Wednesday 29 February 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: எதிர்க்கட்சிகள் சட்டமன்ற அவசரக் கூட்டத்தை கூட்டவேண்டும்; ஹிண்ட்ராப்

- 0 comments
 

இலங்கை அரசின் அரக்க குணத்தை அப்பாவி தமிழர்களின் மீது ஏவிவிட்டதின் பலனாக ஆயிரமாயிரம் தமிழின இளைஞர்களின் பிணக்குவியல்களில் தம் கணவனையும், தந்தையையும், தமையனையும் தேடிய தமிழ் பெண்களின் கண்ணீருக்குப் பதில் சொல்ல வேண்டிய தருணம் வெகு அண்மையில் கண்ணுக்கெட்டும் தூரத்தில் தெரிகிறது என்கிறார் ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் தேசிய ஆலோசகர் திரு.நா.கணேசன்.

இலங்கைத் தமிழர் படுகொலை குறித்து இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் 47 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமைகள் சபையில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இந்த தீர்மானத்தை ஆதரித்து 25-க்கும் அதிகமான நாடுகள் இதுவரை தம்முடைய ஆதரவை தெரிவித்துள்ளன.

ஆனால் துரதிஷ்டவசமாக, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா ஆதரிக்கப் போவதில்லை என்ற செய்திகள் இப்போது நம் காதுகளுக்கு எட்டுகின்றன! இந்த முடிவிற்கு பின்னால் இருக்கும் நியாயம்தான் நமக்கு புரியவில்லை.

கண் முன்னே நடந்த ஒரு இன படுகொலையை, அப்பட்டமான மனித உரிமை மீறல்களை, வலுவிழந்த சிறுபான்மையினர் மீது பெரும்பான்மை மக்களை பிரதிநிதிக்கும் அரசின் அடாவடி தனத்தை மலேசியா கண்டிக்க முன்வராததை எவ்வகையில் நியாயம் கற்பிக்க முயல்கிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இலங்கைக்கு சாதகமாக நடந்து கொள்வதால் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இலங்கை அரசின் இனவாதத்தை அம்னோ தலைமையிலான பாரிசான் கூட்டணி அரசாங்கம் அமோதிப்பதாக நாம் அர்த்தம் கொள்வதை தவிர வேறு வழி இல்லை. ஒருவேளை அம்னோ அரசாங்கம் இங்குள்ள தமிழர்களின் மீது மேற்கொள்ளும் இன ரீதியான பாகுபாட்டினை நியாயபடுத்த சிங்கள அரசின் தயவை பெரும் நோக்கில் இந்த முடிவை எடுத்திருப்பார்களோ என்றும் அவர் தமது ஆதங்கத்தை வெளிபடுத்தினார்.

இவ்விவகாரத்தில் மலேசியத் தமிழர்களுக்கு துணையாக, அதாவது பாரிசன் அரசுக்கு நெருக்குதல் அளிக்க எதிர்கட்சிகள் முன்வரேவேண்டும். எதிர்கட்சித் தலைவர்கள் நமக்கு ஆதரவாக குரல் கொடுப்பதோடு மாத்திரம் நின்று விடாமல் தங்கள் கை வசம் இருக்கும் நான்கு மாநில சட்டமன்றங்களையும் அவசரமாக கூட்ட வேண்டும். அந்த அவசர கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை அங்கீகரித்து ஏற்று கொண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதோடு ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மலேசிய அரசு ஆதரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அந்த சட்ட மன்ற அவசர கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் ஆலோசனை அளித்தார்.

இந்தியா, இலங்கைக்கு அடுத்து உலகில் அதிகமான தமிழர்கள் வாழும் நாடு மலேசியா என்ற நிலையில் இந்த தீர்மானம் குறித்து இந்நாட்டு அரசு எடுக்கும் முடிவை மலேசிய தமிழர்கள் வெகு கூர்மையாக கவனித்து கொண்டிருகிறார்கள் என்று தமது ஊடக அறிக்கையில் திரு. கணேசன் தெரிவித்தார்.

இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை மலேசிய அரசு ஆதரிக்கும் வகையில் இந்நாட்டு தமிழர்கள் ஒன்று திரண்டு நெருக்குதல் அளிக்க முற்படவேண்டும். அந்த நோக்கதிற்காக நடத்தப்படும் நிகழ்வுகளுக்கு ஹிண்ட்ராப் தமது ஆதரவை நல்கும் என்றும் அவர் கூறினார்.

இது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்றோ, வெறும் தமிழர்களின் பிரச்சனை என்றோ சாக்கு போக்கு சொல்லாமல் செயலில் இறங்கி இலங்கை தமிழர்களுக்கு நம் ஆதரவை தெரிவிக்கும் நேரம் இது.

ஒரு குறிப்பிட்ட இனத்தின் பிரச்சனையாக, குறுகிய மனப்போக்கோடு இந்த விவகாரத்தை மலேசிய அரசாங்கம் அணுகாமல், மனிதாபிமானத்திற்கு எதிரான, அப்பாவி சிறுபான்மையினருக்கு எதிரான, சத்தியம், நியாயம் தர்மத்திற்கு எதிரான ஒரு காட்டுமிராண்டி தனமான அரசின் போக்கை கண்டிக்கும் பொறுப்புமிக்க ஒரு நாட்டின் முடிவாக அது அமையவேண்டும் என்பது ஹிண்ட்ராபின் எதிர்பார்ப்பாகும் என்றார் கணேசன்.

[Continue reading...]

கிளிநொச்சியில் மாணவிகளை காதலித்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த படைச் சிப்பாய்!

- 0 comments

கிளிநொச்சியில் மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட படைச் சிப்பாய் மீது பொலிஸார் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று துறைசார் அதிகாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி நகரில் கடைமையாற்றும் சிப்பாய் ஒருவர் 16 வயதான மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி அவரை மதவாச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். தமது மகளைக் காணாத பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

எனினும் அடுத்த நாள் காலை மதவாச்சியில் குறித்த மாணவியை கைவிட்டு தலைமறைவாகிவிட்டார் சிப்பாய். பின்னர் பொலிஸார் குறித்த மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

எனினும் மாணவியை துஸ்பிரயோகத்திற்கு ஆளாக்கிய படைவீரர் மீது எந்த நடவடிக்கையையும் பொலிஸார் எடுக்கவில்லை. 16 வயதுக்குட்பட்ட பெண்களை அவர்களது சம்மதத்துடன் திருமணம் செய்தாலும் கூட அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது வழமை. எனினும் இந்தச் சிப்பாய் மீது பொலிஸார் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பது குறித்து துறைசார் அதிகாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த சிப்பாய் இந்த மாணவி தவிர்ந்த மேலும் மூன்று மாணவிகளை காதலித்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

[Continue reading...]

பண பரிமாற்றம்.

- 0 comments
 
 
 
2 ஜி வழக்கின் பெரும்பாலான பணபரிமாற்றம் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மூலம் நடைபெற்றதாக பரபரப்பு குற்றம் சாட்டிய சுப்பிரமணியசாமி கார்த்தி சிதம்பரம் சேர்மனாக உள்ள 12 கம்பெனிகள் பட்டியலையும் வெளியிட்டார். இதுபற்றி செய்தியாளர்களிடம் சுப்பிரமணியசாமி கூறியதாவது 2 ஜி வழக்கு விசாரணையில் தி.மு.க வை சேர்ந்த அமைச்சர் பழனி மாணிக்கம் தலையிடுகிறார். இவர் தலையீடு குறித்து சிபிஐ மத்திய விஜிலன்ஸ் கமிட்டியிடம் புகார் அளித்துள்ளது.2 ஜி சம்பந்தமாக தமிழ்நாடு குற்றவாளிகளின் சொத்து பற்றி கணக்கெடுப்பு பற்றி திருச்சியை சேர்ந்த ஆல்பர்ட் மனோகரன் என்பவரை நியமித்துள்ளனர்.ஆனால் இதுபற்றி எந்த விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை இதுபற்றி விசாரணைக்கு இடையூராக இருக்கும் மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கத்தை நீக்க வேண்டும் அல்லது வேறு துறைக்கு மாற்ற வேண்டும் என்று பிரதமருக்கு தான் கடிதம் எழுதியதாக தெரிவித்தார்.மேலும் கூடங்குளம் அணுஉலை விவகாரத்தில் வெளிநாட்டு சக்திகள் உதவி வருகின்றனர் என்றும் இதுபற்றி தான் கூறிய கருத்தையே பிரதமர் மன்மோகன் சிங்கும் தற்போது கூறியுள்ளார். கிளர்ச்சியாளர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்படாததால் கூடுதல் மின் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் கிளர்ச்சி நடத்தும் அமைப்புகளுக்கு எதிராக மத்திய முதன்மை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) ரூ2100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியசாமி கூறினார். மேலும் 2 ஜி வழக்கில் சிதம்பரத்தை தாம் விடப்போவதில்லை என்றும் மேலும் பல ஆதாரங்களை வரும் மார்ச் 16 அன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறினார்.டில்லி உயர்நீதிமன்றத்தில் தனது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி தனது தீர்ப்பில் 70 பத்திகளில் 68 பத்திகளை தனக்கு ஆதரவாக எழுதிவிட்டு 2 பத்திகளை சிதம்பரத்திற்கு ஆதரவாக எழுதியுள்ளார்.என்னுடைய வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி சிதம்பரம் 2ஜி வழக்கில் ராசாவுடன் ஈடுபாடு உண்டு நான் கூறிய ஆதாரங்களை நீதிபதி உண்மை என்று கூறிவிட்டு சிதம்பரம் கிரிமினல் மனப்பான்மையோடு செயல்படவில்லை என்று கூறி ரத்து செய்தது ஏற்புடையதல்ல.
 
ஊழல் விவகாரத்தில் பதவியை துஷ்பிரயோகம் செய்தால் மட்டும் போதாது கிரிமினல் மனப்பானமையோடு செயல்பட்டாரா இல்லையா என்பதை வழக்கு விசாரணை தான் முடிவு செய்ய வேண்டும்.சிதம்பரம் கார்த்தி சிதம்பரம் மூலம் தான் எல்லா பணப் பரிமாற்றங்களும் நடந்தது 12 கம்பெனி மூலமாக அவர் எல்லா பணத்தையும் முதலீடு செய்துள்ளார். சிதம்பரம் கர்நாடகத்தில் உள்ள 25 சதவிகித இடங்களுக்கு முதலாளி. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தையும் குற்றவாளிகளை சேர்க்கலாமா என்று யோசிக்கிறேன்.என்று கூறி கார்த்தி சிதம்பரம் சேர்மனாக உள்ள 12 கம்பெனிகளின் பெயர் பட்டியலையும் சுப்பிரமணியசாமி வெளியிட்டார்.12 கம்பெனிகளுக்கும் கார்த்தி சிதம்பரம் சேர்மனாக இருப்பதாக கூறினார். அதில் 2 கம்பெனிகளுக்கு 2ஜி பணம் பெருமளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவை பற்றி விரைவில் ஆதாரத்தோடு வெளியிடுவேன் என்று கூறினார்.
காய்மக்கடு எஸ்டேட் லிமிடெட், கபாலீஸ்வரர் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் ஆகியவை கார்த்தியின் சில கம்பெனிகள் ஆகும்.
========================================================================
இவர்களுக்கு எதற்கு இவை எல்லாம்?
====================================
 
இந்தியாவின் மூன்றாம் நிலை அணுமின் நிலையத் திட்டத்தை முறியடிக்கவே கூடங்குளம் அணுமின் எதிர்ப்புப் போராட்டம் நடைபெறுகிறது என இந்திய உயர் அணுமின் திட்ட நிபுணர்கூறியுள்ளார்.


ஹைதராபாத்தில் அணு எரிபொருள் தரக்கட்டுப் பாடு வகை குறித்த மாநாடு திங்களன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய அணுமின் கழக நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.கே.ஜெயின், அணுசக்தி ஆணையத் தலைவர் (ஏஇசி) ஸ்ரீகுமார் பானர்ஜி செய்தியாளர்களி டம் கூறுகையில், அணுமின் நிலையம் தொடர்பான பாதுகாப்பு, தரம், சுகாதா ரம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த போதும் எரி பொருள் மறுசுழற்சி குறித்து கேள்வி எழுப்பு கிறார்கள் என்றனர்.

டாக்டர் ஜெயின் பேசும்போது", கூடங்குளம் அணு மின்நிலையக் கட்டுமானம் 2002ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முதல் உள்ளூர் மக்கள் ஒற்றுமையுடன், சுமூகமாக கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் புகு ஷிமா (ஜப்பான்) அணுமின் நிலைய விபத்து குறித்து எழுந்த அச்சம் குறித்து கூடங்குளம் மக்களுக்கு விளக்கப்பட்டு சுமூகநிலை ஏற்பட்டது. ஆறு மாதத் திற்கு பின்னர் செப்டம்பர் மாதம் மீண்டும் புகுஷிமாபற்றிய பய உண்ரவு யாரால்அங்கு மக்களிடையேபுகுத்தப்பட்டு தலைதூக் கியது எப்படி?


அணுமின்நிலைய பாது காப்பு குறித்து துவங்கிய போராட்டம், தற்போது அணு மின்நிலையமே தேவை யில்லை என்கிற தீவிரவாதத் துடன் நடக்கிறது .

இப்போது போராட்டக்காரர்கள் அணுமின் நிலைய பாது காப்பு குறித்து கேட்கப்பட வில்லை. அணுமின் திட்டத் தில் மறுசுழற்சி மற்றும் இரண்டாவது நிலை குறித்தே உள்ள. அதிவேக ஈனூலைக்கு புளூட்டோனி யம் எங்கே தயாரிக்கப்ப டும்? என கேள்விக் கேட் கிறார்கள்.அணு உலை இயக்க,அணு உலை கட்டமைப்பு வரைபடங்கள் கேட்கிறார்கள்.இது அணு உலை பற்றி தெரியாத நிபுணர்களுக்கே குளப்பம்தரும் வரைபடங்கள்.நாட்டின் ரகசிய ஆவண்ங்கள்.அது இவர்களுக்கு எதற்கு?




இது இந்திய அணுமின் திட்டத்தின் மீதான தாக்குதல்.சாதாரண மக்கள் இப்படி அறிவியல் பூர்வமாகக் கேட்கமாட்டார்கள்.உள்நாட்டு ரகசியங்களை இப்படிகேட்பது எதற்காக யாருக்காக என்ற கேள்விகள் எழும்புகிறது.அதனால்தான் அந்நிய நாட்டின் கைகள் இந்த போராட்டத்தின் ப்ன்னணியில் இருப்பதாக உணரப்படுகிறது. அணு தொழில்நுட்பத்தில் உலகின் தலைமையாக, தோரியம் அணு உலை திட்டத்திற்குச் செல்ல விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

கூடங்குளத்தில் மறு சுழற்சி ஆலை இல்லை. இந்த நிலையில், மறுசுழற்சி பற்றி கேள்வி எழுப்புவது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 2032ம் ஆண்டு காலகட்டத்தில் இந்திய அணுமின் உற்பத்தியை 63 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்த இலக்கு உள்ளது. இதில் இறக்குமதி செய்யப் படும் அணு உலைகள் மூலம் 35 ஆயிரம் - 40 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட உள்ளது என ஜெயின் கூறினார்.
--------------------------------------------------------------------------------------------

[Continue reading...]

எண்கெளன்டர் விவகாரத்தில் மாபெரும் முரண்பாடுகள்!

- 0 comments
 
 
 
வேளச்சேரியில் ஐந்து கொள்ளையர்கள் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட விவகாரம் இன்னும் அடங்கவில்லை. பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக கொள்ளையர்களில் ஒருவன் காலில் ஷூ இறுக்கமாக அணிவித்தபடி இருந்ததைப் பலரும் சுட்டிக் காட்டி இப்படித்தான் ஷூ போட்டு, ஜீன்ஸ் போட்டு ஒருவன் தூங்கிக் கொண்டிருந்திருப்பானா என்றும் கேட்கின்றனர்.
 
போலீஸ் என்கவுண்டர்கள் தமிழகத்திற்குப் புதிதல்ல. அவ்வப்போது நடந்தபடிதான் இருக்கிறது - மனித உரிமை ஆர்வலர்கள் இதை தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகின்ற போதிலும். ஆனால் இதுவரை இல்லாத பெரும் பரபரப்பையும், பலத்த சர்ச்சைகளையும் வேளச்சேரி என்கவுண்டர் கிளப்பி விட்டு விட்டது. காரணம் ஒட்டுமொத்தமாக ஐந்து பேரை, அதுவும் வட மாநிலத்தவர்களை போலீஸார் குட்டியூண்டு வீட்டுக்குள் வைத்து என்கவுண்டர் செய்ததால்.
 
ஒரு சாதாரண வீட்டு வசதி வாரிய வீட்டுக்குள்தான் இந்த என்கவுண்டர் நடந்துள்ளது. அது ஒரு சிங்கிள் பெட்ரூம் வீடு. வீட்டுக்குள் நுழைந்தால் வீடு முடிந்து விடும், ஒரு ரூமிலிருந்து அடுத்த ரூமுக்கு வந்தால், தெருவே வந்து விடும். அப்படி ஒரு தக்கனூண்டு வீட்டுக்குள் இருந்த ஐந்து பேரை கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட போலீஸார் கையில் பெரிய பெரிய துப்பாக்கிகளுடன் முற்றுகையிட்டும் உயிரோடு பிடிக்க முடியாமல் போய் விட்டதா என்பதுதான் மனித உரிமை ஆர்வலர்கள் முன்வைக்கும் மிகப் பெரிய கேள்வி.
 
போலீஸார் தேடி வரும் வினோத் குமார் என்ற கொள்ளையன் இந்த வீட்டுக்குள்தான் இருக்கிறான் என்று போலீஸாருக்குத் தகவல் வருகிறது. இதையடுத்து போலீஸ் படை துணை கமிஷனர் சுதாகர் தலைமையில் அங்கு விரைகிறது.
 
நள்ளிரவில் தகவல் வந்ததாக போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார். ஆனால், 10 மணிக்கே அந்தப் பகுதியில் இருந்த வீடுகளையும் அணுகிய போலீஸார் கதவை மூடிக் கொண்டு உள்ளேயே இருக்குமாறும், வெளியே வரக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.
 
பின்னர் அந்த வீட்டை முற்றுகையிடுகிறது போலீஸ் படை. முன்னெச்சரிக்கையாக வீட்டின் வெளிப்புறத்தைப் பூட்டி விடுகிறார்கள். பிறகு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கதவைத் தட்டுகிறது போலீஸ். உள்ளே இருந்தவர்கள் கதவைத் திறப்பதற்குப் பதில் ஜன்னல் வழியாக பார்க்கின்றனராம். போலீஸார் இருப்பதைப் பார்த்ததும் உஷாரான அவர்கள் ஜன்னல் வழியாக போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக போலீஸ் தரப்பு கூறுகிறது.
 
இதையடுத்து போலீஸார் முதலில் ஜன்னல் வழியாகவும், பின்னர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து சுட்டதாகவும், இதில் ஐந்து பேரும் கொல்லப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
 
இதுவரை நடந்தது ஒரு சம்பவத்தின் தொகுப்பு. இதுதொடர்பாக தற்போது மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பி வரும் சந்தேகங்கள், கேள்விகள் குறித்துப் பார்ப்போம்...
 
1. இறந்த ஐந்து பேருமே பேண்ட்-சட்டை அணிந்தபடி இருந்திருக்கிறார்கள். மேலும் கால்களில் ஷூக்களும் உள்ளன. லேஸ் கூட கழற்றப்படாமல் கட்டியபடி இருக்கிறது. இப்படி இரவில் யாரேனும் தூங்குவார்களா என்பது முதல் சந்தேகம்.
 
2. வீட்டின் சுவற்றில் எந்தவிதமான ரத்தக்கறையும், ரத்தச் சிதறல்களும் இல்லை. மேலும் ஜன்னல் வழியாக கொள்ளையர்கள் சுட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அப்படிச் சுட்டதற்கான எந்தவிதமான வடுவும் இல்லை. ஒரு வேளை சுட்டிருந்தாலும் போலீஸார் திருப்பிச் சுட்டிருப்பார்கள்தானே. அப்படி சுட்டிருந்தால் ஜன்னல் கம்பிகள் சேதமடையாமலா இருந்திருக்கும். ஒரு வேளை ஜன்னல் கம்பிகளுக்குள் தோட்டாக்கள் லாவகமாக புகுந்து செல்லக் கூடிய வகையில் படு திறமையாக போலீஸார் சுட்டார்களா என்பது இன்னொரு சந்தேகம். விஜயகாந்த் படத்தில்தான் இப்படிப்பட்ட காட்சிகளப் பார்க்க முடியுமே தவிர நிஜத்தில் இது சாத்தியமில்லை.
 
3. ஐந்து பேரும் சுட்டார்கள், பதிலுக்கு நாங்களும் சுட்டோம் என்று போலீஸார் கூறுவதை ஏற்றுக் கொண்டாலும் கூட துப்பாக்கிச் சண்டை நடந்ததற்கான எந்தவிதமான அறிகுறியும் தங்களுக்குத் தெரியவில்லை, துப்பாக்கி் சண்டை நடந்தால் சத்தம் கேட்குமே, அது கூட தங்களுக்குக் கேட்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இதற்குப் போலீஸ் தரப்பு விளக்கம் என்ன?. (இதனால் வெளியில் எங்கேயோ வைத்து இவர்களை போட்டுத் தள்ளிவிட்டு இந்த வீட்டுக்குள் கொண்டு வந்து உடல்களை போட்டுவிட்டு, சம்பவம் அங்கு நடந்தது போல காட்டியிருக்கிறார்கள் என்கிறார்கள், இந்த எண்கெளன்டர் நாடகத்தை ஏற்க மறுப்போர்).
 
4. போலீஸார் கொள்ளையர்களை முற்றுகையிட்ட பின்னர் அப்பகுதியில் இருந்த வீடுகளை மூடிக் கொள்ளுமாறும், யாரும் எட்டிப் பார்க்கக் கூடாது என்றும் மக்களை எச்சரித்தது ஏன்?.
 
5. உள்ளே இருப்பது பயங்கரமான கொள்ளையர்கள் என்று போலீஸார் நம்பினால், அவர்களை உயிருடன்தானே பிடிக்க முயற்சித்திருக்க வேண்டும். அவர்களைப் பிடித்து விசாரித்தால்தானே அவர்களுக்கு எந்தெந்த குற்றத்தில் தொடர்பு உள்ளது என்பது தெரிய வரும். அப்போதுதான பல வழக்குகளுக்கு விமோச்சனம் கிடைக்கும். ஐந்து பேரும் பெரிய அளவிலான ஆயுதங்கள் வைத்திருந்ததாக தெரியவில்லை. அவர்களை, ஸ்காட்லாந்து யார்டுக்குப் பிறகு நாமதான் என்று பெருமையுடன் கூறிக் கொள்ளும் தமிழக போலீஸாரால் உயிருடன் பிடிக்க முடியாமல் போனது ஏன். அது காவல்துறைக்கே அவமானமாக இருக்கிறதே. அட, மயக்க மருந்துப் புகையை உள்ளே செலுத்தியாவது பிடித்திருக்கலாமே...
 
இப்படி ஏகப்பட்ட கேள்விகளையும், சந்தேகங்களையும் மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்புகிறார்கள். ஆனால் போலீஸ் தரப்பி்ல இதற்குப் பதில் இல்லை. (முதல்வர் ஜெயலலிதாவும், சம்பவம் ஏதோ குஜராத்தில் நடந்தது மாதிரி இந்த சம்பவம் குறித்து எந்தக் கருத்தையும் வெளியிடாமல் கனத்த அமைதி காத்து வருவதும் குறிப்பிடத்தக்கது)
 
அதேசமயம், இது திட்டமிட்ட என்கவுண்டர்தான். இன்னும் சொல்லப் போனால் போலீஸார் வேண்டும் என்றேதான் ஐவரையும் கொன்றார்கள் என்றும் ஒரு தகவல் உலவுகிறது.
 
அதாவது சம்பவம் நடந்த புதன்கிழமை காலையே வினோத் குமார் போலீஸில் சிக்கி விட்டான். அவனை தங்களது கஸ்டடியில் வைத்து போலீஸார் விசாரித்தபோது உண்மைகளைக் கக்கியுள்ளான். தான் தங்கியிருந்த வீட்டையும் அவன் கூறியுள்ளான். இதையடுத்து மற்ற நால்வரையும் அள்ளிக் கொண்டு வந்த போலீஸார், ஐந்து பேரையும் விசாரித்து, பணம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் எங்கேயோ வைத்து ஐவரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். பிறகு உடல்களை வேளச்சேரி வீட்டில் கொண்டு வந்து போட்டு செட்டப் செய்து விட்டனர் என்பது ஒரு வாதமாக உள்ளது.
 
இன்னொரு வாதம் என்ன சொல்கிறது என்றால், ஐந்து பேரையும் அதே வீட்டில் வைத்து வளைத்துப் பிடித்த போலீஸார், உள்ளே நுழைந்து ஐவரிடமும் விசாரணை நடத்தி, அவர்கள்தான் கொள்ளையர்கள் என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் உள்ளேயே வைத்து சுட்டு வீழ்த்தினர் என்கிறது.
 
தமிழக அளவில் பெரும் காவல்துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியதாலும், பெரும் அவமானத்தை ஏற்படுத்தி விட்டதாலும் ஆத்திரத்தில் போலீஸார் இப்படி நடந்து கொண்டார்கள் என்பது அந்த வாதமாகும்.
 
போலீஸ் தரப்பில் சிலர் இதுகுறித்துக் கூறுகையில், இது செட்டப்பா அல்லது இயற்கையானதா என்பது இப்போது பிரச்சனையில்லை. தயவு செய்து அதுகுறித்து யாரும் ஆய்வு செய்ய வேண்டாம். இனிமேல் இதுபோன்ற துணிகரக் கொள்ளைச் சம்பவங்களில் யாரும் ஈடுபட அஞ்ச வேண்டும். அதற்கு இது ஒரு வார்னிங் என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். மக்களை அச்சுறுத்தும் வகையிலான குற்றச் செயல்களில் ஈடுபடும் கிரிமினல்களுக்கு இது ஒரு எச்சரிக்கை என்ற அளவில் மட்டுமே பார்க்க வேண்டும். 100 கோடி பேர் இந்த நாட்டில் உள்ளனர். அவர்கள் நிம்மதியாக வாழ ஒரு ஐந்து கிரிமினல்கள் செத்துப் போவதில் தப்பில்லையே என்று 'நாயகன்' பட டயலாக் கணக்கில் கூறுகிறார்கள்!.



[Continue reading...]

நம்புங்க இன்னும் இருக்கு பைனல் வாய்ப்பு

- 0 comments

முத்தரப்பு தொடரில் அதிசயம் அரங்கேறியது.நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில், விராத் கோஹ்லி சதம் விளாச, இந்திய அணி 321 ரன்களை 36.4 ஓவரில் எடுத்து "சூப்பர்' வெற்றி பெற்றது.

இதன் மூலம் முக்கியமான போனஸ் புள்ளியை பெற்று, "பைனல்' வாய்ப்பை தக்க வைத்தது. இலங்கையின் தில்ஷன், சங்ககராவின் சதம் வீணானது. மார்ச் 2ல் நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இலங்கையை வீழ்த்தினால், இந்தியா பைனலுக்கு செல்வது உறுதி.

இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை அணிகள் மோதிய லீக் போட்டி ஹோபர்ட்டில் நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் காயமடைந்த இர்பான் பதானுக்குப் பதில், ஜாகிர் கான் இடம் பெற்றார்.


சூப்பர் ஜோடி:

இலங்கை அணிக்கு கேப்டன் ஜெயவர்தனா, தில்ஷன் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. ஜாகிர் கான் பந்தில் சிக்சர் அடித்த ஜெயவர்தனா (22), ஜடேஜா சுழலில் வீழ்ந்தார். பின் தில்ஷனுடன் இணைந்த சங்ககரா, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


இரண்டு சதம்:

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தில்ஷன், ஒருநாள் அரங்கில் 11வது மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் சதம் அடித்தார். சங்ககரா தன்பங்கிற்கு 13வது மற்றும் இந்தியாவுக்கு எதிரான 4வது சதத்தை பதிவு செய்தார். இந்த ஜோடியை பிரிக்க தோனி எடுத்துக் கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. இரண்டாவது விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்த போது, ஒருவழியாக பிரவீண் குமார் வேகத்தில், சங்ககரா (105 ரன்கள், 87 பந்து) போல்டானார்.


இமாலய இலக்கு:

பெரேரா (3) ரன் அவுட்டானார். மாத்யூஸ் 14 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் தில்ஷன், சிக்சர்களாக விளாச, இலங்கை அணி 50 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 320 ரன்கள் எடுத்தது. ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில், தனது அதிகபட்ச ரன்களை எடுத்த தில்ஷன் (160 ரன்கள், 165 பந்து), சண்டிமால் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.


கடின கணக்கு:

இந்திய அணி 40 ஓவரில் 321 ரன்கள் எடுத்து வென்றால் மட்டுமே, "போனஸ்' புள்ளி கிடைக்கும் என்ற நிலையில் களமிறங்கியது. சேவக், சச்சின் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. குலசேகராவின் அடுத்தடுத்த ஓவர்களில் இருவரும் தலா ஒரு 2 பவுண்டரி விளாசினர். மலிங்கா ஓவரில் சேவக், அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் அடிக்க, இந்திய அணியின் ஸ்கோர், 5.3 ஓவரில் 50 ரன்களை எட்டியது.

இந்நிலையில் சேவக் (30), சச்சின் (39) இருவரும் சீரான இடைவெளியில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தனர்.


இனித்த இளமை:

இதன் பின் "இளம்' வீரர்கள் காம்பிர், விராத் கோஹ்லி ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இவர்கள் பந்துகளை வீணாக்காமல், ஒன்று இரண்டு ரன்களை எளிதில் எடுக்க, அணியின் "ரன்ரேட்' சீராக இருந்தது. பின், மாத்யூஸ் பந்தில் விராத் கோஹ்லி, சிக்சர் அடித்து அதிரடியை துவக்க 27.2 ஓவரில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது.

மூன்றாவது விக்கெட்டுக்கு 109 பந்துகளில், 115 ரன்கள் சேர்த்த நிலையில், 63 ரன்கள் எடுத்த காம்பிர், ரன் அவுட்டானார்.


அதிரடி சதம்:

அடுத்து வந்த ரெய்னா, விராத் கோஹ்லிக்கு நல்ல "கம்பெனி' கொடுக்க, குலசேகராவின் ஒரு ஓவரில், இவர் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். விராத் கோஹ்லி ஒருநாள் அரங்கில் தனது 9வது சதம் (76 பந்து) அடித்தார். மலிங்கா வீசிய போட்டியில் 35வது ஓவரில் ஒரு சிக்சர், 4 பவுண்டரி என அடுத்தடுத்து விளாச, 35வது ஓவரில் இந்திய அணி 300 ரன்களை கடந்தது.


"சூப்பர்' வெற்றி:

மலிங்காவின் அடுத்த ஓவரில் விராத் கோஹ்லி, மீண்டும் இரண்டு பவுண்டரி அடிக்க, இந்திய அணி 36.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 321 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. நான்காவது விக்கெட்டுக்கு 55 பந்துகளில் 120 ரன்கள் சேர்த்த விராத் கோஹ்லி (86 பந்து, 133 ரன்கள்), ரெய்னா (40) ஜோடி அவுட்டாகாமல் இருந்தது.


பைனலுக்கு செல்வது எப்படி

முத்தரப்பு தொடரில் இன்னும் ஒரு லீக் போட்டி மீதமுள்ளது (மார்ச் 2, ஆஸி-இலங்கை). இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா (19 புள்ளி), இந்தியா (15), இலங்கை (15) அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. கடைசி லீக் போட்டியில் இலங்கை வெல்லும் பட்சத்தில், இந்திய அணி வெளியேற நேரிடும். மாறாக ஆஸ்திரேலியா வென்றால், இந்தியா, இலங்கை அணிகள் தலா 15 புள்ளிகள் பெற்றிருக்கும். அப்போது இத்தொடர் விதிப்படி, இரு அணிகள் மோதிய 4 போட்டியில் இந்திய அணி 2ல் வெற்றி பெற்றுள்ளதால், பைனலுக்கு சென்று விடும்.


321 ரன்களை அடைந்த வழி

ரன்கள் பந்துகள்

முதல் 50 ரன்கள் 5.3 ஓவர் (33 பந்து)
100 ரன்கள் 11.1 ஓவர் (67 பந்து)
150 ரன்கள் 18.2 ஓவர் (110 பந்து)
200 ரன்கள் 27.2 ஓவர் (164 பந்து)
250 ரன்கள் 31.1 ஓவர் (187 பந்து)
300 ரன்கள் 35 ஓவர் (210 பந்து)
321 ரன்கள் 36.4 ஓவர் (220 பந்து)


எங்கள் கையில் எதுவும் இல்லை: தோனி

இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில்,"" நான் பங்கேற்ற ஒருநாள் போட்டிகளில் சிறப்பானவற்றில் இதுவும் ஒன்று. 40 ஓவரில் 321 ரன்கள் தேவை என்ற நிலையில், சச்சின், சேவக் நல்ல துவக்கம் கொடுத்தனர். இதை கோஹ்லி, காம்பிர் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். ஒட்டுமொத்தமாக சிறப்பான முறையில் திறமை வெளிப்படுத்தியதே வெற்றிக்கு காரணம். பைனலுக்கு முன்னேற இனி எங்கள் கையில் எதுவும் இல்லை,'' என்றார்.


அதிவேக சதம்

நேற்றைய போட்டியில் 44 பந்துகளில் அரைசதம் கடந்த விராத் கோஹ்லி, பின் 76 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். ஒரு நாள் அரங்கில் இவர் எடுத்து அதிவேக சதம் இது தான்.

* இதுவரை 9 சதம் அடித்துள்ளார் கோஹ்லி. இதில் 8 போட்டிகளில் இந்தியா வென்றது.

* நேற்று இவர் எடுத்த 133 ரன்கள் தான், ஒரு நாள் கிரிக்கெட்டில் எடுத்த அதிகபட்ச ரன்கள்.

* ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய வீரர் எடுத்த மூன்றாவது அதிகபட்ச ரன்கள் இது. இதற்கு முன் கங்குலி (141, எதிர்-பாகிஸ்தான், அடிலெய்டு-2000), யுவராஜ் சிங் (139, எதிர்-ஆஸ்திரேலியா, சிட்னி, 2004)

* சமீபத்தில் நடந்த டெஸ்ட் தொடரில் சச்சின், லட்சுமண், டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் இருந்த நிலையில், விராத் கோஹ்லி மட்டும் தான் சதம் (116) அடித்து இருந்தார். தற்போது, ஒருநாள் தொடரிலு<ம் சதம் அடித்து அசத்தியுள்ளார்.


சிறந்த "சேஸ்'

நேற்று 321 ரன்களை துரத்திய வெற்றி பெற்ற இந்திய அணிக்கு, ஆஸ்திரேலிய மண்ணில் இது, சிறந்த "சேசாக' அமைந்தது. இதற்கு முன் இத்தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 270 ரன்களை "சேஸ்' செய்து வென்று இருந்தது.

* ஒட்டுமொத்தமாக இந்திய அணிக்கு, ஒருநாள் அரங்கில் இது மூன்றாவது சிறந்த "சேஸ்' . முன்னதாக, இங்கிலாந்து (326 ரன்கள், லார்ட்ஸ்-2002), வெஸ்ட் இண்டீஸ் (325 ரன்கள், ஆமதாபாத், 2002), அணிக்கு எதிராக பெரிய இலக்கை துரத்தி வெற்றி பெற்றது.

* தவிர, 2010ல் நியூசிலாந்துக்கு எதிரான பெங்களூரு போட்டியில் 321 ரன்கள் எடுத்து வென்றது.

* இந்திய அணி 300 அல்லது அதற்கு மேலான ரன்களை "சேஸ்' செய்து வெற்றி பெறுவது 12 வது முறை. இதை இலங்கை (4 முறை), இங்கிலாந்து (3), பாகிஸ்தான் (2) மற்றும் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக இந்த இலக்கை எட்டியுள்ளது.


இரண்டாவது அணி:300க்கும் மேற்பட்ட ரன்களை 40 ஓவருக்குள் "சேஸ்' செய்து வென்ற அணிகள் வரிசையில் இந்திய அணி இரண்டாவது இடம் பெற்றது. இதற்கு முன் இங்கிலாந்துக்கு (321/7) எதிராக, 2006ல் லீட்சில் நடந்த போட்டியில், இலங்கை அணி 37.3 ஓவரில், 324/2 என்ற ரன்களை எடுத்து முதல் அணியாக சாதித்துள்ளது.
[Continue reading...]

பேஸ்புக்மூலம் தமிழ்பெண்ணை மோசடிசெய்த மதுரை வீரன்

- 0 comments

தமிழ்நாடு மதுரை ஆவனியாபுரத்தினை சேர்ந்த சிவகுமார் என்பவர் இலங்கை தமிழ்பெண்ணான 35 அகவையுடைய சறோஜினிதேவியை பேஸ்புக் மூலம்காதலித்துவந்துள்ளார்.
மதுரைக்குவருமாறும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று சறோஜினியிடம் பேஸ்புக்மூலம் சிவகுமார் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் மதுரை கூடல் அழகப்பொருமாள் கோவிலில் 10.12.2011 அன்று திருமணம் நடைபெற்றுள்ளது இவர்கள் இருவரும் தொழில் செய்து பணம் சம்பாதிக்க சிங்கப்பூர்சென்று குடியேறியுள்ளனர் அங்கு சறோஜினியின் முக்கியமான பெறுமதியான பொருட்கள் விசாஅட்டைகள் மடிகணணிகள் என்பனவற்றை களவாடிக்கொண்டு சிவகுமார் தலைமறைவாகியுள்ளதாகவும் பின்னர் போலி பெயர்களில் பேஸ்புக்கில் வந்த சிவகுமார் சறோஜினியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டு மிரட்டல் விடுத்துள்ளார் இந் ஏமாற்றச்சம்பவம் குறித்து மதுரை காவல்துறையில் சறோஜினி முறைப்பாடு செய்துள்ளதை தொடர்ந்து இதுதொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

[Continue reading...]

நதிகள் இணைப்பு திட்டத்தை ஆதரிக்க மாட்டோம்: கேரள முதல்-மந்திரி அறிவிப்பு

- 0 comments
 
 
நதிகள் இணைப்பு திட்டத்தை ஆதரிக்க மாட்டோம் என்ற கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டி தெரிவித்தார்.
 
தேசிய அளவில் நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக சிறப்பு குழு ஒன்றை அமைக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
 
இதற்கு கேரளாவில் தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற மந்திரிகள் கூட்டத்திற்கு பின் கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
 
நதிநீர் இணைப்பு விவகாரம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு கேரள மாநிலத்திற்கு பொருந்தாது. ஏனென்றால், இதுவரையில் நதிநீர் இணைப்பு தொடர்பாக எந்தவிதமான ஒப்புதலையும் கேரள அரசு வழங்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளவாறு நதிநீர் இணைப்பை மேற்கொண்டால் கேரள மாநிலம் மிகவும் பாதிக்கப்படும். எனவே, நதிநீர் இணைப்பு தொடர்பான எந்தவித திட்டத்தற்கும் கேரள அரசு ஒத்துழைப்பு வழங்காது.
 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
இதேபோன்று, இத்தாலி சரக்கு கப்பல் பாதுகாவலர்களால், இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், கோர்ட்டுக்கு வெளியே எந்தவித சமரசமும் செய்து கொள்ள முடியாது என்று உம்மன் சாண்டி தெரிவித்தார்.
 
இதுகுறித்து அவர் கூறுகையில், கொலை வழக்கு சம்பந்தமாக, கோர்ட்டுக்கு வெளியே சமரசம் செய்து தீர்த்துக் கொள்வதற்கு இந்திய சட்டத்தில் இடம் கிடையாது. இந்த விஷயத்தில் இத்தாலி ஊடகங்கள் தொடர்ந்து தவறான செய்திகளையே வெளியிட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.



[Continue reading...]

சரத் பவாரை தாக்கியவருக்கு தொடர்ந்து அடி, உதை

- 0 comments
 
 
 
கடந்த 2011, நவம்பர் மாதம் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் சரத் பவாரை, ஹர்விந்தர் சிங் என்பவர் கூட்டத்தில் பாய்ந்து தாக்கினார். அதன் தொடர்ச்சியாக ஹர்விந்தர் சிங் தொடர்ந்து மர்ம மனிதர்களால் தாக்கப்பட்டு வருகிறார்.
 
பிப்.15 அன்று தன்னை முதலாவதாக தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஹர்விந்தர் அளித்த புகாரை போலீசார் ஏற்றுக்கொள்ளவில்லை.
 
இரண்டாவதாக பிப்.18 அன்று ரவுடிகள் அவரை வீடுபுகுந்து தாக்கியுள்ளனர். மீண்டும் பிப்.25 அன்று அவரை காரில் கடத்திசென்று துப்பாக்கி முனையில் அடித்து, உதைத்து மருத்துவமனை முன்பாக தள்ளிவிட்டு சென்றுள்ளனர்.
 
ஆனால் தன்மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து ஹர்விந்தர் அளித்த புகாரை ஏற்று விசாரிக்க காவல்துறை தயாராக இல்லை. இறுதியாக இவ்விஷயம் பத்திரிகைகளில் வந்தபின்னர் தான், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தன்மீதான தாக்குதல்களின் பின்னணியில் அரசியல் கட்சிகள் இருப்பதாக ஹர்விந்தர் கூறியுள்ளார்



[Continue reading...]

நிகிதாவை ஆன்மீகத்துக்கு தாவ வைத்த கன்னட சினிமா பாலிடிக்ஸ்!

- 0 comments
 

கன்னட திரையுலக பாலிடிக்ஸ் தன்னை ஆன்மீகத்துக்கு தாவ வைத்துவிட்டது என்கிறார் பிரபல கன்னட நடிகை நிகிதா.தமிழில் வெற்றிவேல் சக்திவேல், சரோஜா, முரண் உள்ளிட்ட படங்களிலும் ஏராளமான கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார் நிகிதா.கன்னட நடிகர் தர்ஷனுக்கும் நிகிதாவுக்கும் தகாத உறவு இருந்ததாகவும் இதனால் முதல் மனைவியை தர்ஷன் சித்ரவதை செய்து அடித்து விரட்டியதாகவும் செய்தி வெளியாயின. இது குறித்து போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து நிகிதா சினிமாவில் நடிக்க கன்னட தயாரிப்பாளர் சங்கம் தடைவிதித்தது. தடையை நீக்கும்படி நடிகர்கள் உள்ளிட்ட பலர் வற்புறுத்தினர். மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா தலையிட்ட பிறகே அத்தடை விலக்கி கொள்ளப்பட்டது. இந்த சர்ச்சைகள் நிகிதாவை விரக்தியடையச் செய்து, ஆன்மீகத்தின் பக்கம் தள்ளிவிட்டன.

தனது ஆன்மீக ஈடுபாடு குறித்து நிகிதா கூறுகையில், "எனக்கு கன்னட தயாரிப்பாளர் சங்கம் நடிக்க தடை விதித்தது நாடு முழுக்க எதிரொலித்தது. உழைக்கும் பெண்கள் ஒவ்வொருவரும் இது போன்ற பிரச்சினைகள் சந்தித்துதான் ஆக வேண்டும்.

இந்த சினிமா அரசியலே வேண்டாம் என்றுதான் நான் ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபடுகிறேன். இதனால் மனம் தெளிவாகவும் பலமாகவும் ஆகிவிட்டது.

இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு பக்குவப்பட்டுவிட்டேன். இனி முழு கவனமும் சினிமாவில்தான். சிறந்த நடிகை என்ற பெயர் எடுக் முழு மூச்சாக பாடுபடுவேன்," என்றார்.

முன்னர் அறிவித்த திருமணம் குறித்து கேட்டபோது, "என் தந்தை இறந்த சில மாதங்கள்தான் ஆகின்றன. எனவே திருமணம் குறித்து இப்போது யோசிக்கவில்லை," என்றார்.

[Continue reading...]

சந்தோஷத்தில் சிக்கித் தவிக்கும் காஜல் அகர்வால்.

- 0 comments
 

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு திரையுலகிலும் முன்னணி நடிகர்களின் படங்களின் நாயகியாக நடித்து வருபவர் காஜல் அகர்வால்.தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த 'பிஸினஸ்மேன்' படத்தில் நாயகியாக நடித்தார். அப்படம் வரவேற்பை பெற்றது.

தமிழில் விஜய்யுடன் 'துப்பாக்கி', சூர்யாவுடன் 'மாற்றான்' என இரு முன்னணி நாயகர்களின் படங்களிலும் நாயகியாக நடித்து வருகிறார். இவ்விரண்டு படங்களுக்குமே பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்தி திரையுலகில் தமிழில் வெளியான 'சிங்கம்' படத்தின் ரீமேக்கில் அஜய் தேவ்கானின் ஜோடியாக நடித்தார். அப்படம் நூறு கோடிக்கு மேல் வசூல் ஆனது. தற்போது இந்தியில் அக்ஷய் குமார் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் காஜல்.

இந்தியில் முன்னணி இயக்குனரான நிரஜ் பாண்டே ( 'A WEDNESDAY' இயக்குனர் ) இயக்க இருக்கும் 'SPECIAL CHABBIS' என்னும் படத்தில் அக்ஷய் குமார் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு திரையுலகினை தொடர்ந்து இந்தியிலும் முன்னணி நாயகர்களின் படங்களின் வாய்ப்புகள் வருவதால் சந்தோஷத்தில் சிக்கி தவிக்கிறாராம் காஜல்.

[Continue reading...]

Tuesday 28 February 2012

தயாராகிறது முனி 3ம் பாகம்

- 0 comments


லாரன்ஸ் இயக்கி நடித்த 'முனி' மற்றும் முனியின் 2ம் பாகமான 'காஞ்சனா' ரிலீசாகி வெற்றிபெற்றது.



இதையடுத்து 'ரிபெல்' தெலுங்கு படத்தை இயக்கி, இசையமைக்கும் அவர், ஜூன் மாதம் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார். பிறகு 'முனி 3ம் பாகம்' உருவாக்குகிறார்.

இதுகுறித்து லாரன்ஸ் கூறியதாவது:

ஏப்ரலில், முனி 3ம் பாகத்தின் ஷூட்டிங்கை தமிழ், தெலுங்கில் தொடங்குகிறேன். டைட்டில் முடிவாகவில்லை.

இயக்கி நடிக்கும் நான், என் தம்பி வினோவை அறிமுகம் செய்கிறேன். அவரும், நானும் சேர்ந்து ஆடுகின்ற நடனக்காட்சி ஹைலைட்டாக இருக்கும்.
[Continue reading...]

ஜிம்கானா கிளப்பில் கார்த்திக்கு கட்டுப்பாடு!

- 0 comments
 


புதிதாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் பாண்டிச்சேரி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினை தொடங்கி வைக்க, சென்னை – அண்ணாசாலை ஜிம்கானா கிளப்பிற்கு வந்த நடிகர் கார்த்தி மற்றும் சென்னை-வடபழனி கமலா திரையரங்கு உரிமையாளர் வி.என்.சிதம்பரம் உள்ளிட்டவர்கள் காலர் இல்லாத சட்டை அணிந்து வந்ததால் உள்ளே விட அனுமதி மறுத்து விட்டது கிளப்!

பின்னர் ரவுண்ட் நெக் டி-சர்ட் அணிந்து வந்த கார்த்திக்கு, அண்ணா சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் புதிதாக கேஷூவல் சட்டை ஒன்றை வாங்கி கொடுத்த விழாக்குழுவினர், அவரது காரிலேயே அந்‌த உடையை மாற்றிக் கொள்ளவும் செய்து விழா நடந்த ஹாலிற்கு அழைத்து வந்தனர். அதேமாதிரி கமலா சிதம்பரம், நடிகர் திலகம் சிவாஜி காலத்து ஆசாமி என்பதால் சிவாஜி ஸ்டைலில் சின்ன காலர் வைத்த சட்டை அணிவது வழக்கம். விழாவிற்கு வந்த அவரையும் பழம்பெருமை வாய்ந்த ஜிம்கானா கிளப் ஊழியர்கள் உள்ளே விட மறுத்து விட்டதால் அவரும், அவரது காரில் உடன் வந்த நண்பரின் சட்டையை வாங்கி அணிந்து கொண்டு இவரது சட்டையை அவருக்கு கொடுத்து விட்டு, சட்டையை காரிலேயே மாற்றிக் கொண்டு விழாவிற்கு வந்ததாக கூறி வருத்தப்பட்டார். மேலும் இது காந்தி பிறந்த தேசம் என ஞாபகப்படுத்தியதுடன், இனி இதுபோன்ற விழாக்களை சட்டயை கலட்டாத இடங்களில் நடத்தும்படி அன்பு வேண்டுகோள் விடுத்தது ஹைலைட்!

இதேபோன்று விபரம் புரியாமல், வெளியூரில் இருந்து வெறும் வேஷ்டி-சட்டையை அணிந்து கொண்டு விழாவிற்கு வந்த தியேட்டர் அதிபர்கள் பலரும் கடைசி வரை விழாவிற்கு வெளியே நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
[Continue reading...]

எதிரிகளை என்கவுண்டர் பண்ண இருக்கும் விஜய்

- 0 comments
 


துப்பாக்கி படத்தில் நடிகர் விஜய் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்து வருகிறாராம். நண்பன் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் சூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது. படத்தில் விஜய் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பது இத்தனை நாட்களாக ரகசியமாக இருந்து வந்தது. இந்நிலையில் படத்தில் விஜய்யின் கேரக்டர் குறித்த செய்தி இப்போது வெளியாகி இருக்கிறது. அதாவது படத்தில் விஜய் எதிரிகளை போட்டு தள்ளும் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறாராம்.

இதுநாள் வரை கமர்ஷியல் கேரக்டரில் நடித்து வந்த விஜய், நண்பன் படத்திலிருந்து தன்னுடைய ஸ்டைலை மாற்றி இருக்கிறார். அந்த மாற்றம் இப்போது துப்பாக்கியிலும் தொடர்கிறது. மேலும் விஜய் இதுபோன்ற ஒரு கேரக்டரில் நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
[Continue reading...]

இணையதளத்தில் ரேஷன் கார்டு

- 0 comments

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,

தமிழக முதல்வர் ஜெயலலிதா குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 01.01.2012 முதல் 31.12.2012 வரை ஓராண்டிற்கு நீட்டிக்க உத்தரவிட்டார்
மேற்படி உத்தரவின்படி புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள கூடுதல் தாளின் மேற் பகுதியில் 2012 என்று முத்திரையிட்டு செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்டது. புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 28.02.2012 வரை அளிக்கப்பட்டது 1,97,70,682 குடும்ப அட்டைகளில் இதுவரை 1,86,58,768 குடும்ப அட்டைகள் நியாய விலைக் கடைகளில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் கால நீட்டிப்பு வேண்டுமென்று கேட்டு பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதனை கனிவுடன் பரிசீலித்த முதல்வர் அரசு மேலும் ஒரு மாத காலத்திற்கு அதாவது 31.03.2012 வரை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி இருப்பிட ஆதாரமாக வழங்கப்பட்டுள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் நிற தட்கல் குடும்ப அட்டை வைத்திருப்போர் மற்றும் அரிசி, சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள் வைத்துள்ள உடல்நல குறைவு காரணமாக நடக்க இயலாதோர், வயது முதிர்வு காரணமாக நியாய விலைக் கடைக்கு வர இயலாத குடும்ப அட்டைதாரர்கள், புனிதப் பயணம் மற்றும் மதம் சார்ந்த உள்ளிருப்பு விரதம் மேற்கொண்டுள்ளோர் மற்றும் புதுப்பித்தல் நடைபெற்ற காலத்தில் தற்காலிகமாக வெளியூர் சென்றவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் அவர்களது குடும்ப அட்டைகளை ஆன்-லைன் முறையில் புதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி htt://210.212.62.8080/newfcp/cardvalidity.do என்ற இணைய தள முகவரிக்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம். இதில் ரேஷன் பொருள் வேண்டுவோர் 2012 ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் இரண்டு நகல்களை எடுத்துக் கொண்டு ஒரு நகலை குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டும், மற்றொரு நகலை உரிய கடைக்காரரிடம் அளித்து ரேஷன் பொருட்களை தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம். ரேஷன் பொருள் வேண்டாதோர் மற்றும் இருப்பிட சான்றாக மட்டுமே வைத்துக் கொண்டுள்ளவர்கள் இணையதளத்தில் உள்ள 2012 ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் ஒரு நகலை அவர்களுடைய குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டால் மட்டும் போதுமானது. மேற்படி இணையதள வசதி 01.03.2012 முதல் 31.03.2012 வரையில் நடைமுறையில் இருக்கும். இந்த வசதியை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ், கேட்டுக் கொண்டுள்ளார்
[Continue reading...]

சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மர்ம நபர் தீவிரவாதியா? விசாரணை தீவிரம்.

- 0 comments

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் வரும் 4-வது கேட் பகுதியில் ஒரு வாலிபர் அத்துமீறி புகுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவனை பாதுகாப்பு வீரர்கள் பிடித்தனர்.

அவன் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தது தெரிய வந்தது. முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவனை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் அவனை கைது செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவனது பெயர் தினேஸ் சோரன் (30) என்பதும் மேற்கு வங்காள மாநிலம் மால்டா பகுதியைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது. கட்டிட தொழில் செய்ய சென்னை வந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மனநலம் பாதித்தவன்போல் அவன் செயல்படுகிறான்.

உண்மையில் அவன் மனநலம் பாதித்தவனா? அல்லது தீவிரவாதியா? அல்லது விமான நிலையத்தில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் புகுந்தானா? என்பதை அறிய போலீசார் முடிவு செய்துள்ளனர். அவனை பரிசோதனை செய்ய இன்று கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

[Continue reading...]

அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் நயன்

- 0 comments
 


பிரபு தேவாவுடன் திருமணம் நடப்பதாக இருந்ததால் மதம் மாறி, சினிமாவை விட்டு விலகியிருந்த நயன்தாரா அடுத்த ரவுண்டுக்கு வந்துவிட்டார். இதனால் குஷியாகியுள்ள இயக்குனர்களும், நடிகர்களும் நயனிடம் கால்ஷீட் கேட்கத் துவங்கியுள்ளனர்.

நயன்தாராவுக்கு யாராவது பிராம்ப்ட் செய்தால் சுத்தமாகப் பிடிக்காது. அதாவது வசனத்தை அப்பப்போ எடுத்துக் கொடுத்து உதவுவது பிடிக்காது. எவ்வளவு பெரிய வசனமாக இருந்தாலும் மனப்பாடம் செய்துவிட்டு தான் படப்பிடிப்புக்கு வருவார். இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதன்படி பேசி நடிப்பார். கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த நயன் தமிழில் நன்றாகப் பேசுவார்.

பேசினால் மட்டும் போதாது என்று நினைத்த அவர் தற்போது தமிழில் எழுதப், படிக்கவும் கற்றுக் கொண்டுள்ளார். தன்னைப் பற்றி வரும் செய்திகளை இணையதளஙகளில் தேடிப்பிடித்துப் படிக்கிறார். இவர் இப்படி இருக்க ஸ்ரேயா தமிழில் நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகியும் தமிழில் பேசச் சொன்னால, சாரி ஐ டோன்ட் நோ டாமில் என்கிறார்.

நயன் நம்ம செய்தியையும் படிப்பார் என்று நம்புகிறோம்.
[Continue reading...]

Monday 27 February 2012

ரஷ்ய பிரதமரை கொல்ல தீவிரவாதிகள் சதிதிட்டம்

- 0 comments
 
 
 
ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினை கொல்ல செசன்ய தீவிரவாதிகள் சதிதிட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். ரஷ்யாவில் வரும் மார்ச் 4ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது பிரதமராக உள்ள விளாடிமிர் புடின், இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில், உக்ரைன் நாட்டில் துறைமுக நகரமான ஒடேசாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குண்டு வெடித்தது. இதில், ஒருவர் உயிரிழந்தார். அங்கிருந்த மற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மூவரும் தீவிரவாதிகள் என்பதும், அவர்கள் வெடிகுண்டு தயாரிக்கும் போது தவறுதலாக குண்டு வெடித்து விட்டது என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
 
கைதானவர்களில் மட்யேவ் என்பவன் ரஷ்யாவை சேர்ந்தவன். இன்னொருவன் பியான்சின். இருவரும் துருக்கியில் இருந்து அரபு எமிரேட் நாடு வழியாக உக்ரைன் வந்ததாக கூறினர். மேலும், ரஷ்யாவை சேர்ந்த செசன்யா தீவிரவாதி டோக்கு உமரோவ் உத்தரவுப்படி, பிரதமர் புடினை கொலை செய்ய சதி திட்டம் வகுத்து வந்ததாகவும் கூறியுள்ளனர். இந்த 2 தீவிரவாதிகளும் தற்கொலை படையாக உருவெடுத்து, ரஷ்யாவில் அதிபர் தேர்தல் முடிந்ததும் புடினை கொல்ல திட்டமிட்டிருக்கின்றனர்.
 
இதையடுத்து, ரஷ்ய உளவு படையிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இந்த செய்தியை ரஷ்யாவில் 'சேனல் ஒன்' என்ற டி.வி. நேற்று வெளியிட்டது. இதனால், ரஷ்யாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், இது தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நடத்தப்படும் நாடகம் என்று எதிர்க்கட்சியினர் வர்ணித்துள்ளனர்.



[Continue reading...]

பகிரங்கமாக அறிவித்த அமெரிக்கா! நாடு நாடாக அலையும் இலங்கை!!

- 0 comments
 
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திரப் போர் உக்கிரமடைந்துள்ள பரபரப்பான சூழ்நிலையில், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. இலங்கைக்கு எதிரான பிரேரணை மார்ச் மாதம் 23 ஆம் திகதியே வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரியவருகின்றது.
 
இலங்கைக்கு எதிரான பிரேரணையை தாம் ஆதரிக்கப்போவதாக அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையிலும், தனக்கு எதிரான பிரேரணையை தோற்கடிப்பதற்கு இலங்கை கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ள நிலையிலுமே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஜெனிவாக் கூட்டத் தொடர் ஆரம்பமாகின்றது.
 
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, மெக்ஸிக்கோ, தென் ஆபிரிக்கா, பெல்ஜியம் உள்ளிட்ட முக்கியமான நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்கும் அதேவேளை, ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, உகண்டா, மலேசியா, சிங்கப்பூர், சவூதி அரேபியா, குவைத், கட்டார் உள்ளிட்ட சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படத் தீர்மானித்துள்ளன என்று அறிய முடிகின்றது.
 
ஜெனிவா விரைந்துள்ள இலங்கை அமைச்சர்கள் குழாம், தமது நாட்டுக்கு எதிரான பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போதிலும் மேற்குலகத்திடம் இருந்து அக்குழுவிற்கு சாதகமானதொரு பதில் கிட்டவில்லை என்றே ஜெனிவாவிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
ஜெனிவாத் தொடர் இன்று ஆரம்பமானாலும் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை மீது மார்ச் 23 ஆம் திகதியே வாக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரியவருகின்றது.
 
மேலும், இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாகக் கூறப்படும் பிரேரணையில் முக்கியமான சில விடயங்களைப் பரிந்துரைப்பதற்கும் மேற்குலக நாடுகள் தீர்மானித்துள்ளன என அறியக்கூடியதாகவுள்ளது.
[Continue reading...]

மதுவில் மயக்க மருந்து கலந்து மாணவி கற்பழிப்பு:

- 0 comments
 

டெல்லியின் நொய்டா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஹிமான்ஷு ஷர்மா, ராகுல் ஆர்யா, சுனில்சிங், சவுரப் சவுகான் மற்றும் நீரஜ்சிங். இவர்கள் 5 பேரும் நண்பர்கள்.நேற்று முன்தினம் ராகுல் ஆர்யாவின் பிறந்தநாள். இதையொட்டி, அவர் தனது நண்பர்களுக்கு அங்குள்ள ஓட்டலில் விருந்து அளித்தார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள தனக்கு அறிமுகமான பத்தாம் வகுப்பு மாணவி (17) ஒருவரையும் ராகுல் அழைத்திருந்தார்.

பிறந்தநாள் விருந்து இரவு 10 மணி வரை நீடித்தது. விருந்தில் குளிர்பானம் மற்றும் மதுபானம் பரிமாறப்பட்டது. மாணவிக்கு, குளிர்பானத்தில் போதை மருந்தை கலந்து கொடுத்தனர். அதை குடித்த அவர், சிறிது நேரத்தில் மயங்கினார்.

உடனே விருந்தை முடித்துக்கொண்ட நண்பர்கள், அந்த மாணவியை சவுரப் சவுகானுக்கு சொந்தமான காரில் ஏற்றினர். கார், நொய்டா நகரை சுற்றி சுற்றி வந்தது. ஓடும் காருக்குள் அந்த மாணவியை ஒருவர் பின் ஒருவராக மாறி மாறி பலமுறை கற்பழித்தனர்.

பின்னர், பிரியதர்ஷிணி பார்க் பகுதியில் காரை நிறுத்தி, அந்த மாணவியை கீழே தள்ளி விட்டனர். லேசான மயக்கத்தில் இருந்த அவரிடம், சம்பவம் பற்றி புகார் அளித்தால், கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு, கிளம்பிச் சென்றனர்.

மாணவியை கற்பழித்தவர்களில் ஒருவரின் தாயார், மாணவியின் நிலையை கண்டு அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர்கள் மாணவியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர் கற்பழிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹிமான்ஷு ஷர்மா, ராகுல் ஆர்யா, சுனில் சிங், சவுரப் சவுகான் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட நீரஜ்சிங்கை தேடி வருகின்றனர்.

குற்றவாளிகளில் ஹிமான்ஷு ஷர்மா, சுனில் சிங், நீரஜ் சிங் ஆகியோர் மாணவர்கள், ராகுல் ஆர்யா தனியார் நிறுவன ஊழியர். சவுரப் சவுகான் சொந்தமாக வாகன உதிரிபாகங்கள் கடை வைத்துள்ளார்.

[Continue reading...]

உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி !

- 0 comments
 
 
இதுவரை தாம் பல வேற்றுக்கிரக மனுதனர்களைக் கண்டதாகவும், அவர்கள் பறக்க பாவிக்கும் விமானங்களையும் தாம் கண்டதாகவும் பலர் தெரிவித்துள்ளனர். பல வீடியோக்களும் வெளியாகியுள்ளது. இருப்பினும் தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ உலகையே அதிர்ச்சியில் அழ்த்தியுள்ளது. இக் காணொளியானது உண்மையாகப் படமெடுக்கப்பட்டது என அதனைப் பகுப்பாய்வுசெய்தவர்கள் தெரிவிக்கிறார்கள். இனி முடிவை நீங்களே எடுங்கள்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger