Monday 17 October 2011

ஹிசார் தொகுதி இடைத்தேர்தல் தோல்வி காங்கிரசுக்கு ஒரு பாடம்: அன்னா ஹசாரே குழு கருத்து

- 0 comments
 
 
 
அரியானா மாநிலம், ஹிசார் பாராளுமன்ற தொகுதியில் கடந்த 13-ந் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவு இன்று அறிவிக்கப்பட்டது.
 
இதில், பா.ஜனதா கூட்டணி வேட்பாளரும், அரியானா முன்னாள் முதல்-மந்திரியின் மகனுமான குல்தீப் பிஷ்னோய் அமோக வெற்றி பெற்றார். இந்திய தேசிய லோக் தள வேட்பாளர் 2வது இடம் பெற்ற நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டு படுதோல்வி அடைந்தார்.
 
ஹிசார் தொகுதி இடைத்தேர்தல் தோல்வி, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பாடமாக அமையும் என்று, அன்னா ஹசாரே குழுவினர் கருத்து தெரிவித்தனர்.


 


[Continue reading...]

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஓட்டுப் போடவில்லை!

- 0 comments
 
 
மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலம் காரணமாகவும், கமல்ஹாசன் வெளிநாடு போய் விட்டதாலும் ஓட்டுப் போட வரவில்லை.
 
எந்தத் தேர்தலையும் தவற விடாமல் ஓட்டுப் போட்டு விடுவது இந்த இரு முன்னணி நட்சத்திரங்களின் வழக்கமாகும். கடந்த சட்டசபைத் தேர்தலின்போது இவர்கள் இருவரும் ஓட்டுப் போட வந்தபோது மீடியாக்களிடம் சிக்கி திணறிப் போய் விட்டனர்.
 
இந்த நிலையில் இன்று நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் இருவருமே ஓட்டுப் போடவில்லை.
 
ரஜினிகாந்த் உடல் நலம் காரணமாக ஓய்வில் இருந்து வருவதால் ஓட்டுப் போடவில்லை. அவரது குடும்பத்தினரும் யாரும் ஓட்டுப் போட்டதாக தெரியவில்லை.
 
அதேபோல கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தின் ஷூட்டிங்குக்காக வெளிநாடு போயிருப்பதால் வரவில்லை என்று கூறப்படுகிறது.
 
நடிகர்கள் பிரசன்னா, எஸ்.வி.சேகர், நடிகை சினேகா உள்ளிட்ட திரையுலகினர் பலர் இன்று வாக்களித்தனர். மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலம் காரணமாகவும், கமல்ஹாசன் வெளிநாடு போய் விட்டதாலும் ஓட்டுப் போட வரவில்லை.
 
எந்தத் தேர்தலையும் தவற விடாமல் ஓட்டுப் போட்டு விடுவது இந்த இரு முன்னணி நட்சத்திரங்களின் வழக்கமாகும். கடந்த சட்டசபைத் தேர்தலின்போது இவர்கள் இருவரும் ஓட்டுப் போட வந்தபோது மீடியாக்களிடம் சிக்கி திணறிப் போய் விட்டனர்.
 
இந்த நிலையில் இன்று நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் இருவருமே ஓட்டுப் போடவில்லை.
 
ரஜினிகாந்த் உடல் நலம் காரணமாக ஓய்வில் இருந்து வருவதால் ஓட்டுப் போடவில்லை. அவரது குடும்பத்தினரும் யாரும் ஓட்டுப் போட்டதாக தெரியவில்லை.
 
அதேபோல கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தின் ஷூட்டிங்குக்காக வெளிநாடு போயிருப்பதால் வரவில்லை என்று கூறப்படுகிறது.
 
நடிகர்கள் பிரசன்னா, எஸ்.வி.சேகர், நடிகை சினேகா உள்ளிட்ட திரையுலகினர் பலர் இன்று வாக்களித்தனர்.

 


[Continue reading...]

வேலாயுதமா... ஏழாம் அறிவா... உங்க 'ஓட்டு' யாருக்கு?

- 0 comments
 
 
குறைந்தது 5 படங்களாவது வெளியாகும் என எதிர்ப்பாக்கப்பட்ட இந்த தீபாவளிக்கு கடைசியில் மிஞ்சியிருப்பது விஜய்யின் வேலாயுதமும் சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் உருவாக்கியுள்ள ஏழாம் அறிவும்தான்.
 
விஜய்யின் கேரியரில் முக்கியமான படமாகப் பார்க்கப்படுகிறது வேலாயுதம். காவலன் வெற்றிப் படம் என்றாலும், அதற்கு முந்தைய தோல்விகளை ஈடுகட்டும் அளவுக்கு மெகா வெற்றிப்படமல்ல என்பது சினிமா வர்த்தகர்கள் கருத்து. விஜய் ரசிகர்களும் போக்கிரி மாதிரி ஒரு சூப்பர் ஹிட் படத்துக்காக காத்திருக்கிறார்கள்.
 
அவர்களின் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், தீபாவளி சரவெடியாக வந்துள்ளது படம் என்கிறார் இயக்குநர் ராஜா. இவர் விஜய்க்காக இயக்கும் முதல் படம் என்பதால் நம்பிக்கையுடன் படத்தை வாங்கியுள்ளனர் விநியோகஸ்தர்கள்.
 
விஜய் படம் அதிரடி மாஸ் மசாலா வகை என்றால், இந்தப் பக்கம் முருகதாஸ் தன் வழக்கமான கிளாஸிக் + மாஸ் அப்பீலோடு உருவாக்கியுள்ள படம் ஏழாம் அறிவு. ஆரம்ப நாளில் இந்தப் படம் பற்றி சாதகமான கருத்துக்கள் வெளியானாலே போதும், படம் பிய்த்துக் கொண்டு ஓடும் (வசூலில்தாங்க!) என்பது பாக்ஸ் ஆபீஸ் கருத்து.
 
சூர்யாவின் அபார உழைப்பு, சீனா, தாய்லாந்து என கலர்ஃபுல் லொகேஷன்கள், ஹீரோயின் ஸ்ருதி... அனைத்துக்கும் மேல், முருகதாஸ் எனும் கடின உழைப்பாளியின் மீதான நம்பிக்கை இந்தப் படத்துக்கான எதிர்ப்பார்ப்பையும் அட்வான்ஸ் புக்கிங்கையும் எகிர வைத்துள்ளது. அறிவிக்கப்பட்ட அரங்குகளிலெல்லாம் அட்வான்ஸ் புக்கிங் குறித்த விசாரணை இப்போதே ஆரம்பமாகிவிட்டது.
 
இந்த இரு படங்களில் எது உங்கள் சாய்ஸ்... எந்தப் படம் இந்த தீபாவளி ரேஸில் அசத்தல் வெற்றியை ஈட்டித் தரப்போகிறது? ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் எந்தப் படம் இருக்கும் என்கிறீர்கள்?
 
 


[Continue reading...]

விராட் அபார சதம்: இந்தியாவுக்கு 2-வது வெற்றி!

- 0 comments
 
 
 
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
 
டெல்லியில் நடந்து முடிந்த இப்போட்டியில், இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
 
இப்போட்டியில், 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 36.4 ஓவர்களிலேயே வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது.
 
இளம் வீரர் வீராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 112 ரன்கள் குவித்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இது, ஒருநாள் போட்டிகளில் அவருக்கு 7-வது சதமாகும்.
 
மறுமுனையில் கவுதம் கம்பீர் ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் குவித்து, அணிக்கு உறுதுணையாக இருந்தார்.
 
துவக்க ஆட்டக்காரர்களான பர்த்திவ் பட்டேல் 12 ரன்களையும், ரஹனே 14 ரன்களையும் எடுத்திருந்தனர்.
 
முன்னதாக, இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்களை எடுத்தது.
 
அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான குக், கீஸ்வெட்டர் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, டிராட் - பீட்டர்சன் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது.
 
டிராட் 34 ரன்களையும், பீட்டர்சன் 46 ரன்களையும் சேர்த்தனர். அதன்பின் களமிறங்கிய போபரா 36 ரன்களையும், பேர்ஸ்டோ 35 ரன்களையும் எடுத்தனர். படேல் 42 ரன்கள் எடுத்து, அணியின் ரன் எண்ணிக்கையை ஓரளவு உயர்த்தினார். அதைத் தொடர்ந்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
 
இந்திய தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய வினய் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். யாதவ் 2 விக்கெட்டுகளையும், பிரவீன் குமார், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலையில் உள்ளது.




[Continue reading...]

ரஜினி ஆபிசில் தாக்குதல்? அப்போதும் இப்போதும்...

- 0 comments
 
 
 
கடந்த சில தினங்களுக்கு முன் ரஜினியின் குடும்பத்தினரிடம் பண வசூல் செய்வதற்காக சென்னை வந்த சுசில்குப்தா என்ற பைனான்சியர் போலீசில் சிக்கினார். இவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துவிட்டார்கள் என்ற தகவலை செய்திதாளில் படித்திருக்கலாம். (ஆனால் மறுநாளே ஜாமீனில் வெளியே வந்துவிட்டார் அவர்) கொடுத்த கடனை வசூல் பண்ண வந்தவரை இப்படி புடிச்சு உள்ள தள்ளிட்டாங்களே... என்று கூட கோடம்பாக்கத்தில் சிலர் அலுத்துக் கொண்டார்கள். ஆனால் உண்மையில் இந்த பைனான்சியரை பற்றி வருகிற தகவல்கள் அவ்வளவு ரசிக்கும்படியாக இல்லை.
 
2010 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ந் தேதி ரஜினியின் மகள் சவுந்தர்யாவின் அலுவலகத்தை ஒரு கும்பல் கடுமையாக தாக்கியிருக்கிறது. அங்குள்ள நாற்காலிகளையும் மேஜைகளையும் உடைத்து நொறுக்கிய அந்த கும்பல் ஜாக்கிரதை என்று எச்சரித்துவிட்டு கிளம்பியதாக கூறப்படுகிறது. அப்போது போலீசுக்கு போக வேண்டாம் என்று கூறி விட்டாராம் ரஜினி. இந்த தாக்குதலுக்கு காரணமே பைனான்சியரின் தூண்டுதல்தான் என்கிறார்கள் இப்போது.
 
வாங்கிய நாலரை கோடியில் இரண்டு கோடி ரூபாயை செலுத்திவிட்ட லதா ரஜினியிடம் தொடர்ந்து மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தாராம் இந்த பைனான்சியர். இந்த நிலையில்தான் இவரை சென்னைக்கு வரவழைத்து போலீசிடம் மாட்டிவிட்டிருக்கிறார்கள்.
 
யாருமே புகார் கொடுக்காத அந்த ஆபிஸ் தாக்குதல் கலவரம் மீண்டும் உயிர் பெறலாம். தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமான இரு நபர்கள் இந்த வழக்கில் சிக்கி மீண்டும் சிறைக்கு செல்லக் கூடும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
 
பைனான்சியர் பற்றி சொல்லப்படும் இன்னொரு தகவல்தான் பயங்கரமாக இருக்கிறது. கமல் நடித்த ஒரு படத்தை தயாரித்த இரண்டெழுத்து தயாரிப்பாளர் இவரிடம் கடன் வாங்கியிருந்தாராம். அது தொடர்பாக நடந்த பஞ்சாயத்தின் போது, தான் குடித்துக் கொண்டிருந்த டீயை அப்படியே தயாரிப்பாளர் தலையில் சுடசுட கொட்டியவர்தானாம் இவர்.



[Continue reading...]

அழகு நிலையங்களில் விபச்சாரம் : சென்னையில் 11 இளம்பெண்கள் மீட்பு

- 0 comments
 
 
 
சென்னையில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் பியூட்டி பார்லர் ஸ்பா என்ற போர்வையிலும் அழகு கலை நிபுணர்கள் பெயரிலும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் அபய்குமார்சிங் ஆகியோர் உத்தரவிட்டனர்.
 
விபச்சார தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர் கிங்ஸ்லின் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சாண்டியாகோ தலைமையில் போலீஸ் படையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
 
விளம்பரங்களில் வெளி வந்த தொலைபேசி எண்களில் வாடிக்கையாளர்கள் போல போலீசார் தொடர்பு கொண்டு பேசினர்.
 
அதற்கு மறுமுனையில் பதிலளித்த நபர் ஆழ்வார் பேட்டையில் எல்டாம்ஸ் ரோடு சந்திப்பிற்கு அழைத்து மாறு வேடத்தில் இருந்த போலீசாரை வாடிக்கையாளர்கள் என தவறாக நினைத்து தங்களது ஆழ்வார்பேட்டை-எல் டாம்ஸ் ரோட்டில் இயங்கி வந்த சுகோஸ்பா பியூட்டி பார்லருக்கு அழைத்து சென்று அங்கிருந்த அழகிகளை காட்டி ரூ. 5 ஆயி ரம் கொடுத்தால் உல்லாச மாக இருக்கலாம் என்று கூறினர்.
 
விபசாரம் நடப்பதை உறுதிபடுத்திக் கொண்ட போலீசார் பியூட்டி பார்லர் பொறுப்பாளர் சுனிதா என்பவரை கைது செய்து அங்கிருந்த அசாம் மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த 4 இளம்பெண்களை மீட்ட னர்.
 
மேலும் விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் பிரபல விபசார பெண் தாதாவும் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவருமான கேரளாவைச் சேர்ந்த சுபா என்ற ஆன்சியின் மசாஜ் சென்டருக்கும் மாறு வேடத்தில் சென்ற போலீசார் விபசாரம் நடப்பதை உறுதி செய்து அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை நடத்தி ஆன்சி மற்றும் அவருக்கு துணையாக செயல்பட்ட பாலாஜி (23) என்பவர்களை கைது செய்து அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்த வைத்திருந்த மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 7 இளம்பெண்களை மீட்டனர்.
 
கைது செய்யப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். சென்னை மாநகரில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் மற்றும் பியூட்டிபார்லர் என்ற போர்வையிலும் மற்றும் அழகு கலை நிபுணர்கள் என்ற பெயரிலும் வாடிக்கையாளர்களை மயக்கி கவர்ந்து விபசார தொழிலில் ஈபட்டு வரும் குற்றவாளிகள் மீதும் அவர்களுக்கு துணைபோகும் சமூக விரோதிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
இது போன்ற போலி விளம்பரங்களை கண்டு வாலிபர்கள் தவறான வழிகளில் சென்று ஏமாந்து போகக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
 



[Continue reading...]

இந்தியன் பார்ட் 2 - விஷ்ணுவர்தன் இயக்குகிறார்!

- 0 comments
 
 
அஜீத் இப்போது நடிக்கும் பில்லா பார்ட்2 படத்தை இயக்க இருந்தவர் விஷ்ணுவர்தன் தான். அஜீத் நடித்த பில்லா ரீமேக் படத்தை எடுத்து வெற்றி கண்டவர் விஷ்ணுவர்தன். ஆனால் திடீரென படம் கைமாறியது. கமல் நடித்த 'உன்னைப்போல் ஒருவன்' படத்தை இயக்கிய சக்ரி பில்லா பார்ட்-2வை இயக்கி வருகிறார். படத்தின் ஷூட்டிங் கோவாவில் நடந்து வருகிறது.
 
இதனால் நானும் அஜீத்தும் அடுத்த படத்தில் இணைவோம் என்று சொன்னார் இயக்குனர் விஷ்ணுவர்தன். அதற்கான கதை விவாதங்களிலும் இருந்து வந்தார்.
 
இதற்கிடையே அஜீத் தன் அடுத்த படத்தின் கால்ஷீட்டை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னதிடம் கொடுத்திருப்பதாகவும், அஜீத் - ரத்னம் கூட்டணியில் இந்தியன் பார்ட்-2 உருவாகப் போவதாகவும் செய்திகள் வந்தன. இதற்காக ரத்னம் ஷங்கரிடம் பேசி வருவதாகவும் செய்திகள் கிடைத்தன.
 
இப்போது தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் சந்தித்திருக்கிறார். பல மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் அஜீத்தின் அடுத்தப் படத்தைப் பற்றி முக்கிய விவாதம் நடந்ததாக தெரிகிறது.
 
ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீமேக் வாய்ப்பு விஷ்ணுவர்தனுக்கு கிடைத்தது. கமல் நடித்த இந்தியன் படத்தின் பார்ட்-2 வை இயக்கும் வாய்ப்பு விஷ்ணுவர்தனுக்கு கிடைக்குமா என்று சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.



[Continue reading...]

சண்டையெல்லாம் இல்லை... ஒண்ணா சந்தோஷமா இருக்கோம்! - நயன்தாரா

- 0 comments
 
 
 
எனக்கும் பிரபுதேவாவுக்கும் சண்டை ஏதுமில்லை. நாங்கள் இருவரும் சந்தோஷமாக ஒன்றாக இருக்கிறோம் என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.
 
நயன்தாரா மீது கொண்ட காதலால் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. விரைவில் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணம் என்று கூறப்பட்ட நிலையில், இப்போது இருவருக்கும் சண்டை வந்துவிட்டதாகவும் திருமணம் நின்றுவிட்டதாகவும் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்று ஒரு மணி நேர சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்ப, அது தீயாகப் பற்றிக் கொண்டது.
 
முன்னணிப் பத்திரிகைகளும் இதுகுறித்து விசாரித்து, நயன் - பிரபுதேவா சண்டை உண்மைதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டதால் செய்தி வெளியிட்டன.
 
இந்த நிலையில் இன்று இந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகை நயன்தாரா.
 
அவர் கூறுகையில், "எங்கள் உறவில் எந்த விரிசலும் இல்லை. நாங்கள் சந்தோஷமாக, ஒற்றுமையாக உள்ளோம். இந்த செய்தியை பத்திரிகைகளில் படித்துவிட்டு நாங்கள் இருவரும் வாய்விட்டு சிரித்தோம் என்பதே உண்மை. திருமணத் தேதியை விரைவில் அறிவிப்போம்," என்றார்.
 
திருமண ஏற்பாடுகள் ஜோர்
 
பிரபு தேவா - நயன்தாரா திருமணத்துக்கான ஏற்பாடுகள் விரைவில் நடப்பதாகவும், அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் திருமணம் நடக்கும் என்றும் நயன்தாரா தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.



[Continue reading...]

பெங்களூரில் அசத்திய விஜய்!

- 0 comments
 
 
வேலாயுதம் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெங்களூர் சென்ற இளைய தளபதி விஜய் கன்னடத்தில் பேசி அசத்தியுள்ளார்.
 
விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள வேலாயுதம் வரும் 26-ம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி பெங்களூரில் உள்ள பூர்ணிமா திரையரங்கில் நடந்தது. இதில் கலந்து கொண்ட விஜய்க்கு அவரது ரசிகர்கள் பட்டாசு வெடிதது, விசில் பறக்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 
திரையரங்கமே அதிரும்படி கரகோஷம் எழுப்பினர். இதைப் பார்த்து விஜய் நெகிழ்ந்து போனார்.
 
மேடையில் பேசிய விஜய் கூறியதாவது,
 
எல்லாரு சென்னாகிதீரா? (எல்லாரும் நல்லா இருக்கிறீர்களா) என்று கன்னடத்தில் நலம் விசாரிக்க ரசிகர்களுக்கு ஒரே குஷியாகிவிட்டது. பெங்களூர் வந்திருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தமிழகத்தைப் போன்ற வரவேற்பு இங்கும் உள்ளது. இங்குள்ள ரசிகர்கள் எனக்கு எப்பொழுதுமே பேராதரவு அளித்து வருகின்றனர்.
 
எனது நண்பர் சிவராஜ் குமாரின் 100வது படமான ஜோகையா அறிமுக விழாவுக்கு வந்திருந்தபோது கூட எனக்கு உற்சாக வரவேற்பளித்தீர்கள். நீங்கள் என் படங்கள் எத்தனையோ பார்த்திருப்பீர்கள். ஆனால் வேலாயுதம் அவற்றைவிட வித்தியாசமானது என்றார்.
 
விஜய் பேசப், பேச ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். விஜய் வருகையால் பூர்ணிமா திரையரங்கு விழாக்கோலம் பூண்டிருந்தது.




[Continue reading...]

பார்ட்னரின் செக்ஸ் உணர்வைத் தூண்டி உறவுக்கு அழைப்பது எப்படி?

- 0 comments
 
 

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ, இனிக்கும் இன்ப நிலவே நீ வா வா என்று நீங்கள் மட்டும் பாடிக் கொண்டிக்க, உங்களவர் அது குறித்த சிந்தனையே இல்லாமல் 'புக்' எதையாவது படித்துக் கொண்டிருக்கிறாரா...... கவலைப்படாதீர்கள், அப்படி இருப்பதாலேயே மட்டும் அவருக்கு செக்ஸ் உறவில் நாட்டம் இல்லை என்று அர்த்தம் இல்லை.
நாமதான் ஆரம்பிக்கனுமா, அங்கிருந்து வரட்டுமே என்ற எண்ணத்தினால் கூட அப்படி இருக்கக் கூடும். இல்லாவிட்டால் ஏதாவது தயக்கமாகக் கூட இருக்கலாம். எனவே, பார்ட்னரின் மனதில் என்ன உள்ளது என்பதை சின்ன சின்ன சில்மிஷங்கள் மூலம் நாம் அறிந்து உறவுக்குள் புகலாம்.

நீங்கள் பெண்ணாக இருந்தால் இப்படிச் செய்து பாருங்கள்...சொக்க வைக்கும், உணர்ச்சியைத் தூண்டக் கூடிய உள்ளாடைகளுக்கு மாறுங்கள். நிச்சயம் உங்கள் ஆள் திசை திரும்புவார்.

பாத்ரூமுக்குள் புகுந்து ஜில்லென்று ஒரு குளியல் போட்டு தலையில் ஈரம் சொட்டச் சொட்ட, ஒரே ஒரு துண்டை மட்டும் உடம்பில் கட்டிக் கொண்டு அப்படியே வாருங்கள். துண்டு நழுவப் போவது 'இப்பவா, அப்பவா' என்ற ரேஞ்சுக்கு இருந்தால் இன்னும் பெட்டர். என்னதான் ஹிட்லர் டைப் ஆளாக இருந்தாலும் கூட இந்தக் கோலத்தைப் பார்க்கும் யாருக்குமே நிச்சயம் 'மூட்' மாறும்.

முடிந்தவரை படுக்கை அறையில் கருப்பு அல்லது சிவப்பு நிற உடையை அணியுங்கள். செக்ஸ் உணர்வைத் தூண்டுவதில் இந்த இரண்டு கலர்களுக்கும் ஏகப்பட்ட பங்கு இருக்கிறது.

உங்களவரை நெருங்கி உட்கார்ந்து, அல்லது படுத்தபடி சற்றே செக்ஸியாக பேசுங்கள், சைகைகளை செய்யுங்கள். பேச்சை விட சைகைகளுக்கு நிறைய 'பவர்' உண்டு. எனவே இது ஒர்க் அவுட் ஆகும்.

நெருங்கி உட்கார்ந்து கைகளால் அவரை தழுவுங்கள், மென்மையாக. சின்னச் சின்ன வருடல்கள், முத்தம், ஒற்றை விரலால் உடல் முழுவதும் நர்த்தனம் செய்யுங்கள். நிச்சயம் 'பார்ட்டி' நெளிய ஆரம்பிப்பார்.

இப்படிச் சின்ன சின்னதாக செய்து உங்களவரை மூடுக்குக் கொண்டு வரலாம்.

இது பெண்களுக்கு. சரி, நீங்கள் ஆணாக இருந்தால், என்ன செய்ய வேண்டும்?

பெண்ணின் உடலிலேயே செக்ஸ் உணர்வுகளைத் தூண்டக் கூடிய சில முக்கிய இடங்களில் முதுகும் ஒன்று. அங்கு உங்களது கை விரல்களை சில விநாடிகள் விளையாட விட்டால், நிச்சயம் பலன் கிடைக்கும்.

உங்கள் பார்ட்னரின் காது மடல்களுடன் சில நிமிடம் விளையாடுங்கள். நெருங்கிச் சென்று லேசாக முனுமுனுத்தபடி பேசினாலே அவருக்கு நிச்சயம் மூட் கிளம்பி விடும். முத்தமிடுவது, நாவால் வருடுவது போன்றவையும் கூட கூடுதல் பலன் தரும். அதற்காக, காது ஜவ்வு கிழிந்து போகும்படி சத்தமாக மட்டும் பேசி விடாதர்கள்!

பெண்ணின் கழுத்தில் நிறைய விஷயம் இருக்கிறது. கைகளால் அங்கு நீங்கள் நர்த்தனம் ஆடினால், கழுத்தின் பின்பக்கத்தில் லேசாக முத்தமிட்டால், வருடிக் கொடுத்தால், மயங்காத பெண்ணும் மயங்குவார். உடனடி உறவுக்கான 'பாஸ்போர்ட்' இந்த இடத்தில்தான் கிடைப்பதாக செக்ஸாலஜிஸ்ட்டுகள் கூறுகிறார்கள்.

உங்களவரின் கால்களை இதமாக பிடித்து விடுங்கள், பாதங்களில் மசாஜ் செய்யுங்கள், விரல்களை சொடுக்கி எடுங்கள்-வலி்க்காமல். குதிகால், பாதம், முழங்காலின் பின்பகுதி ஆகியவற்றில் உங்கள் விரல்கள் விளையாடும் விதத்தைப் பொறுத்து வேகமான உறவுக்கு உத்தரவாதம் கூடும்.

இதுபோன்ற சின்னச் சின்ன வேலைகள் மூலம் மூடில் இல்லாதவர்களையும் கூட மாற்றி உங்கள் பக்கம் மயங்க வைக்கும்.

[Continue reading...]

Hot N Sradha Das

- 0 comments
 
 
[Continue reading...]

Hot Reyhna

- 0 comments
 
 
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger