Thursday 31 October 2013

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.15 குறைந்தது: டீசல் விலை 50 காசு அதிகரிப்பு petrol price per liter rs 1.15 decrease

- 0 comments

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.15 குறைந்தது: டீசல் விலை 50 காசு அதிகரிப்பு petrol price per liter rs 1.15 decrease

புதுடெல்லி, அக். 31-

சர்வதேச சந்தை நிலவரப்படி பெட்ரோல் விலையில் மாற்றம் செய்துகொள்வதற்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் டீசல் விற்பனை மூலம் எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிகட்ட மாதந்தோறும் டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்திக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை உயர்த்தலாம் என்று கிரித்பரிக் கமிட்டி தனது ஆய்வறிக்கையை பெட்ரோலியத் துறையிடம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் அதிகரிப்பதாகவும், இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதேசமயம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.15 குறைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் அந்தந்த மாநிலத்தின் உள்ளூர் வரிகளைப் பொறுத்து மாறுபடும்.

இந்த விலை குறைப்பின் மூலம் இன்று நள்ளிரவு முதல் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.46 குறைந்து ரூ.74.22-க்கு விற்பனை செய்யப்படும். டெல்லியில் ஒரு லிட்டர் ரூ.71.02 ஆகவும், கொல்கத்தாவில் 78.07 ஆகவும், மும்பையில் ரூ.74.22 ஆகவும் விற்பனை செய்யப்படும்.

டீசல் விலை சென்னையில் லிட்டருக்கு 60 காசுகள் அதிகரித்து ரூ.56.61க்கு விற்பனை செய்யப்படும். டெல்லியில் 53.10க்கும், கொல்கத்தாவில் 57.49க்கும், மும்பையில் 60.08க்கும் விற்பனை ஆகும்.

...

shared via

[Continue reading...]

மடோனாவின் 18 வயது நிர்வாணப் படங்கள் ஏலம் 9–ந்தேதி நடக்கிறது madonna 18 age photo auction 9 on going

- 0 comments

மடோனாவின் 18 வயது நிர்வாணப் படங்கள் ஏலம் 9–ந்தேதி நடக்கிறது madonna 18 age photo auction 9 on going

லாஸ்ஏஞ்சல்ஸ், அக். 31–

பாப் இசையின் ராணி என்று அழைக்கப்படுபவர் மடோனா. இளமைக் காலத்தில் தனது கவர்ச்சியாலும், இனிய குரலாலும் அமெரிக்க ரசிகர்களை கட்டிப்போட்டவர். தற்போது மனோடனாவுக்கு 55 வயது ஆகிறது. இப்போதும் அவர் மவுசு குறையாமல் இருக்கிறார்.

இந்த நிலையில் மடோனாவை 18 வயதில் எடுத்த நிர்வாணப் படங்கள் என்றால் கேட்கவா வேண்டும்? நியூயார்க் நகரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஜெரேமிபிராம்மெர் தனது அருங்காட்சியகத்தில் மடோனாவின் இளமை கால நிர்வாணப்படங்கள் வைத்துள்ளார். அவற்றை அவர் ஏலம் விடப் போவதாக அறிவத்துள்ளார். வருகிற 9–ந்தேதி 'ஆன்லைன்' மூலம் ஏலம் விடப்படுகிறது.

18 வயதில் மடோனா மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் நடனம் பயின்றார். அப்போது அவர் 10 அமெரிக்க டாலருக்காக (ரூபாய் மதிப்பு 600) ஹெர்மன் குல்கென்ஸ் என்பவருக்கு நர்வாண போஸ் கொடுத்தார். மேலாடை இல்லாமலும் பலவித கோணங்களில் எடுக்கப்பட்டது. இது அவர் பிரபலமாவதற்கு முன் எடுக்கப்பட்டது. தற்போது அதற்கு மவுசு ஏற்பட்டுள்ளதால் ஏலத்துக்கு வந்துள்ளது.

இளமை காலத்தில் தான் நிர்வாண போஸ் கொடுத்ததை மடோனாவும் ஒப்புக்கொண்டார்.

இதற்கு முன் 1983–ல் மடோனா போட்டோக்களை 'பிளேபாய்' பத்திரிகையில் பிரசுரிப்பது தொடர்பாக சட்ட சிக்கல் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு 1985–ல் படங்கள் பிரசுரமானது.

...

shared via

[Continue reading...]

Wednesday 30 October 2013

Attakasamana Aarambam அட்டகாசமான ஆரம்பம்

- 0 comments
‘ஆரம்பம்’ – அமர்க்களம்…அட்டகாசமான ஆரம்பம்…

தீபாவளி இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வந்து விட்டதோ என நினைக்கத் தோன்றும் விதத்தில் ‘ஆரம்பம்’ படத்தின் வெளியீட்டை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இன்று விடியற்காலையே பல திரையரங்குளில் ‘ஆரம்பம்’ படம் சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது.
அஜித்தின் ரசிகர்களும், திரையுலகத்தைச் சேர்ந்த பல பிரபலங்களும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து ரசித்துள்ளனர்.
[Continue reading...]

1 கோடி டாலரில் அசத்தல் பிரா அணியும் மாடல் அழகி Candice Swanepoel to promote 10 million bra

- 0 comments

1 கோடி டாலரில் அசத்தல் பிரா அணியும் மாடல் அழகி Candice Swanepoel to promote 10 million bra

நியூ யார்க், அக்.31-

பிரபல உள்ளாடைத் தயாரிப்பு நிறுவனமான விக்டோரியா சீக்ரெட்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும்  நடத்தும்  பிரா கண்காட்சியில் ஒரு கோடி அமெரிக்க டாலர் (இந்திய பணத்திற்கு சுமார் 61 கோடி ரூபாய்) மதிப்புடைய பிராவை அணிந்து காட்சிப்படுத்த மாடல் அழகி கென்டிஸ் ஸ்வான்போல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த விக்டோரியா சீக்ரெட்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் நியூ யார்க் நகரில் மாபெரும் உள்ளாடை தயாரிப்புக் கண்காட்சியை நடத்துகிறது. இக்கண்காட்சியின்போது தங்கத்தில் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பல மில்லியன் டாலர் மதிப்புடைய ஃபான்டெஸி பிராக்களை அறிமுகப்படுத்துவது வழக்கம்.

இந்த பிராக்களை அணிந்து நடக்கும் வாய்ப்பை பெறுவதற்கு உலகின் முன்னிலை மாடல் அழகிகள் காத்திருப்பதுண்டு. இம்முறை தென்னாபிரிக்காவைச் சேர்ந்த கென்டிஸ் ஸ்வான்போல்(25)  இந்த வாய்ப்பை பெற்றுள்ளார்.

18 காரட் தங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த பிராவிலும் அதற்குப் பொருத்தமான இடைப் பட்டியிலும் உலகின் பல பாகங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட வைரங்கள்,நீலக்கற்கள் மற்றும் 4200 இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் பிரேஸிலைச் சேர்ந்த அலெக்ஸான்ட்ரியா அம்ப்ரோஸியோ 25 லட்சம் டாலர் மதிப்புடைய பிராவை அணிந்து விளம்பரப்படுத்தினார்.

இம்முறை இந்த வாய்ப்பு கிடைத்ததால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக கென்டிஸ் ஸ்வான்போல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

'எனது உடலுக்குப் பொருத்தமான அளவில் பிராவை தயாரிப்பதற்காக எனது உடலின் மாதிரி உருவமொன்றை அவர்கள் செய்தார்கள்.

அன்றிலிருந்தே,அவர்கள் பிராவை எப்படி செய்வார்கள்? அது எப்படி காட்சியளிக்கும்? என கற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டேன். இவ்வ்ளவு விலையுயர்ந்த ஆடை ஆபரணம் எதையும் நான்அணிந்ததே கிடையாது.' எனவும் அவர் கூறியுள்ளார்.

...

shared via

[Continue reading...]

தேவர் சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை All parties courtesy to Thevar statue

- 0 comments

தேவர் சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை All parties courtesy to Thevar statue

சென்னை, அக்.30–

முத்துராமலிங்க தேவரின் 106–வது பிறந்த நாளையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்.

காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், தங்கபாலு, தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், நாச்சிகுளம் சரவணன், அரிகிருஷ்ண ரெட்டி, சாந்தி, காஞ்சி பன்னீர்செல்வம், எஸ்.,கே.அன்பழகன், சீதாராமன், சொர்ண சேதுராமன், குமாரமுருகன், தி.நகர் கார்த்திக், கொய்யாதோப்பு ராம்குமார், பட்டுக்கோட்டை ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர் காங்கிரஸ் தலைவர் யஷ்வந்த்சாகர், சித்ரா கிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்தனர்..

பா.ஜனதா சார்பில் மூத்த தலைவர் இல.கணேசன், டாக்டர் தமிழிசை சவுந்தர் ராஜன், சக்கரவர்த்தி, பிரகாஷ், திருப்புகழ், ஆறுமுக ராஜ், கேன்ஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், மாவட்ட செயலாளர் சி.ராஜா, ஏ.பி.எஸ்.பொன்னரசன், எஸ்.பிரசாத், பாபு ஆகியோர் மாலை அணிவித்தனர்.

லட்சிய தி.மு.க. சார்பில் அதன் தலைவர் டி.ராஜேந்தர், எம்.எம்.ஆர். மதன் மரியாதை செலுத்தினர்.

அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் தலைவர் இசக்கிமுத்து, செயலாளர் மணியரசன், தலித் மக்கள் முன்னணி தலைவர் குமரிஅருண் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

தமிழக யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஷேக்தாவூத் மாலை அணிவித்தார்.

வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியில் உள்ள தேவர் சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னை மண்டல செயலாளர் எம்.ஏ.சேவியர் தலைமையில் பகுதி செயலாளர் முருகேச பாண்டியன், ரஞ்சன், அருள் ராஜ், எட்.ராஜா, மாரிமுத்து உள்பட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்து சத்ய சேனா சார்பில் மாநில தலைவர் வசந்த குமார் தலைமையில் சீனிவாசன், காந்தி உள்பட அமைப்பின் நிர்வாகிகள் பலர் மரியாதை செலுத்தினர். தேவர் புலிப்படை சார்பில் நிர்வாகிகள் சுரேஷ் காந்தி, நீலகண்டன், ஆதிமூலம், அன்பழகன், நீதிராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினர். தேவர் பேரவை சார்பில் நிர்வாகிகள் செல்லம், சந்திரன், சித்திரை குமார், தர்மராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

...

shared via

[Continue reading...]

தேவர் சிலைக்கு ஜெயலலிதா மலர் தூவி மரியாதை Jayalalitha floral tribute Thevar statue

- 0 comments


பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் 106–வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிலையின் கீழ் பகுதியில் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா காலை 10.30 மணிக்கு தேவர் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரை தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன், அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

அப்போது அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் புரட்சித் தலைவி வாழ்க என்று கோஷங்கள் எழுப்பினார்கள். தொண்டர்களை பார்த்து ஜெயலலிதா இரட்டை விரலை காட்டி கையசைத்தார். பெண்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து வரவேற்றனர். அந்த பகுதி முழுவதும் அ.தி.மு.க. கொடி, தோரணங்களுடன் விழாக் கோலம் பூண்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் மேயர் சைதை துரைசாமி, எம்.பி.க்கள் வேணு கோபால், சிட்லபாக்கம் ராஜேந்திரன் மாவட்ட செயலாளர்கள் வெங்கடேஷ் பாபு, கலைராஜன், வி.என்.ரவி, எம்.எல்.ஏ.க்கள் டி.ஜெயக்குமார், கோகுல இந்திரா, செந்தமிழன், வெற்றிவேல், நீலகண்டன், துணைமேயர் பெஞ்சமின், முன்னாள் அமைச்சர் பொன்னையன், மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள் லட்சுமி நாரயணன், டைரக்டர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், தயாரிப்பாளர் டி.டி.ராஜா, ஆர்.டி.சாம்சன், ஏ.என். சுப்பிரமணி, மகிழன்பன், பேச்சாளர் ஜெயகோவிந்தன், அண்ணா தொழிற்சங்க மாநில துணை செயலாளர் கே.பாண்டுரங்கன், தென் சென்னை மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஏ.ஏ.அர்ஜூனன், கவுன்சிலர்கள் சிவராஜ், நுங்கைமாறன், ஆறுமுகம், சின்னையன், கடலூர் ரா.ராஜேந்திரன் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

[Continue reading...]

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின்–வைகோ மரியாதை Pasumpon muthuramalinga devar statue vaiko respect

- 0 comments
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், செல்லூர் ராஜூ, காமராஜ், வாரியத் தலைவர்கள் முனியசாமி, தங்கமுத்து, முருகையா பாண்டியன் ஆகியோர் தேவர் சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தினர்.
[Continue reading...]

Tuesday 29 October 2013

நடிகை கஜோல் வீட்டில் ரூ. 5 லட்சம் தங்க நகை திருட்டு: வேலைக்காரி வேலைக்காரன் கைது maid and servant arrester for stealing rs. 5 lakh jewels from kajol

- 0 comments

நடிகை கஜோல் வீட்டில் ரூ. 5 லட்சம் தங்க நகை திருட்டு: வேலைக்காரி வேலைக்காரன் கைது maid and servant arrester for stealing rs. 5 lakh jewels from kajol

மும்பை, அக். 30-

பாசிகர் இந்தி படத்தின் மூலம் பிரபல பாலிவுட் கதாநாயகியாக 1992-ல் அறிமுகமாகியவர் நடிகை கஜோல்.

தில்வாலே துலன்யே லே ஜாயங்கே மற்றும் குச் குச் ஹோத்தா ஹை படங்களின் மூலம் புகழ் ஏணியின் உச்சியை தொட்டு 2011-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை பெற்ற கஜோல், 1997-ம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான மின்சார கனவு படத்தில் நடிகர் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சுமார் 40 படங்களில் நடித்துள்ள இவர், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்க்னை 5 ஆண்டுகளாக காதலித்து 1994-ம் ஆண்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.

மும்பையின் புறநகர் பகுதியான ஜுகு-வில் உள்ள ஆடம்பர வீட்டில் இத்தம்பதியர் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 22-ம் தேதி சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அலங்காரம் செய்து கொண்ட கஜோல் தனது நகை பெட்டியில் இருந்து 17 வளையல்கள் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இது வீட்டின் உள்ளே சுதந்திரமாக நடமாடும் யாரோ செய்த வேலையாகதான் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த அவர் இது தொடர்பாக ஜுகு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவரது வீட்டில் வேலை செய்யும் 10க்கும் மேற்பட்ட பணியாளர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் காயத்ரி (22) சந்தோஷ் பாண்டே ஆகிய இருவரை கைது செய்தனர்.

அந்தேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் விசாரணை காவலின்கீழ் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

திருடப்பட்ட 17 வளையல்களில் மதிப்பு ரூ. 5 லட்சத்துக்கும் அதிகம் என போலீசார் தெரிவித்தனர்.

...

shared via

[Continue reading...]

Kudankulam reactor turbine stopped again

- 0 comments

The turbine of the Kudankulam Nuclear Power Project's first reactor which was resynchronized with the southern gridlast Friday, was stopped again on Tuesday "for a series of mandatory tests".

After the 1,000 MWe capacity reactor was synchronised with the grid for the first time with 160 MWe, last Tuesday at 2.45am, it was stopped at 5.40am the same day for tests stipulated by the Atomic Energy Regulatory Board (AERB). As the test results submitted to the AERB were found to be satisfactory, the 'Operational Team' of the KKNPP was given the green signal to resynchronize the turbine again on Friday night.

Since then, the turbine has been operational in order to generate electricity up to 300 MWe. "As we reached 300 MWe, we stopped the turbine manually for mandatory tests at 8pm," confirmed Site Director, KKNPP, R.S. Sundar.

Sources in the KKNPP said it might take a minimum of five days for resuming turbine operations.

[Continue reading...]

ரூ. 50 க்கு டெல்லி அரசு விற்கும் அழுகல் வெங்காயத்தை புறக்கணிக்கும் குடும்பத் தலைவிகள் delhi house wives reject rotten onions sold by government

- 0 comments

ரூ. 50 க்கு டெல்லி அரசு விற்கும் அழுகல் வெங்காயத்தை புறக்கணிக்கும் குடும்பத் தலைவிகள் delhi house wives reject rotten onions sold by government

புதுடெல்லி, அக். 30-

நாடெங்கும் வெங்காயத்தின் விலை கடும் உயர்வை சந்தித்து வரும் நிலையில் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயில் இருந்து 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

டெல்லி தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியின் தலையெழுத்தையே வெங்காய விலையுயர்வு மாற்றி அமைத்து விடுமோ? என்ற அச்சம் முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை ஆட்கொண்டுள்ளது.

டெல்லியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைவதை தடுக்கும் வகையில் டெல்லிக்கு வரவேண்டிய வெங்காய லாரிகளை மத்திய பிரதேச அரசு தடுத்து நிறுத்தி விடுவதாக கூட ஷீலா தீட்சித் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், வெங்காய விளைச்சலுக்கு பெயர் பெற்ற நாசிக்கில் இருந்து டெல்லி அரசு சார்பில் வெங்காயத்தை நேரடியாக கொள்முதல் செய்ய ஷீலா தீட்சித் முடிவு செய்தார்.

தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அரசின் புதிய முடிவு தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் அவர் அனுமதி கோரினார். சரக்கு பற்றாக்குறையை போக்கவே வெங்காயத்தை நேரடியாக கொள்முதல் செய்ய டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

கொள்முதல் செய்யப்படும் வெங்காயம் சந்தை விலைக்கே டெல்லியில் விற்கப்படும். அரசியல் ஆதாயத்துக்காக சலுகை விலையில் மக்களுக்கு விற்கும் திட்டம் எதுவும் அரசுக்கு கிடையாது என தேர்தல் கமிஷனுக்கு எழுதிய கடிதத்தில் ஷீலா தீட்சித் குறிப்பிட்டிருந்தார்.

அந்த வாக்குறுதியை ஏற்று டெல்லி அரசே நேரடியாக வெங்காயத்தை கொள்முதல் செய்ய தேர்தல் கமிஷன் அனுமதி அளித்தது. இதனையடுத்து, நாசிக்கில் உள்ள லசல்கான் வெய்காய சந்தைக்கு டெல்லி அரசு அதிகாரிகள் சென்றனர்.

இதனையடுத்து, நாளொன்றுக்கு 9000 டன் வெங்காயம் பயன்படுத்தப்படும் டெல்லிக்கு இன்று மட்டும 2 ஆயிரம் டன் வெங்காயம் வந்து சேர்ந்தது.

டெல்லி வெளிச்சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 80-90க்கு விற்கப்படும் நிலையில் அரசின் சார்பில் 125 வேன்களின் மூலம் நேற்று வெங்காய விற்பனை தொடங்கியது.

டெல்லியின் 500 பகுதிகளை சுற்றி வந்த இந்த வேன்கள் ஒரு கிலோ வெங்காயத்தை 50 ரூபாய்க்கு விற்பனை செய்தன.

ஆயினும், இன்று தெருத் தெருவாக கூவி விற்கப்பட்ட இந்த வெங்காயம் சமைப்பதற்கு தகுதியற்று அழுகிப் போய் உள்ளதாக கூறும் சில பெண்கள் மலிவு விலையில் கிடைத்தாலும் இது தேவை இல்லை என்று ஒதுக்கிவிட்டு அதிக விலை கொடுத்தாவது நல்ல வெங்காயத்தை வாங்கி சென்றனர்.

டெல்லி மால்வியா நகரை சேர்ந்த குடும்பத் தலைவி ரேகா டண்டன் என்பவர் கூறுகையில் மலிவாக கிடைக்கிறது என்று நூறு ரூபாய் கொடுத்து 2 கிலோ வெங்காயம் வாங்கினேன்.

அதில் 1 கிலோ அழுகல் வெங்காயமாக உள்ளது. இதை விட 80 ரூபாய்க்கு ஒரு கிலோ வெங்காயத்தை வெளி மார்க்கெட்டில் வாங்கியிருந்தால் எனக்கு 20 ரூபாய் மிச்சமாகியிருக்கும் என்று கூறினார்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த டெல்லி அரசு அதிகாரிகள், வெங்காய லாரிகள் மழைபெய்த மாநிலங்கள் வழியாக வந்ததால் சற்று தரமற்றவை ஆகிப்போய் இருக்கக்கூடும் என்றனர்.

...

shared via

[Continue reading...]

அரசு அலுவலகங்களில் இனி யாகூ ஜிமெயில் பயன்படுத்த முடியாது Gmail Yahoo may be banned in government offices by year end

- 0 comments

அரசு அலுவலகங்களில் இனி யாகூ ஜிமெயில் பயன்படுத்த முடியாது Gmail Yahoo may be banned in government offices by year end

புதுடெல்லி, அக். 29-

அரசு அலுவலகங்களில் பாதுகாக்கப்படும் தரவு சேவைகள் சைபர் கிரைம் குற்றங்களில் சிக்குவதை முற்றிலும் தடை செய்யவேண்டி வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் யாகூ, ஜிமெயில் வலைத்தளங்களின் உபயோகத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அரசாங்கம் இனி தனது உத்தியோகபூர்வ தகவல்களுக்கு கொள்கை தேசிய தகவல் மையத்தின்(நிக்) இணையதளத் தொடர்புகளையே பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அரசாங்க அலுவலகங்கள் இந்த இணையதளத் தொடர்பை உபயோகப்படுத்துவதை அரசு கட்டாயமாக்க எண்ணியுள்ளது. இதன்மூலம் 5 முதல் 6 லட்சம் அரசு ஊழியர்கள் நிக் தகவல் தொடர்பை பயன்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு செய்வதன்மூலம், உத்தியோகபூர்வ ஆதாரங்களின்படி அரசாங்கத்தின் தகவல் பதிவுகள் பெருமளவில் பாதுகாக்கப்பட முடியும் என்று அரசு கருதுகின்றது.

இந்திய அரசாங்கத்தின் கொள்கை என அழைக்கப்படும் இந்தத் திட்டம் கிட்டத்தட்ட தயார் நிலையில் உள்ளது. மற்ற அமைச்சரவைகளின் கருத்துகளும் இதுகுறித்து சேகரிக்கப்பட்டு வருகின்றன. வரும் டிசம்பர் மாத மத்தியிலிருந்து இறுதிக்குள் இந்த செயல்பாடுகள் தொடங்கக்கூடும் என்று மத்திய அரசின் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்பத் தகவல்துறையின் செயலாளரான சத்யநாராயணா சிஐஐ உச்சி மாநாட்டின்போது நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த உட்கட்டமைப்பு வசதிகளுக்காக உடனடியாக 4 முதல் 5 கோடி ரூபாய் வரை தேவைப்படுவதாகவும் அவர் கூறினார். ஆயினும், இத்திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தும்போது இதன் முதலீடு 50 முதல் 100 கோடி ரூபாய் வரை இருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி இத்தகைய தரவுத் தகவல்கள் கிளவுட் பிளாட்பாரம் எனப்படும் தொகுப்பில் சேமித்து வைக்கப்படும். அதனால், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தங்களுடைய துறை குறித்த தகவல் தொகுப்புகளை எளிதில் கையாள முடியும் என்றும் சத்யநாராயணா விளக்கினார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜன்சி மற்றும் மத்திய புலனாய்வுத்துறை ஏஜென்சியின் முன்னாள் தொழில்நுட்ப ஒப்பந்ததாரரான எட்வர்ட் ஸ்னோடென் அமெரிக்கா மற்ற நாடுகளைக் கண்காணிப்பதை ஆதாரங்களுடன் விளக்கியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, உலக நாடுகள் தங்களின் தகவல் தொடர்புகள் குறித்த பாதுகாப்பில் வெளிநாட்டுத் தொடர்பு மையங்களான யாகூ, ஜிமெயில் போன்றவற்றை உபயோகப்படுத்துவதை கட்டுப்படுத்தவும் வழி வகுத்துள்ளது.

...

shared via

[Continue reading...]

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பாராகிளைடிங் –ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிப்பு Thevar Jayanthi festival monitoring by paragliding drone

- 0 comments

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பாராகிளைடிங் –ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிப்பு Thevar Jayanthi festival monitoring by paragliding drone

ராமநாதபுரம், அக்.29–

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாராகிளைடிங் மற்றும் ஆள் இல்லா விமானம் மூலமும் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நேற்று தொடங்கி உள்ளது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பசும்பொன்னில் தேவர் நினைவிடம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு தேவரின பக்தர்கள் நேற்று முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முதல்நாள் ஆன்மீக விழாவாக முடிந்த நிலையில் 2–வது நாளான இன்று அரசியல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு, அரசியல் பிரவேசம் போன்றவை சொற்பொழிவாக நிகழ்த்தப்பட்டன. நாளை (30–ம்தேதி) குருபூஜை தினம் என்பதால் அரசியல் கட்சியினர், சமுதாய பிரமுகர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் வந்து தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகணன் தலைமையில் போலீசார் பல பகுதிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அபய்குமார்சிங் முகாமிட்டுள்ளார்.

வெளிமாவட்டங்களில் இருந்து டி.ஐ.ஜி.க்கள், கண்காணிப்பாளர்கள், கூடுதல் உதவி கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் வரவழைக்கப்பட்டு மாவட்டத்தின் பதற்றமான பகுதிகள் உள்பட பல பகுதிகளில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற அசம்பாவித சம்பவங்களை கருத்தில் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக சிறப்பு ஏற்பாடுகளையும் போலீசார் செய்துள்ளனர். இதன் ஒரு முயற்சியாக வானில் பறந்து கண்காணிக்கும் வகையில் பாராகிளைடிங் பாராசூட் வரவழைக்கப்பட உள்ளது. சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த மணிக்கண்ணன், தான் பாராகிளைடிங் மூலம் கண்காணிப்பு பணியை செய்ய உள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகணன் கூறியதாவது:–

பாராகிளைடிங் பாராசூட் இயக்க கற்றுத் தரும் பயிற்சியாளராக மணிக் கண்ணன், தனது பாரா கிளைடிங் பாராசூட்டில் அமர்ந்து கொண்டு வானில் பறப்பார். அவரது தலையில் அணிந்திருக்கும் ஹெல்மெட்டில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தாழ்வாக பறக்கும் அவர் காமிரா மூலம் பதட்டம் ஏற்படும் இடங்கள், கூட்டம், போக்குவரத்து நெரிசல் போன்றவை பற்றி வயர்லெஸ் மூலம் தகவல் கொடுப்பார். அதனை வைத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று குற்ற நிகழ்வுகளை தடுப்பார்கள். இதுதவிர ஆள் இல்லா விமானமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பாரா கிளைடிங் பாராசூட் செயல்பாடு குறித்து அனைவருக்கும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

பசும்பொன் செல்பவர் களை சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச் சேத்தி, மானாமதுரை வழியாக செல்லும்போது அங்கு அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேமரா பொருத்தப்பட்ட ஆள் இல்லா விமானம் மூலம் அந்த பகுதியில் போலீசார் கண்காணிக்கிறார்கள். இந்த விமானம் மூலம் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடக்கும் நிகழ்ச்சிகளை படம் பிடிக்க முடியும். ரிமோட் மூலம் இந்த விமானத்தை இயக்க சென்னை அண்ணா பல்கலைக்கழக தகவல் தொழில் நுட்ப உதவி பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் முதுகலை தகவல் தொழில் நுட்ப மாணவர்கள் 6 பேரும் வந்துள்ளனர்.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்கள் முழுவதும் போலீஸ் பாதூகப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னையில் இருந்தே கண்காணிக்கும் வகையில், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் வெப் காமிராவும் பொருத்தப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

...

shared via

[Continue reading...]

மத்திய பிரதேசத்தில் குளத்தில் பூத்திருக்கும் தாமரையை மறையுங்கள்: தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கடிதம் Hide lotus blooming in the pool in Madhyapradesh Congress letter to Election commission

- 0 comments

மத்திய பிரதேசத்தில் குளத்தில் பூத்திருக்கும் தாமரையை மறையுங்கள்: தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கடிதம் Hide lotus blooming in the pool in Madhyapradesh Congress letter to Election commission

போபால், அக்.29–

மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 25–ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு வருகிற 1–ந் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது.

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜ.க. கட்சி மொத்தம் உள்ள 230 இடங்களில் 150 முதல் 160 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் பெரிதும் கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் மகா கவுசல். மால்வா, பந்தல் கண்ட் ஆகிய மண்டலங்களில் 40–க்கும் மேற்பட்ட குளங்களில் தாமரை மலர் பூத்துள்ளது. இந்த குளங்களில் தாமரை பயிரிடப்படுகிறது.

இந்த 40 குளங்களில் இருந்து தான் மத்தியபிரதேசத்தின் மற்ற பகுதிகளுக்கு தாமரை மலர்கள் அனுப்பப்படுகின்றன.

பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் சின்னம் தாமரை என்பதால் இந்த குளங்களில் பூத்துக்குலுங்கும் தாமரை பூக்கள் காங்கிரசாரிடம் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த தாமரை பூக்கள் தங்களுக்கு தோல்வியை ஏற்படுத்தும் வகையில் மாறி விடுமோ என்று பயப்படுகிறார்கள்.

இதையடுத்து மத்திய பிரதேச மாநில காங்கிரசார் நேற்று தலைமை தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் அவர்கள் மத்திய பிரதேசத்தில் குளத்தில் பூத்துள்ள தாமரைகளை திரை போட்டு மறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்திரபிரதேசத்தில் தேர்தல் நடந்த போது மாயாவதியின் பகுஜன் சமாஜகட்சியின் சின்னமான யானை சிற்பங்கள் எல்லாம் துணி போட்டு மூடப்பட்டன. அது போல தாமரை பூக்களையும் மூட வேண்டும் என்கிறார்கள்.

இதற்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரசாரின் கோரிக்கை கேலிக்கூத்தாக உள்ளது. காங்கிரசின் சின்னம் கை என்பதால் நாட்டில் உள்ள எல்லாரது கைகளையும் மறைக்க வேண்டும் என்று நாங்கள் சொன்னால் அது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அப்படித்தான் காங்கிரசாரின் கோரிக்கை அபத்தமாக உள்ளது என்று பா.ஜ.க.வினர் கூறியுள்ளனர்.

...

shared via

[Continue reading...]

Monday 28 October 2013

கிரிஷ் 3 படத்தில் வில்லனாக நடிக்க விரும்பினேன்: ஹ்ரிதிக் ரோஷன் தகவல் hrithik roshan wished to play villain role in krish 3

- 0 comments

கிரிஷ் 3 படத்தில் வில்லனாக நடிக்க விரும்பினேன்: ஹ்ரிதிக் ரோஷன் தகவல் hrithik roshan wished to play villain role in krish 3

மும்பை, அக். 29-

பாலிவுட் நடிகர் ஹ்ரிதிக் ரோஷன் நடிப்பில் வெளியான கிரிஷ் மற்றும் கிரிஷ் 2 ஆகிய படங்கள் வசூலில் சாதனை படைத்து வெற்றியடைந்தன.

இதனையடுத்து, ஏராளமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட கிரிஷ் 3 வரும் நவம்பர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவே நான் விரும்பினேன் என்று கதாநாயகனாக நடித்துள்ள ஹ்ரிதிக் ரோஷன் கூறினார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நடைபெற்ற இப்படத்தின் அறிமுக விழாவில் அவர் கூறியதாவது:-

கிரிஷ் 3 படத்தில் வரும் வில்லன் கால் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க நான் விரும்பினேன். இந்த கதாபாத்தித்திற்கு எனது நடிப்பின் வாயிலாக வலிமை சேர்க்க முடியும் என நான் நம்பினேன்.

ஆனால், எனது விருப்பத்திற்கு தடை போட்ட எனது தந்தையும் இப்படத்தின் இயக்குனருமான ராகேஷ் ரோஷன், கால் கதாபாத்திரத்தை நடிகர் விவேக் ஓபராவை மனதில் வைத்து உருவாக்கியதாக கூறி விட்டார்.

எனது தந்தையின் முடிவு மிகவும் சரியானது தான் என்பதை தனது நடிப்பின் மூலம் விவேக் ஓபராய் நிரூபித்து விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

...

shared via

[Continue reading...]

அஜித்திற்கு பேனர் வைத்த விஜய் ரசிகர்கள் ajith and vijay fans

- 0 comments

அஜித்திற்கு பேனர் வைத்த விஜய் ரசிகர்கள்

அஜித்தின் ஆரம்பம் பட வெற்றி பெற வாழ்த்தி விஜய் ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர்.

அஜித்தின் ஆரம்பம் தீபாவளி சரவெடியில் வெடிக்க தயாராகி விட்டது.

இந்நிலையில் ஆரம்பம் படம் வெற்றி பெற வாழ்த்தி மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர்.

இந்த பேனர் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த பேனரில் அஜித்துக்கு விஜய் வாட்ச் கட்டிவிடுவது போன்ற புகைப்படம் உள்ளது.

இணையதளத்தில் இந்த பேனர் போடப்பட்டவுடன் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் அதை சமூக வலைதளங்களில் தீயா பரப்பி வருகின்றனர்.

மேலும் விஜய் ரசிகர்கள் ஆரம்பம் படத்தை ஆதரித்து வைத்துள்ள பேனரை பார்த்த அஜித் ரசிகர் மன்றத்தினர் உருகிவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

shared via

[Continue reading...]

ஆந்திராவில் பலத்த மழை: 4200 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது heavy rain andhra 4200 village flooded afloat

- 0 comments

ஆந்திராவில் பலத்த மழை: 4200 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது heavy rain andhra 4200 village flooded afloat

ஐதராபாத், அக். 28–

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் ஏற்பட்ட உடைப்பால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

மழை வெள்ளத்தால் ஆந்திராவில் 16 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. விசாகப்பட்டினம், விஜயநகரம், மேற்கு கோதாவரி, ஸ்ரீகாகுளம், மெடக், கரிம்நகர், கம்மம், பிரகாசம் உள்பட 14 மாவட்டங்களில் விவசாய பயிர்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி அழிந்தது.

மேற்கு கோதாவரியில் 1150 வீடுகள் இடிந்து தரை மட்டமானது. 2½ லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் மூழ்கியது. விசாகப்பட்டினத்தில் 20 கிராமங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், கரும்பு பயிர்கள் அழிந்தது.

இதே போல், மெடக், கரிம்நகர், கம்மம் மாவட்டத்தில் நெல், பருத்தி, மிளகாய், மக்காச்சோளம் தண்ணீரில் மூழ்கி அழுகியது.

மழையால் மாநிலத்தில் ரூ.1727 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக வருவாய்துறை மந்திரி ரகுவீராரெட்டி கூறினார். நேற்று அவர் வெள்ளம் பாதித்த நல்கொண்டா மாவட்டத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு கூறியதாவது:–

மாநிலத்தில் 14 மாவட்டங்களில் உள்ள 521 மண்டலத்தில் 4200 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. 22 ஆயிரம் வீடுகள் இடிந்து சேதம் அடைந்து உள்ளது. 42 பேர் உயிர் இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணப் பணிக்காக ரூ.1600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விஜயநகரம் மற்றும் விஜயவாடா பகுதியில் பல்வேறு இடங்களில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது.

இதனால் கோரப்பள்ளி எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ், புவனேஸ்வரம் எக்ஸ்பிரஸ் உள்பட 7 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மற்ற ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுகிறது. மாநிலம் முழுக்க 85 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதே போல் ஒடிசாவில் பெய்து வரும் மழையால் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 2½ லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

...

shared via

[Continue reading...]

Sunday 27 October 2013

A promotion for Soori!

- 0 comments

A promotion for Soori!

Comedian Soori, better known as Parotta Soori, has been steadily making a mark in the industry! He has been having a wonderful 2013, with his movies Kedi Billa Killadi Ranga and Varutha Padadha Vaalibar Sangam have become huge hits, and his comedy portions have been well appreciated. The latest news is that, Soori's wife has delivered a bonny baby boy! Soori also has quite a number of movies in hand, including Maan Karate and Jilla.

Galatta.com wishes Soori and his family all the very best!

shared via

[Continue reading...]

மாமியார் மைத்துனர்கள் தாக்கியதில் கருச்சிதைவு ஏற்பட்ட பெண்ணுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு: அபுதாபி கோர்ட் உத்தரவு abudhabi court orders 50 thousand dinar compensation to miscarried woman

- 0 comments

மாமியார் மைத்துனர்கள் தாக்கியதில் கருச்சிதைவு ஏற்பட்ட பெண்ணுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு: அபுதாபி கோர்ட் உத்தரவு abudhabi court orders 50 thousand dinar compensation to miscarried woman

அபுதாபி, அக். 28-

மாமியார் மற்றும் மைத்துனர்கள் தாக்கியதில் கருச்சிதைவு ஏற்பட்ட பெண்ணுக்கு 50 ஆயிரம் திர்ஹம் இழப்பீடு வழங்குமாறு கணவர் வீட்டாருக்கு அபுதாபி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அபுதாபியை சேர்ந்த ஒரு பெண் தனது 2 குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் வாழ்ந்து வந்தார். சம்பவத்தன்று மாமியாருடன் அவருக்கு வாய் தகராறு ஏற்பட்டது.

அப்போது அருகில் இருந்த 3 மைத்துனர்கள் மற்றும் ஒரு மைத்துனி தாய்க்கு பரிந்து பேசி அந்த பெண்ணை கண்மூடித் தனமாக தாக்கினார்கள். நான்கைந்து பேர் சூழ்ந்துக் கொண்டு தாக்கியதில் நிலைதடுமாறிய் அந்த பெண் கீழே விழுந்தார். விழுந்த வேகத்தில் அவரது வயிற்றில் இருந்த 3 மாத கரு சிதைந்தது. இதனையடுத்து, அந்த பெண் கோர்ட்டை நாடினார்.

மாமியார் குடும்பத்தினர் 3 ஆண்டுகளாக தன்னை அடித்து, உதைத்து சீத்தரவதை செய்ததாகவும், தற்போது ஏற்பட்ட கருச்சிதைவுக்கு இழப்பீடாக அவர்கள் 1 லட்சம் திர்ஹம் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கணவரின் குடும்பத்தார் 50 ஆயிரம் திர்ஹம் (இந்திய மதிப்புக்கு சுமார் 85 லட்சம் ரூபாய்) இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மாமியார் மற்றும் 3 மைத்துனர்களுக்கு தலா 200 திர்ஹம் அபராதமும் விதிக்கப்பட்டது.

...

shared via

[Continue reading...]

சரிதாவை ஏமாற்றிவிட்டு கணவர் வேறு திருமணம் – வழக்கு actress saritha divorce news

- 0 comments

சரிதாவை ஏமாற்றிவிட்டு கணவர் வேறு திருமணம் – வழக்கு

நடிகை சரிதாவுக்கும் மலையாள நடிகர் முகேசுக்கும் கடந்த 1989–ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஷர்வன், தேஜஸ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சரிதாவுக்கும் முகேசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் விவாகரத்து செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் முகேசுக்கும் கேரளாவில் பிரபல நடன ஆசிரியையாக உள்ள தேவிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். கேரளாவில் உள்ள ரிஜிஸ்டர் அலுவலகத்தில் அவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

முகேஷ் 2–வது திருமணம் செய்து கொண்டதை அறிந்ததும் நடிகை சரிதா அதிர்ச்சி அடைந்தார். தங்கள் இருவருக்கும் விவாகரத்து ஆனதாக கூறப்பட்ட தகவலை மறுத்துள்ள அவர் 2–வது திருமணம் செய்த கணவர் முகேஷ் மீது வழக்கு தொடரப்போவதாகவும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நடிகை சரிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

என் மகன் ஷர்வன் துபாயில் மருத்துவ படிப்பு தொடர்வதால் அங்கு தங்கி இருக்கும் சூழ்நிலையில் உள்ளேன். 2 நாட்களுக்கு முன்பு முகேஷ், தேவிகா என்ற பெண்ணை சட்டவிரோதமாக திருமணம் செய்து கொண்டதாக பத்திரிகைகள் மூலம் அறிந்தேன்.

கடந்த 2007–ம் ஆண்டு முதல் அவரிடம் எந்த ஜீவனாம்சமும் இல்லாமல் விவாகரத்து பெற தயாராக இருந்தேன். அவர் எந்த பதிலும் அளிக்காமல் தொடர்ந்து தட்டிக் கழித்து வந்தார். மகன்கள் ஷர்வன், தேஜஸ் இருவரும் என்னுடன் இருக்கிறார்கள்.

எந்த அறிவிப்பும் இல்லாமல் சட்டப்படி விவாகரத்தும் பெறாமல் முகேஷ் திருமணம் செய்திருப்பதாக வெளிவந்த செய்தி என்னை மிகவும் பாதித்துள்ளது. எனவே முகேஷ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன்.

shared via

[Continue reading...]

தேவர் ஜெயந்தி விழா: பரமக்குடி பகுதியில் 3,500 போலீசார் பாதுகாப்பு Devar Jayanthi festival 3500 police protection in Paramakudi area

- 0 comments

தேவர் ஜெயந்தி விழா: பரமக்குடி பகுதியில் 3,500 போலீசார் பாதுகாப்பு Devar Jayanthi festival 3500 police protection in Paramakudi area

பரமக்குடி, அக். 27–

பரமக்குடி டி.எஸ்.பி. வினோத் சாந்தாராம் நிருபர்களிடம் கூறியதாவது:–

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா வருகிற 28,29,30 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மாவட்டத்தில் சட்டம்–ஒழுங்கை பாது காக்கும் வகையில் பரமக்குடி பகுதியில் 3 ஆயிரத்து 500 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புலனாய்வு துறை, குற்றப்பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் முதல் திருவரங்கம் வரையிலும், கிருஷ்ணா தியேட்டர் முதல் சத்திரக்குடி வரையிலும், கிருஷ்ணா தியேட்டர் முதல் பார்த்தி பனூர் வரையிலும், பரமக்குடி ஒட்டப்பாலம் முதல் பாண்டியர் கிராமம் வரையிலும் இரு மார்க்கங்களிலும் ஒரே நேரத்தில் போலீசார் ரோந்த வாகனங்கள் மூலம் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

பரமக்குடி புறநகர் பகுதிகளான காந்தி நகர், மஞ்சள்பட்டிணம், கிருஷ்ணா தியேட்டர் பகுதிகளில் வாகன சோதனைச்சாவடி அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் மாவட்டத்தில் விழாவிற்கு வாகனங்களில் வந்து செல்பவர்கள் கண்டிப்பாக சொந்த வாகனங்களில் மட்டுமே வந்து செல்ல வேண்டும். வாடகை வண்டிகளில் வந்து செல்லக்கூடாது. மேலும் பரமக்குடியில் பல்வேறு பகுதிகளும் 9 சி.சி.டி. கேமரா மூலம் போலீசார்கள் கண்காணிப்பு பகுதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பரமக்குடி மற்றும் பார்த்திபனூரில் 28–ம்தேதி மாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார்களின் கொடி அணிவகுப்பு நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்பட தென் மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 16 மோப்பநாய்கள் மாவட்ட எஸ்.பி.மயில்வாகணன் உத்தரவின்பேரில் பரமக்குடி டி.எஸ்.பி. வினோத் சாந்தாராம் தலைமையில் அபிராமம், பார்த்திபனூர் பகுதிகளில் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன.

...

shared via

[Continue reading...]

கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டி மீது கல் வீச்சு: நெற்றி காயத்தால் பணிகள் பாதிப்பு Kerala Chief Minister hurt as protesters throw stones

- 0 comments

கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டி மீது கல் வீச்சு: நெற்றி காயத்தால் பணிகள் பாதிப்பு Kerala Chief Minister hurt as protesters throw stones

கண்ணூர், அக். 27-

கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி இன்று போலீஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக கண்ணூர் சென்றார். அங்கு அவர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடது சாரி ஜனநாயக முன்னணி அமைப்பினர் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர். அப்போது சிலர் அவர் மீது திடீரென கல் வீசி தாக்கினர்.

அவர் காரில் வரும்போது இரண்டு பக்கமும் போராட்டக்காரர்கள் அவரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் காரின் பின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அப்போது கார் கண்ணாடித்தூள் பட்டு உம்மன் சாண்டியின் நெற்றியில் காயம் ஏற்பட்டது. மேலும் ஒரு கல் அடியும் விழுந்தது.

இந்த தாக்குதலின் போது அவருடன் மந்திரி கே.சி. ஜோசப்பும் உடன் இருந்தார். இச்சம்பவத்தால் கலக்கம் அடையாத உம்மன் சாண்டி அந்த போலீஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். மேற்கொண்டு அவரது நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை. தாக்குதல் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசின் மந்திரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கேரள எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் உம்மன் சாண்டி பதவி விலக வேண்டும் என்று இடது சாரி ஜனநாயக முன்னனி அங்கு போராட்டம் நடத்தி வருகிறது.

...

shared via

[Continue reading...]

Saturday 26 October 2013

சவுதியில் தடையை மீறி 60 பெண்கள் கார்களை ஓட்டிச் சென்றனர் 60 women drove cars in saudi arabia

- 0 comments

சவுதியில் தடையை மீறி 60 பெண்கள் கார்களை ஓட்டிச் சென்றனர் 60 women drove cars in saudi arabia

ரியாத், அக். 27-

சவுதி அரேபியாவின் சாலைகளில் பெண்கள் கார்களையோ இதர வாகனங்களையோ ஓட்டிச் செல்ல கூடாது என மதவாதிகள் தடை செய்துள்ளனர்.

இந்த தடையை மீறும் பெண்கள் போலீசார் மற்றும் மததலைவர்களால் தண்டிக்கப்பட நேரிடும் எனவும் அவர்கள் எச்சரித்தனர். கார்களை ஓட்டுவதால் பெண்களின் கருப்பை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் பயமுறுத்தினர்.

இந்த தடை அங்குள்ள பெண்ணியக்க வாதிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மதவாதிகளின் மிரட்டல்களுக்கு வலு சேர்க்கும் விதமாக அந்நாட்டில்  பெண்களுக்கு ஓட்டுனர் உரிமங்களும் வழங்கப்பட்டதில்லை.

இந்நிலையில், இந்த தடையை உடைத்தெறியும் விதமாக நேற்று கடை மற்றும் அலுவலங்களுக்கு கார்களை ஓட்டிச் சென்ற சுமார் 60 பெண்கள் தாங்கள் கார் ஓட்டிச் சென்ற புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ஓட்டுனர் உரிமங்களை வைத்துள்ள இவர்களில் பெரும்பாலான பெண்கள் போலீசாரின் கண்களிலும் மதவாதிகளின் கண்களிலும் மண்ணை தூவிவிட்டு தங்களது பெண்ணுரிமையை நிலைநாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

...

shared via

[Continue reading...]

ஒன்றுபட்ட ஆந்திராவை வலியுறுத்தும் கட்சிக்கு பாராளுமன்றத் தேர்தலில் ஆதரவு: ஜெகன் மோகன் parliamentary election that the partys support for a united Andhra Pradesh Jagan Mohan

- 0 comments

ஒன்றுபட்ட ஆந்திராவை வலியுறுத்தும் கட்சிக்கு பாராளுமன்றத் தேர்தலில் ஆதரவு: ஜெகன் மோகன் parliamentary election that the partys support for a united Andhra Pradesh Jagan Mohan

ஐதராபாத், அக். 26-

தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக ஆந்திராவில் இன்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஐதராபாத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பேசியதாவது:-

இது டெல்லியின் அகந்தைக்கும், தெலுங்கு மக்களின் சுய மரியாதைக்கும் இடையிலான போராட்டம். ஆந்திர மாநிலத்தை பிரிக்கும் முயற்சியை தடுப்பதற்கு வரும் மக்களவைத் தேர்தலில் நாம் 30 தொகுதிகளையும் மக்கள் நமக்கு வழங்க வேண்டும். ஒன்றுபட்ட ஆந்திராவை முன்னிறுத்தும் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கத் தயாராக இருக்கிறேன்.

நாம் 30 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அதன்பின்னர் யாரால் ஆந்திர மாநிலத்தைப் பிரிக்க முடியும் என்பதை பார்ப்போம். 30 தொகுதிகளில் வென்றால், ஒன்றுபட்ட ஆந்திராவை உருவாக்கக்கூடிய ஒரு பிரதமரை நம்மால் உருவாக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

[Continue reading...]

ஐ.பி.எல். போட்டியில் இருந்து புனே வாரியர்ஸ் அணி நீக்கம்: பி.சி.சி.ஐ. நடவடிக்கை Pune Warriors removed from Indian Premier League for payment default

- 0 comments

ஐ.பி.எல். போட்டியில் இருந்து புனே வாரியர்ஸ் அணி நீக்கம்: பி.சி.சி.ஐ. நடவடிக்கை Pune Warriors removed from Indian Premier League for payment default

சென்னை, அக். 26-

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் புனே வாரியர்ஸ் அணியை 2010–ம் ஆண்டில் சகாரா குழுமம் ரூ.1,702 கோடிக்கு விலைக்கு வாங்கியது. ஆனால் அந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ஆட்டங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் தங்கள் அணிக்கான ஆண்டு கட்டணத்தை 25 சதவீதம் குறைக்க வேண்டும் என்று புனே வாரியர்ஸ் அணி நிர்வாகம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்தது. இதனை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது.

மேலும் ஐ.பி.எல். போட்டியில் புனே வாரியர்ஸ் அணி தொடர ரூ.170.2 கோடியை வங்கி உத்தரவாத தொகையாக கட்ட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இது குறித்து பலமுறை ஞாபகப்படுத்தியும் சகாரா நிறுவனம் இந்த தொகையை கட்டவில்லை. இதற்கிடையில் இந்த ஆண்டு மே 21–ந் தேதி ஐ.பி.எல். போட்டியில் இருந்து புனே வாரியர்ஸ் அணி விலகுவதாக அந்த அணியின் உரிமையாளர் சுபத்ரா ராய் அறிவித்தார். ஆனால் இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு முறைப்படி கடிதம் அனுப்பவில்லை.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று (சனிக்கிழமை) நடந்தது. இதில் புனே வாரியர்ஸ் அணி பிரச்சினை பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது நிலுவைத் தொகையை செலுத்தாததால் புனே அணியின் ஐ.பி.எல். ஒப்பந்தத்தை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

...

shared via

[Continue reading...]

7 கிரகங்களுடன் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு New Solar Innovation With 7 planets

- 0 comments

7 கிரகங்களுடன் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு New Solar Innovation With 7 planets

லண்டன், அக் 26–

ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் எச்.டி. 10180 என்ற நட்சத்திரம் குறித்து கடந்த 6 ஆண்டுகளாக சிலியில் உள்ள லாசில்லா என்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 3.6 மீட்டர் டெலஸ்கோப் உதவியுடன் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் எச்.டி. 10180 நட்சத்திரத்தை சுற்றி ஒரு புதிய சூரிய குடும்பத்தை கண்டுபிடித்தனர்.

அதில் 7 கிரகங்கள் உள்ளன. அவற்றில் 5 கிரகங்கள் மிக தெளிவாக தெரிகின்றன. அதில் ஒன்று சனி கிரகம் போன்ற தோற்றத்தில் உள்ளது. இவை தவிர மிக சிறிய அளவில் வெளி கிரகங்களும் உள்ளன.

இந்த புதிய சூரிய குடும்பம் பூமியில் இருந்து 127 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. இது தற்போதுள்ள சூரிய குடும்பம் போன்றே உள்ளது. அது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாக விஞ்ஞானி கிறிஸ்டோபே லோவிஸ் தெரிவித்துள்ளார்.

...

shared via

[Continue reading...]

Friday 25 October 2013

ஒபாமாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபருக்கு ஜெயில் Jail for youth man threats Obama

- 0 comments

ஒபாமாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபருக்கு ஜெயில் Jail for youth man threats Obama

கசபிளான்கா, அக். 26–

மொராக்கோ நாட்டில் உள்ள கசபிளான்கா நகரை சேர்ந்தவர் சவுபியான் (வயது 18). அவர் டூவிட்டர் இணைய தளத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து இருந்தார். அதில், உங்கள் (அமெரிக்கா) அதிபரையும், அவரை சார்ந்தவர்களையும் கொலை செய்வேன்.

அதற்காக அடுத்த மாதம் அமெரிக்கா வருகிறேன் என கூறி இருந்தார். அதை தொடர்ந்து கசபிளான்கா நகரில் நடந்த 2 மாதத்திற்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு வாலிபர் சவுபியானுக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை விதித்தது.

...

shared via

[Continue reading...]

சாலைகள் சீரமைக்கப்படும் வரை உடலுறவுக்கு தடா : கொலம்பியா மனைவிகளின் நூதன போராட்டம் columbian women follow crossed legs movement for relaying roads

- 0 comments

சாலைகள் சீரமைக்கப்படும் வரை உடலுறவுக்கு தடா : கொலம்பியா மனைவிகளின் நூதன போராட்டம் columbian women follow crossed legs movement for relaying roads

லண்டன், அக். 26-

அர்ஜெண்டினா நாட்டில் உள்ள கொல்பியா மாகாணத்தின் பார்பகோஸ் பகுதியில் உள்ள சாலைகள், வாகனங்கள் செல்ல லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாக உள்ளன. இதனால், சாலை விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன.

இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவசரத் தேவைக்காக நகரில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சென்றடைய சுமார் 14 மணி நேரம் ஆகிவிடுகின்றது. போகும் வழியிலேயே பல நோயாளிகள் இறந்துப் போகவும் நேரிடுகிறது.

இந்த அவலநிலையை போக்கி சாலைகளை சீரமைத்து தரும்படி பார்பகோஸ் வாசிகள் அரசு நிர்வாகத்திற்கு மனுக்களின் மூலமாகவும் போராட்டங்களின் வாயிலாகவும் இதுவரை நடத்திய அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில் முடிந்தன.

இதனால், கொதித்துப் போன இப்பகுதியில் வசிக்கும் பெண்கள், நீங்கள் என்ன செய்வீர்களோ.... ஏது செய்வீர்களோ..? எங்களுக்கு தெரியாது. நம் ஊரில் உள்ள சாலைகள் சீர் செய்யப்படும் வரை படுக்கையில் கிட்ட சேர்க்க மாட்டோம் என கணவன்மார்களுக்கு தடை விதித்துள்ளனர்.

கிராஸ்ட் லெக்ஸ் மூவ்மெண்ட் (பின்னிய கால்கள் போராட்டம்) எனப்படும் இதுபோன்ற போராட்டத்தை கடந்த 2011-ம் ஆண்டும் இப்பகுதி பெண்கள் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

...

shared via

[Continue reading...]

கற்பழிப்பு வழக்கில் ராஜஸ்தான் முன்னாள் மந்திரி கைது: சி.பி.ஐ. நடவடிக்கை Rajasthan ex minister arrested in harassment case CBI action

- 0 comments

கற்பழிப்பு வழக்கில் ராஜஸ்தான் முன்னாள் மந்திரி கைது: சி.பி.ஐ. நடவடிக்கை Rajasthan ex minister arrested in harassment case CBI action

ஜெய்ப்பூர், அக். 25-

ராஜஸ்தான் மாநிலத்தல் பால்வளம் மற்றும் கதர்துறை மந்திரியாக இருந்தவர் பாபுலால் நாகர். இவர் 35 வயதுபெண் ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த செப்டம்பர் மாதம் அந்த பெண்ணை தனது பங்களாவுக்கு அழைத்து கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து பாபுலால் நாகர் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்தும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன்பின்னர் இவ்வழக்கு கடந்த 9-ம் தேதி சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் கற்பழிப்பு புகார் தொடர்பாக பாபுலால் நாகரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர். தடயவியல் பரிசோதனையும் நடத்தப்பட்டது. பின்னர் அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.

...

shared via

[Continue reading...]

அமெரிக்காவில் 75 இடங்களில் ரிலீஸாகும் முதல் தமிழ் படம் அஜீத்தின் ஆரம்பம்! Aarambam in america

- 0 comments

அமெரிக்காவில் 75 இடங்களில் ரிலீஸாகும் முதல் தமிழ் படம் அஜீத்தின் ஆரம்பம்!

தமிழ்ப் படங்களுக்கு வெளிநாட்டுகளில் அந்த அளவுக்கு வியாபாரம் இல்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாய் அங்கும் மார்க்கெட் உருவாகிக்கொண்டு வருகிறது. சிவாஜி, எந்திரன் போன்ற படங்கள் இங்கிலாந்தில் நல்ல கலெக்சனைப் பெற்றன.

அமெரிக்காவில் தமிழ் படங்கள் ரிலீஸாகும் இடங்கள் 20-30 ஆகத்தான் இருக்கும். அதுவும் பெரிய நட்சத்திரங்களின் படம் மட்டுமளே ரிலீஸாகும். தமிழர்கள் அதிகமாய் வசிக்கும் நகரங்களில் உள்ள தியேட்டர்களை தேர்ந்தெடுத்து ரிலீஸ் செய்வார்கள்.

சமீப காலமாய் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது ரிலீஸாகவிருக்கும் ஆரம்பம் படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு 75 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவிருப்பதாக வட அமெரிக்க பகுதியின் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முந்தைய சாதனை எந்திரன் படமாகும். தமிழ் – இந்தி இரண்டு மொழிகளிலும் சேர்த்து 85 திரையரங்குகளில் ரிலீஸானாலும் தமிழில் மட்டும் 63 இடங்களில் ரிலீஸாகியிருந்தது. அதைத் தாண்டி இப்போது ஆரம்பம் 75 இடங்களில் ரிலீஸாகவிருக்கிறது.

விஜய் நடித்த தலைவா படம் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 54 இடங்களில் ரிலீஸானது.

The post

[Continue reading...]

தீபாவளிக்கு துணி–நகைகள் வாங்க போறீங்களா?: போலீசார் சொல்வதை கொஞ்சம் கேளுங்க Diwali clothes jewelry buy Are going to

- 0 comments

தீபாவளிக்கு துணி–நகைகள் வாங்க போறீங்களா?: போலீசார் சொல்வதை கொஞ்சம் கேளுங்க Diwali clothes jewelry buy Are going to

இதோ..தீபாவளி நெருங்கி வந்து விட்டது. இன்னும் சரியாக ஒரு வாரம்தான். ஜாலிதான்... புத்தாடைகள் தான், பலகாரம் தான்..படார்.. படார்... பட்டாசுகளை கொளுத்த வேண்டியது தான்.

தீபாவளி பண்டிகைக்கு முன்கூட்டியே பொதுமக்கள் பலர் புத்தாடைகள், நகைகள் வாங்கி தயாராக வைத்திருந்தாலும், இன்னும் மீ(பா)திபேர் இந்த ஒரு வாரத்தில் தான் கடைகளுக்கு படையெடுப்பாங்க!

பெரிய...பெரிய ஜவுளிக் கடைகள் நிரம்பி உள்ள ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் காலையில் இருந்து இரவு 10 மணி வரை மக்கள் தலைகளாகத்தான் தென்படுகிறது. ஜனங்க நடந்து போகக்கூட முடியாத அளவுக்கு நெருக்கடி.

ஈரோடு மாநகர் பகுதி மட்டுமல்லாமல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிராமங்களில் இருந்தும் மக்கள் அலை..அலையா... வந்த வண்ணம் உள்ளனர். தங்கள் உள்ளத்தை கொள்ளை கொண்ட துணிமணிகளை உவகையுடன் செலக்ட் செய்து எடுத்துக்கொண்டு செல்கிறார்கள்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி கூட்டத்தோடு புகுந்து திருட்டு ஆசாமிகளும் தங்கள் கைக்கு கிடைச்சதை சுருட்டிக்கிட்டு போக தயாராக இருக்காங்க. மக்கள் அசந்த நேரமா... பார்த்து நகை–பணம் மற்றும் பொருட்களை அபேஸ் செய்திடுவாங்க.

இதனால் பொதுமக்கள் நலன் மீதும் அவர்களின் பொருட்கள் களவு போகாமல் இருக்க அக்கறையின் பேரிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் பகலும்–இரவிலும் ஈடுபட்டு உள்ளார்கள்.

மேலும் பொதுமக்கள் பொருட்கள் வாங்க வரும் போது விழிப்புணர்வுடன் இருக்க எச்சரிக்கை நோட்டீசுகளையும் போலீசார் பொது மக்களுக்கு வினியோகம் செய்து வருகிறார்கள்.

புது துணிகள், நகைகள் வாங்க வரும் மக்கள் தங்களின் நகை–பணத்தை பார்த்து கொள்ள வேண்டும். பஸ்சில் வரும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி உங்கள் கவனத்தை திசை திருப்பி திருட வாய்ப்புள்ளது, கவனமாக இருக்கணும்.

திருடர்கள் உங்கள் அருகிலேயே இருந்து கொண்டு அசுத்தமான பொருட்களை தடவி கவனத்தை திசை திருப்புவார்கள் ரொம்ப கவனம்.... என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் திருட்டு ஆசாமிகள் 'டிப்–டாப்பாக' உடையணிந்து கொண்டு போலீஸ் என கூறி திருடர்கள் வர இருப்பாங்க, உங்கள் நகையினை கழற்றி கொடுங்க... காகிதத்தில் மடித்து தருகிறேன்.. என கூறி பாதுகாப்பு செய்வது போல நடிப்பாங்க...ரொம்ப உஷாராக இருக்கனும். அதே போல் திருட்டு பொம்பளைங்க பஸ்சில் கையில் குழந்தையை வைத்து கொண்டு, குழந்தைக்கு உட்கார இடம் கேட்பது போல் கவனத்தை திசை திருப்பி நகை– பணத்தை திருடிக்கிட்டு போயிடுவாங்க... கவனம் தேவை.

பணத்தை கீழே போட்டு இதோ..பாருங்க உங்கள் பணம் கீழே கிடக்கிறது என்பார்கள்.. அந்த பணத்துக்கு ஆசைப்பட்டு உங்கள் பணத்தை பறி கொடுத்து விடாதீங்க... என்றும் போலீசார் அறிவுரை கூறி உள்ளனர்.

என்ன...நீங்க இன்னிக்கு தீபாவளி துணிகள்–நகைகள் வாங்க போறீங்களா...? போலீசார் சொல்வதை கொஞ்சம் கேளுங்க!

...

shared via

[Continue reading...]

இந்திய கோடீசுவரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம் india rich man list mukesh ambani first place

- 0 comments

இந்திய கோடீசுவரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம் india rich man list mukesh ambani first place

மும்பை, அக். 25–

இந்திய கோடீசுவரர்களின் பட்டியலை சீனாவைச் சேர்ந்த ஹரூன் இந்தியா ரிச் லிஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பண வீக்கம் அதிகரிப்பு காரணமாக இந்திய கோடீசுவரர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது அந்த பட்டியல் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்திய கோடீசுவரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வரும் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த ஆண்டு 2 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. என்றாலும் அவர் 18.9 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்புள்ள சொத்துக்களுடன் இந்திய பணக்காரர்களில் முதல் இடத்தில் இருக்கிறார்.

லண்டனில் வசித்து வரும் பிரபல தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் 15.9 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 2–வது இடத்தில் உள்ளார். திலீப் சங்வி மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

விப்ரோ நிறுவனத்தின் அஜீம் பிரேம்ஜி 12 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 4–வது இடத்திலும், எச்.சி.எல். நிறுவனத் தலைவர் சிவ் நாடார் 8.6 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 5–வது இடத்திலும் உள்ளனர். தொழில் அதிபர் குமார் மங்கலம் பிர்லா 8.4 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 6–வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆதிகோத்ரேஜ் (8.1 பில்லியன் டாலர் சொத்து) 7–வது இடம், பலோன் ஜி மிஸ்திரி (8 பில்லியன் டாலர்) 8–வது இடம், ரவி ரூயா (7.6 பில்லியன் டாலர்) 9–வது இடம், சுனீல் மிட்டல் (7.3 பில்லியன் டாலர்) 10–வது இடத்திலும் இருக்கிறார்கள்.

நம்பர்–ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி பட்டியலில் பின்தங்கி விட்டார். அவருக்கு 11–வது இடமே கிடைத்துள்ளது.

...

shared via

[Continue reading...]

Thursday 24 October 2013

மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு உங்களது பெயர் சூட்டுவதை அனுமதிக்க வேண்டாம்: சச்சினுக்கு ஆம் ஆத்மி கட்சி கடிதம் Mumbai cricket club please do not let your name Aam Admi letter to Sachin

- 0 comments

மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு உங்களது பெயர் சூட்டுவதை அனுமதிக்க வேண்டாம்: சச்சினுக்கு ஆம் ஆத்மி கட்சி கடிதம் Mumbai cricket club please do not let your name Aam Admi letter to Sachin

மும்பை, அக்.25-

மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் மேற்கு புறநகர் பகுதியான காந்திவிலியில் கிளப் ஹவுஸ் கட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தில் மதுபான விடுதிகள், உணவகங்கள், சூதாட்ட விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கட்டப்படுவதாக கிரிக்கெட் சங்கம் சார்பில் கூறப்படுகிறது. இந்த கிளப் ஹவுசுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் பெயரை சூட்டுவதற்கு மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது.

மும்பை கிரிக்கெட் சங்கத்தின் இந்த முடிவிற்கு சிவசேனா கட்சியின் கவுன்சிலர் யசோதர் பன்சே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள காந்திவிலி கிளப் ஹவுசிற்கு சச்சின் தெண்டுல்கர் பெயரை சூட்டுவதற்கு ஆம் ஆத்மி கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மராட்டிய மாநில ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அஞ்சலி தமானியா சச்சின் தெண்டுல்கருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.

அதில், நீங்கள் இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த பிரபலம். ஒவ்வொரு இந்தியர்களின் இதயத்திலும் நீங்கள் துடித்துக்கொண்டே இருக்கின்றீர்கள். அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கிளப் ஹவுசுக்கு உங்களுடைய பெயர் வைக்கப்போவதாக அறிந்தோம். இதனை ஒருபோதும் நீங்கள் அனுமதிக்காதீர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

...

shared via

[Continue reading...]

காங்கிரஸ்தான் மதச்சார்புடன் செயல்படுகிற ஒரு வகுப்புவாத கட்சி : ராஜ்நாத் சிங் Congress the most communal party Rajnath says

- 0 comments

காங்கிரஸ்தான் மதச்சார்புடன் செயல்படுகிற ஒரு வகுப்புவாத கட்சி : ராஜ்நாத் சிங் Congress the most communal party Rajnath says

கொச்சி, அக். 24-

ராஜஸ்தானில் நேற்று பேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, கோபம் மற்றும் வெறுப்பான அரசியலை பாரதிய ஜனதா நாட்டில் விதைத்து வருகிறது. இது மதச்சார்பற்ற கட்டமைப்புகளுக்கு ஊறுவிளைக்கும் என்று கூறினார்.

இந்நிலையில் கேரள மாநில கொச்சியில் நாளை தொடங்கும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கும் தலைவர்களை சந்தித்து பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சிதான் மதவாதக் கொள்கையுடன் செயல்படும் முக்கியமான வகுப்புவாத கட்சி என்று கண்டித்துள்ளார்.

இதுகுறித்து ராஜ்நாத் சிங் மேலும் கூறியதாவது:-

மிகப்பெரிய வகுப்புவாதக் கட்சியாக காங்கிரஸ் தான் நாட்டில் செயல்படுகிறது. அந்த கட்சிதான் ஆங்கிலேயர்களின் பிரிவினைவாத கொள்கைகளை பின்பற்றி வருகிறது. சுதந்திரத்திற்கு பிறகும் கூட காங்கிரசார் அதை கைவிடாமல் பின்பற்றி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

...

shared via

[Continue reading...]

விஜய் சார் பஞ்ச் டயலாக் பேசல… பேசல… vijay special news

- 0 comments

விஜய் சார் பஞ்ச் டயலாக் பேசல… பேசல…

இருமினால் கூட யாருக்கும் சங்கடமில்லையே என்று கேட்டுதான் இருமுவார் போலிருக்கிறது. அந்தளவுக்கு முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாகிவிட்டார் விஜய்.

தனது ரசிகர் மன்ற முக்கியஸ்தர்களை அவர் ஐதராபாத் ஷூட்டிங்கில் வைத்து சந்தித்தார் என்று கிசுகிசு கிளம்பினாலும் கிளம்பியது. அலறி அடித்துக் கொண்டு அந்த செய்திக்கு மறுப்பு அனுப்பி விட்டார். நான் பாட்டுக்கு என் வேலை உண்டு, ஷுட்டிங் உண்டுன்னு போயிட்டு இருக்கேன். எதையாவது சொல்லி குழப்பத்தை உண்டாக்காதீங்க என்கிற அளவுக்கு சூடு பறந்தது அந்த அறிக்கையில்.

அப்படியே நம்ம படத்தில் பஞ்ச் டயலாக் எதுவும் இல்லேங்கிற விஷயத்தையும் வெளியே சொல்லியாகணுமே என்று யோசித்தவர், ஜில்லா படத்தின் டைரக்டர் நேசனை அழைத்து நீங்க கொடுக்கிற பேட்டிகளை கொஞ்சம் விளக்கமே கொடுத்துருங்க என்றாராம். அதாவது இந்த படத்தில் பஞ்ச் டயலாக் இல்லே என்பதை பளிச்சுன்னு சொல்லிடுங்க என்று அர்த்தம்.

மிக சரியாக அதை புரிந்து கொண்ட நேசன், எந்த நிருபரை பார்த்தாலும் இதில் விஜய் சார் ஒரு பஞ்ச் டயலாக்கும் பேசல என்கிறார். இப்படி சொன்னால்தான் என்னவோ இருக்குன்னு அர்த்தம்.

shared via

[Continue reading...]

சுவிஸ் வங்கியில் அசன் அலி பதுக்கியுள்ள 800 கோடி டாலர் பணம் மீட்கப்படுமா? India unlikely to get back alleged tax evader Hasan Alis millions

- 0 comments

சுவிஸ் வங்கியில் அசன் அலி பதுக்கியுள்ள 800 கோடி டாலர் பணம் மீட்கப்படுமா? India unlikely to get back alleged tax evader Hasan Alis millions

புதுடெல்லி, அக். 24-

ஐதராபாத்தில் பிறந்தவரான தொழிலதிபர் அசன் அலி கான் ரியல் எஸ்டேட், குதிரை வியாபாரம், பழையப்பொருட்கள் விற்பனை என பல்வேறு தொழில்களை செய்து வந்தார். அவர் பல்லாயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து வருமான வரித்துறையை ஏமாற்றியுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டது. 

இதையடுத்து பணமுறைகேடு செய்ததாக மத்திய அமலாக்கப்பிரிவினர் கடந்த 2011-ம் ஆண்டு அசன் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் சுவிஸ் நாட்டின் யூபிஎஸ் வங்கியில் 800 கோடி டாலர் மதிப்பிலான பணத்தை  பதுக்கி ஹவாலா மோசடி செய்துள்ளார் எனவும், இதனால் அவர் 90 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதனை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அசன் அலியின் பணத்தை ரகசியமாக பதுக்கி வைத்திருக்கும் சுவிஸ் வங்கிக்கு எதிரான ஆவண விவரங்களை வழங்கவில்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இந்திய அட்டர்னி ஜெனரல் வாகன்வதி கேட்டார்.

கருப்பு பணம் மற்றும் பண முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் அசன் அலி வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள பணத்தை மீட்டுக் கொண்டு வர போதுமான ஆதாரம் இல்லாமல் அரசு திணறி வருவதாக கூறப்படுகிறது.

...

shared via

[Continue reading...]

ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதல் ஜோடி தலை துண்டித்து கொலை: தலிபான்கள் வெறியாட்டம் Afghanistan Taliban attack affair couple killed

- 0 comments

ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதல் ஜோடி தலை துண்டித்து கொலை: தலிபான்கள் வெறியாட்டம் Afghanistan Taliban attack affair couple killed

கந்தகார், அக். 24–

ஆப்கானிஸ்தான் நாட்டில் கள்ளக்காதலில் ஈடுபடுபவர்களுக்கு தலிபான் தீவிரவாதிகள் மரண தண்டனை விதித்து வருகிறார்கள். இந்த நிலையில் தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் திருமணமான பெண் ஒருவர் வேறொரு ஆணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தார்.

இதுபற்றி தலிபான் தீவிரவாதிகளுக்கு தகவல் தெரிந்தது. அந்த ஆணையும், பெண்ணையும் தலிபான் தீவிரவாதிகள் பிடித்து சென்றனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் தலையை துண்டித்து கொலை செய்தனர். அவர்களுடைய உடல் ஊருக்கு வெளியே கிடந்தது.

இதுபோல கள்ளக் காதலில் ஈடுபட்ட பலரை தலிபான் தீவிரவாதிகள் தலையை வெட்டி கொன்றுள்ளனர். இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 20 வயது இருக்கும், ஆண் பற்றிய மற்ற விவரங்கள் தெரிய வில்லை.

...

shared via

[Continue reading...]

கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும்: உதயகுமார் kudankulam nuclear power plant shut down permanently udayakumar

- 0 comments

கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும்: உதயகுமார் kudankulam nuclear power plant shut down permanently udayakumar

ராதாபுரம், அக். 24–

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நேற்று முன் தினம் மின் உற்பத்தி தொடங்கியது. இதைத்தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுப்பதற்காக போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள், இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் இடிந்தகரையில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் தமிழ்தேச பொது உடமை கட்சி, தமிழ் தேசிய விடுதலை இயக்கம், ம.தி.மு.க. உள்பட 30 அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். போராட்டக்குழு சார்பில் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளின் ஆலோசனைகளுக்கு பிறகு கூட்டமைப்பு சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கூடங்குளம் 1 மற்றும் 2–ம் அணுஉலைகளை பற்றி மத்திய அரசும், அதன் அணுசக்தி துறையும், இதர அரசு அமைப்புகளும் தமிழ் மக்கள் உயிருக்கு கடுகளவும் மதிப்பு கொடுக்காமல் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக, உண்மைக்கு புறம்பாக தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

இப்போது மின்சார உற்பத்தி தொடங்கி விட்டது என்று நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர். 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகி விட்டது என்று கூடங்குளம் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் மின் இணைப்பு அதிகாரிகள் இரண்டாம் நிலை அமைப்பு தோல்வியடைந்து விட்டது என்று தங்களது இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். மின்சாரம் வந்ததாகவும் குறிப்பிடவில்லை.

கூடங்குளம் முதல் மற்றும் 2–வது அணு உலைகள் குறித்த உண்மை தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தரமற்ற பொருள்களால் கட்டப்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் கூடங்குளம் உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும்.

முதல் இரு உலைகளே முடங்கி கிடக்கும் நிலையில் 3–வது, 4–வது உலைகளுக்கு ஒப்பந்தம் போடுவது என்பது மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

இந்திய இழப்பீடு சட்டத்தை அவமதித்து ரஷிய அரசுக்கு உதவும் வகையிலான நடவடிக்கையில் இறங்குவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராடும் தமிழ் மக்களுக்கு எங்களது ஆதரவை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

...

shared via

[Continue reading...]

Wednesday 23 October 2013

தீவிரவாதிகள் பக்ருதீன், பிலால் மாலிக் முன் சாட்சிகள் அணிவகுப்பு: வேலூர் ஜெயிலில் நாளை நடக்கிறது police bakarudin bilal malik behind witness parade

- 0 comments

தீவிரவாதிகள் பக்ருதீன், பிலால் மாலிக் முன் சாட்சிகள் அணிவகுப்பு: வேலூர் ஜெயிலில் நாளை நடக்கிறது police bakarudin bilal malik behind witness parade

வேலூர், அக்.24–

வேலூரில் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய தகவல்கள் பெறப்பட்டது. வெள்ளையப்பனை கொலை செய்தது எப்படி, பிறகு எப்படி தப்பிச் சென்றனர், எங்கு தங்கி இருந்தனர் போன்ற விவரங்களை போலீசார் சேகரித்தனர். பின்னர் இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இந்த வழக்கில் கொலை சம்பவம் நடந்த போது சம்பவ இடத்தில் பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன் இருந்ததற்கான சாட்சியங்களை போலீசார் சேகரித்துள்ளனர்.

இந்நிலையில் பிலால் மாலிக், பக்ருதீன் ஆகியோரை பல்வேறு இடங்களில் நேரில் பார்த்த சாட்சிகளை கொண்டு நாளை வேலூர் ஜெயிலில் அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

இதில் சாட்சிகள் குற்றசாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்டுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

...

shared via

[Continue reading...]

கேரளாவில் நாடார் சமுதாயத்தின் சமூக நிலைகள் பற்றி ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் Retired judge to head panel on Nadar community

- 0 comments

கேரளாவில் நாடார் சமுதாயத்தின் சமூக நிலைகள் பற்றி ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் Retired judge to head panel on Nadar community

திருவனந்தபுரம், அக். 23-

கேரளாவில் உள்ள நாடார் சமுதாயத்தினரின் பிந்தங்கிய நிலைமைகள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிஹரன் நாயர் தலைமையில் கமிஷன் ஒன்றை அமைக்க கேரள அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

குறிப்பேடுகளில் உள்ளபடி, இந்த ஆய்வானது நாடார் சமுதாயத்தினர் மற்றும் உட்பிரிவினர்களுக்கான மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு பயன்களை பெற வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

நாடார் சமுதாயத்தின் சமூக, பொருளாதார கல்வி நிலைகளில் பின் தங்கியநிலை மற்றும் அரசுப் பதவிகளில் அவர்களின் நிலைகள் பற்றி ஆராய்ந்து இந்த கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்கும். இந்த அறிக்கை இன்னும் ஆறு மாதங்களில் கேரள அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

...

shared via

[Continue reading...]

சென்னை கோவை இடையே ஏ.சி. சிறப்பு ரெயில் முன்பதிவு இன்று முதல் தொடக்கம் Chennai to Coimbatore AC Special train booking first start today

- 0 comments

சென்னை கோவை இடையே ஏ.சி. சிறப்பு ரெயில் முன்பதிவு இன்று முதல் தொடக்கம் Chennai to Coimbatore AC Special train booking first start today

சென்னை, அக்.24-

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை-கோவை இடையே முற்றிலும் ஏ.சி. பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ள சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையை ஒட்டி தெற்கு ரெயில்வே இதுவரை 82 சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது. இந்த நிலையில் கூடுதலாக சென்னை சென்டிரலில் இருந்து கோவைக்கு முற்றிலும் ஏ.சி.(குளிர்சாதன வசதி) பெட்டிகள் கொண்ட சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, சென்னை சென்டிரல்-கோவை அதிவிரைவு ஏ.சி. சிறப்பு ரெயில்(வ.எண்:06009) நவம்பர் 3-ந் தேதி இரவு 10.30 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு கோவை சென்றடையும்.

மறுபாதையில், இந்த ரெயில்(06010) நவம்பர் 4-ந் தேதி இரவு 11.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்தடையும். இந்த ரெயிலில் ஒரு முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி, 3 இரண்டு அடுக்கு ஏ.சி. பெட்டிகள், 8 மூன்று அடுக்கு ஏ.சி. பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரெயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் வழியாக இயக்கப்படும். இது கோவை செல்லும் போது வடக்கு கோவை ரெயில் நிலையத்திலும், சென்னை வரும் போது, பெரம்பூர் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

...

shared via

[Continue reading...]

ஆட்சியின் சாதனைகளுக்கு பதில் ஆச்சியின் மரணம் பற்றி பேசுகிறார் ராகுல் : பா.ஜனதா கிண்டல் BJP hits out at Rahul for harping on emotional issues

- 0 comments

ஆட்சியின் சாதனைகளுக்கு பதில் ஆச்சியின் மரணம் பற்றி பேசுகிறார் ராகுல் : பா.ஜனதா கிண்டல் BJP hits out at Rahul for harping on emotional issues

பாட்னா, அக். 23-

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, சில தினங்களாக பொதுக்கூட்டங்களில் உணர்ச்சிப் பூர்வமாக பேசி வருகிறார். வேறு வழியின்றி ராகுல் அவ்வாறு பேசுவதற்கு தள்ளப்பட்டுள்ளார் என்று பா.ஜனதா நாகையாடியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-

ராகுல் தனது பாட்டி சுட்டுக்கொல்லப்பட்டது, அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாதது குறித்து பேசியிருக்கிறார் என்பது மிகவும் துரதிர்ஷ்டமானது. மக்களின் வாக்குகளை கவர அவர் உணர்ச்சிப் பூர்வமாக பேசி வருகிறார். நாட்டிற்கு நன்றாக தெரிந்த காந்தி குடும்பத்தின் தியாகங்களைப் பற்றி மீண்டும் புகழ் பாடுவதை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வைத்துள்ளார்.

இரண்டு முறையாக நாட்டை ஆண்டு வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சாதனைகள் பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லாமல், ராகுல் அவரது குடும்பத்தை பற்றி உணர்ச்சிப் பூர்வமாக விளக்கி வருகிறார்.

இவ்வாறு ராகுல் பேசி வருவது, நவீன இந்தியாவின் பிரச்சினைகளை தீர்க்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒன்றும் செய்யவில்லை என்பதையே காட்டுகிறது. இது சட்டசபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் எந்த பயனையும் தராது.

கடந்த காலத்தை பற்றிய ராகுல் காந்தியின் உணர்ச்சிப் பூர்வமான பேச்சுக்களும், சுய புராணங்களும் இன்றைய காலத்து இளைஞர்களிடம் எடுபடாது. அவர்கள் வருங்கால இந்தியாவை படைக்கும் வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளையும், பாதுகாப்பின்மையையும் அனுபவித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

[Continue reading...]

Oreo Cream Cookies Can be Harmful as Cocaine, Say Scientists ஒரியோ கிரீம் குக்கீகளை கோகோயின் போன்ற தீங்கு விளைவிக்கும்

- 0 comments
ஒரியோ கிரீம் குக்கீகளை கோகோயின் போன்ற தீங்கு விளைவிக்கும்
Oreo Cream Cookies Can be Harmful as Cocaine, Say Scientists

ஒரியோ, உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான கிரீம் பிஸ்கட் ஒன்று, மூளை, சில சட்டவிரோத மருந்துகள் போலவே பாதிக்கும், புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது.

லண்டனில் கனெக்டிகட் கல்லூரி பேராசிரியர் ஜோசப் ஷ்ரோடர் மற்றும் அவரது சக எலிகள் மீதான பரிசோதனைகளை மேற்கொண்டது மற்றும் குக்கீகளை கோகோயின் போன்ற மூளையின் மகிழ்ச்சி மையத்தை உள்ள நியூரான்கள் தூண்டியது என்று கண்டறியப்பட்டது . அவர் கொழுப்பு அல்லது சர்க்கரை அதிக அளவு கொண்ட அனைத்து உணவு மூளை அதே விளைவை என்று கூறினார் .

" எங்கள் ஆய்வு உயர் கொழுப்பு / உயர் சர்க்கரை உணவுகள் மருந்துகள் செய்ய அதே வழியில் மூளை தூண்டுகின்றன கருத்தும் , " நியூரோ ஷ்ரோடர் ஒரு செய்தி வெளியீடு கூறினார் . " சிலர் அவர்கள் இன்னும் மோசமாக உள்ளது என்று உண்மையில் போதிலும் இந்த உணவுகள் எதிர்க்க முடியாது ஏன் அது விளக்க வேண்டும். "

அவர்கள் சோதனைக்கு , ஆராய்ச்சியாளர்கள் பிரமை இரண்டு பக்கங்களிலும் உள்ள பசி எலிகள் Oreos அரிசி கேக்குகள் அளிக்கலாம் . அவர்கள் விலங்குகள் பிரமை சுற்றி பிரமை இரு தங்க அனுமதித்தது. ஆராய்ச்சியாளர்கள் விலங்குகள் ஒவ்வொரு பக்கத்தில் செலவிடும் நேரத்தை பதிவு . பின்னர் , அவர்கள் கோகோயின் , மார்பின் போன்ற மருந்துகள் செலுத்தினால் எலிகள் மற்றொரு குழு அதே பரிசோதனை , மீண்டும் மீண்டும் அவர்களை உப்பு அளிக்கலாம் .

கோகோயின் மற்றும் Oreos பெற்றது அந்த செலுத்தினால் எலிகள் பிரமை மருந்தாக பக்கத்தில் சமமாக நேரம் செலவிட்டார் . மூளையின் மகிழ்ச்சி மையம் கேட்ச் - Fos என்று ஒரு புரதம் வெளிப்பாடு அளவிடும் போது வியப்பு , ஆராய்ச்சியாளர்கள் Oreos கோகோயின் அல்லது மார்பின் மேல் நியூரான்கள் தூண்டப்படலாம் என்று கண்டறியப்பட்டது . " இது எங்கள் நடத்தை முடிவு நன்றாக தொடர்புடையதாக மற்றும் உயர் கொழுப்பு / உயர் சர்க்கரை உணவுகள் போதை என்று கருதுகோள் ஆதரவு வழங்கியிருக்கிறது , " ஷ்ரோடர் கூறினார் .

" நாங்கள் கோகோயின் மற்றும் மார்பின் , உயர் கொழுப்பு / உயர் சர்க்கரை உணவுகள் , ஏனெனில் அவர்கள் அணுக மற்றும் செலவிடும் ஒரு ஆபத்து இன்னும் வழங்கலாம் போன்ற மருந்துகள் எடுத்து குறிப்பிடத்தக்க உடல் நல தொடர்பு கூட , " ஆராய்ச்சியாளர் ஜேமி Honohan சேர்க்கப்பட்டது .

கண்டுபிடிப்புகள் சான் டியாகோ , கலிபோர்னியா , அடுத்த மாதம் நரம்பியல் மாநாட்டில் சங்கம் வழங்கினார்.

குக்கீகளை உண்மையான சுகாதார அம்சம் பெரும்பாலும் பதில் விட்டு ஒரு கேள்வி உள்ளது . ஜூன் மாதம் , ராணி மேரி , லண்டன் பல்கலைக்கழகத்தில் உப்பு மற்றும் உடல்நலம் (கேஷ் ) இல் ஒருமித்த அதிரடி இருந்து ஆராய்ச்சியாளர்கள் குழு இங்கிலாந்து சந்தைகளில் கிடைக்கும் 479 பிஸ்கட் சோதனை மற்றும் பிஸ்கட் பெரும்பான்மை உப்பு ஆபத்தான நிலைகளை கொண்டிருந்தது கண்டறியப்பட்டது , மற்றும் வைக்க முடியும் பின்னர் உயர் இரத்த அழுத்தம், அதிக ஆபத்து இளைய தலைமுறை .

[Continue reading...]

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு: சவரனுக்கு ரூ.104 உயர்வு gold price rs 104 increase

- 0 comments

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு: சவரனுக்கு ரூ.104 உயர்வு gold price rs 104 increase

சென்னை,அக். 23–

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 19–ந் தேதி ஒரு பவுன் 23 ஆயிரத்து 240 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து நேற்று ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 592–க்கு விற்றது.

இன்று மேலும் பவுனுக்கு ரூ.104 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 696 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,962–க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.1,140 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.50 ஆயிரம் ஆகவும், ஒரு கிராம் ரூ.53.50 ஆகவும் உள்ளது.

...

shared via

[Continue reading...]

வடதமிழகத்தில் பலத்த மழை நீடிக்கும்: வானிலை இலாகா அறிவிப்பு weather center announcement continue heavy rains in north Tamil Nadu

- 0 comments

வடதமிழகத்தில் பலத்த மழை நீடிக்கும்: வானிலை இலாகா அறிவிப்பு weather center announcement continue heavy rains in north Tamil Nadu

சென்னை, அக். 23–

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–

வங்ககடலில் நிலைக் கொண்டிருந்த தீவிர காற்றழுத்த பகுதியால் தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் வடக்கு மற்றும் தென் ஆந்திரா பகுதியில் நிலைக் கொண்டிருந்த அந்த காற்றழுத்த பகுதி இன்று மேற்கு நோக்கி நகர்ந்து செல்கிறது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தின் வடமாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழை பெய்யும். மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளத்தில் அதிக பட்சமாக 5 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

...

shared via

[Continue reading...]

தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: ஆந்திராவில் பலத்த மழை andhra heavy rain Low level of extreme low pressure

- 0 comments

தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: ஆந்திராவில் பலத்த மழை andhra heavy rain Low level of extreme low pressure

காளஹஸ்தி, அக்.23–

வங்கக் கடலில் உருவான தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா நோக்கி நகர்ந்துள்ளது. அது மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் ஆந்திரா அருகே மையம் கொண்டிருந்தது. இதனால் ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி, காக்கிநாடா, ராஜமுந்திரி, ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது இதனால் இந்த மாவட்டங்களில் உள்ள ஆயிரக் கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பல இடங்களில் மரங்கள் சாலையில் முறிந்து விழுந்தன. இதனால் போக்கு வரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

பல மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளமாக ஓடியது. அனைத்து குளங்கள் மற்றும் குட்டைகளும் நிரம்பி விட்டன.

...

shared via

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger