Thursday 15 September 2011

தவற விடக்கூடாத ச���ரு நிவேதிதாவின் கட்டுரை

- 0 comments


  நண்பர்களை சந்திப்பது எப்போதுமே மனதுக்கு மகிழ்ச்சியூட்டும் விஷ்யம். எனவே தான் நண்பர்களை சந்திக்க கூடுதல் கவனம் எடுத்து கொள்வது என் இயல்பு..

சென்ற வாரம் ஒரு நாள் , நண்பர் சந்திப்புக்காக அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு தயாராக இருந்தேன்.. 3 மணிக்கு சந்திக்க வேண்டும் என்றால் , இரண்டரை மணிக்கே அந்த இடததை அடைய பிளான் செய்வது என் வழக்கம்... சென்னை டிராபிக் பற்றி எனக்கு நன்கு தெரியும் என்பதால் இந்த ஏற்பாடு..

ஆவலுடன் சொன்ன இடத்தில் காத்து கொண்டு இருந்தேன்.. ஆனால், சென்னை நகரின் டிராபிக் வேலையை காட்டிவிட்டது... நண்பரால், சொன்ன நேரத்துக்கு அந்த இடத்துக்கு வர இயலவில்லை...

அதற்கு பிறகு அரைமணி நேரம் காத்து இருந்தும் அவரால் வர இயலவில்லை....- டிராபிக்...

வேறு சில வேலைகள் இருந்ததால், அவரை சந்திக்காமலேயெ கிளம்ப வேண்டிய நிர்ப்பந்தம்... கனத்த மனத்துடன் அவரிடம் சொல்லி விட்டு கிளம்பினேன்...


சென்னையில் சாலைகள் அமைக்கிறோம் , நகரத்தை விரிவாக்குகிறோம் என சொல்லி , மரங்களை அழிக்கிறார்கள் .. ஆனாலும் நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை... சரியான திட்டமிடுதல் இல்லாததால், தேவையின்றி மரங்கள் அழிக்கப்படுகின்றன, எந்த பயனும் இல்லாமல்..

இந்த சிந்தனையோடு நான் இருந்த போது, தினமலரில் சாரு எழுதிய கட்டுரை ஒன்று கண்ணில் பட்டது..

அட... என ஆவலுடன் படித்தேன்...  மிகவும் தேவையான ஒரு விஷயத்தை , அழகாக சொல்லி இருந்தார்..
அவர் ஒரு புத்தகம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.. அதை படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்ப்படுத்தி விட்டார் அவர்.. விரைவில் படிக்க வேண்டும்..

எழுத்தாளர் என்பதை தாண்டி , ஒரு ஜென் குரு போல அவர் மாறிக்கொண்டு இருப்பது கட்டுரையின் பல இடங்களில் தெரிகிறது..

மரம் பற்றிய கட்டுரையில், கோமியம் , இயற்கையுடன் இணைந்து வாழ்தல் என பல இடங்களை அவர் தொட்டாலும், என்னை கவர்ந்த இடம் இன்னொன்று...

ஐரோப்பியர்கள், சென்ற நூற்றாண்டுகளில் கண்டு பிடித்த விஞ்ஞான சாதனங்கள் அதிகம்; ஆனால், அதே விஞ்ஞானம் மனித வாழ்வில் பேரழிவைக் கொண்டு வந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், உலகத்துக்கு வழங்க நம்மிடம் எத்தனையோ இருக்கின்றன.


இப்படி அவர் முழங்கும்போது, எல்லோரும்  உயர் நிலை அடையும்  நன்முறையை , இந்தியா உலகுக்கு அளிக்கும் என பாரதியார் வரிகள் நினைவுக்கு வந்தன..
பொருத்தமான வரிகளை , கடைசியில் மேற்கோள் காட்டி இருப்பது சிறப்பு..

அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை இது...படித்து பாருங்கள்.. பிரிண்ட் எடுத்து நண்பர்களுக்கு கொடுங்கள்

****************************************************************************


மனிதர் வாழ மரம் வாழட்டும்
- அல்ட்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதா.. 





வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு, பெரும் அதிர்ச்சியைத் தரக் கூடிய விஷயம், இங்கே மரங்கள் இல்லாததுதான். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, தமிழகத்தில், 5 சதவீத மரங்களே உண்டு. சில ஊர்களில் மருந்துக்குக் கூட, ஒரு மரம் கிடையாது. ஏதோ பாலைவனத்தைப் போல், வறண்டு கிடக்கிறது தமிழ்நாடு.
சென்னையை எடுத்துக் கொள்ளுங்கள்... 50 ஆண்டுகளுக்கு முன், இப்படியா சென்னை இருந்தது? படகுப் போக்குவரத்து நடந்து கொண்டிருந்த கூவம், சாக்கடையாக இன்று நாறிக் கொண்டிருக்கிறது.லண்டனில் தேம்சும், பாரிசில் செய்ன் நதியும், ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டில் டன்யூபும், அந்த நாடுகளையே, சொர்க்க பூமியாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. பாரிசில் எந்தப் பக்கம் திரும்பினாலும், அங்கே அமைதியாக, செய்ன் நதி ஓடிக் கொண்டிருக்கும். படகுப் போக்குவரத்து உண்டு; குட்டிக் கப்பல்களும் ஓடும்.

ஒரு காலத்தில் நம் நாடும், அப்படித்தான் இருந்தது. 1000 ஆண்டுகளுக்கு முன், "விருட்ச ஆயுர்வேதம்' என்ற நூலை, சம்ஸ்கிருதத்தில் சுரபாலர் எழுதினார். நம்முடைய அலட்சியத்தால், அழிந்து போக இருந்த சம்ஸ்கிருதப் பொக்கிஷங்களில், இந்நூலும் ஒன்று.
கிழக்கிந்தியக் கம்பெனியார், இந்நூலைக் கொண்டு போய், லண்டனில் வைத்துக் கொண்டனர். 1996ம் ஆண்டுதான், இந்நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இப்போது, இயற்கை விஞ்ஞானி, ஆர்.எஸ் நாராயணன், இதைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
விருட்ச சாஸ்திரத்தின்படி, நம் ஜென்ம நட்சத்திரத்துக்கும், பாதத்துக்கும் தகுந்தாற்போல், இன்ன மரம் நட வேண்டும் என, சொல்லப்பட்டிருக்கிறது. 27 நட்சத்திரங்கள், ஒவ்வொன்றுக்கும், 4 பாதங்கள்; ஆக மொத்தம், 108 மரங்கள்.

நமது ஜென்ம நட்சத்திரத்துக்கு ஏற்ற மரத்தை நட்டால், நம் வாழ்வு வளம் பெறும் என்கிறது விருட்ச சாஸ்திரம்.ஆனால், இப்போது மரத்தை வெட்டினால் அல்லவா வாழ்வு? கேட்டால், "பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, நகரத்தை விரிவுபடுத்துகிறோம்' என்று சொல்கின்றனர். சென்னை மட்டும் அல்ல; உலகில் உள்ள எல்லா நகரங்களும் விரிவுபடுத்தப்பட்டே வருகின்றன.எந்த நகரமும், 50 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல் இல்லை. ஆனால், அதற்காக அவர்கள், மரங்களை அழிப்பதில்லை. திருச்சியில், முந்தைய ஆட்சியில் ஒரு பிரமுகரின் கல்லூரிக்காக, சாலையையே மாற்றி அமைத்தனர். ஆனால், மரம் இருந்தால் மட்டும் வெட்டி விடுகின்றனர்.

"மெரீனா கடற்கரையை அழகு படுத்துகிறோம்' எனச் சொல்லி, அங்கே இருந்த அத்தனை மரங்களையும் காலி செய்தனர். மரங்களை வெட்டி கான்கீரீட் போட்டு விட்டால், அழகு என்று யார் சொன்னது? ஒரு மரம் வளர குறைந்தபட்சம், 50 ஆண்டுகள் தேவை; ஆனால், மரத்தை வெட்ட ஒரு மணி நேரம் போதும். 50 ஆண்டுகளை நம்மால், திரும்பக் கொண்டு வர முடியுமா? மனிதனால் முடியவே முடியாத காரியங்களில் ஒன்று, மரணத்தை வெல்வது. அதைப் போலவேதான், காலத்தை வெல்வதும். ஒரு மனித உயிரை அழித்தால், அதைக் கொலை என்கிறோம். அதேபோல், மனிதனை விட அதிக ஆண்டுகள் வாழ்ந்து, இந்த பூமியை, மனிதர்கள் வாழ்வதற்குரிய இடமாக ஆக்கிக் கொண்டிருக்கும் மரங்களை வெட்டுவது, மனிதக் கொலையை விட மோசமானது அல்லவா?

மரங்கள் இருப்பதால்தானே, மனிதனால் பூமியில் உயிர் வாழ முடிகிறது? இப்படிப்பட்ட மரங்களை அழிப்பது, மனித குலத்துக்கே விரோதமான செயல் அல்லவா?
"மரம் நடுங்கள்' என, தெருவுக்குத் தெரு போஸ்டர் ஒட்டி, மக்களுக்கு உபதேசம் செய்யும் அரசு நிர்வாகமே, தொடர்ந்து மரங்களை வெட்டிக் கொண்டிருப்பது, இந்த ஆட்சியிலாவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.ஏனென்றால், மரம் நடுவது தனி மனிதர்களின் கைகளில் இல்லை; இதில், அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும். முக்கியமாக, மக்கள் நலனில் அக்கறை காட்டும் ஜெயலலிதா, இதை ஒரு சேவையாக எடுத்துச் செய்ய வேண்டும்.

இந்திய சரித்திரத்தில் எத்தனையோ மன்னர்கள், மாமன்னர்கள் எல்லாம் இருந்திருக்கின்றனர். ஆனாலும், அசோகரின் பெயர்தானே நிலைத்து நிற்கிறது? காரணம், நாம் சிறுவயதில் படித்தோம்; மன்னர் அசோகர், மரங்கள் நட்டார் என்று.
அசோக மன்னன், மரம் நட்ட விஷயத்தை, 2,300 ஆண்டுகள் ஆகியும், இன்னும் நாம் மறக்காமல் படித்துக் கொண்டிருக்கிறோம். மரங்கள் நட்டால், ஜெயலலிதாவுக்கும், இப்படி ஒரு அழியாத இடம் வரலாற்றில் கிடைக்கும்.

மரங்களை வெட்டியதால் தான், ஐப்பசியில் பெய்ய வேண்டிய அடைமழை, கண்ட கண்ட பருவத்தில் பெய்கிறது. மரத்தைப் போல், நாம் கவனம் செலுத்த வேண்டிய இன்னொரு விஷயம், மாடு. மாடு என்றால் சீமை மாடு அல்ல; நாட்டு மாடு. இந்த நாட்டு மாட்டின், காலையில் நிலத்தில் படாத கோமியத்தை ஆவியாக்கி, அந்த ஆவியிலிருந்து வடியும் நீரை மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். அதன் பெயர் அர்க். 10 லிட்டர் கோமியம், 5 லிட்டராக வடிய வேண்டும்.

"இந்த அர்க்கை, 30 மில்லி எடுத்து, 100 மில்லி தண்ணீரில் கலந்து குடித்தால், புற்றுநோயே வராமல் தடுக்கலாம்' என, கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கோமியம் ஆவியான பிறகு, பானையில் தங்கும் அடி வண்டலின் பெயர் கண்வெட்டி. இதையும் மருதமரப் பட்டையையும் கலந்து உட்கொண்டால், இதயநோயைத் தவிர்க்கலாம்.
இதுபோல், அர்க் மூலம் பல நோய்களைத் தீர்க்க முடியும். எல்லாவற்றுக்கும் அடிப்படை, நாட்டு மாடுகளின் கோமியம். நம் நாட்டில் பல நூறு ஆண்டுகளாக, நாட்டு மாடுகள்தான் விவŒõயப் பொருளாதாரத்தின் ஆதாரமாக இருந்திருக்கின்றன.

மாட்டையும், குரங்கையும், மாட்டின் சாணியையும் கும்பிடும் காட்டுமிராண்டித்தனம் என்று, இந்தியக் கலாசாரம் பற்றிக் குறிப்பிடுகிறார் கார்ல் மார்க்ஸ். ஆனால், நஞ்சில்லாத இயற்கை விவசாயத்துக்கு இன்றைய விஞ்ஞான உலகம் சிபாரிசு செய்வது, மேற்கண்ட கோமியத்தையும், சாணத்தையும்தான்.ரŒõயனப் பொருட்களால் உலகம் அழிந்து கொண்டிருப்பது பற்றி, மேற்குலக விஞ்ஞானிகள் கவலை கொண்டிருக்கும் நிலையில், இதற்கு ஒரே மாற்றாக இருப்பது, இந்தியப் பாரம்பரிய இயற்கை விவசாயமும், இயற்கை மருத்துவமும் தான்.

ஒரு விவசாயி, மாடுகளை வைத்தே தன் வாழ்க்கையை சீராக ஓட்ட முடியும். மாட்டிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு பொருளும், நமக்கு நன்மை தருவதாக இருக்கிறது. இப்போது, கல் மாவிலிருந்தெல்லாம் விபூதி தயாரிக்கப்படுகிறது. ஆனால், பசுவின் சாணத்தில் தயாரிக்கப்படுவதே உண்மையான விபூதி என்பது நமக்குத் தெரியும்.
"பஞ்ச கவ்யம்' என்பது, ஒரு அருமையான இயற்கை உரக் கரைசல். பசுவின் சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்து பொருட்களைக் கொண்டது இது. ரசாயன உரங்களால் இன்று, உலகம் முழுவதும் மனிதர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறி ஆகியிருக்கிறது.

நம் விவசாய நிபுணர்கள், இந்தப் பஞ்ச கவ்யத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தாலும், இதற்கு அரசாங்கம் ஆதரவு தந்தால், இதன் மூலம் நமது விவசாயம் மட்டுமல்ல, இதை ஏற்றுமதியும் செய்து, நாம் பொருளாதார ரீதியில் தன்னிறைவைப் பெறலாம்.
ஐரோப்பியர்கள், சென்ற நூற்றாண்டுகளில் கண்டு பிடித்த விஞ்ஞான சாதனங்கள் அதிகம்; ஆனால், அதே விஞ்ஞானம் மனித வாழ்வில் பேரழிவைக் கொண்டு வந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், உலகத்துக்கு வழங்க நம்மிடம் எத்தனையோ இருக்கின்றன.
இந்தியப் பாரம்பரிய சிந்தனா முறை பற்றி, பல ஆய்வுகளைப் படித்துக் கொண்டிருந்த போது, அரவிந்தன் நீலகண்டன் என்ற பெயர், எனக்கு முக்கியமாகத் தெரிய வந்தது. அவர் எழுதியுள்ள, "பஞ்ச கவ்யம்' பற்றிய கட்டுரையை இவ்வாறாக முடிக்கிறார்:

ஆபிரகாமிய அகங்காரப் பண்பாட்டில் உருவான முதலாளித்துவத்துக்கும், மார்க்சியத்துக்கும் அப்பால், மூன்றாம் பாதை ஒன்று இங்கு இருக்கிறது. கிராமக் கோவில்களில் அம்மன் சிலைகளுக்கு முன்னால், மண்விளக்குகளில் ஆமணக்கு எண்ணெயில் ஏற்றப்படும் தீபமென, அமைதியாக ஒளிவிட்டுக் கொண்டிருக்கும் அந்த ஒளி, உலகமெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட பண்பாடுகளின் உள்ளொளி. ஐயாயிரம் ஆண்டுகள், அதை நாம் பாதுகாத்து வந்தோம். இனி அதை வளர்த்தெடுத்து உலகுக்கு அளிப்போம்.அதற்கு என்ன செய்யலாம் நாம்?

-  நன்றி , தினமலர்


http://tamil-smsworld.blogspot.com



  • http://tamil-smsworld.blogspot.com

  • [Continue reading...]

    தமிழர்களுக்கு ப��டிக்காத டாப் ஃபைவ் வார்த்தைகள்

    - 0 comments


    மற்ற மொழியினரை விட , அன்றாட வாழ்வில் அதிக வார்த்தைகள் பயன்படுத்துவது தமிழர்கள்தான்.. காரணம் மற்ற மொழியினர் அவரவர் தாய் மொழியில் பேசுவார்கள்.. நம்மவர்கள் தமிழ் , ஆங்கிலம் என இரண்டிலும் -அரைகுறையிலாவது -பேசுவார்கள்.

    இப்படி பேசினாலும் இவர்கள் ஐந்து வார்த்தைகளை பயன் படுத்துவதே இல்லை என்பது வியப்பூட்டும் ஒன்று.. இதை பலர் உற்று கவனித்து இருக்க வாய்ப்பில்லை..எனவே பொது நலன் கருதி , தமிழர்களுக்கு பிடிக்காத ஐந்து வார்த்தைகளை தொகுத்து தருவதில் பிச்சைக்காரன் டாட் பிலாக்ஸ்பாட் டாட் காம் பெருமைப்படுகிறது....


    1 ஆச்சர்யப்படுத்திய வார்த்தை

    சில ஆண்டுகளுக்கு , என் வாழ்வில் முதன் முதலாக  ஒரு வெளினாட்டு தூது குழுவினருடன் அலுவலக பணிக்காக ஒரு விருந்தில் கலந்து கொண்டேன். அப்போதுதான் இப்படி ஒரு வார்த்தை இருப்பதே எனக்கு தெரிய வந்தது..

    ஆனால் ஏன் இந்த வார்த்தையை பயன் படுத்துகிறார்கள்.. இதன் அர்த்தம் என சரியாக புரியவில்லை.. பிறகு ஒருவரிடன் கேட்டு அர்த்தம் தெரிந்து கொண்டேன்...

    sorry என்றால் வருந்துகிறேன் என அர்த்தமாம்.. அவர்கள் எதற்கெடுத்தாலும் வருத்தப்ப்டுவது புதுமையாக இருந்தது...  தெரியாமல் மேலே உரசிவிட்டால்., பேச்சின் போது இடையூறு ஏற்படும் நிலை உருவாக்கினால், சொன்ன நேரத்தை விட இரண்டு நிமிடங்கள் தாமதமாக வந்தால் என அவர்கள் வருத்தம் தெரிவிப்பது , ஆச்சரியமாக இருந்தது.. நம் ஊரில் , கூட்ட்டதில் நடக்கும்போது யார் மீதாவது மோதினால் , எருமை மாடு போல செல்வோமே தவிர வருதம் தெரிவிக்க மாட்டோம்...

    நாம் பயன்படுத்தாத வார்த்தை - சாரி, வருந்துகிறேன்

    டிப்ஸ் - இந்த வார்த்தையை அவ்வபோது பயன்படுத்தி பாருங்கள்...  மற்றவர்களை ஆச்சர்யப்படுத்தலாம்..

    எசாரிக்கை - அதிகமாக இதை பயன்படுத்தாதீர்கள்.. உங்களை பலவீனமானவராக நினைத்துக்கொள்வார்கள்

    2 . நன்றி மறந்த தமிழன்
     இந்த வார்த்தையை , சென்ற தலை முறையினர் பயன்படுதுவதில்லை.. இப்போது பரவாயில்லை... இளம் தலைமுறையினர் பயன்படுத்துகிறார்கள்.. தேங்க்ஸ் - நன்றி என்பதே அந்த வார்த்தை...  முன் பின் தெரியாதவருக்கு , ஒரு சிறிய உதவி செய்திருப்பீர்கள்... அவர் அதை அலட்சியமாக ஏற்றுக்கொண்டு நகர்ந்து செல்வார்... நன்றி சொல்ல மாட்டார்..

    பெரிய உதவிக்கும் நன்றி கிடைக்காது..  ஆனால் இளைஞர்கள் நன்றி சொல்லாவிட்டாலும் தேங்க்ஸ் சொல்கிறார்கள்... நல்லது...

    டிப்ஸ் - இந்த வார்த்தையை பயன்படுத்தினால் , உங்களுக்கு உதவியருக்கு மகிழ்ச்சி ஏற்படும். அடுத்து உதவி கேட்டால் செய்ய வாய்ப்பு இருக்கிறது

    எச்சரிக்கை - டிக்கட் தரும் கண்டக்டருக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லாதீர்கள்... அவர் அதிர்ச்சி அடையக் கூடும்.. நாம் இன்னும் அந்த அளவுக்கு வளரவில்லை

    3 வாழ்க ஆங்கிலம்

    இந்த வார்த்தையும் சென்ற தலைமுறையில் புழக்கத்தில் இல்லை... ஆங்கில வளர்ச்சியால் பயன்பாட்டுக்கு வந்த வார்த்தை இது..

    யாரிடமாவது உதவி கேட்கும்போது, அல்லது ஒன்றை செய்ய சொல்லும்போது, ப்ளீஸ் என்று ஆரம்பித்து சொல்வது இப்போது நடைமுறைக்கு வந்து இருக்கிறது,,,,  ஆனால் தயவு செய்து என்ற வார்த்தை ஒழிந்தே போய் விட்டது...

    டிப்ஸ் - அலுவலக பயன்பாட்டில் கூட , சென்ற தலைமுரையினர் , ப்ளீஸ் என்பதை பயன்படுத்துவதில்லை. இது தவறு...

    எச்சரிக்கை - அப்படிப்பட்டவர்களிடன் இந்த வார்த்தையை பயன்படுத்தீர்கள்..எதிர் விளைவே ஏற்படும்...


    4 எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்

        இது மிகவும் முக்கியமான வார்த்தை... அலுவலகம், குடும்பம், சாலையில் வழி கேட்பது போன்ற பல சந்தர்ப்பங்களில் இந்த வார்த்தை பயன்பாடு இல்லாமையால் பெரும் தொல்லைகள் ஏற்படும்... ஒரு விஷயம் தெரியாது என நம் மக்கள் சொல்லவே மாட்டார்கள்...

                தெரியாத ஒன்றைக்கூட தெரியும் என்பது போல காட்டிக்கொள்ள விரும்புவதால் ஏற்படும் பிரச்சினைகள் பல... ஒருவரிடம் வழி கேட்கிறீர்கள்.. அவருக்கு தெரியாவிட்டாலும், ஏதோ ஒரு பதிலை சொல்லி உங்களை அனுப்புவார்.. ஆனால் தெரியாது என மட்டும் சொல்ல மாட்டார்..

    சில அலுவலகங்களில் ஒரு விண்ணப்பத்துக்காக  சென்று இருப்பீர்கள்.. சம்பந்தப்ப்ட்டவர் தனக்கு அது தெரியாது என சொல்ல மாட்டார்.. ஆனல் தன் அறியாமையை மறைக்கும் பொருட்டு , உங்கள் விண்ணப்பத்தில் தவறு இருக்கிறது என்பது போல எதையாவது பேசி அனுப்புவார்..

    டிப்ஸ்- ஒருவருக்கு ஒன்று தெரியாது என்பதை அவர் பேசுவதை வைத்து முடிவெடுத்து, சீக்கிரம் அவரிடம் இருந்து தப்பிக்க பாருங்கள்..

    எச்சரிக்கை- உண்மையிலேயே விஷயம் தெரிந்தவர்களை சந்தேகப்பட்டு விடாதீர்கள்

    5 முடியாதது எதுவும் இல்லை..

    தன்னம்பிக்கை நூல்களை படித்து படித்து, எல்லாம் தன்னால் முடியும் என நினைக்க ஆரம்பித்து விட்டது தமிழகம்.. தன்னால் செய்ய முடியாத வேலையை ஏற்று கொள்வார்கள் சிலர்...

    உதாரணமாக ஒரு சட்டை தைக்க நினைக்கிறீர்கள்.. இந்த தேதிக்குள் தர  முடியாது என சொல்ல மாட்டார் டெய்லர்.. முடியும் என சொல்லி விடுவார் ... ஆனால் சொன்ன நேரத்தில் தராமல் இழுத்தடிப்பார்,,,  அவர் முடியாது என சொல்லி இருந்தால் நாம் வேறு யாரிடமாவது வேலையை கொடுத்து இருக்கலாம்

    டிப்ஸ் - பத்து நிமிடம் என்பது ஆபத்தான வார்த்தை... பத்து நிமிடத்தில் முடித்து விடுகிறேன்.. பத்து நிமிடத்தில் செய்து விடுகிறேன் என யாராவது சொன்னால், அந்த வேலை முடியாத ஒன்று என்ப்தை உணர்ந்து கொள்ளுங்கள்

    எச்சரிக்கை - இந்த விஷயத்தில் யாரும் திட்டமிட்டு தவறு செய்வதில்லை... தமிழர்களின் டைம் கான்ஷியஸ் குறைபாடே இது.. எனவே தேவையில்லாமல் டென்ஷன் ஆகாதீர்கள்



    http://tamil-smsworld.blogspot.com



  • http://tamil-smsworld.blogspot.com

  • [Continue reading...]

    உண்ணாவிரத கலைஞன�� - உலக புகழ்பெற்ற சிறுகதை

    - 0 comments


    காப்காவின் இந்த கதை உலக புகழ் பெற்ற ஒரு கதை... மிகவும் யோசிக்க வைத்து , என் நினைவில் நீங்கா இடம் பெற்ற இந்த கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


    ************************************************************************
                        கடந்த சில வருடங்களில் பட்டினி கலைஞர்களின் மீதான ஆர்வம் வெகுவாக குறைந்து விட்டது. ஒரு காலத்தில் பட்டினி கிடக்கும் இந்த அரிய கலையை பயன்படுத்தி , சுய தொழில் செய்ய முடிந்தது. வெகுவாக பணமீட்டவும் முடிந்தது.
                        இப்போது இது சாத்தியமில்லை.
                            அதெல்லாம் ஒரு காலம். அப்போதெல்லாம் ஒரு பட்டினி கலைஞன் , ஒட்டு மொத்த ஊரின் கவனத்தை ஈர்த்து வைத்திருப்பான். உண்ணாவிரத்தை ஆரம்பித்து அதை முடிக்கும் வரை , நாளுக்கு நாள் பார்வையாளர்கள் அதிகரித்தவண்ணம் இருப்பார்கள். உண்ணாவிரத கலைஞனை , ஒவ்வொரு நாளும் ஒரு முறையேனும் பார்த்து விடுவார்கள்.நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டை மொத்தமாக வாங்கி கொண்டு நாள் முழுதும் , அந்த உண்ணா விரத கலைஞன் அமர்ந்து இருக்கும் சிறிய கூண்டின் முன் அமர்ந்து ஆவலாக கவனிப்பவர்களும் உண்டு. இரவில் இந்த நிகழ்ச்சியை கண்டு மகிழ்பவர்களும் உண்டு. இரவை பகலாக்கும் ஒளி வசதி , இந்த நிகழ்வை மேலும் சிறப்பாக்கியது.

                         சில பிரத்தியேக நாட்களில் அந்த கூண்டு திறந்த வெளிக்கு எடுத்து வரப்பட்டு , பட்டினி கலைஞன் மக்கள் பார்வைக்கு - குறிப்பாக சிறுவர்களின் பார்வைக்கு - வைக்கப்படுவான்.பெரியவர்களை பொருத்தவரை இந்த கலை நிகழ்ச்சியை ஒரு நகைச்சுவையாகத்தான் நினைத்தார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது நாகரிகம் என கருதப்பட்டதால் இதில் கலந்து கொண்டனர்.ஆனால் சிறுவர்கள் , இதை வாய் மூடாமல் பிரமிப்புடன் பார்த்தார்கள். ஒருவர் கரத்தை ஒருவர் பாதுகாப்பாக பற்றியவண்ணம் நிகழ்ச்சியை பார்த்தார்கள்.

                    அந்த கலைஞன் கூண்டில் அமர்ந்து இருப்பான். சில சமயம் மென்மையாக தலையசைப்பான். வலுக்கட்டயமாக வரவழைக்கப்ப்ட்ட புன்னகையுடன் கேள்விகளுக்கு பதில் அளிப்பான். ,
                          சமயங்களில் தன் கைகளை வெளியே நீட்டி , சாப்பிடாமல் தான் மெலிந்து போயிருப்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்துவான்.ஆனால் இது கொஞ்ச நேரம்தான். அதன்பின் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் தன்னுள் ஆழ்ந்து விடுவான். அந்த கூண்டில் இருக்கும் கடிகாரம் உட்பட எதையும் கவனிக்க மாட்டான். கண்கள் கிட்டத்தட்ட மூடப்பட்ட நிலையில் தன் முன்புறமாக பார்வையை செலுத்திகொண்டு இருப்பான். அவ்வப்போது சிறிய குடிவையில் இருக்கும் தண்ணீரை சற்று உறிஞ்சி , தன் உதடுகளை ஈரமாக்கிக் கொள்வான்.

                          அவ்வப்போது பார்த்து செல்லும் பார்வையாளர்களைத்தவிர சில நிரந்தரமான பார்வையாளர்களையும் பொதுமக்கள் நியமித்து இருந்தனர். இதில் வினோதம் என்னவெனில் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் , கசாப்புக்கடைக்காரர்கள். எந்த நேரத்திலும் மூன்று பேர் கொண்ட அந்த குழு இரவும் பகலுமாக அந்த கலைஞனை கண்காணிக்கும். ரகசியமாக அவன் உணவு அருந்த வில்லை என்ப்தை உறுதி செய்வது இந்த குழுவின் வேலை.
                           ஆனால் இது சம்பிரதாயமான ஒன்று. இந்த கண்காணிப்புக்கு அவசியமே இல்லை. எந்த ஒரு நிலையிலும், வற்புறுத்தப்பட்டால் கூட , அந்த கலைஞன் ஒரு துளி உணவைக்கூட எடுத்துக்கொள்ள மாட்டான் என்பதை அனைவரும் அறிவர். அந்த கலையின் கவுரவம் அதை ஏற்காது.

                      அந்த கண்காணிப்போர் குழுவுக்கு இது புரியவில்லை. வேண்டுமென்றே சற்று தொலைவில் அமர்ந்து தீவிரமாக சீட்டாடுவார்கள். தம் கவனம் முழுதும் ஆட்டத்தில் இருக்கும்ப்போது அந்த கலைஞன் ரகசியமாக சாப்பிடக்கூடும் என்பது அவர்கள் எண்ணம்.
                       இது போன்ற கண்காணிப்பை போல வேதனை தருவது வேறு ஒன்றும் அந்த கலைஞனுக்கு இல்லை. அவனை அவர்கள் நோகடித்தார்கள். அந்த கலையை கடினமாக்கினார்கள். இதை சமாளிப்பதற்காக, அவர்கள் பார்க்கும்போது பாடுவது அவன் வழக்கம். அவர்கள் சந்தேகம் எவ்வளவு தவறானது என இப்படி உணர்த்த முயற்சிப்பான். ஆனால் அதில் பயன் அதிகம் இல்லை. பாடிக்கொண்டே எப்படியோ சாப்பிட்டு விடுகிறானே என அவர்கள் ஆச்சரியத்துடன் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள் அவர்கள்.

                 அந்த அறையின் மங்கலான வெளிச்சத்தில் திருப்தி அடியாத நிகழ்ச்சி நிர்வாகி மின் ஒளி விளக்குகளை பார்வையாளர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தார். இந்த ஒளி வெள்ளம் அந்த கலைஞனை கொஞ்சமும் பாதிக்கவில்லை. பொதுவாக அவனால் தூங்க முடிந்ததே இல்லை. எந்த வெளிச்சத்திலும், எந்த சத்தத்திலும் , கூட்டத்திலும், எந்த நேரமாக இருந்தாலும் சற்று கண் அயர்வான் . அவ்வளவுதான்.
                    தன்னை கண்காணிக்க பார்வையாளர்கள் இருப்பது இந்த கலைஞனுக்கு மகிழ்சி ஏற்படுத்தும். அவர்களுக்காக இரவு முழுதும் தூங்காமல் இருப்பான். அவர்களுடன் கலகலப்பாக பேசியும், பழங்கதைகள் பேசியும் , அவர்கள் கதையை சொல்ல சொல்லியும், அவர்களை தூங்காமல் பார்த்து கொள்வான். தான் உண்மையிலேயே சாப்பிடாமல் இருப்பதை இப்படி நிரூபிப்பான். ஆனால் காலையில் தன செலவிலயே அவர்களுக்கு காலை உணவு வழன்கி மகிழ்வான். இரவு முழுதும் விழித்து இருந்து கடுமையாக பணியாற்றிய அவர்கள் ஆவலாக உணவை எடுத்துக்கொள்வார்கள்.. ஆனால் இதுவும் ஒரு சாராரிடையே சந்தேகத்தை கிளப்பியது. காலை உணவு வாங்கி கொடுத்து , கண்காணிப்பாளர்களை பொய் சாட்சி சொல்ல வைக்கிறான் என குற்றம் சாட்டினர் சிலர்.. சரி, உணவு வாங்கி தரவில்லை.. நீங்கள் வந்து கண்காணியுங்கள் என அழைப்பு விடுத்தால், சாக்கு போக்கு சொல்லி நழுவினர். ஆனாலும் அவர்கள் சந்தேகம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது                     

    ஆனால் இந்த சந்தேகம் தவிர்க்க முடியாத ஒன்று . ஏனென்றால் இரவு பகலாக , அவன் அருகேயே அமர்ந்து அவனை கண்காணிப்பது சாத்தியமற்ற ஒன்று. அதனால் தன அனுபவத்தை மட்டும் வைத்து ,அவன் சாப்பிடாமல் ஏமாற்றாமல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கிறான் என யாரும் சொல்லும் நிலையில் இல்லை.. அந்த கலைஞனுக்கு மட்டுமே உண்மை தெரியும்,. அதே சமயம்&கலைஞனின்;;உண்ணாவிரத செயல் திறமை மீது முழு திருப்தி கொண்ட ஒரே பார்வையாளனும் அந்த கலைஞன் மட்டும்தான்.

    ஆனால் அவன் திருப்திக்கு காரணம் வேறு. இந்த நிறைவுக்கு காரணம் , அவனை எழும்பும் தோலுமாக ஆக்கி , சிலர் பார்க்க விரும்பாத பரிதாப தோற்றத்தை தந்த , இந்த உண்ணாவிரதம் அன்று. இந்த உண்ணாவிரதம் எவ்வளவு சுலபமான ஒன்று என அவைக்கு தெரியும். அதை சொல்லியும் இருக்கிறான்., ஆனால் யாரும் இதை நம்ப தயாராக இல்லை..சிலர் தன்னடக்கம் என நினைத்தனர் அவனை ஏமாற்றுக்காரன், விளம்பர மோகம் படித்தவன் என நினைத்தனர் . .
    (தொடரும் )


    http://tamil-smsworld.blogspot.com



  • http://tamil-smsworld.blogspot.com

  • [Continue reading...]

    ஜென் குருவுடன் ச���ல மணி நேரங்கள்- சாரு சந்திப்பு -1

    - 0 comments


    இலக்கிய சந்திப்பு என்றால் டிரையாக இருக்கும் என்ற நிலையை மாற்றி, ஈசிஆரில் அல்ட்டி மேட் ரைட்டர் பங்கு பெறும் இலக்கிய சந்திப்பு என்ற போதே சற்று ஆச்சரியமாக இருந்தது...ஆனால் அடுத்தடுத்து பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன என முதலில் தெரியவில்லை..

     நான் செல்வதற்குள், துல்லியமாக திட்டமிட்டு ஏற்பாடுகளை முடித்து இருந்தார்கள்.. சிலரை முதன்முறையாக சந்த்திக்கிறேன்.. ஆனாலும் பல நாள் பழகியவர்களை சந்திப்பது போலவே இருந்தது... சுரேஷ், மணிவண்ணன், ஞானசேகரன், பாலா, பிரபாகரன், சிவம் , சிபி, செல்வம் மாணிக்கம், மணிகண்டன், சதீஷ், பிரபு ராமகிருஷ்ணன், பார்த்திபன்,கிருபா சங்கர் கார்த்திகேயன், வெற்றி, சிவம், ஜான், வில்லன் வில்லன், சரவண குமார் என ஒவ்வொருவரையும் பற்றியும் நிறைய சொல்லலாம்.. சாருவிடம் இப்படி ஒரு சக்தி வாய்ந்த இளம் படை இருப்பது பெருமையாக இருந்தது..
    சாரு வருவ்தற்கு முன் இலக்கியம், அரசியல் , சினிமா என பல விஷ்யங்கள் குறித்து பேசிக்கொண்டு இருந்தோம். திடீரென பரபரப்பு..

    ஒரு ஜென் குரு காரில் இருந்து இறங்கினார்... அட.. நம்ம சாரு... வித்தியாசமான தோற்றம்...பேச்சிலும் நிறைய வித்தியாசங்கள்...
    பாஸ்கரும், பாத்திபனும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்..சற்று நேரத்துக்கு பின் உரையாடல் தொடங்கியது... கேள்வி கணைகள் பாய்ந்தன.. பதில்களும் கருத்து செறிவுடன் வந்தன...

    *************************************************

    திடீரென அய்யப்பனை தரிசிக்க சென்றீர்களே .. இந்த எண்ணம் எப்படி வந்தது?

    பல காரணங்கள்..
    என் நண்பர் ஒருவரை அடிக்கடி சந்திப்பது வழ்க்கம்..அவரது அய்யப்பன் அனுபவங்கள் ஆச்சர்யமாக இருந்தன,, நேர்மையாக , ய்தார்த்தமாக இருந்தன... அவர் இப்படி சொல்வதே எனக்கு ஓர் அழைப்பாக தோன்றியது..

    வாழ்வில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அம்சமும் ஒரு காரணம்..அமெரிக்காவில் ஒரு மில்லியனர் சற்றும் எதிர்பாராத வகையில் சிறை செல்ல வேண்டியதாகி விட்டது...அவசரத்தில் ஷேவிங் செட் பைக்கு பதில் , ரிவால்வர் பையை எடுத்து வந்ததுதான் அவர் செய்த பிழை.. வாழ்வின் இந்த எதிர்பாராத த்ன்மை, அபத்தம் போன்றவை அச்சமூட்டக்கூடியவை... இதை சமாளிக்கும் வலிமையை பெறுவதன் ஆலயம் சென்றதற்கு ஒரு காரனம்..

    அரசன் போல இருக்கும் ஒருவனை, நிர்வாணப்படுத்தி, கழுதை ஊர்வலம் நடத்தி அசிங்கப்படுத்வது போல சிலர் எனக்கு எதிராக செயல்பட்டனர்... அவர்கள் மேல் எனக்கு இப்போது எந்த கோபமும் இல்லை..மன உளைச்சலும் இல்லை.... அந்த பாதிப்பில் இருந்து விடுபட்டு  மீண்டெழ ஆலய பயணம் தேவைப்பட்டது..எனவே அவர்களும் ஒரு காரணம்...

    சில நாடுகளில் எழுத்தாளனை சிறையில் தள்ளி அவன் வாயை அடைப்பார்கள்.. நம் நாட்டில் போலியான அவதூறுகளால் அவனை அடக்க நினைப்பார்கள்... இதை சமாளிக்க்கும் மனோ வலிமை தேவை

    நீங்கள் எதிர்பார்த்தது சபரிமலையில் கிடைத்ததா?

    வாழ்க்கை என்பதே எதிர்பாராமல் கிடைத்த ஒன்று...  எதிர்பார்ப்புக்கெல்லாம் அப்பாற்பட்டது அய்யப்பன் தரிசனம்... கடவுள் இருக்கிறார் இல்லை. என்பதற்கு அப்பாற்பட்டு, ஒருவர் சபரி மலை செல்லவில்லை என்றால் அவர் வாழ்வில் ஒரு முக்கிய விஷ்யத்தை தவற விடுகிறார் என பொருள்.. அது ஓர் அற்புதம்... அந்த அனுபவத்தை பெறாமல் ஒருவர் இழந்து விட்டால், மிகப்பெரிய ஒன்றை அவர் இழந்து விட்டார் என்று அர்த்தம்..

    ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கோயிலில் முதல் மரியாதை... சுலப்மாக சாமி தரிசனம் செய்யலாம்.. ஏழை கியூவில் நிற்க வேண்டும்... இப்படி ஏற்ற தாழ்வு இருக்கும் கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்?

    இந்த ஏற்ற தாழ்வைத்தான் சீரோ டிகிரி பேசுகிறது..பிச்சாவரம் சந்திப்பில் ஓர் ஆட்டின் கழுத்தை அறுத்து, சமைத்து உண்டு மகிழ்ந்தோம்... ஓர் ஆட்டின் வலி எங்களுக்கு ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறது? என கேட்டு கொண்டேன்..அந்த வலியை என்னால் என்றும் மறக்க முடியாது... புணர்ச்சி முடிந்ததும் இறந்து விடும் பூச்சி பற்றி சீரோ டிகிரியில் எழுதி இருக்கிறேன்... பெண் பூச்சியின் அழைப்பு ஒலி , ஆண் பூச்சிக்கு மரணமாகிறது...
    இது போல எத்தனையோ  ஏற்ற தாழ்வுகள் உலகில்  இருக்கின்றன.. இதற்கு முன் நீங்கள் சொன்ன , விவகாரம் மிக மிக சாதாரணமானது...

    எழுத்தாளனாக இருப்பது துன்பம் மிகுந்த வேலை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.அப்படி இருந்தும் சிலர் ஏன் எழுதுகிறார்கள்?

    பல் காரணங்கள்... எழுத்து மீதான தீராத காதல்...
    எழுத்தின் மீதான அடிக்‌ஷன்
    ஒருவன் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்களை சந்த்திதாலும், மூச்சு விட மற்ப்பதில்லை... எழுத்து மூச்சு போன்ற விஷ்யம்..

    படிப்பவர்கள் சிலராக இருந்தாலும், அவர்கள் காட்டும் அன்பு நிஜம்.. அந்த அன்புக்காக எவ்வளவு சிரமங்களையும் சந்தித்து எழுதலாம்


    ( சீரோ டிகிரியை எப்படி படிப்பது? எழுத்தாளன் ஆவது எப்படி? வாழ்க்கை என்றால் என்ன ? அடுத்த நாவல் எதைப்பற்றியது ? )  அடுத்த பாகத்தில்.... 

    இரண்டாம் பாகம் படிக்க இதை சொடுக்கவும்


    http://tamil-smsworld.blogspot.com



  • http://tamil-smsworld.blogspot.com

  • [Continue reading...]

    ஜென் குருவுடன் ச���ல மணி நேரங்கள்- சாரு சந்திப்பு -2

    - 0 comments


    அந்த சந்திப்பு நடந்த இடம் முழுதும் , உற்சாக மின்சாரம் செலுத்தப்பட்டது போல குதூகல மன நிலையில் இருந்தது. அதே நேரத்தில் அனைத்தும் சிறப்பாக , கச்சிதமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.. பழங்கள்,  நன்னாரி சர்பத் என அவ்வபோது ஏதாவது கிடைத்து கொண்டு இருந்தன.. இதற்கு உழைத்தவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்... இலக்கியம் மனிதனை எப்படி பண்படுத்துகிறது என்பதற்கு இந்த நிக்ழ்வே ஒரு சாட்சியாக இருந்தது..

      இன்னொரு சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.. மதிய உணவு முடிந்த பின், ஜாலியாக சற்று நேரம் சுற்றிக்கொண்டு இருந்தேன்...அப்போது, ஏதோ பேச்சு குரல் கேட்கவே, பார்த்தேன்,,, சாரு அங்கு இருந்த ஒரு நாய் குட்டியுடன் பேசிக்கொண்டு இருந்தார்.. ஆம்... பேசினார்...

    வழக்கமாக நாயை கொஞ்சுவோமே, அப்படி இல்லாமல் ஒரு மனிதனிடம் பேசுவது போல , " எப்ப்டி இருக்கிறாய்? சாப்பிட்டு விட்டாயா? பசிக்குமே! " என அக்கறையுடன் கேட்பதை பார்த்து, வியந்து போனேன்... ( சற்று நேரத்திற்கெல்லாம் வயிறார சாப்பிட்டு விட்டு, சோஃபாவில் உறங்கியது அது...எனக்கு உட்கார இடம் இல்லை... அதற்கு தனி இருக்கை .. பொறாமையாக இருந்தது )

    அன்பு செலுத்துவது வேறு..அன்பாகவே வாழ்வது வேறு என்பது அப்போது புரிந்தது,,, சாரு மிகவும் கனிந்து இருப்பதும் , ஆன்மீக நிலையில் முதிர்ந்த நிலையை அடைந்து இருப்பதும், பேச்சிலும், செயலிலும் பிரதிபலித்துகொண்டே இருந்தது...



    சிலருக்கு " தண்ணியில் " மிதப்பது பிடிக்கும், சிலருக்கு நீச்சல் குளத்தில் மிதப்பது பிடிக்கும், அதே போல நடனம் , இலக்கிய விவாதம் , வாசித்தல் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை..  இந்த அனைத்தும் ஒரே இடத்தில் நடந்தது அற்புதமாக இருந்தது...  be yourself என்பதன் மகத்துவம்  
    வெளிப்பட்ட இடம் அது....

    அரசியல், சினிமா, மது, ஆன்மீகம், துரோகம் , காதல், காமம் என வானத்துக்கு கீழ் இருக்கும் அனைத்து விஷயங்களும் சுவையாக விவாதிக்கப்பட்டன... ஆழமான கேள்விகள் முதல் அபத்தமான கேள்விகள் வரை எதுவாக இருந்தாலும், பளிச் பதில் அளித்தார் அல்ட்டிமேட் ரைட்டர்.

    புக் ஸ்டால்  வைக்கப்பட்டு இருந்தது பயனுள்ளதாக இருந்தது... அதே நேரத்தில் வாசக நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்ததும் இனிமையான அனுப்வம்...  

    சரி... சாருவுடன் உரையாடலில் சில பகுதிகள்..

    **********************************************************************
     உங்கள் நாவல்களில் எனக்கு பிடித்தது ராசலீலா.. ஒரு வாசகனாக , உங்கள் பிடித்த உங்கள் நாவல் எது?

    முந்தா நாள் வரை எனக்கு பிடித்த நாவல் ராச லீலா.. ஆனால் நேற்று முதல் , எக்சைல் நாவல் மிகவும் பிடித்து விட்டது... என்னையே பிரமிக்க செய்யும் அளவுக்கு சிறப்பாக வந்து இருக்கிறது நாவல்... ஒரு வகையில், சீரோ டிகிரியின் இரண்டாம் பாகம் என்று கூட சொல்லலாம்... பல விஷ்யங்களை தொட்டு செல்கிறது நாவல்.. படித்தவர்கள் அந்த பாதிப்பில் இருந்து மீள்வது கடினம்..

    வாழ்க்கை என்பது என்ன?

    வாழ்க்கை என்றால் என்ன..இலக்கியம் என்றால் என்ன..கவிதை என்றால் என்ன என்றெல்லாம் ரெடிமேட் கேள்விகள் கேட்பதால் பயனில்லை... வாழ்க்கை என்றால் என்பது வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும்..

    எழுத்தாளன் ஆக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

    நிறைய படிக்க வேண்டும்.. உலக சினிமா பார்க்க வேண்டும்.. எல்லாவற்றுகும் மேலாக மனதில் அன்பு இருக்க வேண்டும்.ஈகோ இருக்க கூடாது.... ஒருவரை துன்புறுத்துபவர் எழுத்தாள்ராக இருக்க முடியாது... எழுத்தாளன் என்பது ஒரு நிலை... டைரகடர் ஆவது எப்படி என சொல்லி தருவது போல , எழுத்தாளன் ஆவது எப்படி என சொல்லித்தர முடியாது..துறவி ஆவது எப்படி என சொல்லித்தர முடியுமா?

    இது வரை வாழ்ந்த வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது உங்களுக்கு தோன்றுவது என்ன?


    பல தவறான முடிவுகள் எடுத்து இருக்கிறேன்.. ஆனால் அதற்காக அழுவதில்லை.. எல்லாமே அனுபவம்தான்... செஸ் ஆட்டத்தில் , சரியான மூவ் தவறான் மூவ் இரண்டும் சேர்ந்துதான் ஆட்டத்தை உருவாக்குகின்றன...எனவே மூவ்தான் முக்கியம்... ஆட்டத்தில் இருப்பது முக்கியம்... 

    என் தந்தை ஒவ்வொரு வருடமும் சபரி மலை செல்வார்.. ஏன் என கேட்டால் , நீ சின்ன பையன் சொன்னால் புரியாது என்பார். நீங்கள் சொல்லுங்கள் .. சபரிமலை ஏன்?

    அய்யப்பன் என்பவன் என்னைபோன்றவன் என நண்பர் ஒருவர் சொன்னார்.. என் எழுத்துக்கள் பற்றி தெரியாதவன் பற்றி எனக்கு எந்த கோபமும் இல்லை.. ஆனால் என் எழுத்தைப்படித்து விட்டு , புரிந்து கொள்ளாமல் தவ்றாக பேசினால் எனக்கு கோபம் வரும். அதே போல அய்யப்பன் என்பதைப்பற்றி தெரியாமல் இருப்பவர்கள் பற்றி அய்யபனுக்கு கவலை இல்லை.. ஆனால் அய்யப்ப பக்தராக காட்டிகொண்டு, தவ்று செய்தால் அய்யப்பன் சும்மா விட மாட்டான் என சொல்லி சில உதாரணங்கள் சொன்னார் நண்பர்..

    என்னை பொறுத்தவரை , நான் ஒரு நான் வெஜ் அடிக்ட் ... பைபாஸ் சிகிச்சை நடந்து , அசைவம் சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து என்ற நிலையிலும் அசைவம் சாப்பிட்டவன் நான்.. என்னை எந்த கொம்ப்னாலும் மாற்ற முடியாது... அப்படிப்பட்ட என்னை , ஒழுங்கு தவறாமல் விரதம் இருக்க வைத்தது இந்த வழிபாட்டு முறைதான்.. மனதாலும் கூட விதிமுறை தவறாமல்  விரதம் இருந்தேன்... விரத காலத்தில் என்னை சாமியாக மதித்து காலில் விழுவார்கள்..  அதற்கு உரியவனாக நடந்து கொள்ள வேண்டும் என்ற உறுதியை , இது ஏற்படுத்தியது... இது வேறு எந்த வழிபாட்டு முரையிலும் இல்லை... 

    சில தீவிரவாதிகள் எதிரி சிறுவர்களை கொல்லும்போது, அவர்களுக்கு செக்ஸ் அனுபவம் இருக்கிறதா என கேட்பார்கள்.. பதில் என்னவாக இருந்தாலும் கொல்வார்கள்... ஆனால் அந்த அனுப்வம் இல்லாமல் ஒருவனை கொல்லும்போது, ஒரு சாடிஸ்டிக் மகிழ்ச்சி கிடைக்கும்.. ஒரு முக்கியாமன் அனுபவம் இல்லாமலேயே சாகிறான்..
    அதே போல , சபரிமலை பயணம் என்பது அற்புதமான அனுப்வம்... அது இல்லாமல் சாவது பரிதாபத்துக்கு உரியது..

    சீரோ டிகிரியை எப்படி படிப்பது?

    நியாயமாக ஓர் எழுத்தாளன் இதற்கு பதில் சொல்ல கூடாது.. எப்படி படிக்க வேண்டும் என அதிலேயெ குறிப்புகள்  ஆங்காங்கு இருக்கின்றன.. 
    உலகம் என்பது வன்முறைமயமானது.. கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட உலகம் ஏன் இவ்வள்வு கொடூரமாக இருக்கிறது... நான் ஏன் இவ்வளவு கொடுமைக்காரனாக இருக்கிறேன்... என் நாக்கு ருசிக்காக ஏன் ஒரு அப்பாவி விலங்கை கொல்கிறேன்..  இது போன்ற கேள்விகள் அதில் அலசப்பட்டு இருக்கும்..

    சீரோ என்பது மரணம்... சூன்யம்.. மரணத்தின் இன்னொரு துருவம் செக்ஸ்.. செக்ஸ் இல்லாவிட்டால் ஃபேஷன் டெக்னாலஜி உட்பட எதுவும் இல்லை. இது போன்று  சீரோ டிகிரியில் ஆங்காங்கு இருக்கும் குறிப்புகளை பிடித்து கொண்டு மேலே மேலே போய்க்கொண்டே இருக்கலாம்... எத்த்னை முறை வேண்டுமானாலும் படிக்கலாம்.. 

    சீரோ டிகிரியின் கடைசி வாக்கியம், வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையை சொல்லும்... ஆனால் அது " சொல்" என்று முடியும்... அமைதியை சொல்லும் வாக்கியம் சொல் என முடியும்..

    சீரோ டிகிரியின் துவக்க வாக்கியம், உன்னோடு பேசி எத்தனை நாட்கள் ஆகின்றன என தொடங்கும்..

    ஆரமப்ம பேச்சு, முடிவு சொல்... ஆதியிலே வார்த்தை இருந்தது என்பார்கள்.. இதுபோல பல அதில் புதைந்துள்ளன..தேடி கண்டு பிடியுங்கள்

    ********************************************************

    நாஸ்திகனாக இருந்ததால் , சபரிமலையை இத்தனை நாள் தவற விட்டு விட்டேனே என வருந்தியதாக சாரு சொன்னார்... சாருவை பார்ப்பவர்கள், சில தவறான பிரச்சாரங்களால் , இத்தனை நாள் அவரை தவற விட்டு விட்டொமே என வருந்துவார்கள் என்பது உறுதி...






    சுவாசிப்பு போல வாசிப்பும் அவசியம்



    இயற்கை அழகு கொஞ்சும் இடத்தில் இலக்கியம்

    சீரோ டிகிரி- ஒருவிவாதம்


    அன்பு இல்லாதவன் எழுத்தாளன் ஆக முடியாது

    வானமே உங்கள் எல்லை

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்



    http://tamil-smsworld.blogspot.com



  • http://tamil-smsworld.blogspot.com

  • [Continue reading...]

    தூக்கு தண்டனை- மூன்று வித கருத்து���்கள்

    - 0 comments


    அண்ணா ஹசாரே பிரச்சினை சற்று ஓய்ந்த நிலையில், ஊடகங்கள் தூக்கு தண்டனை பிரச்சினைக்கும் போனால் போகிறது என சற்று இடம் ஒதுக்க ஆரம்பித்துள்ளன.  தூக்கு தண்டனை என்பது , மேலோட்டமாக அலச வேண்டிய பிரச்சினை அல்ல , பொழுது போக்கு பிரச்சினையும் அல்ல என்பதால், ஊடகங்கள் இதில் கவனம் செலுத்தாமல் இருப்பதே  நல்லது.

    கொள்கை ரீதியாக சிலர் சில நிலைகளை எடுத்து இருந்தாலும்,  நடு நிலையாளர்கள் சிலருக்கு இதில் என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. ஆதரிப்பதா எதிர்ப்பதா என பலருக்கு தெரியவில்லை என்பதே உண்மை..

    அவர்கள் நலன் கருதி, இந்த பிரச்சினையில் நிலவும் மூன்று தரப்பு நியாயங்களை தொகுத்து தர விரும்புகிறேன்..

    1 . தண்டனை கூடாது....

    தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவர் , பல ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர். போதுமான தண்டனையை அனுபவித்துவிட்ட நிலையில், அவர்களுக்கு தூக்கு வழங்குவது தவறு. மேலும் அவர்கள் நிரபராதிகள். ஒரு பேட்டரி வாங்கி கொடுத்ததற்கு தூக்கு என்பது அக்கிரமம்.

    2 விடுதலை கூடாது..

    கொலை செய்வது மட்டும் அல்ல.. உடைந்தையாக இருப்பதும் குற்றமே... கொலை செய்ய கத்தி வாங்கி கொடுத்தால் , அதுவும் குற்றம் என்ற அடிப்படையில்தான் தண்டனை வழங்க்கப்ப்ட்டுள்ளது. தண்டனை காலதாமதம் ஆனதற்கு அடுத்தடுத்த அப்பீல்களே காரணம். எனவே இதை காரணம் காட்டி விடுதலை செய்ய சொல்வது தவறு. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் தூக்கு தண்டனை உண்டு. இதை கொடூரம் என நினைத்தால், எல்லா தண்டனையுமே கொடூரம்தான். பேசாமல் எல்லா தண்டனைகளையும் ஒழித்து விட்டு, நீதி மன்றங்களை அறிவுரை மையங்களாக்க முடியுமா? எனவே அவர்களை விடுதலை செய்ய கூடாது..


    3. யாருக்குமே தூக்கு கூடாது..

    பேட்டரி வாங்கி கொடுத்தது குற்றமா இல்லையா என்பது தேவை இல்லாத வாதம். தூக்கு தண்டனை ஒட்டு மொத்தமாக ஒழிய வேண்டும். ஆட்டோ சங்கர் உட்பட பொதும்க்களை கொல்லும் தீவிரவாதிகள் உட்பட யாருக்குமே தூக்கு கூடாது.. வேறு கடுமையான தண்டனை தரலாம்.  அமெரிக்காவில் கூட தூக்கு தண்டனையில் சிக்குபவர்கள் ஏழைகள்தான். எனவே இந்த தண்டனை அப்பாவிகளையே பாதிக்கிறது..


    இப்படி மூன்று வித கருத்துக்கள் நிலவுகின்றன.. உங்கள் கருத்து என்ன? 


    http://tamil-smsworld.blogspot.com



  • http://tamil-smsworld.blogspot.com

  • [Continue reading...]

    பதிவுலகம் அழிந்��ு வருகிறதா?

    - 0 comments


    ஃபேஸ்புக், பஸ் போன்றவற்றால் பிளாக் எழுதுவது குறைகிறதா? பிளாக் உலகம் அழிகிறதா என்பது கேள்வி..

    உடனடி ஃபீட் பேக், விவாதம் என சில வசதிகள் அவற்றில் இருப்பது உண்மை.. பிளாக்கில் பிசியாக இருந்த சிலர் அங்கு பிசியாக இருப்பதும் உண்மை..
    இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?

    ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை உண்டு.. ஆர்வம் உண்டு. இதில் உயர்ந்தது தாழ்ந்தது என எதுவும் இல்லை...

    சிலருக்கு பரபரப்பு ஏற்படுத்துவது பிடித்து இருக்கலாம். அரட்டை பிடித்து இருக்கலாம்..  கூட்டம் சேர்ப்பது பிடித்து இருக்கலாம்..

    இவர்களுக்கும் பிளாக் இடம் அளித்தது...  " என்ன எழுதவது..ஒன்றுமே இல்லை " என கூட சிலர் பதிவிடுவதும், அதற்கு சிலர்  விமர்சன பின்னூட்டம் இடுவதும் உண்டு..

    ஆனால் இந்து போன்ற கேளிக்கைகளுக்கு பிளாக்கை விட ஃபேஸ் புக், பஸ் போன்றவை உகந்தது என்பதால், மேற்கண்ட பாணியிலான எழுத்துக்கள் தற்போது பிளாக்கில் குறைந்து விட்டன.

    அதே நேரத்தில் , கூட்டம் சேர்ப்பதைப்பற்றி கவலைப் படாமல், தம் சிந்தனைகளை , நல்ல தகவல்களை பகிர்பவர்கள். முன்னைக்காட்டிலும் அக்கறை எடுத்து பிளாக் எழுத ஆரம்பித்துள்ளனர்..

    தற்போது , பிளாக்கில் ஆரவார எழுத்துக்கள் குறைந்து விட்டதால் , நல்ல எழுத்துக்களை , நிதானமாக படிக்க முடிகிறது..

    திரட்டிகளில் இனைத்தல், ஓட்டு  போடுதல் என்பதெல்லாம் தெரியாத சில தமிழ் அறிஞர்கள் பிளாக் எழுதி வருவது இப்போதுதான் என் பார்வைக்கு வந்தது .. கிரேட்.. மிக பயனுள்ளதாக இருக்கிறது..

    அதே போல , சரக்குள்ள பழைய பதிவர்கள் மட்டுமே இன்றும் எழுத்தை தொட்ர முடிகிறது என்பதால், அவர்களின் எழுத்தும் மேம்பட்டுள்ளது..

    இந்த நிலை எனக்கு மகிழ்வளிக்கிறது... தொடர்ந்து எழுதுங்கள் என அனைவரையும் கேட்டு கொள்கிறேன்



    http://tamil-smsworld.blogspot.com



  • http://tamil-smsworld.blogspot.com

  • [Continue reading...]
    - 0 comments
    [Continue reading...]

    பெட்ரோல் விலை லி���்டருக்கு 3 ரூபாய��� உயர்வு

    - 0 comments


    பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்வுபெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இந்த விலை உயர்வு வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. கடந்த 4 மாதங்களில் 2-வது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    சர்வதேசச் சந்தையில் கச்சா மேலும்படிக்க

    http://tamil-starmovies.blogspot.com



  • http://tamil-starmovies.blogspot.com

  • [Continue reading...]

    சபரிமலை நடை இன்ற��� திறப்பு

    - 0 comments


    சபரிமலை நடை இன்று திறப்புபுரட்டாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படும். மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து, வரும் 21ம் தேதி இரவு நடை அடைக்கப்படும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாத பூஜைகளுக்காகவும், பண்டிகைகளுக்காகவும் மேலும்படிக்க

    http://tamil-starmovies.blogspot.com



  • http://tamil-starmovies.blogspot.com

  • [Continue reading...]

    காங்கிரஸ் உறவில�� பாதிப்பு இல்லை: ���ருணாநிதி

    - 0 comments


    காங்கிரஸ் உறவில் பாதிப்பு இல்லை கருணாநிதிஉள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதால் காங்கிரஸ் கட்சியுடனான உறவில் பாதிப்பு இல்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்துக் கூறியதாவது:

    கேள்வி:-��ள்ளாட்சி மன்ற தேர்தல்களில் தனித்து மேலும்படிக்க

    http://tamil-starmovies.blogspot.com



  • http://tamil-starmovies.blogspot.com

  • [Continue reading...]

    தமிழகம், புதுச்ச���ரியில் இன்று மழ�� பெய்ய வாய்ப்பு

    - 0 comments


    தமிழகம், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகம், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேலும்படிக்க

    http://tamil-starmovies.blogspot.com



  • http://tamil-starmovies.blogspot.com

  • [Continue reading...]

    மனைவியைப் பிரிந��தார் ஓமர்

    - 0 comments


    மனைவியைப் பிரிந்தார் ஓமர்ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா தனது மனைவி பாயலை பிரிந்து விட்டதாக வியாழக்கிழமை தெரிவித்தார். அதேநேரத்தில் மறுமணம் செய்துகொள்ளக்கூடும் என்று கூறப்பட்ட யூகங்களை அவர் மறுத்தார்.

    காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லாவுக்கு வயது மேலும்படிக்க

    http://tamil-starmovies.blogspot.com



  • http://tamil-starmovies.blogspot.com

  • [Continue reading...]

    ஏழைகளுக்கு ஆடு, மாடு, மிக்சி, கிரை��்டர், வழங்கும் த��ட்டம் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

    - 0 comments


    ஏழைகளுக்கு ஆடு, மாடு, மிக்சி, கிரைண்டர், வழங்கும் திட்டம் ஜெயலலிதா தொடங்கி வைத்தார் ஏழைகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ஆடு, மாடுகள் வழங்குவது உள்ளிட்ட புதிய சிறப்பு திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.

    சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அனைத்து மேலும்படிக்க

    http://tamil-starmovies.blogspot.com



  • http://tamil-starmovies.blogspot.com

  • [Continue reading...]

    நோய் தடுக்கும் த���ம்பூலம்...!!!

    - 0 comments


    மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும். கிமு 2- ம் நூற்றாண்டில் இலங்கையில் எழுதப்பட்ட மகா வம்சம் என்னும் நூலில் வெற்றிலை மெல்லுவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தியாவில் மிதவெப்ப மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் வெற்றிலை வளர்க்கப்படுகிறது. வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு மும்பை போன்ற இடங்களில் இதன் இலைக்காக பயிரிடப்படுகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.
    செயல்திறன் மிக்க வேதிப்பொருள்கள்
    கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட்ராகால், ஆக்சாலிக் அமிலம் போன்ற பல வேதிப்பொருள் வெற்றிலையின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளது.

    மருத்துவப்பயன் உடைய பகுதிகள்...

    இலைகளும், வேர்களும் மருத்துவ பயன் உடையவை. இலைகளில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய் மூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகிறது. இலையின் சாறு ஜீரணத்திற்கு உதவுகிறது. வேர்பகுதி பெண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது. அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி,சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

    தலைவலி:

    வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

    தேள் விஷம்:

    இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

    சர்க்கரை வியாதி:

    சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

    அல்சர்:

    அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

    தாம்பூலம் தரித்தல்:

    நமது உடலில் சுரக்கும் 24 விதமான "அமினோ அமிலங்கள்" வெற்றிலையில் உள்ளன. செரிமானத்துக்கும் பெரிதும் உறுதுணையாகும் இந்த "அமினோ அமிலங்களை" வெற்றிலை மூலம் நாம் அடையும்போது ஜீரணம் எளிதாகின்றது. அதனால்தான் நம்முன்னோர்கள் உணவுக்குப் பின் "தாம்பூலம்" தரிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.


    வெற்றிலைப் பாக்குடன் கூடிய தாம்பூலம் "மங்கலப் பொருள்" என்பது பலர் அறிந்த உண்மை. ஆனால் நம் முன்னோர் அதில் மருத்துவப் பயனையும் புகுத்தியுள்ளனர். மிகச் சிறந்த "நோய்த்தடுப்பு ஆற்றல்" தாம்பூலத்தில் உள்ளது.வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இணைந்த தாம்பூலம், மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பினை தூண்டுவதுடன் ஒரு வித உற்சாக உணர்வினை தருகிறது. பெரும்பாலான நாடுகளில் வெற்றிலைக்கு பால் உணர்வை மற்றும் நரம்பு வலுவேற்றும் சக்தி இருப்பதாக கருதப்படுகிறது. அதனால்தான் புதுமண தம்பதியர்களுக்கு தாம்பூலம் தரிப்பது என்பது ஒரு சடங்காக நடைபெறுகிறது.

    நன்றி : தமிழ்கதிர்.




    http://tamil-actress-photo.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    கூடங்குளம் சாகு��்வரை உண்ணாவிரதத���தில் நம் பதிவர் "கூடல் பாலா"....!!!

    - 0 comments


    அணுமின் நிலையத்தை மூடக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறார்கள் மக்கள் கூடங்குளத்தில், இதில் நம் சக பதிவர் "கூடல் பாலா"வும் பங்கெடுத்துள்ளார். பதிவர்களாகிய நாமும் நம்மாள் முடிந்த ஆதரவினை கொடுக்கவேண்டும்.

    அரசின் இறுக்கத்தை தளர்த்த வேண்டும். ஜப்பானில் அணு நிலையத்தால் அவர்கள் படும்பாடு என்னான்னு நமக்கு நல்லாவே தெரியும், இன்னும் ஜப்பான் வெளியிடாத ரகசியங்களும் இருக்கு என்பதே உண்மை...!!!

    கூடங்குளத்தில் அணுமின் நிலையம் கட்டிய அரசாங்கம், அதற்கு ஆபத்து வந்தால் அதை தடுக்கும் உபகரனமில்லாமல் அதை கட்டிக் கொண்டிருக்கிறது, அங்கே வசிக்கும் நாமென்ன பூனையா, நாயா அல்லது குரங்கா சோதனை செய்ய...???

    பல மாநிலங்கள் விரட்டிவிட்ட இந்த திட்டத்தை ஏமாளிகள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள் என இங்கே கொண்டு வந்திருகிறார்கள், ஆரம்பத்திலே இருந்தே மக்கள் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள், செவிசாய்க்காத அரசு தொடர்ந்து உலையை கட்டி வருகிறது...

    அரசாங்கத்தின் முக்கியபுள்ளிகள் தலைநகரில் இருப்பதால் அவர்களுக்கு அச்சமுமில்லை, மக்களை குறித்த கவலையுமில்லை, நாடு எரியும்போது பிடில் வாசித்தவனின் வம்சத்தில் வந்தவர்களுக்கு ஈவு இரக்கம் கிடையாதுன்னு வரலாறே சாட்சி சொல்லுது...!!!

    பதிவர்களே இந்த போராட்டத்தில் நம் சக பதிவரும் நண்பனுமான "கூடல் பாலா" பங்கெடுத்திருப்பது பதிவர்களாகிய [[பதிவுலகம்]] நமக்கு பெருமை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    உடனே நெட்டை ஓப்பன் செய்யுங்கள் உங்கள் கண்டனத்தை தெரிவியுங்கள், இதற்கும் போராட அண்ணா ஹசாரே வரவேண்டாம், நாம் ஒவ்வொரு பேரும் அண்ணா ஹசாரே'யாக மாறுவோம், வெற்றிமாலை சூடுவோம் நன்றி......
     
    கொசுறு : கூடங்குளம் மக்கள் போராட்டத்தை மறைக்கவே பரமக்குடியில்  கலவரம் உண்டாக்கப்பட்டதான்னு மைல்டா நண்பன் ஒரு டவுட்டு சொல்றான், ஆண்டவனுக்கே வெளிச்சம்.
     
    கூடல் பாலா லிங்க் : http://koodalbala.blogspot.com/2011/09/blog-post_08.html#more
     
     


    http://tamil-actress-photo.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    பாக்கெட் நிறைய ப���்புகள் வாங்கிய ��ரு பதிவன்....!!!

    - 0 comments




    பஹ்ரைன் வரும்போது மும்பை ஏர்போர்டில் நான் வாங்கிய பல்புகளை சொல்லட்டுமா ஹி ஹி...

    11:55 am ஃபிளைட்டுக்கு ஒன்பது மணிக்கு என்னை பிக்கப் பண்ண [[நடந்தே போகலாம் பக்கம்தான் ஆனால் கனமழை]] காரில் வாரேன்னு சொன்ன நண்பனை காணாமல் போனை போட்டால், சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்கான் போனை மறதியில். எப்பிடியோ அங்கே இங்கே போனைப்பிடித்து அவன் வந்து சேர்ந்தான்.[[முதல் பல்பு]]

    அடிச்சி பிடிச்சி காரில் ஏறி ஏர்போர்ட் வந்தால் எங்கள் காரை டிப்பாச்சரில் நிற்க விடாமல் போலீஸ் துரத்த, என்னடான்னு பேய் முழி முழிச்சிட்டு காருக்கு பின்னால் திரும்பி பார்த்தால் பாம் ஸ்குவாட் கார் வந்து நிக்குது, பயந்து கொஞ்சம் தூரம் தள்ளி வந்து காரை நிறுத்துனோம். என்னான்னு விசாரிச்சால், பாம் புரளியை எவனோ கிளப்பி விட்டுருக்கான். [[ம்ஹும் ரெண்டாவது பல்பு]]

    கொஞ்சம் நேரம் கழிச்சி மறுபடியும் நான் போயி டிப்பாச்சர் கேட்ல போயி கேட்டேன் எனக்கு ஃபிளைட் லேட்டாகுது போகலாமான்னு, சரி சார் போகலாம்னு சொன்னார் மிலிட்டரி ஆபீசர் [[நம்ம ஆபீசர் அல்ல]] கொய்யால நான் போற நேரம்தான் பாம் வைக்கணுமா ராஸ்கல்...

    சரி வழி அனுப்ப வந்த குடும்பத்தை பை சொல்லிட்டு லக்கேஜை எடுத்துட்டு வருவோம்னு கார் பக்கம் வந்தேன், நண்பன் செல்லப்பாகிட்டே டிக்கியில் இருக்கும் லக்கேஜை வெளியே எடுக்க சொன்னேன், டிக்கி ஓப்பன் ஆகலை, மறுபடியும் ஒப்பன் ஆகலை, அப்புறமா சாவியை உள்ளே நுழைத்து திறந்தாலும் திறக்கவே இல்லை. யாருக்கெல்லாமோ போன் பண்ணி கேட்டும் ஒருத்தனுக்கும் தெரியலை. அது ஜெர்மன் காராம்.[[மூணாவது பல்பு]]

    மிலிட்டரிக்காரவணுவ துப்பாக்கியை பிடிச்சிட்டு  நிக்கானுக எங்களையையே முறச்சி பார்த்துகிட்டு, டிக்கி திறக்கவே இல்லை, என்னவெல்லாமோ செய்துபார்த்தும் திறக்கவில்லை. எனக்கு ஃபிளைட் நேரம் நெருங்கிட்டே இருக்கு, போலீஸ் வேற பாம் பாம்னு போகசொல்லுறான். செல்லப்பா டிக்கியை அமுக்கி குலிக்கிட்டே இருக்கான் போலீஸ் நெர்வெஸ் ஆகிட்டாணுக [[ஹி ஹி]]

    ஆனால் காரை மட்டும் போலீஸ் எவளவோ எடுக்க சொல்லியும் நாங்க எடுக்கவில்லை, ஹி ஹி நாங்க ஏர்போர்ட்ல பாக்காத பாமா ஹி ஹி...அப்புறமா நண்பன்கிட்டே கேட்டேன் வா சீக்கிரமா அருகில் உள்ள ஒர்க் ஷாப் போயி திறக்கலாம்னு, [[அது ஆட்டோமேடிக் லாக்]] மறுபடியும் கார் ஏரியா திரும்பியது.

    போகும் வழியிலேயே கேரேஜ் நண்பனுக்கு போனைப் போட்டு ரெடியா இருக்கசொல்லுன்னு  கிருஷ்ணாவுக்கு போனைப் போட்டான். அங்கேதான் பல்பு கிடைச்சது, அட நாதாரி டிக்கி லாக் ஆகிறிச்சின்னா பேக் சீட்டை முன்னாள் இழுத்தா, டிக்கிகுள்ளே இருக்கும் லக்கேஜை எடுக்கலாம் இது கூட தெரியாம எதுக்குடா வண்டி ஓட்டுறீங்கன்னு செம பரேடு ஹி ஹி...[[நான்காவது செமையான பல்பு]]

    அடுத்து ஏர்போர்ட் ஓடினோம் அப்பாடா செல்லப்பா சிரிச்ச சிரிப்பு இருக்கே [[டியூப் லைட் ராஸ்கல்]] என்னால எம்புட்டு திட்டமுடியுமோ அம்புட்டு திட்டு அவன் மட்டும் கேக்கும்படியா திட்டுனேன், என் வீட்டம்மாவுக்கு தெரிஞ்சின்னா அங்கேயே விழும் அடி வாயிலேயே...அப்பாடா எல்லா செல்லங்களிடமும் விடை பெற்று கிளம்பினேன் ஏர்போர்ட் உள்ளே....

    பல்பு இம்புட்டுதான்னு நம்பி உள்ளே போனேன். அங்கேயும் பெரிய பெரிய பல்பு வாங்கி பாக்கெட்டை நிரச்சதை  அடுத்தடுத்து சொல்றேன்...

    டிஸ்கி : ஆமா தெரியாமதான் கேக்குறேன் நான் போற இடமெல்லாம் ஒரே வன்முறையா நடக்குதே ஹி ஹி அதான் ஏன்னு புரியலை...!!! யாரோ இதுக்கு பின்னால இருந்து சதி பண்ணுராயின்களோ டவுட்டா  இருக்கு அவ்வ்வ்வவ்வ்வ்....

    முடியல : சரக்கடிச்சா கவிதையா வந்து கொட்டுமாம், அப்பிடின்னு எவன் சொன்னான்..?? என் நண்பன் ஒருவன் இதைகேட்டுட்டு போயி சரக்கடிச்சிட்டு கவிதை எழுதி கொண்டு வந்து என்னிடம் காட்டினான், ஐயோ ஒரே கெட்டவார்த்தையா எழுதி வச்சிருக்கான் வாய்கூச, டேய் இது என்னாடான்னு கேட்டா, சரக்கடிச்சா இப்பிடிதாம் மக்கா வருதுன்னு சொல்லிட்டு போறான் அவ்வ்வ்வவ்.....!!!



    http://tamil-actress-photo.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    பாக்கெட் நிறைய ப���்புகள் வாங்கிய ��ரு பதிவன் பார்ட் 2...!!!

    - 0 comments


    ஏர்போர்ட் டிப்பாச்சர் உள்ளே நுழைந்து, லக்கேஜை பேப்பரில் சுற்றி தந்த மராட்டி பெண்ணுக்கு இருநூறு ரூபாய் [[டிப்ஸ் அல்ல சார்ஜிங்]] குடுத்துட்டு, பஹரைன் தினார் சேன்ஜ் பண்ணும்படி பேங்கை தேடினேன், சுற்றி சுற்றி, பேங்கை தேடும் போது நான் இதே ஏர்போர்டில் வேலை செய்த அந்தநாட்கள் பசுமையாக நினைவில் வந்தது....

    அடேங்கப்பா இந்த ஏர்போர்டில் என் கால்படாத ஒரு இடமும் பாக்கி இருந்ததில்லை. இப்போது இருக்கும் பயங்கர மாற்றங்களும் கெடுபிடிகளும் அன்று சுத்தமாக கிடையாது, ஏன் அன்று போலீசே [[இமிகிரேஷன் தவிர]] கிடையாது, ஆனால் இன்று, ஏர்போர்ட் செக்கியூரிடி, போலீஸ், மிலிட்டரி, சி எஸ் ஐ இப்பிடி பயங்கரமான கண்காணிப்புகள் நடக்கிறது...!!!

    அன்றும் இப்படி அடிக்கடி பாம் பீசனி நடக்கும் எல்லாரும் ஏர்போர்ட்டை விட்டு வெளியே ஒடுங்கன்னு அலவன்ஸ் பண்ணுவாங்க, ஓடுவோம், பாம் இருந்துச்சா இல்லையான்னு வெளியே சொல்லமாட்டாங்க பாம் ஸ்குவாட் ஆளுங்க. இப்போ பாருங்க மும்பையில் குண்டு வெடிப்பு ஒரு பேஷனாகவே ஆகிருச்சி, ஈராக்குக்கு அடுத்து மும்பைதான்னு நினைக்கேன்...

    அப்பிடியே நான் நின்ற இடத்தை அவதானிக்கும் போது, நான் நின்ற இடம், அப்போது விசிட்டர்களுக்கான வரவேற்பு இடம் அது, இப்போது பேங்க் அது இது என செக்யூரிடி பாதுகாப்புடன் நடக்கிறது. சரி இனி நம்ம வேலையை சாரி பல்பை பார்ப்போம்...

    ம்ம்ம் அதோ தாமஸ்குக் பேங்க் தெரியுது. போனேன் கரன்சி ரேட் கேட்டேன் இம்புட்டுன்னு அவன் சொன்னது எனக்கு சந்தேகத்தை கிளப்பவே, அவன் ரெண்டு தினார் ஊழல் பண்ண பிளான் பண்ணது தெரிஞ்சதும் [[ஆமாம் பெரிய அண்ணா ஹசாரே]] கோபப்பட்டதும், என்னை மடக்கினான் பாருங்க, செர் [[சார்'தான்]] பேயிங் பையிங் பண்ணும்போது இந்த மாற்றங்கள் இருக்கும்னு எனக்கு சரியா பல்பு குடுத்து குழப்பினான் ஹி ஹி...ஆக ரெண்டு தினார் போச்சி....

    சரி இந்தியன் மணி எல்லாவற்றையும் தினாராக மாற்றிவிட்டு, எப்போதும் போவதுபோல இமிகிரேஷன் போயி போலீஸ் காட்டுன லைன்ல போயி நின்றேன், என் முறை வந்ததும் கவுன்டரில் போனேன் பெண் ஆபீசர் இருந்தாள்,  பாஸ்போர்ட் போர்டிங் கார்டை குடுத்ததும் இன்னும் ஏதோ வேணும்னு சைகை செய்தாள்.

    என்னா மேடம்னு கேட்டதும், இமிகிரேஷன் பார்ம் எங்கேன்னு கேட்டாள், மேடம் நாங்க லேண்ட் ஆகிற இடத்தில்தானே இமிகிரேஷன் பார்ம் குடுக்கணும் இங்கே எதற்குன்னு கேட்கவும், டென்ஷனான அவள் யோவ் நீயெல்லாம் படிச்சவந்தானே உள்ளே வரும்போது போர்டு எல்லாம் படிகிறதில்லையா என்ன ஊர்ல இருந்து நேரே இங்கேதான் வர்றியா..? [[மேடம் வீடு ஏர்போர்ட் பக்கத்துலதான்]] என்று விரட்ட...

    என்னடா எங்கே இருக்கு அந்த போர்டுன்னு பேக் அடித்தேன், என்ட்ரன்ஸ்லயே போர்டு இருந்தது [[ஹி ஹி பல்பு]]....இதனால் ஆகப்பட்ட எல்லாருக்கும் சொல்லிக்கொள்வது, வெளிநாடு போகிறவர்கள் டேக் ஆஃப் ஆகுற இடத்துலேயே இமிகிரேஷன் பார்ம் ஃபுல் பண்ணிட்டு போங்க ஏன்னா முன்னேமாதிரி இல்லை இப்போ...[[பயங்கரவாதம் காரணம்]]

    ம்ம்ம் அப்புறமா செக்கியூரிடி செக்கிங் எல்லாம் முடிஞ்சி, எனக்கு குடுக்கப்பட்ட அஞ்சாம் நம்பர் கேட் பக்கமா வந்துட்டு பயணிகளுடன் கலந்து அமர்ந்தேன். என் அருகிலிருந்த மலையாளி [[இங்கேயுமா]] பேச்சுகொடுத்தான் என்னோடு, அவனும் பஹ்ரைன் வருவதாக சொல்லவே சற்று நெருக்கமானோம்.

    கேட் திறக்க சமயம் எடுக்கவே, வாய்யா டியூட்டி ஃபிரீயை போயி சுற்றி பார்த்துட்டு வரலாம்னு கிளம்பினோம். எல்லா ஐட்டத்துக்கும் கடை இருக்கு சாப்பாடு அடக்கம், ஒவ்வொன்றிலும் இந்தியன் கரன்சி எவ்வளவு யு எஸ் டாலர் எவ்வளவுன்னு போட்டுருக்காங்க, பார்த்துட்டே சுற்றினோம்.

    திடீர்னு எங்கள் பிளேன் நம்பர் சொல்லி ஒரு அலவன்ஸ் சொன்னாங்க எங்களுக்கு புரியலை சத்தம் சரி இல்லாமல் இருந்தது, விரைவாக கேட் பக்கம் ஓடினோம், அது வேறொன்னும் இல்லை ஃபிளைட் ஒருமணி நேரம் லேட் [[பல்பு ஹி ஹி]]...

    டிஸ்கி : பல்பு முடியலை இன்னும் இருக்கு, அடுத்த பதிவோடு முடிக்கிறேன்.

    டிஸ்கி : நேற்று நூறுக்கும் மேற்பட்ட பதிவுகளும் மேலே போயி படிச்சி, பலருக்கு தமிமணம் இணைப்பும் குடுத்து, ஒட்டும் போட்டுருக்கேன். ஆனால் எனக்கு தமிழ்மணம் ஓட்டு ரொம்ப கம்மியா வருது ஏன்...??? manaseytrmanasey525@gmail.com வேண்ணா உங்க தமிழ்மணம் ஓட்டு பட்டையை கிளிக் பண்ணி பாருங்க இந்த ஐடி இருக்குதான்னு ஹி ஹி, எலேய்  சிபி நீ எதுக்குலேய் ஓட்டு போடாம ஓடினே ராஸ்கல்...???  இதனால் நண்பர்களுக்கு சொல்லி கொள்[[ல்]]வது என்னான்னா, ஓட்டு போடாதவங்க வீட்டு பாத்ரூமுக்கு எல்லாம் பாம்பு பார்சல் அனுப்பப்படும் [[ஹா ஹா ஹா ஹா இனி பார்ப்போம் ஹி ஹி]]





    http://tamil-actress-photo.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    பாக்கெட் நிறைய ப���்பு வாங்குன பதி��ன் பார்ட் முற்றும்...!!!

    - 0 comments



    நாசமாபோவ, பிளேன் ஒருமணி நேரம் லேட்டாகிருச்சென்னு கவலையில இருக்கும் போதே பசி எடுக்க ஆரம்பிச்சது. பிளேன்ல போயி சாப்பிடலாம்னா வயிறு கேட்டாதானே, அப்பிடியே சாப்பாடு கவுன்டர் பக்கமா நடந்து போனேன், கே எஃசி, மெக்டோனால், சைவம், அசைவம்னு நிறைய கவுன்டர்கள்  இருந்தன.

    கென்டக்கி சிக்கன் சாப்பிடவே மாட்டேன் நான், ஆனாலும் இங்கே சாப்பிட ஆசை வந்துவிட்டது, போயி கியூவில கொஞ்சநேரமா நின்னபிறகு  என் முறை வந்தது. போயி ரெண்டு பீஸ் உள்ள சிக்கன் ஆர்டர் பண்ணினேன். 105 ரூபான்னு மெனுவுல இருந்தது, ஒரு தினார் நோட்டை எடுத்து குடுத்ததும், வெடுக்கென சிக்கன் பிளேட்டை உள்ளே எடுத்து வைத்து விட்டு சொன்னான்... 

    தினார் வாங்கமாட்டோம் ஒன்லி இந்தியன் மணி அல்லது யு எஸ் டாலர்தான் வாங்குவோம்னு  கறாரா சொல்லிட்டான். நான் ஒட்டுமொத்தமா எல்லா காசையும் தினாரா மாற்றி  வச்சிட்டேன். இனி மாற்றவும் முடியாது காரணம் இமிகிரேஷன், செக்யூரிட்டி செக்கிங் தாண்டி வந்தாச்சுன்னா வெளியே போக அனுமதி இல்லை. ஸோ பல்பு....

    யாராவது இப்பிடி வெளிநாடு போகும்போது மொத்தமா காசை சேன்ஜ் பண்ணிறாதீங்க. ஏன்னா பிளேன் எப்போ எந்தநேரம் லேட்டாகும்னு சொல்லமுடியாது. [[பாம் புரளி பேஷனா இருக்கும் காலம் இது]] சின்னகுழந்தைகள் வச்சிருக்கவிங்க இன்னும் ஜாக்கிரதை.

    பசி, என்னடா பண்ணலாம்னு யோசிச்சிகிட்டே அந்த மலையாளி பக்கம் வந்தமர்ந்தேன். என்னான்னு கேட்டான், விஷயத்தை சொன்னேன். உடனே நோ பிராப்ளம் சேட்டா என்கிட்டே இந்தியா பணம் இருக்கு வா சாப்பிடலாம்னு அழைத்தான். நான் சொன்னேன் ஓகே நான் உனக்கு தினார் தருகிறேன்னு வற்புறுத்தி சொன்னாலும் சேட்டன் பணம் வாங்க மறுத்துவிட்டான் [[மலையாளிகளை இந்த விஷயத்தில் பாராட்டலாம்]]

    ஒரு சமோசா, வடை [[அந்த வடை இல்லை]] கவுன்டருக்கு போனோம், சமோசா, வடை, ஹய் மசாலா தோசையும் இருந்தது. எது வேண்டுமானாலும் 95 ருபீஸ், மசாலாதோசை ஆர்டர் பண்ணி கூப்பன் வாங்கி அடுத்த கேபின்ல குடுத்தோம். 

    தோசை சட்னி சாம்பார்லாம் ஒரே பிளேட்ல வச்சிகுடுத்தாங்க, டேபிள்ல வந்து சாப்பிட தோசையை பியித்தேன், தோசை சூடா இருக்கு உள்ளே இருக்கும் பட்டட்டோ மசாலா சில்லுன்னு இருக்கு, என்னடான்னு கேபின்காரனை  போயி கேட்டதுக்கு, இந்த ஏர்போர்ட்ல மசாலா தோசை இப்பிடித்தான் இருக்கும்னு கூலா சொன்னான் படுபாவி, ஃபிரிஜ்ல இருந்து அப்பிடியே எடுத்து போட்டு தந்துகிட்டு, சொல்றான் பாருங்க விளக்கம் ஹி ஹி [[பல்பு]]

    சரி ஃபிளைட் ரெடி ஆகிரிச்சின்னு சொன்னதும், நம்மை டைரக்டா பிளேன்ல எரோபிரிஜ் மூலமா பிளேன்ல ஏத்துவாயிங்கன்னு நம்பி போனேன் அங்கேயும் பல்பு, நேரே எங்களை படிமூலமா கீழே இறக்கி பஸ்சுல ஏறசொன்னாங்க [[அவ்வ்வ்வ்]] பஸ்சுல ஏசியும் கிடையாது மண்ணும் கிடையாது, [[ஏர் இந்தியா ஏர்வேஸ் ஒழிக]] நாலு கிலோமீட்டர் தள்ளி நின்ன ஒரு சக்கடா பிளேன்ல ஏனியில ஏறவச்சிட்டாங்க ம்ஹும் [[நல்லவேளை கயிறை தொங்கபோட்டு  ஏறவைக்கல]]

    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் கொஞ்சூண்டு சாப்பாடு மட்டும்தான் தருவார்கள். மேலும் நமக்கு டிரிங்க்ஸ் சம்திங் வேணும்னா காசு கொடுத்து வாங்கணும். என் அருகில் இருந்த வட இந்தியன் ஒருவர் என்னிடம் விசாரித்தார், டிரிங்க்ஸ் என்ன விலைன்னு தெரியுமான்னு, நான் எல்லாம் தெரிஞ்சவன் போல சொன்னேன் நிறைய காசு இருக்கும் வாங்காதேன்னு, அவனும் அப்பிடியான்னு கேட்டுகிட்டான்.

    சாப்பாடு வந்தது சாப்பிட்டோம், அப்புறமா பீர், பக்கார்டி ஒயிட் ரம், ஒயின் சகிதம் வந்தது கேஷ் ஒன்லின்னு, வட இந்தியன் நேரே ஏர்ஹோஸ்டல் கிட்டே கேட்டேவிட்டான் எம்புட்டு விலைன்னு அவ்வ்வ்வ்..... ரொம்ப சீப்பான ரேட், பக்கார்டி மினியேச்சர் ஒரு தினார், பீர் பாதி தினார். சாதாரணமா வெளியே வாங்குனா மினி பக்கார்டி ரெண்டரை தினார்...

    என்னை முறைச்சான் பாருங்க முறைப்பு [[பல்பு]] முறைச்சிட்டு, அஞ்சி மினி பக்கார்டி பாட்டலும் ஒரு பீரும் வாங்கிட்டு என்னை மறுபடியும் முறைத்தான், எப்பா குடிச்சிட்டு வானத்துலையே கலாட்டா பண்ணிருவானோன்னு பயம் வேற, குடிக்கிறவன் நேரே இருந்து குடிக்கவேண்டியதுதானே, என்னையே முறச்சி முறச்சி பார்த்தா என்னவாகிறது..???

    அந்த வட இந்தியன் போட்டோதான் மேலே இருப்பது, பிளேன்ல கூடிப்போனா அம்பது பேர்தான் இருந்திருப்போம், எல்லா இருக்கைகளும் காலியாக கிடந்தன. பின்னே ஏர் இந்தியாவா கொக்கா கொய்யால, கூடியவரை ஏர் இந்தியா'வை புறக்கணிப்பதே நல்லது எனப்பட்டது.

    டிஸ்கி : அப்பாடா தொடர் முடிஞ்சது தப்பிச்சிகிட்டீங்க [[நோ நோ கல்லெல்லாம் எடுக்கப்டாது]]




    http://tamil-actress-photo.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    கூடங்குளம் அணும��ன்நிலையத்தை மூட���்கோரி 15,000 பேர் உண���ணாவிரதம்-போராட்டம் தீவிரமடைகிற��ு

    - 0 comments


    கூடங்குளம்: நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இடிந்தகரையில் இன்று 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டுள்ளதால் அங்கு செல்லும் பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்படுகின்றன.


    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுக்காக இரண்டு அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. அதில் ஒரு அணு உலையில் இருந்து இந்த ஆண்டு இறுதிக்குள் மின் உற்பத்தி தொடங்கும் என்று அணுமின்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த இரண்டு மாதகாலமாக கூடங்குளத்தை சுற்றியுள்ள மீனவ கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீன்வளம் பாதிக்கும் என்றும், தங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடும் என்று அச்சமடைந்துள்ள மீனவர்கள் அணு மின்நிலையத்தை மூடக்கோரி கடந்த மூன்று நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்களுக்கு ஆதரவாக நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட மீனவர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடிந்தகரையில் குவிந்துள்ளனர்.

    25 பேர் கவலைக்கிடம்

    காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள 127 பேரில் 25 நபர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்களுக்கு உண்ணாவிரதப்பந்தலில் சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒருவர் மயங்கி விழுந்ததால் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதனிடையே தெற்கு பிரான்ஸில் உள்ள மொரகுல் அணு உலை நிலையத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளவர்களை அச்சமடையச்செய்துள்ளது. கூடங்குளம் அணுமின்நிலையத்தை ஒருபோதும் செயல்பட விடப்போவதில்லை என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

    போராட்டம் தீவிரமடைந்து வருவதால் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க இடிந்த கரை வழியாக செல்லும் பேருந்துகளை போலீசார் மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர். இருப்பினும் பொதுமக்கள் நடைபயணமாக இடிந்தகரைக்கு வந்த வண்ணம் இருப்பதால் பந்தல் நிரம்பி வழிகிறது. பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
    தமிழ்நாடு வணிகர்சங்கப்பேரவைத் தலைவர் த. வெள்ளையன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார். அப்போது கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூட வலியுறுத்தி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரும் 20-ம்தேதி கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். கூடங்குளம் அணுமின் நிலையத்துடன் கல்பாக்கம் அணுமின்நிலையத்தையும் மூடவேண்டும் என்று த. வெள்ளையன் கேட்டுக்கொண்டார்.

    இதனிடையே இடிந்தகரையை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது நாளாக கூடங்குளத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச்செல்லவில்லை. மாணவர்கள் இன்றும் வகுப்புகளை புறக்கணித்தனர். கூடங்குளத்தை சுற்றியுள்ள அரசு சுகாதார மையங்கள் அனைத்தும் 24 மணிநேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    இணையதள பதிவர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

    நன்றி : ஒன் இந்தியா.






    http://tamil-actress-photo.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    ஆழ்ந்த உறக்கம் வ���ண்டுமா....?

    - 0 comments


    ஊளை சதையை குறைக்கும் சோம்பு நீர்...

    இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.

    பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது. இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

    சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.

    பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

    சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும்.

    இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும், உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கும்.

    ஆழ்ந்த உறக்கத்துக்கு பூண்டு...

    கைவைத்தியத்துக்கு சிறந்தது பூண்டு. அதன் மருத்துவக்குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம். அதனால்தான் என்னவோ நம் முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த நம்மை பழக்கப்படுத்திவிட்டனர். அன்றாட உணவில் பூண்டை சேர்ப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளில் சில…….

    * குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது.

    * கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

    * தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும்.

    * உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு.

    ஆகையால்தான் கரையாத கொழுப்பு சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும்போது பூண்டை அவசியம் சேர்க்கின்றனர்.

    * இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். கனவுத் தொல்லை இருக்காது.

    * பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு.

    * பூண்டு ஒரு நார்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு உண்டு.

    * பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம். இதனால் வயிற்று உப்பிசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்.

    இஞ்சியின் மருத்துவ பயன்...

    இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.

    இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.
    இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.

    இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

    இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

    source from:http://www.koodal.com
    --------------------------------------------------


    டிஸ்கி : கூடங்குளம் போராட்டம், இன்று அண்ணன் சீமான் அங்கே செல்ல இருக்கிறார், விஜயகாந்தும் ஆதரவாக அறிக்கை விட்டு இருக்கிறார். நல்ல சேதி கிடைக்க பதிவர்கள் முன் வரவேண்டும், காரணம் இந்த போராட்டத்தில் கூடல்பால உட்பட பல பதிவர்கள் இருப்பதாக அறிகிறேன் நன்றி.




    http://tamil-actress-photo.blogspot.com



  • http://tamil-actress-photo.blogspot.com

  • [Continue reading...]

    இரு பதிவர்கள் சந���திக்கிறார்கள்!

    - 0 comments


    பதிவர் மதுரை சொக்கன் நேற்று மாலை பதிவர் சென்னை பித்தனைச் சந்தித்தார். அப்போது அவர்கள் பேசிக்கொண்டவை……….

    செ.பி-வாங்க சொக்கன்.நல்லாருக்கீங்களா?

    சொக்கன் -திருச்சிற்றம்பலம்.நலமே.நட்சத்திர வாரத்தைச் சிறப்பாக முடித்து விட்டீர்கள். வாழ்த்துகள்.

    செ.பி-எல்லாம் உங்கள் வாழ்த்துகளின் பலம்தான்.

    சொக்கன் – நான் ஏழு நாட்களின் பதிவுகளையும் படித்தேன்.ஆறு நாட்கள் சிறப்பாக இருந்தன. கடைசி நாள் அப்படி ஒரு பதிவு தேவையா?சர்தார்ஜி ஜோக்கைச் சொல்கிறேன்.ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்!

    செ.பி.-இதெல்லாம் சும்ம ஜாலிதான் சொக்கன்.

    சொக்கன் – என்ன ஜாலி?எதை வேண்டுமானாலும் எழுதுவதா?படிப்பவர்களுக்கு நல்ல கருத்துக்களைச் சொல்ல வேண்டாமா?

    செ.பி-.சொக்கன்!நான் ஒரு போதகன் அல்ல.ஒரு பல்சுவைப் பதிவன்.நீங்கள் சொல்கிறீர்கள் நல்ல கருத்துகள் மட்டுமே சொல்ல வேண்டும் என்று.பாருங்கள்-அன்பே சிவம் என்ற பதிவுக்குக் கிடைத்த தமிழ்மண வாக்குகள்-14;அன்னையைப் போலொரு பதிவுக்கு 15 ;ஆனால் இந்த புரியாத புதிர் என்ற சர்தார்ஜி ஜோக் பதிவுக்கு 17 வாக்குகள்.வாசகர்களின் விருப்பம் எப்படி இருக்கிறது என்பதைத் தானே இது காட்டுகிறது?அவர்கள் விருப்பத்தை நான் பூர்த்தி செய்கிறேன். அவ்வளவுதான்!

    சொக்கன் –சினிமாக்காரர்கள் மாதிரிப் பேசுகிறீர்கள் பித்தன்.ரசிகர்கள் விரும்புகிறார்கள், நாங்கள் கொடுக்கிறோம் என்று அவர்கள்தான் சொல்வார்கள்.இப்படிச் சொல்கிறீர்களே,இந்த வாரத்திலேயே வந்த "எழுத்தறிவித்தவன் -சிறுகதை"க்கு 22 வாக்குகள் கிடைத்தனவே.அதை சௌகரியமாக ஒதுக்கி விட்டீர்கள்.நான் சொல்வது இதுதான் .இந்த மாதிரிப் பதிவெல்லாம்,பிரபா,சிவகுமார்,கோகுல் போன்ற இளைஞர்கள் எழுதலாம்.நீங்கள் எழுதலாமா?

    செ.பி-ஐயா,நீங்கள் சொல்வது போல் நான் எழுத ஆரம்பித்தால் உங்களை மாதிரி ஈ ஓட்ட வேண்டியதுதான்.

    சொக்கன் –ஈ ஓட்டினாலும் பரவாயில்லை.நான் நல்லதையே சொல்வேன்.அது தவிர மொய் வைத்து மொய் எடுக்கும் வழக்கம் எனக்கு வேண்டாம்.நான் சொல்லும் கருத்துக்களை விரும்புவோர் மட்டும் வரட்டும்;படிக்கட்டும்.உங்களுக்கு ஏற்கனவே சுமாரான எண்ணிக்கையில் தொடர்பவர்கள் இருக்காங்க!நல்லதே எழுதலாம்.

    செ.பி- இதெல்லாம் ஒரு போதை மாதிரி சொக்கன்!பழக்கமாயிட்டா விட முடியாது.நீங்க ஏதோ திருமூலர்,ஆன்மீகம் என்று காலத்தை ஓட்டறீங்க. எல்லோராலும் அது முடியுமா?உங்க பாணியில் நீங்க போங்க;என் பாணியில் நான் போகிறேன்.நீங்க கிழக்கு;நான் மேற்கு.

    "East is east and west is west and never the twain shall meet" .இதை இத்தோடு நிறுத்தி விட்டுக் காஃபி சாப்பிடுவோம் வாங்க!"

    இருவரும் காஃபி சாப்பிட ஆரம்பித்தனர்.



    http://devadiyal.blogspot.com



  • http://devadiyal.blogspot.com

  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger