Tuesday 24 December 2013

சென்னையில் மயக்க மருந்து கொடுத்து மாணவியை கடத்திய கும்பல் 50 லட்சம் கேட்டு மிரட்டல் Giving anesthesia in Chennai girl gang kidnapped 50 million asking Threat

- 0 comments

Img சென்னையில் மயக்க மருந்து கொடுத்து மாணவியை கடத்திய கும்பல் 50 லட்சம் கேட்டு மிரட்டல் Giving anesthesia in Chennai girl gang kidnapped 50 million asking Threat

சென்னை, டிச. 25–

அடையாறு சாஸ்திரி நகரைச்சேர்ந்த என்ஜினீயரிங் மாணவி ப்ரியா (19). கடத்தப்பட்டு இரவு முழுவதும் வீட்டில் சிறை வைக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி ப்ரியாவை மயக்க மருந்து கொடுத்து கடத்திய கும்பல் அவரை செக்ஸ் சித்ரவதை செய்ததா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கல்லூரி மாணவிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:–

சாஸ்திரி நகரில் நேற்று முன்தினம் காலையில் ப்ரியா வழக்கம்போல தனது கல்லூரி பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வேகமாக வந்த கார் ஒன்று திடீரென ப்ரியாவின் முன்னால் வந்து நின்றது.

கண் இமைக்கும் நேரத்தில் காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி குண்டு கட்டாக அவரை காரில் தூக்கிப் போட்டு கடத்திச் சென்றனர். மாலையில் ப்ரியா வீடு திரும் பாததால் பெற்றோர் கலக் கம் அடைந்தனர்.

ப்ரியா எங்கு சென் றாளோ? என்கிற பதட்டத்து டன் உறவினர்கள் வீடுகளி லும், அவரது தோழிகளிடமும் போன் செய்து விசாரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ப்ரியாவின் தந்தைக்கு மிரட்டல் போன் ஒன்று வந்தது. அதில் பேசிய வாலிபர், உங்கள் மகள் ப்ரியாவை நாங்கள்தான் கடத்தி வைத்துள்ளோம். ரூ. 50 லட்சம் கொடுத்தால் தான் அவரை உயிருடன் விடுவோம். இல்லையென் றால் ப்ரியாவை பிணமாகத் தான் பார்க்க முடியும் என்று கூறி விட்டு போனை துண்டித்து விட்டார்.

இதுபற்றி ப்ரியாவின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் தனிப் படை அமைத்து தேடுதல் வேட்டையை முடுக்கி விட் டனர்.

இரவு முழுவதும் தேடிப் பார்த்ததும் ப்ரியாவை கண்டு பிடிக்க முடிய வில்லை. இதனால் பதட்டம் அதிகரித்தது.

இந்நிலையில் நேற்று காலையில் ப்ரியாவின் தந்தை பணத்தை கொண்டு வந்து தருவதாக கடத்தல் கும்பலிடம் தெரிவித்தார். அங்கே வாருங்கள், இங்கே வாருங்கள் என கூறி அவரை அலைக்கழித்த கடத்தல் ஆசாமிகள் கடைசியாக ராமாபுரத்துக்கு வந்து பணத்தை கொடுக்குமாறு கூறினர்.

இதையடுத்து நேற்று காலையில் கடத்தல் கும்பல் பணத்தை வாங்கும்போது போலீஸ் பிடியில் சிக் கியது.

ப்ரியாவை கடத்தியதாக பழனிச்சாமி, லோகநாதன், ராஜாமணி, முருகன், அஜய் ஆகிய 5 பேரை போலீசார் பிடித்தனர்.

இவர்கள் ப்ரியாவை கடத்திச் சென்று பெருங் களத்தூரில் ஒரு வீட்டில் சிறை வைத்தது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்று வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த ப்ரியாவை போலீசார் அதிரடியாக மீட்டனர். அவர் மயங்கிய நிலையில் காணப்பட்டார். எனவே கடத்தல் கும்பல் ப்ரியாவை செக்ஸ் சித்ரவதை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

இது தொடர்பாக 5 பேரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ''காதல் விவ காரம் காரணமாகவே இக்கடத்தல் சம்பவம் நடந் துள்ளது என்று நினைத்தோம். ஆனால் பணம் பறிக்கும் நோக்கத்திலேயே ப்ரியா கடத்தப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. எனவே 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக் கைகளை எடுத்து வரு கிறோம்'' என்றார்.

சென்னையில் கிழக்கு கடற்கரைசாலை கடந்த சில நாட்களாகவே கடத்தல் களமாக மாறி வருகிறது. 2 வாரங்களுக்கு முன்னர் கூட இளம்பெண் ஒருவர் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டார். அப்போது இன்னொரு ஆட்டோ டிரைவர் விரட்டிச் சென்று அப்பெண்ணை மீட்டு போலீசிடம் ஒப்படைத்தார். அச்சம்பவத்தில் சம்பந்தப் பட்ட ஆட்டோ டிரைவர் மீது உரிய நடவடிக்கை எதுவும் எடுக்காமல் சாதாரண சட்டப்பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

எனவே ப்ரியா கடத்தல் சம்பவத்திலும் அதே போன்று நடவடிக்கையை போலீசார் எடுத்து விடுவார் களோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் இதுபோன்று அடிக்கடி நடைபெறும் கடத் தல் சம்பவங்களை தடுக்க ரோந்து பணிகளை தீவிரப் படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

...

[Continue reading...]

கற்பழிக்க முயன்றவரை விடுவித்த பஞ்சாயத்து: மனமுடைந்த இளம்பெண் தற்கொலை முயற்சி Girl attempts suicide after panchayat lets off molester

- 0 comments

Img கற்பழிக்க முயன்றவரை விடுவித்த பஞ்சாயத்து: மனமுடைந்த இளம்பெண் தற்கொலை முயற்சி Girl attempts suicide after panchayat lets off molester

புலந்த்ஷர், டிச. 24-

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டம் சோஹி கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் உள்ள ஒரு வயலுக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது வயல் உரிமையாளர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதுடன், கற்பழிக்கவும் முயன்றுள்ளார். இதற்கு அந்தப் பெண் உடன்படாததால் அவரை அடித்து உதைத்துள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி தன் பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் அவர்கள் பஞ்சாயத்தாரிடம் முறையிட்டு நீதி வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால், குற்றம்சாட்டப்பட்ட நபர் உயர்வகுப்பைச் சேர்ந்த பெரிய மனிதர் என்பதால், அவருக்கு சாதாரண தண்டனையாக 5 முறை அறை கொடுக்க வேண்டும் பஞ்சாயத்தார் உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பினால் மனமுடைந்த இளம்பெண், தற்கொலை செய்வதற்காக நேற்று கால்வாயில் விழுந்தார். அப்போது அப்பகுதி வழியாகச் சென்றவர்கள், அந்த பெண்ணை காப்பாற்றினர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

...

[Continue reading...]

தேவயானி கைதுக்காக துடிக்கும் மத்திய அரசு இசைப்பிரியா படுகொலைக்கு வருந்தவில்லையே: கருணாநிதி ஆதங்கம் devyani arrested Central Government pulsate isaipriya arrest murder not regret Karunanidhi anxious

- 0 comments

Img தேவயானி கைதுக்காக துடிக்கும் மத்திய அரசு இசைப்பிரியா படுகொலைக்கு வருந்தவில்லையே: கருணாநிதி ஆதங்கம் devyani arrested Central Government pulsate isaipriya arrest murder not regret Karunanidhi anxious

சென்னை, டிச. 24-

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை வருமாறு:-

கேள்வி :- பால் கொள்முதல் விலையினை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தி அறிவித்திருக்கிறார்களே?

பதில் :-  2001-2006 வரையான அ.தி.மு.க. ஆட்சியில், ஐந்தாண்டுகளில், பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 1 ரூபாய் 50 காசுகளும், எருமைப் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 1 ரூபாய் 56 காசுகளும் என்ற அளவுக்கு விலை உயர்த்தப்பட்டது. ஆனால் தி.மு.கழக அரசு, 2006ஆம் ஆண்டு பதவியேற்றதற்குப் பிறகு, ஐந்தாண்டுக் காலத்தில் பசும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு கொள்முதல் விலையை 6 ரூபாய் 60 காசுகள் கூடுதலாகவும், எருமைப் பாலுக்கு 12 ரூபாய் 70 காசுகள் கூடுதலாகவும் உயர்த்தி வழங்கியது. ஆனால் ஒவ்வொரு முறையும் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதிநிதிகளை நானே என் அறைக்கு அழைத்துப் பேசி கலந்தாலோசனை செய்த பிறகு தான் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் இப்போது யாரையும் அழைத்துப் பேசாமலேயே பால் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி :- அமெரிக்காவில் பணியாற்றி வந்த இந்தியத் துணைத் தூதர் "தேவயானி கோப்ரகடே" கைது செய்யப்பட்டது பற்றி தாங்கள் எதுவும் கூறவில்லையே?

பதில் :- அந்த ஒரு இந்தியப் பெண்ணுக்காக, அலறித் துடிக்கும் இந்திய அரசும், மத்திய அமைச்சர்களும் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவிற்காகவும், பாலச்சந்திரனுக்காகவும் மற்றும் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காகவும் துடிக்க வில்லையே என்ற ஆதங்கம்தான் எனக்கு அதிகமாக ஏற்படுகிறது.

தேவயானிக்காக வருந்துவதை நான் தவறு என்று கூறவில்லை. அதே நேரத்தில் இசைப்பிரியாவிற்காக ஏன் இந்தப் பாசம் வரவில்லை என்றுதான் வருந்துகிறேன்.

கேள்வி :- "காங்கிரசைப் பிடித்த தீயசக்தி நீங்கிவிட்டது" என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிருக்கிறாரே?

பதில் :- அந்தக் கட்சியிலிருந்து அவர் விலகிவிட்டாரா என்ன?

கேள்வி :- மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், வாகனாவதி, அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் முன்னுக்குப் பின் முரணாகக் கூறியிருக்கிறார் என்று சொல்கிறார்களே?

கலைஞர் :- அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் வெளிச்சத்திற்கு வந்துள்ள பல முரண்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து அமைச்சரவைக் குழுவின் தலைவர், அன்றைய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில், நிதித் துறை அமைச்சர் பிரணாப், முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, மற்றும் வழக்கறிஞர்  வாகனாவதி ஆகியோரிடையே எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்றும், ஆனால் அப்படி ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக ஆ. ராசா பிரதமருக்குத் தவறான தகவலை அளித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்தக் குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்டதற்குப் பிறகு, பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் இருந்தே, அந்தக் கூட்டம் 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், (அலைக்கற்றை உரிமங்கள் வழங்கப்படுவதற்கு முன்பாக) நடைபெற்றதற்கான ஆதார ஆவணங்களை, இராசா முறைப்படிக் கேட்டுப் பெற்று; தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதோடு, சாட்சியம் அளிக்க வந்த அரசு வழக்கறிஞரிடம், அந்தக் கூட்டம் நடைபெற்றது உண்மை தான் என்றும், ஆனால் தான் முன்பு சி.பி.ஐ. இடம் வாக்குமூலம் கொடுத்த போது, அதனை அவர் மறந்து விட்டதாகவும், நீதிமன்றத்தில் இராசா கேள்வி மூலமாகக் கேட்டு அரசு வழக்கறிஞரிடம் உண்மையைப் பெற்றுள்ளார். இதிலிருந்து மத்திய அரசின் வழக்கறிஞர் ஏற்கனவே சி.பி.ஐ.யிடம் தெரிவித்தது உண்மைக்கு மாறான தகவல் என்றும், அந்தத் தகவலைத்தான் சி.பி.ஐ. தனது குற்றப் பத்திரிகையில் சேர்த்துள்ளது என்றும் தெளிவாகியுள்ளது. இதிலிருந்து சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை உண்மைக்கு மாறான தகவல்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட ஒன்று என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். 
...

[Continue reading...]

பலாத்காரம் செய்ய முயற்சி: பெண்ணின் கராத்தே தாக்குதலில் உதை வாங்கிய வாலிபர் ஓட்டம் Tried to harassment womens karate kick man run

- 0 comments

Img பலாத்காரம் செய்ய முயற்சி: பெண்ணின் கராத்தே தாக்குதலில் உதை வாங்கிய வாலிபர் ஓட்டம் Tried to harassment womens karate kick man run

தெவனகரெ, டிச.24-

மத்திய கர்நாடகாவிலுள்ள தெவனகரெவில் 19 வயது மாணவியை கற்பழிக்க முயன்ற நண்பன், மாணவியின் கராத்தே தாக்குதலில் உதை வாங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.

தெவனகரெவில் உள்ள கல்லூரியில் படித்து வந்த அப்பெண், கல்லூரியின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு தனது தங்கையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அம்மாணவிக்கு, ஏற்கனவே அறிமுகமான தனியார் கல்லூரியை சேர்ந்த பிரித்வி என்ற மாணவன், இருவரையும் வழிமறித்தான். பின்னர் அந்த மாணவியை வீட்டில் கொண்டுவந்து விடுவதாக அவரது சகோதரியிடம் கூறிய அந்த மாணவன், தனிமையான இடத்திற்கு அழைத்து சென்றான்.

அங்கு அம்மாணவியிடம் அவன் தவறாக நடக்க முயன்றுள்ளான். மாணவி அதற்கு உடன்படவில்லை. பலாத்காரம் செய்ய அவன் முயன்ற போது, மாணவி அவனை, தான் கற்று வைத்திருந்த கராத்தே கலையை அவனிடம் காண்பித்தார். சகட்டு மேனிக்கு உதை வாங்கிய மாணவன் நிலைகுலைந்த சமயத்தில், அங்கிருந்த பெரிய கல்லை கொண்டு அவன் தலையை பலமாக தாக்கினார் அம்மாணவி. மாணவியை அவனும் முகத்தில் கடுமையாக தாக்கினான். அதில் மாணவியின் தாடை எலும்பு கடுமையாக பாதிக்கப்பட்டது. மாணவியின் கடுமையான தாக்குதலில் நிலைகுலைந்த மாணவன் தனது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பியோடினான்.

பின்னர் வீடு திரும்பிய மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் தெரிவித்தார். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் மாணவியை சேர்த்த பெற்றோர், காவல்துறையிலும் புகார் அளித்தனர். மாணவி அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், முகத்தில் அறுவை சிகிச்சை செய்த பின்னரே மாணவி தனது பழைய முகத்தை காணமுடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காவல்துறையினர் சம்மந்தப்பட்ட மாணவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
...

[Continue reading...]

விபரீதத்தில் முடிந்த இனப்பெருக்க முயற்சி: வெறி கொண்ட ஆண் புலி கடித்துக் குதறியதில் ஜோடிப் புலி பரிதாப பலி tigress killed while mating in sandiego zoo

- 0 comments

Img விபரீதத்தில் முடிந்த இனப்பெருக்க முயற்சி: வெறி கொண்ட ஆண் புலி கடித்துக் குதறியதில் ஜோடிப் புலி பரிதாப பலி tigress killed while mating in sandiego zoo

நியூயார்க், டிச.24-

உலகின் அழிந்து வரும் அரிய வகை உயிரினங்களின் பட்டியலில் மலாய் புலிகளும் இடம் பெற்றுள்ளன. இவ்வகை புலிகள் 500 மட்டுமே உயிர் வாழ்வதாக கருதப்படுகிறது.

வட அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்திருக்கும் சன்டியாகோவில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் இவ்வகை புலிகள் பராமரித்து வளர்க்கப்பட்டு வருகின்றன. உரிய பருவத்தை எட்டியதும் இவ்வகை புலிகளை வனவிலங்கு காப்பக ஊழியர்கள் இனப்பெருக்கத்துக்கு தயார் செய்கின்றனர்.

அவ்வகையில், 2 வயதான கொன்னோர் என்ற ஆண் புலியின் கூண்டை டிகா டகுன் என்ற பெண் புலியின் கூண்டின் அருகே கடந்த மாதம் மாற்றி அமைத்தனர். கடந்த சில வாரங்களாக இளம் புலிகள் இரண்டும் தனித்தனி கூண்டில் இருந்தவாறே ஒன்றையொன்று முகர்ந்துப் பார்த்தும், முத்தமிட்டும் கொஞ்சி மகிழ்ந்தன.

இனப்பெருக்கத்துக்கு அவை தயாராகி விட்டதற்கான அறிகுறிகள் தோன்றவே, 2 புலிகளும் சற்று விசாலமான ஒரே கூண்டுக்குள் அடைக்கப்பட்டன.

பெண் புலியை நெருங்கி சற்று நேரம் விளையாடி மகிழ்ந்த ஆண் புலி, தனது இச்சையை தீர்த்துக் கொள்ள ஆவேசமாக டிகா டகுன் மேல் பாய்ந்தது. அதன் வீரியத்தை கண்டு பயந்துப் போன டிகா டகுன், சிணுங்கலுடன் ஒதுங்க ஆரம்பித்தது.

காம வெறி தலைக்கேறிய நிலையில் இருந்த கொன்னோருக்கு தன்னுடன் சேர்க்கைக்கு வராமல் முரண்டு பிடிக்கும் டிகா டகுனின் செயல் ஆத்திரத்தை வரவழைத்தது. சற்றும் எதிர்பாராத வகையில் டிகா டகுனின் மீது பாய்ந்த கொன்னோர், அதன் கழுத்தை வெறியுடன் கடித்துக் குதறி எடுத்தது.

இதை பார்த்து அதிர்ந்துப் போன வனவிலங்கு காப்பக ஊழியர்கள், கூண்டை திறந்து உள்ளே சென்று, டிகா டகுனை காப்பாற்ற முயன்றனர். அதற்குள், சுவாசக் குழாய்க்கு செல்லும் நரம்பு துண்டிக்கப்பட்ட நிலயில் டிகா டகுன் மூச்சுத் திணறி பரிதாபமாக பலியானது.

கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எல்பாசோ வனவிலங்கு காப்பகத்தில் நிகழ்ந்த இதேப் போன்ற சம்பவத்திலும் ஆண் புலியிடம் கடிபட்டு இவ்வகை பெண் மலாய் புலி பலியானது குறிப்பிடத்தக்கது.
...

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger