Friday 23 August 2013

அலுவலக கம்ப்யூட்டர்களில் ஆபாசப் படம் karnataka warns govt officials against porn in office computers

- 1 comments
அரசு அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களின் மூலம் வலைத்தளங்களுக்கு சென்று ஆபாசப் படங்களை பார்க்கும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக அரசு எச்சரித்துள்ளது.

கர்நாடக அரசுக்கு சொந்தமான வலைத்தளத்தின் மூலம் ஆபாச உடலுறவுக் காட்சிகளை ஒளிபரப்பும் வலைத்தளங்களுக்கு சென்று அரசு ஊழியர்கள் நேரத்தை வீணடிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து, சி.பி.ஐ. போலீசார் விசாரித்தபோது கர்நாடக அரசின் தலைமைச் செயலகமான விதான சவுதாவில் இருந்து வெளிநாடுகளில் உள்ள ஆபாச வலைத்தளங்களை பல அரசு ஊழியர்கள் பார்த்து ரசித்ததாக தெரிய வந்தது.

இந்நிலையில், கர்நாடக சட்டம் மற்றும் சட்டமன்ற விவகாரத்துறை மந்திரி ஜெயச்சந்திரா நேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், ‘இவ்விவகாரம் தொடர்பாக எனக்கு ஏதும் தெரியாது அரசு ஊழியர்கள் தவறு செய்தது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு கர்நாடக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது எம்.எல்.ஏ.க்கள் சிலர் கைபேசிகளில் ஆபாசப் படங்களை பார்த்து ரசித்தக் காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பாகி சந்தி சிரித்தது நினைவிருக்கலாம்.
[Continue reading...]

16 வயது சிறுமியை கற்பழித்த மந்திரவாதி தலைமறைவு police search to nab gujarat godman for molesting minor girl

- 0 comments

பேய் ஓட்டுவதாக கூறி 16 வயது சிறுமியை கற்பழித்த மந்திரவாதி தலைமறைவு police search to nab gujarat godman for molesting minor girl 

 

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பம் நீண்ட காலமாக சொத்துப் பிரச்சினை மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக சிக்கலில் மாட்டித் தவித்தது.

அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்த ஹரி பிரம்மன் என்ற மந்திரவாதி அடிக்கடி அவர்களின் வீட்டுக்கு வந்து மந்திர தந்திரங்களை செய்து வந்தான்.

நேற்று அதிகாலை வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது அவசரமாக ஓடிவந்து கதவை தட்டிய மந்திரவாதி, ‘நல்ல நேரம் முடிவதற்குள் உடனடியாக பூஜை செய்ய வேண்டும்’ என கூறி உள்அறைக்கு சென்றான்.

‘உங்களது பீடை ஒழிய உங்கள் இளைய மகளை தனியாக வைத்து பூஜிக்க வேண்டும். அவளிடம்தான் தெய்வீக சக்திகள் குடிகொண்டு இருக்கின்றன’ என்று கூறிய ஹரி பிரம்மன் அவர்களின் 16 வயது மகளை தனிஅறைக்கு அழைத்துச் சென்றான். பெற்றோர்களை அறையை விட்டு வெளியேறும்படி கூறிய அவன், கதவை உள்பக்கம் தாளிட்டுக் கொண்டு அந்த சிறுமியை கதறக்கதற கற்பழித்தான்.

எல்லாம் முடிந்த பிறகு அந்த பெண் மயங்கி விழுந்தாள். ஒன்றும் நடக்காததுபோல் வெளியே வந்த மந்திரவாதி, ‘உங்கள் மகள் மீது தெய்வத்தின் அருள் வந்து அவள் மயங்கி விழுந்து விட்டாள். சிறுதி நேரத்தில் மயக்கம் தெளிந்து விடும். எனக்கு இன்னொரு வீட்டில் அவசரப் பூஜை இருக்கிறது’ என்று கூறிவிட்டு அந்த இடத்திலிருந்து நழுவினான்.

மயக்கம் தெளிந்த சிறுமி பெற்றோரிடம் உள்ளே நடந்த அக்கிரமத்தை கூறி அழுதாள். இதனையடுத்து அவர்கள் டியோடர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

வழக்குப்பதிவு செய்த போலீசார் சர்தார் புரா பகுதியை சேர்ந்த போலி மந்திரவாதி ஹரி பிரம்மனை வலை வீசி தேடிவருகினறனர்.

[Continue reading...]

பாகிஸ்தான், சீனாவைத் தொடர்ந்து மியான்மர் ராணுவமும் இந்திய எல்லைக்குள் ஊடுருவல் myanmar crosses indian border line

- 0 comments

இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவும் பாகிஸ்தான் மற்றும் சீன ராணுவத்தின் தலைவலியை சமாளிக்கவே இந்திய அரசு திணறிக்கொண்டிருக்கும் வேளையில் புதிய திருகுவலியாக மியான்மர் ராணுவப் படைகள் மணிப்பூரில் உள்ள எல்லைக்கோட்டை கடந்து ஊடுருவி உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியா - மியான்மர் நாடுகளுக்கிடையே சுமார் 398 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ளது. இங்குள்ள 76-வது கம்பம் அருகே கடந்த வியாழக்கிழமை மியான்மர் ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

சன்டேல் மாவட்டத்தில் உள்ள போலன்பை கிராமத்தில் கூடாரம் அமைக்கவும் அவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக போலன்பை கிராமத் தலைவர் அளித்த புகாரையடுத்து உள்ளூர் போலீசார் எல்லைப் பகுதி அருகே சென்று பார்த்தனர். அப்போது கூடாரம் அமைப்பதற்காக மியான்மர் ராணுவ வீரர்கள் தரையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தனர். இதனை கண்ட போலீசார் இது தொடர்பாக ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.

இந்த அத்துமீறல் தொடர்பாக மத்திய அரசுக்கு தகவல் அளிக்கப்பட்டதாக மாநில அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger