Wednesday 19 February 2014

நீதி கிடைக்கும்

- 0 comments
பிரதமராக (ராஜீவ்) இருந்தவருக்கே நீதி கிடைக்கவில்லை என்றால் சாதாரண மக்களுக்கு எங்க நீதி கிடைக்கும்...ராகுல் வருத்தம்...

# பிரதமராக இருந்தவரால் கொல்லப் பட்ட அப்பாவி சாதாரண ஈழ மக்களுக்கே நீதி கிடைக்க வில்லை என்றதால் தான் பிரதமராக இருந்தவருக்கு நீதி கிடைக்க வில்லை...

# நீதி கிடைக்கும் அளவிற்கு பிரதமராக இருந்தவர் நியாயங்கள் எதுவும் செய்து விடவில்லை


[Continue reading...]

வேலூர் ஜெயிலில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 6 பேர் உடல் நிலை ஆய்வு Murugan Santhan Perarivalan health research in Vellore jail

- 0 comments

வேலூர் ஜெயிலில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 6 பேர் உடல் நிலை ஆய்வு Murugan Santhan Perarivalan health research in Vellore jail

வேலூர், பிப்.19–

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

7 பேரையும் விடுதலை செய்வதாக இன்று முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர்கள் ராஜவேலு, ஸ்ரீதர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவினர் வேலூர் ஆண்கள் ஜெயிலுக்கு சென்றனர்.

அவர்கள் அங்கு ராஜீவ் கொலை கைதிகள் 6 பேர் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து வருவதாக சிறைதுறை வட்டாரங்கள் தெரிவித்தன. முதலில் பேரறிவாளன் உடல் நிலை பரிசோதிக்கபட்டதாக கூறப்பட்டது.

இதே போல் வேலூர் ஜெயிலில் குண்டடி காயம்பட்ட தீவிரவாதி பன்னா இஸ்மாயில் அடைக்கபட்டுள்ளான். அவனது உடல் நிலையையும் பரிசோதிக்க டாக்டர்கள் குழுவினர் சென்றதாக தெரிவித்தனர்.

...

[Continue reading...]

Monday 17 February 2014

வீடு புகுந்து தனியாக இருந்த பெண்ணை கற்பழித்த மந்திரியின் சகோதரர் கைது Maharashtra NCP minister brother held in molestation case

- 0 comments

வீடு புகுந்து தனியாக இருந்த பெண்ணை கற்பழித்த மந்திரியின் சகோதரர் கைது Maharashtra NCP minister brother held in molestation case


மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அமைச்சரவையில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத கட்சியின் சார்பில் மந்திரியாக பதவி வகிப்பவர் சசிகாண்ட் ஷிண்டே. 

இரவு நேரத்தில் வீடு புகுந்து 33 வயது மதிக்கத்தக்க பெண்ணை கற்பழித்த புகாரின் பேரில் இவரது சகோதரர் ருஷிகாண்ட் ஷிண்டேவை சதாரா மாவட்ட போலீசார் இன்று கைது செய்தனர். 

சதாரா நகரின் அருகேயுள்ள வதே பகுதியில் தனியாக வசித்து வந்த அந்த பெண்ணை வெகு நாட்களாக நோட்டமிட்டு வந்த ருஷிகாண்ட் ஷிண்டே, நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டுக்குள் புகுந்து பலவந்தமாக கற்பழித்து விட்டார். 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து, ருஷிகாண்ட் ஷிண்டேவை இன்று கைது செய்த போலீசார் சதாரா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 21-ம் தேதி வரை விசாரணை காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.


[Continue reading...]

Friday 14 February 2014

ஒரே நேரத்தில் பா.ஜ.க., காங்கிரசுடன் பேசும் விஜயகாந்த்: எந்த பக்கம் பாய்வார்? At the same time BJP Congress talk Vijayakanth

- 0 comments
கேப்டன்... இன்னும் ரெடியாகவில்லை....தமிழக அரசியல் களத்தில் 3 கூட்டணி கப்பல்கள் தயாராக உள்ளது. எந்த கப்பலில் கேப்டன் ஏறுவார்...? என்பது சஸ்பென்சாகவே உள்ளது. தேசிய கட்சிகளான பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே விஜயகாந்தை தங்கள் பக்கம் இழுக்க போட்டா போட்டி போடுகின்றன. 

கடந்த 8–ந்தேதி மோடி சென்னை வந்தபோது விஜயகாந்த் அந்த கூட்டத்தில் பங்கேற்பார். பா.ஜனதா கூட்டணியை உறுதி செய்வார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென்று ஜகா வாங்கினார். திடீரென்று காங்கிரஸ் பக்கம் திரும்பினார். அவர்களுடனும் கூட்டணி பேச்சை தொடங்கினார். அதன் விளைவாக நேற்று டெல்லி சென்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து தமிழக பிரச்சினைகளுக்காக மனு கொடுத்தார். கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுடன் ரகசிய சந்திப்பு நடந்ததாகவும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. 

ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என்று நாராயணசாமி கூறினார். கூட்டணி பற்றி விஜயகாந்திடம் நிருபர்கள் கேட்டதற்கு ''நான் எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தால் உங்களுக்கு என்ன?'' என்று ஆத்திரத்தில் கேட்டுள்ளார். என்னதான் நினைக்கிறார்? என்னதான் எதிர்பார்க்கிறார்? கட்சிகளுக்கும் புரிய வில்லை. 

இந்த காட்சிகளை கூர்ந்து கவனித்து வரும் தமிழக மக்களுக்கும் தலை சுற்றாத குறைதான். பொதுவாக அரசியல் கட்சி தலைவர்கள் ஒவ்வொரு கட்சியை பற்றியும், அந்த கட்சியின் செயல்பாடுகளையும், விரல் நுனியில் வைத்து இருப்பார்கள். எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது பலன் தரும் என்பதும் கட்சி தலைவர்களுக்கு தெரிந்த விசயம் தான். ஆனால் விஜயகாந்த் மட்டும் இந்த விஷயத்தில் இன்னும் ஒரு தெளிவான முடிவுக்கு வராதது ஏன்? என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது. 

கூட்டணி முயற்சிகள் நடக்கும் போது ஓரிரு முறை குறிப்பிட்ட இரு கட்சி தலைவர்களும் சந்தித்து பேசினாலே கூட்டணி முடிவுக்கு வந்து விடும். ஆனால் விஜயகாந்திடம் ஒவ்வொரு கட்சியும் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தி விட்டன. ஆனால் இன்னும் எந்த பலனும் இல்லை. 

இதுபற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறும்போது, ''விஜயகாந்த் நல்ல ஸ்டண்ட் நடிகர் அவர் பிடி கொடுக்காமல் இருக்கிறார் என்பதிலிருந்து ஸ்டன்ட் நடிகராக இருக்கிறபோது எப்படி எதிரிகளுக்கு பிடி கொடுக்காமல் நடிப்பாரோ, அதேபோல் இப்பொழுதும் பிடிகொடுக்காமல் இருக்கிறார்'' என்றார். அதே நேரத்தில் தி.மு.க. அணிக்கு விஜயகாந்த் வர வேண்டும் என்றும் கருணாநிதி அழைப்பும் விடுத்தார். 

இதேபோல பா.ஜனதா எங்கள் பக்கம் வருவார் என்கிறது. காங்கிரசும் எங்கள் பக்கம்தான் வருவார் என்கிறது. தி.மு.க.வும் வலையை விரித்து காத்திருக்கிறது. ஆனால் விஜயகாந்த் இரு கட்சிகளிடமும் ஒரே நேரத்தில் பேசிக் கொண்டிருப்பதால் எந்த பக்கம் சாய்வார் என்பது சஸ்பென்சாகவே இருந்து வருகிறது.
[Continue reading...]

அஜித்துக்கு 50 கோடியாயாம் பிரபல தயாரிப்பாளர் அதிரடி !!!

- 0 comments

அஜித்துக்கு 50 கோடியாயாம் பிரபல
தயாரிப்பாளர் அதிரடி !!!
2015 ல் அஜித்துக்கு 50 கோடி சம்பளமாம்
இப்படி துணிவாக புகழ் குரல்
பாடியிருப்பவர் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.
இந்தியன் படத்தின் முலமாக தமிழ்
சினிமாவில் அறிமுகமான பிரபல
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.
பல வெற்றி படங்களை கொடுத்thu தமிழ்
சினிமாவில் அசைக்க முடியாத
ஒரு கோபுரத்தில் இருந்தார் ஏ.எம்.ரத்னம்,
ஆனால் திடீர் என்று கோபுரத்தில் சில
விரிசல்கள் விழ பக்கம் பக்கமாய் சிதற
ஆரம்பித்தார்.
ஒரு தருணத்தில் ஏ.எம்.ரத்னம்
என்று தயாரிப்பாளர் இருந்தாரா அவர்
எங்கே என்று அவரது சகாக்கள் கூட
முனுமுனுக்க ஆரம்பித்தினர், இப்படி ஆன
நிலையில் தன் மறுபிரவேசத்துக்
கு மீண்டும் அடிக்கல் வைக்க
விஜய்யை சில காலம் தூரத்தினர் என்ன
நினைத்தாரோ தெரிய வில்லை விஜய்
அவரை சீண்ட கூட இல்லை, என்ன
டா பண்றது என்று திகைத்து நின்ற
ஏ.எம்.ரத்னம் தலயின் போன் கால்
அவருடைய பேஸ்மென்ட்டை மீண்டும்
ஸ்ட்ரோங் ஆக்க தொடங்கியது.
அதற்கு பிறகு உருவான ஆரம்பம் படம்
சக்கை போடு போட, கம்பிரமாக காலோர்
தூக்கி நின்றார் ஏ.எம்.ரத்னம். அஜித், வீரம்
படத்தையடுத்து ஒரு படம்
நடித்துவிட்டு பின் மீண்டும்
ஏ,எம்.ரத்னதிற்கு கால்ஷீட் தருவதாக கூற,
அந்த படத்திற்கு தான் 50 கோடி தருவேன்
என கூறிக்கொண்டிருக்கிறாராம்
ஏ.எம்.ரத்னம்

[Continue reading...]

Thursday 13 February 2014

2–வது டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி 192 ரன்னில் சுருண்டது 2nd Test New Zealand got all out for 192 in their first innings

- 0 comments


வெலிங்டன், பிப். 14–

நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 0–4 என்ற கணக்கில் இழந்தது.

2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் முதல் டெஸ்டில் இந்தியா 40 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

இரு அணிகள் இடையேயான 2–வது டெஸ்ட் போட்டி இன்று வெலிங்டனில் தொடங்கியது. இந்திய அணியில் மாற்றம் செய்யப் படவில்லை. நியூசிலாந்து அணியில் லதம், நீசம் ஆகியோர் அறிமுகமானார்கள்.

டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இஷாந்த் சர்மா பந்து வீச்சு அபாரமாக இருந்தது. அவரது பந்தில் தொடக்க வீரர்கள் புல்டான் (13 ரன்), ரூத்போர்டு (12 ரன்) ஆட்டமிழந்தனர். அதன்பின் லதமை (0 ரன்) இஷாந்த் சர்மா வெளியேற்றினார்.

முதல் டெஸ்ட்டில் இரட்டை சதம் அடித்த நியூசிலாந்து கேப்டன் மெக்குல்லம் 8 ரன்னில் முகமது சமி பந்தில் அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 4 விக்கெட்டுக்கு 45 ரன் இருந்தது. அதன்பின் வில்லியம்சன்– ஆண்டர்சன் ஜோடி சிறிது நேரம் தாக்கு பிடித்தது.

ஆண்டர்சன் (24 ரன்), வாட்லிங் (0 ரன்) ஆகியோர் இஷாந்த் சர்மா பந்தில் வீழ்ந்தனர். அப்போது நியூசிலாந்து 6 விக்கெட்டுக்கு 86 ரன் இருந்தது. அடுத்து வில்லியம்சன்–நீசம் ஜோடி துரிதமாக ரன்களை சேர்த்தது. வில்லியம்சன் 47 ரன்னிலும், நீலும் 33 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இருவரது விக்கெட்டையும் முகமது சமி கைப்பற்றினார்.

அதன்பின் இஷாந்த் சர்மா பந்தில் டிம் சவுத்தி (32 ரன்) வெளியேற்றினார். கடைசி விக்கெட்டாக போல்ட் விக்கெட்டை முகமது சமி வீழ்ந்தார்.

நியூசிலாந்து அணி 192 ரன்னுக்கு ஆல்–அவுட் ஆனது. இஷாந்த் சர்மா 6 விக்கெட்டும், முகமது சமி 4 விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் இந்திய அணி முதல் இன்னிஸ்சை விளையாடியது. தொடக்க வீரர்கள் முரளி விஜய், ஷிகர் தவான் களம் இறங்கினர். தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது.

முரளி விஜய் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். டிம் சவுத்தி வீசிய பந்தை அடிக்காமல் விக்கெட் கீப்பரிடம் விட முயற்சித்த போது பந்து கையுறையில் உரசியபடி சென்று கேட்ச் ஆனது. அடுத்து ஷிகர் தவானுடன் புஜாரா ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார்.
[Continue reading...]

சல்மான் ருஷ்டிக்கு ஈரான் மரண தண்டனை விதித்த நாள் (பிப். 14 1989) iran death penalty to salman rushdie

- 0 comments

Img சல்மான் ருஷ்டிக்கு ஈரான் மரண தண்டனை விதித்த நாள் (பிப். 14 1989) iran death penalty to salman rushdie

சர் அகமத் சல்மான் ருஷ்டி இந்தியாவில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர். இவரின் 1981-ல் வெளிவந்த இரண்டாம் நாவல் மிட்னைட்ஸ் சில்ட்ரென் காரணமாக முதலாக புகழுக்கு வந்தார். இந்நாவல் புக்கர் பரிசு வென்றுள்ளது. இவரது நாவல்கள் இந்திய தீபகற்பம் இந்தியச் சூழலில் அமைந்துள்ளன. இவரது இலக்கிய வகை மாய யதார்த்தவாதம் என்ற தன்மையிலானது. கிழக்கு மற்றும் மேற்கு உலகங்களிடையே உள்ள தொடர்புகள். தாக்கங்கள் மற்றும் குடிப்பெயர்வுகளை தமது கதைக்களனாகக் கொண்டுள்ளார்.

1988-ல் இவரின் நான்காம் நாவல், த சாத்தானிக் வெர்சஸ், வெளிவந்தது. இந்நாவல் இஸ்லாமைப் பழி தூற்றுகிறது என்று கூறி உலகில் பல முஸ்லிம்கள் ருஷ்டிக்கு எதிராக போராட்டம் செய்தனர். ஈரானின் தலைவர் அயத்தொல்லா கொமெய்னி ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று பெப்ரவரி 14, 1989 அன்று ஒரு ஃபத்வா வெளியிட்டார். இதனால் ருஷ்டிக்கு பிரித்தானிய காவல்துறை பாதுகாப்பு கொடுத்துள்ளது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1966 - ஆஸ்திரேலியாவில் முன்னர் பாவனையில் இருந்த ஆஸ்திரேலிய பவுண்டிற்குப் பதிலாக அவுஸ்திரேலிய டொலர் அறிமுகப்படுத்தப்பட்டது. * 1979 - ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் அடொல்ஃப் டப்ஸ் காபூலில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் காவற்துறையினருக்கும் கடத்தல்காரருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் இறந்தார். * 1981 - டப்ளினில் இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ர தீயில் 48 பேர் கொல்லப்பட்டனர். * 1987 - யாழ்ப்பாணம், கைதடியில் இடம்பெற்ற வெடிவிபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பொன்னம்மான் உட்பட ஏழு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். * 1987 - தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி நிதர்சனம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. * 1989 - ஜிபிஎஸ் திட்டத்தின் 24 செய்மதிகளில் முதலாவது விண்ணில் ஏவப்பட்டது. * 1989 - யூனியன் கார்பைட் நிறுவனம் 1984 போபால் அழிவிற்காக இந்திய அரசிற்கு 470 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நஷ்ட ஈடாக வழங்க சம்மதித்தது.

* 1990 - பெங்களூருவில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 92 பேர் கொல்லப்பட்டு 54 பேர் காயங்களுடன் தப்பினர். * 2000 - நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளின் சுற்றுவட்டத்துள் பிரவேசித்தது. சிறுகோள் ஒன்றின் சுற்றுக்குள் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும். * 2005 - லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி சுட்டுக் கொல்லப்பட்டார். * 2005 - பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 7 பேர் கொல்லப்பட்டு 151 பேர் காயமடைந்தனர்.
...

[Continue reading...]

கோவையில் தொடர் வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்த நாள் (பிப்.14 1998) coimbatore continue bomb blast day

- 0 comments

Img கோவையில் தொடர் வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்த நாள் (பிப்.14 1998) coimbatore continue bomb blast day

1998-ம் ஆண்டு கோவையில் நடந்த இனக்கலவரம் குண்டுவெடிப்பாக மாறியது. பிப்ரவரி 14-ந்தேதி கோவையில் பல்வேறு இடங்களில் தொடர்குண்டு வெடித்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1804 - ஓட்டோமான் பேரரசுக்கு எதிரான செர்பியர்களின் முதலாவது எழுச்சி கரஜோட்ஜே என்பவனின் தலைமையில் இடம்பெற்றது. * 1876 - எலீஷா கிறே மற்றும் அலெக்சாண்டர் கிரகம் பெல் இருவரும் வேறு வேறாக தொலைபேசிக்காண காப்புரிமம் பெற விண்ணப்பித்தனர். * 1879 - சிலியின் ராணுவப்படைகள் பொலீவியாவின் அன்டோபகாஸ்டா நகரைக் கைப்பற்றினர். * 1900 - இரண்டாம் போவர் போர்: தென்னாபிரிக்காவில் ஒரேஞ்ச் மாநிலத்தை 20,000 பிரித்தானியப் படைகள் ஆக்கிரமித்தன. * 1918 - சோவியத் ஒன்றியம் கிரெகோரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது (பழைய ஜூலியன் நாட்காட்டியின் படி பெப்ரவரி 1).

* 1919 - போலந்து- சோவியத் போர் ஆரம்பமானது. * 1924 - ஐ.பி.எம். நிறுவனம் அமைக்கப்பட்டது. * 1927 - யூகொஸ்லாவியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 700 பேர் இறந்தனர். * 1929 - சிக்காகோவில் வேலண்டைன் நாளன்று அல் காப்போன் என்பவனின் எதிராளிகள் ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

* 1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் பசிர் பஞ்சாங்க் என்ற இடத்தில் ஜப்பானியர்களின் தாக்குதல் ஆரம்பித்தது. * 1946 - ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது. * 1956 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது மாநாடு மாஸ்கோவில் ஆரம்பமானது. * 1961 - 103வது தனிமம் லோரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
...

[Continue reading...]

சிறையிலேயே வாழ்வதற்காக குற்றங்கள் செய்யும் வினோத மனிதர் Former prisoner commits arson to go back to jail in China

- 0 comments

Img சிறையிலேயே வாழ்வதற்காக குற்றங்கள் செய்யும் வினோத மனிதர் Former prisoner commits arson to go back to jail in China

பீஜிங், பிப். 13-

சிறுசிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு செல்லும் நபர்களுக்கு, சிறைவாசம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதற்காக யாரும் சிறையிலேயே பொழுதைக் கழிக்க மனதார விரும்புவதில்லை.

ஆனால், சிறையில் வழங்கும் சாப்பாடு மற்றும் பாதுகாப்பான தங்கும் இடத்துக்காக சீனாவைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் குற்றச் செயலைச் செய்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வாங் என்று அழைக்கப்படும் 60 வயது முதியவர்தான் இந்த வினோதமான குற்றவாளி.

திருட்டு, பொது இடங்களில் சண்டையிடுதல் போன்ற குற்றங்களுக்காக 7 முறை வாங் கைது செய்யப்பட்டுள்ளார். திருட்டு வழக்கில் ஒருமுறை 14 வருடங்கள் சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார். ஆனால் சிறை வாசம் முடிந்தபிறகு வெளியில் இருக்க பிடிக்கவில்லை. இதனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்ஜிங்கின் பெங்காட்டி பகுதியில் பேருந்தில் சென்றபோது, டிரைவர் இருக்கைக்கு வேண்டுமென்றே தீ வைத்துள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வாங்கிற்கு, சமீபத்தில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதுபற்றி வாங் அளித்த பேட்டியில், "எனக்கு வீடு ஏதும் கிடையாது. சிறையில் இருந்து வெளிவந்தவுடன் என்னசெய்வதென்றே எனக்கு தெரியவில்லை. சிறையில் நல்ல உணவும் இருக்க பாதுகாப்பான இடமும் கிடைப்பதால் நான் மீண்டும் சிறைக்கு திரும்பி வர முடிவு செய்தேன். எனவே இக்குற்றத்தை செய்தேன்" என்று தெரிவித்தார்.
...

[Continue reading...]

தே.மு.தி.க., காங்கிரசுடன் கூட்டணிக்கான சூழ்நிலை இல்லை: கருணாநிதி DMDK congress not conditions alliance Karunanidhi

- 0 comments

Img தே.மு.தி.க., காங்கிரசுடன் கூட்டணிக்கான சூழ்நிலை இல்லை: கருணாநிதி DMDK congress not conditions alliance Karunanidhi

சென்னை, பிப். 13-

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் சூழ்நிலை உள்ளது. இதற்காக டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை விஜயகாந்த் சந்திக்க உள்ளார். அதேசமயம் தி.மு.க.வும் அந்த கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் இதனை தி.மு.க. மறுத்துள்ளது.

திருச்சி மாநாட்டுக்குப் புறப்படும் முன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தி.மு.க. தலைவர் இதுபற்றி கூறுகையில், "தே.மு.தி.க., காங்கிரசுடன் கூட்டணிக்கான அறிகுறியோ, சூழ்நிலையோ இல்லை. திருச்சி மாநாடு என்றாலே திருப்பு முனைதான். எனவே, இந்த மாநாடு தி.மு.க.விற்கு திருப்புமுனையாக அமையும்" என்றார்.

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மக்களை தாக்கியுள்ள பட்ஜெட் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

...

[Continue reading...]

சோனியா காந்தியின் முதுகில் குத்தியவர் சரத்பவார்: மத்திய மந்திரி கே.வி.தாமஸ் கடும் தாக்கு Union Minister KV Thomas condemns Saradhpawar

- 0 comments

Img சோனியா காந்தியின் முதுகில் குத்தியவர் சரத்பவார்: மத்திய மந்திரி கே.வி.தாமஸ் கடும் தாக்கு Union Minister KV Thomas condemns Saradhpawar

புதுடெல்லி, பிப்.13-

கடந்த 2009-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்த போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உணவு மற்றும் விவசாய துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார். அந்த இலாகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.வி.தாமஸ் ராஜாங்க மந்திரி ஆனார். அதன்பிறகு 2011-ம் ஆண்டு கே.வி.தாமஸ் உணவு இலாகாவுக்கு தனிப்பொறுப்புடன் மந்திரி ஆனார். சரத்பவார் விவசாய இலாகாவை கவனித்து வருகிறார்.

அப்போது முதலே உணவு சட்டம், சர்க்கரை பற்றிய கொள்கைகள் தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. கச்சா சர்க்கரைக்கு மானியம் வழங்குவது தொடர்பாக இருவரும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்ததால் 3 தடவை நடந்த மந்திரிசபை கூட்டங்களில் அந்த பிரச்சினையில் முடிவு எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், உணவு மந்திரி கே.வி.தாமஸ் 110 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில், முதுகில் விழுந்த குத்து என்ற பெயரில் ஓர் அத்தியாயம் இடம்பெற்று உள்ளது. 5 பக்கங்கள் கொண்ட அந்த அத்தியாயத்தில் அவர் விவசாய மந்திரி சரத்பவாரை கடுமையாக தாக்கி எழுதி இருக்கிறார்.

அந்த அத்தியாயத்தில் எழுதப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 1999-ம் ஆண்டில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டுக்காரர் என்ற பிரச்சினையை கிளப்பி அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவர் சரத்பவார். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பி.ஏ.சங்மா தான் முதன் முதலில் இந்த பிரச்சினையை கிளப்பினார். பின்னர் சங்மா இந்த பிரச்சினையை கைவிட்ட போதிலும் சரத்பவார் அதை பிடித்துக்கொண்டார்.

கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்தி அதற்கு வலுவூட்டியவர் என்று சோனியா காந்தியை சரத்பவார் புகழ்ந்த போதிலும், அவர் வெளிநாட்டில் பிறந்தவர் என்று மேற்கொள்ளப்படும் பிரசாரத்தை காங்கிரஸ் கட்சியால் முறியடிக்க முடியாது என்றும் கூறினார். அந்த பிரச்சினையை பெரிதாக்கி சோனியா காந்தியின் முதுகில் குத்தியது போன்ற காரியத்தை செய்தவர் சரத்பவார்.

அவர்கள் அவ்வாறு பேசியது குறித்து சோனியா காந்தி மிகுந்த வருத்தம் அடைந்தார். பின்னர் சரத்பவார், பி.ஏ.சங்மா, தாரிக் அன்வர் ஆகியோர் சேர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார்கள்.

சரத்பவார் முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும் அவருக்கும், சோனியா காந்திக்கும் சுமுகமான உறவு இருந்தது இல்லை. சரத்பவார் திறமையானவர் என்ற போதிலும் நம்பிக்கைக்கு உரியவர் அல்ல என்ற ராஜீவ் காந்தியின் கருத்தை மனதில் கொண்டு அவரிடம் இருந்து சோனியா காந்தி சற்று விலகியே இருந்தார்.

காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் பொறுப்பில் 2-வது நிலையில் இருந்த அர்ஜூன் சிங் வகித்த இடத்தின் மீது சரத்பவார் கண் வைத்து இருந்தார். 13-வது பாராளுமன்ற தேர்தலுக்கு பின் சோனியா காந்தி பிரதமர் ஆகிவிட்டால், பிரதமராகும் தனது கனவு ஒருபோதும் பலிக்காது என்ற எண்ணம் சரத்பவாருக்கு இருந்தது.

சோனியா காந்திக்கு எதிராக பேசியவர்களில் சிலர் பின்னர் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டு காங்கிரசுக்கு கடிதம் எழுதிய போது, சோனியா காந்தி அதை பொருட்படுத்தவில்லை. அந்த கடிதங்களுக்கு அர்ஜூன் சிங்தான் பதில் எழுதினார்.

இவ்வாறு அந்த அத்தியாயத்தில் எழுதப்பட்டு உள்ளது.

இந்த புத்தகம் முதலில் கடந்த 2006-ம் ஆண்டு மலையாள மொழியில் வெளியானது. அதன்பிறகு கூடுதலாக சில அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டு அதன் ஆங்கில பதிப்பு வெளியாகி உள்ளது.
...

[Continue reading...]

ஒட்டு மொத்த தமிழ் பெண்களுக்காக பா.ம.க. குரல் கொடுக்கிறது: ராமதாஸ் பேச்சு PMK for whole of Tamil women Speaks in Ramadoss speech

- 0 comments

ஒட்டு மொத்த தமிழ் பெண்களுக்காக பா.ம.க. குரல் கொடுக்கிறது: ராமதாஸ் பேச்சு PMK for whole of Tamil women Speaks in Ramadoss speech

நெய்வேலி, பிப்.12–

நெய்வேலியை அடுத்த வடக்குத்து கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் எழுச்சி மாநாடு நடந்தது. கடலூர் வடக்கு மாவட்டச்செயலாளரும், வடக்குத்து ஊராட்சி மன்ற தலைவருமான ஜெகன் தலைமை தாங்கினார்.

மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, மாநில துணை பொது செயலாளர் பழ.தாமரைக் கண்ணன், திருஞானம், மாநில வன்னியர் சங்க தலைவர் குரு எம்.எல்.ஏ. மாநில துணை தலைவர் வைத்தியலிங்கம், மாவட்ட செயலாளர்கள் தர்மலிங்கம், வேங்கை, சேகர், மாநில மகளிர் அணி செயலாளர் சிலம்புச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:–

தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திராவிட கட்சிகள் சாலைதோறும் சாராயக்கடைகளை திறந்து மகளிரின் வாழ்க்கையை மண்ணோடு மண்ணாக்கி வருகின்றனர். பா.ம.க. மக்கள் கட்சி வன்னியர் சமூக மக்களுக்காக மட்டும் பாடுபடவில்லை.

ஒட்டுமொத்த தமிழக பெண்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி. சாராயத்தை அறவே ஒழிக்க வேண்டுமென்றால் அது பெண்களால் மட்டுமே முடியும். உங்கள் வாக்குகளை சரியான நேரத்தில் பயன்படுத்தினால் மட்டுமே முடியும். இதன் மூலம் சமுதாய மாற்றத்தை பெண்களால் மட்டுமே கொண்டு வர முடியும்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளுக்காக பணம் வாங்காமல், வன்னியர் இன மக்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்டு வரும் டாக்டர் கோவிந்தசாமிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள்.

பாராளுமன்றத்தில் நமது உரிமைகளை பெற கடலூர் தொகுதி மக்களாகிய நீங்கள் கோவிந்தசாமியை வெற்றியடைய செய்ய வேண்டும். ஓட்டுகளை விலைக்கு விற்பது பெற்ற குழந்தையை விற்பதற்கு சமம். நல்ல படிப்பு, தரமான விதை–உரம், பூச்சி மருந்து, ஏழைகளுக்கு தரமான மருத்துவம். இதுவே பா.ம.க.வின் அரசியல் கொள்கை. படைப்பாற்றல் கொண்ட பெண்களால் மட்டுமே இது முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் சிவகாமி, சுசிலா, நெய்வேலி நகர வன்னியர் சங்க தலைவர் ஜோதிலிங்கம் உள்பட சுமார் 20 ஆயிரம் பேர் திரண்டனர். முடிவில் நெய்வேலி நகர செயலாளர் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.

...

[Continue reading...]

Monday 10 February 2014

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

- 0 comments
உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

அன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற்றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய நவீன உலக வாழ்க்கையை பார்க்கும் போது, சாதாரண விஷயங்களில் உள்ள நிறைய உண்மைகள் விசித்திரமாகவே கருதப்படுகின்றன. மேலும் அத்தகைய உண்மைகளை கேட்டால், பலரும் வாயில் கை வைத்து 'அப்படியா!!!' என்று ஆச்சரியமாக கேட்பார்கள். சொன்னால் கூட நம்பமாட்டார்கள். உதாரணமாக, உலகிலேயே வெடிகுண்டு வெடித்தாலும் இறக்காத பூச்சி கரப்பான்பூச்சி என்று தெரியும். ஆனால் அந்த பூச்சி தலை இல்லாமல் கூட உயிருடன் இருக்கும் என்று சொன்னால் ஆச்சரியம் தானே.

இது போன்று நிறைய விசித்திரமான சில உண்மைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் வேறு ஏதாவது இயற்கையில் உள்ள சில விசித்திரமான உண்மைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சரி, அந்த விசித்திரமான உண்மைகளைப் பார்ப்போமா!!!

*லிப்ஸ்டிக்*

பெண்களுக்கு லிப்ஸ்டிக் என்றால் அவ்வளவு பிரியம். ஆனால் அந்த லிப்ஸ்டிக்கை போடும் முன், அது எதனால் ஆனது என்று சற்று யோசியுங்கள். ஏனெனில் லிப்ஸ்டிக்கில் மீன் செதில்கள் உள்ளன.

*ஹெட்போன்*
தொடர்ச்சியாக விருப்பமான பாடல்களை ஹெட்போனில் கேட்கிறீர்களா? அவ்வாறு ஒரு மணிநேரம் பாட்டு கேட்டால், காதுகளில் பாக்டீரியாவானது 700 மடங்கு அதிகரிக்கும்.

*இறால்*

கடல் உணவுகளில் இறால் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் அடுத்த முறை அதன் தலையை சாப்பிடும் போது, அதன் இதயத்தை சாப்பிடும் உணர்வைப் பெறுவீர்கள். ஏனெனில் இறாலுக்கு இதயமானது அங்கு தான் உள்ளது.

*நாக்கு*
எப்படி கைவிரலில் உள்ள ரேகைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறதோ, அதேப் போன்று உதடுகளின் ரேகைகளும்.

*பட்டாம்பூச்சி*

இந்த அழகான பட்டாம்பூச்சி, பூக்களில் உள்ள தேனின் சுவையை வாயால் தான் சுவைக்கிறது என்று நினைத்தால், அது தான் தவறு. ஏனெனில் உண்மையில் பட்டாம்பூச்சி தேனின் சுவையை அதன் கால்களில் தான் சுவைக்கிறது.

*யானை*

பாலூட்டிகளிலேயே யானையின் பிரசவ காலம் தான் அதிகம். அதுவும் 645 நாட்கள், யானையானது தன் கருவை சுமக்கும்.


*ஆங்கில மொழி*

ஆங்கில மொழியில் உள்ள ரைம்ஸ்களில் மாதம், ஆரஞ்சு, ஊதா மற்றும் சில்வர் போன்ற வார்த்தைகளே வராது என்ற உண்மை தெரியுமா?

*நெருப்புக்கோழி*

உலகிலேயே மிகவும் பெரிய பறவையான நெருப்புக்கோழியின் மூளையை விட, அதன் கண்கள் பெரியது என்பது ஆச்சரியப்பட வைக்கும் ஒரு உண்மை.

*புகைப்பிடித்தல்*
இப்போது சொல்லப்போகும் உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது என்னவெனில், சிகரெட்டை பற்ற வைக்கும் லைட்டரானது, தீக்குச்சிக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது.

*முழங்கை ட்ரிக்*

கைகளை எவ்வளவு தான் அங்கும் இங்கும் அசைக்க முடிந்தாலும், முழங்கையை மட்டும் எவராலும் நாக்கால் தொட முடியாது. இப்போது அதை நிச்சயம் முயற்சிப்பீர்கள் பாருங்களேன்.

*சிலந்தி*

உலகில் எத்தனையே ஃபோபியாக்களைப் பார்த்திருப்போம். ஆனால் இன்றும் சிலந்தியின் மீதுள்ள பயத்தாலேயே உயிர் போகும் வாய்ப்பு உள்ளது.

*தும்மல்*

சொன்னால் நம்பமாட்டீர்கள், மிகவும் கடுமையாக தும்மினால் விலா எலும்புகளில் முறிவு ஏற்படும். மேலும் இவ்வாறு திடீரென்று கடுமையாக தும்பும் போது, சில நேரங்களில் தலை அல்லது கழுத்தில் உள்ள இரத்த நாளங்கள் சிதைவடைந்து இறப்பை சந்திக்கவும் கூடும். ஆகவே இந்த மாதிரியான கடுமையான தும்மல் வரும் சூழ்நிலையில், கண்களை திறந்து தும்மினால், இத்தகைய அபாயத்தில் இருந்து விடுபடலாம்.

*பிறப்பு*
குழந்தையாக இருந்து வளர வளர, உடலின் கண்கள் மட்டும் பிறக்கும் போது இருந்த அளவில் தான் இருக்கம். ஆனால் மூக்கு மற்றும் காதுகள் வளர்ச்சியடையும் என்பது தெரியுமா?


*கம்ப்யூட்டர்*
கம்ப்யூட்டர் கீ போட்டின், ஒரே வரிசையில் 'typewriter'என்னும் மிகவும் நீளமான வார்த்தையை டைப் செய்யலாம்.


*முதலை*

பொதுவாக கீழ் தாடை இறங்கி தான் வாயானது திறக்கப்படும். ஆனால் முதலைக்கு மட்டும் தான், மேல் தாடை தூக்கி வாய் திறக்கப்படும்.

*கரப்பான்பூச்சி*

வீட்டில் பெரும் தொல்லையைக் கொடுக்கும் கரப்பான்பூச்சி, தலை இல்லாமல், 9 நாட்கள் உயிருடன் வாழும் தன்மை கொண்டது. எனவே வீட்டில் கரப்பான்பூச்சி அடித்து கொல்லும் போது, கவனமாக அடித்துக் கொல்லுங்கள்.

*வெங்காயம்*

யாருக்குமே வெங்காயம் வெட்டுவது என்பது பிடிக்காது. ஏனெனில் அது தேவையில்லாமல் அழ வைக்கும். ஆனால் அவ்வாறு வெங்காயத்தை வெட்டும் போது கண்ணீர் வரக்கூடாது என்றால், வாயில் சூயிங் கம் போட்டுக் கொண்டு வெட்டினால், உண்மையில் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை தவிர்க்கலாம்.

*தூசிப்படிந்த வீடு*

வீட்டில் அடிக்கடி தூசி படிகிறதா? அப்படியெனில் அதற்கு காரணம், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் தான். அவை தான் வீட்டில் படிந்து, வீட்டை அடிக்கடி தூசியடைய வைக்கின்றன.

*கர்ப்பமான மீன்*

வீட்டில் தங்கமீன் கர்ப்பமாக இருந்தால், அதனை 'ட்விட்' (twit) என்று தான் சொல்ல வேண்டுமே தவிர, 'கர்ப்பமான தங்கமீன்' என்று சொல்லக்கூடாது.

[Continue reading...]

Sunday 9 February 2014

மதயானைக் கூட்டம் Movie Review

- 0 comments
மதயானைக் கூட்டம் படம் 3 முறை பார்த்தேன்...

தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரே படத்தில் தேவரினப் பெருமையைப் பாடும் மூன்று பாடல்கள்...

குறிப்பிடத்தக்க வசனங்கள்:

-வட நாட்டு சிங்கம் நேதாஜியும் தென்னாட்டு சிங்கம் முத்துராமலிங்கத் தேவர் பத்தி பல பேரு பல மாரி பேசுறாக, ஆனா அவக சாதியே பாத்ததில்ல. அதே மாரி நம்ம ஜெயக்கொடித் தேவரய்யாவும் சாதி மதம் பாக்காம பழகுவாக...
-அய்யாவோட முதல் தாரம் சிவனம்மா, வீரத்துல வேலுநாச்சியாரு...
-என் பொண்ணு ராஜகுமாரிடா. அவளுக்கு நடக்கப் போற கல்யாணம் மாரி எந்தக் கள்ளப் பயலும் நடத்திருக்க மாட்டயான்...
-குத்திச் சரிச்சுக் குழி தோண்டிப் பொதச்சுக் கமுக்கமா ஒக்காந்து கரியும் சோரும் திங்குறவன் தான் கள்ளன்...
-கள்ளப் பய எவனும் அனுபவிக்காம திருந்த மாட்டிங்க...
-எங்க அண்ணன எவனும் அசைக்க முடியாது, அங்கயும் கள்ளன் ரத்தம் தான ஓடுது...
-அப்பா, அவன அடிக்க முடியல அவனும் கள்ளப் பய தான்னு காட்டிட்டியான் பா...

இந்த வசனங்கள் கேட்கும் போது உடம்பு சத்தியமா புல்லரிக்குது...

மற்றொரு முக்கியக் காட்சி:
ஒரு காட்சியில் கதாநாயகனின் அண்ணன் "உங்கள வச்சு பல பேரு சாப்புட்றாய்ங்கயா, ஆனா உங்கள எவனாச்சும் சாப்டிங்களானு கேட்டாய்ங்களாயா? இந்தாங்கயா, சாப்டுங்கயா..."னு புரோட்டாவ கைல வச்சுக்குட்டு ஸ்ரீ தேவரய்யா சிலை முன்னாடி நின்னு பேசுவாரு...

உங்கள வச்சு பல பேரு சாப்புட்றாய்ங்கயா, இது உண்ம தான...

படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமார் அவர்களின் திறமையையும் தைரியத்தையும் பாராட்டியே ஆக வேண்டும்...
[Continue reading...]

Saturday 8 February 2014

ஒரு நாள் மாறிவிடும்

- 0 comments

ஒன்றுமே இல்லாதது போல்  மனம் வெறுமையை உணர்ந்தாலும் ஏதோ  எல்லாம் ஒரு நாள் மாறிவிடும
என்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

அனைவருக்கும் அன்பான இரவு வணக்கம்

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger