Wednesday 9 November 2011

11-11-11 அன்று ஐஸ்வர்யாவுக்கு இரட்டை குழந்தை பிறக்கும்?

- 0 comments
 
 
அபிஷேக்பச்சனை திருமணம் செய்த ஐஸ்வர்யா ராய் தற்போது 9 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதனையடுத்து ஐஸ்வர்யாவுக்கு இரட்டை குழந்தைகள் (ஒரு ஆண், ஒரு பெண்) பிறக்கலாம் என அமிதாப் பச்சனின் குடும்ப ஜோதிடர் ஒருவர் உறுதியாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அன்று காலை(நவம்பர் 11) சரியாக காலை 11 மணி 11 நிமிடம் ஆகும் போது குழந்தைகள் பிறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இரட்டை குழந்தைக்கு அப்பாவாகும் சந்தோஷத்தில் உள்ள அபிஷேக் பச்சன் இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்புகளை முடித்து விட தீவிரம் காட்டுகிறார். பிரசவத்தின் போதும், அதற்கடுத்த தினங்களிலும் ஐஸ்வர்யாராய் மற்றும் குழந்தையுடன் இருக்க திட்டமிட்டுள்ளார் அபிஷேக் பச்சன். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேதியாகக் கருதப்படும் 11-11-11 அன்று அவரது பிரசவம் நடக்க வேண்டும் என ஐஸ்வர்யா ராய் மற்றும் பச்சன் குடும்பம் விரும்புவதால், அதற்கேற்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனையடுத்து ஐஸ்வர்யா ராய்யின் பிரசவத்திற்காக மும்பையிலுள்ள 7 ஸ்டார் மருத்துவமனையில் புக்கிங் செய்யப்பட்டுள்ளது.



[Continue reading...]

சன் பிக்சர்ஸுக்கு தடை - தியேட்டர் உரிமையாளர்கள்

- 0 comments
 
 
 
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களிடம் பெற்ற அட்வான்ஸ் பணத்தை திருப்பித்தராவிட்டால், இனி அந்த நிறுவனம் தயாரிக்கும் அல்லது வெளியிடும் எந்தப் படத்தையும் திரையிட மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதுகுறித்து இன்று நடந்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட முடிவுகள்:
 
திருப்பித் தரவேண்டிய முன்பணம் என்ற வகையில் சன் பிக்சர்ஸுக்கு இதுவரை திரையரங்குகள் சார்பில் தரப்பட்ட பணம் ரூ 2.60 கோடி திருப்பித்தரப்படவே இல்லை. கடந்த ஆட்சியிலிருந்தே இதனை திருப்பித் தரக் கோரி வருகிறோம். ஆனால் சன் பிக்சர்ஸ் கண்டுகொள்ளவே இல்லை.
 
எனவே இந்தத் தொகையை திருப்பித் தரும்வரை, சன் பிக்சர்ஸ் வெளியிடும் படங்களையோ, தயாரிக்கும் படங்களையோ திரையிடப் போவதில்லை.
 
ஆட்சி மாற்றம் காரணமாக இப்போது புகார் தரவில்லை. கடந்த ஆட்சியின்போதும் திருப்பிக் கேட்டோம். அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
 
திரையரங்குகளில் ஐம்பதுகளில் தினசரி 4 காட்சிகளுக்கு அனுமதித்தார்கள். அன்றைக்கு படங்கள் 3 மணி நேரத்துக்கு மேல் ஓடும் வகையில் வந்தன. ஆனால் இன்றைக்கு 2 மணிநேரப் படங்கள்தான் வருகின்றன. எனவே காட்சிகளை 5 அல்லது 6 ஆக நீட்டிக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
 
திரையரங்குகளில் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு உத்தரவிடவேண்டும். நகர்ப்புறங்களில் ரூ 50 என உள்ள கட்டணத்தை, ரூ 80 ஆக உயர்த்த வேண்டும். இப்படி உயர்த்துவதால் எங்களுக்கு மட்டும் ஆதாயமில்லை. அரசு மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் லாபம் கிடைக்கிறது. இதுகுறித்து முதல்வரைச் சந்தித்து முறையிடவிருக்கிறோம்," என்று திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்தனர்.



[Continue reading...]

எழுந்து உட்கார்ந்த பிணம்: அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்- தவறான சான்றிதழ் கொடுத்த டாக்டர் சஸ்பெண்ட்

- 0 comments
 
 

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முஸாபர்நகர் மாவட்ட மருத்துவமனையின் பிணவறையில், இறந்துவிட்டார் என்று நினைத்தவர் உயிர்த்தெழுந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தவறான இறப்பு சான்றிதழ் வழங்கிய மருத்துவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் முஸாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரத்தே (17). அவர் விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்தார்.

உடனே முஸாபர்நகர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் பிரதீப் மிட்டல் தெரிவித்தார். இறப்புச் சான்றிதழும் வழங்கினார். இரவு நேரமாகிவிட்டதால் மறுநாள் காலையில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டு ரத்தேயின் உடல் பிண கிடங்கில் வைக்கப்பட்டது. இதற்கிடையே மருத்துவமனைக்கு வந்த போலீசார் சில விவரங்களை சேகரித்தனர். மறுநாள் காலையில் பிரதே பரிசோதனை செய்ய மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் வந்தனர்.

அப்போது ரத்தே உயிர்த்தெழுந்தார். இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ரத்தே சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஒருவர் இறந்துவிட்டாரா, இல்லையா என்று கூட பார்க்கத் தெரியாத மருத்துவர் பிரதீப் மிட்டல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

[Continue reading...]

பிப்ரவரியில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்.. வீட்டை சென்னைக்கு மாற்றினார்கள்!

- 0 comments
 
 

சென்னை: நயன்தாரா-பிரபுதேவா திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் நடக்கிறது. இதனால் இருவரும் இப்போது தங்கள் இருப்பிடத்தை ஹைதராபாதிலிருந்து சென்னைக்கு மாற்றியுள்ளனர்.

பிரபு தேவா இயக்கத்தில் வந்த வில்லு படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நயன்தாரா திருமணம் ஆகாதவர்.

அவரை திருமணம் செய்துகொள்வதற்கு வசதியாக பிரபுதேவா தனது மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார். அதன்பிறகு பிரபுதேவா, நயன்தாராவுடன் மும்பையிலும், ஹைதராபாதிலும் மாறி மாறி வசி்த்து வருகிறார்.

சீக்கிரமாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரபுதேவாவிடம், நயன்தாரா வற்புறுத்தி வருகிறார். பிரபுதேவா திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறார். விவாகரத்து ஆகிவிட்டாலும் முன்னாள் மனைவியையும் குழந்தைகளையும் அடிக்கடி பார்த்து வருகிறார். இதனால் பிரபு தேவா – நயன்தாரா இடையே அடிக்கடி சண்டையும், அப்புறம் சமாதானமும் ஏற்பட்டு வருகிறது.

இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், இருவரும் வருகிற பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்கள்.

போட்கிளப் பகுதியில் புதிய வீடு

அதற்கு வசதியாக நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில், வாடகைக்கு வீடு எடுத்து குடியேறியுள்ளனர்.

வீட்டுக்கு தேவையான மேசை நாற்காலிகள் மற்றும் அலங்காரப் பொருட்களை நயன்தாரா கடை, கடையாக சென்று வாங்கி வருகிறார். இதனால் சென்னையின் முக்கிய கடைகளில் நயன்தாரா – பிரபுதேவா ஜோடியை அடிக்கடி பார்க்க முடிகிறது.

[Continue reading...]

பிப்ரவரியில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்..

- 0 comments
 
 
 
நயன்தாரா-பிரபுதேவா திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் நடக்கிறது. இதனால் இருவரும் இப்போது தங்கள் இருப்பிடத்தை ஹைதராபாதிலிருந்து சென்னைக்கு மாற்றியுள்ளனர்.
 
பிரபு தேவா இயக்கத்தில் வந்த வில்லு படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நயன்தாரா திருமணம் ஆகாதவர்.
 
அவரை திருமணம் செய்துகொள்வதற்கு வசதியாக பிரபுதேவா தனது மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார். அதன்பிறகு பிரபுதேவா, நயன்தாராவுடன் மும்பையிலும், ஹைதராபாதிலும் மாறி மாறி வசி்த்து வருகிறார்.
 
சீக்கிரமாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரபுதேவாவிடம், நயன்தாரா வற்புறுத்தி வருகிறார். பிரபுதேவா திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறார். விவாகரத்து ஆகிவிட்டாலும் முன்னாள் மனைவியையும் குழந்தைகளையும் அடிக்கடி பார்த்து வருகிறார். இதனால் பிரபு தேவா - நயன்தாரா இடையே அடிக்கடி சண்டையும், அப்புறம் சமாதானமும் ஏற்பட்டு வருகிறது.
 
இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், இருவரும் வருகிற பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்கள்.
 
போட்கிளப் பகுதியில் புதிய வீடு
 
அதற்கு வசதியாக நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில், வாடகைக்கு வீடு எடுத்து குடியேறியுள்ளனர்.
 
வீட்டுக்கு தேவையான மேசை நாற்காலிகள் மற்றும் அலங்காரப் பொருட்களை நயன்தாரா கடை, கடையாக சென்று வாங்கி வருகிறார். இதனால் சென்னையின் முக்கிய கடைகளில் நயன்தாரா - பிரபுதேவா ஜோடியை அடிக்கடி பார்க்க முடிகிறது.



[Continue reading...]

தோழிகள் தாலி கட்டி திருமணம்: மணக்கோலத்தில் வந்தவர்களுக்கு அடி, உதை

- 0 comments
 
 
 
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த காத்தாயகுண்டா பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் பிரசன்னா (21), ஜீனா (25). ஆரம்பப்பள்ளியில் ஒன்றாக படிப்பை தொடங்கிய இருவரும் 10ம் வகுப்பு வரை ஒன்றாகவே படித்துள்ளனர். பின்னர், படிப்பை நிறுத்திவிட்டு அங்குள்ள பால் டிப்போவில் வேலை செய்து வருகின்றனர்.
 
இருவரும் நெருங்கிய தோழிகள். எப்போதும் இணைபிரியாமல் இருப்பார்களாம். ஒன்றாகவே வேலைக்கு வருவார்கள். ஒன்றாகவே திரும்பி செல்வார்கள். வெளியில் போவதென்றாலும் சேர்ந்தே சென்று வருவார்கள்.
 
 
சமீபத்தில் ஒருநாள், அவர்கள் பேசும்போது, திருமணம் நடந்தால் வேறு வேறு இடங்களுக்கு செல்ல வேண்டி இருக்குமே என்று கூறி வருத்தப்பட்டுள்ளனர். வேறொருவரை திருமணம் செய்தால்தானே பிரிய வேண்டும். நாம் இருவருமே திருமணம் செய்துகொள்ளலாமே என்றும் பேசியிருக்கின்றனர்.
 
 
07.11.2011 அன்று காலை இருவரும் வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறினர். திருப்பதியில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றனர். அங்கு மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர், பிரசன்னாவின் கழுத்தில் ஜீனா தாலி கட்டியுள்ளார்.
 
 
புதுமண தம்பதி முதலில் பிரசன்னாவின் வீட்டுக்கு சென்றனர். இருவரும் மாலையும், கழுத்துமாக வீட்டு வாசலில் நிற்பதை பார்த்து பிரசன்னாவின் அப்பா, அம்மா அதிர்ச்சி அடைந்தனர். தகவல் தெரிந்து அக்கம்பக்கத்தினர் திரண்டு வேடிக்கை பார்க்க கூடினர்.
 
 
அவமானமாக கருதிய பெற்றோர், நடு வாசலில் வைத்தே பிரசன்னாவை சரமாரியாக அடித்து, உதைத்தனர். பின்னர் அவரை வீட்டுக்குள் அடைத்தனர். ஜீனாவையும் அடித்து, உதைத்து அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். வீட்டுக்கு வந்த ஜீனாவை அவரது அப்பா, அம்மாவும் அடித்துள்ளனர்.
 
 
உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் இதுபற்றி மாறிமாறி விசாரித்ததால் வேதனை அடைந்த இரு வீட்டாரும் வீட்டை பூட்டிக்கொண்டு, மகள்களையும் அழைத்துக் கொண்டு வெளியூர் சென்றுவிட்டனர். நெருங்கிய பழகிய தோழிகள் திருமணம் செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



[Continue reading...]

கோலிவுட்டை அசத்தும் அஞ்சலி!

- 0 comments
 
 
 
கொடுத்த கதாபாத்திரத்தில நிறைவா நடிக்கும் ஹீரோயின் அஞ்சலி என்று, கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. 'அங்காடித் தெரு', 'எங்கேயும் எப்போதும்' படங்களில் நடிப்பில் அசத்திய அஞ்சலிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளாம். அதுமட்டுமின்றி ஏ.ஆர்.முருகதாஸின் முதல் தயாரிப்பான 'எங்கேயும் எப்போதும்' படத்தில் காதலனை அன்பாக மிரட்டும் காதலியாக நடித்த அஞ்சலிக்கு அடுத்த தயாரிப்பிலும் ஹீரோயின் வாய்ப்பை கொடுத்துள்ளாராம் முருகதாஸ். இதைதொடர்ந்து அரவான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் வரும் அஞ்சலியை இயக்குனர் வசந்தபாலன் வெகுவாக பாரபட்டியுள்ளாராம்.
 
 
 
 


[Continue reading...]

சினேகா - பிரசன்னா விரைவில் திருமணம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

- 0 comments
 
 
தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என வர்ணிக்கப்படும் நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடக்கிறது. இதனை நடிகர் பிரசன்னாவே இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
 
நடிகர் பிரசன்னாவும் சினேகாவும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இருவரும் நல்ல நண்பர்களாகத் திகழ்ந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இருவரும் இதுகுறித்து எந்த மறுப்பும் தெரிவித்ததில்லை.
 
இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தங்கள் பிஆர்ஓ ஜான் மூலம் தெரிவித்துள்ளனர்.
 
இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்த மாத இறுதிக்குள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளது.
 
இதுகுறித்து நடிகர் பிரசன்னா கூறியுள்ளதாவது:
 
சினேகாவுக்கும் எனக்கும் திருமணம் என்பது உண்மைதான். எங்கள் இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் இந்த மாத இறுதிக்குள் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். ஆனால் வரும் மார்ச் மாதம் திருமணம் என்று சிலர் எழுதியுள்ளனர். இதில் உண்மையில்லை. திருமணம் எப்போது என்பதை விரைவில் நாங்களே முறைப்படி அறிவிக்கிறோம்," என்றார்.
 
வாழ்த்துக்கள்!



[Continue reading...]

விஜய் - தனுஷ் மோதல்

- 0 comments
 
 
 
தனது மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்து வரும் தனுஷின் '3' படம் பொங்கல் அன்று திரைக்கு வரலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. பொங்கல் அன்று படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்ட ஐஸ்வர்யா விரைவில் மொத்தப் படத்தையும் முடிக்க முடிவு செய்துள்ளாராம். ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் வரும் முதல் படம் இது. அதனால் பொங்கல் போன்ற பண்டிகை தினத்தில் படத்தை வெளியிட ஆர்வம் காட்டுகிறார் என தெரிகிறது. படத்தின் தலைப்பிற்கு ஓர் அர்த்தம் உள்ளதாகவும், படத்தை பார்த்தால் அர்த்தம் புரியும் எனவும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.
 
விஜயின் நடிப்பில் சங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் நண்பன் திரைப்படமும் பொங்கலுக்கு வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி வெளிவரும் பட்சத்தில் விஜய், சங்கர் என்ற பிமாண்ட கூட்டணியுடன் மோத வேண்டிய நிலைமைக்கு தனுஷ் தள்ளப்படுவார். ஏன்கனவே விஜயின் காவலனுடன் ஆடுகளம் படத்தை மோத விட்டு மதுரையில் ஆடுகளம் திரையிட்ட பல திரையரங்குகள் விஜய் ரசிகர்களால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 
 


[Continue reading...]

இரண்டு விதமாக 'காதல் என் காதல்' ! : செல்வராகவன்

- 0 comments
 
 


தனுஷ், ரிச்சா நடித்து இருக்கும் படம் 'மயக்கம் என்ன'. செல்வராகவன் இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார்.

தீபாவளி வெளியீடு என்று அறிவித்தாலும் இயக்குனர் செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தேதி அறிவிக்கப்படமால் இருந்தது.

இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் இளைஞர்களிடம் வரவேற்பை பெற்று இருப்பதால் படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

'மயக்கம் என்ன' பட வெளியீடு குறித்து இயக்குனர் செல்வராகவன் தனது டிவிட்டர் இணையத்தில் " 'காதல் என் காதல்' பாடலை இரண்டு விதமாக தயார் செய்து இருக்கிறோம். படம் வெளியான முதல் வாரம் அப்பாடலின் ஒரு விதம் மட்டுமே படத்தில் இடம் பெறும்.

இரண்டாம் வாரம் முதல் இரண்டு விதங்களுமே படத்தில் இடம் பெறும். வரும் 18ம் தேதி படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறோம். கண்டிப்பாக அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் " என்று தெரிவித்துள்ளார்.



[Continue reading...]

பத்திரிகைகளுக்கு பயப்படமாட்டேன் - 'அஞ்சா நெஞ்சன்' ராஜபக்சே!!

- 0 comments
 
 
 
பத்திரிகைகளுக்கு நான் பயப்பட மாட்டேன் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் செவிலியருக்கான படிப்பை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இதைத் தெரிவித்தார்.
 
பல்வேறு விதமான பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். அவ்வாறு பயந்துகொண்டிருந்தால் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டார்.
 
மேலும் இலங்கையில் ஏராளமான குப்பை பத்திரிகைகள் வெளியாகின்றன என்று அவர் கூறினார்.
 
பொதுமக்கள் பத்திரிகைகளில் வரும் செய்திகளை அப்படியே நம்பிவிடாமல் அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்வது அவசியம் என்றார் அவர்.
 
இலங்கையில் சமீப காலமாக பல பத்திரிகைகளை ராஜபக்சே அரசு தடை செய்துவிட்டது. பத்திரிகையாளர்களைத் துன்புறுத்துவதில் உலகிலேயே முன்னணியில் உள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்று.
 
அரசை எதிர்த்து எழுதியதற்காக சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமசிங்கே கொடூரமாக கொல்லப்பட்டதில் ராஜபக்சே மற்றும் அவரது தம்பி கோத்தபாயவுக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.
 
புலிகளை ஆதரித்ததாகக் கூறி திசநாயகம் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்களை ராஜபக்சே அரசு துன்புறுத்தியது.
 
இரு தினங்களுக்கு முன்பும்கூட 5 செய்தி இணையதளங்களை மூட உத்தரவிட்டது ராஜபக்சே அரசு என்பது நினைவிருக்கலாம்.



[Continue reading...]

தீவிரவாத இயக்கங்களின் 'ஹிட்' லிஸ்ட்டில் சச்சின்!

- 0 comments
 
 
 
தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 18 வி.ஐ.பி.க்கள் பெயர் உள்ளது என்று புலனாய்வுத் துறை எச்சரித்துள்ளது.
 
மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேச மாநிலங்களைச் சேர்ந்த போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட புலனாய்வுத் துறை அதிகாரிகள் லஷ்‌கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தீவிரவாத அமைப்புகளால் வி.ஐ.பி.களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று எச்சரித்தனர்.
 
தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த தயாரித்துள்ள பட்டியலில் 18 வி.ஐ.பிக்களின் பெயர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. போலீசாரோ, புலனாய்வுத் துறை அதிகாரிகளோ அந்த தாக்குதல் பட்டியலில் உள்ளவர்களின் பெயர்களை வெளியிட மறுத்துவிட்டனர்.
 
பாஜக மூத்த தலைவர் அத்வானி, பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாருக் கான், ஆமிர் கான், கிரிக்கெட் வீரர் சச்சின், மும்பையின் மிகப் பெரிய தொழில் அதிபர்கள் 2 பேர், பூனே தொழில் அதிபர்கள் 3 பேர் இந்த பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.
 
இதனால் பட்டியலில் உள்ள வி.ஐ.பி.க்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்ப அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ரத யாத்திரை மேற்கொண்டுள்ள பாஜக தலைவர் அத்வானிக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை பலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.



[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger