Tuesday 7 January 2014

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை காலை 10 மணிக்கு தொடங்க வேண்டும்: அரசுக்கு சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை SSLC will start at 10 am State Assembly Members Request

- 0 comments

Img எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை காலை 10 மணிக்கு தொடங்க வேண்டும்: அரசுக்கு சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை SSLC will start at 10 am State Assembly Members Request

சென்னை, ஜன.8-

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை காலை 9-15 மணிக்கு பதிலாக காலை 10 மணிக்கு தொடங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதாவுக்கு ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு மார்ச் மாதம் 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9-ந்தேதி முடிவடைகிறது. தேர்வுகள் காலை 10 மணிக்கு பதிலாக இந்த வருடம் முதல் முதலாக காலை 9-15 மணிக்கு தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்டம் பவானி சாகர் சட்டமன்ற உறுப்பினர்(இந்திய கம்யூனிஸ்டு) பி.எல்.சுந்தரம் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதாவுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இந்த கல்வியாண்டில் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு காலை 9-15 மணிக்கு தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நேர மாற்றம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கும் என கருதுகிறேன்.

தேர்வு நேரம் எஸ்.எஸ்.எல்.சி.க்கு மட்டும்தான் மாற்றப்பட்டுள்ளது. இதுபொருத்தமானதாக இல்லை என நினைக்கிறேன்.

மாணவ-மாணவிகள் காலை 9-15 மணிக்கு தேர்வுக்கு வர அதிகாலையில் எழுந்து புறப்பட தயாராக வேண்டி உள்ளது. அதனால் மாணவர்களுக்கு படிப்பதற்கான காலம் குறைவதோடு பதற்றத்திற்கும் ஆளாவார்கள்.

ஆகவே எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வின் நேர மாற்றத்தை திரும்ப பெற்று ஏற்கனவே இருந்தபடி காலை 10 மணிக்கு தேர்வினை தொடங்க உத்தரவிட வேண்டுகிறேன்.

இவ்வாறு சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
...

[Continue reading...]

ஆசிரியர் அடித்ததால் பள்ளி மாடியிலிருந்து குதித்த மாணவி teacher beat student try to suicide

- 0 comments

Img ஆசிரியர் அடித்ததால் பள்ளி மாடியிலிருந்து குதித்த மாணவி teacher beat student try to suicide

கள்ளக்குறிச்சி, ஜன. 7–

கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஏமப்பேர் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன். வியாபாரி. இவரது மகள் பாரதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார். அவர் அதே பள்ளியில் உள்ள கணக்கு ஆசிரியரிடம் டியூசன் படித்தார். அவருக்கு பாரதி டியூசன் பீஸ் சரியாக கொடுக்க வில்லை என்று தெரிகிறது. இதனால் கணக்கு ஆசிரியர் கோபமடைந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவியை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மதியம் அந்த கணக்கு ஆசிரியரின் பாடவேளை வந்தது. அந்த ஆசிரியர் மாணவி பாரதியை மீண்டும் திட்டியதாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் மாணவி பாரதி திடீரென்று பள்ளியின் 2–வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவர் படுகாயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

...

[Continue reading...]

Two girls fighting on the bus - Tamil Jokes

- 0 comments
Bus Conductor With Ladies fight Tamil Joke

Two girls fighting on the bus.

Open the window to close the window and the other one was saying ..!





பஸ்ஸில் இரண்டு பெண்கள் சண்டை போட்டு கொடிருந்தார்கள் *.

ஒருத்தி ஜன்னலை மூட சொல்லி..இன்னொருத்தி ஜன்னலை திறக்க சொல்லி! 

ஏனென்றால் காற்று இருந்தால் மூச்சு திணறி செத்து விடுவேன் என்றும்,காற்று இல்லையென்றால் மூச்சு திக்கி செத்து விடுவேன் என்றும் பஞ்சாயத்து.


 கூட்டத்தில் இருந்த பெரியவர் கண்டக்டரிடம் சொன்னார். முதலில் ஜன்னலை மூடுங்கள்.. ஒருத்தி செத்து விடுவாள், தொல்லை தீந்துடும். 

அப்புறமா ஜன்னலை திறங்க இன்னொருத்தியும் * செத்து விடுவாள். பிரச்சினை சால்வ்டு! 

சண்டையை எப்படி நிறுத்துவது என்று மூச்சு திணற யோசித்துக் கொண்டிருந்த கண்டக்டருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. 

எப்படி அய்யா இது மாதிரி ஒரு யோசனை உங்களுக்கு வந்தது என்று அந்த பெரியவரிடம் கேட்க..


 பெரியவர் கூறினார்: அந்த ரெண்டு பேரோட புருஷன் நான் தான்!
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger