Friday 11 November 2011

“குடி”மக்களுக்கு ஓர் நற்செய்தி

- 0 comments
 
 
 
வீதிகள் தோறும் நமது அரசு மதுபானகடைகளை திறந்து வைத்துள்ளது. இப்போது தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலமாக கடந்த ஆண்டு 14,965 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும். இந்த வருமானத்தை அடுத்த அண்டில் 20 ஆயிரம் கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது தமிழக அரசு.
 
இதையடுத்து வியாபாரத்தை அதிகப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு மாவட்ட தலை நகரங்களிலும், நவீன வசதிகளுடன், குளிரூட்டப்பட்ட பிரமாண்டமான அளவில் இருக்கும் "எலைட் ஷாப்" என்ற பெயரில் மதுபான கடைகளை திறக்கவும், அது தவிர மாவட்டம் தோறும் ஐந்து இடங்களில் சாதாரண மதுபானகடைகளை திறக்கவும் கோட்ட முதுநிலை மேலாளருக்கு அதிகாரம் அளித்துள்ளது தமிழக அரசு.
 
 
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஐந்து சாதாரண டாஸ்மாக் கடைகளையும், இரண்டு "எலைட் ஷாப்" கடைகளையும் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து வருகிறார்கள் மண்டல மேலாளர்கள்.
 
இந்த "பார்"களில் மற்ற "டாஸ்மாக்" பாரில் இருப்பதை காட்டிலும் கொஞ்சம் கூடுதல் "சேவை"க்கட்டணம் வசூலிக்கப்படும் என்று பெயர் சொல்ல விரும்பாத ஒரு அலுவலர் கூறினார்.
 
அரசு மக்களுக்கு செய்யும் "நல்ல சேவை"
 


[Continue reading...]

ஸ்னேகாவின் 'காதலில் விழுந்தது' எப்படி?- பிரசன்னா

- 0 comments
 
 
 
ஸ்னேகா பழக இனிமையானவர். அவரது எளிமையும் யதார்த்தமும் அவரை என் மனைவியாக்கிக் கொள்ளத் தூண்டியது. அதனால்தான் காதலித்தேன், என நடிகர் பிரசன்னா கூறினார்.
 
ஸ்னேகாவுடன் காதல் மலர்ந்தது எப்படி என்பது குறித்து பிரசன்னா அளித்த பேட்டி:
 
அச்சமுண்டு அச்சமுண்டு படம பண்ண போது ஸ்னேகாவுக்கும் எனக்கும் ஆரம்பத்தில் தொழில் ரீதியான நட்புதான் இருந்தது. நாளடைவில் ஸ்னேகா நடவடிக்கையில் ஈர்ப்பானேன். அவர் பெரிய நடிகை. ஆனாலும் அந்த தலைக்கனம் கொஞ்சமும் இல்லை. பந்தா இல்லாமல் பழகுவார். எளிமையாக நடந்து கொள்வார். அந்த குணங்கள் எனக்கு பிடித்தது.
 
ஸ்னேகா என் மனைவியாக வாழ்க்கை முழுக்க என்னுடன் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். மூன்றரை வருடம் எங்களுக்குள் காதல் இருந்தது. ஆனாலும், அவசரப்படாமல் ஒருவரையொருவர் முழுமையாக புரிந்து கொள்ள கால அவகாசம் எடுத்தோம். நிறைய யோசித்தோம். விவாதித்தோம். அதன் பிறகு திருமணம் செய்து கொள்வதென முடிவு எடுத்தோம்.
 
காதலின் அடையாளமாக முதலில் ஸ்னேகாவுக்கு புடவை வாங்கி கொடுத்தேன். அது அவருக்கு ரொம்ப பிடித்தது. எனக்கு ஸ்னேகா விலை உயர்ந்த கைக்கடிகாரம் வாங்கி கொடுத்தார்.
 
நாங்கள் ரொம்ப நெருக்கமான பிறகு ஸ்னேகாவுக்கு அவரது பிறந்த நாளில் 'ஐ பேட்' வாங்கி கொடுத்தேன். இரு குடும்பத்தாரும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டனர். விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறும்," என்றார்.
 
நடிகை ஸ்னேகா இன்னமும் இந்த திருமணம் குறித்து பேசவில்லை. ஸ்னேகா அனுமதியுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பிரசன்னா தெரிவித்தார்.
 
விரைவில் இருவரும் கூட்டாக பிரஸ் மீட் வைக்கப் போகிறார்களாம்.



[Continue reading...]

பாரதிராஜா படத்திலிருந்து பார்த்திபன் விலகல்!

- 0 comments
 
 
பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்திலிருந்து விலகுவதாக நடிகர் பார்த்திபன் அறிவித்துள்ளார்.
 
பாரதிராஜா எடுக்கவிருக்கும் புதிய படம் அன்னக்கொடியும் கொடிவீரனும். இந்தப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவிருந்தார் பார்த்திபன்.
 
இதற்காக முறுக்கு மீசை, கட்டான உடல் என தயாராகி வந்தார் பார்த்திபன்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் விரைவில் தொடங்கவிருக்கிறது. படபூஜையும் கூடமதுரையிலேயே நடக்கிறது.
 
இந்த நிலையில், அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நடிக்காமல் விலகிக் கொண்டதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறுகையில், "அப்படத்தில் நான் பங்கேற்கவில்லை! காரணங்கள் சொல்லலாமே தவிர, சொல்வதெல்லாம் காரணமாகி விடாது!" என்று குறிப்பிட்டுள்ளார்.



[Continue reading...]

பரிதாப ஆஸ்திரேலியா- 47 ரன்களில் சுருண்டு கேவலப்பட்டது!

- 0 comments
 
 
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வரலாறு காணாத அவமானத்தை சந்தித்துள்ளது. தனது 2வது இன்னிங்ஸில் 47 ரன்களில் சுருண்டு கேவலப்பட்டுள்ளது ஆஸ்திரேலியா. இருப்பினும் டெஸ்ட் வரலாற்றில் மிகக் குறைந்த ஸ்கோர் என்ற மகா கேவலமான நிலையை எட்டாமல் அது தவிர்த்து தப்பியுள்ளது.
 
கடந்த 109 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா எடுத்துள்ள 4வது மிகக் குறைந்த ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தற்போது இரு அணிகளும் விளையாடி வருகின்றன. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 284 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் ஸ்டெயின் 4, அறிமுக வேகப் பந்து வீச்சாளர் பிலான்டர் 3, மார்னி மார்க்கல் 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
 
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்காவை ஆஸ்திரேலிய படு வேகமாக சுருட்டியது. இதனால் அந்த அணி 96 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியது. ஆஸ்திரேலிய வீரர் வாட்சன் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்களைச் சாய்த்தார்.
 
இதையடுத்து 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது ஆஸ்திரேலியா,வலுவாக ரன் குவித்து தென் ஆப்பிரிக்காவை வீழ்த்த அந்த அணி முயற்சிக்கும் என்றுதான் ரசிகர்கள் நம்பியிருந்தனர். ஆனால் நடந்தது வேறு. தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் பிலான்டர் சூறாவளியாக மாறி ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்து விட்டார்.
 
வெறும் 15 ரன்களை மட்டுமே கொடுத்த பிலான்டர் 5 விக்கெட்களைச் சாய்த்து ஆஸ்திரேலியாவை அலறடித்தார். மார்க்கல் தன் பங்குக்கு 3 விக்கெட்களை வீழ்த்த, ஸ்டெயின் 2 விக்கெட்களைச் சாய்க்க ஆஸ்திரேலியா வெறும் 47 ரன்களில் சுருண்டு போனது.
 
கடை நிலை ஆட்டக்காரர்களான சிடிலும், லியானும் மகா பொறுமையுடன் ஆடியதால் மிக மோசமான ஸ்கோரில் சுருண்டு போகும் அபாயத்திலிருந்து தப்பிப் பிழைத்தது ஆஸ்திரேலியா.
 
இதையடுத்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளது. நேற்றையே 2வது நாள் ஆட்ட நேர இறுதியில் அந்த அணி 1 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது.
 
கேவலப்படுவது முதல் முறையல்ல
 
ஆஸ்திரேலிய அணி இவ்வாறு மிகக் குறைந்த ஸ்கோரில் சுருளுவது இது முதல் முறையல்ல, மாறாக 4வது முறையாகும். இதற்கு முன்பு 1902ம் ஆண்டு அந்த அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது 36 ரன்களில் சுருண்டது.
 
1896 மற்றும் 1924 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி தலா 30 ரன்கள் எடுத்து மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
உலக டெஸ்ட் வரலாற்றில் மிகக் குறைந்த ஸ்கோரை எடுத்துள்ள பெருமை நியூசிலாந்திடம் உள்ளது. 1955ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது அது எடுத்த 26 ரன்கள்தான் இன்றுவரை மிகக் குறைந்த ஸ்கோராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
ஒரே நாளில் 23 விக்கெட்கள்
 
நேற்று ஒரே நாளில் மட்டும் 23 விக்கெட்கள் கேப்டவுந் மைதானத்தில் விழுந்தன. அதில் 22 விக்கெட்களை வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இரு அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள் இருவர் அடுத்தடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தியதும் டெஸ்ட் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
 
மேலும் இரு அணிகள் தங்களது இன்னிங்ஸ்களில் 100 ரன்களுக்கும் குறைவாக அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டது டெஸ்ட் வரலாற்றில் இது 9வது முறையாகும்.
 
மொத்தத்தில் நேற்றைய நாள் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு கருப்பு நாளாக அமைந்தது. 11-11-11 ஆகிய இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு புதிய வரலாறு படைக்கும் நாளாக அமையப் போகிறது.



[Continue reading...]

விஜய் -முருகதாஸ் இணையும் பட கதையின் அவுட்லைன்

- 0 comments
 
 
 
'வேலாயுதம்' படத்தினை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் விஜய். இப்படத்தினை விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்க இருக்கிறார்.
 
இப்படத்தின் பெயர், நாயகி, எப்போது படப்பிடிப்பு என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இப்படம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
படத்தின் ஆரம்ப காட்சிகளை திருச்செந்தூரில் எடுக்கலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். திருச்செந்தூரில் ஆரம்பிக்கும் கதை மும்பைக்கு பயணிக்குமாம். கடலுக்கு அருகில் திருச்செந்தூர் கோவில் அமைந்து இருப்பதால் இக்கதைக்கு ஏற்றவாறு இருக்கும் என்று இப்படி முடிவெடுத்தார்களாம். மும்பையில் தான் பெரும்பகுதி படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
 
படத்தின் நாயகியாக ப்ரியங்கா சோப்ரா இருக்கலாம் என்கிறது படக்குழு.
 
கதைப்படி படத்தில் இரண்டு நாயகிகள் வேண்டுமாம். ப்ரியங்கா சோப்ராவுடன் '180' படத்தில் நடித்த ப்ரியா ஆனந்த் இன்னொரு நாயகியாக நடிக்கலாம் என்கிறார்கள்.



[Continue reading...]

நர்ஸ் - முன்னாள் மந்திரியின் செக்ஸ் வீடியோ' வெளியானது(வீடியோ)

- 0 comments
 
 
நர்ஸ் பன்வாரிதேவி மாயமான வழக்கில் திடீர் திருப்பமாக இருவரும், ராஜஸ்தான் முன்னாள் மந்திரி மஹிபால் மடெர்னாவும் செக்ஸில் ஈடுபடும் வீடியோ டேப்புகள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் நர்ஸ் பன்வாரிதேவி. அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்த இவர், கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் மாயமாகி விட்டார். எங்கு தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
 
இதையடுத்து பன்வாரியின் கணவர் அமர்சந்த் செப்டம்பர் 6-ந்தேதி போலீசில் புகார் செய்தார். மந்திரி மகிபால் மடெர்னா தூண்டுதலின் பேரில் தனது மனைவி கடத்திச் செல்லப்பட்டு, கொலை செய்யப்பட்டார் என்று தனது புகாரில் அவர் குறிப்பிட்டு இருந்தார். உள்ளூர் போலீசார் `பெண் மாயம்' என்ற வகையில் வழக்கு பதிந்து விசாரணையை தொடர்ந்தனர்.
 
இவ்வழக்கில் மந்திரி மஹிபாலையும் சேர்க்க வேண்டும் என்று கோரி பன்வாரிதேவியின் கணவர் அமர்சந்த் உள்ளூர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதை ஏற்று மாடர்னாவையும் இவ்வழக்கில் சேர்க்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் இவரும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து அக்டோபர் 16-ந்தேதி மந்திரி பதவியில் இருந்து மஹிபால் மாடெர்னா நீக்கப்பட்டார்.
 
நர்ஸ் மாயமான விவகாரத்தில் பெரும்புள்ளிகள் சம்பந்தப்பட்டு இருப்பதால் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. பல்வேறு கோணங்களில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆனால் பன்வாரி பற்றி உருப்படியான எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் எங்கேயாவது தலைமறைவாக உள்ளாரா?அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று இன்னும் உறுதியாக தெரிய வில்லை. இதனால் இந்த விஷயத்தில் மர்மம் நீடித்து வருகிறது.
 
இதனிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏ. மல்கான்சிங்கின் சகோதரி இந்திரா விஸ்னாய்வுடன் பன்வாரி உரையாடும் `ஆடியோ டேப்' சமீபத்தில் வெளியானது. அதில், மஹிபால் மாடர்னா தனக்கு ரூ.7 கோடி தரவில்லை எனில் அவருக்கும், தனக்கும் உள்ள உறவை பகிரங்கப்படுத்துவேன் என்று அவரிடம் பன்வாரி மிரட்டும் தொனியில் பேசுவது பதிவாகி இருந்தது.
 
இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் மஹிபாலிடம் விசாரணை நடத்தினார். ஆனால் தனக்கு நர்ஸ் பன்வாரியை தெரியாது. அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று மறுத்தார். சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சோகன்லால் விஸ்னாய், பல்தேவ்ஜட், ஷகாபுதீன் ஆகியோரிடம் இருந்தும் எந்த தகவலையும் பெற முடியவில்லை. சம்பவத்தை அடுத்து மாயமாகி விட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. மல்கான்சிங் விஸ்னாய் உள்ளூர் கோர்ட்டால் தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் நர்ஸ் பன்வாரிதேவியுடன் முன்னாள் மந்திரி மஹிபால் ஒன்றாக இருக்கும் செக்ஸ் வீடியோ டேப்புகள் நேற்று உள்ளூர் சேனல்களில் வெளியாகின. இந்த காட்சிகள் 48 நிமிடங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. ஓட்டல்கள் அல்லது விருந்தினர் மாளிகையில் வைத்து இந்த காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.
 
இந்த செக்ஸ் வீடியோ டேப்புகள் பெரும்பரபரப்பை ஏற்படுத்தின. டி.வி.யில் ஒளிபரப்பப்பட்ட இந்த காட்சிகளை மஹிபாலும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதற்கு மேலும் மறைத்தால் அது தனக்குதான் கேடு என்று உணர்ந்த அவர் நேற்று மாலை ஜோத்பூரில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு சென்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். "நர்ஸ் பன்வாரியை தனக்கு நன்கு தெரியும். பலமுறை அவரை சந்தித்து இருக்கிறேன்.
 
ஆனால் பன்வாரி மாயமானதற்கும், எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. என் மீது வீண்பழி சுமத்தப்படுகிறது'' என்று கூறினார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினார். சுமார் 6 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. பன்வாரிதேவி மாயமானது பற்றிய கேள்விகள் அனைத்துக்கும் தெரியாது, தெரியாது என்றே கூறியுள்ளார். பின்னர் நாளைக்கு (இன்று) மீண்டும் விசாரணைக்கு வந்து ஆஜராக வேண்டும் என்று சொல்லி அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
 
இன்றும் அவரிடம் விசாரணை நடக்கிறது. செக்ஸ் உறவு வைத்துக் கொண்டு அதை காட்டி ரூ.7 கோடி கேட்டு மிரட்டியதால் நர்ஸ் பன்வாரிதேவி கொலை செய்யப்பட்டு இருக்க வேண்டும். அவரது உடல் சிதைக்கப்பட்டு புதைக்கவோ எரிக்கவோ அல்லது ஆற்றிலோ வீசப்பட்டு இருக்கலாம் என்று சி.பி.ஐ. கருதுகிறது.
 
இந்த சம்பவத்தின் பின்னணியில் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர் என்றும் சந்தேகப்படுகின்றனர். சி.பி.ஐ.க்கு கிடைத்துள்ள ஆதாரங்கள் இந்த வழக்கின் விசாரணையை சூடுபிடிக்க வைத்துள்ளது.








[Continue reading...]

அப்துல் கலாம் மீது வைகோ மறைமுக தாக்கு!

- 0 comments
 
 
 
கூடங்குளம் அணு மின் நிலையத்துக்காக பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிடும் சில பெரியவர்கள், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவையும், தமிழக மீனவர்களைத் தாக்கும் இலங்கையையும் எதிர்த்துக் குரல் கொடுப்பதில்லை என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மறைமுகமாக தாக்கியுள்ளார்.
 
சென்னையில் நேற்று நடந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு வைகோ பேசினார். அப்போது சமீபத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அப்துல் கலாமை மறைமுகமாக அவர் விமர்சித்தார்.
 
இதுகுறித்து அவர் பேசியதாவது:
 
தமிழகத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்லும் கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது என்று விஞ்ஞானத்தை துணைக்கு அழைத்துக் கொண்டு சில பெரியவர்கள் பக்கம்பக்கமாக அறிக்கை கொடுத்து வருகிறார்கள்.
 
இதற்காக கரிகாலன் கட்டிய கல்லணை பாதுகாப்பாகத்தானே இருக்கிறது என்றெல்லாம் பேசி வருகிறார்கள். இப்படி அணு மின் நிலையத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் பெரிய மனிதர்கள், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்தை கண்டிப்பதில்லை. தமிழகத்துக்காக குரல் கொடுப்பதில்லை. இலங்கை கடற்படையினரால் இதுவரை 600-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்தும் அந்த பெரியவர்கள் கருத்து தெரிவிப்பதில்லை
 
தமிழகத்தை அனைத்து நிலைகளிலும் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து மின்சாரம் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது. இந்தத் தகவலை நாடாளுமன்றத்திலேயே மத்திய அரசு அறிவித்துள்ளது என்றார் வைகோ.



[Continue reading...]

prabhakaran salai,vallampadugai

- 0 comments
 


சென்னை-நாகை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இரவு சென்னை வரும் வழியில் கொள்ளிடம் அருகே வல்லம்படுகை கிராமத்தில் கண்ட காட்சி(மாவீரர் பிரபாகரன் சாலை) இது!. நண்பர்களே! நம்முடைய பகுதிகளிலும் இதை தொடர்வோம்......
[Continue reading...]

புவனேஸ்வரியிடம் ரூ 1 கோடி கடன்பட்ட தயாரிப்பாளர்… திருப்பிக் கேட்டு வழக்கு!

- 0 comments
 
 

சென்னை: கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் என்ற படத்தைத் தயாரிக்க நடிகை புவனேஸ்வரி ரூ 1 கோடி கடன் கொடுத்துள்ளார்.

இந்தப் பணம் திருப்பித் தரப்படாததால், அதன் தயாரிப்பாளர் சம்பூர்ணம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் புவனேஸ்வரி.

தமிழ் சினிமா ஆயுசுக்கும் மறக்கமுடியாத நடிகை புவனேஸ்வரி. இவரை சில ஆண்டுகளுக்கு முன் விபச்சார வழக்கில் போலீசார் கைது செய்ய, அதை செய்தியாக வெளியிட்ட பத்திரிகைகள் மீது திரையுலகம் பாய்ந்தது. அதன் தொடர்ச்சியாக சினிமாவும் பத்திரிகையுலகமும் மோதியது நினைவிருக்கலாம்.

அதன் பிறகு ஜாமீனில் வந்த புவனேஸ்வரி சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்தார். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கவும் பைனான்ஸ் பண்ணவும் ஆரம்பித்துள்ளார். அப்படி அவரிடம் பைனான்ஸ் பெற்று தயாரான படம் கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்.

படம் முடிந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் தயாரிப்பாளர் புவனேஸ்வரிக்கு தரவேண்டிய பணத்தை தரவில்லையாம்.

எனவே சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார் புவனேஸ்வரி. அதில், "கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கோபம்' சினிமா தயாரிப்பாளர் சம்பூர்ணம் என்னிடம் படம் தயாரிப்பதற்காக ரூ.1 கோடி கடன் வாங்கி இருந்தார். இந்த தொகையை படம் வெளியிடுவதற்கு முன்பு திருப்பி தருவதாக உத்தரவாதம் அளித்து முத்திரை தாளில் எழுதிக் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் 'கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கோபம்' படம் விரைவில் வெளியிடப்படுவதாக பத்திரிகைகளில் விளம்பரம் வெளியாகி இருக்கிறது. இதைப் பார்த்ததும் தயாரிப்பாளர் சம்பூர்ணத்தை தொடர்பு கொண்டு கடன் தொகையை திருப்பி செலுத்தும்படி கேட்டேன். ஆனால் தயாரிப்பாளர் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை.

எனக்கு சேர வேண்டிய கடன் தொகை திருப்பி செலுத்தப்படவில்லை என்றால் நான் மிகவும் பாதிக்கப்படுவேன். ஆகவே கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கோபம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். கடன் தொகையை திருப்பி செலுத்துமாறு கோர்ட்டு அவருக்கு உத்தர விட வேண்டும்," என்று கூறியுள்ளார்.

மனுவை சென்னை 17-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி சரவணன் விசாரித்து தயாரிப்பாளர் சம்பூர்ணத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். படம் வெளியாக ஏற்கெனவே இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

[Continue reading...]

கணவரிடம் மனைவிக்கு பிடிக்காத விஷயங்கள்

- 0 comments
 
 

கணவரிடம் மனைவிக்கு பிடிக்காத விஷயங்கள் கண்டிப்பாக இருக்கத் தான் செய்யும். அதே போன்று தான் கணவன்மார்களுக்கும் மனைவியிம் பிடிக்காத விஷயங்கள் இருக்கும். தன் மனைவிக்கு இன்னன்ன விஷயங்கள் பிடிக்காது என்று தெரிந்தும் பல கணவன்கள் அதை மாற்றிக் கொள்ள முயற்சி செய்வதில்லை.

கணவரிடம் மனைவிக்குப் பிடிக்காத சில விஷயங்கள்,

1. குளித்தால், கை,கால், முகம் கழுவினால் ஈரம் சொட்ட, சொட்ட வந்து வீட்டையே ஈரமாக்குவது. மொசைக் தரையாக இருந்தால் அடுத்தவர்கள் வழுக்கி விழுந்துவிடுவார்களே என்ற கவலை எல்லாம் கிடையாது. அப்படி வழுக்கி விழுந்து காலை ஒடித்துக் கொண்ட மனைவிகளும் உண்டு.

2. புகைபிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தும் புகைபிடிப்பது. அதிலும் ரயில் என்ஜின் மாதிரி வீட்டுக்குள்ளேயே புகைவிடுவது மனைவிகளை எரிச்சலின் உச்சத்திற்கே கொண்டு செல்லும். அந்த பாழாய்ப்போன சிகரெட்டை வெளியே சென்று பிடிப்பது.

3. காலையில் எழுந்தால் போர்வையை மடித்து வைக்கும் பழக்கமே இல்லை. நான் ஏன் மடிக்க வேண்டும் அதான் சம்பளம் இல்லாத வேலைக்காரி (மனைவி) இருக்கிறாளே என்ற நினைப்பு.

4. உடை மாற்றினால் அதை சோபாவிலோ, தரையிலோ அல்லது துவைத்த துணிகளுக்குடனோ போட்டுவிட்டுச் செல்வது.

5. நேரம் காலமில்லாமல் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவது. கணவனுக்கு இது பிடிக்குமே என்று ஆசையாக சமைத்தால் உடனே நண்பர்களை சாப்பிட வரச் சொல்வது.

6. எங்கம்மா எவ்வளவு நல்லா சமைப்பாங்க தெரியுமா, என் அக்கா எப்படி பம்பரமா வேலை பார்ப்பா தெரியுமா என்று புராணம் பாடுவது.

7. வெளியே அழைத்துச் செல்வேன் என்று வாக்குறுதி அளித்துவிட்டு அதை மறந்துவிடுவது.

8. நேரம் போவதே தெரியமால் அலுவலகத்தை கட்டி அழுவது.

9. ஏதாவது ஆசைப்பட்டு கேட்டால் அது உடல்நலத்திற்கு கேடு என்று கூறி வாங்கித் தர மறுப்பது.

10. அலுவலகப் பிரச்சனைகளால் மண்டகாஞ்சுபோய் வீட்டுக்கு வந்து மனைவியை திட்டுவது.

என்ன ஆண்களே இந்த விஷயங்களை மாற்றிக் கொண்டு உங்கள் மனைவியிடம் பாராட்டு பெறுவீர்களா?

[Continue reading...]

அஜீத்தும் நானும்… ஒரு புதுமுகத்தின் பில்டப்

- 0 comments
 

அட… உனக்கும் தெரியுமா என்று ஆச்சர்யப்படுவது ஒரு ரகம். இவனுக்கு கூட
தெரிஞ்சுருக்கே என்று வேதனைப்படுவது வேறொரு ரகம். இதில் அஜீத் முதல் ரக மனிதர். தனக்கு தெரிந்த மாதிரியே ஹெலிகாப்டர் ஸ்பேர் பார்ட்ஸ் பற்றியும், விமானம் ஓட்டுவது பற்றியும் அதிகம் அறிந்து வைத்திருக்கும் ஒரு இளைஞரை, 'தம்பி வாப்பா' என்று பேச்சு துணைக்காக அழைத்துக் கொண்டாராம் அஜீத்.

இடம்- ஏகன் படப்பிடிப்பு. அட இவ்வளவு நாள் கழித்து இப்படி ஒரு நியூசா என்று எரிச்சல் படுகிறவர்கள் தொடர்ந்து வாசிக்கவும். இப்படத்தின் இயக்குனர் ராஜு சுந்தரத்தின் நண்பரான ஜித்தேஷ் அவரது ஆசைப்படி இந்த படத்தில் பணியாற்ற போயிருந்தாராம். அடிப்படையில் பைலட் படிப்பை முடித்திருக்கிறார் இவர். படப்பிடிப்பில் தம்பி என்ன படிச்சுருக்கே? என்ற அஜீத் விசாரித்தபோது உண்மையை சொன்னாராம். அவ்வளவுதான். அன்றிலிருந்தே ஜித்தேஷின் நண்பராகிவிட்டார் அஜீத்.

நாளும் பொழுதுமாக ஹெலிகாப்டர், விமானம் என்று பிரித்து மேய்ந்திருக்கிறார்கள் இருவரும். அஜீத்தை பார்த்து அப்படியே மெல்ல மெல்ல நடிக்கிற ஆசையையும் வளர்த்துக் கொண்ட ஜித்தேஷ், இன்று ஒன்றல்ல, இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். எல்லாம் அஜீத் போட்ட ஆர்வ சுழி!

தலக்கோணம் என்ற படத்தில் இவருக்கு ஜோடி ரியா. மார்கழி திங்கள் என்ற படத்தில் இவருக்கு ஜோடி திஷா பாண்டே. இவ்விரு படங்களும் வேக வேகமாக வளர்ந்து வருகிறதாம். கோடம்பாக்கத்துக்கு பஸ் ஏற துடிக்கும் ஏராளமான இளைஞர்கள் காத்திருக்கிற பஸ் ஸ்டாப் கூத்துப்பட்டறைதான். இவரும் இதே பள்ளியில் பயிற்சியை முடித்துவிட்டு நடிக்க வந்திருக்கிறார்.

தல-தான் ரோல் மாடல் என்கிறார் ஜித்தேஷ். அந்த இடத்தை பிடிக்கணும்னா முழு உடம்பும் போராடிக் கொண்டே இருக்கணும் பிரதர்!

[Continue reading...]

கோடிக்கு ஆசைப்படும் ஹீரோக்கள் எச்சரிக்கும் நகுல் விவகாரம்

- 0 comments
 
 

முட்டு சந்துல சிக்குன முரட்டு யானை, திரும்பவும் முடியாம திணறவும் இயலாம தடுமாறுன கதையாகிருச்சு நகுலின் நிலைமை. காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் கிடுகிடுவென உச்சாணிக் கிளைக்கு போன நகுல், அதன்பின் ஒரு கோடி, ஒன்றரை கோடி என சம்பளத்தை உயர்த்தியதால், தயாரிப்பாளர்கள் யாருமே அவர் பக்கம் போகவில்லை.

திடீர் வெற்றிடத்தில் சிக்கிக் கொண்ட நகுல், எப்படியோ ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் ஒரு படத்தில் கமிட் ஆனார். இந்த படத்தை ஈரம் பட இயக்குனர் அறிவழகன் இயக்கிக் கொண்டிருந்தார். நகுல் படத்தின் இன்றைய வியாபாரத்தை கணக்கிட்டால், மிக மிக சின்ன பட்ஜெட்டில்தான் படம் எடுக்க முடியும். ஆனாலும் பெரிய மனசு பண்ணிய ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஐந்தரை கோடி வரைக்கும் தாராளம் காட்டினாராம். ஆனால் முதல் பத்து நாட்களிலேயே இந்த பட்ஜெட்டை கிராஸ் பண்ணிவிட்டாராம் அறிவழகன்.

இதற்கு பிறகு இன்னும் ஐந்து கோடியை இந்த படத்தில் முதலீடு செய்தால், அது நகுலுக்கும் அறிவழகனுக்கும்தான் லாபமாக இருக்குமே தவிர, எந்த வகையிலும் இன்டஸ்ட்ரிக்கு பிரயோஜனம் இல்லை என்று முடிவு செய்த ரவிச்சந்திரன், பிறகு பார்க்கலாம் வெயிட் பண்ணுங்க என்று படப்பிடிப்பையே நிறுத்திவிட்டார்.

கடந்த சில நாட்களாக கண்ணீரும் கம்பலையுமாக ஆஸ்கர் பிலிம்ஸ் வாசலில் தவம் கிடக்கிறாராம் நகுல். நிலைமை புரியாமல் ஒரு கோடி, ஒன்றரை கோடி என்று ஆசைப்படும் நடிகர்கள் குறிப்பாக விமல், ஜெய், விதார்த் போன்ற வளரும் ஹீரோக்கள் நகுலை பார்த்தாவது திருந்துவது நல்லது.

[Continue reading...]

11.11.11

- 0 comments
 




எவ்வளவோ Zero's பார்த்துட்டோம். இதைப் பார்க்க மாட்டோமா..?
[Continue reading...]

முத்தம் என்ன செய்யும்?

- 0 comments
 

முத்தம் என்ன செய்யும்?

என்னதான் பொறுமை, நிதானம், மற்றவர்கள் பேசுவதற்குக் காது கொடுப்பது, பொறுப்பாக நடந்து கொள்வது, சின்சியாரிடி என்று பல்வேறு குணாம்சங்கள் ஒரு தம்பதிக்கு இருந்தாலும் அந்தத் திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியை நிர்ணயிப்பதில் முக்கியமான பங்கு தாம்பத்திய உறவுக்கு உண்டு.

அதனால்தான் அந்த உறவுக்கு இருவரில் யாராவது ஒருவர் தகுதியில்லாதவராக இருக்கிறார் என்று நிரூபிக்கப்பட்டால் உடனே வேறு எந்தக் கேள்விக்கும் இடமின்றி விவாகரத்து கூட சுலபமாகக் கிடைத்துவிடுகிறது.ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ அந்த உறவுக்கு தகுதியில்லாத நிலை எதனால் ஏற்படுகிறது? அதைப் பற்றிப் பின்னால் பார்க்கலாம். ஆனால், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தகுதியும் திறனும் இருந்தும்கூட சிலரது வாழ்க்கையில், தாம்பத்திய உறவு என்பது ஈர்ப்பும் ஆர்வமும் அற்ற ஒரு விஷயமாக, ஏதோ குளிப்பது போல் ஒரு கடமையாக அல்லது கோடைமழை போல் சட்டென்று கொட்டி அடங்கிவிடும் ஒரு விஷயமாக இருக்கிறது.

ஆர்வமற்ற இதுபோன்ற தாம்பத்திய உறவு இருக்கும் தம்பதியர்களுக்குள், மற்ற எந்த விஷயத்திலும்கூட பெரிய நெருக்கம் இருப்பதில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

சிலருக்கு தாம்பத்திய உறவில் ஈர்ப்பும் ஆர்வமும் ஏன் குறைகிறது?

கணவனோ அல்லது மனைவியோ, குறிப்பிட்ட தன் துறையில் தான் வேகமாக முன்னேற வேண்டும் என்ற முனைப்புடன் 'வேலை வேலை' என்று கவனம் முழுக்க வேலை பற்றியே சிந்திக்கும்போது, தாம்பத்திய உறவில் பெரிய ஈர்ப்பு இல்லாமல் போகலாம்.

அதிக வேலை அல்லது சரியான நேரத்தில் முடியாத வேலையால் ஏற்படும் உடல் அசதியும்கூட இதுபோன்ற ஆர்வமின்மைக்கு இட்டுச் செல்லலாம். கணவருக்கோ மனைவிக்கோ ஒருவரைப் பார்த்தவுடன் மற்றவருக்கு கிளர்வான உணர்வை ஏற்படுத்தும் டோப்பாமைன், நைட்ரிக் ஆக்ஸைடு, ஆக்ஸிடோஸின், டெஸ்டோஸ்டிரான் போன்ற சமாச்சாரங்கள் உடலில் போதுமான அளவில் இல்லாமல் குறைவாக சுரக்கும் நிலையும் காரணமாகலாம்.

சில வீடுகளில் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ சில குண நலன்களால் ஒருவர் மேல் மற்றவருக்கு மனசில் மரியாதை இல்லா ஒட்டாத நிலை ஏற்படுவதும் காரணமாகலாம்.தாம்பத்தியத்தைத் தவிர வெளியே வேறு யாருடனாவது இருக்கும் ஆர்வத்தாலும் இப்படி தம்பதிகளுக்குள் ஈர்ப்பு குறையலாம்.. இதுபோல் இன்னும் ஏகப்பட்ட காரணங்கள்!

ஆனால், இந்த எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. சொல்லப் போனால் இந்தக் காரணம் பெண்களில் பலருக்கு மிகவும் பொருந்தும்.அது.. தாம்பத்திய உறவு என்பது முறையாக, அதன் சுவாரஸ்யத்துடன் இதமாக அறிமுகம் ஆகாமல் போவதால், அதன் பேரில் சில பெண்களுக்கு ஏற்படும் பயமும் எரிச்சலும் கலந்த கஷ்ட உணர்வு!

எடுத்த எடுப்பில் ஒரு பெரிய பாத்திரம் நிறைய சாதத்தை அள்ளிப் போட்டால் சாப்பிடத் தோன்றுமா? அந்தப் பாத்திரத்தைப் பார்த்தவுடனே இருக்கும் பசியும் அல்லவா பறந்து போகும்!

என்னதான் பசிக்கு சாப்பிடவேண்டி இருந்தாலும் சாப்பிடத் தூண்டும் வகையில், அதை அழகாகப் பார்வையாக வைத்தால்தான் சாப்பிடும் ஆர்வம் வருகிறது. என்னதான் தேர்வுக்கு மார்க் எடுப்பதற்காக படிக்க வேண்டி வந்தாலும், ஆசிரியர் சுவாரஸ்யமாக சொல்லிக் கொடுத்தால்தான் அதைப் படிக்கவே ஆர்வம் வருகிறது.

அதேபோல்தான்.. என்னதான் மனதை மயக்கும் விஷயமாக இருந்தாலும் சுவாரஸ்யமாக, இதமாக அதை அறிமுகப்படுத்தும் போதுதான் தாம்பத்திய உறவும்கூட பல பெண்களை விரும்பி ஆர்வம் கொள்ள வைக்கிறது.

பெண்களுக்கு தாம்பத்திய உறவை சுவாரஸ்யம் மிக்கதாக அறிமுகப்படுத்துவதில் முதல் முக்கிய பங்கு வகிக்கிறது முத்தம்.

இளம் மனைவியை எடுத்த எடுப்பிலேயே முரட்டுத்தனமாக அணைத்து, தங்கள் தேவைகளை ஆண்கள் நிறைவேற்ற முயலும்போது சில பெண்கள் பயந்து போகிறார்கள். அதனால் அவளைப் பொறுத்தவரை அந்த விஷயம் சுகமான ஒரு அனுபவிப்பாக இல்லாமல், டென்ஷனையும் பயத்தையும் ஏற்படுத்துவதாக மாறிப்போகிறது.

அதே இளம் மனைவியை கணவன் இதமாகப் பேசியபடியே மென்மையாக அவளை ஸ்பரிசித்து, மெதுவாக அவள் நெற்றியில் முத்தமிட ஆரம்பித்து கன்னம், கழுத்து என்று ஒவ்வொரு இடமாக அவன் முன்னேறி வரும்போது அவளுக்குள் மனமெழுகு உருகத் தொடங்கிவிடும். அந்த விஷயத்தையே அப்புறம் அவள் ஆவலுடன் எதிர்கொள்ள ஆரம்பித்துவிடுகிறாள்.

முத்தம், உங்கள் தாம்பத்தியத்தை திருப்திகரமாகக் கொண்டு செல்வதற்கு மட்டும் பயன்படுவதில்லை ஆச்சர்யப்படுத்தும் பல விஷயங்களையும் செய்கிறது.முதலில் கணவன் _ மனைவிக்கான மன நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது. ரொமான்டிக்காக தரப்படும் முத்தம், பிரியங்களை அதிகப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட ஆக்ஸிடோஸின் கெமிக்கலை நிறைய சுரக்கத் தூண்டுகிறது.

ஆசையுடனும் ஆர்வத்துடனும் முத்தமிடுபவர்கள் நீண்டநாள் வாழ்கிறார்கள் என்று பல ஆய்வுகளுக்குப் பின் கண்டு பிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.பல்வேறு காரணங்களால் நம் தினசரி வாழ்க்கையில் ஏற்படும் கவலை, மன அழுத்தம், டென்ஷன் என்று பல பிரச்னைகள் தீர மெடிக்கல் ஸ்டோர் போகாமலே நீங்கள் வாங்க முடியும் ஒரே மருந்து முத்தம்தான்! அதனால் நோயற்ற ஹெல்தியான வாழ்க்கை வாழ முடிகிறது!

சோர்ந்த உடலுக்கும் மனசுக்கும் ஒரு மெகா பூஸ்ட் சாப்பிட்ட புத்துணர்ச்சி முத்தத்தால் கிடைக்கிறது. அதாவது இயல்பாக, ஒரு பெண்ணின் சராசரி இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 84 ஆகவும், ஆண்களுக்கு 72 ஆகவும் இருக்கிறது. முத்தமிடும் சமயத்தில் பெண்களின் துடிப்பில் 24_ம் ஆண்களின் துடிப்பில் 38_ம் அதிகரித்து, அதன் காரணமாக ரத்தம் வேகமாக பாய்ந்து தன்னை சுத்தப்படுத்திக் கொள்கிறது. ரத்தம் சுத்தமாவதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது!

குறிப்பாக அடிக்கடி முத்தமிடுபவர்களின் முகம் இளமை குறையாமல் இருக்கிறது. ஒரு முறை முத்தம் தர சாதாரணமாக 12 முதல் 30 தசைகள் வரை இயங்க வேண்டியுள்ளது. அவற்றின் இயக்கம் முகத்தின் இளமையைக் காப்பாற்றித் தருகிறது. தவிர ஜப்பான் டாக்டர் டோமா என்பவர், தம்பதிகளின் வாயில் சுரக்கும் உமிழ்நீரை ஆராய்ந்துப் பார்த்துவிட்டு,முத்தமிடும்போது சுரக்கிற உமிழ்நீரில் ஏராளமான ஹார்மோன்கள் வெளிப்பட்டு அது மற்றவருடைய இரத்த ஓட்டத்தில் கலந்து, மனிதர்களுக்கு முதிர்ச்சி ஏற்படுவதைத் தடுக்கிறது என்று கண்டு பிடித்திருக்கிறார்.

வேகமான இரத்த ஓட்டம் உடல் திசுக்களுக்கு அதிக ஆக்ஸிஜனை அளிப்பதால், திசுக்கள் இளமையாகவும் உற்சாகத்துடன் இருக்கின்றன 'அடிக்கடி முத்தமிடுங்கள். உங்கள் வாய் நாற்றமில்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்'

வயதாக ஆக எச்சில் சுரப்பது குறைவதால்தான், பல்லிலும் வாயிலும் உற்பத்தியாகும் பாக்டீரியாக்கள் சுத்தப்படுத்தப்படாமல் அங்கேயே தங்கி வாயை நாற்றம் ஏற்படுத்துகின்றன. ஆனால் முத்தமிடும்போது அதிக அளவில் எச்சில் சுரப்பதால், பாக்டீரியாக்கள் அவ்வப்போது சுத்தப்படுத்தப்பட்டு வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது.

முத்தத்தால் உடல்ரீதியில் ஒரு கிளர்வான மகிழ்ச்சியும் கிடைக்கிறது. நாம் ஏற்கெனவே பேசிய டோப்பாமைன், எண்டார்பின் போன்ற விஷயங்களை முத்தம் தூண்டுவதால் இந்த கிளர்வும், திருப்தியும் ஒரு த்ரில்லான மகிழ்வும் கிடைக்கிறது.தியானம் செய்தது போன்ற பலனையும் முத்தம் கொடுக்கிறது. மன அமைதியும், புத்துணர்ச்சியும் தந்து அடுத்தடுத்து செய்யும் வேலைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ள வைக்கிறது. எனவே முத்தமிடுங்கள்!

[Continue reading...]

அன்னா ஹசாரே பற்றிய கேள்வி: பதில் சொல்ல விஜய் மறுப்பு

- 0 comments
 
 
 
பிக்-எப்.எம் நேயர்களுடன் நடிகர் விஜய் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு நேயர், அன்னா ஹசாரே உண்ணாவிரத்தில் பங்கேற்ற ஒரே தமிழ் நடிகர் நீங்கள் தான். இதுகுறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்றார்.
 
இதற்கு சற்று நேரம் மௌனமாக இருந்த விஜய், சிறிது நேரம் கழித்து தனது பிஆர்ஓவை பார்த்தார். பின்னர், அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். வேற கேள்வி கேளுங்கள் என்று நழுவினார்.



[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger