Wednesday 7 March 2012

கூடங்குளம் அணு உலைப் போராட்டத்தின் வரவு செலவுக் கணக்கு இதோ !

- 0 comments
 
 
அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தின் 200 வது நாள் எட்டியதை முன்னிட்டு,

அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கம் தங்கள் பணபரிவர்த்தனைகள்(a statement of accounts) முழுவதுமாக வெளியிட்டது..... வெளியிட்டடதின் காரணம் தங்கள் போராட்டத்திற்கு எந்த வெளிநாட்டு தொண்டுநிறுவனங்கள் உதவி செய்யவில்லை என்பதை நிரூபிக்கவே
அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கம் முப்பது பேர் கொண்ட நிதி குழு ஒன்றை வைத்து தங்களுக்கு வரும் உதவிகளை உரிய முறையில் ஆவண படுத்தியுள்ளது.... அந்த குழு உறுப்பினர் திரு.ஜி.ஸ்டான்லி வெளியிட்ட அறிக்கை இதோ அகத்து(August) 14, 2011 இல் ஆரம்பித்து Feb 26,2012 வரை இந்த இயக்கத்திற்கு வந்த பணம் அதற்க்கான கணக்குகளை சரிபார்க்கும் போது அந்த இயக்கத்திற்கு மொத்த பணஉதவி 2,517,991 (இந்திய ரூபாயில்).... இந்த பணத்தை வைத்து கொண்டு இயக்கப்போரட்டங்களை நடத்த அதிலிருந்து பயன்படுத்தப்பட்ட ருபாய் 1,764,233 நன்கொடையாக வசூளிக்ப்பட்ட பணத்திற்கு உரிய ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன .....

அதே போல் ஆரம்பகட்டத்தில் இந்த இயக்கம் ஆரம்பிப்பதற்க்கும், மக்கள் போராட்டத்தை அரசின் கவனத்திற்கும் எடுத்துசெல்ல இடிந்தகரை ஊரில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ருபாய் 200 வசூலிக்கப்பட்டது பின்னர் இந்த விவகாரம் பெரிய அளவில் இட்டுசெல்லும், அதே போல் மிக நீண்ட நாட்கள் நடக்க வாய்ப்புள்ளது என்பதை அறிந்த குழுவினர் அந்த ஊர் மக்களிடம் வைத்த கோரிக்கை இது தான் "நீங்கள் தினசரி செய்யும் மீன்பிடி தொழிலில் வரும் வருமானத்தில் ஒரு வாரத்திற்கு பத்து சதவிகிதம் நன்கொடையாக தந்தால் போராட்டம் வெற்றிகரமாக இட்டுசெல்ல முடியும் என்பதே அந்த கோரிக்கை" மக்களும் அந்த கோரிக்கைக்கு செவி சாய்த்து தங்கள் ஒரு வார வருமானத்தில் பத்து சதவிகிதத்தை நன்கொடையாக அளித்தனர்...

இந்த நன்கொடைக்கு மேலும் வலுசேர்த்தவர்கள் அந்த ஊரில் உள்ள பீடி தொழிலாளர்கள்...அவர்களும் தங்கள் பங்கிற்கு முடிந்த உதவிகளை செய்தனர் ....

உடனே சில மேதாவிகள் வந்து எல்லாருமே போராட்த்தில் கலந்து கொண்டார்கள் என்றால் யார் மீன்பிடி தொழில் செய்வார்கள் எப்படி அவர்களுக்கு வருமானம் வரும் ??

... ஐயா கனவான்களே .... காலையில் நடக்கும் போராட்டத்தில் பெண்கள் கலந்து கொள்வார்கள் இரவில் ஆண்கள் வந்து கலந்து கொள்வார்கள்.... மேலும் விளக்கம் வேண்டும் என்றால் தினசரி நடுநிலை பத்திரிகைகளை வாசித்து தெரிந்து கொள்ளவும் ....

போரட்டக்காரகள் இந்த போராட்டத்திற்கு வசூலிக்கப்பட்ட நன்கொடையிளிருந்து துளியுன்ட்டும் சுரண்டவில்லை... சுரண்டுவதற்கு அவர்கள் அரசியல் வாதிகள் இல்லையே...

தங்களின் போக்குவரத்து செலவுகள், பயணம் செய்யும் போது வரும் செலவுகள் அனைத்தும் தங்கள் கைகாசை போட்டே சமாளித்து கொண்டனர்...

யார் வேண்டுமானாலும் ரசீதுகள் அடித்து கொள்ளலாம்... இதை ஏற்கமுடியாது என்று கூறுபவர்கள், ஆதாரம் கேட்போர் இடிந்த கரைக்கு சென்று ஒரு ஆடிட்டரை வைத்து சரி பார்த்து கொள்ளவும்.... தப்பாக இருந்தால் முச்சந்தியில் வைத்து என்னை செருப்ப கழட்டி அடிக்கலாம்.... வணங்கி ஏற்றுக்கொள்வேன்....

மாறாக உண்மையாக இருந்தால் உங்கள் பதில்..... ??? அப்போது யாருமே வாயை திறக்கவே மாட்டீர்கள் இது நன்றாகவே தெரியும்...

மதியழகன்
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger