Tuesday 30 August 2011

தூக்கு தண்டனையை ���த்து செய்ய வேண்��ி டில்லிக்கு தந்திகள் பறக்கட்டு��் - கவிஞர் வைரமுத���து

- 0 comments


தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டி டில்லிக்கு தந்திகள் பறக்கட்டும் - கவிஞர் வைரமுத்து "முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி டெல்லிக்கு தந்திகள் பறக்கட்டும்" என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத�து இருக்கிறார்.

இது குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-


"இந்திய மேலும்படிக்க

http://tamil-sex-video.blogspot.com




  • http://tamil-sex-video.blogspot.com


  • [Continue reading...]

    நேபாளப் பிரதமரா�� பதவி ஏற்றார் பா��ுராம் பட்டராய்

    - 0 comments


    நேபாள நாட்டின் புதிய பிரதமராக பாபுராம் பட்டராய் (57) பதவி ஏற்றார்.

    நேபாள குடியரசுத் தலைவர் மாளிகையில் திங்கள்கிழமை பிற்பகலில் பதவி ஏற்பு விழா நடந்தது. பாபுராம் பட்டராய்க்கு குடியரசுத் தலைவர் ராம்பரன் யாதவ் பதவிப்பிரமாணம் மேலும்படிக்க

    http://tamil-sex-video.blogspot.com




  • http://tamil-sex-video.blogspot.com


  • [Continue reading...]

    3 பேரை தூக்கில் ப��ட 8 வாரம் தடை: நீத��மன்றம்

    - 0 comments


    3 பேரை தூக்கில் போட 8 வாரம் தடை நீதிமன்றம்ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் கடந்த 11-ந் தேதி நிராகரித்தார். இதையடுத்து அவர்கள் மூன்று பேருக்கும் வேலூர் ஜெயிலில் செப்டம்பர் மேலும்படிக்க

    http://tamil-sex-video.blogspot.com




  • http://tamil-sex-video.blogspot.com


  • [Continue reading...]

    3 பேரின் தூக்கு த��்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்�� சட்டசபையில் தீர்மானம்

    - 0 comments


    3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க சட்டசபையில் தீர்மானம்சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா இன்று பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்து ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று ஜனாதிபதியை வலியுறுத்தி தீர்மா��த்தை கொண்டு வந்தார்.

    அப்போது அவர், தமிழக மேலும்படிக்க

    http://tamil-sex-video.blogspot.com




  • http://tamil-sex-video.blogspot.com


  • [Continue reading...]

    தமிழக சட்டசபையி��் தீர்மானம் யாரையும் கட்டுப்படு��்தாது: மத்திய சட��ட அமைச்சர்

    - 0 comments


    தமிழக சட்டசபையின் தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது மத்திய சட்ட அமைச்சர்ராஜிவ்காந்தி கொலையாளிகளுக்கு மன்னிப்பு கேட்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தா��்.

    முன்னதாக ராஜிவ் கொலையாளிகள் 3 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ஆயுள் மேலும்படிக்க

    http://tamil-sex-video.blogspot.com




  • http://tamil-sex-video.blogspot.com


  • [Continue reading...]

    செ‌ன்செ‌க்‌ஸ் 260.42 பு‌ள்‌ளிக‌ள் உயர்வு

    - 0 comments


    செ‌ன்செ‌க்‌ஸ் 260.42 பு‌ள்‌ளிக‌ள் உயர்வுமும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 16,585.10 புள்ளிகளில் தொடங்கியது. செ‌ன்செ‌க்‌ஸ் 260.42 பு‌ள்‌ளிக‌ள் உயர்ந்து 16,676.75 புள்ளிகளில் முடிவடைந்தது

    தேசிய பங்குச்சந்தை வர்த்தகத்தில் குறியீட்டெண் நிஃப்டி 81.40 புள்ளிகள் மேலும்படிக்க

    http://tamil-sex-video.blogspot.com




  • http://tamil-sex-video.blogspot.com


  • [Continue reading...]

    நீயும் நானும்

    - 0 comments
    [Continue reading...]

    மாநில அரசின் கோர���க்கையை ஏற்று தூ��்கு ரத்து செய்யப்பட்ட முன் உதாரண���் உள்ளது: முதல்வ���்

    - 0 comments


    முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது.

    இது குறித்து முதல்வர் ஜெயலலிதா, ''தூக்கு என்பது தமிழக மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே 3 பேரின் தூக்கை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த தீர்மானத்தை குடியரசுத்தலைவர் ஏற்றால் 3 பேரின் தூக்குத்தண்டனை ரத்தாகலாம். மாநில அரசின் கோரிக்கையை ஏற்று தூக்கு ரத்து செய்யப்பட்ட முன் உதாரணம் உள்ளது'' என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவுக்கு பேரறிவாளன் தாயார் நன்றி தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும், மரண தண்டனையை எதிர்த்து தொடர்ந்து போராடப்போவதாகவும் அறிவித்துள்ளார். தமக்கு ஏற்பட்ட வேதனை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்றும் அற்புதம்மாள் கூறியுள்ளார்.

    http://cmk-mobilesms.blogspot.com




  • http://cmk-mobilesms.blogspot.com


  • [Continue reading...]

    தூக்குத்தண்டனைக்கு எதிர்ப்பான ஐ.நா தீர்மானத்தில�� இந்தியா கையெழுத்திடாமல் உள்ளது!: எஸ்.கே.ஆர்.கிலான��

    - 0 comments


    முருகன், சாந்தன், பேரறிவாளனை சந்திக்க டெல்லி பல்கலைக்கழக பேராசிரியரும், அரசியல் சிறைக்கைதிகள் விடுதலைக்கான அமைப்பின் செயல்தலைவருமான எஸ்.கே.ஆர்.கிலானி, இன்று வேலூர் சிறைக்கு சென்று அவர்களை சந்தித்தார்.

    இருபது நிமிட சந்திப்பிற்கு பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர், ''சிறையில் மூன்றுபேரையும் தனித்தனியே சந்தித்து உரையாடினேன். அப்போது அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக காட்டிக்கொள்ள முயற்சித்தனர்.

    சிறையில் உள்ள அவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி, எத்தனை முறை நிராகரித்தாலும் தண்டனையை குறைக்கும் அதிகாரம் மாநில அரசாங்கத்திற்கும் உண்டு.

    மாநில முதல்வரும், அமைச்சர்களும் நினைத்தால் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி தண்டனையை குறைக்கலாம்.

    தூக்குத்தண்டனை என்பது அவர்களை மட்டும் பாதிக்காது; அவர்களின் உறவினர்களையும் பாதிக்கும். ஒவ்வொரு நொடியும் நமக்கு மரணம் என்பதை தெரிந்துகொண்டு வாழ்வது கொடுமையானது. இதனால்தான் பல நாடுகள் மரண தண்டனையை ஒழித்துவிட்டார்கள். ஆனால், இந்தியாவில்தான் ஒழிக்கப்படாமல் உள்ளது.

    ஐநாவில் அதற்கு எதிர்ப்பான தூக்குத்தண்டனைக்கு எதிர்ப்பான தீர்மானத்தில் இந்தியா கையெழுத்திடாமல் உள்ளது'' என்று கூறினார்.

    அரசியல்கைதிகளுக்கான அமைப்பின் செயலாளர் கேசவன் உட்பட பலருக்கு சிறைக்கைதிகளை அனுமதிப்பதற்கு வேலூர் சிறை நிர்வாகம் அனுமதி அளித்திருந்தும் போலீசார் அவர்களை உள்ளே நுழைய விடவில்லை. இதனால் வேலூர் சிறை வாசலில் சிறிது நேரம் வாக்குவாதமும், பதட்டமும் நிலவியது.

    http://cmk-mobilesms.blogspot.com




  • http://cmk-mobilesms.blogspot.com


  • [Continue reading...]

    நீதி வேண்டி தீக்���ுளித்து நெருப்பாகிவிட்டாள் செங��கொடி: வைகோ

    - 0 comments


    நீதி வேண்டி தீக்குளித்து நெருப்பாகிவிட்டாள் செங்கொடி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

    சேலம் மாவட்டம், ஆத்தூரில் நடந்த கண்ணகி விழாவில் வைகோ பேசுகையில், இலக்கிய அமைப்புகள் எதற்காக நடத்தப்படுகின்றன என்பதே பலருக்கு புரிவதில்லை. தமிழர்களின் வரலாறு, பண்பாடு, வீரம், மேன்மை, ஒழுக்கம், நீதி போன்ற உயர் பண்புகளை எடுத்துரைக்கவும், அந்த பண்புகளை நம் சமூகம் கடைபிடித்து நடக்கவும் தான் இது போன்ற விழாக்கள் நடத்தப்படுகின்றன.

    2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இன்று முன்னோடியாக உள்ள நாடுகளில் வாழ்ந்த மக்கள் ஆடைகளின்றி காட்டு மிராண்டிகளாய் வாழ்ந்தபோது, நம் சோழ நாட்டு மக்கள் பகலில் பட்டும், இரவில் பருத்தி ஆடையும் அணிந்தார்கள் என்கிறது சிலப்பதிகாரம்.

    உலகத்திற்கு ஆடை அணியும் நாகரீகம் கற்றுக் கொடுத்தவர்கள் நம் தமிழ் பெண்கள். இன்று உலகிற்கே ஆடை வழங்குவதும் தமிழகம் தான். அப்படி இருக்கையில் சேனல் 4 தொலைக்காட்சியில் தமிழ் சகோதரி இசைப்பிரியாவை ஆடைகளை அவிழ்த்து காட்டும் காட்சிகளைப் பார்க்கையில் நம் ரத்தம் கொதிக்கிறது.

    சிலப்பதிகாரத்தில் ஒரு தவறும் செய்யாத தன்னுடைய கணவனை பாண்டியன் நெடுஞ்செழியன் தண்டித்ததால் வெகுண்ட கண்ணகி மதுரை மாநகரையே எரித்தாள்.
    ஆனால் இன்று உடன் பிறவா சகோதரன் பேரறிவாளன் குற்றமற்றவன் என்பதை உலகிற்கு கூற காஞ்சியில் தன்னைத் தானே எரித்து நெருப்பாகிவிட்டாள் செங்கொடி என்னும் தமிழ் சகோதரி.

    பத்தினி தெய்வம் கண்ணகியின் சாபத்திலும் நீதியிருந்தது. இந்த செங்கொடியின் சாவிலும் நீதியுள்ளது. நீதி வென்றே தீரும். கடந்த 1931ம் ஆண்டிலேயே மகாத்மா காந்தியடிகள் தூக்கு தண்டனை கூடாது என்றார்.

    ஒரு மனிதனை தேதி குறித்து கொல்லும் கொடூரம் கூடாது என்று பண்டித நேருவும் கூறினார். 1941-ம் ஆண்டு இந்திய அரசியல் சட்ட அமலாக்க விவாத்தின்போது பேசிய அண்ணல் அம்பேத்கர் அவர்களும் தூக்கு தண்டனை கூடாது என்றே தெரிவித்தார்.

    உலக நாடுகளில் 137 முன்னேறிய நாடுகள் தூக்கு தண்டனையை ஒழித்துவிட்டன. நம் நாட்டிலும் நீண்ட காலமாக தூக்கு தண்டனை கொடுப்பதில்லை.

    ஸ்ரீபெரும்புதூரி்ல் நடந்த சம்பவத்திற்கும் பேரறிவாளன், முருகன், சாந்தனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இதே கொலை வழக்கில் 24 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. எப்படி அவர்கள் மீது குற்றமில்லை என்று கூறப்பட்டதோ அதேபோன்று இந்த 3 பேரும் குற்றவாளிகள் அல்ல என்பதை நிரூபிக்க இன்னொரு வாய்ப்பளிக்க வேண்டும்.

    அன்று பாண்டிய மன்னனின் அரண்மனையில் நடந்த கொடூரம் இன்று தமிழகத்தில் நடந்துவிடக்கூடாது. தமிழக முதல்வரால் இதை தடுக்க முடியும். எனவே, நாடே அவரின் முடிவைத் தான் எதிர்பார்த்துள்ளது என்றார்.

    உயிர் நீத்த செங்கொடிக்கு வைகோ, திருமாவளவன் அஞ்சலி:

    இந் நிலையில் தீக்குளித்து உயிர்நீத்த இளம் பெண் செங்கொடியின் உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    நேற்று மாலை காஞ்சிபுரம் தாசில்தார் அலுவலகம் முன்பு தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தார் செங்கொடி. அவரது கருகிப் போன உடலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. சொந்த ஊரில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

    இந்த நிலையில் மருத்துவமனைக்கு வைகோ, திருமாவளவன், இயக்குநர் அமீர், முன்னாள் திமுக அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் விரைந்து வந்தனர்.

    செங்கொடியின் உடலுக்கு வைகோ அஞ்சலி செலுத்திய போது கண்ணீர் விட்டு அழுதார்.

    பின்னர் வைகோ கூறுகையில்,

    பேரறிவாளன், முருகன், சாந்தனை காப்பாற்ற செங்கொடி எனும் வீரப்பெண்மணி தன் உயிரையே தியாகம் செய்துள்ளார். அவரது இந்த தியாகம் உலகையே தீ மூட்டியுள்ளது. உயிர் விலை மதிப்பில்லாதது. இனி எந்த இளைஞரும், இளம் பெண்ணும் இத்தகைய செயலில் ஈடுபடக்கூடாது.

    நமது கோரிக்கைகளை போராடி வெற்றி பெற வேண்டும். செங்கொடியின் உயிர் தியாகத்தை மதிக்கும் வகையில் மூன்று பேரின் தூக்கு தண்டனையை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றார்.

    திருமாவளவன் கூறுகையில்,

    தமிழகத்தில் இதுவரை எத்தனையோ உயிர் தியாகம் நடந்துள்ளது. ஆனால் தமிழனுக்காக ஒரு வீரப்பெண்மணி உயிர் தியாகம் செய்தது இதுதான் முதல் முறை. கடைசி வரை இது போன்ற உயிர் தியாகங்கள் போராட்டத்தின் முடிவுகள் அல்ல.

    நமது கொள்கைக்காக கடைசி வரை போராடி வெல்ல வேண்டும். இனிவரும் காலங்களிலாவது இளைய சமுதாயம் உயிர் தியாகம் செய்யாமல் போராடி ஜெயிக்க வேண்டும்.

    தமிழக முதல்வர் உடனடியாக 3 பேரின் தூக்கு தண்டனையை கருணை உள்ளத்தோடு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு

    இந்த நிலையில் செங்கொடியின் உடல் இன்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை ஊர்வலமாக எடுத்து வந்து காந்தி சாலையில் உள்ள பெரியார் தூண் அருகே பொதுமக்கள் அஞ்சலிக்காக உடலை வைத்தனர்.

    அங்கு தமிழ் உணர்வாளர்கள், பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

    இன்று மாலை 4 மணிக்கு மேல் உடல் கீழ்க்கதிர்பூர் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நாளை காலை வரை அஞ்சலிக்காக வைக்கவுள்ளனர். நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

    உயிரை மாய்க்காதீர்கள்-நெடுமாறன்

    3 தமிழர் உயிர் காப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களைக் காக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காஞ்சிபுரத்தில் செங்கொடி எனும் இளம்பெண் தீக்குளித்து தன்னுயிரைத் தியாகம் செய்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் அளவற்ற வேதனையும் அடைந்தேன்.

    முதல்வரிடம் முறையிடுவது, நீதிமன்றத்தில் வாதாடுவது, மக்களைத் திரட்டிக் குரல் கொடுப்பது ஆகிய வழிகளில் நாம் இணைந்து ஒன்றுபட்டுப் போராடுவதின் மூலமே மூவரின் உயிர்களைக் காக்க முடியும். நம்மை நாமே அழித்துக் கொள்வதின் மூலம் அதைச் செய்ய முடியாது என்பதை உணருமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.

    3 உயிர்களைக் காக்க தொடர்ந்து போராடுவதற்குப் பதில் நமது உயிர்களை அழித்துக் கொள்வது என்பது நமது நோக்கத்திற்கே முரணானதாகும். இத்தகைய செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென வேண்டிக்கொள்கிறேன் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    கருணை காட்டுங்கள்-சோனியாவுக்கு தா.பாண்டியன் கோரிக்கை

    நளினியை மன்னித்ததன் மூலம் உங்கள் பெருந்தன்மையைக் காட்டியுள்ளீர்கள். உங்களுடைய தியாகத்தின் காரணமாக உங்களுடைய குரல் மற்ற எவரின் குரலையும்விட வலுமிக்கதாக அமையும். எனவே மற்ற மூவருக்கும் கூட அதே பெருந்தன்மையைக் காட்டி அவர்களைக் காப்பாற்றுங்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் சோனியாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில்,

    ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட கொடூரமான செயலுக்குப் பின் பல ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் பெரும்பாலான சதிகாரர்கள் உரிய முறையில் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு முறையாக தண்டிக்கப்பட்டுள்ளனர். எனினும் 2011-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் நாளன்று மரண தண்டனையை எதிர் நோக்கியுள்ள மூன்று இளைஞர்களின் பிரச்னை உள்ளது.

    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரான நளினியை மன்னித்ததன் மூலம் உங்கள் பெருந்தன்மையைக் காட்டியுள்ளீர்கள். உங்களுடைய தியாகத்தின் காரணமாக உங்களுடைய குரல் மற்ற எவரின் குரலையும்விட வலுமிக்கதாக அமையும். எனவே, தண்டிக்கப்பட்டவர்களின் உயிர்களுக்காக குரல் கொடுங்கள் என்று பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    http://cmk-mobilesms.blogspot.com




  • http://cmk-mobilesms.blogspot.com


  • [Continue reading...]

    தூக்குத் தண்டனை��ை குறைக்க முதல்வர் ஜெயலலிதா ஆற்ற���ய உரை

    - 0 comments


    தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா இன்று (30.8.2011) சட்டமன்றப் பேரவையில், சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியமைக்குமாறு இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்தும் தீர்மானத்தினை முன்மொழிந்து ஆற்றிய உரை:

    ''இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 72-ல் தனக்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி, திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மேதகு குடியரசுத் தலைவர் நிராகரித்ததையடுத்து எழுந்த சூழ்நிலை குறித்தும், இந்தப் பிரச்சனையில், தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் சட்டப்படி எனக்குள்ள அதிகாரம் குறித்தும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் ஓர் அறிக்கையினை இந்த மாமன்றத்தில் நேற்று நான் அளித்தேன்.

    அந்த அறிக்கையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை முதலமைச்சராகிய நானோ, தமிழ்நாடு அரசோ, மாநில ஆளுநரோ மீண்டும் பரிசீலனை செய்ய முடியாது என்பதை தெளிவுபட நான் கூறியிருந்தேன்.

    மத்திய அரசு இந்திய அரசமைப்புச் சட்ட பிரிவுக்கூறு 257(1)-ன் படி, கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 72-ன்படி, குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின், அதே பிரச்சனையை மாநில ஆளுநர் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 161-ன் படி எடுத்துக் கொள்ள முடியாது என்றும், மீண்டும் குடியரசுத் தலைவர் தான் கருணை மனுவை மறுபரிசீலனை செய்ய இயலும் என்றும் உத்தரவிட்டதை சுட்டிக் காட்டினேன்.

    இந்தச் சூழ்நிலையில், மேற்படி மூவருக்கும் தூக்கு தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட்டு விடும் என்று தமிழக மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் மேற்படி மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றன. எனக்கும் இது குறித்து கோரிக்கைகள் வந்துள்ளன.

    எனவே, தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

    தீர்மானம்

    "தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது."

    முடிவுரை:

    தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அமைகிறேன்.''

    http://cmk-mobilesms.blogspot.com




  • http://cmk-mobilesms.blogspot.com


  • [Continue reading...]

    முதல்வர் ஜெயலலி��ாவுக்கு கொளத்தூ���் மணி வேண்டுகோள��

    - 0 comments


    சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி மற்றும் அரசியல் சிறை வாசிகள் விடுதலைக்கான குழு இணைந்து வேலூரில் முருகன்,சாந்தன், பேரறிவாளனை காப்பாற்றக்கோரி பொதுக்கூட்டம் நடத்தினர்.

    இக்கூட்டத்தில் பெரியார் திராவிட கழக கொளத்தூர் மணி பங்கேற்று பேசினார்.

    அவர், ''110 விதியின் கீழ் இவர்களை காப்பாற்ற எனக்கு அதிகாரம் இல்லை என பேசிய முதல்வரின் மனதை நம் தமிழர்களின் போராட்டங்களும், தோழர் செங்கொடியின் தீக்குளிப்பால் எழுந்த எழுச்சியும் மாற்றியதால், இன்று சட்டமன்றத்தில் மூவரை தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்கக்கோரி தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டுவந்துள்ளார்கள்.

    இது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. மக்கள் போராட்டங்கள் என்பது வீண்போகாது என்பதே இது காட்டுகிறது. உச்சநீதிமன்றமே ராஜீவ்காந்தியை தவிர வேறுயாரையும் கொல்லும் எண்ணம் இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்கள். ஆக, அது பழிக்குப்பழி நடந்த கொலையே தவிர வேறு இல்லை.

    தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்... பூந்தமல்லி சிறப்புமுகாமில் விசாரணையே இல்லாமல் விசாரணை முடிந்து தண்டனைகள் முடிந்து பல அகதிகள் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ளனர்.

    அவர்கள் உங்களது ஆட்சிக்காலத்தில்தான் விடுவிக்கப்படுவார்கள் என நம்புகிறோம். ஏனெனில் இதற்கு முந்தைய பலரை விடுதலை செய்துள்ளீர்கள். இப்போதும் விடுதலை செய்யுங்கள் என கேட்டுக்கொள்கிறோம்'' என்று பேசினார்.

    http://cmk-mobilesms.blogspot.com




  • http://cmk-mobilesms.blogspot.com


  • [Continue reading...]

    காங்கிரஸ்காரனின் திமிர் இன்னும் அடங்கவில்லை: பெ.மணியரசன்

    - 0 comments


    சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி மற்றும் அரசியல் சிறை வாசிகள் விடுதலைக்கான குழு இணைந்து வேலூரில் முருகன்,சாந்தன், பேரறிவாளனை காப்பாற்றக்கோரி பொதுக்கூட்டம் நடத்தினர்.

    இக்கூட்டத்தில் தமிழ் தேச பொதுவுடமை கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன் பேசும்போது, ''கடந்த 19 நாட்களாக முருகன், சாந்தன், பேரறிவாளனைப்போல நாமும் மன சித்திரவதைகளை அனுபவித்து வந்தோம். அதற்கு இன்று ஒரு சிறு தீர்வு கிடைத்துள்ளது.

    இது நமது ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றி பெரிய அரசியல் கட்சிகளாலோ இயக்கங்களாலோ கிடைத்தது அல்ல.

    சிறு சிறு இயக்கங்களாலும் மக்கள் எழுச்சியாலும் கிடைத்தது.

    இந்த எழுச்சி சட்டமன்றத்தில் மூன்று பேருக்காக தீர்மானம் இயற்ற வைத்தது. இது பற்றி மல்டி சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அது எங்களை கட்டுப்படுத்தாது என்று டெல்லியில் அமர்ந்துகொண்டு அதிகாரமாக பேசும், உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்னை கட்டுப்படுத்த.

    நீ என்ன எனக்கு மாமனா? மச்சானா? அண்ணனா? தம்பியா? 1947 ஆகஸ்ட் 15ந்துக்கு முன்பு வரை எங்களை ஆள வேறு ஒருவன் பிறந்தது இல்லை. எங்களை ஆள வந்தவன் கூட எங்களது மண்ணுக்கே வந்து அமர்ந்துகொண்டுதான் ஆட்சி செய்தான்.

    மன்னர் காலந்தொட்டு ஆங்கிலேயர் காலம்வரை அதுதான் நிலை. 1947 ஆகஸ்ட் 15க்கு பின்புதான் டெல்லியில் இருந்துகொண்டு எங்களை நீ ஆள்கிறாய். எங்களை நீ அடிமையாக்கிவிட்டாய். என்னை கட்டுப்படுத்த பார்க்கிறாய்.

    இத்தனை தெனாவட்டாகக்கூறும் காங்கிரஸ்காரனின் திமிர் இன்னும் அடங்கவில்லை'' என்று தெரிவித்தார்.

    http://cmk-mobilesms.blogspot.com




  • http://cmk-mobilesms.blogspot.com


  • [Continue reading...]

    தூக்குத்தண்டனை ��ிறுத்திவைப்பு - ��னிப்பு வழங்கி அற்புதம்மாள் மகிழ��ச்சி (படங்கள் இண��ப்பு)

    - 0 comments


    முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத்தண்டனை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேலூர் சிறைக்கு சென்று பேரறிவாளனை சந்தித்தார்.

    பின்னர் வெளியே வந்த அவர், மதிமுகவினர் ஏற்பாடு செய்திருந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் பங்கேற்றார். சிறைக்கு வெளியே இனிப்புகள் வழங்கினார்.

    மதிமுகவின பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    பேரறிவாளனின் வழக்கறிஞர், அரசியல் சிறைக்கைதிகள் விடுதலைக்கான அமைப்பின் செயல்தலைவருமான எஸ்.கே.ஆர்.கிலானி உட்பட பலர் இந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.







    http://cmk-mobilesms.blogspot.com




  • http://cmk-mobilesms.blogspot.com


  • [Continue reading...]

    பில்லாவை முந்து��் மங்காத்தா-அஜீத்தை கண்டு உதறும் விஜய்

    - 0 comments
    [Continue reading...]

    இதுதாண்டா ஜெயலல��தா..

    - 0 comments
    [Continue reading...]

    புதிய பதிவர்கள் ���வனிக்கவும்!

    - 0 comments
    [Continue reading...]

    ரஜினி, ரஜினிதான்...!

    - 0 comments
    [Continue reading...]

    ஜெயலலிதாவிடமிருந்து ஒரு கெட்ட செய்தியும், ஒரு நல்ல செய்தியும்..

    - 0 comments




    சட்டப்பேரவை விதி எண் 110 என்றாலே தமிழக முதல்வருக்கு ரொம்ப பிடிக்கும் போல. அதற்கும் காரணம் இல்லாமல், அவையில் அது குறித்து விவாதம் நடத்தி சலசலப்பு வர வாய்ப்பில்லை, துறை அமைச்சர் அறிவிப்பு செய்து, விளம்பரம் செய்து கொள்வதை தவிர்த்து,  தானே திட்டங்களையும், அறிவிப்புக்களையும் செய்தால் மக்களிடம் சென்று சேர்ந்தது போலவும் இருக்கும்.

    இப்படி நேற்று விதி எண் 110 கீழ் முதலமைச்சர் அறிவித்தது தான், மரண தண்டனையை நீக்க, மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு அதிகாரமில்லை என்பதும்.

    ஜெயலலிதா முதல்வராக வரவேண்டும் என்று யாரெல்லாம் துடித்தார்களோ அவர்களையும், ஜெயலலிதா முதல்வராக வரகூடாது என்று யாரெல்லாம் தடுத்தார்களோ அவர்களையும் ஒரே புள்ளியில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

    முன்பு சமச்சீர் கல்வி பற்றிய சர்ச்சையின் போது கூட, இப்படிப்பட்டப் நிலையைத்தான் ஜெயலலிதா தமிழகத்தில் உருவாக்கினார். எல்லோரும் விரும்புவதற்கு எதிராக முடிவெடுப்பதில் தான் தன் திறமை இருக்கிறது என்று நினைக்கிறாரோ என்னவோ?(அம்மா என்றால் அதிரடி...)

    சமச்சீர் கல்வி விஷயத்தில் மௌனம் காத்த விஜயகாந்த் கூட, பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் மரண தண்டனை நீக்க அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளார். மற்ற அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களின் நிலைப்பாடும் இதே போன்று தான் இருக்கிறது.

    கடந்த தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்ணைக் கவ்வியதால், திருமாவளவனின் இடத்தை, தான் பிடித்து விடலாம் என்று அரசியல் வலிமை பெற தீவிரமாய் இயங்கி வரும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கூட, சட்டமன்றத்தில் பேச இயலாது, சட்டமன்றத்தின் வெளியே.. "அபிராமி,அபிராமி" ரேஞ்சுக்கு புலம்பிக்கொண்டிருந்தார்.

    எந்த ஒரு குற்றவாளிக்கும் தண்டனையைக் குறைக்கிற அல்லது ரத்து செய்கிற அதிகாரம், இந்திய அரசியல் நிர்ணயச் சட்டப்பிரிவு 72ன் படி குடியரசுத்தலைவருக்கும், சட்டப்பிரிவு 161-ன் படி மாநில ஆளுநருக்கும் மட்டும் தான் இருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும் கூட,

    மரண தண்டனையை நீக்க குடியரசுத்தலைவருக்கும், ஆளுநருக்கும் பரிந்துரை செய்யும் தீர்மானத்தையாவது, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்புவதற்கு என்ன தடை இருக்கிறது. வெளிநாட்டு ராஜபக்ஷேவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றும் சட்டமன்றத்திற்கு உள்நாட்டு பிரச்சனையை பற்றி தீர்மானம் போட எதுக்கு தனியே ஒரு அதிகாரம்? குறைந்த பட்சம் விவாதமாவது செய்யலாமே?

    இது அதிகாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகத் தெரியவில்லை, தமிழக முதல்வருக்கு வழங்கப்பட்ட ஆலோசனையின் பிரச்சனையாகத் தெரிகிறது. தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனையை பேசுவதற்காக அமைக்கப்பட்ட சட்டமன்றத்தில், பெரும்பாலான தமிழக மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப இருக்கும் ஒரு பிரச்சனையில், இதுவரையில்  விவாததிற்கு கூட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது தான் உச்சகட்ட சோகம்.(அம்மா என்றால் அன்பு என்று சொந்தக்குரலில் பாடிய அம்மாவிடம் தான், கருணையை எதிர்பார்க்கிறோம்)  

    இதே சட்டப்பேரவை விதி எண் 110-படி ஜெயலலிதா தெரிவித்த அறிவிப்புக்கள் அனைவரின் நெஞ்சிலும் பால் வார்த்தது என்பதை மறுப்பதற்கு இல்லை.பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அத்தனை அறிவிப்புக்களும் சிறப்பு வாய்ந்தவை.

    முக்கியமாக தமிழகத்தில் இனி மாணவர்களுக்கு முப்பருவத்தேர்வு முறை  Trimester pattern இருக்கும் என்ற தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு மாணவர்களின் சுமையை வெகுவாக குறைக்கும் என்று நிம்மதி பெருமூச்சு விட வைத்திருக்கிறது. ஒரு வருடம் முழுவதும் படிக்கும் பாடத்தை, மூன்று பாகங்களாக பிரித்து கொடுத்து தேர்வுகள் நடத்தப்போகிறார்கள். மாணவர்கள் படித்து நியாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய பாடப்பகுதிகளும், புத்தகங்களின் சுமையும் மூன்றில் ஒரு பகுதியாக குறைய போவதால், அரசு பொதுத்தேர்வுக்கு தயாராகும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் இனி "மந்திரிச்சு விட்டது போல திரிய வேண்டிய அவசியம்" இருக்காது.

    ஆனால் ஆண்டு முழுவதும் "பிஸியாக" இருக்கும் தேர்வுத்துறை இதனை எப்படி எதிர்கொள்ளப்போகிறது, எப்படி நடைமுறைப்படுத்தப்போகிறது என்பது தான் இதன் வெற்றி இருக்கிறது.


    http://sex-story-indian.blogspot.com




  • http://sex-story-indian.blogspot.com


  • [Continue reading...]

    செப் 2 முதல் அரசு ���ேபிள்: ரூ 70க்கு 90 ���ேனல்கள் - ஜெயலலி���ா அறிவிப்பு

    - 0 comments


    வரும் செப்டம் 2-ம் தேதி முதல் அரசு கேபிள் கார்ப்பரேஷன் செயல்படத் தொடங்கும் என்றும், இதன் மூலம் மக்களுக்கு 90 சேனல்கள் ரூ 70-க்கே கிடைக்கும் என்றும் இன்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

    சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா இன்று 110-வது பிரிவின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:
    கேபிள் டி.வி. இணைப்பின் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஏகபோக நிலை ஏற்படுத்தப்பட்டு, அதன்மூலம் பொதுமக்களிடமிருந்து அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதையும், இதன் காரணமாக இந்த தொழிலில் ஏகபோக நிலையை ஏற்படுத்தியவர்கள் அதிக லாபம் பெற்று வருகின்றனர், என்பதையும், இந்த மாமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள்.

    முந்தைய அரசால் 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு கேபிள் டி.வி. நிறுவனம் 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தனது ஒளிபரப்பை தொடங்கியது. இந்த நிறுவனம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான இணைப்புகளை வழங்கியது. பின்னர் முந்தைய ஆட்சியாளர்களின் சுயநலம் காரணமாக அரசு கேபிள் டி.வி. நிறுவன இணைப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 31.3.2011 அன்றைய நிலவரப்படி 432 இணைப்புகளாக சுருங்கி விட்டது.

    திமுக அரசு முடக்கியது
    அதாவது முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசால் தொடங்கப்பட்ட அரசு கேபிள் டி.வி. நிறுவனம் அந்த அரசாலேயே முடக்கப்பட்டு விட்டது. எனவேதான் அ.தி. மு.கழகத்தின் தேர்தல் அறிக்கையில் கேபிள் டி.வி. தொழிலில் உள்ள ஏக போகத்தை தடுத்து அனைவருக்கும் தொழில் செய்ய வாய்ப்பு அளிக்கும் வகையிலும், அனைத்து மக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டி.வி. இணைப்பு கொடுக்கும் வகையிலும், நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தோம். 

    இந்த தேர்தல் வாக்குறு தியை நிறைவேற்றும் வகையில், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நடவடிக்கை களை புனரமைப்பதற்கான அனைத்து நடவடிக்கை களையும எனது அரசு தீவிரமாக மேற்கொண்டது. இந்நிறுவனத்திற்கு ஒரு முழு நேர தலைவர் மற்றும் இந்திய ஆட்சிப் பணியை சேர்ந்த ஒரு நிர்வாக இயக்குனர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

    சென்னை தவிர, அனைத்து மாவட்டங்களிலும்
    ஏற்கனவே தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம் புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் தலைமுனைகள் பராமரிப்பு செய்யப்பட்டன. மீதமுள்ள 27 மாவட்டங்களில் தனியார் வசம் உள்ள தலைமுனைகள் வாடகைக்கு பெறப்பட்டும், புதிதாக அனலாக் தொழில் நுட்ப கேபிள் டி.வி. கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டும், அரசு கேபிள் டி.வி. புனரமைக்கப்பட்டது. மேலும் இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

    சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் கேபிள் டி.வி. சேவையைத் தொடங்கும் பொருட்டு, உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.க்களை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 34,344 கேபிள் ஆப்ரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.க்கள் மிகுந்த ஆர்வத்துடன் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவர்களிடம் 1 கோடியே 45 லட்சம் இணைப்புகள் உள்ளன.

    கட்டணச் சேனல்களும்
    31 மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ள ஒளிபரப்பு மையங்களை 24 மணி நேரமும் பராமரிக்கவும், ஒளிபரப்பு சேவையை தங்கு தடையின்றி மக்களுக்கு வழங்கவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பின் மூலம் கட்டணச் சேனல்கள் உள்பட 90 சேனல்களை ஒளிபரப்பிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. முதலில் இலவச சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படும்.

    கட்டணச் சேனல்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

    வெறும் ரூ 70 மட்டுமே
    விரைவில் கட்டணச் சேனல்களும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. மூலம் வழங்கப்படும். 2.9.2011 முதல் ஒளிபரப் புச்சேவைகள் தொடங்கப்பட்டு குறைந்த செலவில் நிறைவான சேவையை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தமிழக மக்களுக்கு வழங்கும் என்பதையும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர்ந்துள்ள கேபிள் ஆப்பரேட்டர்கள் மூலம் தொலைக்காட்சி சேவையை பெறும் சந்தாதாரர்களிடமிருந்து மாதச் சந்தாவாக 70 ரூபாய் மட்டுமே கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்களால் வசூலிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

    இந்த ஒளிபரப்பை வழங்கும் கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்களிடமிருந்து கட்டணமாக ஒரு இணைப்பிற்கு 20 ரூபாய் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் வசூலிக்கப்படும். எனது தலைமையிலான தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் மிகக் குறைந்த கட்டணத்தில் கேபிள் டி.வி. இணைப்பை தமிழக மக்கள் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இதன் மூலம் கேபிள் இணைப்பு பெற்றுள்ள ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு சுமார் 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை சேமிப்பு ஏற்படும் என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    -இவ்வாறு ஜெயலலிதா அறிவி்த்தார்.







    http://sex-story7.blogspot.com




  • http://sex-story7.blogspot.com


  • [Continue reading...]

    ராஜிவ் உயிரோடு வ���்தால் தூக்கு தண��டனையை குறைக்கலா���்: இளங்கோவன்

    - 0 comments


     ராஜிவ் காந்தியும் அவருடன் கொல்லப்பட்ட அத்தனை பேரும் திரும்ப உயிரோடு திரும்ப வந்தால் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை கொடுப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

    அவர் அளித்துள்ள பேட்டி:
    கேள்வி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் தண்டனையை குறைக்க வலியுறுத்தி போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதே?
    இளங்கோவன்: தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும். தலைவர் ராஜீவ் காந்தியும், தியாகி லீக் முனுசாமியும் அவர்களுடன் கொல்லப்பட்ட அத்தனை பேரும் திரும்ப உயிரோடு வந்தால் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை கொடுப்பது குறித்து பரிசீலிக்கலாம். 

    கேள்வி: தூக்கு தண்டனை விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று கொடுத்த விளக்கம் பற்றி?
    இளங்கோவன்: இந்தப் பிரச்சனையில் ஜெயலலிதா சரியான தகவலை தந்திருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்டுகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு 3 பேரையும் தூக்கில் போடலாம் என்று சொல்லி விட்டு இப்போது கூடாது என சொல்வது கருணாநிதியின் அரசியல் நாடகம். 

    கேள்வி: 3 பேரையும் தூக்கிலிட்டால் தமிழகத்தில் காங்கிரசின் எதிர்காலம் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறதே?
    இளங்கோவன்: கொலை செய்தவனுக்கு என்ன தண்டனை என்று கோர்ட்டு சொல்லியிருக்கிறது. அதை நிறைவேற்றுவதால் காங்கிரசின் எதிர்காலம் எந்த விதத்திலும் பாதிக்காது என்றார்







    http://sex-story7.blogspot.com




  • http://sex-story7.blogspot.com


  • [Continue reading...]

    ஆசிரியர் செக்ஸ் ���ில்மிஷம்: 5-ம் வக��ப்பு மாணவி தீக்குளிக்க முயற்சி

    - 0 comments


    பள்ளி ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்டதால், மனமுடைந்த மாணவி, தீக்குளிக்க முயன்றார்.

    விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த வெல்லம்புதூர் அரசு பள்ளி உள்ளது. இதில் 5 வகுப்பு ஆசிரியர் ஒருவர், மாணவியை சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த மாணவி வீட்டிற்கு வந்து யாரிடம் பேசாமல் இருந்துள்ளார்.

    பின்னர் யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில், தீக்குளித்து தற்கொலை செய்ய கொள்ள முயன்றார். அவரை மீட்ட வீட்டினர், அப்பகுதி பொதுமக்களுடன் பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

    இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பள்ளி மாணவியிடம் ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







    http://sex-story7.blogspot.com




  • http://sex-story7.blogspot.com


  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger