுபட்டதாகக் கூறப்படும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி,
பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இணையதளத்தில் வெளியானது :


கோவை
மாவட்டம், வால்பாறையில், சோலையாறு எஸ்டேட் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது;
150 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர், வேறு ஒரு
அரசு பள்ளியின் தலைமை ஆசிரியையுடன், நிர்வாணமாக இருப்பது போன்ற ஆபாசப்
படங்கள், சமீபத்தில் இணையதளம் ஒன்றில் வெளியானது. இது, இப்பள்ளியில்
பயிலும் குழந்தைகளின் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி, பள்ளிக் குழந்தைகளின்
பெற்றோர் மற்றும் பொதுமக்கள், வால்பாறை - பொள்ளாச்சி மெயின் ரோட்டில்,
நேற்று காலை, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வால்பாறை இன்ஸ்பெக்டர்
சுப்ரமணியன் தலைமையிலான போலீசார், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர்.
அப்போது, ஆபாச ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரினர். உரிய
நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு
கலைந்து சென்றனர். மறியல் காரணமாக, அப்பகுதியில் ஒரு மணி நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து, பெற்றோர் - ஆசிரியர் கழகத்
தலைவர் முனியசாமி மற்றும் பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை, சோலையாறு
எஸ்டேட் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் உதயன், 49, வேறு ஒரு ஊராட்சி
ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியையுடன், பள்ளி வகுப்பறையில் உல்லாசமாக
இருப்பது போன்ற காட்சிகள், இணையதளத்தில் வெளியாகியுள்ளன.

இது போன்ற
சம்பவங்களை பார்க்கும் போது, பள்ளியில் பயிலும் மாணவியருக்கு போதிய
பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை காணப்படுகிறது. எனவே, ஆபாச நடவடிக்கைகளில்
ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை, குழந்தைகளை பள்ளிக்கு
அனுப்ப மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


மூன்றாவது சம்பவம்

வால்பாறை
அடுத்துள்ள காடம்பாறையில் பணிபுரிந்து வந்த மின்வாரிய இன்ஜினியர்
சுப்ரமணியம், சமீபத்தில், செக்ஸ் புகாருக்கு உள்ளாகி கைதானார். இவரிடம்
இருந்து எண்ணற்ற பெண்களின் ஆபாசப் படக் காட்சிகள், சிடி க்களாக பறிமுதல்
செய்யப்பட்டன. இவரே வீடியோ எடுத்திருந்ததும் அம்பலமானது. இந்த அசிங்கமே
இன்னும் மறையாத நிலையில், அடுத்ததாக, வால்பாறை தாசில்தார் குணாளன் மீது,
அலுவலகத்தில் தற்காலிக எழுத்தராக பணிபுரிந்து வந்த காளீஸ்வரி என்ற பெண்,
செக்ஸ் புகார் அளித்து, பரபரப்பை ஏற்படுத்தினார். இவ்விரு சம்பவங்களின்
பரபரப்பே அடங்காத நிலையில், மூன்றாவது சம்பவமாக, பள்ளி ஆசிரியர்,
ஆசிரியையின் ஆபாச காட்சிப் படங்கள் இணையதளத்தில் வெளியாகி, போராட்டத்தில்
மக்கள் குதிக்கும் அளவுக்கு, பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது
குறிப்பிடத்தக்கது.

தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை : பாலியல்
புகாரில் சிக்கிய பள்ளி தலைமை ஆசிரியர்கள் விவகாரம் குறித்து, உதவி
தொடக்கக் கல்வி அலுவலர் காளிமுத்துவிடம் கேட்ட போது, இத்தகைய செயலில்
ஈடுபட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருவர் மீதும், துறை ரீதியாக நடவடிக்கை
எடுத்து, விரைவில், சஸ்பெண்ட் செய்யப்படுவர், என்றார்.


திட்டமிட்ட சதியாம்!

புகாரில்
சிக்கிய சோலையார் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உதயனை தொடர்பு கொண்டு
கேட்டபோது, எனக்கு வேண்டாதவர்கள், என் படத்தை கிராபிக் செய்து,
இணையதளத்தில் படத்தை வெளியிட்டு அவமானப்படுத்தியுள்ளனர்; இது திட்டமிட்ட
சதி; என்னை பழி வாங்கும் நோக்கத்தோடு, சிலர் திட்டமிட்டு, இந்த காரியத்தை
செய்துள்ளனர், என்றார்.
[Continue reading...]

Monday 21 January 2013

பெண்களை மிரட்டும் ஆபாச படங்கள் !

- 0 comments
கோவையை அடுத்த வால்பாறை பகுதியில் சமீப காலமாக பெண்களின் ஆபாச படங்கள் இண்டர்நெட்டில் வெளியாவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வால்பாறை மின்சார வாரிய என்ஜினீயர் சுப்பிரமணியத்தின் செக்ஸ் லீலை படங்கள் வெளியாகி பரபரப்பை


ஏற்படுத்தியது. அந்த படங்கள் என்ஜினீயரிடம் தொடர்பு வைத்திருந்த பெண்களை பயத்தில் ஆழ்த்தியது. அந்த என்ஜினீயர் தனது பொறுப்பில் இருந்த விடுதியின் குளியலறையில் கேமராவை பொருத்தி பெண்களை ஆபாச படம் எடுத்திருந்தார். அந்த படங்களும் இணையதளத்தில் வெளியானது.
இதனால் அந்த விடுதியில் தங்கிய சிலரது குடும்ப பெண்கள்கூட தங்கள் வீட்டு பெண்களையும் என்ஜினீயர் ஆபாச படம் எடுத்திருப்பாரோ என்று அச்சப்பட்டனர். அந்த என்ஜினீயரின் செக்ஸ் தொல்லை தாங்காமல் அலுவலக பெண் ஊழியர் பொலிசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் என்ஜினீயர் சுப்பிரமணியம் கைதானார். இந்த சம்பவத்துக்கு பின்னர் வால்பாறை தாசில்தாரராக இருந்த குணாளன் மீது அவரது உதவியாளராக பணிபுரிந்த பெண் செக்ஸ் குற்றம் சாட்டினார். அதன்பேரில் குணாளன் பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வால்பாறை பகுதி பெண்களை மேலும் ஒரு ஆபாச பட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வால்பாறையை சேர்ந்த சில பெண்களின் ஆபாச படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன. அவற்றை இளைஞர்கள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து பரிமாறி வருகிறார்கள்.
இதனால் அந்த படங்கள் தற்போது பலரிடம் பார்வைக்கு சென்றுவிட்டது. அதை பார்த்த பலர் அந்த ஆபாச படத்தில் உள்ள பெண்கள் தங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர் அந்த ஆபாச படத்தில் இருப்பது அந்த பகுதியை சேர்ந்த கடை பெண் ஊழியர்கள் என்றும் பிரபலமான பெண்கள் என்றும் அடையாளம் காட்டுகிறார்கள். இந்த தகவல் காட்டுத்தீ போல் வால்பாறை முழுவதும் பரவியுள்ளது. பலர் தங்களது செல்போன்களில் படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்து இரசித்து வருகிறார்கள். இது வால்பாறை பகுதி பெண்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒருவேளை அந்த படங்களில் நாமும் சிக்கி இருப்போமோ என்ற அச்சத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.
வால்பாறை பகுதி பெண்களின் படங்களை ஆபாச படமாக கிராபிக்ஸ் செய்து அந்த பெண்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் இந்த சதியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த காட்சியில் இடம்பெறும் பெண்களின் படம் உண்மையானதா? அல்லது கம்ப்யூட்டர் உதவியுடன் கிராபிக்ஸ் செய்யப்பட்டதா? என்று தெரியவில்லை.இதுகுறித்து யாரும் இன்னும் பொலிசில் புகார் கொடுக்கவில்லை. ஆனால் ஆபாச காட்சிகள் விரைவாக இளைஞர்களின் செல்போன்களில் பரவி வருவதால் பாதிக்கப்படும் பெண்கள் விரைவில் பொலிசில் புகார் கொடுப்பார்கள் என தெரிகிறது.இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் பொலிசாரை கேட்டுக்கொண்டனர்.
[Continue reading...]

Wednesday 16 January 2013

அடுத்தவர்களை குறை சொல்லும் முன்பு

- 0 comments

இளம் தம்பதிகள் ஒரு பழைய வீட்டிற்கு குடி போனார்கள்.
அது மாடி வீடு
-
பக்கத்து வீட்டு பெண்மணி அந்த அதிகாலை நேரத்தில், துணிகளை
துவைத்து முடித்து, கொடிக்கம்பியில் காயப் போட்டுக்
கொண்டிருந்தாள்
-
அதைத் தன் வீட்டு ஜன்னல் கண்ணாடி வழியே பார்த்த இளம் மனைவி
தன் கணவனிடம் சொன்னாள். ‘’பக்கத்து வீட்டுப் பெண் சரியாகவே
துவைக்கவில்லை. அங்கங்கே அழுக்கு அப்படியே நிற்கிறது. ஒரு வேளை
சோப்பை மாற்றினால் துணிகள் பளிச்சிடலாம்.
-
அதைத் தன் மனைவியின் வற்புறுத்தலுக்காகப் பார்த்த கணவன்
அமைதியாக இருந்தான். ஒன்றும் சொல்லவில்லை.
-
அது தொடர்ந்தது. அடுத்தடுத்த இரண்டு நாட்களும், ஜன்னல் கண்ணாடி
விழியே எட்டிப் பார்த்துவிட்டு அவ்வாறே குறை சொன்னாள்.
-
ஒரு மாதம் ஓடி விட்டது.
-
அன்று காலையில் ஜன்னல் வழியே அடுத்த வீட்டு மொட்டை மாடியில்
காயப்போட்டிருக்கும் துணிகளைப் பார்த்து அசந்து விட்டாள் நம் நாயகி.
அவைகள் சுதமாகவும், பளிச்சென்றும் இருந்தன!
-
ஆச்சரியம் மேலிட தன் கணவனிடம் சொன்னாள். இந்த அதிசயத்தைப்
பாருங்கள். இப்போதுதான் அடுத்த வீட்டுக்காரி சரியாகத் துவைத்து
இருக்கிறாள். அவளுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள் என்று
தெரியவில்லை?
-
அவளுடைய அன்புக் கணவன் அமைதியாகச் சொன்னான். ‘இன்று
அதிகாலையில் எழுந்து, நம் வீட்டு ஜன்னலை நான் நன்றாக
துடைத்திருக்கிறேன். Coolins Liquid போட்டுத் துடைத்திருக்கிறேன்
-
மனைவி வாயடைத்துப் போய் விட்டாள். அவளால் மேற்கொண்டு
ஒன்றும் பேச முடியவில்லை.
-
———————————————-
-
நீதி
அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு நமது பக்கம்
ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும்

[Continue reading...]

Sunday 6 January 2013

இன்று பிறந்த நாள் கொண்டாடிய நித்தியானந்தா

- 0 comments
இன்று பிறந்த நாள் கொண்டாடிய நித்தியானந்தா, இன்றைய காலை வேப்பங்காயாக கசந்து போய் விட்டது.
நித்தியானந்தாவுக்கு இன்று 35 வயது பிறந்துள்ளதாம். இதனால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தனது பரிவாரங்களுடன் வந்து தடபுடலாக பிறந்த நாளைக் கொண்டாட திட்டமிட்டிருந்தார்.
ஆனால் காலையிலேயே கோவில் நிர்வாகமும், காவல்துறையும் அதற்கு ஆப்பு வைத்து விட்டன.
காலையில், அண்ணாமலையார் கோவிலுக்குள் பக்தர்களுடன் வந்து வணங்கிவிட்டு, பின்னர் தன்னுடைய உருவ சிலையை கோயில் மாட வீதியில் வலம் வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை ஏற்பாடு செய்திருந்தார் நித்தியானந்தா.ஆனால் திடீரென கோவில் நிர்வாகத்தின் சார்பில், உள்ளே வருவதாக இருந்தால் 5 பேர் மட்டுமே வர வேண்டும். ஊர்வலமாக வரக் கூடாது. கூட்டம் கூட்டினால், உள்ளே வைத்து ஏதாவது பேசினால் உடனே கேஸ் போட்டு விடுவோம் என்று எச்சரித்து விட்டது. இதனால் கோவிலுக்குள் வரவே இல்லை நித்தியானந்தா.
சரி போனால் போகிறது மாட வீதியி்ல் வலமாவது வரலாமே என்று நினைத்து அதற்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் வலம் வருவதற்கு காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டுமாம். ஆனால் அதைப் பெரவில்லை. இதனால் கோவிலுக்கு எதிரே நித்தியானந்தா மடம் சார்பில் போடப்பட்டிருந்த பந்தலைப் போலீஸார் பிரித்து மேயந்து விட்டனர். இதனால் நித்தியானந்தா கமுக்கமாக தனது ஆசிரமத்திற்குள்ளேயே அடக்கம் ஒடுக்கமாக பிறந்த நாள் நிகழ்ச்சிகளை ஷிப்ட் செய்து விட்டார்.
[Continue reading...]

அல்லாஹ்வை வணங்குங்கள்!

- 0 comments
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்.

 [அல் குர்’ஆன் 4:36]

நபி (ஸல்) அவர்களிடம் பெரும்பாவங்கள் பற்றி கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்கு துன்பம் கொடுப்பதுமாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: புகாரி(2653)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்னையரைப் புண்படுத்துவது, (அடுத்தவருக்குத் தர வேண்டியதை) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான்.

அறிவிப்பவர்: முஃகிரா பின் ஷூஅபா(ரலி) நூல்:புகாரி (5975)

ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அல்லாஹ்வின் தூதரே! பிள்ளைகள் தமது பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவ்விருவரும்தான் உமக்கு சுவர்க்கமும் நரகமும் ஆவார்கள். அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) நூல்: இப்னு மாஜ்ஜா

தந்தையின் பொருத்தத்தில் அல்லாஹ்வின் பொருத்தமும் தந்தையின் வெறுப்பில் அல்லாஹ்வின் வெறுப்பும் உள்ளது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் அம்ரு (ரலி) நூல்: திர்மிதி

ஒரு மனிதர் இறைதூதரிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் நல்ல விதமாக நடந்து கொள்ள அனைவரை விடவும் உரிமை பெற்றவர் யார்? எனக்கேட்டார் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அதற்கடுத்து யார்? என அம்மனிதர் கேட்டபோது இறைதூதர் அவர்கள் இரண்டாவது முறையும் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அம்மனிதர் மூன்றாவது முறையாக அதற்கடுத்து யார்? என கேட்ட போது இறைதூதர் அவர்கள் உம்முடையதாய் என்றே பதிலளித்தார்கள். நான்காவது முறை அம்மனிதர் அதற்கடுத்து யார்? எனக் கேட்ட போது உம்முடைய தந்தை என்றும் படிப்படியாக நெருங்கிய உறவினர்களும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி) நூற்கள் : புகாரி, முஸ்லிம்

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆகவே நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது. [அல் குர்’ஆன் 31:14]

பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! [அல் குர்’ஆன் 17:23]

இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக! என்று கூறிப் பிரார்த்திப்பீராக! [அல் குர்’ஆன் 17:24]

பெற்றோரை கொடுமைப்படுத்துவோர் இவ்வுலகிலேயே தண்டனையை அடைவர்!

பெற்றோரைக் கொடுமைபடுத்தியதற்காகத் தரப்படும் தண்டனை மரணத்திற்குமுன் இவ்வுலகிலேயே துரிதமாகத் தரப்பட்டுவிடும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) நூல்: பைஹகீ

பெற்றோரின் திருப்தி:

பெற்றோரில் ஒருவர் கோபமடைந்தாலும் அவர்கள் திருப்தி அடையும்வரை அல்லாஹ் திருப்தியடைய மாட்டான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதும் அந்தப் பெற்றோர் அநீதம் செய்தாலுமா? என்று கேட்கப்பட்டதற்கு, ஆம்! அவர்கள் அநீதம் செய்தாலும்தான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), முப்ரத் அல் புகாரி

பெற்றோரை பேணுதலும் ஜிஹாத்:

ஜாஹிமா(ரழி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து இறைத்தூதர் அவர்களே! நான் போரில் கலந்து கொள்ள நாடுகிறேன் என்று கூறினார். உனக்கு தாய் உண்டா? என்று கேட்டதும் ஆம் என்றார். அவளை (கவனிப்பதை) தேர்ந்தெடுத்துக்கொள். அவளின் இரு கால்களின் அடியில் தான் சொர்க்கம் உள்ளது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஆவியா இப்னு ஜாஹிமா(ரழி) அஹ்மத், நஸயீ, ஹாகிம், தப்ரானீ)

அல்லாஹ்வின் தூதர் நமக்கு கூறிச்சென்ற அறிவுரைகளை மனதில் நிறுத்தி அல்லாஹ்வின் பொருத்தத்தை பெருவோமாக! ஆமீன்அல்லாஹ்வின் தூதர் நமக்கு கூறிச்சென்ற அறிவுரைகளை மனதில் நிறுத்தி அல்லாஹ்வின் பொருத்தத்தை பெருவோமாக! ஆமீன்

[Continue reading...]

Friday 4 January 2013

சிங்கப்பூரில் மரணமடைந்த மாணவியின் நண்பர் பேட்டி

- 0 comments

சிங்கப்பூரில் மரணமடைந்த மாணவியின் நண்பர் பேட்டியை ஒளிபரப்பிய டி.வி. மீது வழக்குப் பதிவு செய்ய டெல்லி போலீசார் முடிவு     
டெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவி, கடந்த மாதம் 29-ம் தேதி சிங்கப்பூரில் மரணமடைந்தார். அவருடன் சம்பவம் நடந்த பஸ்சில் பயணித்த நண்பர், அவைந்திரா பிரதாப் பாண்டே (28) என்பவர் தனியார் டி.வி. ஒன்றுக்கு அளித்த பேட்டி நேற்று ஒளிபரப்பானது.
<br /><br />
இதனையடுத்து, இந்திய குற்றவியல் சட்டம் 228 (ஏ) பிரிவின் கீழ் கற்பழிப்பு போன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களிள் அடையாளங்களை வெளிப்படுத்திய குற்றத்திற்காக மாணவியின் நண்பர் அளித்த பேட்டியை ஒளிபரப்பிய தனியார் டி.வி. நிறுவனத்தின் மீது டெல்லி போலீஸ் துறையின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என டெல்லி போலீஸ் செய்தி தொடர்பாளர் ராஜன் பகத் கூறியுள்ளார்.

[Continue reading...]

டெல்லி மாணவி இறப்பு உண்மையான காரணம் என்ன ?

- 0 comments

இந்திய மருத்துவமனையில் நன்றாக தேரிவந்த மாணவி சிங்கப்பூரில் இறந்ததன் உண்மையான காரணம் என்ன ? அந்த பெண் சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி இறந்தாளா? அல்லது சாகடிக்கப்பட்டாளா? இது பற்றிய சச்சரவுகளை இந்திய மருத்துவர்கள் எழுப்பக்கூடும் என்பதனால் தான் எமர்ஜென்சி காலத்தை போன்ற கட்டுப்பாடுகளுடன் அவசர கதியில் அப்பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டதா? இந்திய அரசே சிங்கப்பூரில் சாகடித்து நாடகம் ஆடுகிறதா ? இந்த பெண் இறந்தால் தான் அதன் அனுதாப அலையில் ஆண்களை ஒடுக்கும் கடுமையான சட்டங்களை உருவாக்க முடியும் என்ற திட்டமா ? இத்தகைய சட்டங்கள் ஆபாச பெண்களால் போலியாக பயன்படுத்தப்பட்டு ஆண்கள் மிரட்டப்படுவார்களா? இவை அணைத்தும் ஆபாச பெண்களை தங்களின் முக்கிய நுகர்வோராக என்னும் பன்னாட்டு நிறுவனங்களை வாழவைப்பதர்க்காகவா ? இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சந்தையை பெற்றுவிட்ட ஐ.நா அமைப்புகள் இதே பன்னாட்டு நிறுவனங்களுக்கு நுகர்வோர்களை உருவாக்கவே நம் தாய் திரு நாட்டில் ஊதாரி மக்களை திட்டமிட்டு உருவாக்கி வருகிறதா ? அதற்காகவே இந்தியாவில் இத்தகைய போராட்டங்களை ஐ.நா அமைப்புகள் தூண்டிவிடுகிறதா?

[Continue reading...]

அருந்ததி ராய்க்கு எதிராக விஷத்தை கக்கும் ஊடகங்கள் !!!

- 0 comments

அருந்ததி ராய்க்கு எதிராக விஷத்தை கக்கும் ஊடகங்கள் !!!
பிரபல சமூக ஆர்வலரும் பத்திரிக்கை பிரமுகருமாகிய அருந்ததிராய் டெல்லி கற்பழிப்பு பற்றி கூறிய சில கருத்துக்கள...ை மிகைப்படுத்தி சில ஊடகங்கள் அவர்மீது அவதூறுகளை பரப்பிவருகிறது...
அவர்கூறிய வார்த்தைகள்...
கற்பழிப்பு எங்கு நடந்தாலும் அவை கண்டிக்கப்படவேண்டியவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் எல்லா விஷயங்களையும் போன்று இந்த
விஷயத்திலும நம்நாட்டில் பாரபட்சம் காட்டப்படுகிறது.குஜராத்தில் பலநூறு முஸ்லீம் பெண்களின் கற்புகள் காவிகொடூரர்களால் சூரயடபட்டப்போது இந்த ஊடகங்கள் ஏன் அமைதிகாத்தன?
காஷ்மீரில் அபலைபெண்கள் இந்தியரானுவத்தினரால் சீரழிக்கப்படும்போது அவர்களை தூக்கிலடவேண்டும் என்று கோரிக்கைவைக்கபடாதது ஏன்?
சட்டீஸ்கரில் ஆதிவாசிபெண் சோனி சோரி போலீசாரால் கற்பழிக்கப்பட்டு அவளுடைய மர்மஉருப்பு கற்களால் சேதபடுத்தபட்டபோது ஏன் இவர்கள் வாயை திறக்கவில்லை?
இப்போது டெல்லியில் கர்ப்பழிக்கபட்டப்பெண் பஸ்சிலிருந்து நிர்வாணமாக தூக்கிவீசபட்டப்போது நூற்றுகனக்கானோர் வேடிக்கைபார்த்து கொண்டிருந்தனரே தவிர அவளுக்கு தன்னுடைய சட்டையை கழட்டிதரக்கூட யாரும் முன்வரவில்லை..
கர்ப்பழிக்கபட்டது எந்த ஜாதியாகவும்,மதமாகவும் இருந்தாலும் பாகுபாடில்லாமல் அதனை எதிர்க்கவேண்டும் இதுவே என்னுடைய கோரிக்கை என்று கூறியுள்ளார்.
சமீபகாலமாக ஆதிவாசிகளுக்கும், தலித்துகளுக்கும், முஸ்லீம்களுக்கும்,ஆதரவாக கருத்து தெரிவுக்கும் அருந்ததிராய்க்கு எதிராகஅவரை தேசதுரோகி எனவும் அவரை தாக்கவேண்டும் என்றும் ஏசியாநெட் போன்ற காவிஊடகங்கள் மக்களை உசுப்பெத்திவிட்டுள்ளனர்..

[Continue reading...]

குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்படாததால் மரண தண்டனையில் இருந்து மைனர் தப்பிக்க வாய்ப்பு

- 0 comments

குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்படாததால் மரண தண்டனையில் இருந்து மைனர் தப்பிக்க வாய்ப்பு 
name avoid from chargesheet minor person chance to escape


டெல்லியில் மருத்துவ மாணவியை கற்பழித்து கொலை செய்த ராம்சிங், முகேஷ் சிங், பவன், வினய், அக்ஷய் ஆகிய 5 பேர் மீது போலீசார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
மிக கொடூரமான குற்றம் செய்துள்ளதால் 5 பேருக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகையில் வலியுறுத்தியுள்ளனர். எனவே 5 குற்றவாளிகளுக்கும் அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6-வது குற்றவாளிக்கு 17 வயதே ஆவதால் அவன் மைனர் என்பதால் பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே அவனது உண்மையான வயதை கண்டுபிடிக்க அவனுக்கு எலும்பு மஜ்ஜை சோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்த சோதனை அறிக்கை இன்னும் வரவில்லை.
அவன் 18 வயதை பூர்த்தி செய்து மேஜர் ஆக இன்னும் 5 மாதம் இருப்பதாக தெரிகிறது. இது அந்த மைனருக்கு சாதகமான ஒரு சூழ்நிலையை மாற்றியுள்ளது.
தற்போதைய நிலையில் சிறுவர் குற்ற சட்டப்படி மாணவியை கற்பழித்த 17 வயது மாணவருக்கு அதிக பட்சமாக 3 ஆண்டுகள் வரைதான் ஜெயில் தண்டனை கொடுக்க முடியுமாம். இந்த காலக்கட்டத்தில் அவனுக்கு 18 வயது பூர்த்தி ஆகிவிட்டால், அவன் ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுவான்.
18 வயதுக்கு பிறகு அவனை சீர்திருத்த பள்ளியில் வைத்திருக்க இயலாது. மேலும் மேஜர் என்று சுட்டி காட்டி தண்டனை அளிக்கவும் இயலாது என்கிறார்கள். சட்டத்தில் உள்ள இந்த சில பிரிவுகளினால் மைனர் சிறுவன் உயிர் தப்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மாணவியை கற்பழித்த 6 பேரில் இந்த மைனர்தான் மிக, மிக கொடூரமாக நடந்து கொண்டவன். மாணவியை 2 தடவை பலாத்காரம் செய்த அவன் அவர் வயிற்றில் கம்பியால் குத்தி மரணத்துக்கும் காரணமாக உள்ளான்.
இத்தகைய கொடூர மைனர் சில மாதங்களில் சுதந்திரமாக வெளியில் வந்து விடுவான் என்பதை பலராலும் ஜீரணிக்க இயலவில்லை. எனவேதான் அவனது உண்மையான வயதை உறுதி செய்ய டெல்லி போலீசார் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
[Continue reading...]

Thursday 3 January 2013

என்றுமே ஆராத பசி காமம் மட்டுமே

- 0 comments

ஒவ்வொரு முறையும் புதுப் புது உற்சாகம் தருவது காமம் மட்டுமே. இன்னும் இன்னும் வேண்டும், மீண்டும் மீண்டும் வேண்டும் என்று என்றுமே ஆறாத பசி கொண்டது காமம் மட்டுமே. எப்படிப் பார்த்தாலும் காமம் இன்பமானதுதான். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சுவையை நாடும்போது அந்த இன்பத்திற்கு அளவு இன்னும் பல மடங்காக வெயிட் கூடும் என்பது உண்மை.

எனவே ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முறையில் புகுந்து இன்பத்தை நுகர முயற்சிப்பது நல்லது. வழக்கமான உறவு நிலைகளை விட மாறுபட்ட உறவு நிலைகளுக்கு எப்போதுமே திரில் சற்று அதிகம். வழக்கமாக ஆண்கள் மேலே, பெண்கள் கீழே என்பதை மாற்றி நின்றவாறும், பக்கவாட்டில் படுத்தவாறும், பெண் மேலே ஆண் கீழே என்றுமாக மாறி புணர்ச்சி கொள்வது புதிய அனுபவத்தை இருவருக்குமே கொடுக்கும்.

ஆண்கள் மீது பெண்கள் ஏறி அமர்ந்து கொண்டு உறவு கொள்ளும்போது அந்தப் பெண்களுக்கு கர்வம் கூடுகிறதாம், பெருமை கூடுகிறதாம், நாம்தான் இப்போது ராணி என்ற பெருமிதம் வந்து சேருகிறதாம். இதனால் மேலும் உற்சாகமுற்று அவர்களுக்குத் தேவையானதை அவர்களே எடுத்துக் கொள்ள ஏதுவாகிறதாம். சிலருக்கு நின்று கொண்டு புணருவது ரொம்பப் பிடிக்கும். இதில் பல நிலைகள் உள்ளன. வெறுமனே சுவர் மீது சாய்ந்தபடி பெண் நின்று கொண்டு ஆண் செக்ஸ் வைத்துக் கொள்வது பொதுவான நிலை.

அப்படி இல்லாமல் சாய்ந்தபடி நிற்கும்போது பெண்ணின் ஒரு காலை மட்டும் தூக்கி அதை ஆண் மீது வளைத்துப் பிடித்தபடி நின்று கொண்டு புணருவது இருவருக்கும் பெரும் திரில்லான அனுபவத்தைக் கொடுக்குமாம். அதை விட திரில்லான விஷயம், பெண்ணை ஆண் தூக்கிக் கொண்டு உறவில் ஈடுபடுவது. இதில் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி நல்ல எனர்ஜி இருக்க வேண்டியது அவசியம். உடல் பருமன் இல்லாதவர்களாக இருத்தலும் அவசியம்.

ஒருவேளை இதையும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினால் உயரமான ஸ்டூலில் பெண் அமர்ந்து, நன்றாக முனை வரை வந்து உட்கார்ந்து கொண்டு பின்னர் ஆணின் இடுப்பைச் சுற்றி வளைத்துக் கொண்டு அதன் பிறகு இன்பத்தில் ஈடுபடலாம். இப்படி விதம் விதமான இன்பக் கலைகளில் ஈடுபடும்போது உறவு வேகமாகவும், கூடுதல் இன்பத்துடனும் இருக்குமாம். அதேசமயம், இப்படிப்பட்ட மாறுபட்ட உறவுகளில் ஈடுபடும்போது சில கட்டுப்பாடுகளையும் நாம் கவனத்தில் கொள்வது நல்லது.

அதாவது சில குறிப்பிட்ட சமயங்களில் இந்த முறை புணர்ச்சியை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக மாதவிலக்கு வந்த சமயத்தில் மாறுபட்ட புணர்ச்சி நிலைகளைத் தவிர்க்க வேண்டும். பருமனான உடல் அமைப்பு கொண்ட பெண்களும் இதைத் தவிர்க்க வேண்டு்ம். குழந்தை பெற்ற பெண்களும் கொஞ்ச காலத்திற்கு இதிலிருந்து விலகியிருத்தல் நலம்.

[Continue reading...]

செக்ஸில் பிரச்சினை - Tamil Sex Topic

- 0 comments
செக்ஸில் பிரச்சினை வரலாம், ஆனால் செக்ஸே பிரச்சினையாக மாறினால்... நினைக்கவே பயமாக இருக்கிறதல்லவா... ஆனால் நிதர்சனம் அதுவாகத்தான் இருக்கிறது. நிறையப் பேருக்கு குறி்ப்பாக பெண்களுக்கு செக்ஸே பெரும் பிரச்சினையாக மாறி மனதையும் உடலையும் வாட்டி வதைத்து வருவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.


அதிலும், அதீதமான செக்ஸ் உணர்வுகள் பொங்கிப் பிரவகிக்கும் பெண்களுக்கு ஏற்படும் செக்ஸ் பிரச்சினைகளை சொல்லில் அடக்க முடியாது. எப்படி தணிப்பது, தவிப்பை எப்படித் தவிர்ப்பது, எதை ஊற்றி காமத்தீயை தணிப்பது என்பதில் அவர்கள் பெரிதும் தடுமாறிப் போய் விடுகிறார்கள், பல நேரங்களில் தடம் மாறியும் போய் விடுகிறார்கள்.
ஆனால் பல பெண்களுக்கு செக்ஸ் மீது பெரும் விரக்தி ஏற்பட்டு விடுகிறது. நாட்டம் குறைந்து போய் விடுகிறது. விருப்பம் இல்லாமல் கடனுக்கு கணவரிடம் படுக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையைத் தவிர்த்து, அதை சரி செய்து எப்படி தொடர்ந்து உறவில் ஈடுபடுவது என்பது குறித்த பார்வை இது...
விருப்பமின்மை - எந்தப் பெண்ணுக்குமே செக்ஸ் மீது ஆர்வம் இல்லாமல் போகவே போகாது. நிச்சயம் இருக்கத்தான் செய்யும், ஆனால் ஆண்களைப் போல வெளியில் காட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். உள்ளுக்குள்ளேயே வைத்திருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை நாம்தான் அடையாளம் கண்டு அனுசரணையுடன் அணுக வேண்டும்.இரவு விளையாட்டுக்கு பகலிலிருந்தே இவர்களைத் தயார்படுத்த வேண்டும். சின்னச் சின்ன செக்ஸ் விளையாட்டுக்கள், முத்தம், முன் விளையாட்டுக்கள் என பகலிலிலிருந்தே ரொமான்ஸைத் தொடங்கினால் இரவில் இவர்கள் சிறப்பான முறையில் தயராகி விடுவார்களாம்.
அழகா இல்லையே - சில பெண்களுக்கு தாங்கள் அழகாக இல்லை, உடல் அழகு சரியில்லை என்ற விரக்தி இருக்கலாம். இவர்களுக்கும் கூட செக்ஸில் ஆர்வம் குறைவாக இருக்குமாம். ஆனால் இப்படிப்பட்ட பெண்கள் மீது அவர்களின் ஆண் துணைகள் அதீத ஆர்வத்தையும், அன்பையும் பொழிந்தால் நிச்சயம் இவர்களுக்கும் செக்ஸ் ஆர்வம் சிறப்பாக தூண்டப்படுமாம். உன்னாலும் என்னை ஆள முடியும், நீயும் செக்ஸியாகத்தான் இருக்கிறாய் என்று அவர்களுக்கு தைரியம் சொல்லி ஊக்கப்படுத்தினாலே போதும் அவர்கள் நிச்சயம் செக்ஸில் சிறந்து விளங்குவார்கள் என்கிறார்கள் டாக்டர்கள்.
ஆர்கஸத்தில் ஆர்வமின்மை - ஆண்களுக்குத்தான் இந்த எழுச்சி, உச்சம், கிளைமேக்ஸ் எல்லாம் கவலை தரும் விஷயம். பெண்களைப் பொறுத்தவரை வெறும் முன் விளையாட்டுடன் நிறுத்தினால் கூட திருப்திப்பட்டுக் கொள்வார்கள். பெரும்பாலான பெண்கள் படுக்கையில் பொய்யான ஆர்கஸத்தைத்தான் வெளிப்படுத்துகிறார்கள் என்று கூறுகிறது ஒரு ஆய்வு. இப்படிப்பட்ட நிலையில் ஆண்கள் மிகவும் பொறுமையாக, நேர்த்தியாக பெண்களைக் கையாண்டால் நிச்சயம் அவர்கள் உரிய நேரத்தில் ஆர்கஸத்தை எட்டுவது நிச்சயம்.
நான் என்ன செக்ஸ் மெஷினா - சில ஆண்கள் எப்போது பார்த்தாலும் செக்ஸ் நினைப்பிலேயே இருப்பார்கள். தங்களது துணையை தொடர்ந்து கொண்டே இருப்பார்கள். இது பெண்களுக்கு அலுத்துப் போய் விடும். நான் என்ன செக்ஸ் மெஷினா என்று விரக்திக்குப் போய் செக்ஸையே வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். இப்படிப்பட்டவர்களிடம் மனித நேயத்துடன் பொறுப்புடன், பொறுமையாக நடந்து கொண்டு மனதைக் காயப்படுத்தாமல் மனதையும், காமத்தையும் வெல்ல முயற்சிக்க வேண்டும்.
ரொம்ப வலிக்குதே - இது பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சினைதான். உறுப்பு வறட்சி, இறுக்கம் காரணமாக உறவின்போது வலி ஏற்படுவது சகஜம்தான். இதனாலும் பலருக்கு செக்ஸ் பிடிக்காமல் போய் விடுகிறதாம். இதுபோன்ற நேரங்களில் உரிய உபாயங்களைக் கையாள வேண்டும். மேலும் முரட்டுத்தனமான உறவை தவிர்க்க வேண்டும். பூவைப் போல பெண்களின் உறுப்பை பாவித்து அதை அணுகி இன்பத்திற்குள் நுழைய வேண்டும்.
இப்படி பெண்கள் சந்திக்கும் செக்ஸ் பிரச்சினைகள் நிறையவே உள்ளன. ஆனால் பிரச்சினை என்று வந்தால் கூடவே தீர்வும் இருக்கத்தானே செய்யும். அதை நாம் சரியாக உணர்ந்து, புரிந்து தெளிந்து அணுகினால் எல்லாம் சரியாகி, இன்பமும் கைகூடி வரும்.
[Continue reading...]

Wednesday 2 January 2013

24 years ago 10 paise Swallow female removal group 20 doctors

- 0 comments
24 வருடம் முன்பு 10 பைசாவை விழுங்கிய பெண்: 20 டாக்டர்கள் குழு அகற்றியது 24 years ago 10 paise Swallow female removal group 20 doctors
மும்பை, ஜன.3-
24 வருடங்களுக்கு முன் ஒரு பெண் விழுங்கிய 10 பைசா நேற்று ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது.
மும்பை பரேல் பகுதியைச் சேர்ந்த பெண் ரத்னா அஹிர் (29). இவர் தனக்கு 5 வயதாக இருந்தபோது தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது விளையாட்டுக்காக 10 பைசாவை வாயில் மறைத்து வைக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த பைசா அவரது தொண்டைக்குள் நழுவிக் கொண்டு சென்றது. உடனே அவர் தனது தாயாரிடம் இதுபற்றி கூறினார். அவரும் சில வாழைப்பழங்களை உண்டால் அது வெளியேறி விடும் என கூறி கொடுத்தார். ஆனால் அதன்பிறகு அதைப்பற்றி அவர்கள் கண்டு கொள்ளவில்லை. காரணம் அதனால் எந்த தொந்தரவும் ஏற்படவில்லை.
அஹிருக்கு 20 வயதில் திருமணம் ஆனது. திருமணத்திற்கு பின் அவர் உணவை விழுங்குவதில் சிறிது சிரமத்தை உணர்ந்தார். எதையும் சரியாக அவரால் விழுங்க முடியவில்லை. இதை அறிந்த அவரது கணவர், அஹிரை உடனே டாக்டர்களை ஆலோசிக்கும்படி கூறினார். அப்போதும் அவர் உதாசீனப்படுத்தி விட்டார்.
ஆனால் 2 மாதத்துக்கு முன்புதான் இந்த பிரச்சினை தீவிரமானது. தொண்டைப் பகுதியில் அதிக வலி ஏற்பட்டது. பிறகு அவர்கள் பரேலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு ஸ்கேன் எடுத்து பார்த்தபோது 10 பைசா அவரது தொண்டைப் பகுதியில் இருப்பது தெரிந்து உடனே ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
டாக்டர்கள் இதுபற்றி கூறுகையில் , இதுமாதிரி கேஸ் சகஜம்தான். ஆனால் 24 வருடங்களுக்கு முன்பு விழுங்கப்பட்ட 10 பைசா காயினை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். அதிக வருடம் காரணமாக அந்த காயின் துருப்பிடித்திருந்தது. அதை சுற்றி தசை வளர்ந்திருந்தது. மயக்க மருந்து நிபுணர்கள் உள்பட 20 டாக்டர்கள் கொண்ட குழு ஒன்று இதை ஆபரேஷன் செய்து அகற்றி உள்ளோம்.
கஷ்டமான 2 என்டாஸ் கோபி முறைகளையும் கையாள வேண்டியிருந்தது. அந்த பெண் அமிர்ஷ்டசாலி. அவரது உணவுக் குழாய்க்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அரசு மருத்துவமனை என்பதால் அவருக்கு அதிக செலவும் இல்லை. என்றாலும் அவர் விழுங்கிய 10 பைசா, அவரது ஸ்கேனுக்கு ரூ.2,500 செலவை ஏற்படுத்தி விட்டது என டாக்டர்கள் கூறினர்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger