Saturday 11 February 2012

மூன்றுஅமைச்சர்களும் ரசித்து பார்த்த பாலான‌ வீடியோ இதுதான் !! (வீடியோ இணைப்பு)

- 0 comments
 
 
கர்நாடக சட்டசபையில் இருந்த போது நேற்றுமுன்தினம் அமைச்சரின் செல்போனுக்கு ஆபாச படங்கள் எம்எம்எஸ்சில் அனுப்பப்பட்டுள்ளன.
 
அதில் உள்ள காட்சிகளை பார்க்க எம்எல்ஏக்கள் உள்பட அனைத்து தரப்பினருமே ஆர்வம் காட்டினர்.
 
இந்நிலையில், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து 3 அமைச்சர்களும் வேறு வழியின்றி தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.
 
பதவி பறிபோக காரணமாக இருந்த ஆபாச காட்சிகள் இப்போது மற்றவர்களுக்கு செல்போன் மூலமாகவும் இணையதளம் மூலமாகவும் பரவி வருகின்றன. இதனால் கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
[Continue reading...]

அரசியலுக்கு வருவதற்காக சினிமாவுக்குள் பந்தா காட்டும் நடிகர்களுக்கு மத்தியில் அஜித்தின் கொள்கை வரவேற்கத்தக்கது!

- 0 comments
 

ரஜினிக்கு அடுத்து, அடிக்கடி அரசியலுக்கு வரப் போகிறார் என கிசுகிசுக்கப்படுபவர்களில் ஒருவர் அஜீத். அதற்கேற்பத்தான் அவரது நடவடிக்கைகளும் கடந்த காலங்களில் இருந்து வந்தன.

அதே நேரம் க்யூவில் நின்று ஓட்டுப்போடுவதோடு தன் அரசியலை நிறுத்திக் கொள்வது அவர் வழக்கம்.

இந்தநிலையில் எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "ஏற்கெனவே தமிழ்நாட்டுல எக்கச்சக்க அரசியல் கட்சிகள் இருக்கு. அடிமட்டத் தொண்டனா வாழ்க்கையை ஆரம்பிச்சு, உண்மையா உழைச்சு, இன்னைக்கு நல்ல அந்தஸ்துல இருக்கிற அரசியல் தலைவர்களை நான் மதிக்கிறேன். அரசியல்னா என்னன்னே தெரியாம, முழுசாப் புரிஞ்சுக்காம வெறும் சினிமா பாப்புலாரிட்டியை வெச்சு அரசியல்ல நான் இறங்க மாட்டேன்.

எனக்கு சினிமா தெரியும். அரசியல் தெரியாது. தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு, தெரியாத அரசியல்ல இறங்கி நானும் குழம்பி, மக்களையும் குழப்ப மாட்டேன். சுருக்கமாச் சொல்லணும்னா, அரசியல்வாதி ஆகிறதுக்கான அருகதை எனக்குக் கொஞ்சமும் கிடையாது! என்று கூறியுள்ளார்
[Continue reading...]

சட்டென்று ‘காரியத்தை’ முடிப்பவரா நீங்கள்? காமத்தில் அது கூடாது!!

- 0 comments
 


காதலில் வேகம் இருக்கலாம். ஆனால் காமத்தில் அது கூடாது என்கிறார்கள் அனுபவஸ்தர்கள். சட்டுப்புட்டென்று 'காரியத்தை' முடித்து விட்டு அக்கடா என்று குறட்டை விடும் ஆண்களை பெண்களுக்கு அறவே பிடிக்காதாம்.
பார்ட்னரின் உணர்வுகளை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் 'வேலை' முடிந்தவுடன் நீட்டிப் படுத்து விடும் ஆண்கள் மீது பெண்களுக்கு கடும் கோபம் வருமாம்.
இதை நாம் சொல்லவில்லை, சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு சொல்கிறது. காதல் கனிந்து உறவைத் தொடங்கும்போது நடத்தப்படும் முன்விளையாட்டு க்கள் ஒரு ஆரம்பம்தான். ஆனால் விளையாட்டு முடிந்த பின்னர்தான் பெண்களின் உணர்வுகள் பொங்கிப் பெருகுமாம்.
அந்தசமயத்தில், அதை பொருட்படுத்தாமல் அல்லது கவனிக்காமல், அரவணைத்து அமைதிப்படுத்தாமல், தூங்கப் போகும்போதுதான் ஆண்கள் மீது பெண்களுக்கு கோபம் கோபமாக வருமாம்.
5600 ஜப்பானிய பெண்களிடம் இதுதொடர்பாக கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர். அதில் 50 சதவீதம் பேர், செக்ஸ் உறவுக்குப் பின்னரும் கூட நீண்ட நேரம் தங்களது பார்ட்னர் தங்களுடன் சேர்ந்திருப்பதை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
44 சதவீதம் பேர் 'முன் விளையாட்டை' அதிகம் விரும்புவதாக கூறியுள்ளனர். அதாவது கிளைமேக்ஸை விட முன் விளையாட்டுதான் தங்களுக்கு அதிகம் பிடித்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
38 சதவீதம் பேர் நீண்ட நேர உடலுறவே தங்களுக்குப் பிடித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
38.8 சதவீதம் பேர் செக்ஸ் விளையாட்டுக்கள், முறைகள் குறித்து தங்களது பார்ட்னர்களுடன் விவாதிப்பதில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம், தங்களது பார்ட்னர்கள், செக்ஸ் விஷயத்தில் 'எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக' இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெண்களிடம் பொதுவாக உள்ளதாம்.
மொத்தத்தில் பெண்களுக்கு முன் விளையாட்டு மட்டுமல்ல, உறவுக்குப் பிந்தைய நெருக்கமும், அன்யோன்யமும், அரவணைப்பும் கூட ரொம்ப முக்கியமாம். அப்போதுதான் அவர்களுக்கு முழுமையான தீனி கிடைத்த உணர்வு ஏற்படுகிறதாம்.
கருத்துக் கணிப்பி்ல கலந்து கொண்டவர்களில் 30 சதவீதம் பேரில், 25.5 சதவீதம் பேர் தங்களது பார்ட்னர்கள், சுய நலம் மிக்கவர்கள் என கருத்து தெரிவித்துள்ளனர். 6.9 சதவீதம் பேர் ரொம்ப சுயநலம் என்கிறார்கள்.
'தி ஜர்னல் ஆப் செக்ஸூவல் மெடிசின்' என்ற இதழில் இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
பெண்களைப் பொருத்தவரை, ஆண்களுக்கு உடலுறவு மட்டுமே முக்கிய நோக்கம். அந்த 'டார்கெட்'டை முடித்தவுடன் 'ரிடயர்ட்' ஆகி விடுகிறார்கள் என்ற பொதுவான கருத்து உள்ளது.
அதேசமயம், உடலுறவை முடித்த பின்னரும் கூட நீண்ட நேரம் தலையைக் கோதியபடியோ அல்லது அரவணைத்தபடியோ இருக்கும் ஆண்களை பெண்களுக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்குமாம்.
இப்படிப்பட்ட உறவுதான் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்றும் பெண்கள் கருதுகிறார்கள். அப்படிச் செய்யும் ஆண்கள் மீது, பெண்களுக்கு காதல் பொங்கி வழியுமாம்.
[Continue reading...]

கடத்தல் முயற்சியிலி​ருந்து தப்பிப்பிழை​த்த சிறுமி

- 0 comments
 

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்திலுள்ள சர்வதேச சந்தை ஒன்றில் இடம்பெற்ற அபார கடத்தல் முயற்சியிலிருந்து ஏழு வயதை உடைய பிரிட்னி பாக்ஸ்டர் எனும் சிறுமி தப்பிப்பிழைத்துக் கொண்டார்.
பொதுமக்கள் அதிகம் காணப்படும் சர்வதேச சந்தையில் சிறுவர் விளையாட்டுப்பொருட்கள் காணப்படும் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் சிறுமியை கடத்த முயன்ற நபர் தனக்கான நேரம் வரும்வரை பத்துநிமிடங்கள் வரை காத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
எனினும் சிறுமி அவனைத்தாக்கிவிட்டு தப்பிவிட்டாள். சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்திற்கு பின் 25 வயதுடைய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இருந்தும் குறித்த இளைஞர் தான் யாரையும் தொடவில்லை எனவும், தான் குற்றவாளி இல்லை எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
[Continue reading...]

தாய்மொழிபால் கொண்ட அன்பால் அமலாபாலின் ஆசை!!

- 0 comments
 

 


தமிழ், தெலுங்கு படங்களில் படு பிஸியாக இருந்தாலும் தனது தாய்மொழியான Amala Paulமலையாளத்தில் சொல்லிக் கொள்ளும்படி ஒரு நல்ல படம் வரவில்லையே என்ற ஏக்கம் அமலாபாலுக்கு எப்போதுமே உண்டு.

ஏனெனில் 'மைனா' ஹிட் ஆவதற்கு முன்பு 'நீலத்தாமர' போன்ற ஒரு சில படங்களில் குட்டி குட்டி கேரக்டர்களில் மட்டுமே நடித்திருந்தார் அமலா.

இப்போது அவரது வாட்டத்தைப் போக்கும் வகையில், பிரபல இயக்குனர் லால்ஜோஷ் இயக்கும் 'டைமண்ட் நெக்லஸ் படத்தில் பகத் ஃபாசிலுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் அமலா. இந்தப் படம் ஒப்பந்தமானதை ஒட்டி தனது கல்லூரி நண்பர்கள் சிலபேரை துபாய் வரை அழைத்துப்போய் பார்ட்டி கொடுத்து அசத்திவிட்டு வந்தாராம் அமலா.

முரண்பாடான இந்த சமூகத்தில், ஒரு இளைஞனுக்கும், மூன்று பெண்களுக்கும் இடையில் நடக்கும் காதல் போராட்டத்தை அலசுகிறதாம் 'டைமண்ட் நெக்லஸ்'..
[Continue reading...]

பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் படுக்கையைப் பகிர்ந்துகொண்டவர்களே அதனால் நீயும் படுக்க வா

- 0 comments
 
 
பொதுவாக பாலிவுட்டில் 'கேஸ்டிங் கவுச்' – casting couch – எனப்படும் பட வாய்ப்புக்காக நடிகைகள் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலருடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளும் சமாச்சாரம் சர்வசாதாரணம்தான்.

என்றாலும், பட வாய்ப்பு கேட்டு அலைந்த ஆண் மாடலான கிருஷ்ணா மோனாலா இப்படி ஒரு சமாச்சாரத்தை
போட்டுடைத்திருப்பதுதான் அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சரியத்தில் பாலிவுட்டில் பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

20 வயதான ஹைதராபாத் ஆண் மாடலான கிருஷ்ணா மோனாலா, அமெரிக்காவில் வளர்ந்தவர்.மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார். .

மாடலிங் மற்றும் பட வாய்ப்புக்காக 88 கிலோ ஆக இருந்த தனது உடல் எடையை,தினமும் மூன்று மணி நேர கடுமையான உடற்பயிற்சி மூலம் முறைத்து கட்டுமஸ்தான தோற்றமுடையவராக மாற்றினார்.

எதிர்பார்த்த தோற்ற பொலிவு வந்த நிலையில் மாடலிங் வாய்ப்பு வந்த அதே நேரத்தில், பாலிவுட் தயாரிப்பாளர்களிடமிருந்து படத்தில் நடிக்க அழைப்பு வந்தவுடன் உற்சாகமாக அவர்களை அணுகினார் கிருஷ்ணா.

ஆனால் அந்த உற்சாகம், தயாரிப்பாளர்களை சந்தித்ததுமே திகிலாக மாறிப்போனதாகவும், பாலிவுட்டின் திரை மறைவு சம்பவத்தைக் கண்டு அதிர்ந்துபோனதாகவும் பேட்டி ஒன்றில் புலம்பியுள்ளார் கிருஷ்ணா!


அப்படி என்ன நடந்தது?

அழைத்த தயாரிப்பாளர்கள் அனைவரும் அவர்களுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ளச் சொன்னதாகவும், அதற்கு அவர் மறுக்கவே, பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் அ அது ஞக்கு சம்மதித்தவர்களே என்று தயாரிப்பாளர்கள் சொல்லியதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதெல்லாம் கூட மேட்டரில்லை. 'அது' க்கு அழைத்த பாலிவுட் தயாரிப்பாளர்கள் ஆணா? பெண்ணா? என்ற ரகசியத்தை மட்டும் சொல்லமாட்டேங்றார் கிருஷ்ணா மோனாலா.

ஆனால் அப்படி அழைத்தவர் ஆண் தயாரிப்பாளர் என்றால் அது நிச்சயம் ஓரின சேர்க்கை சமாசாரம்தான்!

அதே சமயம் பெண் தயாரிப்பாளர் அழைத்தால் அது நிச்சயம் 'ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல!' என்று சமத்துவமும், சம உரிமையும் (அட கஷ்ட காலமே! போயும்ஸ போயும் இந்த மேட்டரிலா?! ) உலாவும் இடம் பாலிவுட் என்று ஆறுதல்(?!) பட்டுக்கொள்ள வேண்டியதுதான்!
[Continue reading...]

விரைவில் மீண்டு வருவேன் - யுவராஜ்

- 0 comments
 

நான் விரைவில் குணமடைய வேண்டுமென நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பிரார்த்திக்கின்றனர். கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. ஆயிரக்கணக்கில் வாழ்த்துக்கள் அனுப்புகின்றனர்.

இவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. கேன்சரில் இருந்து மீண்டு, இந்திய அணிக்காக விளையாட காத்திருக்கிறேன்,என, யுவராஜ் தெரிவித்துள்ளார்.
 
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ். இவரது நுரையீரலுக்கு இடையில் "கோல்ப் பந்து அளவுக்கு சிறிய கேன்சர் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் கேன்சர் ஆய்வு மையத்தில் "கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார்.
 
யுவராஜுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக, அவரது தந்தை யோகராஜ் ஆதங்கம் தெரிவித்திருந்தார். இது குறித்து தனது "டுöவிட்டர் இணையதளத்தில் யுவராஜ் வெளியிட்ட செய்தி:
சிகிச்சை தாமதமானதற்கு எனது குரு சந்த் அஜித் சிங் ஹன்சாலிவாலா, பி.சி.சி.ஐ., மீது சிலர் பழி சுமத்துகின்றனர்.
 
இது மிகவும் தவறு. பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன், அதன் நிர்வாகிகள் எனக்கு மிகப் பெரும் ஆதரவு அளிக்கின்றனர். இவர்களால் தான் சிறந்த சிகிச்சை பெற்று வருகிறேன். சிகிச்சை தாமதமானதற்கு நான் தான் காரணம்.
 
எனது "பிசியோதெரபிஸ்ட்ஜதின் சவுத்ரி மீதும் சிலர் புகார் கூறுகின்றனர். இவர் மீது தவறு எதுவும் இல்லை. எனக்கு உதவி தான் செய்தார். நான் தான் மாற்று மருத்துவ முறையில் சில காலம் சிகிச்சை எடுத்தேன்.
 
தற்போது விரைவாக குணமடைந்து வருகிறேன். இந்த கடினமான காலக்கட்டத்தில் மிகவும் துணிச்சலாக போராடி, வலிமையான வீரராக மீண்டு வருவேன். நாடு முழுவதும் <உள்ள ரசிகர்கள் எனக்காக பிரார்த்திக்கின்றனர்.
 
கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. ஆயிரக்கணக்கில் வாழ்த்துக்கள் அனுப்புகின்றனர். இவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.
 
கேன்சர் நோயில் இருந்து மீண்ட அமெரிக்க சைக்கிள் பந்தய வீரர் லான்ஸ் ஆம்ஸ்டிராங்கை விரைவில் சந்தித்து ஊக்கம் பெற உள்ளேன். மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேகன், காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, "மீடியாவுக்கும் எனது நன்றி.
 
விரைவில் இந்திய கிரிக்கெட் அணியின் உடை, தொப்பி அணிந்து நாட்டுக்காக மீண்டும் விளையாட காத்திருக்கிறேன். ஜெய்ஹிந்த்.
 
இவ்வாறு யுவராஜ் தெரிவித்துள்ளார்.
[Continue reading...]

சச்சின் இல்லாமல் சாதிக்க முடியுமா?

- 0 comments
 

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் வெற்றியில் சச்சின் பங்கு அதிகம். இவருக்கு, முத்தரப்பு தொடரின் அடுத்த போட்டியில் ஓய்வு கொடுத்தால், வெற்றி வசப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
ஆஸ்திரேலியாவில் நடக்கும் முத்தரப்பு தொடரில், ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு தருவதில், இந்திய கேப்டன் தோனி உறுதியாக உள்ளார். இவருக்காக "டாப்-ஆர்டரில்' சுழற்சி முறையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
 
இதன்படி முதலிரண்டு போட்டிகளில் சேவக், காம்பிருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை நடக்க உள்ள போட்டியில் சச்சினுக்கு ஓய்வு அளிக்கப்படும் என தெரிகிறது.
 
புள்ளிவிவரப்படி பார்த்தால், கடந்த 22 ஆண்டுகளில் இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 ஒருநாள் போட்டிகளில் தான் வென்றுள்ளது. இதில் சச்சின் பங்கு தான் அதிகம்.
 
 
முதல் வெற்றி:
 
1991-92ல் பெர்த் போட்டியில் இந்திய அணி, 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது. இதில் சச்சின் தான் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் (36 ரன்கள், 65 பந்து). அடுத்து 12 ஆண்டுகளாக 11 போட்டிகளில் தொடர் தோல்வி. 2003-04ல் 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இப்போட்டியில் சச்சின் 86 ரன்கள் எடுத்தார்.
 
 
பைனல் அசத்தல்:
 
பின் வந்த மூன்று வெற்றிகளும் கடந்த 2007-08 தொடரில் கிடைத்தது. மெல்போர்னில் நடந்த லீக் போட்டியில் 159 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு, 54 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தார் சச்சின்.
 
பின் நடந்த முதல் பைனலில் ஆஸ்திரேலியாவின் 240 ரன்கள் என்ற இலக்கை அடைய, சச்சின் சதம் அடித்து (117 ரன்கள்) உதவினார். தொடர்ந்து இரண்டாவது பைனலில், 91 ரன்கள் எடுத்து அசத்தினார்.
 
 
சேவக் மோசம்:
 
சேவக்கை எடுத்துக் கொண்டால், மூன்று தொடர்களில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 10 போட்டிகளில், 180 ரன்கள் மட்டுமே எடுத்தார். காம்பிர் பரவாயில்லை ரகத்தில் உள்ளார். இவர் கடந்த தொடரில் சிட்னியில் அடித்த சதம் (113) உட்பட, 7 போட்டியில் 230 ரன்கள் எடுத்துள்ளார்.
 
விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, ரெய்னா, மனோஜ் திவாரி ஆகியோர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 10 போட்டிகளில் கூட பங்கேற்றதில்லை. கடந்த 2008 தொடரின் முதல் பைனலில் ரோகித் சர்மா, அரைசதம் அடித்தது தான் அதிகம்.
 
இதன் பின் இந்த அணிக்கு எதிரான 7 போட்டிகளில் மொத்தமே 37 ரன்கள் தான் எடுத்தார். எனவே, சுழற்சி முறை வீரர்கள் தேர்வு பற்றி தோனி நன்கு சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.

 
எது முக்கியம்
 
வரும் 2015ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இதனை மனதில் கொண்டு, இப்போதே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால், இங்குள்ள ஆடுகளத்தை பற்றி நன்கு அறிந்து கொள்வர்.
 
சுழற்சி முறையில் சீனியர்களுக்கு ஓய்வு அளிக்கும் போது, சச்சினுக்கு சலுகை காட்ட தேவையில்லை. இவர் 100வது சதம் அடிக்க வேண்டும் என்பதைவிட அணியின் நலன் தான் மிகவும் முக்கியம்.
[Continue reading...]

கடலுக்கு அடியில் விசித்திர உலகம்: தமிழில் வரும் ஹாலிவுட் படம்

- 0 comments
 


 

ஹாலிவுட்டில் 2008-ல் வெளியாகி வெற்றி பெற்ற ஜர்னி டூ சென்டர் ஆப் இயர் படத்தின் இரண்டாம் பாகமான ஜெர்னி-2 படம் தமிழில் ருத்ரபூமி என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது.

பதினேழு வயது சிறுவன் ஜான் ஆண்டர்சன் உலகில் பெரிய மர்ம தீவு இருப்பதுபோல் உணர்கிறான். அதை காண தனது சித்தப்பா ராக்கை துணைக்கு அழைத்துக் கொண்டு விமானத்தில் செல்கிறான். வழியில் விமானம் வெடித்து சிதற தேடிச்சென்ற மர்மத் தீவு அருகே விழுகின்றனர்.

அங்கு பெரிய ருத்ரபூமி தெரிகிறது. இயற்கைக்கு மாறான விலங்குகள், எரிமலைகள், தங்க மலைகள், கொட்டும் தங்க மழை, அசுரப் பறவைகள், ராட்சத தேனீக்களை கண்டு மிரள்கின்றனர். அவற்றிடம் இருந்து தப்பி கடலுக்கடியில் உள்ள மர்ம தீவில் வசிக்கும் ஜான் ஆண்டர்சன் தாத்தாவை சந்திக்கின்றனர்.

அந்த தாத்தா விசித்திர உலகம் நான்கு நாளில் ருத்ர பூமியாக மாறி உலகை அழித்து விடும் என்ற அதிர்ச்சி தகவலை சொல்கிறார். அந்த ஆபத்தில் இருந்து மூவரும் எப்படி தப்புகிறார்கள் என்பது கிளைமாக்ஸ்.

ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தை ராம நாராயணனின் அழகர் பிலிம்சும், வார்னர் பிரதர்சும் இணைந்து வருகிற 10-ந் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்கின்றனர்.
[Continue reading...]

15 Feb ஜூவி, ரிப்போர்ட்டர், நக்கீரன் டவுன்லோட் செய்ய

- 0 comments
 
 

இந்த வார ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன் aஆகியவற்றை விளம்பர பிரச்சனை இல்லாமல் வேகமாக டவுன்லோட் செய்ய கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.


15-2-2012 ஜூனியர் விகடன்

12-2-2012 குமுதம் ரிப்போர்ட்டர்

11-2-2012 நக்கீரன்

எனது தளத்தில் வெளியிடப்படும் இதழ்கள் அனைத்தும் என்னால் நேரடியாக பதிவேற்ற பட்டவை கிடையாது. நீங்கள் தேடினாலும் கிடைக்கக்கூடியது தான். இதன் மூலமாக எந்தவிதமான வருவாயும் நான் பெறவில்லை. வெளிநாட்டில் வாழும் நண்பர்களுக்காக இணையத்தில் கிடைப்பவற்றை எனது தளத்தில் பதிவிடுகிறேன். சம்பந்தபட்ட இதழ்கள் எதிர்ப்பு தெரிவித்தால் எந்த நேரமும் நீக்கியும் விடுவேன். மறக்காமல் கருத்துக்களை பதிவு செய்யவும். அன்புடன் தாரிக்
 


[Continue reading...]

தோனி நாட் அவுட் - மேட்ச் டிரா ...

- 0 comments
 
 
 
தரமான படங்களை தயாரித்து வந்த பிரகாஷ்ராஜ் முதன் முதலாக இயக்கிருக்கும் படம் தோனி ... படத்திற்கு இசைஞானியின் இசை மேலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது ... இன்றைய சூழலில் படிப்பு பிள்ளைகளுக்கு வரமாக இல்லாமல் சாபமாக மாறிவிட்டதே என ஒரு மிடில் க்ளாஸ் தகப்பன் படும் ஆதங்கமே " தோனி " ...
 
சுப்ரமணியம் ( பிரகாஷ்ராஜ் ) பத்திர பதிவாளர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருந்து கொண்டே ஊறுகாயும் விற்றுக்கொண்டு தாயில்லாத தன் இரண்டு பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு வளர்க்கிறார் ... மகள் காவேரி ( ஸ்ரிதேஜா ) நன்றாக படித்தாலும் மகன் கார்த்திக் ( ஆகாஷ் பூரி ) படிப்பில் கவனம் செலுத்தாமல் கிரிக்கெட் மட்டுமே ஆடிக்கொண்டிருக்கிறான் ... மகனின் மார்க்குகளை காரணம் காட்டி பள்ளி நிர்வாகம் அவனை பள்ளியை விட்டு நீக்க சொல்லவே மகனிடம் கிரிக்கெட்டை தூர போட்டு விட்டு படிக்க சொல்கிறார் பிரகாஷ்ராஜ் ...
 
ஒரு கட்டத்தில் படிப்பில் கவனம் செலுத்தாத மகனை தகப்பன் கோபத்தில் அடிக்க அவன் தலையில் அடிபட்டு கோமா ஸ்டேஜுக்கு சென்று விடுகிறான். இதன் பிறகு தன் தவறை உணரும் பிரகாஷ்ராஜ் மகனை கோமாவில் இருந்து மீட்டெடுப்பதோடு , கல்வி என்ற பெயரில் மாணவர்கள் மேல் அநியாயத்திற்கு சுமத்தப்படும் சுமையை வெளிச்சம் போட்டு காட்டுவதே கதை ...
 
தானே இயக்குனராக இருப்பதால் தன்னிடம் இருந்து அபரிபிதமான நடிப்பை பிரகாஷ்ராஜ் வாங்கியிக்கும் படம் தோனி ... ராதிகா ஆப்தேவிடம் தன் தவறை உணர்ந்து வருந்தும் போதும் , மகனின் படிப்பிற்காக பள்ளி நிர்வாகத்திடம் கெஞ்சும் போதும் , கூனி குறுகி கடன் வாங்கும் போதும் , மகனை அடித்து விட்டோமே என அழும் போதும் ஒரு மிடில் கிளாஸ் தகப்பனாக நடிக்காமல் வாழ்ந்திருக்கிறார் ... குறிப்பாக நீயா நானா நிகழ்ச்சியில் இவர் அழுது கொண்டே பேசும் காட்சி உருக வைக்கிறது ... சிறந்த நடிகருக்கான மற்றொரு விருது கிடைக்குமென நம்பலாம் ...
 
மகனாக ஆகாஷும் , மகளாக ஸ்ரிதேஜாவும் நல்ல பொருத்தம் ... அப்பாவுடன் வாக்குவாதம் செய்யும் காட்சியில் ஆகாசின் நடிப்பு நன்று ... காலனியில் குடியிருக்கும் நளினியாக வரும் ராதிகா ஆப்தே அழகாக இருப்பதோடு நன்றாகவும் நடித்திருக்கிறார் ... அவர் கால் கேர்ளாக மாறியதன் பின்னணியை எளிமையாக விளக்கிய விதமும் , அந்த காட்சியில் இவரின் நடிப்பும் அருமை ...
 
நாசர் , சாம்ஸ் , தலைவாசல் விஜய் , பிரம்மானந்தம் இவர்களின் நடிப்பு இயல்பாக இருந்தாலும் கந்துவட்டி கனி பாயாக நடித்திருக்கும் முரளி ஷர்மா கவனிக்க வைக்கிறார் ... இவருக்கு சமுத்திரக்கனியின் பின்னணி குரலும் பொருத்தமாக இருக்கிறது ... படத்தின் வசனங்கள் நல்ல சார்ப் ... படிப்பை மட்டுமே வைத்து ஒருவனை மதிப்பிடும் அவலத்தை சாடுவதோடு மட்டுமல்லாமல் , விலைவாசி ஏறிக்கொண்டேயிருக்கிறது ஆனால் சம்பளம் ஏறவில்லையே என்ற நடுத்தர வர்க்கத்தினரின் ஆதங்கத்தையும் வசனங்களில் பதிவு செய்திருக்கிறார் த.சே.ஞானவேல் ...
 

இசைஞானி இசையில் " வாங்கும் பணத்துக்கும் " , " தாவி தாவி போகும் " பாடல்களும் அதற்கு நா.முத்துகுமாரின் வரிகளும் அருமை ... படம் முழுவதும் வசனங்களால் நிரம்பியிருந்தாலும் தேவைப்படும் இடங்களில் தன் இசையால் முத்திரை பதித்திருக்கிறார் இசைஞானி ... குறிப்பாக ஆஸ்பத்திரியிலிருந்து மகனை வீட்டுக்கு அழைத்து வரும் காட்சியிலும் , ஆபரேஷன் முடிந்து ஆகாஷ் கண் விழிக்கும் கட்சியிலும் பின்னணி இசை அருமை ...
 
பள்ளியிலிருந்து மகனின் பொருட்களை எடுக்கும் போது அவன் வாங்கிய பதக்கங்களை பார்த்து உருகும் காட்சியிலும் , ராதிகா ஆப்தே - பிரகாஷ் ராஜ் சமபந்தப்பட்ட காட்சிகளிலும் , தோனி , சச்சின் போன்றவர்கள் கிரிக்கெட் ஆட தடை செய்ய வேண்டும் என மற்ற பிளாட் காரர்களிடம் புலம்பும் இடத்திலும் நல்ல நடிகர் என்பதையும் தாண்டி இயக்குனர் பிரகாஷ் ராஜ் ஜொலிக்கிறார் ...
 
படத்தின் முக்கிய ஆதாரமே ஆகாஷ் கிரிக்கெட் ஆடுவதில் திறமைசாலி என்பதே , ஆனால் அவரின் திறமையை கோச் , ஸ்கூல் ப்யூன் என்று ஒவ்வொருவராக பாராட்டிக்கொண்டிருக்கிறார்களே தவிர அவர் கிரிக்கெட் ஆடுவதாக ஒரு சீன் கூட இல்லை ... அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் ஆடும் ஒரே சீனில் கூட ஒரு பயிற்சி பெற்ற கிரிக்கெட் ஆட்டக்காரனின் உடல்மொழி ஆகாஷிடம் சுத்தமாக இல்லாதது படத்தின் பெரிய குறை ...
 
 
தன் பிள்ளைகளின் திறமையையும் ,ஆசையையும் கருத்தில் கொள்ளாமல் பள்ளிகளின் முன் தவம் கிடக்கும் பெற்றோர்களின் போக்கை பற்றி கொஞ்சம் கூட சொல்லாமல் எல்லாவற்றிற்கும் ஆசிரியர்களும் , பள்ளிகளும் மட்டுமே காரணம் என்பது போல அவர்களை மட்டுமே சாடியிருப்பது ஒருதலைப்பட்சமாக இருக்கிறது ... பள்ளிகள் வியாபாரத்தளங்களாக மாறியிருப்பினும் , குருவாக வணங்க வேண்டிய ஆசிரியரையே கொலை செய்யும் அளவிற்கு இன்றைய மாணவர் சமுதாயம் மாறிப்போனதற்கு படிப்பு பற்றிய பிரஷர் மட்டும் தான் காரணமா ? என்பதை சமூக ரீதியாக ஆராய வேண்டிய கட்டாயம் நம் அனைவருக்கும் இருப்பதையும் யாரும் மறுக்க முடியாது ...
 
இது போன்ற சில குறைகள் , மராத்திய படத்தின் ரீமேக் என்பதோடு ஏற்கனவே த்ரீ இடியட்சில் பார்த்த கரு என்ற போதிலும் பிரகாஷ்ராஜ் ஒரு இயக்குனராக தகப்பனின் பார்வையிலிருந்து இதை அழுத்தமாக சொல்லியிருக்கும் விதத்தை சற்றே நாடகத்தனமாக இருந்தாலும் பாராட்டலாம் ...
 
ஸ்கோர் கார்ட் - 42
[Continue reading...]

டுவிட்டரில் வம்பிலுக்கும் சிம்பு - தனுஷ்!

- 0 comments
 
 
தனுஷும் சிம்புவும் வெளியில் சிரித்துப் பேசி கட்டிப் பிடித்து போஸ் கொடுத்தாலும், உள்ளுக்குள் அப்படி இல்லை என்பது கோலிவுட் அறிந்த சமாச்சாரம்.

கொஞ்ச நாள் அடங்கியிருந்த இவர்களின் பகை, மீண்டும் புகைய ஆரம்பித்துள்ளது, ட்விட்டர் வழியாக.

சமீபத்தில் சச்சின் டெண்டுல்கருக்காக ஒரு பாடலை

உருவாக்கியிருந்தார் தனுஷ். இந்தப் பாடல் யு ட்யூபில் வெளியானது. ஆனால் சில மணி நேரங்களில் அந்தப் பாடலை யுட்யூப் நீக்கிவிட்டது. அதற்குள் 4.5 லட்சம் பேர் அந்த வீடியோவைப் பார்த்துவிட்டிருந்தனர்.

உடனே தனுஷ், "அடுத்தவர் துன்பத்தைப் பார்த்து சிலர் சிரித்து மகிழ்கிறார்கள். மனித இனம் அன்பு செலுத்த படைக்கப்பட்டது என்ற உண்மை புரியாத அவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன்," என்று ட்வீட் செய்திருந்தார்.

உடனே சிம்பு தனது ட்விட்டரில், "காப்பி அடிக்கிறதுல சீனாவை விட பயங்கரமா இருக்காங்களே," என்று ட்வீட் பண்ணியிருந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் தனுஷ்: "பிரதர், அந்தப் பாட்டை சச்சினுக்காக இலவசமாதான் செய்து கொடுத்தேன். பாடல் உருவாக்கத்துக்கான செலவு மட்டும் பூஸ்ட் நிறுவனம் கொடுத்திருக்கு," என்று கூறியிருந்தார்.

உடனே பதிலுக்கு சிம்பு, "உலகில் யாரும் யாருக்கும் எதிரியில்லை. வெற்றிதான் ஒருவரை உலகுக்கு காட்டுகிறது. தோல்வியோ உலகை உனக்குக் காட்டுகிறது," என தத்துவமழை பொழிந்திருந்தார்.

"போங்கப்பா... பொழப்பை சரியா பாருங்க... இல்லன்னா உங்களை ஒருத்தனும் பார்க்க மாட்டான்" - இது குறுக்கில் புகுந்த ஒரு ரசிகரின் கமெண்ட்!
[Continue reading...]

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிப்பதில் பெருமை! - சரத்குமார்

- 0 comments
 
 
 
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையானில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சரத் குமார்.
 
கோச்சடையானில் தனக்கு அடுத்த முக்கியத்துவம் மிக்க வேடத்தை சரத்துக்கு கொடுத்திருக்கிறார்.
 
நேற்று நடந்த பிரஸ் மீட்டில் இதுபற்றி சரத்குமார் கூறுகையில், "சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையானில் நான் நடிப்பது பெருமையாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே ரஜினி என்னிடம் ஒரு கதை பற்றி விவாதித்தார். மிக அருமையான கதை அது. ஆனால் அந்தப் படம் எடுக்கப்படவில்லை. ஆனால் கதை இன்னும் என் மனசில் அப்படியே இருக்கிறது.
 
இப்போது மீண்டும் கோச்சடையான் மூலம் அவருடன் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அவர் இந்த நாட்டின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார். அவருடன் நடிப்பது மகிழ்ச்சியான விஷயம்," என்றார்.



[Continue reading...]

11 மணிநேர மின்வெட்டு: கோவையில் பல்லாயிரம்பேர் ஆர்ப்பாட்டம் - போலீஸ் தடியடி!

- 0 comments
 
 
 
கோவையில் 8 மணி நேர மின்வெட்டைக் கண்டித்து 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டன. 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
 
11 மணிநேர மின்வெட்டு
 
கோவையில் தினசரி குறைந்த பட்சம் 8 மணி நேரம் முதல், அதிக பட்சமாக 11 மணிநேரம் வரை மின் தடைநீடிப்பதால் தொழில் துறையினர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த நெருக்கடியில் உள்ளனர். மின் தடையைக் கண்டித்து கோவையில் உள்ள 36 தொழில் அமைப்பினர் கூட்டாக இணைந்து வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து நேற்று கோவையில் உள்ள சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
 
இதனால் கோவையில் உள்ள வேலாண்டிபாளையம், ஆவாரம்பாளையம் பீளமேடு, சிங்காநல்லூர், கணபதி, சின்ன வேடம்பட்டி, சிகோ, அரசூர், மலுமிச்சம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் என்ஜினீயரிங், குறுந்தொழில் கூடங்கள், வார்ப்பட தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. சில தொழிற்சாலைகளில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு இருந்தது.
 
இது தவிர கோவையில் உள்ள காட்டூர், பழையூர், இடையர்பாளையம், ஒண்டிப்புதூர், உள்ளிட்ட பல பகுதிகளில் மோட்டார் பம்பு, உதிரிபாகங்கள், என்ஜினீயரிங் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்டு கிடந்தன.
 
ஆர்ப்பாட்டம்- கஞ்சித்தொட்டி
 
இந்த நிலையில் அறிவிக்கப்பட்டபடி நேற்று காலை 10.30 மணிக்கு கோவை தமிழ்நாடு ஓட்டல் முன்பு தொழில் அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கொடிசியா தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். தொழில் அமைப்பு பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்தபடி, பலர் கைகளில் கறுப்பு கொடிகள், சிம்னி விளக்குகளை பிடித்தபடி கலந்து கொண்டனர்.
 
அப்போது அவர்கள் தடையில்லாமல் மின்சாரம் வழங்கு, பாரபட்சம் இல்லாமல் மின்சாரம் வழங்கு, உடலுக்கு தேவை உயிரோட்டம், தொழிலுக்கு தேவை மின்னூட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் கஞ்சி தொட்டிகளை திறந்து, தொழிலாளர்களுக்கு இலவச கஞ்சி வழங்கினர்.
 
ரூ.250 கோடி உற்பத்தி இழப்பு
 
இது குறித்து போராட்டக்குழுவினர் சிலர் கூறுகையில், கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கொடிசியா, சிமா, இந்திய தொழில் வர்த்தக சபை, தமிழ்நாடு பம்பு உற்பத்தியாளர் சங்கம், சிஸ்பா, காட்மா, டேக்ட் ஆகிய குறுந்தொழில் சங்கங்கள், கோவை சிறுமின் விசை பம்பு உற்பத்தியாளர் சங்கம், கோவை மாவட்ட வார்ப்பட சங்கம், சிறு வார்ப்பட ஆலை உரிமையாளர் சங்கம், கோப்மா, உள்ளிட்ட 36 தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உரிமையாளர்கள், தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கில் பங்கேற்றுள்ளனர்.
 
கோவையில் ஒரு நாள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு, 3 லட்சம் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் ரூ.250 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது என்றனர்.
 
மறியல்- தடியடி
 
சில அமைப்பை சேர்ந்த தொழிலாளர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் இருந்து கிளம்பி, கோவை டவுன் பஸ் நிலையம் எதிரே உள்ள சிக்னல் பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிடவில்லை.
 
ஆவேசத்துடன் அவர்கள் கோஷம் போட்டவாறு அங்கிருந்து செல்லாமல் அடம் பிடித்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். இதனால் மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் நாலா புறமும் கலைந்து ஓடினர்.
 
வாகனங்களில் வந்த பலரும் பீதியடைந்து ஓடினார்கள். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு பெண், மற்றும் ஓட்டல் தொழிலாளியான முருகன் ஆகியோர் கூட்டத்தில் சிக்கிக் கொண்டனர். இதில் காயம் அடைந்த முருகனை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லேசான காயத்துடன் அந்த பெண், அங்கிருந்து ஆட்டோவில் கிளம்பினார்.
 
இதைத் தொடர்ந்து போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பிய சில தொழிலாளர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.



[Continue reading...]

தனுஷின் சச்சின் பாடல் YOUTUBE-இல் இருந்து நீக்கப்பட்டது

- 0 comments
 
 
 
தனுஷ், மனைவி ஐஸ்வர்யாவுடன் நேற்று முன்தினம் ( பிப்ரவரி 08 ) திருப்பதிக்கு சென்றார். அவர்களுடன் இசையமைப்பாளர் அனிருத் சென்று இருந்தார்.
 
தனுஷ் தனது தலைமுடியை காணிக்கையாக செலுத்திய பின்னர், முக்கிய பிரமுகர்களுக்கான தரிசன நேரத்தில் தரிசனம் செய்தார்கள்.
 
தரிசனம் முடிந்து கோவிலை விட்டு வெளியே வந்த நடிகர் தனுஷ் நிருபர்களிடம் " எனது மாமனார் நடிகர் ரஜினிகாந்த், ஏழுமலையான் அருளால் பூரண நலத்துடன் இருக்கிறார்.
 
விரைவில் திரைக்கு வர இருக்கும் '3' படத்திற்காக நான் சொந்தக் குரலில் பாடிய 'WHY THIS KOLAVERI' பாடல் தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் கூட புகழ் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாகிஸ்தானில் இந்த பாடலுக்கு மிகுந்த வரவேற்பு இருப்பதாக அங்குள்ள எனது ரசிகர்கள் தெரிவித்தனர். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பற்றி பாடியுள்ள பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன்.
 
எனவே, ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் நான் தொடர்ந்து சினிமாவில் சொந்த குரலில் பாடுவேன். " என்று தெரிவித்து இருக்கிறார்.
 
இந்நிலையில் தனுஷ் உருவாக்கிய சச்சின் பாடலை YOUTUBE இணையத்தில் இருந்து நீக்கி விட்டார்கள். இதற்கு தனுஷ் தனது டிவிட்டர் இணையத்தில் " யாரோர் சச்சின் பாடலை இணையத்திலிருந்து நீக்கச் செய்திருக்கிறார்கள். ஒரு வாரமாக இரவு பகல் பாராமல் அப்பாடலுக்காக உழைத்திருக்கிறோம். அதை நீக்கிக் செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. சீக்கிரமே மீண்டும் இணையத்தில் அப்பாடலை வெளியிட ஏற்பாடுகள் செய்து வருகிறோம். சட்டப்படி இதனை எதிர்கொள்வோம்." என்று தெரிவித்தார்.
 
தற்போது சச்சின் பாடல் மீண்டும் YOUTUBE இணையத்தில் மீண்டும் இணைக்கப்பட்டுவிட்டது.



[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger