Thursday 23 February 2012

சற்றும் அசராத கொள்ளையர்கள்..மதுரையில் வங்கியைக் கொள்ளையடிக்க முயற்சி!!

- 0 comments
 
 
 
சென்னையில் ஐந்து வங்கிக் கொள்ளையர்களை போலீஸார் போட்டுத் தள்ளிக் கொண்டிருந்த நேரத்தில் மதுரையில் ஒரு வங்கிக் கிளையில் கொள்ளையடிக்க ஒரு கும்பல் முயன்றுள்ளது தெரிய வந்துள்ளது.
 
சென்னையில் 2 வங்கிகளில் துணிகரமாக கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த 5 பேரை இன்று அதிகாலையில் போலீஸார் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில் மதுரையில் பாங்க் ஆப் பரோடா கிளையில் கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது இன்று காலை தெரிய வந்துள்ளது.
 
கிட்டத்தட்ட சென்னையில் கொள்ளையர்கள் ஐவர் சுட்டு வீழ்த்தப்பட்ட சமயத்தில் மதுரையில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
எஸ்.எஸ்.காலனியில் பாங்க் ஆப் பரோடா கிளை உள்ளது. இந்தக் கிளைக்குள் புகுந்து சிலர் கொள்ளையடிக்க நள்ளிரவு வாக்கில் முயன்றுள்ளனர். ஆனால் உள்ளே புக முடியாமல் போனதால் அவர்கள் திரும்பிச் சென்றுள்ளது இன்று காலை தெரிய வந்தது.
 
இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



[Continue reading...]

உலகின் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசி- நொக்கியா அறிமுகம்!

- 0 comments
 

மொபைல் வேள்ட் காங்கிரஸ் (Mobile World Congress) என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய கையடக்கத்தொலைபேசி தயாரிப்பு நிறுவனங்கள், வலையமைப்பு வழங்குநர்கள்,விற்பனையாளர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப வழங்குநர்கள் பங்குபற்றும் கண்காட்சி ஸ்பெயினில் இம்மாதம் நடைபெறவுள்ளது.

இதில் காட்சிப்படுத்துவதற்காக பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் உற்பத்திகளைத் தயார்ப்படுத்தி வைத்துள்ளன.

அவ்வாறு காட்சிப்படுத்தவுள்ள கையடக்கத்தொலைபேசிகள் தொடர்பான அறிவிப்புகளையும் அந் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில் நொக்கியா நிறுவனம் இதுவரை வெளியானதில் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக் கையடக்கத்தொலைபேசியின் கெமராவைப் பற்றிய காணொளியொன்றினை நொக்கியா தற்போது வெளியிட்டுள்ளது.

Click here to view the embedded video.

இம்மாதிரியின் பெயர் நொக்கியா N808 PureView என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் நொக்கியா இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் மேற்கொள்ளவில்லை.

எனினும் இம் மாதிரியானது விண்டோஸ் மூலம் இயங்காது எனவும், 'நொக்கியா பெலி' இயங்குதளத்தின் மூலமே இயங்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நொக்கியா விண்டோஸின் கூட்டணி அமைத்ததன் பின்னர் அதன் சிம்பியன், பெலி, எனா போன்ற இயங்குதளங்களில் பெரிதும் அக்கறை செலுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் 'நொக்கியா N808 PureView ' பெலி இயங்குதளத்தினையே பயன்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நொக்கியா மாத்திரமன்றி மற்றைய நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிக்கு வைப்பதில் அதிக அக்கறை கொண்டுள்ளன.

குறிப்பாக எல்.ஜி. நிறுவனம் குவாட் கோர் புரசசரைக் கொண்ட எல்.ஜி. இன் ஒப்டிமஸ் 4X HD என்ற கையடக்கத்தொலைபேசியினை இங்கு அறிமுகப்படுத்தவுள்ளது.

தற்போது சந்தையில் நன்கு விற்பனையாகிக்கொண்டிருக்கும் செம்சுங்கின் கெலக்ஸி வரிசை கையடக்கத்தொலைபேசிகளுக்கு தகுந்த போட்டியளிக்கும் வகையில் எல்.ஜி. பல மாதிரிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

அவற்றில் ஒன்றே இதுவாகும்.

இது 4.7 அங்குல, 1280 x 800 ரிஸலுஸனுடன் IPS திரையைக்கொண்டது.

இதன் சிறப்பம்சம் என்னவெனில் Nvidia Tegra 3 1.5GHz குவாட் கோர் புரசசராகும்.

இதைத்தவிர 1 ஜி.பி. ரெம், 8 மெகாபிக்ஸல் கெமரா, 16 ஜிபி உள்ளக நினைவகத்தினைக் கொண்டதாகும்.

இந் நிறுவனங்களைப் போல பல நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தவுள்ளன. எனவே பொறுத்திருந்து பார்ப்போம் என்னென்ன புதிய தயாரிப்புகள் வெளியாகின்றன என!

[Continue reading...]

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடி சுருதிஹாசன்

- 0 comments
 


'மங்காத்தா' வெற்றியை தொடர்ந்து வெங்கட்பிரபு அடுத்து சூர்யாவை வைத்து இயக்கும் புதிய படத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றன.

இதுபற்றி வெங்கட்பிரபு அளித்த பேட்டியில் கூறியதாவது:

"தற்போது சூர்யா நடிக்கும் புது படத்தை இயக்குகிறேன். இதற்கான ஸ்கிரிப்ட் இப்போதுதான் முடிந்தது. இந்த படத்தை ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக எடுக்க முடிவெடுத்திருக்கிறோம். சூர்யாவுடன், தெலுங்கு நடிகர் ரவி தேஜாவும் காமெடி காட்சிகளில் நடிக்க உள்ளனர். இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருவதால், அந்த படங்களை முடித்தவுடன் இப்படத்தில் நடிப்பார்கள். சோனம் கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் முன்னணி நடிகை ஒருவர் நடிக்கிறார். 7ம் அறிவு படத்துக்கு ஸ்ருதி, சூர்யாவுடன் நடிப்பதாக வந்த தகவல் உண்மையல்ல. வெறும் வதந்தி தான்" என்று கூறினார்.

சமீபத்தில் அஜீத்தை சந்தித்து, சினிமா தவிர பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம். மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசையாக இருக்கிறேன். அதற்கான நேரம் வரும்போது கண்டிப்பாக இணைந்து பணியாற்றுவோம் என்று கூறினார்.
[Continue reading...]

மீனவர்கள் இன்றும் (23) கடலுக்குச் செல்லவில்லை நீர்கொழும்புல்

- 0 comments
 

எரிபொருள் விலை ஏற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமக்கு எரிபொருள் மான்யம் வழங்க வேண்டும் என்று கோரியும் தொடர்ச்சியாக மீன்பிடி நடவடிக்கைகளில் இருந்து விலகி உள்ள நீர்கொழும்பு ஆழ்கடல் மீனவர்கள் இன்றும் (23) கடலுக்குச் செல்லவில்லை. தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரையில் தமது சங்கத்தில் அங்கத்துவம் பெறும் மீனவர்கள் கடலுக்குச் செல்லமாட்டார்கள் என நீர்கொழும்பு ஆழ்கடல் மற்றும் ஒருநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் சமாசத்தின் தலைவர் ஜோசப் பீட்டர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இதேவேளை, தங்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அடங்கிய திட்டமொன்றை பிரதி அமைச்சர் சரண குணவர்தன ஊடாக ஜனாதிபதிக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளது என கம்பஹா மாவட்ட ஆழ்கடல் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் சமாசத்தின் தலைவர் ஜூட் பெரேரா கூறியுள்ளார்.

[Continue reading...]

விருது நடிகைக்கு நடந்த விபரீதம்

- 0 comments
 



கோடம்பாக்கத்தையே குலுக்கிக் கொண்டிருக்கிறது இந்த வதந்தீ. ஐயா சாமி. அதுஅப்படியே வதந்தியாகவே போகட்டும் என்று அவரவர் மனசுக்குள் விசேஷ பிரார்த்தனை கூட்டமே போட்டுக் கொண்டிருக்கிறார்கள். விஷயம் அவ்வளவு சீரியஸ்!நட்சத்திர கிரிக்கெட்டில் நமது டீமுக்குதான் கோப்பையும் வெற்றியும். இந்த வெற்றிக் கோப்பையை கைப்பற்றிய பின்பு கோப்பையை நிரப்பி, கும்மியடிப்பதில் தப்பென்ன என்று நினைத்த அதே நட்சத்திரக் கூட்டம் சென்னையில் பிரதான இடத்திலிருக்கும் ஹோட்டலில் கூடியிருக்கிறது.

ஆட்டம் பாட்டம் அமர்க்களம் என்று விடிய விடிய நடந்த விருந்தில் அந்த விருது நடிகைதான் ரொம்பவே தடுமாறிவிட்டாராம். வேறொன்றுமில்லை, மிதமிஞ்சிய மிக்சிங்தான். கூரையில் இடிக்கிற அளவுக்கு கொண்டு போய் விட்டதாம் சரக்கு. மொத்த கூட்டமும் கலைந்த பின்பு அவர் மட்டும் அந்த ஹாலில் சுருண்டு கிடக்க, உதவி செய்வதாக வந்த நாலைந்து இளைஞர்கள் அவரை து£க்கி கொண்டு சென்ற இடம் அதே ஓட்டலில் அமைந்திருந்த ஒரு ஒதுக்குபுறம்.

அப்புறம் நடந்தெல்லாம் 'அவ்வவ்வவா' சமாச்சாரம் என்கிறார்கள். அருவியில் நழுவிய சோப்பு டப்பாவை அவ்வளவு ஈசியாக கேட்ச் பண்ண முடியுமா என்ன? போனது போனதுதான் என்று எடுத்துக் கொண்டாராம் நடிகை. ஃப்ரியா போச்சு நேரம். மணியா கிடைச்சிருந்தாலாவது மனசு ஆறியிருக்கும் என்று கவலைப்படுகிறாராம் இப்போது.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger